TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:28 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 1:15 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Sep 14, 2024 1:52 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


திருவிளையாடலில் தர்க்கித்த, பெண்களுடைய கூந்தலின் மணம் இயற்கையா இல்லை செயற்கையா? உண்மை என்ன?

2 posters

Go down

திருவிளையாடலில் தர்க்கித்த, பெண்களுடைய கூந்தலின் மணம் இயற்கையா இல்லை செயற்கையா? உண்மை என்ன? Empty திருவிளையாடலில் தர்க்கித்த, பெண்களுடைய கூந்தலின் மணம் இயற்கையா இல்லை செயற்கையா? உண்மை என்ன?

Post by sakthy Wed Oct 10, 2012 4:28 pm

திருவிளையாடலில் தர்க்கித்த, பெண்களுடைய கூந்தலின் மணம் இயற்கையா இல்லை செயற்கையா? உண்மை என்ன?

முதலில் அந்தப் பாடலையும்,பின்னர் அறிவியல் தரும் விளக்கத்தையும் காண்போம்.

இந்தக் கேள்வியை வைத்ததும்,உங்களிடம் உடனே வருவது திருவிளையாடல் படம் தான். திருவிளையாடல் ஒரு சினிமா என்பதால் சில பல சேர்க்கைகளை சேர்த்து படத்தை உருவாக்கி உள்ளார்கள்.அவை சேர்க்கை மட்டுமல்ல செயற்கையும் தான். இந்தப் படத்தில் சிவபெருமானை கொண்டு வந்து தருமியுடனும்,நக்கீரனுடனும் சேர்த்து கதையை கொண்டு சென்றுள்ளார்கள். ஆனால் அது உண்மையல்ல. அங்கே வரும் பாடல் இதுதான்.

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே.
-இறையனார்.

இந்தப் பாடல் எட்டுத் தொகையில் ஒன்றான குறுந்தொகையில் உள்ள குறிஞ்சி நிலப்பாடலில் இரண்டாவது பாடல்.இதை எழுதியவர் இறையனார் என்ற புலவர். இறையனார் என்பதை சிவனாக்கி கதையை கொண்டு சென்றுள்ளனர்.
இந்தப் பாடலின் பொருள்,

பூக்களில் உள்ள மணத்தை,தேர்ந்து ஆராய்ந்து தேனை உண்ணுகின்ற வாழ்கையினையும், அகத்தே சிறகுகளையும் கொண்ட வண்டே,நீ என்னுடைய நிலத்திலுள்ள வண்டு என்பதால் என்னுடைய விருப்பத்தை உரைக்காமல், எனக்கு இன்பம் தருவதற்காகப் பொய் கூறாமல், நீ கண்கூடாக அறிந்த உண்மையைக் கூறுவாயாக!
பழகுதற்கு இனிய, மயிலைப் போன்ற சாயலையும், செறிந்த பற்களையும் உடைய இவ்வரிவையின்,தலைவியின் கூந்தலைப் போன்ற மணம் நீ அறிந்த மலர்களுக்கு உண்டா..?
என்பதாகும்.

அவன், தலைவன்,தலைவியின் மேலுள்ள இயற்கையான காதலினால்,அவளை சந்தித்த போது,அன்போடும்,காதல் உணர்வோடும் அவளைப் பார்க்கிறான்.தலைவி வெட்கம் மேலிட நாணத்தால் தலை குனிந்து நிலத்தைப் பார்க்கிறாள்.தலைவியின் நாணத்தைக் கண்ட அவன்,அதைப் போக்கும் நோக்குடன் அவள் தலையை வருடி, நெஞ்சில் பதிக்கிறான்.அந்த நிலையில் தலைவியின் கூந்தலில் இருந்து இனிய மணம் வருகிறது.(அவன் அது மலரின் மணமா இல்லை தலைவியின் கூந்தலில் இருந்து வருகிறதா என்ற சந்தேகம்.இது சினிமாவில்)

பேசா மடந்தையாகி விட்ட அவளின் நாணத்தை நீக்க, தலைவி சூடியுள்ள பூவில் மொய்க்கும் தும்பி என்னும் வண்டைப் பார்த்து பேசுகிறான்.தேன் தேடும் வாழ்க்கை கொண்ட அழகிய சிறகுகளை உடைய தும்பியே! தேன் உன்னும் காம ஆசையால் சொல்லாமல், உண்மையாக நீ கண்டதைச் சொல். நீ அறிந்த பூக்களில் என் தலைவியின் கூந்தலைக் காட்டிலும் நல்ல மணமுள்ள பூவை அறிந்ததுண்டா?
என்று வினவிக்கொண்டே அவளது உச்சியை முகர்கிறான்.

இது சினிமாவில் மாற்றப்பட்டு இருந்தாலும் கூட,பெண்களின் கூந்தலுக்கு இயற்கையாகவே மணம் உண்டா?

இப்போது அறிவியல் ரீதியில் பெண்களுடைய கூந்தலில் மணம் உண்டா? என்ற கேள்வியை வைத்தால், ஆம் என்றே பதில் சொல்ல வேண்டும்.

வண்டு எறும்பு,பூச்சி , போன்ற உயிரினங்களுக்கு உடலில் சில சமயங்களில்,ஆண் பெண் இனத் தொடர்பின் போதும்,மற்றைய உயிரினங்களில் இருந்து காப்பாற்றிக் கொள்ளவும் ஒரு வகை சுரப்பிகள் சுரக்கப்பட்டு ஒரு வகை மணம்,அனேகமாக பெண் இனத்திற்கு, வருவதை நீங்கள் பார்த்திருக்கலாம்.இதற்குக் காரணம் Pheromones எனப்படும் ஒரு இரசாயணப் பொருளாகும். எறும்பு உணவைக் கண்டதும் போகும் வழியில் இந்த பெரமோனை சுரப்பதால் மற்றைய எறும்புகள் அதை உணர்ந்து இடத்தைக் கண்டு பிடிக்கிறது.இதே போல் தேனீக்களிலும் இராணித் தேனீக்களில் முக்கியமாக தாடைப் பகுதியில் இருந்து சுரக்கும் இந்த பெரமோனால்,மற்றத் தேனீக்கள் கிட்டே வர முடியாமலும்,இன்னொரு இராணித் தேனீ வராதிருக்கவும் பயன்படுத்துகிறது.இந்த பெரமோன் என்பது அந்த உயிரினத்தின் உள் உணர்வினால் ஏற்படுகிறது.அதாவது,மற்ற உயிரினங்களின் பெண் இனத்திற்கு,அரசித் தேனீ போல் சுரக்கும் பெரமோன், ஆண் இனத்தை நெருங்கவோ அல்லது நெருங்க விடாமல் தடுக்கவோ அல்லது எச்சரிக்கை செய்யவோ சுரக்கிறது. அதனால் தான் மனிதனைத் தவிர, மற்றைய உயிரினங்கள் பாலியல் பலாத்காரம்,கற்பழித்தலை செய்வதில்லை.

இந்த வித பெரமோன் வேதிப் பொருள் சில தாவரங்களிலும், வண்டினங்களை கவர சுரக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. வண்டினங்களைக் கவருவதால்,பூக்களின் மகரந்தச் சேர்க்கை சுலபமாகி விடுகிறது.என்னே படைப்பின் அதிசயம்.

மனிதனைப் பொறுத்த வரையிலும் இந்த பெரமோன் மூன்று விதமாக வெவ்வேறு வகைகளில்,(axillary steroids, vaginal aliphatic acids, and stimulators of the vomeronasal organ,) சுரக்கிறது.பெண்களுக்கு தலையில் சுரக்கும் இந்த பெரமோன் கூந்தலில் மணத்தைக் கொடுத்து ஆண்களைக் கவர வைக்கிறது.(நன்றாக சுத்தமாக வைத்திருந்தால்......,இல்லையேல் தலையில் தேய்க்கும் எண்ணைகளின் மணமும் சேர்ந்து..........?)அதற்காக உடனே தலையைக் குனி என்று கேட்காதீர்கள்.ஏனென்றால்,உள் உணர்வின் வெளிப்பாடு காரணமாகவே அந்த வாசனை வரும். இவை ஒரு விதத்தில் ஆண் பெண்ணையும், பெண் ஆணையும் பாலியல் ரீதியில் கவரவோ, எச்சரிக்கை செய்யவோ சுரக்கப்பட்டாலும்,மனிதன் அவற்றைக் கண்டு கொள்ளவில்லை.(மனிதன் யார் பேச்சைத்தான் கேட்டான்.)
தலைவி தலைவனின் நெஞ்சில் சாய்கிறாள்,தலைவி நாணம் கொள்கிறாள்,காதல் உணர்வு மேலிடுகிறது,அது காம உணர்வைத் தூண்டுகிறது,பெரமோன் சுரப்பிகள் சுரக்கின்றன,கூந்தலில் மணம் கமழுகிறது.இது அறிவியலின் முடிவு.

ஆனாலும் ஆய்வாளர்கள் இதைக் கண்டு கொண்டு, இதே வகையான செயற்கை பெரொமோன்களை கண்டறிந்து செயற்கை வாசனைத் திரவியங்களை(body spray)ஆண்களுக்கு தனியாகவும், பெண்களுக்கு தனியாகவும் தயாரிக்கிறார்கள்.இவற்றால் கவரப்படுகிறார்களோ இல்லையோ, நிச்சயமாக தொலைக்காட்சி விளம்பரங்களில் கவரப்படுகிறார்கள்.

நமது ஆதித் தமிழனின் அறிவியல் எப்படி வேலை செய்துள்ளது என்பதை இந்தப் பாடலால் கண்டு கொள்ள முடிகிறது.ஆக முடிவாக,நிச்சயமாக,உறுதியாக பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலே மணம் உண்டு. பெண் மீது ஆணுக்கும், ஆண் மீது பெண்ணுக்கும் கவர்ச்சி ஏற்பட இந்த இரசாயணப் பொருள்(வேதியியல் கூறுகள்) பின்னின்று பணியாற்றுகின்றன. மேற்கண்ட கருத்துக்களின் வழியாகப் பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயெ மணம் உண்டு என்பது அறிவியல் ரீதியாக உறுதியாகிறது. நக்கீரன் தவறாக தருமிக்கு தீர்ப்புக் கூறியதால்,இறையனார்(திருவிளையாடலில், சிவபெருமான் நெற்றிக் கண்ணைக் காட்டி) அறிவியலை படிச்சுக்கோ என்று கூறியதையும் எண்ணிப் பார்க்கலாம்.

ஆனாலும் நக்கீரனின் கூற்றுப்படி,ஒரு பாடலை,எழுதும் போதும் சரி, பாடும் போதும் சரி, மூன்று முக்கிய விதிகளைக் கருத்தில் கொள்ள வேண்டும்.சொற்குற்றம்,பொருட்குற்றம்,இலக்கணக் குற்றம் என்ற வரிசைப்படி ஆய்ந்து தீர்ப்புக் கூறல் வேண்டும்.(தொலைக்காட்சியில் தமிழ் தெரியாது வரும் நடுவர்களுக்கு கொஞ்சம் சொல்லி வையுங்க) இலக்கணம் சரியாகி பொருள் தவறானால் பாடலையும்,பாடுவதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே நக்கீரனின் உயர்ந்த புலமைக்கு தலை தாழ்த்தி.......................

தொடர்ந்து தலைவன் கூற்றால் மகிழ்ந்த தலைவியின் நாணம் நீங்கி உறவு மலர்கிறது.

இடையே யாராவது வந்து பழித்தோ கிண்டல் செய்வதொ வழக்கம் தானே. தலைவியை தோழி கிண்டல் செய்கிறாள்.அதற்கு தலைவி சாட்டை அடி கொடுத்து பதில் சொல்கிறாள் இப்படி.......................

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரள வின்றே சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே ….................குறுந்தொகையில் தேவகுலத்தார் என்ற புலவர் எழுதியது.
இதன் பொருள்......................
மலைச்சாரலில் வளரக் கூடிய, கரிய கிளைகளையுடைய குறிஞ்சி மரத்தின் பூவிலிருந்து பெருமளவு தேன் உருவாகும் நாட்டைச் சேர்ந்தவனாகிய தலைவனிடம் நான் கொண்ட நட்பானது, இந்தப் புவியைக் காட்டிலும் பெரியது, வானை விடவும் உயர்ந்தது, கடலின் ஆழத்தை விடவும் அளத்தற்கரிய ஆழம் உடையது.
ஆகா இப்படியல்லவோ காதலின் ஆழம் இருக்க வேண்டும்.

சக்தி.






avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ரஜனி சுற்றுப்பயணம் செய்யும் இமாலயப் பிரதேசத்தில் உருவாகும் ஐஸ்லிங்கம் ஆன்மீகமா இல்லை இயற்கை அதிசயமா? உண்மை என்ன?
» ராஜீவ்காந்தியை கொன்றவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் இல்லை உடையும் உண்மை!
» கூடங்குளம் உண்மை என்ன? சிறு ஆய்வு.
» உண்மை இல்லை என மறுக்கிறார் நித்தியானந்தர் ; ஆதரவு கதவும் திறக்கிறதாம்;
» காந்தி ஒரு மகாத்மாவா? உண்மை என்ன?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum