TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 1:54 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 1:15 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


கூடங்குளம் உண்மை என்ன? சிறு ஆய்வு.

5 posters

Go down

கூடங்குளம் உண்மை என்ன? சிறு ஆய்வு. Empty கூடங்குளம் உண்மை என்ன? சிறு ஆய்வு.

Post by sakthy Fri Nov 11, 2011 10:42 pm

கூடங்குளம் உண்மை என்ன? சிறு ஆய்வு. 420px-PressurizedWaterReactor_thumb%25255B3%25255D
கூடங்குளம் உண்மை என்ன? சிறு ஆய்வு.

அணு உலைகள் பற்றி படித்து அரை அப்துல் கலாமாகி,அதாவது அரை விஞ்ஞானிகளாகி விட்டிருப்பீர்கள்.அதனால் ஒரு கப் காப்பி அல்லது தேநீர் அருந்தி விட்டு கூடங்குளம் பற்றி சில நிபுணர்கள் சொன்ன தகவல்களைப் படிக்கலாம் வாருங்கள். சிலர் ஆபத்தில்லை பாதுகாப்பானது என அப்துல் கலாம் போல் சொன்னார்கள்.வேறு சிலரோ அமெரிக்கா சிலவற்றை மூடி விட்டது,இத்தாலி,ஜேர்மன் ஜப்பான் என பல நாடுகள் மூடி வருகின்றன.பாதுகாப்போ இல்லையோ ஆபத்து தான் என அடித்து சொன்னார்கள்,என்னை அல்ல,கருத்தை. அதனால் பாதுகாப்பற்றவை என்று சொன்னவர்கள் கருத்தை மட்டும் சுருக்கி தருகிறேன்.சில ஆங்கில சொற்களை தமிழில் தர முடியாது போய் விட்டதற்கு மன்னிக்கவும்.இது கூடங்குளம் அணு உலை பற்றியது மட்டுமே.
கூடங்குளம் அணு உலைக்கு பாதிப்பு ஏற்பட்டால், பாதிக்கப்படும் பகுதிகள் முதல் கட்ட பாதிப்பு விஜயபதி உட்பட 30 கிமீ. உட்பட்ட பகுதிகள், இரண்டாம் கட்ட கன்னியாகுமாரி,கோவளம் மற்றும் சில 50-100 கிமீ. உட்பட்ட கேரள பகுதிகள்,மூன்றாம் கட்ட பாதிப்பு நாகர்கோயில் திருநெல்வேலி,மதுரை உட்பட்ட 100 - 200 கிமீ பகுதியும், உள்ளடக்கும்.30 கிமீ பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மக்கள் நேரடி கதிர்வீச்சுக்கும்,200 கிமீ உட்பட்ட பகுதியில்,அங்குள்ள தாவர விவசாய நிலப் பகுதியையும் பாதிக்கும்.அதாவது உணவுப் பொருட்களில் கதிர்வீச்சு இருக்கும்.இதை Fukshima காட்டி உள்ளது.இந்த பாதிப்பு வெடிப்பு உலையின் உஷ்ணம் போன்றவற்றுக்கு ஏற்ப மாறுபடும். அத்துடன் தரைப் பகுதி மட்டுமல்ல கடற் பகுதியும், மக்கள் மட்டுமன்றி தாவரங்கள், கடல் உயிரினங்களும் இதனால் பாதிக்கப்படும்.உயிரினங்களின் டி‌என்‌ஏ யை பாதிப்பதால் பல ஆயிரம் ஆண்டுகள் வரை இதன் தாக்கம் மக்களிடையே,ஹிரோஷிமா தாக்கம் இன்னுமிருப்பது போல், இருக்கும்.

யுரேனியம் அணு பிளப்பின்(Nuclear Fission) போது,இலேசான Nuclei பிரிக்கப்பட்டு அதிலிருந்து Cecium element உம் அதிலிருந்து gamma,alpha,beta கதிர்களும் வெளியேற்றப்பட்டு கதிரியக்க பாதிப்பைக் கொடுக்கும். வெளியிடப்படும் ஆல்ஃபா கதிர்கள் நம்மை எதுவும் செய்யாதாயினும்,காமா,பேட்டா கதிர்கள் காங்கிரிட்,இரும்பையும் ஊடுருவி செல்லக் கூடியவை.

Nuclear Fussion is-----
Neutron → Uranium → = 3x Neutron Krypton Kr Barium Ba Heat energy

இந்த அணு பிளப்பு சங்கிலி தொடராக நடைபெறும்.

அப்துல் கலாம் ஐயா சொன்னது போல் அல்லாது, வேலை செய்பவர்களின்,ஆபரேட்டர், தவறுகளும் பாதிப்பைத் தரும். 24 மணி நேரமும் திறமை வாய்ந்த நிபுணர்கள் Core சுற்றியுள்ள நீரின் அளவு,வெப்பம் போன்றவற்றை கம்பியூற்றர் திரையில் அவ்தானிப்பார்கள். ஆனால் அவற்றை செயல் படுத்துவது யார்?நிச்சயம் நிபுணர்கள் அல்ல.இதே தவறு உக்ரைனில் நடந்தது.
எமர்ஜென்ஸி கூலிங் சிஸ்டத்தை இயக்குபவர்கள், மின் வாட்டர் பம்ப்ஸ் இல் விசேட பயிற்சி உள்ளவர்களே தவிர, நியூக்ளியர் ரியாக்டர் நிபுணர்கள் அல்ல.இதை விட maitenance ற்காக இரவு வேளையில் நடத்தப்படும் டெஸ்ட், ஆபரேட்டர் களால் நடத்தப்படுகிறது. இந்த பரிசோதனையின் போது, வெப்பம் குறைவாவதும்,ஆபரேட்டர் சிறிது கவலையீனமானால் அதிக அளவிற்கு வெப்பம் கூடும் வாய்ப்பு உண்டு.இந்த வெப்ப மாற்றம், நடந்து முடிந்த அணு உலை வெடிப்புக்களின் போது அவதானிக்கப்பட்டது. உக்ரைனில் ஏற்பட்ட விபத்தில் கீழ்க்கண்ட நிலை ஏற்பட்டது என்கிறார் ஒருவர்.
The test started with a planned reduction of reactor power to 25 percent, but power dropped to 1 percent unexpectedly. Workers increased power, but a power surge occurred after 30 seconds. அதை தொடர்ந்து வெடித்தது.
இந்த நிலை ஏற்பட்டால், 500 C ளில் இருந்து 2000 C உயர்ந்து, ஊதிய பலூன் வெடிப்பது போல் வெடிக்கும்.

தினமும் 1000 MW reactor ற்கு தேவைப்படும் உரேனியம்,தண்ணீர் அளவு இது -
Uranium235 - 0,003 tons;
Fresh and pure water for cooling the core – 3500 cubic meter
Sea Water for condenser cooling - 7.2 million cub meter
தினமும் தேவைப்படும் 3500 CM தண்ணீர் 65 கிமீ. தொலைவில் தென்மேற்கில் உள்ள பேச்சிபாறையில் இருந்து குழாய் வழியாக கொண்டு வரப்படும்.இதை மாற்றி upper Kodaiyar reservoir இருந்து கொண்டு வரவும் முடிவு செய்ததாகவும் தகவல் உண்டு.இந்த பேச்சிப்பாறையில் இருந்து குழாய் வழியாக வரும் தண்ணீர் தடைப் படுமானால்?ஆனாலும் கடல் நீரை சுத்தப்படுத்தும்,desalination,7650 CM நீரை சுத்தப்படுத்தினாலும், இவை குடிநீர் மற்றும் தொழிற்சாலைகளுக்கும் பயன்படுத்துவதாலும்,சுத்தப்படுத்தல் தடைபடக் கூடிய சாத்தியக் கூறுகளும் இருக்கவே செய்கிறது என்கிறார்கள். அதே சமயம் நல்ல சுத்தப்படுத்திய நீர் வராவிட்டாலும்,பாவனையின்றி தாமதப் படுத்துவதாலும் ரியாக்டர் துருப் பிடிக்க பழுதடைய வாய்ப்புண்டு என்பதையும் மறந்து விட முடியாது என்கிறார்கள் நிபுணர்கள்.
நடு core ல் உள்ள 100 tons உரேனியத்தில், 4 tons U 235 உம்,மிகுதி U238 உம் பாவிக்கப்படும்.இந்த 4 தொன் U235 ளில் இருந்து ஹிரோஷிமா அணுக்குண்டைப் போல் 800 அணுக் குண்டுகளை தயாரிக்க முடியும். கூடங்குளத்தில் தனியாக அணுக் குண்டுகளை தயாரிக்க அமைப்பு இல்லாததால்,இந்த உலையில் இருந்து இரண்டையும் தயாரிக்க முடியும். இந்த முறை மிகப் பயங்கரமான பாதிப்பை தரக் கூடியது.
தானியங்கி உயர் வெப்பநிலையில் இருந்து உறை நிலைக்கு செல்லும் ரியாக்டர் இருப்பதாக தெரியவில்லை என்கின்றனர். அந்த நிலை இருந்தாலும்,குறிப்பிட்ட நேரத்தில் உறைநிலைக்கு கொண்டு செல்ல முடியாது என்றும்,உண்மையில் அறிவிக்கப்படாத தென் இந்தியர்களுக்கு எதிரான அணுயுத்தமாகவே இருக்கும்.அதே போல்,that nuclear plants can become nuclear bombs when there are mechanical, electrical or construction failures or human failures, man- made and natural disasters. என்கிறார் ஒரு நிபுணர்.அமெரிக்காவில் 16kms கதிரியக்க வலையமாகவும்,80 kms பாதுகாப்பு வலையமாக வைத்துள்ள நிலையில், கூடங்குளம் அல்லது திருநெல்வேலி பகுதிகளில் இப்படியான நிலை இல்லாததும்,அங்கிருந்து மக்கள் உடனடியாக வெளியேறவோ அபாய அறிவிப்பு வழங்கவோ முடியாதபடி குறைந்த தூரத்தில் இருப்பது மிகப் பெரிய மனித அபாயமாகும்.
social activists are looking into public safety from the probability of not only mechanical, electrical and operational failures but also from the unforeseen accidents due to internal sabotage, human errors, terrorist attacks, bombings and aeroplane crashes which cannot be always visualized in proper time and remedial measures cannot be taken to avert them என்று ஒருவரும்,
nuclear safety is a myth. Russian nuclear reactors do not satisfy safety consideration in many respects என்று இன்னொருவரின் கருத்தும் கவனிக்கத் தக்கது.
ஆரம்பத்தில் இருக்கும் யுரேனியத்தின் சக்தியை விட , நாலு வருடங்களின் பின் பில்லியன் முறை சக்தி வாய்ந்ததாகும். 12 - 18 மாதங்களுக்கு ஒரு முறை spent fuel மூன்றில் ஒரு பகுதி வெளியேற்றப்பட்டு புதிதாக நிரப்பப்படும்.
வெளியேற்றப்படும் 30 தொன்களில் கீழ்க்கண்டவாறு அமையும்.
235Uranium 1% -300 kg
239 Plutonium 1% - 300 kg
Fission products 3% - 900 kg மிக ஆபத்தானவை
Uranium238 95% - 28500 kg
இந்த spent fuel மிக வெப்பமாகவும் radioactive உள்ளதாகவும் இருக்கும். அதாவது ஒருவர் ஒரு மீற்றர் தூரத்தில் இருந்தால்,அவர் 20 செக்கனில் இறந்து விடுவார். spent fuel ஐ 5 வருடங்களுக்கு குளிரப் பண்ணுதல் வேண்டும். கூடங்குளம் spent fuel store அங்கேயே reactor ற்கு பக்கத்தில் உள்ளது.Core ல் உள்ளதை விட spent fuel மக்களுக்கு அதிக ஆபத்தை தரக் கூடியதாகும்.இந்த spent fuel 6 வருடங்கள் வரை குளிரப் பண்ணிய பின் பிரிக்கப்பட்டு திரும்ப பாவிப்பதற்கு பயன்படும்.ஆனாலும் ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும்.ஒவ்வொரு 18 மாதங்களும் spent fuel சேர்ந்து கொண்டே இருக்கும்.அதை குளிரப் பண்ண மேலதிகமாக் நல்ல தண்ணீர் தேவைப்படும்.கதிரியக்கத்தை தரும் இந்த கழிவுகளை சேமித்து வைப்பதற்கே அதிக செலவு ஏற்படுகிறது. இந்த சமயத்தில், ரஸ்சியாவில் கழிவுகள் சேமித்து வைத்த Moskva ஆற்றுக்கு அருகே கதிரியக்கம் இருப்பது(600 and 800 microroentgen per hour ) சமீபத்தில் green peace இயக்கத்தினரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதை சொல்லியே ஆக வேண்டும்.
கூடங்குளத்தில் தற்போது 2 x 1 GW WER - 1000 model PWR (Water cooled water moderated power Reactor) உண்டு. இன்னும் இரண்டு பொருத்த முடிவாகி உள்ளதால்,இது 5 யூனிட்டாக உயரும்.மற்ற இரு யூனிட்டும் ஹரிபூரில் அமைக்க முடிவாக்கி உள்ளது. எல்லாமே ரஷ்ய ஒப்பந்தத்தின் கீழ் வருகிறது.
சாயக் கழிவுகள் போல் காவிரி, கால்வாயாக மாறியது போல் குறைந்த கதிரியக்கமுள்ள கழிவுகள் கடல் நீரில் கலக்குமானால் மீன்கள்,கடல் உயிரினங்கள்,அதை வைத்து வாழ்க்கை நடத்தும் மீனவர்கள் நிலை என்ன? அப்துல் கலாம் ஐயாவின் 10 அம்ச பாதுகாப்பு அறிக்கை, உலையின் உள் வடிவமைப்பை மட்டுமே கருத்தில் கொண்டு எழுதப்பட்டுள்ளது என்கிறார்கள்.மத்திய அரசின் அழுத்தமா?ராஜீவ் ஒப்பந்தமென்பதால் மக்களை விட ராஜீவ் மதிக்கப்பட்டு நிறைவேற்ற முனைகிறார்களா?

கன்னியாகுயரி,தூத்துக்குடி,திருநெல்வேலி பகுதிகளில் தற்போது உள்ளது போல் காற்றாடி,மற்றும் சூரிய சக்தியையும்,wind – solar -biomass, பாவித்தால் அதிக மின்சக்தியையும்,அதே நேரம் செலவு குறைவாகவும், தமிழ்நாடு தன்னிறைவு பெறவும் மேலதிக சக்தியை ஏற்றுமதி செய்யவும் முடியும் என்கிறார்கள் இந்த அணுசக்தி நிபுணர்கள்.
நான் முன்னர் சொல்லியது போல் மக்கள் உயிர், எலிகளை விட மலிவானது ஆகி விட்டதா?
மீண்டும் ................................நன்றியுடன் சக்தி.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

கூடங்குளம் உண்மை என்ன? சிறு ஆய்வு. Empty Re: கூடங்குளம் உண்மை என்ன? சிறு ஆய்வு.

Post by அருள் Sat Nov 12, 2011 7:24 am

கூடங்குளம் உண்மை என்ன? சிறு ஆய்வு. 917304 கூடங்குளம் உண்மை என்ன? சிறு ஆய்வு. 917304 கூடங்குளம் உண்மை என்ன? சிறு ஆய்வு. 917304
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

கூடங்குளம் உண்மை என்ன? சிறு ஆய்வு. Empty Re: கூடங்குளம் உண்மை என்ன? சிறு ஆய்வு.

Post by tamilparks Sat Nov 12, 2011 9:09 am

அறிவிப்பு
avatar
tamilparks
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 135
Join date : 20/05/2010

http://tamilparks.50webs.com

Back to top Go down

கூடங்குளம் உண்மை என்ன? சிறு ஆய்வு. Empty Re: கூடங்குளம் உண்மை என்ன? சிறு ஆய்வு.

Post by anandalr Sat Nov 12, 2011 1:30 pm

அவசியமான தகவல்கள். அறிவிப்பு
avatar
anandalr
உதய நிலா
உதய நிலா

Posts : 1
Join date : 26/09/2010

Back to top Go down

கூடங்குளம் உண்மை என்ன? சிறு ஆய்வு. Empty Re: கூடங்குளம் உண்மை என்ன? சிறு ஆய்வு.

Post by ஜனனி Sat Nov 12, 2011 3:41 pm

anandalr wrote:அவசியமான தகவல்கள். அறிவிப்பு
நன்றிகள் dr clap சக்தி
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

கூடங்குளம் உண்மை என்ன? சிறு ஆய்வு. Empty Re: கூடங்குளம் உண்மை என்ன? சிறு ஆய்வு.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  கூடங்குளம் ஒரு செய்தி ஆய்வு.
» புதிய தலைமுறையின் உண்மை முகம் என்ன?
» கூடங்குளம் பகுதிக்கு வரும் வெளிநாட்டவர்களின் விசாக்களை ஆய்வு செய்ய மத்திய அரசு உத்தரவு
» கூடங்குளம் அணுமின்நிலையத்தில் இந்திய அணுசக்தி ஆணைய அதிகாரிகள் இன்று ஆய்வு: ஓரிரு நாளில் எரிபொருள் நிரப்ப ஏற்பாடு
» சிறு சேமிப்புத் திட்டங்களின் வட்டி குறைப்பு… முதலீட்டாளர்கள் இனி என்ன செய்யலாம்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum