TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:29 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:23 pm

» Simon Daniel
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 23, 2024 4:19 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Sep 22, 2024 7:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


சமூகத்தின் குறைகள் 20 பெண்களுக்கு மட்டும்

2 posters

Go down

சமூகத்தின் குறைகள் 20 பெண்களுக்கு மட்டும் Empty சமூகத்தின் குறைகள் 20 பெண்களுக்கு மட்டும்

Post by sakthy Wed Sep 07, 2011 4:30 pm

சமூகத்தின் கறைகள் துகிலுரிப்பு 20 பெண்களுக்கு மட்டும்

உள்ளதைச் சொல்வேன் சொன்னதை செய்வேன் வேறொன்றும் தெரியாது.
உள்ளத்தில் இருப்பதை வார்த்தையால் மறைக்கும் கபடம் தெரியாது.

இன்று இந்த அவசர உலகில்,எல்லாமே வியாபாரமாகி விட்ட நிலையில் உலகெங்கும் பிரச்சனைகளும் நோய்களும் அதிகரித்து பரவி வருகின்றனவானாலும்,அதற்குரிய தீர்வுகள் மிக மந்தமாகவே வருகின்றன. பிரச்சனைகள் தீர்வதற்கு பலர் தடையாகவும், தீர்க்க விரும்பாததாலும் தான் தீர்க்கப்படாமலே இருந்து வருகின்றன. நான் என்ற அகங்காரம், ஆணவம்,பதவி,பண வெறி,தவறான வழிகாட்டல் எல்லாம் சேர்ந்து கொள்வதால் அப்பாவிகள் அமைதியை விரும்புகின்றவர்கள் பாதிப்பிற்குள்ளாகி ஏக்கத்துடனும்,ஈழத்தில் வாழும் தமிழர்களைப் போல், கவலையுடனும் பயத்துடனும் வாழ்ந்து வருவதை நாம் காண முடிகிறது. அதே போல் புதிய புதிய நோய்களும் தினமும் வந்து வாட்டி அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில்,இன்று பொதுவாக பெண்களுக்கு ஏற்படும் நோய்களில் சருமப் புற்றுநோய்,குடற் புற்றுநோய்க்குப் அடுத்து மூன்றாவது இடத்தில் கற்பப்பை மற்றும் மார்பக புற்று நோய், நின்று கொண்டு பாடாய் படுத்துகிறது. பலர் தாங்களாகவே அறிகுறிகளைக் கண்டு கொண்டு மருத்துவரிடம் சென்றாலும் கூட, குணப்படுத்துவதில் சிக்கலையும்,உயிராபத்தையும் விளைவிப்பதற்கு காரணம், தாமதமாக கண்டறியப்படுவதும்,புற்று பற்றிய விழிப்புணர்வின்மையும் தான் என்கிறார்கள் மருத்துவர்கள். மார்பகப் புற்று திருமணமாகாத இளம் பெண்களுக்கும்,குழந்தைகளுக்கும், ஆண்களுக்கும் மிக அரிதாகவே காணப்படுகிறது என்றாலும் அனைவருக்கும் வருவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
பருவமடைந்த இளம் பெண்கள் உட்பட அனைவரும் மாதந்தோறும் தாங்களாகவே பரிசோதனை செய்து(breast self examination-BSE) பார்ப்பது நலம். இந்த பரிசோதனையை எப்படி எப்போது பார்ப்பது?தொடக்கத்தில் கஷ்டமாகவும் சங்கடமாகவும் இருப்பினும் நாமே நமக்கு முதல் மருத்துவர் என்பதை எண்ணிப் பார்த்தால் எல்லாமே சரியாகி விடும்.பலர் வெட்கம்,சங்கடம் போன்றவற்றால் மருத்துவரை அணுகாமல் விட்டதும், மார்பின் வெளிப்புறங்களில் தொடங்கி வளர்ந்து மார்பு முழுவதும் பரவி இரத்தத்திலும் ஊடுருவி விடுவதாலும், கடைசிக் கட்டத்தில் மருத்துவரை அணுகியதாலும் குணப்படுத்த முடியாமல் அறுவை சிகிச்சை வரை சென்றும் பலனளிக்காமல் உயிருக்கு ஆபத்தும் ஏற்பட்டிருக்கிறது.
மாதம் ஒருமுறை மாதவிடாய் வந்த ஒரு வாரத்தின் பின்னர் கண்ணாடி முன் நின்று மார்பகங்களின் மாற்றங்களை அவதானிப்பதும்,கையை உயர்த்தியும்,பக்க வாட்டிலும் பார்க்கும் போது ஏதாவது வித்தியாசங்கள் தெரிந்தால், சிவந்து காணப்பட்டால், கட்டி,வீக்கம்,வலி, எரிச்சல் இருந்தால்,உங்கள் முதல் மூன்று விரல்களினாலும் கைப் பகுதியில் இருந்தும் வயிற்றுப் பகுதியில் இருந்தும் மெதுவாகவும் அழுத்தியும் முழு இடங்களையும் வட்டமாகவும் தடவி உணர்ந்து பார்க்கும் போது ஏதாவது மாற்றம் இருப்பின்,முலைக் காம்பில் இருந்து தண்ணீர்ப் பதமான,மஞ்சள் நிறமான திரவம் வருமாயின், மருத்துவரை அணுகுவது நலம். மாதம் ஒருமுறை பார்ப்பதால் மாற்றங்களை உங்களால் உணர,காண முடியும்.ஆனாலும் சிறு கட்டிகள் புற்றுக்கு அறிகுறியற்றதாகவும் இருக்கலாம் நாட்பட்ட புற்றாகவும் இருக்கலாம் என்பதனால் அச்சம் இன்றி மருத்துவரிடம் காண்பிப்பது நல்லதே.. நம்மை நாம் காப்பாற்ற இந்த பரிசோதனை ஒரு சிறிய உதவியே தவிர,வேறில்லை.மருத்துவர்கள் முதலில் முதற்கட்ட ஆய்வும்(Breast Biopsy) பின் மம்மோக்ரமினாலும்(mammograms) கண்டறிகிறார்கள்.
சமீப கால ஆராய்ச்சிகளின்படி வயது,பாலூட்டாமை,பாலியல்,குழந்தைப்பேறு,கொழுப்பு நிறைந்த உணவு,மது,புகையிலை,சில மருந்துகளின் தாக்கம், உடற்பருமன், கதிரியக்கம்,நேரமாற்று வேலைகள்(Shift work)குடும்பத்தில் யாருக்காவது இருப்பது போன்ற பல காரணங்களால் வரக் கூடும் என்று கண்டறியப்பட்டுள்ளது. வெள்ளம் வரு முன் அணை கட்ட வேண்டும் என்பது போல், பயம்,வெட்கத்தை ஒதுக்கி வைத்து விட்டு ஏதாவது அறிகுறிகள் காணப்பட்டால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லதே.

இன்று அதிக அளவில் இளம் பெண்களிடம் இருக்கும் ஒரு பெரிய பிரச்சனை கருக்கலைப்பு(Abortion ).ஒன்று சில காரணங்களுக்காக தாமாகவே எடுத்துக் கொள்ளும் முடிவு,இரண்டாவது கருச்சிதைவு(spontanious abortion) எனப்படும் தானாகவே கலைந்து விடுவது.இன்று அரைவாசிக்கு மேற்பட்ட கருக்கலைப்புக்கள் சட்டவிரோதமாக, தகுதியற்றவர்களால் அல்லது பாதுகாப்பற்ற முறையில் செய்யப்படுகின்றன என்பது கண்டறியப்பட்டுள்ளது.இதனால் உயிர் ஆபத்தும் நிகழ்வதை நாம் அடிக்கடி ஊடகங்களில் பார்க்கின்றோம்.
இந்தக் கருக்கலைப்புகளில் சில தாயின் உடல்நலன் கருதியும், வேறு மருத்துவ காரணங்களாலும் செய்யப்படுகின்றன.மற்றவை கல்வி,வேலை,பொருளாதாரம்,தகாத உறவு,பாலியல் வல்லுறவு,காதல், போன்ற காரணங்களாலும்,குழந்தை பெற்றுக் கொள்வதை விரும்பாமல் அல்லது தள்ளிப் போடவும் செய்யப்படுகின்றன.கரு உருவாகி முதல் 20 வாரத்திற்குள் வெவ்வேறு முறைகளில் செய்யப்படுவது சாதாரணமானதும்,20 வாரங்களுக்குப் பின் 24 வாரங்கள் வரை செய்யப்படுவது ஒரு கொலைக்கு சமமானது என்பது சிலரின் வாதமாகவும்,இன்றும் கூட சில மத பிரிவுகளில் வாதப் பிரதி வாதங்களாக இருந்து வருவதை காண முடிகிறது.
இந்தியாவில் 1972 ல் கருக்கலைப்பு சட்டரீதியாக்கப்பட்ட போதிலும்,ஒரு பெண் 18 வயதிற்கு மேற்பட்டிருந்தால் தன் இஷ்டப்படி,எழுத்துமூல சம்மதத்துடன் கருவை கலைக்க முடியும் என்ற போதிலும், சட்டவிரோதமாகவும், அனுபவ்மற்ற தகுதியற்றவர்களினாலும் கருக்கலைப்பு செய்யப்பட்டு பல்ரின் உயிர் பலி வாங்கப்படுகிறது.தகுதியற்ற ஒரு மருத்துவரினால் கருக்கலைப்பு செய்யப்படும் போது முட்டைகள், கருக்குழாய் என்ற பலோப்பியன் குழாய் சேதமடையக் கூடுமாதலால் பின்னர் கருத்தரிக்க முடியாமலேயே போய்விட வாய்ப்புண்டு என்பதால் அனுபவமற்ற மருத்துவர்களிடம் செல்லாமல் தவிர்க்க வேண்டியது அவசியம்.
காக்கைவலிப்பு,நிறுத்த முடியாத வாந்தி,இதய நோய்,மார்புப் புற்றுநோய், தொற்றுநோய்,சர்க்கரை நோய்(diabetes mellitus),கருப்பை கோளாறு,மருந்துகளின் தாக்கம்,தைரோயிட் போன்றவற்றாலும் மற்றும் சாதாரணமாக ஏற்படும் கருப்பைக் கோளாறுகள்,கட்டி,திசை மாறி கரு வளர்தல், மது,போதைப் பொருள்,புகைத்தல் போன்ற வேறு காரணங்களாலும் கருச்சிதைவு ஏற்படுகிறது.இது தவிர தவிர்க்க முடியாத சில மருத்துவ காரணங்களான கருவில்,கருப்பையில் எற்பட்டிருக்கும் பாதிப்பு,தாயின் உயிருக்கு ஆபத்து போன்றவற்றால் செய்யப்படும், Medical Termination of Pergnancy உம், சுகாதாரக் குறைவால் ஏற்படும் செப்டிக்(septic,infectious,abortion) கருச்சிதைவு போன்றவையும் கருச்சிதைவுகளே ஆகும்.
கரு உண்டானது உறுதியானதும் முதல் மூன்று மாதங்கள் உடலுறவை நிறுத்துதல்(முதல் கருத்தரிப்பானால் நிச்சயம் கவனிக்கப்படல் வேண்டும்.),அது போல் குழந்தை பிறப்பதற்கு முன் மூன்று மாத காலம் தவிர்ப்பதும், அதனால் தான் வளைகாப்பை அறிமுகப் படுத்தினார்களா? பயணத் தவிர்ப்பு,அதிக பழுவுள்ள வேலைகளை தவிர்த்தல்,பெண் மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுதல்,தொற்று நோய் பற்றி கவனம்,இரத்த சர்க்கரை கண்டறிதல்(diabetes), preeclamsia(கர்ப்ப காலத்தில், அதிக குளுக்கோஸ் புரதமும் சிறுநீரில் காணப்பட்டு, உயர் இரத்த அழுத்தமும் முகம் கை வீக்கமடைந்தும் இருந்தால் preeclamsia என்ற நோயாக கருதலாம்.)போன்றவற்றில் கவனம் தேவை.எல்லாவற்றுக்கும் மேலாக பலருக்கு உளவியல் தாக்கம் உலகெங்கும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.அதனால் மகிழ்ச்சி,அமைதி, நல்ல உணவு, தூக்கம் அவசியம்.
கருச்சிதைவு ஏற்பட்டவர்கள் மருத்துவரிடம் அதற்கான காரணங்களை அறிந்து நடந்தால் அடுத்த தடவை கருச்சிதைவு ஏற்படுவதை தவிர்த்துக் கொள்ளலாம்.

இது தவிர,தற்போது கற்பப் புற்று நோயும் அதிகரித்து வருவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.இந்த கற்பப் புற்று நோயில் Ovarian,Fallopian அல்லது tubal,cervical,என வெவ்வேறு விதமான புற்று நோய்கள் இன்று பரவலாக இருந்தும்,cervical என்ற கருப்பை வாய் புற்று பலரிடம் இருப்பதும்,இருந்து உயிரிழப்பு ஏற்பட்டதும் காணப்பட்டுள்ளது. இதற்கு Human pappiloma virus (HPV)காரணம் என்பது காணப்பட்டிருந்தாலும் கூட, இந்த வைரஸ் தாக்காமல் இருப்பதற்கு தடுப்பூசி இருந்தும் பலருக்கு தெரியாமல் போனது விந்தையே தான். இதை விட பலருக்கு ஏற்படுவதற்கு அவர்களின் சுகாதாரக் குறைவும்,பல ஆண்களுடன் இருக்கும் தொடர்பும்,சிறுவயதுத் திருமணம் போன்றவையும் காரணமாகி விடுகிறது. அதனால் குளியல் அறைக்குள் குழிக்கும் நகரப்புற பெண்கள் மட்டுமல்ல, திறந்த வெளியில் ஆற்றிலோ கிணற்றிலோ குழிக்கும் புறநகர்,கிராம பெண்களும் மறைக்கப்பட்ட உள் உறுப்புக்களை நன்கு கழுவி சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம்.இது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் பொருந்தும். நம் வேலை முடிந்து விட்டது என்று உடலுறவிற்குப் பின் மறு பக்கம் திரும்பி குறட்டை விட்டு தூங்கி விடாது நன்கு கழுவி சுத்தம் செய்து விட்டு தூங்கலாமே..

இதைவிட நம்நாட்டு பெண்களிடம் இருக்கும் சில பழக்க வழக்கங்களை சொல்லியே ஆக வேண்டும். பருவமடைந்தவுடனும்,பிரசவத்தின் பின்பும் நம் அம்மாக்கள் அன்பு,பாசம் அதிகமாக காட்டுவதாக எண்ணி அதிக உணவு வகைகளை எண்ணெயில் செய்து கொடுப்பதுடன்,படுக்கையில் இருந்து எழுந்து வேலை செய்வதற்கும் அனுமதிப்பதில்லை..சாதாரண உணவு வழக்கத்துடன் பழக்கப்பட்ட உடம்பு, திடீரென அதிக உணவுப் பழக்கம் வந்ததும் அதை ஏற்றுக் கொள்ளாது சங்கடப்படுகிறது. எங்கள் வேலைக்கு,தேகப் பயிற்சிக்கு தேவையான சக்தியை பெறக் கூடிய உணவை எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர,நம் பெண் பச்சை உடம்பு என்று கூறி அதிக கொழுப்பு உணவை திணிப்பதால்,அவை செமிபாடடையும் போது தேவைக்கேற்றதை எடுத்துக் கொண்டு மிகுதியை எங்கோ கொழுப்பாக சேமித்து விடும்.இதனாலும்,ஹார்மோன் அதிக சுரப்பாலும்,உடற்பயிற்சி இன்மையாலும் தான் பெண்கள் பருவ மடைந்த பின்னும் பிரவசத்தின் பின்னும் எடையை கூட்டிக் கொள்கிறார்கள்.அதிக கார்போகைட்ரேட் இரத்த சர்க்கரையை அதிகரிக்க,அதை சமநிலைப்படுத்த அதிக இன்சுலின்(Insulin resistance) உருவாக உடல் எடை கூடுகிறது.இரத்த குளுக்கோசை, இன்சுலின் என்ற ஹோர்மோனால் மாற்ற முடியாமல் போக பங்கிறியஸ் என்ற கணையம் மேலும் கூடுதலான இன்சுலினை சுரக்கும் போது, இரத்தத்தில் இன்சுலின் கூடி விடும்போது, (அதிக இன்சுலின்,hyperinsulinemia.)பங்கிறியாசால் மேற்கொண்டு இன்சுலினை சுரக்க முடியாமல் போகும் போது, இன்சுலின் ரேஸிஸ்டான்ஸ் ஆகி,இரத்தத்தில் குளுக்கோஸ் அதிகரித்து பல பிரச்சனைகளை தோற்றுவிக்கிறது.
இது தவிர உருளைக்கிழங்கு போன்ற(high glycemic index or dietery glycemic index) மாச்சத்து கூடிய உணவு வகைகள் சாப்பிட்ட சிறிது நேரத்தில் இரத்தத்தில் குளுக்கோசை அதிகரித்து அதிக இன்சுலினை சுரக்க செய்து விடும் என்பதால் low glycemic index உணவுகளான மாச்சத்து குறைவான நார்சத்து கூடிய உணவுகளை எடுப்பது சிறந்தது. மேல்நாடுகளில் பிரசவம் முடிந்த மூன்றாம் நாள் வேலை செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள். தனியாக வாழ்வதால் அம்மாக்கள் பலருக்கு உதவிக்கு வர முடிவதில்லை,வேலைக்காரர்களையும் அவர்கள் வைத்துக் கொள்வதில்லை.வேலைக்கு வைத்துக் கொள்ளும் ஒரு சிலர், அதிக பணத்தை,அலுவலகங்களில் கொடுக்கப்படும் அடிப்படை சம்பளத்தை, சம்பளமாக கொடுக்க வேண்டும் என்பதால் ஒரு சில மணி நேரம் மட்டுமே அவர்களைப் பயன்படுத்துகிறார்கள்.நம் நாட்டில் சமைக்க,பாத்திரம் கழுவ என்றும்,அதை ஒரு நாகரீகமாகவும் எண்ணி வேலைக்காரர்களை பலர் வைத்துக் கொள்கிறார்கள்.வீட்டுக்கார அம்மா எதுவித வேலையும் செய்யாது தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன் நொறுக்குத் தீனியுடன்,மெகா சீரியல் பார்த்துக் கொண்டிருந்தால் எப்படி எடை கூடாமல் இருக்கும்.நாம் மேல்நாட்டவர்களிடமிருந்து,அதுவும் அமெரிக்காவில் இருந்து என்றால் சொல்லவே வேண்டாம், நல்லவற்றை விட்டுவிட்டு கெட்டவற்றை,தேவையற்றவற்றை எல்லாம் எடுத்து நாகரீகம் என்று எண்ணி பின்பற்றுவோம். திருந்தவே மாட்டோமா?
பல நோய்களுக்கும் குணப்படுத்த முடியாமற் போவதற்கும் விழிப்புணர்வு இன்மையே காரணம் என்பது நம் நாட்டின் விதி என்றே சொல்ல வேண்டும்.நம் நாட்டின் மக்கள் தொகையில் 70 வீதத்திற்கு மேற்பட்டோருக்கு அன்றாட தேவைக்குரிய செய்திகள் எவையும் போய் சேர்வதில்லை.முக்கியமான எல்லா ஊடகங்களையும் சினிமா, அரசியல்,சாமியார்களின் போதனைகள்,பொழுதுபோக்குகள் ஆக்கிரமித்துக் கொள்வதாலும், நல்ல ஊடகமாக திகழும் இணையத்தளம் புறநகர் கிராம மக்களுக்கு சென்றடைய அல்லது அவர்களால் அதை எண்ணிப் பார்க்கவும் முடியாதிருப்பதாலும், இல்லையேல் அதை தேவையற்ற பாலியல்,விளையாட்டு,சினிமா போன்றவை எடுத்துக் கொள்வதாலும் முக்கியமான பல செய்திகள் சென்றடைய முடியாது எட்டாக்கனியாகி விடுகிறது.இதனால் தான் சுலபமாக தீர்க்கப்படக்கூடிய பிரச்சனைகள்,குணப்படுத்தக் கூடிய நோய்கள் பற்றிய விழிப்புணர்ச்சி எதுவும் எவரையும் முக்கியமாக கிராம மக்களை சென்றடையாது மூட நம்பிக்கைகளிலேயே மூழ்கிக் கிடக்கிறார்கள். நாம் மட்டும் நல்லவர்களா என்ன.நமக்கு தெரிந்தவற்றை நாம் யாரிடமாவது தெரியாதவர்களிடம் அல்லது கிராமத்து மக்களிடம் அவர்களைக் சந்திக்கும் போது சொல்கிறோமா? வேற்றுக்கிரக வாசிகள் போல் பேசாது போய் விடுகிறோமே.
கல்வியும்,அறிவும் அள்ள அள்ள குறையாதது.கொடுத்துக் கொண்டே இருந்தால் பெற்றுக் கொண்டே இருப்போம்.யாருக்கு? பாத்திரம் அறிந்து பிச்சை இடு.
பல நாடுகளில் இரத்தப் பரிசோதனை போன்ற சோதனை முடிவுகளை நோயாளர்களே தெரிந்து கொள்ள பயிற்சி கொடுக்கிறார்கள். நாம் சிலவற்றையாவது தெரிந்து கொள்ளலாமே.

நீங்கள் அலுப்பு மருந்தை சாப்பிட்டு விட்டு சோம்பல் முறித்து தயாரானால், மேலும் சில முக்கிய, குறிப்பு எடுத்து வைக்க வேண்டிய சில மருத்துவ தகவல்களை, நாளை தருகிறேன். இல்லை படுத்து தூங்க விரும்பினால்?
மீண்டும் அடுத்த வாரம்...................Dr. சக்தி.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

சமூகத்தின் குறைகள் 20 பெண்களுக்கு மட்டும் Empty Re: சமூகத்தின் குறைகள் 20 பெண்களுக்கு மட்டும்

Post by balajinatesan Wed Sep 07, 2011 5:20 pm

உண்மையில் இது நலமான செய்தி
balajinatesan
balajinatesan
உதய நிலா
உதய நிலா

Posts : 8
Join date : 02/09/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum