Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)by வாகரைமைந்தன் Wed May 31, 2023 7:57 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 31, 2023 7:15 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 30, 2023 4:47 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Thu Feb 16, 2023 8:07 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm
» கண்ணகி என்னும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி
by veelratna Wed Oct 20, 2021 12:51 pm
» கொரோனா பாடல் அண்மையில் வெளியாகிய
by veelratna Mon Oct 18, 2021 12:44 pm
» மாவிடடபுரம் கந்தசுவாமி கோவிலில் இடம் பெற்ற தேர்த்திருவிழாவின் பழைய காணொளி ஒன்று
by veelratna Mon Oct 18, 2021 11:54 am
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில்.
by veelratna Fri Oct 15, 2021 1:48 pm
» தலைமுறை இடைவெளி
by veelratna Fri Oct 15, 2021 1:44 pm
» தமிழால் பூசை நடக்கும் ஒரேகோவில்
by veelratna Tue Oct 12, 2021 10:58 am
» அண்ணை ரெயிட் கே எஸ் பாலச்சந்தர்
by veelratna Tue Oct 12, 2021 10:52 am
» ஓடலிராசையா KS Balachandran
by veelratna Mon Oct 11, 2021 10:21 am
» சுகுமாரி கதை தேடி நான் உயிரை கொடுத்ததோ
by veelratna Sun Oct 10, 2021 8:43 pm
» கலாவிநோதன் சின்னமணிஅவர்களின் பகுதி ;1
by veelratna Fri Oct 08, 2021 9:26 am
» தேசிய தலைவர் பிரபாகரன் ...................
by வாகரைமைந்தன் Fri Oct 01, 2021 11:53 am
கவிதை படிக்கலாம்
Page 1 of 1
கவிதை படிக்கலாம்

நேற்று வரை சேமித்த சில்லறை நினைவுகள்
சத்தம் இடுகின்றன, கனவுகளாக!
எந்த தடுப்புச் சுவரும் இல்லையே? கனவுகளை
கடந்து
சென்றிட..
நேற்றைய நினைவுகள்
இன்றைய எண்ணங்களோடு!!
நீள் வெட்டு,
குறுக்கு வெட்டு,
தோற்றம்,
கனவுகளுக்கில்லை!!!!
வெளியில் சொல்ல முடியா
கனவுகள்
வியாதியாகிறது!!!!!
சில கனவுகள்,
வாழ்க்கையை
வென்றிட
விரட்டுகிறது
மனிதனை!
கடலில்
கரை காணும்
மாலுமியாக
மனம் நகர்ந்து கொண்டே…..
மணித்துளிகள் தோறும்
பயணிக்கிறது
முதிய வயதின்
புதிய கனவுகள்
புதைக்கப்படும்
பாரமுகத்துடன்!
பருவ வயதின்
பகல் கனவு
பல முறை
பார்க்கப்படும்
நினைவுகளில்!
கனவு கலையும்போது
கலவரமான,
இரவுகள்
நீண்டு கொண்டே போகும்!!!!!
பார்க்காத காட்சிகளை
பார்த்த மனிதர்களோடு
இணைத்து
பார்க்கும்,,, கனவுகள்!!!
கனவின்
கத்திரிக்கோல்
வெட்டி விடுகிறது
காலங்களை
முன்னும் பின்னுமாக
முழு வாழ்க்கையையும்
வாழ்ந்திட
முயல்கிறான்
மூணு நிமிடத்தில்
கனவுகளை
கேட்டு வாங்கிட
தேவையில்லை!
கேட்கும்
கனவுகள்
வருவதே இல்லை!
கனவு இல்லாத
கதைகளை
கேட்க பிடிக்கவில்லை!
ஏதேன் தோட்டத்தின்
ஏதோ ஒரு நினைவு
இன்னும்
உயிர்ப்புடன்
ஒவ்வொருவருக்குள்ளும்
ஒளிந்திருக்கிறது!
வாழ்வின் ஒரு பகுதி அல்ல…..
கனவின் முழு பகுதியே
வாழ்க்கை….
உறங்க மட்டுமல்ல
விழித்திடவும்
வேண்டும் கனவுகள்….
அவசர வாழ்க்கை அள்ளி போட்ட
மிச்சத்தில் …
தினம்,தினம்
தேடிப்பார்க்கிறான்…
வாழ்வின் கனவுகள் ஏதேனும் …….
மாற்றபட்டதா நிஜமாக
என…..
இப்படிக்கு.
கனவுகளில் வாழும் மனிதர்கள்
பா. தேவிமயில் குமார்
Last edited by வாகரைமைந்தன் on Thu Dec 02, 2021 4:04 pm; edited 3 times in total
வாகரைமைந்தன்- பண்பாளர்
- Posts : 1400
Join date : 23/05/2021
தேநீர் குடிக்க ஆசை

தேநீர்க் கடையை தினமும் தாண்டித்தான் செல்கிறேன்!!!!
அனைவரும் ஏதேதோ பேசுவது எனக்குக் கேட்கும் !!
ஓடிப்போன ஜோடியைப் பற்றி ஒரு நாள் !
நடிகையின் அந்தரங்க வாழ்க்கை வேறொரு நாள் !
அரசியல் களம் அலசப்பட்டது மற்றொரு நாள் !
வாங்குவது விற்பது விலை பற்றி இன்னொரு நாள்!
காலநிலை பற்றி கவலையுடன் பிறிதொரு நாள்!
திருநங்கைகளின் திருநாள் பற்றி ஒரு நாள் !
சட்ட மசோதா பற்றி காரசாரமாக மற்றொரு நாள்!
கமலா ஹாரிஸ் என்ற
கருப்பு வைரம் பற்றி ஒரு நாள் …..என
அப்பப்பா எத்தனை களங்கள்
காலம் காலமாய்
அலசப்படுகின்றன!!!
அங்கே!
காதில் வாங்கிய படியே கடந்து செல்வேன் !!!!
ஒரு நாள் நானும் உள் நுழைந்தேன் !
அண்ணா ஒரு டீ என ஆணையிட்டு அமர்ந்தேன் !
பட்டை தம்ளரில் பக்காவான சுவையில் தேநீர்!!
அடடா ….
ஏலமும்,
இஞ்சியும், வஞ்சனையில்லாத
வாசனையோடு
தேநீரில் கலந்திருந்தன
தெய்வீக
காதலர்களை போல!
ரசித்துக்குடித்தேன் ரசவாத ஆராய்ச்சியாளர் போல….
அந்த இடம் அமைதியானது…..
அத்தனை கண்களும் என் மீது ….
ஒரு பெண் உங்களிடத்தில் தேநீர் அருந்தியது தகாத செயலோ??
நாளை முதல் என்னைப் பற்றியும் ஏதேனும் அங்கு பேசக்கூடும் ….
பேசுபொருளாக
நானும் மாறுவேன்!
கண்ணாடி டம்ளரில்
காணப்படும்
திரவமாய்….
மிடறு, மிடறாக
மெதுவாக….
இப்படிக்கு,
தேனீர் கடையில்
தேனீர் அருந்த ஆசைப்படும் பெண்
அனைவரும் ஏதேதோ பேசுவது எனக்குக் கேட்கும் !!
ஓடிப்போன ஜோடியைப் பற்றி ஒரு நாள் !
நடிகையின் அந்தரங்க வாழ்க்கை வேறொரு நாள் !
அரசியல் களம் அலசப்பட்டது மற்றொரு நாள் !
வாங்குவது விற்பது விலை பற்றி இன்னொரு நாள்!
காலநிலை பற்றி கவலையுடன் பிறிதொரு நாள்!
திருநங்கைகளின் திருநாள் பற்றி ஒரு நாள் !
சட்ட மசோதா பற்றி காரசாரமாக மற்றொரு நாள்!
கமலா ஹாரிஸ் என்ற
கருப்பு வைரம் பற்றி ஒரு நாள் …..என
அப்பப்பா எத்தனை களங்கள்
காலம் காலமாய்
அலசப்படுகின்றன!!!
அங்கே!
காதில் வாங்கிய படியே கடந்து செல்வேன் !!!!
ஒரு நாள் நானும் உள் நுழைந்தேன் !
அண்ணா ஒரு டீ என ஆணையிட்டு அமர்ந்தேன் !
பட்டை தம்ளரில் பக்காவான சுவையில் தேநீர்!!
அடடா ….
ஏலமும்,
இஞ்சியும், வஞ்சனையில்லாத
வாசனையோடு
தேநீரில் கலந்திருந்தன
தெய்வீக
காதலர்களை போல!
ரசித்துக்குடித்தேன் ரசவாத ஆராய்ச்சியாளர் போல….
அந்த இடம் அமைதியானது…..
அத்தனை கண்களும் என் மீது ….
ஒரு பெண் உங்களிடத்தில் தேநீர் அருந்தியது தகாத செயலோ??
நாளை முதல் என்னைப் பற்றியும் ஏதேனும் அங்கு பேசக்கூடும் ….
பேசுபொருளாக
நானும் மாறுவேன்!
கண்ணாடி டம்ளரில்
காணப்படும்
திரவமாய்….
மிடறு, மிடறாக
மெதுவாக….
இப்படிக்கு,
தேனீர் கடையில்
தேனீர் அருந்த ஆசைப்படும் பெண்
பா. தேவிமயில் குமார்
வாகரைமைந்தன்- பண்பாளர்
- Posts : 1400
Join date : 23/05/2021
ஒரு கரு மைப் பொழுது

இது ஒரு
கரு மைப் பொழுது
வாக்குப் பெட்டிகள்
வலுவிழந்து போயின
கொள்ளைப்புறக் கதவுகள்
திறந்தே இருப்பதால்..
விலைப்பட்டியலோடு
மாண்புமிகுகள்
ஏலத்திற்காகக்
காத்துக்கிடப்பதால்
குப்பைகளை
மறுசுழற்சி செய்ய
நாடாளுமன்றத்தின் கதவுகள்
திறந்தே வைக்கப்பட்டுள்ளன.
விலை பேசப்பட்ட
தவளைகளின் வருகைக்காக
நாற்காலிகள்
காத்துக் கிடக்கின்றன –
தவளைகளை
வரவேற்க
எங்களின் உமிழ்நீரும்
தொடர்ந்து சேகரிக்கப்படுகிறது..
நம்பிக்கையோடு
விரலில் இட்ட மை
முகத்தில் பூசப்பட்டது.
அரசியல் கழிவுகளின்
காலடியில்
ஜனநாயகம்
மிதிபட்டுக் கிடப்பதால்
வாக்களித்த விரல்கள்
உடைத்தெறியப்பட்டன.
நாட்டை இருள்
சூழ்ந்து கொண்டிருக்கிறது –
வெளிச்சத்தைத்
தேட வேண்டிய அரசு
தீகுச்சிகளை
அலட்சியம் செய்கிறது.
மாற்றத்திற்காக
உரக்கக் கத்தியவர்களின்
நாக்குகளோ
சாலையோரம்
சிதறிக்கிடக்கின்றன
தடுத்த
சுவருக்குப் பின்னால்
ஒளிந்திருப்பதால்,
மக்களின் அலறலும்
மரண ஓலமும்
அவர்களின் காதுகளில்
ஒலிக்கவேயில்லை
கடைசி வரைக்கும்.
– சிவா லெனின்-
வாகரைமைந்தன்- பண்பாளர்
- Posts : 1400
Join date : 23/05/2021
யாதும் ஊரே யாவரும் கேளீர்

யாதும் ஊரே யாவருமே
அன்புக் குரிய நம்மக்கள்
தீதும் நன்றும் பிறராலே
தீட்டித் தருதல் இலைஎன்றார்
காதல் தமிழ்பால் கொண்டவராம்
கணியன் பூங்குன் றன்னவராம்
ஆய்தல் வேண்டும் அவர் மொழியை
அறிவுள் ளவராம் வையத்தார்;
நலமாய் அறிவை நாட்டியவன்
நற்போர் எல்லாம் சூட்டியவன்
நிலத்தில் ஏரைப் பூட்டியவன்
நெருப்பை மூட்டிக் காட்டியவன்
கலத்தைக் கடலில் ஓட்டியவன்
காலத் தமிழன் அவனதனால்
உலகில் முதலில் தோன்றியவன்
உலகம் சொந்த ஊர் என்றான்;
முன்னால் பிறந்த மாந்தந்தான்
முறையாய் இனங்கள் பலவாறாய்ப்
பின்னாள் பிரிந்த மொழிபலவாய்ப்
பிரிந்து பிரிந்து வாழ்கின்றான்
எந்நாள் அதனால் யாவருமே
அன்புக் கேளிர் எனச்சொன்னான்
தொன்மைத் தமிழர் வரலாற்றைத்
துல்லி யமாக வரிஇரண்டில்
உண்மை உலகோர் உளமெல்லாம்
உணர்ந்து கொள்ளத் தான்சொன்னான்
நன்மை தீமை என்பதெலாம்
நமக்கு யாரும் தருவதிலை
மண்ணில் நமக்கு நாமேதான்
மல்க அமைத்துக் கொள்கின்றோம்;
பொதுமை பொறுமை என்பதெலாம்
பொய்யாய்ப் போன உலகத்தில்
எதுமெய் எதுபொய் தெரியாமல்
எல்லாம் மயங்கி வாழ்கின்றார்
முதுமை கொண்ட நற்றமிழின்
முறைமை அறியாச் சிறியோர்கள்
புதுமை என்னும் பெயராலே
புன்மை செய்து கெடுக்கின்றார்;
சுரண்டி விட்டார் தமிழ் மண்ணைச்
சுரண்டிச் சுரண்டிக் கொழுக்கின்றார்
சுரண்டு வார்கள் இன்னும்தான்
சுரணை இழந்தோம் நாம்என்றால்;
திரண்டுள் ளார்கள் நமைச்சூழ்ந்த
திருட்டுக் கூட்டம் இனித்தமிழா!
இருண்டு போகும் உன்வாழ்க்கை
இனியும் விழிக்கா திருக்கின்றாய்;
நந்தம் மண்ணில் வந்துபுகும்
நாய்கள் கூட நமை ஏய்க்கும்
விந்தை நந்தம் மண்ணில்தான்
வீரம் காட்டி விளையாடும்
சொந்த மண்ணில் கூடதமிழ்ச்
சொல்லை அழிக்கும் முயற்சிஎலாம்
எந்த மடையன் செய்தாலும்
எதிர்க்கா தவனோ முழுமடையன்;
நமக்குச் சொந்தம் தமிழ்நாடு
நம்தாய் நாடு தமிழ்நாடே
நமக்குச் சொந்தம் நம்மொழியே
நம் தாய் மொழியும் தமிழ்மொழியே
நமக்குப் பேரும் தமிழினமே
நமக்கு மற்றார் பிறஇனமே
நமக்கு வேண்டும் தமிழ்மனமே
நம்த மிழின்றேல் நாம்பிணமே!
கட்சி இருந்து தொலையட்டும்
காட்சி பலவும் நிலவட்டும்
பெட்புத் தமிழால் ஒன்றிணைவோம்
பிரிவி னைகள் விலகட்டும்
உட்பு குந்த தமிழாலே
ஒளிர்ந்து சேர்வோம் தமிழினமாய்
ஒப்புக் கொன்று படஎண்ணா(து)
உயர வேண்டும் மண்மேலே!
சாதி யாவும் விலகட்டும்
சமயம் வாழ்ந்து போகட்டும்
பேதைப் மைகள் இல்லாத
பெருமை கொண்ட இனத்தவராய்த்
தீதில் லாமல் தமிழர்கள்
தேயம் தன்னில் வாழட்டும்
வேத னைகள் தரமுயல்வார்
விலகி நமைவிட் டோடட்டும்.
-துரை.மாலிறையன்-
வாகரைமைந்தன்- பண்பாளர்
- Posts : 1400
Join date : 23/05/2021
எலுமிச்சங்கனியின் சுயசரிதை
சதுர வடிவப் பானையாய் மெல்ல அசைந்துகொண்டிருந்தது வீடு.
கையறு பாடல்களின் புளிப்பு
ஊறிப் பெருகி
பழங்கஞ்சியாயிருந்தது.
சோற்றுப் பருக்கைகளைப்போல
குழந்தைகள் நீந்திக் களித்தனர்.
வெளுத்தத் துணிகளின்மேல்
எச்சமிடும் காகங்கள்
மீன் செவுள்களையும்
கோழிக் குடலையும்
பானையின் தூரில் மறைத்துச் சென்றன.
மரத்தடி தெய்வங்கள்
கனிந்தனுப்பிய
எலுமிச்சம் பழங்களால்
பனங்கிழங்கு அலகுடைய செங்கால்
நாரைகள்
ஆடும் வீட்டினை
அடை கொடுத்து நிறுத்திய போழ்து
முற்றத்து வெளியில்
ஊறுகாயாய் நறுமணமெழ
பிறைநிலா தோன்றியது.
கன்னத்தில் உலர்ந்துறைந்த
ஊறுகாய் சாறோடு
விடிலியிலிருந்து வெளிச்சாடிய
சிறார்களின்
செருப்பற்ற பாதங்கள்
அழுந்திக் கடந்ததில்
கன்னங்குழி விழ
நகைத்தது நிலம்.
2.
ஊருக்கு வெளியே பனைமரத்தைத்
துரத்திய பின்பு
எங்கோ பனங்காட்டில்
மனித முகத்தோடு
காய்கள் காய்ப்பதைக்
காணச்சென்றவர்கள்
தரை துளைத்து பீறிட்டெழும் சுட்டுவிரலாய்
பனங்கன்றுகள் பார்த்தனர்.
பிளவடிகளின் உடலிலேற்றி
ஊருக்குள் சூடிவிட்ட ஒட்டத்தியில் காட்டின் மணம்.
அந்தி வெளிச்சம் பரவும்
போதமற்ற விழிச்சடவு
தனது வசிய இழைப் பின்னலில்
அனாதைத் தனங்களின்
மென் கால்களைப் பற்றிப் பிடிக்க
கேவல்களாய் உறையும்
காவோலை சலசலப்பில்
பெருவெளி கலய வடிவெடுத்தது.
கரும்பனைக் கூட்டத்தின்
முரடேறிய பொருக்கினில்
தேய்த்துச் சொறிந்தவனின்
முதுகுத் தொலியுரிந்த சிவப்பினில்
தண்டனைக் கருவிகளும்
போர்க் கருவிகளும்
தோன்றி மறைந்தன.
பிறகு
பனைஉயரம்
அகலத்து கமுகின் உயரத்தை
அண்ணார்ந்து பார்க்கப் பழகியது.
நறுக்கிய கமுகம் பாளையில்
மடித்த ஊறுகாய் விரித்து
நாவோரங்களில் இழுத்து
உமிழ்நீர் உறிஞ்சி
உதடு குவித்தபோது
புளிப்புச் சுவையில்
குவிந்திருந்த உலகம்
மீண்டும் உடைந்தது.
3.
தலைவாழைத் தளிரிலைபோல
பரந்து மினுங்குகிறது பெருநகரம்
ஓநாய் வயிற்றோடு
விருந்துண்பவர்களின்
கூசுகின்ற பற்களுக்கு
இலையின்
இடதுபுறத் தொலைவிலிருக்கும்
ஊறுகாயின் மீது
விமர்சனம் ஏதுமில்லை
விரல் வைப்பதுமில்லை.
4.
தீவினையைக் கூடுமாற்றி நாற்சந்தியில்
விட்டுச் செல்பவரின் முகங்களில்
நீர்க்கடுப்பின் ரேகைகள் மாறித் தெளிவுறுகிறது.
அம்மஞ்சள் பிசாசைத் தூற்றி கால்மாற்றி
நடப்பவர்கள்
ஆளுக்கொரு எலுமிச்சையை
வீடு சேர்க்கிறார்கள்.
5.
அம்மன்
நான்குபேர்
எலுமிச்சைகளிரண்டை பூடகவெளியில்
முடிவின்றி உருட்டி விளையாடுகின்றனர்.
பூமியின் எல்லா திசைகளிலும் இழுபட்டு நைகிறது ஆண்குறி.
6.
வழுக்கி வழுக்கிப் பற்றிப் பிடித்து
அறையிலிருந்த கனியில் ஏறிநின்று
முன்கால்கள் தூக்கி நிமிர்கிறது
சிற்றெறும்பு.
உலகம் ஒரு
எலுமிச்சையளவில்
சுருங்கிவிட்டது.
மறைந்திருக்கும் எலியின்
முகத்திலிருக்கும்
கடவுளின் கண்கள்
பளிச்சென்று ஒரு முறை பூமியை
படமெடுத்தது.
7.
சைனாக் களிமண் சீசாவிலிருந்து பூஞ்சை படர்ந்த ஊறுகாயை
தெருவோரத்தில் கொட்டிக்கொண்டிருக்கிறாள் ஒருத்தி
பிளாஸ்டிக் எலுமிச்சையை
நசுக்கியபடி
வாகனத்தைப் புறப்படுத்துகிறான் ஒருவன்.
8.
மூலைகள் நேர்த்தியாய் பின்னியிருக்கக்
கவிழ்ந்திருக்கும்
நெருப்புக் கடவத்தில்
நரங்கும் வேனலை
எலுமிச்சையெறிந்து விலக்குபவன்
உப்பளத்தில் நெளிந்து வரும்
போஞ்சியாற்றில் நீச்சலறிந்தவன்.
9.
நெஞ்சைப் பிழிந்து
தோலாய் புறமெறியும்
வணிக வெளி நோக்கி சூழ்பவரின்
மறு திசையில்
தோலை உட்குழித்து
தீபமேற்றும் அதிகாலை நேர்ச்சைகள்.
10.
ஊறுகாயின் ஒரு கீற்றை
தோணியாக்கி
கள்ளின் பட்டைகளையும்
கலயமும் கடந்து
பிராந்திக் குப்பியை
சென்று சேர்ந்த ஒரு எலுமிச்சங்கனியை
இடமிருந்துவலம் மூன்று முறை
தலையைச்சுற்றி
இருட்டில் எறிந்து
திரும்பிப் பாராமல் வீடடைகிறான்
மஞ்சளொளிரும்
உபகிரகமொன்று
வீட்டைச் சுற்றத் துவங்குகிறது.
-ராஜன் ஆத்தியப்பன்-கையறு பாடல்களின் புளிப்பு
ஊறிப் பெருகி
பழங்கஞ்சியாயிருந்தது.
சோற்றுப் பருக்கைகளைப்போல
குழந்தைகள் நீந்திக் களித்தனர்.
வெளுத்தத் துணிகளின்மேல்
எச்சமிடும் காகங்கள்
மீன் செவுள்களையும்
கோழிக் குடலையும்
பானையின் தூரில் மறைத்துச் சென்றன.
மரத்தடி தெய்வங்கள்
கனிந்தனுப்பிய
எலுமிச்சம் பழங்களால்
பனங்கிழங்கு அலகுடைய செங்கால்
நாரைகள்
ஆடும் வீட்டினை
அடை கொடுத்து நிறுத்திய போழ்து
முற்றத்து வெளியில்
ஊறுகாயாய் நறுமணமெழ
பிறைநிலா தோன்றியது.
கன்னத்தில் உலர்ந்துறைந்த
ஊறுகாய் சாறோடு
விடிலியிலிருந்து வெளிச்சாடிய
சிறார்களின்
செருப்பற்ற பாதங்கள்
அழுந்திக் கடந்ததில்
கன்னங்குழி விழ
நகைத்தது நிலம்.
2.
ஊருக்கு வெளியே பனைமரத்தைத்
துரத்திய பின்பு
எங்கோ பனங்காட்டில்
மனித முகத்தோடு
காய்கள் காய்ப்பதைக்
காணச்சென்றவர்கள்
தரை துளைத்து பீறிட்டெழும் சுட்டுவிரலாய்
பனங்கன்றுகள் பார்த்தனர்.
பிளவடிகளின் உடலிலேற்றி
ஊருக்குள் சூடிவிட்ட ஒட்டத்தியில் காட்டின் மணம்.
அந்தி வெளிச்சம் பரவும்
போதமற்ற விழிச்சடவு
தனது வசிய இழைப் பின்னலில்
அனாதைத் தனங்களின்
மென் கால்களைப் பற்றிப் பிடிக்க
கேவல்களாய் உறையும்
காவோலை சலசலப்பில்
பெருவெளி கலய வடிவெடுத்தது.
கரும்பனைக் கூட்டத்தின்
முரடேறிய பொருக்கினில்
தேய்த்துச் சொறிந்தவனின்
முதுகுத் தொலியுரிந்த சிவப்பினில்
தண்டனைக் கருவிகளும்
போர்க் கருவிகளும்
தோன்றி மறைந்தன.
பிறகு
பனைஉயரம்
அகலத்து கமுகின் உயரத்தை
அண்ணார்ந்து பார்க்கப் பழகியது.
நறுக்கிய கமுகம் பாளையில்
மடித்த ஊறுகாய் விரித்து
நாவோரங்களில் இழுத்து
உமிழ்நீர் உறிஞ்சி
உதடு குவித்தபோது
புளிப்புச் சுவையில்
குவிந்திருந்த உலகம்
மீண்டும் உடைந்தது.
3.
தலைவாழைத் தளிரிலைபோல
பரந்து மினுங்குகிறது பெருநகரம்
ஓநாய் வயிற்றோடு
விருந்துண்பவர்களின்
கூசுகின்ற பற்களுக்கு
இலையின்
இடதுபுறத் தொலைவிலிருக்கும்
ஊறுகாயின் மீது
விமர்சனம் ஏதுமில்லை
விரல் வைப்பதுமில்லை.
4.
தீவினையைக் கூடுமாற்றி நாற்சந்தியில்
விட்டுச் செல்பவரின் முகங்களில்
நீர்க்கடுப்பின் ரேகைகள் மாறித் தெளிவுறுகிறது.
அம்மஞ்சள் பிசாசைத் தூற்றி கால்மாற்றி
நடப்பவர்கள்
ஆளுக்கொரு எலுமிச்சையை
வீடு சேர்க்கிறார்கள்.
5.
அம்மன்
நான்குபேர்
எலுமிச்சைகளிரண்டை பூடகவெளியில்
முடிவின்றி உருட்டி விளையாடுகின்றனர்.
பூமியின் எல்லா திசைகளிலும் இழுபட்டு நைகிறது ஆண்குறி.
6.
வழுக்கி வழுக்கிப் பற்றிப் பிடித்து
அறையிலிருந்த கனியில் ஏறிநின்று
முன்கால்கள் தூக்கி நிமிர்கிறது
சிற்றெறும்பு.
உலகம் ஒரு
எலுமிச்சையளவில்
சுருங்கிவிட்டது.
மறைந்திருக்கும் எலியின்
முகத்திலிருக்கும்
கடவுளின் கண்கள்
பளிச்சென்று ஒரு முறை பூமியை
படமெடுத்தது.
7.
சைனாக் களிமண் சீசாவிலிருந்து பூஞ்சை படர்ந்த ஊறுகாயை
தெருவோரத்தில் கொட்டிக்கொண்டிருக்கிறாள் ஒருத்தி
பிளாஸ்டிக் எலுமிச்சையை
நசுக்கியபடி
வாகனத்தைப் புறப்படுத்துகிறான் ஒருவன்.
8.
மூலைகள் நேர்த்தியாய் பின்னியிருக்கக்
கவிழ்ந்திருக்கும்
நெருப்புக் கடவத்தில்
நரங்கும் வேனலை
எலுமிச்சையெறிந்து விலக்குபவன்
உப்பளத்தில் நெளிந்து வரும்
போஞ்சியாற்றில் நீச்சலறிந்தவன்.
9.
நெஞ்சைப் பிழிந்து
தோலாய் புறமெறியும்
வணிக வெளி நோக்கி சூழ்பவரின்
மறு திசையில்
தோலை உட்குழித்து
தீபமேற்றும் அதிகாலை நேர்ச்சைகள்.
10.
ஊறுகாயின் ஒரு கீற்றை
தோணியாக்கி
கள்ளின் பட்டைகளையும்
கலயமும் கடந்து
பிராந்திக் குப்பியை
சென்று சேர்ந்த ஒரு எலுமிச்சங்கனியை
இடமிருந்துவலம் மூன்று முறை
தலையைச்சுற்றி
இருட்டில் எறிந்து
திரும்பிப் பாராமல் வீடடைகிறான்
மஞ்சளொளிரும்
உபகிரகமொன்று
வீட்டைச் சுற்றத் துவங்குகிறது.

வாகரைமைந்தன்- பண்பாளர்
- Posts : 1400
Join date : 23/05/2021

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
» இலங்கை ராணுவத்தை கவிதை மூலம் சாடுகிறார் (கவிஞர் வாலி ) அவர்கள்.. அருமையான கவிதை video
» இது தொடர் கவிதை அல்ல தொடரும் கவிதை
» “கற்பனை மட்டுமல்ல கவிதை” இது ஒரு கவியரங்கக் கவிதை!!
» பள்ளி பாடப் புத்தகங்களை online இல் படிக்கலாம்.
» இலங்கை ராணுவத்தை கவிதை மூலம் சாடுகிறார் (கவிஞர் வாலி ) அவர்கள்.. அருமையான கவிதை video
» இது தொடர் கவிதை அல்ல தொடரும் கவிதை
» “கற்பனை மட்டுமல்ல கவிதை” இது ஒரு கவியரங்கக் கவிதை!!
» பள்ளி பாடப் புத்தகங்களை online இல் படிக்கலாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|