Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Apr 19, 2024 9:02 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm
Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
Page 1 of 1
Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
“மூளையில்லாதவங்களுக்கு முட்டைன்னு அர்ச்சனா சொன்னாங்க” என்று அவரைப் போட்டுக் கொடுத்தார் நிக்சன். “எனக்கு முட்டை பிடிக்கும்” என்ற கமல், இன்னொரு சமயத்தில்...
‘வன்ம போதையிலிருந்து உங்களால் விடுபட முடியவில்லை’ என்று கமலும் இந்த எபிசோடில் போட்டியாளர்களிடம் சொல்லி இதை அதிகாரபூர்வமான எச்சரிக்கையாக மாற்றி விட்டார்.
‘கமல் சார் பத்தி உனக்கு தெரியாது. செஞ்சு வுட்ருவாரு’ என்று விஷ்ணு சொன்ன நேரம், கொழுத்த ராகுகாலமோ என்னமோ, திகைத்து நின்று பேச முடியாமல் ‘குத்தத்தை ஒப்புக்கறங்கய்யா’ என்று நொந்து போகுமளவிற்கு விஷ்ணுவை ‘ரோஸ்ட்’ செய்து விட்டார் கமல். வலுவான சாட்சியங்களும் அவருக்கு எதிராக இருந்தன. இதற்கு இடையில் அர்ச்சனாவிற்கும் ‘சர்காஸ்டிக்’ அர்ச்சனைகள் நடந்தன. சிரித்து மழுப்ப வேண்டிய சூழலில் அர்ச்சனா இருந்தார்.
பூர்ணிமா
‘ஸ்மால் பிக் பாஸில் பாட்டு பாடுகிறார்கள். அதற்கு நாம் கவுன்ட்டர் எண்டர்டெயின்மென்ட் தருவோம்’ என்று மாயா சொன்னது ஒரு நல்ல யோசனை. அதைக் கூட ஆதரித்து வளர்த்தெடுக்க கேப்டன் விஷ்ணுவால் இயலவில்லை. அந்த அளவிற்கு எதிர்ப்புணர்ச்சியும் பாரபட்சமும் அவரது கண்களை மூடி இருந்தது.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?
உலக நாயகன், ஏதாவதொரு உலக தினத்தை நினைவுப்படுத்தி நீண்ட நாட்கள் ஆயிற்று. ‘சர்வதேச மனித உரிமை தினத்தை’யொட்டி அது தொடர்பாக உரையாற்றியவர், ‘என் உரிமையை எந்தவொரு மதத்தின் பெயராலும் கடவுளின் பெயராலும் மறுத்தால் வேறு கோவில்கள் எழும். நான் நாத்திகம் பேசவில்லை. இதுதான் உலக வரலாறு. ஒருவரின் உரிமை மறுக்கப்படுவது சட்டப்படி குற்றம்’ என்று சொன்னபடி அகம் டிவியாக உள்ளே சென்றார். அங்கேயும் ஒருவரின் உரிமை மறுக்கப்படுகிறதாம்.
‘எப்படி இருக்கீங்க?’ என்கிற சம்பிரதாய விசாரிப்புகளை எல்லாம் கமல் இப்போது வைத்துக் கொள்வதில்லை. உள்ளே நுழைந்ததும் நேரடியாக கேள்விகள்தான். “மாயா மணியடிச்சாங்க. இந்த வீட்டில எண்டர்டெயின்மென்ட் இருக்கான்னு. இருக்கா?” என்பது கமலின் கேள்வி. இல்லை என்பது பார்வையாளர்களுக்கு மட்டுமல்ல, போட்டியாளர்களுக்கும் தெரிந்த பதிலே. என்றாலும் ஆளாளுக்கு ஒன்று சொல்லி சமாளித்தார்கள். சிலர் மட்டுமே உண்மையை ஒப்புக் கொண்டார்கள்.
முதலில் எழுந்த தினேஷ், விஷ்ணு குரூப் ஆசாமி என்பதால் அதற்கேற்ப சமாளித்தார். “மாயா எதை எண்டர்டெயின்மென்ட்டுன்னு சொல்றாங்கன்னு தெரியல. நான் சந்தோஷமா இருந்தேன். என்னைச் சுத்தியிருந்தவங்க அப்படி வெச்சிக்கிட்டாங்க” என்றார். வெறும் புறணியும் சண்டையுமா சுவாரசியம்?! அடுத்து எழுந்த சுரேஷ் வழக்கம் போல் எதையோ சொன்னார். கமல் சொன்னது போல் விசாரணை நாளில் வெளியே ஜாக்கிங் செய்ய அவரை அனுப்பி விடலாம். அவரது சாட்சியம் எதுவுமே அழுத்தமாக இல்லை.
கூல் சுரேஷ்
உற்சாகமாக எதையாவது சொல்லி விட்டு பிறகு பல்ப் வாங்குவதை இப்போதும் அர்ச்சனா செய்து கொண்டிருந்தார். “பாட்டெல்லாம் பாடினோம்” என்று அவர் சொல்ல “இதெல்லாம் எப்ப நடந்தது.. மணியடிக்கறதுக்கு முன்னாடியா, அப்புறமா?” என்று கமல் மடக்கினார். பிறகுதான். அதிலும் கூட ‘மேலே ஏறி வாறோம். ஒதுங்கி நில்லு’ என்று எதிர் தரப்பை வம்பிழுப்பது போன்ற பாடல்தான் பாடப்பட்டது.
‘நாங்க ஜாலியா இருந்தோம்’ - சின்ன வீட்டார் உற்சாகம்
ரவீனா உள்ளிட்டவர்கள் சொன்ன சாட்சியத்தின் மூலம் மீண்டும் அந்த உண்மை வெளிப்பட்டது. ‘சின்ன வீடு” என்பது பணிகள் தரப்படும் இடம், தண்டனைக்கான இடம் என்கிற பிம்பம் ஒரு மாயை. மாறாக அதுதான் சந்தோஷம் நிலவுகிற இடமாக இருக்கிறது. அவர்கள் வீட்டுப் பணியையும் செய்வதால் பிஸியாகவும் இருக்கிறார்கள். “நாங்க கலகலகன்னு இருந்தோம். ஆனா பிக் பாஸ் வீடு காலியா இருந்தது. முட்டை சோபாவுல உக்காந்து எப்பவும் பேசிட்டேதான் இருந்தாங்க” என்றார் ரவீனா. மணி எதையோ சமாளித்து பிறகு ஒப்புக் கொள்ள கேப்டன் மீது குற்றம் சாட்டினார் விசித்ரா.
‘இந்த வீட்டில் எத்தனை கேப்டன்?” என்று கமல் குறுக்கிட்டது நன்று. விஷ்ணு சொல்ல வேண்டிய பதில்களையெல்லாம் அவர் மவுத்பீசாக மாறி தினேஷ் முந்திக் கொண்டு பேசினார். “டான்ஸ் ஆடறதுக்காக எழுப்பினேன். போ.. போன்னு மாயாவும் விசித்ராவும் சொல்லிட்டாங்க” என்கிற பலவீனமான காரணத்தைச் சொன்னார் விஷ்ணு. “நீங்க ஆடினீங்களா?” என்று மடக்கினார் கமல். சொல்வதற்கு முன் இதை விஷ்ணுவே யோசித்திருக்க வேண்டும்.
விஷ்ணுவின் பதில்கள் அடுத்தடுத்து தடுமாற்றத்துடனும் சேம் சைட் கோல்களாகவும் இருந்தன. விசித்ராவின் கேள்விக்கு பதில் சொல்லும் போது ‘unfortunately இந்த வீட்டில் எல்லோரும் ஒண்ணா இருந்தோம்’ என்று சொல்லி மாட்டிக் கொண்டார். ‘நான் இங்க வேலை செய்ய வரலை’ என்றார். ‘முரண்களைத் தவிர்க்க அமைதியா இருந்தேன். நானே சிலர் கிட்ட பேசறதில்லை” என்றார். இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதுதான் கேப்டனின் கடமை. அவரே அதைப் பின்பற்றினால் என்ன அர்த்தம்? ‘Unfit to be a leader’ என்று விஷ்ணு குறித்து கமல் சொன்னது பொருத்தமான விமர்சனம்தான்.
போட்டியாளர்களின் சாட்சியங்கள், கமலின் கிடுக்கிப்பிடி கேள்விகள் போன்றவை காரணமாக ‘குத்தத்தை ஒப்புக்கறேன்’ என்று பணிந்து விட்டார் விஷ்ணு. “நாங்க எண்டர்டெயின்மென்ட்டுக்கு பிளான் பண்ணாலும் கேப்டன் அதை ஆதரிக்கவேயில்லை. முதல்ல இங்க யார் கேப்டன்னே தெரியலை” என்றார் விஜய். “நான் கூட சில விஷயங்கள் பிளான் பண்ணினேன் சார். ஆனா எது சொன்னாலும் அவங்க காண்டாவுறாங்க. அட்டாக் பண்றாங்க. எனக்கு பயமே வந்துடுச்சு. இதனால ரெண்டு வீடுமே பேசிக்க முடியாத சூழல் இருந்தது” என்றார் நிக்சன். விசித்ரா மற்றும் மாயா தவிர, மற்ற அனைவருமே சின்ன வீட்டிற்கு எதிரான மனநிலையில் இருந்தார்கள் என்பது நிக்சனின் சாட்சியம்.
கமல்
முட்டையை வைத்து அர்ச்சனாவை ஆம்லெட் போட்ட கமல்
“மூளையில்லாதவங்களுக்கு முட்டைன்னு அர்ச்சனா சொன்னாங்க” என்று அவரைப் போட்டுக் கொடுத்தார் நிக்சன். “எனக்கு முட்டை பிடிக்கும்” என்ற கமல், இன்னொரு சமயத்தில் ‘சாப்பாட்டு விஷயத்தில் கூட வன்மம் காட்டினால் இந்த ஷோ எப்படி விளங்கும்?” என்று இறங்கி அடிக்க அர்ச்சனாவின் முகம் இறுகியது. “எதைக் கேட்டாலும் ஸ்ட்ரைக்தானே கொடுக்கப் போறீங்கன்றார். முரண்களைத் தீர்க்க வேண்டிய கேப்டனே அதற்கு காரணமாக இருந்தார்” என்றார் பூர்ணிமா. என்ன அதிசயமோ, இந்த வாரத்தில் பூர்ணிமா எழும் போது கைத்தட்டல் கேட்டது. ‘குட்மார்னிங் சொன்னா கூட கோச்சுக்கறாருங்க’ என்று விக்ரம் சொன்னதில் சபை கலகலத்தது. விஷ்ணுவின் முகத்தில் எரிச்சல் கூடிக் கொண்டே சென்றது.
விஷ்ணு
சுரேஷின் சாட்சியம். எதையோ சொல்லி வழக்கம் போல் மாட்டினார். ‘கொசு வாரம், முயல் வாரம், இலை வாரம்’ன்னு வித்தியாசமா பண்ணேன்” என்றது, அவர் தலையில் மாட்டியிருந்த கோணங்கித்தனங்களையே. “நீங்க என்ன வன ஆர்வலரா?” என்று கிண்டலடித்த கமல் “அந்த வாரம்.. இந்த வாரம்ன்றீங்க. உங்க அஸ்திவாரம் பலமா இருக்கான்னு பார்த்துக்கங்க” என்றது ஒரு நல்ல கிண்டல். “இங்க இருக்கறவங்கள்ல அக்கவுண்டன்ட், மெடிக்கல் வேலைக்கு போகலாம்ன்னு விருப்பம் இருக்கறவங்க யாரு? உங்க ஆர்வம் எண்டர்டெயின்ட்மென்ட் ஃபீல்ட்தானே? அப்ப ஏன் அதை ஷோல கொண்டு வர மாட்டேன்றீங்க. ஒருவருக்கு ஒருவர் காட்டும் வன்மம் மட்டுமே தெரியுது. அதுலயா வெற்றி கிடைக்கும்? வன்ம போதையில் இருந்து விடுபடவே மாட்டேன்றீங்களே? என்று அடுத்ததாக கமல் சொன்னது ஒரு முக்கியமான அட்வைஸ்.
விசாரணை நாளில் மட்டும் முதல் பெஞ்ச் மாணவனாக மாறி விடுவது மாயாவின் ஸ்டைல். சமீப காலமாகவே அப்படித்தான் இருக்கிறார். ‘இது திறமையைக் காட்ட வேண்டிய மேடைன்னு போன வாரம் சொன்னீங்க சார். அதுல இருந்து சண்டைகளுக்கு நான் ரியாக்ட் பண்றதில்ல. காமெடி டிரை பண்றேன். உங்க அட்வைஸை ஃபாலோ பண்றேன்” என்றார் மாயா. சமூகவலைத்தள நடப்பு வசைகள் பற்றி எதுவும் அறியாமல் அல்லது அறிந்தோ கூட ‘பாராட்டுக்கள்’ என்று மாயாவிடம் சொன்னார் கமல். “சாப்பிடும் இடத்தில் கூட வன்மத்தைக் கக்கும் இடத்தில் எப்படி எண்டர்டெயின்மென்ட் வரும். நீங்க போக வேண்டிய தடம் மாறி போர்க்களமா மாறிடுச்சு. நான் திட்டலை. சுட்டிக் காட்டறேன்” என்ற கமல் நொந்தபடியே பிரேக்கில் சென்றார்.
விஷ்ணூ சர்ச்சனையை மீண்டும் தொடர்ந்த கமல்
பிரேக் முடிந்து திரும்பிய கமல், விஷ்ணு புராணத்தை அத்துடன் விட்டு விடுவார் என்று பார்த்தால் மறுபடியும் புத்துணர்ச்சியுடன் ஆரம்பித்தார். “ஒருத்தர் மத்தவங்களோட பொய்களை சகிச்சிக்கிட்டு மனக்குறையோட தியாகியா இங்க உக்காந்திருக்கறாரு. அந்தப் பொய்யையே சொல்லப் போறீ்ங்களா, உண்மை பேசப் போறீங்களா. உண்மையை மட்டும் பேசுங்க. கருத்து இருந்தா மட்டும் சொல்லுங்க. அந்த நபர் விஷ்ணு. இந்த வார கேப்டன்ஸி எப்படியிருந்தது?’ என்கிற முன்னுரையுடன் அடுத்த விசாரணையை கமல் ஆரம்பித்தார்.
தினேஷ்
எனில் பிரேக் சமயத்தில் தினேஷிடம் விஷ்ணு எதையாவது சொல்லி புலம்பியிருக்க வேண்டும். “இவனுங்க அடுக்கற பொய் இருக்கே.. பதிலுக்கு அவமானப்படுத்தக்கூடாதுன்னு நான் கம்முன்னு இருக்கேன்” என்பது போல் எதையாவது சொல்லயிருப்பார் போல. மீண்டும் விஷ்ணார்ச்சனை ஆரம்பித்தது. மாயா பேசும் போது “நானே கேப்டன் சமயத்துல சுமாரத்தான் பண்ணேன் (கைத்தட்டல்). ஆனா விஷ்ணு என்னையே அசரடிச்சிட்டாரு. ‘உங்க கேப்டன்சியை விட என்னுடைய பெட்டர்’ன்னு என் கூடவே கம்ப்போ் பண்ணாரு. அதுக்கு பதிலா ஸ்டார் வாங்கின பூர்ணிமாவோட கம்ப்போ் பண்ணியிருக்கலாம்” என்று மாயா சொல்ல, பூர்ணிமாவின் முகம் பிரமிப்பில் சந்தோஷமடைந்தது.
“உங்களுக்கெல்லாம் நான் வாய்ப்பு தரேன்னு சீன் போட்டாரு. வாய்ப்பு தர்றதுக்கு இவர் யாரு சார். மொத்தமாவே மோசம்” என்றார் அனன்யா. “கேப்டனே இங்க இல்லை” என்றார் விஜய் சுருக்கமாக. தயங்கியபடி எழுந்த பூர்ணிமா “எதைச் சொன்னாலும் ஏத்துக்க மாட்றாரு. எல்லாத்துக்கும் சண்டை போடறாரு” என்று ஆரம்பிக்க “அப்படின்னா நீங்க சண்டையை தவிர்க்கறீங்களா?” என்று கமல் இடைமறித்ததும் பூர்ணிமாவிற்கு தொண்டை அடைத்தது.
விஷ்ணுவின் கேப்டன்சி மீது குவிந்த புகார்கள்
அடுத்து எழுந்த நிக்சன் “ரவீனா கையை விளையாட்டுக்கு விக்ரம் இறக்கி விட்ட சாதாரண விஷயத்திற்கு விஷ்ணு பயங்கரமா எகிறிட்டு வந்தாரு. ‘உன்னை மாதிரி மொக்கை காப்டன் நான் இல்லைன்னு விக்ரம் கிட்ட கோச்சுக்கிட்டாரு. தட்டு விஷயத்துல பூர்ணிமா கிட்ட மட்டும் கோவத்தைக் காட்டினாரு. தினேஷ் சபையில் சொன்ன ஆட்சேபமான வார்த்தையை அவர் கண்டிக்கவில்லை. எனக்கும் அர்ச்சனாவிற்கும் சண்டை நடக்கும் போது அதைப் பற்றி கேட்கவில்லை. இதுவரைக்கும் இருந்ததில் மோசமான கேப்டன்சி இதுதான்” என்று காட்டமாக சொல்லி அமர்ந்தார்.
“கேப்டனா வர்வறவங்க வாக்குறுதி தராங்க. ஆனா நிறைவேத்தறதில்லை’ என்று விசித்ரா ஆரம்பிக்க, இது போன்ற சந்தர்ப்பங்களை அரசியல் நையாண்டிகளுக்காக கமல் பயன்படுத்திக் கொள்ள தவற மாட்டார். எனவே “வாக்குறுதி யார்தான் தரலை?” என்று அவர் சர்காஸ்டிக்காக குறுக்கிட, சபை அதைப் புரிந்து கொண்டு கலகலகத்தது. “அவரோட லாங்க்வேஜ் ரொம்ப மோசமா இருந்தது” என்று சலித்துக் கொண்டார் விசித்ரா.
விஜய்
அடுத்து எழுந்த அர்ச்சனா, வழக்கம் போல் தன்னுடைய வார்த்தைகளால் தானே மாட்டிக் கொண்டார். “போன வாரம்லாம் அட்டாக் மோடில் இருந்தாரு. இந்த வாரம் பதுங்கிட்டாரு” என்று சொல்ல “போன வாரம் என்ன பண்ணாரு?” என்று கமல் மடக்க “என் கூட பயங்கரமா சண்டை போட்டாரு. இந்த வாரம் போடலை. வைஸ் கேப்டன் பதவி கொடுத்தாரு. வேணாம்ன்னு சொல்லிட்டேன். நான் கேப்டன் ஆனா இப்படியெல்லாம் இருக்க மாட்டேன்” என்றார். ஒரு பொறுப்பு வரும் போது அதை ஏற்கும் துணிச்சல் இல்லாமல், ‘ஸ்ட்ரையிட்டா ஹீரோதான்’ என்று கேப்டன் பதவியை திறமையாக நிர்வகிப்பேன் என்று அர்ச்சனா சொல்வது முரண்.
“மாயா - பூர்ணிமா கூட ஏதோ டீலிங் இருந்திருக்கு சார்.. அதனாலதான் கேப்டன்சியை சரியா நடத்த முடியாம தடுமாறினார்” என்று ‘ஒரு திடுக்கிடும் உண்மையை’ சபையில் உடைத்துப் போட்டார் மணி. “நானே புத்தி சொன்னேன் சார். கேக்கலை” என்றார் சுரேஷ் ‘மஞ்சள் தடவி ஆட்டைக் கொண்டு போகும் உதாரணத்தைச் சொல்லி தனது சாட்சியத்தை சுவாரசியப்படுத்தினார் தினேஷ். அதை மறுத்த மாயா “நாங்கதான் விஷ்ணுவை கேப்டன் ஆக்கினோம்’ என்பதை மட்டும் வெளிப்படையாக ஒப்புக் கொண்டார்.
விளக்கம் அளிக்கத் தடுமாறிய விஷ்ணு
விஷ்ணு பதில் அளிக்க வேண்டிய நேரம். வீட்டில் இருக்கும் சமயங்களில் தன்னையொரு ராஜதந்திரியாக நினைத்துக் கொண்டு ஆலோசனைகளையும் வியூகங்களையும் அள்ளி வழங்கும் விஷ்ணு, இந்தச் சமயத்தில் நிறைய தடுமாறினார். இந்தச் சமயத்தில்தான் கடந்த சீசன் அசிமை நினைவு கூர வேண்டியிருக்கிறது. அவர் செய்த அலப்பறைகள் ஒருபக்கம் இருக்கட்டும். என்னதான் ஒட்டுமொத்த வீடே எதிராக சாட்சியம் சொன்னாலும் முகத்தில் புன்னகை மாறாமல் அமர்ந்திருப்பார். விளக்கம் தர வேண்டிய தர வேண்டிய பாயிண்ட் பாயிண்ட்டாக பேசுவார். அந்த கல்லுளிமங்கத்தனம் விஷ்ணுவிடம் இல்லை.
“நான் கேப்டன் ஆனது மாயாவோட ஸ்ட்ராட்டஜி. பழிவாங்கறதுக்காக செஞ்சாங்க” என்று பலவீனமாக விளக்கத்தை ஆரம்பித்தார் விஷ்ணு. “ஒருத்தரை பழிவாங்கணும்னா கீழேதானே தள்ளுவாங்க. மேல உக்கார வைக்க மாட்டாங்களே” என்று லாஜிக்காக மடக்கிய கமல் “நம்ம ஆளு ஒருத்தர் சின்ன வீட்டில் இருக்கணும்” என்று பூர்ணிமாவை சமாதானப்படுத்த விஷ்ணு சொன்ன காரணத்தை சரியான சமயத்தில் உள்ளே கொண்டு வந்து கமல் பொருத்த, அதை உற்சாகமாக எழுந்து ஒப்புக் கொண்டார் பூர்ணிமா.
விஷ்ணு
ஆக.. மாயாவும் பூர்ணிமாவும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும் என்கிற ஒப்பந்தத்துடன் உடன்படிக்கை கையெழுத்தானது. இருவரும் விஷ்ணுவை ஆதரித்து கேப்டன் ஆக்க உதவி செய்தார்கள். ஆனால் கேப்டன் ஆனதும் ஒப்பந்தத்தை மீறிய விஷ்ணு, பூர்ணிமாவைப் பிரித்து சின்ன வீட்டில் போட்டார். அந்த ஒப்பந்த மீறல் கூட பரவாயில்லை. அதற்காக விஷ்ணு சொன்ன காரணம்தான் பூர்ணிமாவை புண்படுத்தியது. ‘மக்களுக்குப் பிடிக்காத இரண்டு நபர்கள்’ என்கிற கேட்டகிரியில் விஷ்ணு தன்னை இணைத்து விட்டதைக் குறித்து பூர்ணிமா மனம் புழுங்க “நீ நம்மாளுடா.. அங்க ஒருத்தர் இருந்தாத்தானே நல்லது!’ என்கிற பொய் சமாதானத்தை விஷ்ணு சொல்லி ஏமாற்றியிருக்கிறார்.
இது கூட போகட்டும். விஷ்ணு எப்படியோ கேப்டன் ஆகி விட்டார். அந்தப் பதவியை சிறப்பாக கையாண்டாரா என்றால் அதுவும் இல்லை. ‘ஸ்ட்ரைக்தானே கொடுக்கப் போறீங்க. கொடுங்க’ என்கிற பதட்டமான மோடியிலேயே இருந்திருக்கிறார். எதிர் தரப்பினர் எதைச் செய்தாலும் அது தனக்கான சதி என்கிற பதட்டமும் அவருக்குள் இருந்திருக்கிறது. எனவே தனது கோபத்தை டிசைன் டிசைனாக வெளிப்படுத்தியிருக்கிறார். இது வீட்டின் ஒத்திசைவையும் ஒருங்கிணைப்பையும் கன்னாபின்னாவென்று கலைத்திருக்கிறது. வியாழன் அன்றே சமையல் பொருட்கள் தீர்ந்து விடும் அளவிற்கு நிர்வாக ஒருங்கிணைப்பும் சரியாக நடைபெறவில்லை.
கடந்த சீசனில் நிக்சன் மீது நிறைய குறைகள் சொல்லப்பட்டன. ஆனால் இப்போது நிக்சனே தேவலை என்கிற நிலைமை ஆகி “அரிசியே இல்லைன்னாலும் அவன் வயிறார சாப்பாடு போட்டான் சார்” என்று மக்கள் வாழ்த்தினார்கள். ரவீனாவே விஷ்ணுவிற்கு எதிரான சாட்சியத்தைத்தான் சொன்னார்.
‘மன்னிடுச்சிடுங்கய்யா’ - கதறிய விஷ்ணுவின் மைண்ட் வாய்ஸ்
வலுவான சாட்சியங்கள் தொடர்ந்து வந்தததால் ஒரு கட்டத்தில் சோர்ந்து போன விஷ்ணு “குத்தத்தை ஒத்துக்கறேங்கய்யா. இவங்க கூட விவாதம் பண்ண முடியலை’ என்கிற மோடில் சரண் அடைந்தார். ஆனால் அப்போதும் கமல் விடவில்லை. “அப்படில்லாம் பெருந்தன்மையா நீங்க ஒத்துக்க வேணாம். எங் கூட பேசுங்க. பொறுப்பில்லாதவர்கள் ஷாப்பிங் சென்ற விஷயத்தில் நீங்கதான் போயிருக்கணும்” என்று கருணையே இல்லாமல் இறங்கி அடித்தார் கமல். அவர் அடித்த அடியில் விஷ்ணுவிற்குள் இருக்கும் சண்டைக்கோழி அப்போதே இறந்திருக்க வேண்டும்.
நடந்தையெல்லாம் விஷ்ணு சொல்லி முடித்த பிறகு “நீங்க நடந்தையே மறுபடி சொல்றீங்க. இதையெல்லாம் இவங்க டிவில பார்த்திருப்பீங்க. எனவே நீங்க சொன்னதை எடிட் பண்ணிடுவாங்க” என்று கமல் சொன்னதும் ‘அடப்பாவிங்களா.. அப்ப இவ்ள நான் பேசினதெல்லாம் வீணா?” என்று விஷ்ணுவின் மைண்ட் வாய்ஸ் அலறியிருக்க வேண்டும்.
அனன்யா
“நீங்க பொறுப்பான போட்டியாளரா இருப்பதோடு, பொறுப்பான கேப்டனாகவும் இருந்திருக்க வேண்டும்.முதல் வாரமா இருந்தா கூட பரவாயில்லை. அனுபவம் இல்லைன்னு சொல்லிடலாம். நீங்களா ஒத்துக்கறதுக்கு இங்க நடக்கறது நெகோஷியேஷன் இல்ல. ஒரு தலைமைக்கு பொறுப்பு இருப்பதுதான் முக்கியமான பண்பு” என்றெல்லாம் கமல் பேச விஷ்ணுவின் முகத்தில் சுரத்து என்கிற வஸ்து சுத்தமாக இல்லை.
ஜாக்பாட் ஆட்டத்தில் நடந்த ஏற்ற இறக்கம்
ஒரு பிரேக் முடிந்து வந்த கமல் ‘ஜாக்பாட்’ டாஸ்க்கைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தார். “மாயாவும் நிக்சனும் ஆரம்பத்திலேயே ஒதுங்கிட்டீங்களே.. ஏன்?” என்பது கமலின் முதல் கேள்வி. அவர்கள் ஏன் ஒதுங்கியிருப்பார்கள் என்கிற காரணம் சம்பந்தப்பட்ட நாளின் கட்டுரையில் யூகிக்கப்பட்டிருந்தது. அதையேதான் சொன்னார்கள். “என்னை ரொம்பவும் டேமேஜ் பண்ணுவாங்கன்னு தெரியும்” என்று மாயா சொல்ல “அது சரி.. நீங்க மக்களுக்காக விளையாடியிருக்கணும் இல்லையா.. அவங்கதானே உங்களை ஓட்டு போட்டு இத்தனை நாள் வெச்சிருக்காங்க” என்று கமல் சொன்ன நியாயமான காரணத்தை ஒப்புக் கொண்டார் மாயா.
மாயா
“அந்த ரெண்டு விஷயத்தை வெச்சு என்னை அடிப்பாங்கன்னு தெரியும் சார். நிச்சயமா பிரவோக் பண்ணுவாங்க. கோபம் வந்து நானும் வாயை விட்ருவேன். அது எனக்கு எதிரா திரும்பிடும். என் பெரிய எதிரி கோபம்தான்” என்று நிக்சன் சொன்ன காரணமும் சரிதான் என்றாலும் அப்படி உணர்ச்சிவசப்படுதலை சரியான திசையில் செலுத்தி கட்டுப்படுத்துவதுதான் இந்த ஆட்டத்தின் சவால் என்பதை நிக்சன் உணர வேண்டும். தினேஷ், அர்ச்சனா ஆகிய இருவரையும் ‘பிரவோக்’ செய்பவர்களாக மாயா, நிக்சன் கூற “அந்தப் போட்டில எங்க நாடு கலந்துப்போம். ஆனா எதிர் டீம்ல அந்த ரெண்டு பேர் மட்டும் இருக்கக்கூடாது என்று யாராவது சொல்ல முடியுமா?” என்று கமல் கேட்டது சரியான கேள்வி.
“விக்ரம் கேட்டது உருக்கமா இருந்தது. எனக்கொரு வாய்ப்பு கொடுங்கன்னு கேட்டார். எனக்கு அப்படி மீண்டும் வாய்ப்பு கிடைச்சதாலதான் இங்க வர முடிஞ்சது. அதனால ஐந்து ஸ்டாரை கொடுத்துட்டேன்” என்று சென்டிமென்ட் காரணத்தைச் சொன்னார் விஜய். ஒரு கோணத்தில் இது ஏற்றுக் கொள்ளக்கூடியதுதான் என்றாலும் ஆட்டம் என்று வந்து விட்ட பிறகு அதில் பரிதாப உணர்ச்சிக்கு இடமில்லை. அப்படிப்பட்ட வெற்றியில் விக்ரமிற்கும் சுவை இருக்காது. என்றாலும் ஐந்து ஸ்டார் வென்ற விக்ரமை சிரித்துக் கொண்டே வாழ்த்தினார் கமல்.
எது உங்களின் வெற்றிக்குத் தடை?
‘இன்னமும் அஞ்சு வாரம்தான் இருக்கு” என்று எச்சரிக்கை செய்த கமல், அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்தார். “எது உங்களின் வெற்றிக்கு தடையாக இருக்கிறது? அது நபராக இருக்கலாம்.. ஏதாவது விஷயமாக இருக்கலாம் என்பது கேள்வி. இதில் தினேஷ், அர்ச்சனாவின் பெயரை நிறைய போ் குறிப்பிட்டார்கள். ‘அவர்களின் mocking, provoking உக்கிரமாக இருக்கிறது’ என்பது சொல்லப்பட்ட காரணம். எனில் இவர்களை விடவும் அவர்கள் பலமான ஆட்டக்காரர்கள் என்பதை இவர்களே ஒப்புக் கொள்கிறார்கள் என்றுதான் பொருள். ‘எனக்கு எதுவும் தடையில்லை’ என்று கெத்தாக சொன்ன விஜய் தனித்துத் தெரிந்தார்.
‘கோபம்தான் என்னோட தடை’ என்று நிக்சனும் விஷ்ணுவும் சொன்னார்கள். ‘வயது காரணமா பிஸிக்கல் டாஸ்க் பண்றதுல எனக்கு சிரமம் இருக்கும். ஆனா அதை வீக்னஸா யாராவது சொன்னா, எனக்குள்ள ஒரு வேகம் வந்துடும்” என்று விசித்ரா சொன்னது சிறப்பானது. “நான் இந்த வாரம் சில தவறுகளை செய்து விட்டேன். எனக்கான விதிகளை நானே மீறி விட்டேன்” என்று நேர்மையாக ஒப்புக் கொண்ட அர்ச்சனாவிற்குப் பாராட்டு. தன்னை உணர்ந்து கொள்பவன்தான் வெற்றியை நோக்கி எளிதில் நகர முடியும். ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்று ‘பன்ச்’ டயலாக்காக பேசி இந்தப் பகுதியை கச்சிதமாக முடித்தார் தினேஷ்.
கமல்ஹாசன்
‘நாமினேஷன் ஆனவங்க ஒண்ணா உக்காருங்க. எனக்கு பசி அதிகம். மூணு முட்டைல ஆம்லேட் போட்டாக் கூட சாப்ட்ருவேன்” என்று டபுள் எவிக்ஷன் கூட இருக்கலாம் என்கிற ‘லுலுவாய்க்கு’ விளையாட்டை ஆடி போட்டியாளர்களுக்கு கிலி ஏற்படுத்தி விட்டு பிரேக்கில் செனறார் கமல்.
எழுத்தாளரின் துயரமும் கமலின் பரிந்துரையும்
பிரேக் முடிந்து திரும்பிய கமல் ‘புத்தகப் பரிந்துரை’ பகுதிக்கு வந்தார். இந்த வாரம் அவர் பரிந்துரைத்த நூலுக்குப் பின்னால் ஒரு நெகிழ்வான, உணர்ச்சிகரமான காரணம் இருந்தது. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் உழைப்பிலும் முதலீட்டிலும் உருவாகிய பதிப்பக நூல்கள், சமீபத்திய வெள்ள சேதத்தில் சிக்கி மிகப் பெரிய பொருளியல் நஷ்டத்தை அவருக்கு ஏற்படுத்தியிருக்கிறது.
‘மண்டியிடுகிறேன் தந்தையே’
“ஓர் எழுத்தாளனுக்கு இந்த நேரத்தில் துணை நிற்க வேண்டியது வாசகர்களின் கடமை. இது பரிவோ அனுதாபமோ அல்ல. அவர் எழுதிய ஏராளமான நூல்களை வாங்க முடியாது என்றாலும் ஒரு நூலை மட்டும் சொல்கிறேன். ‘மண்டியிடுகிறேன் தந்தையே’ என்பது எழுத்துலக மாமேதை டால்ஸ்டாயின் வாழ்க்கையை ஒட்டிய சுவாரசியமான நாவல். அதை வாங்கி எழுத்தாளரை ஆதரியுங்கள். மிகப் பெரிய சோதனையில் இருக்கும் அவருக்கு ஒரு சிறிய ஆறுதலாக இருக்கும்’ என்று கமல் சொன்னது சிறப்பு.
அகம் டிவி வழியாக உள்ளே வந்த கமல், எவிக்ஷன் கார்டுடன்’ வரவே, ‘இந்த வாரம் எவிக்ஷன் இல்லை’ என்பது தெரியாத போட்டியாளர்களுக்குள் பரபரப்பு ஏற்பட்டது. ‘யாரு போவா?’ என்கிற வழக்கமான ஆட்டத்தை கமல் ஆரம்பித்து, “விஷ்ணு.. நீங்கதான் கரெக்ட்டா சொல்வீங்க. சொல்லுங்க” என்று சொல்ல, ‘சார்.. வாங்கின அடி போதும்” என்று அலறினார் விஷ்ணு. மணியின் பெயரைக் கேட்டவுடனேயே ரவீனா கண்கலங்கத் துவங்கி விட்டார். இது ஆட்ட நெறிக்கு முரணானது என்றாலும் இப்படியொரு ஆத்மார்த்தமான தோழியை அடைவதற்கு மணி கொடுத்து வைத்திருக்க வேண்டும். தினேஷின் பெயரும் பல முறை வந்தது. ரொம்பவும் ஆக்ரோஷமான ஆட்டக்காரராக இருக்கிறாராம்.
எவரும் எதிர்பார்க்காத வரையில் பிளாங்க் கார்டை நீட்டி சஸ்பென்ஸை உடைத்த கமல் அத்துடன் விடைபெற்றுக் கொள்ள, தப்பித்த ஆசுவாசம் போட்டியாளர்களுக்குள் ஏற்பட்டது. “இந்த வாரம் நான் தப்பு பண்ணிட்டேன். யாரையாவது ஹர்ட் பண்ணியிருந்தா ஸாரி” என்று சுயபரிசீலனயுடன் பொதுச் சபையில் மன்னிப்பு கேட்ட அர்ச்சனாவின் செயல் பாராட்டுக்குரியது. தனக்காக ரவீனா அழுதது, மணியையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியிருக்க வேண்டும். ‘இனிமே நீ சொன்ன மாதிரி ஆடறேன்” என்று வருத்தம் தெரிவித்தார்.
யாரும் இங்கு கெட்டவர்கள் இல்லை
அடுத்த வார கேப்டனுக்கான வாக்கெடுப்பு நடந்தது. இதில் பிக் பாஸ் வீட்டிலிருந்து மாயா, மணி ஆகிய இருவரும் தேர்வானார்கள். ஸ்மால் பாஸ் வீட்டிலிருந்து விஜய் தேர்வானார். கடந்த முறை ஏற்பட்ட அவப்பெயரை மாயா இந்த முறை துடைத்து எறிவார் என்று சிலர் நம்பிக்கை தெரிவித்தார்கள். விஜய் தேர்வானால் வீடு சிறப்பாக இருக்கும் என்று தோன்றுகிறது. பார்க்கலாம்.
மாயா
ஜோவிகா வெளியேறிய போது சொன்ன வாக்கியம்தான் நினைவிற்கு வருகிறது. “நீங்க யாரும் இங்க கெட்டவர்கள் கிடையாது. ரொம்ப நல்லவர்கள்” என்றார். அது உண்மை. நல்லவன், கெட்டவன் என்று யாரையும் கறாரான முறையில் கறுப்பு வெள்ளையாக பிரித்துப் பார்க்க முடியாது. ஒருவரின் பின்னணி, குணாதிசயம், சவாலான சூழலை எதிர்கொள்ளும் மனமுதிர்ச்சி, அப்போதைய மனநிலை போன்றவைதான் ஒருவரின் நடத்தையை தீர்மானிக்கின்றன. இதில் சறுக்குபவர் எப்போது வேண்டுமானாலும் சரியான வழியில் நகரலாம். எனவே எவர் ஒருவரையும் எதிரிகளாக, விரோதிகளாக கருதி ‘விடாதீங்க.. அவனை’ என்று உற்சாகமாக கல்லெறிய வேண்டியதில்லை. ஏனெனில் அப்படி கல்லெறியப்பட வேண்டியவராக நாமே கூட இருக்கலாம்.
Thanks: vikatan
‘இந்த சீசனில் பொதுவாக சுவாரசியம் என்பதே இல்லை, மாறாக வன்மம், குரோதம், பகைமை போன்ற எதிர்மறை உணர்வுகளின் அலைதான் பெரிதும் அடிக்கிறது’ என்பதை இந்தக் கட்டுரைத் தொடரில் அடிக்கடி குறிப்பிட்டுக் கொண்டிருந்தேன்.
‘வன்ம போதையிலிருந்து உங்களால் விடுபட முடியவில்லை’ என்று கமலும் இந்த எபிசோடில் போட்டியாளர்களிடம் சொல்லி இதை அதிகாரபூர்வமான எச்சரிக்கையாக மாற்றி விட்டார்.
‘கமல் சார் பத்தி உனக்கு தெரியாது. செஞ்சு வுட்ருவாரு’ என்று விஷ்ணு சொன்ன நேரம், கொழுத்த ராகுகாலமோ என்னமோ, திகைத்து நின்று பேச முடியாமல் ‘குத்தத்தை ஒப்புக்கறங்கய்யா’ என்று நொந்து போகுமளவிற்கு விஷ்ணுவை ‘ரோஸ்ட்’ செய்து விட்டார் கமல். வலுவான சாட்சியங்களும் அவருக்கு எதிராக இருந்தன. இதற்கு இடையில் அர்ச்சனாவிற்கும் ‘சர்காஸ்டிக்’ அர்ச்சனைகள் நடந்தன. சிரித்து மழுப்ப வேண்டிய சூழலில் அர்ச்சனா இருந்தார்.
பூர்ணிமா
‘ஸ்மால் பிக் பாஸில் பாட்டு பாடுகிறார்கள். அதற்கு நாம் கவுன்ட்டர் எண்டர்டெயின்மென்ட் தருவோம்’ என்று மாயா சொன்னது ஒரு நல்ல யோசனை. அதைக் கூட ஆதரித்து வளர்த்தெடுக்க கேப்டன் விஷ்ணுவால் இயலவில்லை. அந்த அளவிற்கு எதிர்ப்புணர்ச்சியும் பாரபட்சமும் அவரது கண்களை மூடி இருந்தது.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?
உலக நாயகன், ஏதாவதொரு உலக தினத்தை நினைவுப்படுத்தி நீண்ட நாட்கள் ஆயிற்று. ‘சர்வதேச மனித உரிமை தினத்தை’யொட்டி அது தொடர்பாக உரையாற்றியவர், ‘என் உரிமையை எந்தவொரு மதத்தின் பெயராலும் கடவுளின் பெயராலும் மறுத்தால் வேறு கோவில்கள் எழும். நான் நாத்திகம் பேசவில்லை. இதுதான் உலக வரலாறு. ஒருவரின் உரிமை மறுக்கப்படுவது சட்டப்படி குற்றம்’ என்று சொன்னபடி அகம் டிவியாக உள்ளே சென்றார். அங்கேயும் ஒருவரின் உரிமை மறுக்கப்படுகிறதாம்.
‘எப்படி இருக்கீங்க?’ என்கிற சம்பிரதாய விசாரிப்புகளை எல்லாம் கமல் இப்போது வைத்துக் கொள்வதில்லை. உள்ளே நுழைந்ததும் நேரடியாக கேள்விகள்தான். “மாயா மணியடிச்சாங்க. இந்த வீட்டில எண்டர்டெயின்மென்ட் இருக்கான்னு. இருக்கா?” என்பது கமலின் கேள்வி. இல்லை என்பது பார்வையாளர்களுக்கு மட்டுமல்ல, போட்டியாளர்களுக்கும் தெரிந்த பதிலே. என்றாலும் ஆளாளுக்கு ஒன்று சொல்லி சமாளித்தார்கள். சிலர் மட்டுமே உண்மையை ஒப்புக் கொண்டார்கள்.
முதலில் எழுந்த தினேஷ், விஷ்ணு குரூப் ஆசாமி என்பதால் அதற்கேற்ப சமாளித்தார். “மாயா எதை எண்டர்டெயின்மென்ட்டுன்னு சொல்றாங்கன்னு தெரியல. நான் சந்தோஷமா இருந்தேன். என்னைச் சுத்தியிருந்தவங்க அப்படி வெச்சிக்கிட்டாங்க” என்றார். வெறும் புறணியும் சண்டையுமா சுவாரசியம்?! அடுத்து எழுந்த சுரேஷ் வழக்கம் போல் எதையோ சொன்னார். கமல் சொன்னது போல் விசாரணை நாளில் வெளியே ஜாக்கிங் செய்ய அவரை அனுப்பி விடலாம். அவரது சாட்சியம் எதுவுமே அழுத்தமாக இல்லை.
கூல் சுரேஷ்
உற்சாகமாக எதையாவது சொல்லி விட்டு பிறகு பல்ப் வாங்குவதை இப்போதும் அர்ச்சனா செய்து கொண்டிருந்தார். “பாட்டெல்லாம் பாடினோம்” என்று அவர் சொல்ல “இதெல்லாம் எப்ப நடந்தது.. மணியடிக்கறதுக்கு முன்னாடியா, அப்புறமா?” என்று கமல் மடக்கினார். பிறகுதான். அதிலும் கூட ‘மேலே ஏறி வாறோம். ஒதுங்கி நில்லு’ என்று எதிர் தரப்பை வம்பிழுப்பது போன்ற பாடல்தான் பாடப்பட்டது.
‘நாங்க ஜாலியா இருந்தோம்’ - சின்ன வீட்டார் உற்சாகம்
ரவீனா உள்ளிட்டவர்கள் சொன்ன சாட்சியத்தின் மூலம் மீண்டும் அந்த உண்மை வெளிப்பட்டது. ‘சின்ன வீடு” என்பது பணிகள் தரப்படும் இடம், தண்டனைக்கான இடம் என்கிற பிம்பம் ஒரு மாயை. மாறாக அதுதான் சந்தோஷம் நிலவுகிற இடமாக இருக்கிறது. அவர்கள் வீட்டுப் பணியையும் செய்வதால் பிஸியாகவும் இருக்கிறார்கள். “நாங்க கலகலகன்னு இருந்தோம். ஆனா பிக் பாஸ் வீடு காலியா இருந்தது. முட்டை சோபாவுல உக்காந்து எப்பவும் பேசிட்டேதான் இருந்தாங்க” என்றார் ரவீனா. மணி எதையோ சமாளித்து பிறகு ஒப்புக் கொள்ள கேப்டன் மீது குற்றம் சாட்டினார் விசித்ரா.
‘இந்த வீட்டில் எத்தனை கேப்டன்?” என்று கமல் குறுக்கிட்டது நன்று. விஷ்ணு சொல்ல வேண்டிய பதில்களையெல்லாம் அவர் மவுத்பீசாக மாறி தினேஷ் முந்திக் கொண்டு பேசினார். “டான்ஸ் ஆடறதுக்காக எழுப்பினேன். போ.. போன்னு மாயாவும் விசித்ராவும் சொல்லிட்டாங்க” என்கிற பலவீனமான காரணத்தைச் சொன்னார் விஷ்ணு. “நீங்க ஆடினீங்களா?” என்று மடக்கினார் கமல். சொல்வதற்கு முன் இதை விஷ்ணுவே யோசித்திருக்க வேண்டும்.
விஷ்ணுவின் பதில்கள் அடுத்தடுத்து தடுமாற்றத்துடனும் சேம் சைட் கோல்களாகவும் இருந்தன. விசித்ராவின் கேள்விக்கு பதில் சொல்லும் போது ‘unfortunately இந்த வீட்டில் எல்லோரும் ஒண்ணா இருந்தோம்’ என்று சொல்லி மாட்டிக் கொண்டார். ‘நான் இங்க வேலை செய்ய வரலை’ என்றார். ‘முரண்களைத் தவிர்க்க அமைதியா இருந்தேன். நானே சிலர் கிட்ட பேசறதில்லை” என்றார். இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதுதான் கேப்டனின் கடமை. அவரே அதைப் பின்பற்றினால் என்ன அர்த்தம்? ‘Unfit to be a leader’ என்று விஷ்ணு குறித்து கமல் சொன்னது பொருத்தமான விமர்சனம்தான்.
போட்டியாளர்களின் சாட்சியங்கள், கமலின் கிடுக்கிப்பிடி கேள்விகள் போன்றவை காரணமாக ‘குத்தத்தை ஒப்புக்கறேன்’ என்று பணிந்து விட்டார் விஷ்ணு. “நாங்க எண்டர்டெயின்மென்ட்டுக்கு பிளான் பண்ணாலும் கேப்டன் அதை ஆதரிக்கவேயில்லை. முதல்ல இங்க யார் கேப்டன்னே தெரியலை” என்றார் விஜய். “நான் கூட சில விஷயங்கள் பிளான் பண்ணினேன் சார். ஆனா எது சொன்னாலும் அவங்க காண்டாவுறாங்க. அட்டாக் பண்றாங்க. எனக்கு பயமே வந்துடுச்சு. இதனால ரெண்டு வீடுமே பேசிக்க முடியாத சூழல் இருந்தது” என்றார் நிக்சன். விசித்ரா மற்றும் மாயா தவிர, மற்ற அனைவருமே சின்ன வீட்டிற்கு எதிரான மனநிலையில் இருந்தார்கள் என்பது நிக்சனின் சாட்சியம்.
கமல்
முட்டையை வைத்து அர்ச்சனாவை ஆம்லெட் போட்ட கமல்
“மூளையில்லாதவங்களுக்கு முட்டைன்னு அர்ச்சனா சொன்னாங்க” என்று அவரைப் போட்டுக் கொடுத்தார் நிக்சன். “எனக்கு முட்டை பிடிக்கும்” என்ற கமல், இன்னொரு சமயத்தில் ‘சாப்பாட்டு விஷயத்தில் கூட வன்மம் காட்டினால் இந்த ஷோ எப்படி விளங்கும்?” என்று இறங்கி அடிக்க அர்ச்சனாவின் முகம் இறுகியது. “எதைக் கேட்டாலும் ஸ்ட்ரைக்தானே கொடுக்கப் போறீங்கன்றார். முரண்களைத் தீர்க்க வேண்டிய கேப்டனே அதற்கு காரணமாக இருந்தார்” என்றார் பூர்ணிமா. என்ன அதிசயமோ, இந்த வாரத்தில் பூர்ணிமா எழும் போது கைத்தட்டல் கேட்டது. ‘குட்மார்னிங் சொன்னா கூட கோச்சுக்கறாருங்க’ என்று விக்ரம் சொன்னதில் சபை கலகலத்தது. விஷ்ணுவின் முகத்தில் எரிச்சல் கூடிக் கொண்டே சென்றது.
விஷ்ணு
சுரேஷின் சாட்சியம். எதையோ சொல்லி வழக்கம் போல் மாட்டினார். ‘கொசு வாரம், முயல் வாரம், இலை வாரம்’ன்னு வித்தியாசமா பண்ணேன்” என்றது, அவர் தலையில் மாட்டியிருந்த கோணங்கித்தனங்களையே. “நீங்க என்ன வன ஆர்வலரா?” என்று கிண்டலடித்த கமல் “அந்த வாரம்.. இந்த வாரம்ன்றீங்க. உங்க அஸ்திவாரம் பலமா இருக்கான்னு பார்த்துக்கங்க” என்றது ஒரு நல்ல கிண்டல். “இங்க இருக்கறவங்கள்ல அக்கவுண்டன்ட், மெடிக்கல் வேலைக்கு போகலாம்ன்னு விருப்பம் இருக்கறவங்க யாரு? உங்க ஆர்வம் எண்டர்டெயின்ட்மென்ட் ஃபீல்ட்தானே? அப்ப ஏன் அதை ஷோல கொண்டு வர மாட்டேன்றீங்க. ஒருவருக்கு ஒருவர் காட்டும் வன்மம் மட்டுமே தெரியுது. அதுலயா வெற்றி கிடைக்கும்? வன்ம போதையில் இருந்து விடுபடவே மாட்டேன்றீங்களே? என்று அடுத்ததாக கமல் சொன்னது ஒரு முக்கியமான அட்வைஸ்.
விசாரணை நாளில் மட்டும் முதல் பெஞ்ச் மாணவனாக மாறி விடுவது மாயாவின் ஸ்டைல். சமீப காலமாகவே அப்படித்தான் இருக்கிறார். ‘இது திறமையைக் காட்ட வேண்டிய மேடைன்னு போன வாரம் சொன்னீங்க சார். அதுல இருந்து சண்டைகளுக்கு நான் ரியாக்ட் பண்றதில்ல. காமெடி டிரை பண்றேன். உங்க அட்வைஸை ஃபாலோ பண்றேன்” என்றார் மாயா. சமூகவலைத்தள நடப்பு வசைகள் பற்றி எதுவும் அறியாமல் அல்லது அறிந்தோ கூட ‘பாராட்டுக்கள்’ என்று மாயாவிடம் சொன்னார் கமல். “சாப்பிடும் இடத்தில் கூட வன்மத்தைக் கக்கும் இடத்தில் எப்படி எண்டர்டெயின்மென்ட் வரும். நீங்க போக வேண்டிய தடம் மாறி போர்க்களமா மாறிடுச்சு. நான் திட்டலை. சுட்டிக் காட்டறேன்” என்ற கமல் நொந்தபடியே பிரேக்கில் சென்றார்.
விஷ்ணூ சர்ச்சனையை மீண்டும் தொடர்ந்த கமல்
பிரேக் முடிந்து திரும்பிய கமல், விஷ்ணு புராணத்தை அத்துடன் விட்டு விடுவார் என்று பார்த்தால் மறுபடியும் புத்துணர்ச்சியுடன் ஆரம்பித்தார். “ஒருத்தர் மத்தவங்களோட பொய்களை சகிச்சிக்கிட்டு மனக்குறையோட தியாகியா இங்க உக்காந்திருக்கறாரு. அந்தப் பொய்யையே சொல்லப் போறீ்ங்களா, உண்மை பேசப் போறீங்களா. உண்மையை மட்டும் பேசுங்க. கருத்து இருந்தா மட்டும் சொல்லுங்க. அந்த நபர் விஷ்ணு. இந்த வார கேப்டன்ஸி எப்படியிருந்தது?’ என்கிற முன்னுரையுடன் அடுத்த விசாரணையை கமல் ஆரம்பித்தார்.
தினேஷ்
எனில் பிரேக் சமயத்தில் தினேஷிடம் விஷ்ணு எதையாவது சொல்லி புலம்பியிருக்க வேண்டும். “இவனுங்க அடுக்கற பொய் இருக்கே.. பதிலுக்கு அவமானப்படுத்தக்கூடாதுன்னு நான் கம்முன்னு இருக்கேன்” என்பது போல் எதையாவது சொல்லயிருப்பார் போல. மீண்டும் விஷ்ணார்ச்சனை ஆரம்பித்தது. மாயா பேசும் போது “நானே கேப்டன் சமயத்துல சுமாரத்தான் பண்ணேன் (கைத்தட்டல்). ஆனா விஷ்ணு என்னையே அசரடிச்சிட்டாரு. ‘உங்க கேப்டன்சியை விட என்னுடைய பெட்டர்’ன்னு என் கூடவே கம்ப்போ் பண்ணாரு. அதுக்கு பதிலா ஸ்டார் வாங்கின பூர்ணிமாவோட கம்ப்போ் பண்ணியிருக்கலாம்” என்று மாயா சொல்ல, பூர்ணிமாவின் முகம் பிரமிப்பில் சந்தோஷமடைந்தது.
“உங்களுக்கெல்லாம் நான் வாய்ப்பு தரேன்னு சீன் போட்டாரு. வாய்ப்பு தர்றதுக்கு இவர் யாரு சார். மொத்தமாவே மோசம்” என்றார் அனன்யா. “கேப்டனே இங்க இல்லை” என்றார் விஜய் சுருக்கமாக. தயங்கியபடி எழுந்த பூர்ணிமா “எதைச் சொன்னாலும் ஏத்துக்க மாட்றாரு. எல்லாத்துக்கும் சண்டை போடறாரு” என்று ஆரம்பிக்க “அப்படின்னா நீங்க சண்டையை தவிர்க்கறீங்களா?” என்று கமல் இடைமறித்ததும் பூர்ணிமாவிற்கு தொண்டை அடைத்தது.
“என் மன அமைதி பாதிக்குது. அவருக்கு ஆதரவு தந்தேன். ஆனா தட்டுப் பிரச்சினையை சொன்னப்ப கூட கோவமாத்தான் பேசினாரு” என்று தன் சாட்சியத்தை முடித்தார் பூர்ணிமா. “சாப்பிட்ட தட்டை அவங்கவங்களே கழுவறதுதானே சுகாதாரம்?” என்று கமல் கேட்டது முக்கியமான கேள்வி. அதுதான் நாகரிகமும் கூட. வீடுகளில் தாம் சாப்பிட்ட தட்டை அவர்களே எடுத்துச் சென்று கழுவி வைக்கும் ஆண்கள்தான் கனவான்கள்.
விஷ்ணுவின் கேப்டன்சி மீது குவிந்த புகார்கள்
அடுத்து எழுந்த நிக்சன் “ரவீனா கையை விளையாட்டுக்கு விக்ரம் இறக்கி விட்ட சாதாரண விஷயத்திற்கு விஷ்ணு பயங்கரமா எகிறிட்டு வந்தாரு. ‘உன்னை மாதிரி மொக்கை காப்டன் நான் இல்லைன்னு விக்ரம் கிட்ட கோச்சுக்கிட்டாரு. தட்டு விஷயத்துல பூர்ணிமா கிட்ட மட்டும் கோவத்தைக் காட்டினாரு. தினேஷ் சபையில் சொன்ன ஆட்சேபமான வார்த்தையை அவர் கண்டிக்கவில்லை. எனக்கும் அர்ச்சனாவிற்கும் சண்டை நடக்கும் போது அதைப் பற்றி கேட்கவில்லை. இதுவரைக்கும் இருந்ததில் மோசமான கேப்டன்சி இதுதான்” என்று காட்டமாக சொல்லி அமர்ந்தார்.
“கேப்டனா வர்வறவங்க வாக்குறுதி தராங்க. ஆனா நிறைவேத்தறதில்லை’ என்று விசித்ரா ஆரம்பிக்க, இது போன்ற சந்தர்ப்பங்களை அரசியல் நையாண்டிகளுக்காக கமல் பயன்படுத்திக் கொள்ள தவற மாட்டார். எனவே “வாக்குறுதி யார்தான் தரலை?” என்று அவர் சர்காஸ்டிக்காக குறுக்கிட, சபை அதைப் புரிந்து கொண்டு கலகலகத்தது. “அவரோட லாங்க்வேஜ் ரொம்ப மோசமா இருந்தது” என்று சலித்துக் கொண்டார் விசித்ரா.
விஜய்
அடுத்து எழுந்த அர்ச்சனா, வழக்கம் போல் தன்னுடைய வார்த்தைகளால் தானே மாட்டிக் கொண்டார். “போன வாரம்லாம் அட்டாக் மோடில் இருந்தாரு. இந்த வாரம் பதுங்கிட்டாரு” என்று சொல்ல “போன வாரம் என்ன பண்ணாரு?” என்று கமல் மடக்க “என் கூட பயங்கரமா சண்டை போட்டாரு. இந்த வாரம் போடலை. வைஸ் கேப்டன் பதவி கொடுத்தாரு. வேணாம்ன்னு சொல்லிட்டேன். நான் கேப்டன் ஆனா இப்படியெல்லாம் இருக்க மாட்டேன்” என்றார். ஒரு பொறுப்பு வரும் போது அதை ஏற்கும் துணிச்சல் இல்லாமல், ‘ஸ்ட்ரையிட்டா ஹீரோதான்’ என்று கேப்டன் பதவியை திறமையாக நிர்வகிப்பேன் என்று அர்ச்சனா சொல்வது முரண்.
“மாயா - பூர்ணிமா கூட ஏதோ டீலிங் இருந்திருக்கு சார்.. அதனாலதான் கேப்டன்சியை சரியா நடத்த முடியாம தடுமாறினார்” என்று ‘ஒரு திடுக்கிடும் உண்மையை’ சபையில் உடைத்துப் போட்டார் மணி. “நானே புத்தி சொன்னேன் சார். கேக்கலை” என்றார் சுரேஷ் ‘மஞ்சள் தடவி ஆட்டைக் கொண்டு போகும் உதாரணத்தைச் சொல்லி தனது சாட்சியத்தை சுவாரசியப்படுத்தினார் தினேஷ். அதை மறுத்த மாயா “நாங்கதான் விஷ்ணுவை கேப்டன் ஆக்கினோம்’ என்பதை மட்டும் வெளிப்படையாக ஒப்புக் கொண்டார்.
விளக்கம் அளிக்கத் தடுமாறிய விஷ்ணு
விஷ்ணு பதில் அளிக்க வேண்டிய நேரம். வீட்டில் இருக்கும் சமயங்களில் தன்னையொரு ராஜதந்திரியாக நினைத்துக் கொண்டு ஆலோசனைகளையும் வியூகங்களையும் அள்ளி வழங்கும் விஷ்ணு, இந்தச் சமயத்தில் நிறைய தடுமாறினார். இந்தச் சமயத்தில்தான் கடந்த சீசன் அசிமை நினைவு கூர வேண்டியிருக்கிறது. அவர் செய்த அலப்பறைகள் ஒருபக்கம் இருக்கட்டும். என்னதான் ஒட்டுமொத்த வீடே எதிராக சாட்சியம் சொன்னாலும் முகத்தில் புன்னகை மாறாமல் அமர்ந்திருப்பார். விளக்கம் தர வேண்டிய தர வேண்டிய பாயிண்ட் பாயிண்ட்டாக பேசுவார். அந்த கல்லுளிமங்கத்தனம் விஷ்ணுவிடம் இல்லை.
“நான் கேப்டன் ஆனது மாயாவோட ஸ்ட்ராட்டஜி. பழிவாங்கறதுக்காக செஞ்சாங்க” என்று பலவீனமாக விளக்கத்தை ஆரம்பித்தார் விஷ்ணு. “ஒருத்தரை பழிவாங்கணும்னா கீழேதானே தள்ளுவாங்க. மேல உக்கார வைக்க மாட்டாங்களே” என்று லாஜிக்காக மடக்கிய கமல் “நம்ம ஆளு ஒருத்தர் சின்ன வீட்டில் இருக்கணும்” என்று பூர்ணிமாவை சமாதானப்படுத்த விஷ்ணு சொன்ன காரணத்தை சரியான சமயத்தில் உள்ளே கொண்டு வந்து கமல் பொருத்த, அதை உற்சாகமாக எழுந்து ஒப்புக் கொண்டார் பூர்ணிமா.
விஷ்ணு
ஆக.. மாயாவும் பூர்ணிமாவும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும் என்கிற ஒப்பந்தத்துடன் உடன்படிக்கை கையெழுத்தானது. இருவரும் விஷ்ணுவை ஆதரித்து கேப்டன் ஆக்க உதவி செய்தார்கள். ஆனால் கேப்டன் ஆனதும் ஒப்பந்தத்தை மீறிய விஷ்ணு, பூர்ணிமாவைப் பிரித்து சின்ன வீட்டில் போட்டார். அந்த ஒப்பந்த மீறல் கூட பரவாயில்லை. அதற்காக விஷ்ணு சொன்ன காரணம்தான் பூர்ணிமாவை புண்படுத்தியது. ‘மக்களுக்குப் பிடிக்காத இரண்டு நபர்கள்’ என்கிற கேட்டகிரியில் விஷ்ணு தன்னை இணைத்து விட்டதைக் குறித்து பூர்ணிமா மனம் புழுங்க “நீ நம்மாளுடா.. அங்க ஒருத்தர் இருந்தாத்தானே நல்லது!’ என்கிற பொய் சமாதானத்தை விஷ்ணு சொல்லி ஏமாற்றியிருக்கிறார்.
இது கூட போகட்டும். விஷ்ணு எப்படியோ கேப்டன் ஆகி விட்டார். அந்தப் பதவியை சிறப்பாக கையாண்டாரா என்றால் அதுவும் இல்லை. ‘ஸ்ட்ரைக்தானே கொடுக்கப் போறீங்க. கொடுங்க’ என்கிற பதட்டமான மோடியிலேயே இருந்திருக்கிறார். எதிர் தரப்பினர் எதைச் செய்தாலும் அது தனக்கான சதி என்கிற பதட்டமும் அவருக்குள் இருந்திருக்கிறது. எனவே தனது கோபத்தை டிசைன் டிசைனாக வெளிப்படுத்தியிருக்கிறார். இது வீட்டின் ஒத்திசைவையும் ஒருங்கிணைப்பையும் கன்னாபின்னாவென்று கலைத்திருக்கிறது. வியாழன் அன்றே சமையல் பொருட்கள் தீர்ந்து விடும் அளவிற்கு நிர்வாக ஒருங்கிணைப்பும் சரியாக நடைபெறவில்லை.
கடந்த சீசனில் நிக்சன் மீது நிறைய குறைகள் சொல்லப்பட்டன. ஆனால் இப்போது நிக்சனே தேவலை என்கிற நிலைமை ஆகி “அரிசியே இல்லைன்னாலும் அவன் வயிறார சாப்பாடு போட்டான் சார்” என்று மக்கள் வாழ்த்தினார்கள். ரவீனாவே விஷ்ணுவிற்கு எதிரான சாட்சியத்தைத்தான் சொன்னார்.
‘மன்னிடுச்சிடுங்கய்யா’ - கதறிய விஷ்ணுவின் மைண்ட் வாய்ஸ்
வலுவான சாட்சியங்கள் தொடர்ந்து வந்தததால் ஒரு கட்டத்தில் சோர்ந்து போன விஷ்ணு “குத்தத்தை ஒத்துக்கறேங்கய்யா. இவங்க கூட விவாதம் பண்ண முடியலை’ என்கிற மோடில் சரண் அடைந்தார். ஆனால் அப்போதும் கமல் விடவில்லை. “அப்படில்லாம் பெருந்தன்மையா நீங்க ஒத்துக்க வேணாம். எங் கூட பேசுங்க. பொறுப்பில்லாதவர்கள் ஷாப்பிங் சென்ற விஷயத்தில் நீங்கதான் போயிருக்கணும்” என்று கருணையே இல்லாமல் இறங்கி அடித்தார் கமல். அவர் அடித்த அடியில் விஷ்ணுவிற்குள் இருக்கும் சண்டைக்கோழி அப்போதே இறந்திருக்க வேண்டும்.
நடந்தையெல்லாம் விஷ்ணு சொல்லி முடித்த பிறகு “நீங்க நடந்தையே மறுபடி சொல்றீங்க. இதையெல்லாம் இவங்க டிவில பார்த்திருப்பீங்க. எனவே நீங்க சொன்னதை எடிட் பண்ணிடுவாங்க” என்று கமல் சொன்னதும் ‘அடப்பாவிங்களா.. அப்ப இவ்ள நான் பேசினதெல்லாம் வீணா?” என்று விஷ்ணுவின் மைண்ட் வாய்ஸ் அலறியிருக்க வேண்டும்.
அனன்யா
“நீங்க பொறுப்பான போட்டியாளரா இருப்பதோடு, பொறுப்பான கேப்டனாகவும் இருந்திருக்க வேண்டும்.முதல் வாரமா இருந்தா கூட பரவாயில்லை. அனுபவம் இல்லைன்னு சொல்லிடலாம். நீங்களா ஒத்துக்கறதுக்கு இங்க நடக்கறது நெகோஷியேஷன் இல்ல. ஒரு தலைமைக்கு பொறுப்பு இருப்பதுதான் முக்கியமான பண்பு” என்றெல்லாம் கமல் பேச விஷ்ணுவின் முகத்தில் சுரத்து என்கிற வஸ்து சுத்தமாக இல்லை.
ஜாக்பாட் ஆட்டத்தில் நடந்த ஏற்ற இறக்கம்
ஒரு பிரேக் முடிந்து வந்த கமல் ‘ஜாக்பாட்’ டாஸ்க்கைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தார். “மாயாவும் நிக்சனும் ஆரம்பத்திலேயே ஒதுங்கிட்டீங்களே.. ஏன்?” என்பது கமலின் முதல் கேள்வி. அவர்கள் ஏன் ஒதுங்கியிருப்பார்கள் என்கிற காரணம் சம்பந்தப்பட்ட நாளின் கட்டுரையில் யூகிக்கப்பட்டிருந்தது. அதையேதான் சொன்னார்கள். “என்னை ரொம்பவும் டேமேஜ் பண்ணுவாங்கன்னு தெரியும்” என்று மாயா சொல்ல “அது சரி.. நீங்க மக்களுக்காக விளையாடியிருக்கணும் இல்லையா.. அவங்கதானே உங்களை ஓட்டு போட்டு இத்தனை நாள் வெச்சிருக்காங்க” என்று கமல் சொன்ன நியாயமான காரணத்தை ஒப்புக் கொண்டார் மாயா.
மாயா
“அந்த ரெண்டு விஷயத்தை வெச்சு என்னை அடிப்பாங்கன்னு தெரியும் சார். நிச்சயமா பிரவோக் பண்ணுவாங்க. கோபம் வந்து நானும் வாயை விட்ருவேன். அது எனக்கு எதிரா திரும்பிடும். என் பெரிய எதிரி கோபம்தான்” என்று நிக்சன் சொன்ன காரணமும் சரிதான் என்றாலும் அப்படி உணர்ச்சிவசப்படுதலை சரியான திசையில் செலுத்தி கட்டுப்படுத்துவதுதான் இந்த ஆட்டத்தின் சவால் என்பதை நிக்சன் உணர வேண்டும். தினேஷ், அர்ச்சனா ஆகிய இருவரையும் ‘பிரவோக்’ செய்பவர்களாக மாயா, நிக்சன் கூற “அந்தப் போட்டில எங்க நாடு கலந்துப்போம். ஆனா எதிர் டீம்ல அந்த ரெண்டு பேர் மட்டும் இருக்கக்கூடாது என்று யாராவது சொல்ல முடியுமா?” என்று கமல் கேட்டது சரியான கேள்வி.
“விக்ரம் கேட்டது உருக்கமா இருந்தது. எனக்கொரு வாய்ப்பு கொடுங்கன்னு கேட்டார். எனக்கு அப்படி மீண்டும் வாய்ப்பு கிடைச்சதாலதான் இங்க வர முடிஞ்சது. அதனால ஐந்து ஸ்டாரை கொடுத்துட்டேன்” என்று சென்டிமென்ட் காரணத்தைச் சொன்னார் விஜய். ஒரு கோணத்தில் இது ஏற்றுக் கொள்ளக்கூடியதுதான் என்றாலும் ஆட்டம் என்று வந்து விட்ட பிறகு அதில் பரிதாப உணர்ச்சிக்கு இடமில்லை. அப்படிப்பட்ட வெற்றியில் விக்ரமிற்கும் சுவை இருக்காது. என்றாலும் ஐந்து ஸ்டார் வென்ற விக்ரமை சிரித்துக் கொண்டே வாழ்த்தினார் கமல்.
எது உங்களின் வெற்றிக்குத் தடை?
‘இன்னமும் அஞ்சு வாரம்தான் இருக்கு” என்று எச்சரிக்கை செய்த கமல், அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்தார். “எது உங்களின் வெற்றிக்கு தடையாக இருக்கிறது? அது நபராக இருக்கலாம்.. ஏதாவது விஷயமாக இருக்கலாம் என்பது கேள்வி. இதில் தினேஷ், அர்ச்சனாவின் பெயரை நிறைய போ் குறிப்பிட்டார்கள். ‘அவர்களின் mocking, provoking உக்கிரமாக இருக்கிறது’ என்பது சொல்லப்பட்ட காரணம். எனில் இவர்களை விடவும் அவர்கள் பலமான ஆட்டக்காரர்கள் என்பதை இவர்களே ஒப்புக் கொள்கிறார்கள் என்றுதான் பொருள். ‘எனக்கு எதுவும் தடையில்லை’ என்று கெத்தாக சொன்ன விஜய் தனித்துத் தெரிந்தார்.
‘கோபம்தான் என்னோட தடை’ என்று நிக்சனும் விஷ்ணுவும் சொன்னார்கள். ‘வயது காரணமா பிஸிக்கல் டாஸ்க் பண்றதுல எனக்கு சிரமம் இருக்கும். ஆனா அதை வீக்னஸா யாராவது சொன்னா, எனக்குள்ள ஒரு வேகம் வந்துடும்” என்று விசித்ரா சொன்னது சிறப்பானது. “நான் இந்த வாரம் சில தவறுகளை செய்து விட்டேன். எனக்கான விதிகளை நானே மீறி விட்டேன்” என்று நேர்மையாக ஒப்புக் கொண்ட அர்ச்சனாவிற்குப் பாராட்டு. தன்னை உணர்ந்து கொள்பவன்தான் வெற்றியை நோக்கி எளிதில் நகர முடியும். ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்று ‘பன்ச்’ டயலாக்காக பேசி இந்தப் பகுதியை கச்சிதமாக முடித்தார் தினேஷ்.
கமல்ஹாசன்
‘நாமினேஷன் ஆனவங்க ஒண்ணா உக்காருங்க. எனக்கு பசி அதிகம். மூணு முட்டைல ஆம்லேட் போட்டாக் கூட சாப்ட்ருவேன்” என்று டபுள் எவிக்ஷன் கூட இருக்கலாம் என்கிற ‘லுலுவாய்க்கு’ விளையாட்டை ஆடி போட்டியாளர்களுக்கு கிலி ஏற்படுத்தி விட்டு பிரேக்கில் செனறார் கமல்.
எழுத்தாளரின் துயரமும் கமலின் பரிந்துரையும்
பிரேக் முடிந்து திரும்பிய கமல் ‘புத்தகப் பரிந்துரை’ பகுதிக்கு வந்தார். இந்த வாரம் அவர் பரிந்துரைத்த நூலுக்குப் பின்னால் ஒரு நெகிழ்வான, உணர்ச்சிகரமான காரணம் இருந்தது. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் உழைப்பிலும் முதலீட்டிலும் உருவாகிய பதிப்பக நூல்கள், சமீபத்திய வெள்ள சேதத்தில் சிக்கி மிகப் பெரிய பொருளியல் நஷ்டத்தை அவருக்கு ஏற்படுத்தியிருக்கிறது.
‘மண்டியிடுகிறேன் தந்தையே’
“ஓர் எழுத்தாளனுக்கு இந்த நேரத்தில் துணை நிற்க வேண்டியது வாசகர்களின் கடமை. இது பரிவோ அனுதாபமோ அல்ல. அவர் எழுதிய ஏராளமான நூல்களை வாங்க முடியாது என்றாலும் ஒரு நூலை மட்டும் சொல்கிறேன். ‘மண்டியிடுகிறேன் தந்தையே’ என்பது எழுத்துலக மாமேதை டால்ஸ்டாயின் வாழ்க்கையை ஒட்டிய சுவாரசியமான நாவல். அதை வாங்கி எழுத்தாளரை ஆதரியுங்கள். மிகப் பெரிய சோதனையில் இருக்கும் அவருக்கு ஒரு சிறிய ஆறுதலாக இருக்கும்’ என்று கமல் சொன்னது சிறப்பு.
அகம் டிவி வழியாக உள்ளே வந்த கமல், எவிக்ஷன் கார்டுடன்’ வரவே, ‘இந்த வாரம் எவிக்ஷன் இல்லை’ என்பது தெரியாத போட்டியாளர்களுக்குள் பரபரப்பு ஏற்பட்டது. ‘யாரு போவா?’ என்கிற வழக்கமான ஆட்டத்தை கமல் ஆரம்பித்து, “விஷ்ணு.. நீங்கதான் கரெக்ட்டா சொல்வீங்க. சொல்லுங்க” என்று சொல்ல, ‘சார்.. வாங்கின அடி போதும்” என்று அலறினார் விஷ்ணு. மணியின் பெயரைக் கேட்டவுடனேயே ரவீனா கண்கலங்கத் துவங்கி விட்டார். இது ஆட்ட நெறிக்கு முரணானது என்றாலும் இப்படியொரு ஆத்மார்த்தமான தோழியை அடைவதற்கு மணி கொடுத்து வைத்திருக்க வேண்டும். தினேஷின் பெயரும் பல முறை வந்தது. ரொம்பவும் ஆக்ரோஷமான ஆட்டக்காரராக இருக்கிறாராம்.
எவரும் எதிர்பார்க்காத வரையில் பிளாங்க் கார்டை நீட்டி சஸ்பென்ஸை உடைத்த கமல் அத்துடன் விடைபெற்றுக் கொள்ள, தப்பித்த ஆசுவாசம் போட்டியாளர்களுக்குள் ஏற்பட்டது. “இந்த வாரம் நான் தப்பு பண்ணிட்டேன். யாரையாவது ஹர்ட் பண்ணியிருந்தா ஸாரி” என்று சுயபரிசீலனயுடன் பொதுச் சபையில் மன்னிப்பு கேட்ட அர்ச்சனாவின் செயல் பாராட்டுக்குரியது. தனக்காக ரவீனா அழுதது, மணியையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியிருக்க வேண்டும். ‘இனிமே நீ சொன்ன மாதிரி ஆடறேன்” என்று வருத்தம் தெரிவித்தார்.
யாரும் இங்கு கெட்டவர்கள் இல்லை
அடுத்த வார கேப்டனுக்கான வாக்கெடுப்பு நடந்தது. இதில் பிக் பாஸ் வீட்டிலிருந்து மாயா, மணி ஆகிய இருவரும் தேர்வானார்கள். ஸ்மால் பாஸ் வீட்டிலிருந்து விஜய் தேர்வானார். கடந்த முறை ஏற்பட்ட அவப்பெயரை மாயா இந்த முறை துடைத்து எறிவார் என்று சிலர் நம்பிக்கை தெரிவித்தார்கள். விஜய் தேர்வானால் வீடு சிறப்பாக இருக்கும் என்று தோன்றுகிறது. பார்க்கலாம்.
மாயா
ஜோவிகா வெளியேறிய போது சொன்ன வாக்கியம்தான் நினைவிற்கு வருகிறது. “நீங்க யாரும் இங்க கெட்டவர்கள் கிடையாது. ரொம்ப நல்லவர்கள்” என்றார். அது உண்மை. நல்லவன், கெட்டவன் என்று யாரையும் கறாரான முறையில் கறுப்பு வெள்ளையாக பிரித்துப் பார்க்க முடியாது. ஒருவரின் பின்னணி, குணாதிசயம், சவாலான சூழலை எதிர்கொள்ளும் மனமுதிர்ச்சி, அப்போதைய மனநிலை போன்றவைதான் ஒருவரின் நடத்தையை தீர்மானிக்கின்றன. இதில் சறுக்குபவர் எப்போது வேண்டுமானாலும் சரியான வழியில் நகரலாம். எனவே எவர் ஒருவரையும் எதிரிகளாக, விரோதிகளாக கருதி ‘விடாதீங்க.. அவனை’ என்று உற்சாகமாக கல்லெறிய வேண்டியதில்லை. ஏனெனில் அப்படி கல்லெறியப்பட வேண்டியவராக நாமே கூட இருக்கலாம்.
Thanks: vikatan
‘வன்ம குடோனா இருக்காதீங்க’ என்று கமல் அழுத்தமாகச் சொன்ன உபதேசம், போட்டியாளர்களின் மனதில் செயல்பட்டால் அடுத்த வார செயற்பாடுகளில் அது நேர்மறையாக பிரதிபலித்து விடும். அது நடக்கும் என்று நம்புவோமாக!
Similar topics
» நான் இரசித்த பாடல் - 25 – அசலும் நகலும் - கமல் vs கமல் -விஸ்வரூபம்
» வன்மம் டிரெய்லர் !
» முதலமைச்சருடன் திடீர் சந்திப்பு நடத்திய தே.மு.தி.க எம்.எல்.ஏ.க்கள்
» சி.பி.ஐ.யில் முதல் பெண் கூடுதல் இயக்குனராக தமிழக டி.ஜி.பி. அர்ச்சனா ராமசுந்தரம் நியமனம்
» நீங்கள் எல்லாம் நல்லா வருவீங்க Boss .......!
» வன்மம் டிரெய்லர் !
» முதலமைச்சருடன் திடீர் சந்திப்பு நடத்திய தே.மு.தி.க எம்.எல்.ஏ.க்கள்
» சி.பி.ஐ.யில் முதல் பெண் கூடுதல் இயக்குனராக தமிழக டி.ஜி.பி. அர்ச்சனா ராமசுந்தரம் நியமனம்
» நீங்கள் எல்லாம் நல்லா வருவீங்க Boss .......!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|