TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 3:00 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தெரிந்து கொள்ளலாம் வாங்க-நாசாவின் பறக்கும் தட்டும்,ஜெட்விமான ஆய்வு மையமும்.

2 posters

Go down

தெரிந்து கொள்ளலாம் வாங்க-நாசாவின் பறக்கும் தட்டும்,ஜெட்விமான ஆய்வு மையமும். Empty தெரிந்து கொள்ளலாம் வாங்க-நாசாவின் பறக்கும் தட்டும்,ஜெட்விமான ஆய்வு மையமும்.

Post by sakthy Mon Jul 14, 2014 8:43 pm

செவ்வாய்க் கோளிற்கான மனிதப் பயணத்துக்கு முன்னோடியாக, பறக்கும்தட்டை நாசா பரீட்சித்து, சூன் 28 இல் ஓரளவு வெற்றியைக் கண்டுள்ளது. இந்த பறக்கும் தட்டுச் [LDSD -Low Density Supersonic Decelerator] சோதனை மனிதன் செவ்வாயில் சுலபமாக தரையிறங்க வழி செய்யும்.
[You must be registered and logged in to see this image.]
2014 சூன் 28 ஆம் தேதி கவாயில் உள்ள கௌவாய்த் தீவில், நாசா விஞ்ஞானிகள், கீலிய பலூனிலிருந்து தூக்கிச் செல்லப்பட்டு, ஏவிய பறக்கும் தட்டு ஒலியை மிஞ்சிய வேகத்தில் உந்திச் சென்று 160,000 அடி உயரத்திலிருந்து 110 அடி விட்ட முள்ள [33 மீட்டர்] பாராசூட் மூலம், மெதுவாய் இறங்கி ஒருபெரும் விண்வெளிச் சாதனை புரிந்துள்ளது.
[You must be registered and logged in to see this image.]
பறக்கும் தட்டு 20 அடி விட்டமுள்ள [6 மீட்டர்] காற்று உப்பிய ஓர் வட்ட வளையம். கீலிய பலூன் வட்ட வளையத்தை முதலில் 120,000 அடி உயரத்தில் தூக்கி சென்று பிறகு தனியே விட்டது. அப்போது  வளையத்தில் இருந்த நான்கு சிறு உந்து கணைகள் [ராக்கெட்டுகள்] சுடப்பட்டு வளையத்தை, ஒலியை மிஞ்சிய வேகத்தில் தூக்கி 160,000 அடி உயரத்தில் [Stratosphere] கொண்டுபோய் மிதக்க விட்டது. அப்போது ஒரு பாராசூட் சுயமாய்த் திறந்து காற்று உப்பிய வளையத்தை மெதுவாக இறக்கி, முடிவில் அது பசிபிக் கடலில் விழ வைக்கப்பட்டது. முதன்முதல் மனிதர் செல்லும் செவ்வாய்க் கோள் தளவூர்தி, இவ்விதம் மெதுவாக இறங்க இந்தப் பறக்கும் தட்டுச் சோதனை செய்யப்பட்டது.

மேலே சொல்லப்பட்டSupersonic Mach : 4 -இதில் மாக் எண் அல்லது மேக் எண் -Mach number - Ma - M- என்பது வளியினூடாக அல்லது ஏதாவதொரு பாய்ம (உ+ம். காற்று,நீர், எண்ணெய்  போன்றவை) ஊடகத்தினூடாகச் செல்லும் ஒரு பொருளின் வேகத்தை, அதே ஊடகத்தில் ஒலியின் வேகத்தால் வகுக்க வரும் எண்ணாகும். பொதுவாக இது, ஒலியின் வேகத்தில் அல்லது அதன் மடங்குகளிலான வேகத்தில் செல்லும் வானூர்திகள், ஏவுகணைகள் போன்றவற்றின் வேகத்தைக் குறிக்கப் பயன்படுகின்றது.

இது பற்றி மேலதிக விளக்கம் தேவையில்லை எனக் கருதுகிறேன்.ஏனெனில் பள்ளியில் இது பற்றி பத்தாவது வகுப்பில்  பௌதீகவியல்-Physics- பாடத்தில் படித்திருப்பீர்கள்.
[You must be registered and logged in to see this image.]
செவ்வாய்த் தளத்தைத் தொடும் தருணத்துக்கு முன்னும், பின்னும் ஏற்படும் முக்கிய நிகழ்ச்சிகளைத் தகவல் மூலம் அனுப்ப,நெடிய பாதையில் இறக்கும் போது தகவல்களை பூமிக்கு நேரடியாக கிடைக்கச் செய்யலாம்.குறுகிய பாதையில் இறக்கினால் இரண்டு விண்வெளிக் கப்பல்கள் (NASA’s Mars Odyssey & Mars Reconnaissance Orbiter) தொடர்ந்து தளவூர்தியைக் கண்காணிக்க வேண்டும். இப்படியான கரணங்களால் பறக்கும் தட்டுப் போன்ற மெதுவாக இறங்கும் ஊர்திகள் அவசியமாகின்றன.
[You must be registered and logged in to see this image.]
ஏன் இப்படியான நிலா,செவ்வாய் ஆய்வுகள் முக்கியத்துவம் பெறுகிறது என்றால், எதிர்காலத்தில் பூமி, நிலவு, செவ்வாய் ஆகிய மூன்று கோள்களும் மனித இனத்துக்குப் பயன் தரக்கூடியனவாகக் கருதப்படுவதாலாகும்.செவ்வாய்க் கோளில் நீரிருக்கலாம். அங்கே ஒரு குடியிருப்புத் தங்குதளம் நமக்குத் தேவைப்படுகிறது. நிலவில் பேரளவு மின்சக்தி உண்டாக்க முடியும் என்பதுடன், முக்கியமான ஹீலியம்-3 எரிவாயு பெருமளவில் கிடைக்கிறது.
[You must be registered and logged in to see this image.]
மனிதன் தனது தேவைகளை நோக்கிப் பயணிக்கிறான். ஆனாலும் அதற்காக மனிதனை மனிதனே அழிக்க வேண்டுமா என்ற கேள்வியும் எழ்வே செய்கிறது.
[You must be registered and logged in to see this image.]
ஏற்கனவே செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட தளவூர்தி இறங்கிய, கேல் ஆழ்பள்ளத்தின் அடுக்குத் தளப் பாறைகள் (Gale Crater) ,சூரிய மண்டலத்திலே மிக அடர்த்தியாய்த் திரண்ட படிமானப் பாறைகள் (Sediment Rocks) என்பதுடன்,அந்த பாறை அடுக்குகள் 4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய பழைய மண் மாதிரிகளைக் கொண்டவையாக இருக்கலாம் என்பதால், செவ்வாய்க் கோளின் மண் மாதிரிகளை ஆராய்ந்து, செவ்வாய்க் கோளில் உயிரினம்,ஏதோ ஒரு பகுதியில் வழலாம் அல்லது வாழ்ந்திருக்கக் கூடும் என்பதையும் கண்டறிய முடியும்.

தளவூர்தியை சுமந்து சென்ற நாசா விண்சிமிழ் ஏவப்பட்ட பிறகு, சுமார் 9 மாதங்கள் 350 மில்லியன் மைல் தூரப் பயணம் செய்துள்ளது.  முதன்முதல் தளவூர்திச் சிமிழ் விடுபட்டு விழும் போது, மணிக்கு 8000 மைல் வேகத்தில் (விநாடிக்கு 3600 மீட்டர்), ஆகஸ்டு 4 ஆம் தேதி செவ்வாயின் மெலிந்த வாயு மண்டல உராய்வில் எரிந்து போகாமல், வெப்பக் கவசப் (Heat Shield) பாதுகாப்போடு இறங்கியது. இறுதி ஏழு நிமிடங்கள் செவ்வாய் ஈர்ப்பு விசையால், அந்த வேகம் மணிக்கு 13200 மைல் (விநாடிக்கு 5900 மீட்டர்) உச்சத்தில் அசுர வேகமானது !  

வெப்ப எரிப்பு மட்டம் தாண்டிய பிறகு பாராசூட் ஒன்று குடை விரித்துச் சிமிழைத் தாங்கி சற்று மெதுவாய் இறக்கியது. அதற்குப் பிறகு எதிரடி ராக்கெட்டுகள் (Retro-Rockets) சுயமாய் இயங்கிச் சிமிழின் வேகத்தைக் குறைத்தன. தளவூர்தி பின்பு ஒரு நூதனத் தூக்கி மூலம் மெதுவாக இறக்கப்பட்டு, செவ்வாய்த் தளத்தை ஊர்தியின் ஆறு சக்கரங்கள் ஒன்றாய்த் தொட்டன.

பிறகு அது அனுப்பும் தகவல், முன்பே அனுப்பி செவ்வாய்க் கோளைச் சுற்றிக் கொண்டிருக்கும் நாசாவின் மார்ஸ் ஆடிஸ்ஸி, அல்லது அடுத்த ரிக்கானைசென்ஸ் ஆர்பிட்டர் (NASA’s Mars Odyssey and / or Reconnaissance Orbiter) விண்ணுளவிகள் போன்றவை மூலம் தகவல்கள் பூமிக்கு வந்து சேரும்.

முக்கியமாக இந்தச் செவ்வாய்க் கோள் திட்டத்தில்,
1. உயிரினம் எப்போதாவது செவ்வாய்த் தளத்தில் வாழ்ந்ததா ?
2. செவ்வாய் பருவ நிலைப் (Climate) பண்பாடு எவ்விதம் இருந்து பிறகு மாறி யுள்ளது.
3. செவ்வாய்க் கோளின் தளவியல் (Geology) பண்பாடுகளை  அறிவது.
4. செவ்வாய்க் கோள் தேடலில் அடுத்து வரப் போகும் மனிதப் பயணத்துக்குத் தயார் செய்வது.
போன்றவை ஆய்வு செய்யப்படும்.

இதுவரை செவ்வாய்க் கோளில் இறங்கிய தள வாகனங்கள் அனைத்தும் காற்றடைத்த பந்துக் கொத்தில் (Airbag Cushion Balls) அமைக்கப் பட்டு பாராசூட் மூலம் இறக்கிக் கீழே விடுவிக்கப்பட்டன.  புதிய நூதனத் தளவூர்தி, ஹெலிகாப்டரில் சாதனம் இறக்கும் வானிறக்கு முறை போல் (Sky Crane Lowering) செவ்வாய்த் தளத்தில், பாராசூட், எதிரியக்கு ராக்கெட் (Retro-Rocket) முறையில் தடம் பதிக்கும்.வாகனத்தை இறக்கும் விண்சிமிழை முதலில் பாராசூட் சுமந்து கீழிறக்குகிறது. பிறகு விண்சிமிழின் எதிரியக்கு ராக்கெட்டுகள் இயங்கி செவ்வாய்க் கோள் ஈர்ப்பு விசைக்கு எதிராக, மெதுவாக்கி அதன் இழுப்பைக் குறைக்கின்றன. அதன்பின் வான் கீழிறக்கி (Sky Crane) வடங்களில் கட்டப்பட்ட தளவூர்தி வாகனம், இறங்கித் தளத்தில் ஆறு சக்கரங்கள் படிய ஏதுவாகிறது.
…..........................
ஜெட்விமான ஆய்வு மையம்
[You must be registered and logged in to see this image.]
17 டன் எடை தொலைநோக்கியுடன் ஜெட் விமானத்தில் விண்வெளி ஆய்வு மையத்தை செயல்படுத்தி உள்ளது நாசா! SOFIA (Stratospheric Observatory for Infrared Astronomy)

நட்சத்திரங்களை ஆய்வு செய்ய 17 டன் எடையுள்ள தொலைநோக்கியுடன், ஜெட் விமானத்தில் பறக்கும் ஆய்வு மையத்தை, அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையம் நாசா, ஏற்பாடு செய்துள்ளது. .
இது, நட்சத்திரங்களை ஆய்வு செய்வதற்காக, 17 டன் எடையும் 8 அடி நீளமுள்ளதுமான தொலைநோக்கியுடன் கூடிய போயிங் 747 ஜெட் விமானத்தை பறக்கும் விண்வெளி ஆய்வு மையமாக மாற்றியுள்ளது. நட்சத்திரங்களை இந்த தொலைநோக்கி வழியாக பார்ப்பதற்கு ஏற்ற வகையில், 16-க்கு 23 அடி உள்ள தானாக திறக்கும் கதவும் அமைக்கப்பட்டுள்ளது.
[You must be registered and logged in to see this image.]
தொலைநோக்கியை தரையில் இருந்து பயன்படுத்தும் போது, காற்று மண்டலத்தில் காணப்படும் தூசி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நட்சத்திரங்களை தெளிவாக காணமுடியாது.காற்று மண்டலத்திற்கு மேலே பறக்கும் திறனுடைய இந்த விமானம், தொடர்ந்து 12 மணிநேரம் 6,625 கடல் மைல் தொலைவுக்கு தொடர்ந்து பறக்கும் திறனுடையதாகும்.

தரையில் அமைக்கப்பட்டிருக்கும் தொலைநோக்கிகளை விட விமானத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த தொலைநோக்கி இன்னும் தெளிவான காட்சிகளை காட்டும் திறன் கொண்டவை.
இந்த திட்டம் நன்றாக செயல்பட்டால் , 2015-ஆம் ஆண்டிற்குள் இது போல் 100 முறை வானத்தில் பறந்து ஆய்வு செய்ய நாசா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

தெரிந்து கொள்ளலாம் வாங்க-நாசாவின் பறக்கும் தட்டும்,ஜெட்விமான ஆய்வு மையமும். Empty Re: தெரிந்து கொள்ளலாம் வாங்க-நாசாவின் பறக்கும் தட்டும்,ஜெட்விமான ஆய்வு மையமும்.

Post by Tamil Mon Jul 14, 2014 9:23 pm

வாழ்த்துக்கள் நாசா.....நன்றிகள் சக்தி அறிய தந்தமைக்கு
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» வாங்க சில நல்ல விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்..!
» தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 20
» தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 22
» தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 33
» தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-23

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum