TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 6:46 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 6:03 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Jun 26, 2024 9:47 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Jun 07, 2024 6:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


போகலாம் வாங்க – சீனா - 2 சீனாவின் இன்றைய உண்மை நிலை என்ன?

Go down

போகலாம் வாங்க – சீனா - 2  சீனாவின் இன்றைய உண்மை நிலை என்ன? Empty போகலாம் வாங்க – சீனா - 2 சீனாவின் இன்றைய உண்மை நிலை என்ன?

Post by sakthy Thu Oct 02, 2014 10:32 pm

போகலாம் வாங்க – சீனா - 2  சீனாவின் இன்றைய உண்மை நிலை என்ன?

பல வட அமெரிக்கர்களை பணியிலமர்த்தினால் அவர்களுக்கு அதிகளவில் சம்பளம் தர வேண்டும். எனவே, அப்பணிகளை குறைந்த கூலியில் முடித்துத் தருபவர்கள் எங்கிருக்கிறார்களோ, அவர்களை அமெரிக்காவிற்கு வெளியில் பணியிலமர்த்தி அப்பணிகளை முடித்துக் கொள்ள முடியும். இந்த முறைக்குப் பெயர், வெளிப் பணியமர்த்தல் (Out sourcing) என்பதாகும்.

இந்த முறையில் சீன முதலாளித்துவ-பொதூடைமை என்று சொல்லிக் கொள்ளும்- நாட்டில் அமெரிக்க கணினி நிறுவனங்கள் கொட்டிக் கிடக்கின்றன.தெற்குச் சீனாவில் அமைந்துள்ள சியான் நகரத்தில் 800க்கும் மேற்பட்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் கடைவிரித்திருந்தன.

அங்கே வானளாவிய உயர்ந்து நிற்கும் கட்டடங்கள் நடுவே தெருவுக்குத் தெரு – கே.எப்.சி. – மெக்டொனால்டு நிறுவனங்கள் உணவு விற்றுப் பிழைக்க கடை போட்டுள்ளதால், அமெரிக்காவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு என்றழைக்கப்படும் சான் பிரான்சிசுகோ நகரம் போல சீனா குட்டி வட அமெரிக்காவாகவே காட்சியளிக்கிறது.

இந்திய பணத்தில் காந்தி போல் சீன நோட்டுகளில் மாவோ படம் இருந்தாலும்,இன்று பலருக்கு மாவோவை ஒரு சரித்திர நாயகனாக மட்டுமே தெரிந்திருக்கிறது.மக்கள் மனங்களில் மாவோ மறைந்து பண நோட்டில் மட்டும் தான் காணப்படுகிறார்.
போகலாம் வாங்க – சீனா - 2  சீனாவின் இன்றைய உண்மை நிலை என்ன? Juxsfd
போகலாம் வாங்க – சீனா - 2  சீனாவின் இன்றைய உண்மை நிலை என்ன? 34sj692

சீன மக்களின் பரம்பரை உணவு வகைகளை மறந்து கெண்டகி வறுத்தகோழியகம் (Kentucky Fried Chicken – KFC) அல்லது மக்டொனால்டு(McDonald) விரைவு உணவகங்களில் சாப்பிடுகிறார்கள்.

சீனர்களின் பரம்பரை வீடுகளையும், பழக்க வழக்கங்களையும் வெறுப்பதை தமது இயல்பாகவும் அவர்கள் வெளிப்படுத்துகின்றனர். பொருள் வாங்கிக் குவிப்பதை தமது இலக்காகக் கொள்கின்றனர்.
உண்மைகளை மறைத்து விடும் சீனாவின் இன்றைய நிலை இதுதான்.

கட்சி மற்றும் அரசுப் பெயர்களில் மட்டும் ‘பொதுவுடைமை’ என்பதை நீக்காமல் மாவோவை அடுத்து வந்த தெங்கு சியோ பிங்கு (Deng Xiaoping) பார்த்துக் கொண்டதன் விளைவு, 30 ஆண்டுகள் கழித்து இன்றைக்கு வளர்ந்து வரும் இன்னொரு வட அமெரிக்காவாகவே சீனா காட்சியளிக்கிறது.

இது மட்டுமின்றி, பெய்சிங் முதலான சீனாவின் பல முதன்மை நகரங்களில் ஆயிரக்கணக்கான கணினி நிறுவனங்கள் முளைத்தன. அதிக எண்ணிக்கையிலான சீனாவின் மக்கள் தொகையில், குறைந்த கூலியில் பணிபுரியும் கணினிப் பொறியாளர்கள் கிடைக்கத் தொடங்கியது இதற்கொரு காரணம்.

2012 ஆம் ஆண்டு வட அமெரிக்காவின் மதில்வீதி அல்லது வால்வீதி இதழ்(The Wall Street Journal), சீனாவின் 1024 பணக்காரர்களில் 160 பேர் சீனப் பொதுவுடைமைக் கட்சியின் முன்னணித் தலைவர்கள் என்றும் அவர்களது சொத்து மதிப்பு 22100 கோடி டாலர்கள் என்றும் ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டது.

குடும்ப அரசியலும், வல்லாண்மையும் தலைதூக்கியுள்ள இலங்கையை விட அதிகளவில் ஊழல் நடைபெறும் நாடாக சீனாவே திகழ்வதாக 2013ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட பன்னாட்டுப் புலப்பாட்டு அமைப்பு (Transparency International) தயாரித்த ஊழல் நாடுகளின் பட்டியல் தெரிவிக்கிறது.

அதனால்தான் சீனாவின் புதியப் பணக்கார வகையினர்(வர்க்கத்தினர்) சீனப் பொதுவுடைமைக் கட்சியில் இணைந்து கொள்வதில் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆயினும் மக்களை திசை திருப்ப எங்கோ ஒருவர் ஊழலில் கைதாகி தண்டனை வழங்கப்படுகிறார்.

அதனால் தான் இலங்கையும் சீனாவும் நண்பர்கள் ஆனார்களா?

சீனா செய்யும் கணிய(மென்பொருள்) ஏற்றுமதியில் உலகின் முதலிடம் வகித்து,  வடஅமெரிக்காவையும் ஐரோப்பாவையும் சீனாவுக்குப் பின்னால் தள்ளி இருக்கிறது.

சென்னை, கோவை, பெங்களுரு, மும்பை, புனே என இந்தியாவெங்கும் கணிய (மென்பொருள்) நிறுவனங்கள் இருந்தும்கூட, இந்தியா இதில் 17ஆவது இடத்தில்தான் இருக்கிறது.

இன்னொருபுறத்தில், 1970களில் வேளாண் பொருட்கள் உற்பத்தியில் சிறந்து விளங்கிய சீனா, அதில் மெல்ல வீழ்ச்சியுறத் தொடங்கியது. இன்று, வட அமெரிக்கா முதலான முன்னணி  நாடுகளில் இருந்து கணிசமான அளவில் வேளாண் பொருட்களை இறக்குமதி செய்யும் நாடாக மாற்றப்பட்டுவிட்டது சீனம். ஆனாலும் செயற்கையான பொருட்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி-வளர்ச்சி எனக் காட்டி வருகிறது சீனா.

சீனாவில் ஒருவரை இழிவுபடுத்த வேண்டுமெனில், நம் நாட்டைப் போல், அவர்களை ‘உழவன்-விவசாயி என அழைத்தால் போதும், அந்தளவில்தான், சீன வேளாண்மையின் வளர்ச்சி இருக்கிறது.
இங்கும் ரியலெஸ்டேட் ஆசை காட்டுகிறது.
போகலாம் வாங்க – சீனா - 2  சீனாவின் இன்றைய உண்மை நிலை என்ன? 2le01e1
ஆனாலும் மக்களில் பலர் நகரங்களில் இப்படித்தான் வாழ்கிறார்கள்.
போகலாம் வாங்க – சீனா - 2  சீனாவின் இன்றைய உண்மை நிலை என்ன? Poxao

சென்னையில் கண்ணகி நகர் – செம்மஞ்சேரி பகுதிகளில் தனிக்குடியிருப்பு ஏற்படுத்தப்பட்டு எப்படி குடியமர்த்தப் படுகிறார்களோ, அதே போலவே நகரங்களில் குவிகின்ற சீன மக்கள், பல செயற்கையான வாழ்விடங்கள் ஏற்படுத்தப்பட்டு குடியமர்த்தப்படுகிறார்கள். நகர வீதிகளின் அழுக்கான தெருக்களில் வசித்துக் கொண்டு, வேலைக்குச் செல்பவர்களும் இருக்கிறார்கள்.

சாலையோர கையேந்தி உணவகத்தில் சாப்பிட்டு விட்டு, அப்படியே வேலைக்குச் சென்றுகொண்டு அவர்கள் வாழ்கிறார்கள். நகரத்தில் தற்காலிகக் குடியிருப்பு இசைவு காலவதியாகும் நாட்களில், சம்பாதித்த பணத்தை ஊருக்குக் கொண்டு சென்றுவிட்டு, மீண்டும் நகரத்திற்கு வந்து தங்குகிறார்கள்.

ஊர்களை விட்டுவிட்டு நகரங்களில் அதிக எண்ணிக்கையில் மக்கள் குடியேறுவதை   கட்டுப்படுத்தும் விதமாக 1986ஆம் ஆண்டு நகரங்களில் தற்காலிக இசைவுச் சீட்டு பெற வேண்டும் என்ற விதிமுறை ஏற்படுத்தப்பட்டது.

இதற்கு, ஃகியூகௌ (Hukou)என்று பெயர். நகரங்களில் மக்கள் குவிவதை இது ஓரளவு தடுக்கிறது எனச் சொல்லப்பட்டாலும், உண்மையில் அது நடப்பதில்லை. இன்றைக்கு உலகிலேயே அதிகளவில் மக்கள் குவிந்துள்ள மக்கள் நெருக்கடியான நகரம், சீனாவின் தலைநகரான பெய்கிங் தான்.
போகலாம் வாங்க – சீனா - 2  சீனாவின் இன்றைய உண்மை நிலை என்ன? Ejzi3a
வளர்ச்சி என்ற பெயரில், இவற்றையெல்லாம் இழந்துவிட்ட சீன மக்கள் அதைப் பல்கலைக் கழக ஆராய்ச்சிகளின் மூலம் தேடுகின்றனர். இதே நிலைதான் தமிழகத்திற்கும் வரும் என்பதில் சிறிதும் சந்தேகம் வேண்டாம்.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum