Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Today at 1:04 am
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:56 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm
அறிவை வளர்த்துக் கொள்வோம்.ஆங்கிலமும் த(தி)மிங்கிலமும் தமிழும் படும்பாடு.
3 posters
Page 1 of 1
அறிவை வளர்த்துக் கொள்வோம்.ஆங்கிலமும் த(தி)மிங்கிலமும் தமிழும் படும்பாடு.
உள்ளதைச் சொல்வேன் சொன்னதை செய்வேன் வேறொன்றும் தெரியாது.
உள்ளத்தில் இருப்பதை வார்த்தையால் மறைக்கும் கபடம் தெரியாது.
ஆங்கிலமும் த(தி)மிங்கிலமும் தமிழும் படும்பாடு.
முன்னர் ஒரு முறை நமது ஆங்கில உச்சரிப்பு தவறானது என்றும்,அதனால் ஆங்கிலேயர்கள் நம்மை ஒன்றும் தெரியாதவர்களாக எண்ணுகிறார்கள் என்றும் எழுதி இருந்தேன். அதை, சமீபத்தில் என்னுடன் பயணித்த ஆங்கில ஆசிரியருக்கு ஏற்பட்ட அனுபவ மூலம் அறிந்தேன்.தவறு செய்யாதவன் எவனும் இவ்வுலகில் இல்லை. தவறை திருத்துக் கொள்பவன் மனிதன். அது போல் நம் பேச்சில் உள்ள தவறுகளை திருத்திக் கொள்வது நம் உயர்ச்சிக்கு உதவும்.
ஆசிய,ஆபிரிக்க நாட்டவர்களின் ஆங்கில உச்சரிப்பில் சில தவறுகளை காண முடியும். சென்னையில் International Institute of Technology ல் ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு கூட ஆங்கில பேச்சுப் பயிற்சியில் பரீட்சை நடத்துகிறார்கள்,பேச்சுப் பயிற்சி கொடுக்கிறார்கள். நாம் ஆங்கில இலக்கணத்தில் சிறப்பாக இருந்தாலும் கூட பேச்சு சரியாக வரவில்லை என்பது என்னவோ உண்மை தான். தமிழ் மொழியை எடுத்துக் கொண்டால் கோவை,சென்னை, கன்னியாகுமரி,இலங்கை என்று ஒவ்வொரு இடத்திலும் உச்சரிப்பு பல்வேறு விதமாகவே உள்ளது. சிறப்பான தமிழ் உச்சரிப்பை ஈழத்தின் யாழ்ப்பாண மக்கள் கொண்டிருக்கின்றனர். அவர்களின் ல,ள,ழ,ன,ண போன்றவற்றை சரியாகவும், ஸ,ஷ,ஹ.ப(ba) போன்றவற்றை சேர்க்காதும் ச,க வை சரியாகவும் கணீரென்று ஒலிக்கின்றனர்.அது போல் குமரி மாவட்ட மக்கள் ல,ள,ழ வரும் தமிழ் சொற்களை நன்றாக உச்சரிப்பது ஆச்சரியமான உண்மை. ஆனால் நாம் அவற்றில் கோட்டை விட்டு விடுகிறோம். முக்கியமாக ல,ள,ழ,ன,ண தவறாகவும் ச,க விற்கு பதில் ஸ,ஷ,ஹ வும் ப வை ba(bhayam,bhaavam)என்றும் உச்சரிப்பில் நமக்கு பலவீனம் உண்டு. தமிழில் ஸ,ஷ,ஹ,ப(ba) உச்சரிப்புக்கள் கிடையாது.வட மொழியின் தாக்கம்,சோறு சாதம் ஆனதும்,குருதி இரத்தம் ஆனதும் நம்மிடம் அதிகம்.இதை பாரதிதாசன்,பாவாணர் போன்றவர்கள் அவர்களின் எழுத்திலும் பேச்சிலும் அடிக்கடி நினைவூட்டுவார்கள்.தமிழுக்கு அமுது என்று பேர் ...என்பதை வடிவேல் சொல்வது போல் தமிலுக்கு என்று பாடிப் பாருங்கள்!
ஆங்கில உச்சரிப்பை எடுத்துக் கொண்டால் பிரிட்டிஷ் ஆங்கிலேயருக்கும், அமெரிக்கர்களுக்கும் இடையே உள்ள பேச்சு ஆங்கில உச்சரிப்பு ஒன்றாக இருப்பதாக கொள்ள முடியாது. சென்னை,கோவை பேச்சுத் தமிழைப் போல் இவர்களின் உச்சரிப்பும்,சொற்களும் வேறுபடுகின்றன. அதற்கு காரணம் அமெரிக்காவில் பிரிட்டிஷ் காரருடன் ஐரோப்பியர்களும் பின்னர் ஆபிரிக்கர்களும் குடியேறியதால் இந்த நிலை ஏற்பட்டு ஒரு கலவையானது. ஆனாலும் எழுத்துக்களின் உச்சரிப்பு சரியானதாகவே இருக்கிறது என்பதால்,அவர்களின் வாய் அசைவை நேரில் பேசும் போதும், சினிமா,தொலைக்காட்சி நிகழ்சிகளின் போதும், ஒலி வடிவ புத்தகங்களை(audio books) நன்றாக கவனித்து கேட்பதாலும் திருத்திக் கொள்ள முடியும்.சரியோ தவறோ, பேச்சையும் செயலையும் வைத்தும் வெளித் தோற்றத்தை வைத்துமே ஒருவரின் குணத்தை இந்த உலகம் மதிப்பிடுகிறது. இதனாலேயே அமெரிக்க நாட்டுக்கும், ஆஸ்திரேலிய நாட்டுக்கும் செல்லும் பலர் தங்கள் ஆங்கில பேச்சினால் சில கஸ்டங்களை அனுபவிக்கிறார்கள்.தமிழைப் போல் பல மொழிகளில் அந்த எழுத்துக்களை அப்படியே சேர்த்து உச்சரிப்பதன் மூலம் சொற்களை உச்சரிக்க முடியும்.ஆனால் ஆங்கிலத்தை அப்படியே எழுத்துக்களை சேர்த்து உச்சரிக்க முடியாது.ஆங்கில உச்சரிப்பிற்கு சில விதி முறைகள் வகுக்கப்பட்டுள்ளன.ஒவ்வொரு சொல்லும் வெவ்வேறு விதமாக உச்சரிக்கப்படுகிறது.
இது தவிர உலக நாடுகளின் தொடர்பு மொழியாக பயன்படும் ஆங்கிலம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலை என்ன?.பல சிற்றரசகளால் பிரித்தானியா பல நாடுகளாக பிரிந்திருந்ததும் அப்போது இருந்த பிரதேச மொழியும், வட ஒல்லாந்து பிரீசியன் (Frisien, Frisien language)நாட்டில் இருந்து சென்ற மொழியும்,ஜேர்மனின் ஒரு பகுதியினர் அங்கு சென்றதாலும் கலந்து ஏற்பட்ட மொழி ஆங்கிலம் ஆயிற்று.இன்றும் பிரித்தானியாவின் சில புற நகர் பகுதிகளில் பழைய ஆங்கிலம் பேசப்படுகிறது. உதாரணமாக sun,run,grund,friend போன்றவை சுன்,ருன்,குருண்ட் என உச்சரிப்பதால், பல பிரித்தானியர்கள் அதை புரிந்து கொள்ள முடியாதிருக்கிறது.இந்த மொழி, ஜேர்மன் மொழிக் குடும்பத்தில் இருப்பதும், இன்றைய ஆங்கிலத்தில் லத்தின்,பிரிசியென் போன்ற பல மொழிகள் கலந்திருப்பதை காணவும் முடியும்.
இதே போல் டென்மார்க்,சுவிற்செலாந்து,ஆஸ்தீரியா,ஜேர்மன் நாடுகளில் ஜேர்மன் மொழி பேசப் பட்டாலும், ஜேர்மனியர்களால் மற்றைய நாடுகளில் பேசப்படும் ஜேர்மன் மொழியை புரிந்து கொள்ள முடியாது கஸ்டப்படுகிறார்கள்,நேர்காணல் போன்றவற்றில் மொழிபெயர்ப்பு செய்கிறார்கள்.ஏன்,ஜேர்மன் நாட்டில் உள்ள முனிச் நகரில் பேசப்படும் ஜேர்மன் மொழியை மற்றைய நகரங்களில் உள்ள ஜேர்மனியர்கள் புரிந்து கொள்ள முடியாது,அந்த மொழியை ஜேர்மன் என்று கூறாது பயரிஷ் என்றே குறிப்பிடுகின்றனர்.
இதே போல் மூ நாட்டில்(லெ-மூ-ரியா) இருந்து சேர,சோழ,பாண்டிய நாடுகள் உருவானது போல்,மூ நாட்டு மொழியான தமிழில் இருந்து மலயாளம், கன்னடம், தெலுங்கு,துளு,குறுக்,கோலமி,பிராகுயி போன்ற மொழிகள் உருவாகின.இன்றும் பழைய தமிழ் சொற்கள் மலையாளத்தில் பேசப்பட்டு வருவதை காண முடியும். அதனால் தான் மலயாளிகள் தமிழைக் கற்றுக் கொண்டு பேசும் போது தமிழக தமிழர்களை விட சிறப்பாக தமிழை உச்சரிக்கிறார்கள்.இன்றும் அவர்களிடையே வெள்ளம்,சோறு போன்ற பழைய தமிழ் சொற்கள் பாவனையில் உள்ளன.
தமிழர்களும் தென் இந்தியர்களும் ...ing ஐ அதிகமாக பேசும் போது சேர்த்துக் கொள்கிறார்கள்.இத்துடன் t,d,r,th,v,w,sh உச்சரிக்கும் போதே அதிக தவறை செய்கிறார்கள். இந்தியை பேசுவோர் s,sh,v,w,r போன்றவற்றில் அதிக தவறுகளை செய்கிறார்கள்.வேறு சிலரோ school,start போன்றவற்றை isschool,isstart என சொல்வதை நாம் காண்கிறோம்.
புத்தகங்கள்,பத்திரிகைகள் சத்தமாக படிப்பது,சினிமா தொலைக்காட்சி பார்க்கும் போது வாய் அசைவையும்,உதடுகளின் அசைவை அவதானிப்பதும்,ஒலிவடிவ புத்தகங்களை அவதானித்து கேட்பதும் ஆங்கில உச்சரிப்பை சரி செய்ய உதவும்.முடிந்தால் பேசுவதை பதிவு செய்து திரும்ப கேட்கும் போது தவறுகளை கண்டறிய முடியும்.நன்றாக பேச வரும் வரை வேகமாக பேசக் கூடாது. school,start,question,burger போன்ற சில சொற்களை வைத்தே நாம் தமிழர்கள் என உடனே கண்டு கொள்ள முடியும்.
குழந்தைகள் ஒரு மொழியை படிப்பதற்கும் பெரியவர்கள் கற்பதற்கும் பல வேறுபாடுகள் உண்டு. பெரியவர்கள் ஒரு மொழியை கற்க தொடங்கும் போது உடனேயே கடுமையான இலக்கணங்களுக்குள் நுழையக் கூடாது. சிறிய சொற்தொடர்களை முதலில் கற்க ஆரம்பிக்க வேண்டும். ஆங்கிலம் பேசும் நாடுகளில் மொழியை கற்க தொடங்கும் பெரியவர்களுக்கான பாடங்களில் முதலில் இலக்கணம் கற்றுக் கொடுக்காது,சிறிய சொற் தொடர்களை படித்து அறிந்து கொள்ளும்படி சொல்கிறார்கள். பின்னர் அத் தொடர்களுடன் இலக்கணங்களை சேர்த்து வசனங்களை அமைக்க கற்றுக் கொடுக்கிறார்கள்.
எழுதும் போது தவறு ஏற்படுமாயின் அதை திருத்திக் கொள்ள முடியும்.ஆனால் பேசும் போது தவறுகள் ஏற்படுமாயின்?பல் போனால் சொல் போச்சு என்பது போல் ஒரு முறை விட்ட வார்த்தையை திரும்ப பெற முடியாது. எந்த மொழியானாலும் அதே மொழியில் சிந்தித்து பேசும் போது தவறுகள் குறையும்.தமிழில் சிந்தித்து தமிழில் பேச வேண்டும்.தமிழில் சிந்தித்து ஆங்கிலத்தில் பேசும் போது,நாம் தமிழை அப்படியே மொழி பெயர்ப்பதால் பல தவறுகள் ஏற்பட வாய்ப்புண்டு.எந்த மொழியையும் கலப்பின்றி பேசுவதால்,அதாவது தமிழையும் ஆங்கிலத்தையும் கலந்து பேசுவதை தவிர்க்க வேண்டும்.தமிழ் பேசும் போது தமிழிலும்,ஆங்கிலம் பேசும் போது ஆங்கிலத்திலும் மட்டுமே பேச வேண்டும். நமக்கு ஒரு மொழி தெரியும் என்பதை மற்றவர்களுக்கு காட்ட வேண்டும் என்பதற்காக ஆங்கிலத்தை தமிழுடன் கலந்து பேசுவதால் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளுகிறோம். நம்மில் பலர் ஆங்கிலம் தெரியா விட்டால் நம்மை இழிவாக பட்டிக்காடாக, பாமரனாக,கிராமத்தவனாக எண்ணுவார்கள் என நினைத்து ஆங்கில வார்த்தைகளை சேர்த்து பேசுகிறார்கள். அதனால் மற்றவர்கள் நம்மை ஏற்றுக் கொள்கிறார்களோ இல்லையோ,நம் மொழி அறிவு ஆட்டம் போடுகிறது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
பேசுவதற்கு வெட்கப்படுவதை நிறுத்திக் கொண்டு தொடக்கத்தில் வேகமாக பேசக் கூடாது. பிறக்கும் போது யாரும் எல்லாம் தெரிந்து கொண்டு பிறப்பதில்லை என்பதை நினைவில் கொண்டு, வாய் உதடு அசைவுகளை கண்ணாடியின் முன் நின்று சிறிது சத்தமாக பேசி பழகுவது அதிக பலனை தரும்.
பிரெஞ்சுக்காரன்,ஜேர்மன்காரன் தொலைக்காட்சியில் மட்டுமல்ல எங்கும் தங்கள் மொழியை தப்பாக பேசினால் உச்சரித்தால் சுட்டிக் காட்டி மொழிபெயர்ப்பாளர்களை அழைக்கிறான்.ஆனால் நம் நாட்டில் தமிழை தப்பாக உச்சரித்தால் பெருமைப்பட்டுக் கொள்கிறான் தமிழன். ஆனால் ஆங்கிலம் தப்பாக உச்சரிக்கப்பட்டால் விமான நிலையத்தில் தடுத்தி நிறுத்தி விசாரணை செய்கிறான் ஆங்கிலேயன். நாடெங்கும் மொழிப் பயிற்சி பள்ளிகளையும்,வகுப்புக்களையும் இலவசமாகக் கூட அங்கே நடத்துகிறார்கள். ஆண்டு தோறும் அமெரிக்க நாட்டில் ஆங்கில உச்சரிப்பு போட்டி கூட நடத்துகிறார்கள். ஆனால் நம் நாட்டில்? உங்களுக்கே அது தெரியும்.
நம் தவறுகளை மற்றவர்கள் கண்டு சிரிப்பதை விட,அந்த தவறுகளை நாமே முதலில் கண்டு திருத்திக் கொள்வதே சிறப்பானது.
மீண்டும் சந்திக்கிறேன்....................................சக்தி.
உள்ளத்தில் இருப்பதை வார்த்தையால் மறைக்கும் கபடம் தெரியாது.
ஆங்கிலமும் த(தி)மிங்கிலமும் தமிழும் படும்பாடு.
முன்னர் ஒரு முறை நமது ஆங்கில உச்சரிப்பு தவறானது என்றும்,அதனால் ஆங்கிலேயர்கள் நம்மை ஒன்றும் தெரியாதவர்களாக எண்ணுகிறார்கள் என்றும் எழுதி இருந்தேன். அதை, சமீபத்தில் என்னுடன் பயணித்த ஆங்கில ஆசிரியருக்கு ஏற்பட்ட அனுபவ மூலம் அறிந்தேன்.தவறு செய்யாதவன் எவனும் இவ்வுலகில் இல்லை. தவறை திருத்துக் கொள்பவன் மனிதன். அது போல் நம் பேச்சில் உள்ள தவறுகளை திருத்திக் கொள்வது நம் உயர்ச்சிக்கு உதவும்.
ஆசிய,ஆபிரிக்க நாட்டவர்களின் ஆங்கில உச்சரிப்பில் சில தவறுகளை காண முடியும். சென்னையில் International Institute of Technology ல் ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு கூட ஆங்கில பேச்சுப் பயிற்சியில் பரீட்சை நடத்துகிறார்கள்,பேச்சுப் பயிற்சி கொடுக்கிறார்கள். நாம் ஆங்கில இலக்கணத்தில் சிறப்பாக இருந்தாலும் கூட பேச்சு சரியாக வரவில்லை என்பது என்னவோ உண்மை தான். தமிழ் மொழியை எடுத்துக் கொண்டால் கோவை,சென்னை, கன்னியாகுமரி,இலங்கை என்று ஒவ்வொரு இடத்திலும் உச்சரிப்பு பல்வேறு விதமாகவே உள்ளது. சிறப்பான தமிழ் உச்சரிப்பை ஈழத்தின் யாழ்ப்பாண மக்கள் கொண்டிருக்கின்றனர். அவர்களின் ல,ள,ழ,ன,ண போன்றவற்றை சரியாகவும், ஸ,ஷ,ஹ.ப(ba) போன்றவற்றை சேர்க்காதும் ச,க வை சரியாகவும் கணீரென்று ஒலிக்கின்றனர்.அது போல் குமரி மாவட்ட மக்கள் ல,ள,ழ வரும் தமிழ் சொற்களை நன்றாக உச்சரிப்பது ஆச்சரியமான உண்மை. ஆனால் நாம் அவற்றில் கோட்டை விட்டு விடுகிறோம். முக்கியமாக ல,ள,ழ,ன,ண தவறாகவும் ச,க விற்கு பதில் ஸ,ஷ,ஹ வும் ப வை ba(bhayam,bhaavam)என்றும் உச்சரிப்பில் நமக்கு பலவீனம் உண்டு. தமிழில் ஸ,ஷ,ஹ,ப(ba) உச்சரிப்புக்கள் கிடையாது.வட மொழியின் தாக்கம்,சோறு சாதம் ஆனதும்,குருதி இரத்தம் ஆனதும் நம்மிடம் அதிகம்.இதை பாரதிதாசன்,பாவாணர் போன்றவர்கள் அவர்களின் எழுத்திலும் பேச்சிலும் அடிக்கடி நினைவூட்டுவார்கள்.தமிழுக்கு அமுது என்று பேர் ...என்பதை வடிவேல் சொல்வது போல் தமிலுக்கு என்று பாடிப் பாருங்கள்!
ஆங்கில உச்சரிப்பை எடுத்துக் கொண்டால் பிரிட்டிஷ் ஆங்கிலேயருக்கும், அமெரிக்கர்களுக்கும் இடையே உள்ள பேச்சு ஆங்கில உச்சரிப்பு ஒன்றாக இருப்பதாக கொள்ள முடியாது. சென்னை,கோவை பேச்சுத் தமிழைப் போல் இவர்களின் உச்சரிப்பும்,சொற்களும் வேறுபடுகின்றன. அதற்கு காரணம் அமெரிக்காவில் பிரிட்டிஷ் காரருடன் ஐரோப்பியர்களும் பின்னர் ஆபிரிக்கர்களும் குடியேறியதால் இந்த நிலை ஏற்பட்டு ஒரு கலவையானது. ஆனாலும் எழுத்துக்களின் உச்சரிப்பு சரியானதாகவே இருக்கிறது என்பதால்,அவர்களின் வாய் அசைவை நேரில் பேசும் போதும், சினிமா,தொலைக்காட்சி நிகழ்சிகளின் போதும், ஒலி வடிவ புத்தகங்களை(audio books) நன்றாக கவனித்து கேட்பதாலும் திருத்திக் கொள்ள முடியும்.சரியோ தவறோ, பேச்சையும் செயலையும் வைத்தும் வெளித் தோற்றத்தை வைத்துமே ஒருவரின் குணத்தை இந்த உலகம் மதிப்பிடுகிறது. இதனாலேயே அமெரிக்க நாட்டுக்கும், ஆஸ்திரேலிய நாட்டுக்கும் செல்லும் பலர் தங்கள் ஆங்கில பேச்சினால் சில கஸ்டங்களை அனுபவிக்கிறார்கள்.தமிழைப் போல் பல மொழிகளில் அந்த எழுத்துக்களை அப்படியே சேர்த்து உச்சரிப்பதன் மூலம் சொற்களை உச்சரிக்க முடியும்.ஆனால் ஆங்கிலத்தை அப்படியே எழுத்துக்களை சேர்த்து உச்சரிக்க முடியாது.ஆங்கில உச்சரிப்பிற்கு சில விதி முறைகள் வகுக்கப்பட்டுள்ளன.ஒவ்வொரு சொல்லும் வெவ்வேறு விதமாக உச்சரிக்கப்படுகிறது.
இது தவிர உலக நாடுகளின் தொடர்பு மொழியாக பயன்படும் ஆங்கிலம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலை என்ன?.பல சிற்றரசகளால் பிரித்தானியா பல நாடுகளாக பிரிந்திருந்ததும் அப்போது இருந்த பிரதேச மொழியும், வட ஒல்லாந்து பிரீசியன் (Frisien, Frisien language)நாட்டில் இருந்து சென்ற மொழியும்,ஜேர்மனின் ஒரு பகுதியினர் அங்கு சென்றதாலும் கலந்து ஏற்பட்ட மொழி ஆங்கிலம் ஆயிற்று.இன்றும் பிரித்தானியாவின் சில புற நகர் பகுதிகளில் பழைய ஆங்கிலம் பேசப்படுகிறது. உதாரணமாக sun,run,grund,friend போன்றவை சுன்,ருன்,குருண்ட் என உச்சரிப்பதால், பல பிரித்தானியர்கள் அதை புரிந்து கொள்ள முடியாதிருக்கிறது.இந்த மொழி, ஜேர்மன் மொழிக் குடும்பத்தில் இருப்பதும், இன்றைய ஆங்கிலத்தில் லத்தின்,பிரிசியென் போன்ற பல மொழிகள் கலந்திருப்பதை காணவும் முடியும்.
இதே போல் டென்மார்க்,சுவிற்செலாந்து,ஆஸ்தீரியா,ஜேர்மன் நாடுகளில் ஜேர்மன் மொழி பேசப் பட்டாலும், ஜேர்மனியர்களால் மற்றைய நாடுகளில் பேசப்படும் ஜேர்மன் மொழியை புரிந்து கொள்ள முடியாது கஸ்டப்படுகிறார்கள்,நேர்காணல் போன்றவற்றில் மொழிபெயர்ப்பு செய்கிறார்கள்.ஏன்,ஜேர்மன் நாட்டில் உள்ள முனிச் நகரில் பேசப்படும் ஜேர்மன் மொழியை மற்றைய நகரங்களில் உள்ள ஜேர்மனியர்கள் புரிந்து கொள்ள முடியாது,அந்த மொழியை ஜேர்மன் என்று கூறாது பயரிஷ் என்றே குறிப்பிடுகின்றனர்.
இதே போல் மூ நாட்டில்(லெ-மூ-ரியா) இருந்து சேர,சோழ,பாண்டிய நாடுகள் உருவானது போல்,மூ நாட்டு மொழியான தமிழில் இருந்து மலயாளம், கன்னடம், தெலுங்கு,துளு,குறுக்,கோலமி,பிராகுயி போன்ற மொழிகள் உருவாகின.இன்றும் பழைய தமிழ் சொற்கள் மலையாளத்தில் பேசப்பட்டு வருவதை காண முடியும். அதனால் தான் மலயாளிகள் தமிழைக் கற்றுக் கொண்டு பேசும் போது தமிழக தமிழர்களை விட சிறப்பாக தமிழை உச்சரிக்கிறார்கள்.இன்றும் அவர்களிடையே வெள்ளம்,சோறு போன்ற பழைய தமிழ் சொற்கள் பாவனையில் உள்ளன.
தமிழர்களும் தென் இந்தியர்களும் ...ing ஐ அதிகமாக பேசும் போது சேர்த்துக் கொள்கிறார்கள்.இத்துடன் t,d,r,th,v,w,sh உச்சரிக்கும் போதே அதிக தவறை செய்கிறார்கள். இந்தியை பேசுவோர் s,sh,v,w,r போன்றவற்றில் அதிக தவறுகளை செய்கிறார்கள்.வேறு சிலரோ school,start போன்றவற்றை isschool,isstart என சொல்வதை நாம் காண்கிறோம்.
புத்தகங்கள்,பத்திரிகைகள் சத்தமாக படிப்பது,சினிமா தொலைக்காட்சி பார்க்கும் போது வாய் அசைவையும்,உதடுகளின் அசைவை அவதானிப்பதும்,ஒலிவடிவ புத்தகங்களை அவதானித்து கேட்பதும் ஆங்கில உச்சரிப்பை சரி செய்ய உதவும்.முடிந்தால் பேசுவதை பதிவு செய்து திரும்ப கேட்கும் போது தவறுகளை கண்டறிய முடியும்.நன்றாக பேச வரும் வரை வேகமாக பேசக் கூடாது. school,start,question,burger போன்ற சில சொற்களை வைத்தே நாம் தமிழர்கள் என உடனே கண்டு கொள்ள முடியும்.
குழந்தைகள் ஒரு மொழியை படிப்பதற்கும் பெரியவர்கள் கற்பதற்கும் பல வேறுபாடுகள் உண்டு. பெரியவர்கள் ஒரு மொழியை கற்க தொடங்கும் போது உடனேயே கடுமையான இலக்கணங்களுக்குள் நுழையக் கூடாது. சிறிய சொற்தொடர்களை முதலில் கற்க ஆரம்பிக்க வேண்டும். ஆங்கிலம் பேசும் நாடுகளில் மொழியை கற்க தொடங்கும் பெரியவர்களுக்கான பாடங்களில் முதலில் இலக்கணம் கற்றுக் கொடுக்காது,சிறிய சொற் தொடர்களை படித்து அறிந்து கொள்ளும்படி சொல்கிறார்கள். பின்னர் அத் தொடர்களுடன் இலக்கணங்களை சேர்த்து வசனங்களை அமைக்க கற்றுக் கொடுக்கிறார்கள்.
எழுதும் போது தவறு ஏற்படுமாயின் அதை திருத்திக் கொள்ள முடியும்.ஆனால் பேசும் போது தவறுகள் ஏற்படுமாயின்?பல் போனால் சொல் போச்சு என்பது போல் ஒரு முறை விட்ட வார்த்தையை திரும்ப பெற முடியாது. எந்த மொழியானாலும் அதே மொழியில் சிந்தித்து பேசும் போது தவறுகள் குறையும்.தமிழில் சிந்தித்து தமிழில் பேச வேண்டும்.தமிழில் சிந்தித்து ஆங்கிலத்தில் பேசும் போது,நாம் தமிழை அப்படியே மொழி பெயர்ப்பதால் பல தவறுகள் ஏற்பட வாய்ப்புண்டு.எந்த மொழியையும் கலப்பின்றி பேசுவதால்,அதாவது தமிழையும் ஆங்கிலத்தையும் கலந்து பேசுவதை தவிர்க்க வேண்டும்.தமிழ் பேசும் போது தமிழிலும்,ஆங்கிலம் பேசும் போது ஆங்கிலத்திலும் மட்டுமே பேச வேண்டும். நமக்கு ஒரு மொழி தெரியும் என்பதை மற்றவர்களுக்கு காட்ட வேண்டும் என்பதற்காக ஆங்கிலத்தை தமிழுடன் கலந்து பேசுவதால் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளுகிறோம். நம்மில் பலர் ஆங்கிலம் தெரியா விட்டால் நம்மை இழிவாக பட்டிக்காடாக, பாமரனாக,கிராமத்தவனாக எண்ணுவார்கள் என நினைத்து ஆங்கில வார்த்தைகளை சேர்த்து பேசுகிறார்கள். அதனால் மற்றவர்கள் நம்மை ஏற்றுக் கொள்கிறார்களோ இல்லையோ,நம் மொழி அறிவு ஆட்டம் போடுகிறது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
பேசுவதற்கு வெட்கப்படுவதை நிறுத்திக் கொண்டு தொடக்கத்தில் வேகமாக பேசக் கூடாது. பிறக்கும் போது யாரும் எல்லாம் தெரிந்து கொண்டு பிறப்பதில்லை என்பதை நினைவில் கொண்டு, வாய் உதடு அசைவுகளை கண்ணாடியின் முன் நின்று சிறிது சத்தமாக பேசி பழகுவது அதிக பலனை தரும்.
பிரெஞ்சுக்காரன்,ஜேர்மன்காரன் தொலைக்காட்சியில் மட்டுமல்ல எங்கும் தங்கள் மொழியை தப்பாக பேசினால் உச்சரித்தால் சுட்டிக் காட்டி மொழிபெயர்ப்பாளர்களை அழைக்கிறான்.ஆனால் நம் நாட்டில் தமிழை தப்பாக உச்சரித்தால் பெருமைப்பட்டுக் கொள்கிறான் தமிழன். ஆனால் ஆங்கிலம் தப்பாக உச்சரிக்கப்பட்டால் விமான நிலையத்தில் தடுத்தி நிறுத்தி விசாரணை செய்கிறான் ஆங்கிலேயன். நாடெங்கும் மொழிப் பயிற்சி பள்ளிகளையும்,வகுப்புக்களையும் இலவசமாகக் கூட அங்கே நடத்துகிறார்கள். ஆண்டு தோறும் அமெரிக்க நாட்டில் ஆங்கில உச்சரிப்பு போட்டி கூட நடத்துகிறார்கள். ஆனால் நம் நாட்டில்? உங்களுக்கே அது தெரியும்.
நம் தவறுகளை மற்றவர்கள் கண்டு சிரிப்பதை விட,அந்த தவறுகளை நாமே முதலில் கண்டு திருத்திக் கொள்வதே சிறப்பானது.
மீண்டும் சந்திக்கிறேன்....................................சக்தி.
sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Re: அறிவை வளர்த்துக் கொள்வோம்.ஆங்கிலமும் த(தி)மிங்கிலமும் தமிழும் படும்பாடு.
நம் தவறுகளை மற்றவர்கள் கண்டு சிரிப்பதை விட,அந்த தவறுகளை நாமே முதலில் கண்டு திருத்திக் கொள்வதே சிறப்பானது.
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» அறிவை வளர்த்துக் கொள்வோம் - மருத்துவம்
» பொது அறிவை வளர்த்துக் கொள்வோம்.கணினி கேள்வி பதில் பகுதி - 4
» அறிவை வளர்த்துக் கொள்வோம்.கணினி கேள்வி பதில். பகுதி - 4 ன் பதில்கள்
» தமிழும் ஆங்கிலமும்... சில அதிசய ஒற்றுமைகள் ... !
» கேப்டனின் அறிக்கை. படித்து அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள் மக்கழே
» பொது அறிவை வளர்த்துக் கொள்வோம்.கணினி கேள்வி பதில் பகுதி - 4
» அறிவை வளர்த்துக் கொள்வோம்.கணினி கேள்வி பதில். பகுதி - 4 ன் பதில்கள்
» தமிழும் ஆங்கிலமும்... சில அதிசய ஒற்றுமைகள் ... !
» கேப்டனின் அறிக்கை. படித்து அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள் மக்கழே
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|