TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


சமூகத்தின் கறைகள் 15 ஆண்மைக்குறைவும்,பெண்மைக்குறைவும்

Go down

சமூகத்தின் கறைகள் 15  ஆண்மைக்குறைவும்,பெண்மைக்குறைவும் Empty சமூகத்தின் கறைகள் 15 ஆண்மைக்குறைவும்,பெண்மைக்குறைவும்

Post by sakthy Thu Aug 18, 2011 5:13 pm

சமூகத்தின் கறைகள் 15 ஆண்மைக்குறைவும்,பெண்மைக்குறைவும்.

உள்ளதைச் சொல்வேன் சொன்னதை செய்வேன் வேறொன்றும் தெரியாது.
உள்ளத்தில் இருப்பதை வார்த்தையால் மறைக்கும் கபடம் தெரியாது.

சமீபத்தில் ஒரு தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி பார்த்தேன்.அதன் விளைவே இந்தக் கட்டுரை.உலகெங்கும் எல்லாவற்றுக்கும் விளம்பரங்கள் இருந்தாலும் கூட மருத்துவ விளம்பரங்கள் சில, நம் தமிழ்நாட்டில் சற்று அதிகமோ என்று எண்ணத் தோன்றுகிறது.அந்த விளம்பரத்தை பார்த்த போது இப்படியும் மருத்துவர்கள் சேவை செய்கிறார்களா, என்று எண்ணி மகிழ்ச்சி அடைந்த போது,அது பொய்யாகி, விளம்பரமாகிப் போனதில் சிறிது வருத்தமே.
ஒரு உயிரினத்திற்கு உடம்பே முதல் மருத்துவர்.சக்தி தேவைப்படும் போதும்,தண்ணீர் தேவைப்படும் போதும் பசிக்க,தாகம் ஏற்பட வைக்கிறது,உணவு உண்ணும் போது,அதிகமாகி விட்டால் போதும் என்கிறது,காயம் பட்டதும் இரத்தத்தை கட்டுப்படுத்த,குணப்படுத்த ஓடி வருகிறது,மூச்சு விட முடியாத போது திணறிகிறது,வலி வரும் போது கை ஓடுகிறது,உடம்பில் உள்ள வலிகள் நமக்கு மட்டுமே தெரிகிறது.உடம்பு முதல் மருத்துவனாக இயங்கும் போது, வெளியே உள்ள டாக்டர் இரண்டாவது மருத்துவராகிறார்.எனவே ஒவ்வொருவரும் உடம்பில் ஏற்படும் நோய்களையும், குறைபாடுகளையும்,அதற்கான தடுப்பு முறைகளையும் ஓரளவாவது தெரிந்திருப்பது நல்லதே.உலகெங்கும் மருத்துவர்களின் தவறுகளினால், அசட்டையீனங்களால் பல மரணங்கள்,பக்க விளைவுகள் ஏற்படுகின்றன என்பதை ஆய்வு அறிக்கை சொல்வது மட்டுமல்ல,நீங்களும் அறிவீர்கள். எனவே இன்று, நீங்கள் பார்த்ததும், அறிந்தவையும் தான் என்றாலும்,சில தெரியாதவ்ர்களுக்காக,அதிகம் எழுத இடம் போதாது என்பதால்,ஒரு சில குறிப்புக்கள்.....................
ஆண்மைக்குறைவு(male impotence or erectile dysfunction ),நீங்கள் எத்தனை இணையத்தளங்களில், புத்தகங்களில்,தொலைக்காட்சிகளில் படித்தும்,கேட்டும் இருப்பீர்களானாலும்,பல திருமண முறிவுகளுக்கும், பிரிவுகளுக்கும், மனக்கஷ்டங்களுக்கும்,வெறுப்புகளுக்கும் இது ஒரு காரணியென்பதை அறிவீர்களா?ஒரு நிமிடம் எண்ணிப் பாருங்கள்.குடும்பத்தில் பிரிவு,பாலியல் துன்புறுத்தல்கள்,கொலை,மன உளைச்சல், இப்படி அத்தனைக்கும் இந்த உடலுறவும்,ஆண்மைக்குறைவும் காரணம் என்பதை அறிவீர்களா?
முதலில் ஆண்மைக்குறைவு என்றால் என்ன? பலர் ஆண்மைக்குறைவையும்,குழந்தை பிறக்காமல் போகும் மலட்டுத்தன்மையையும்(infertility)போட்டுக் குழப்பிக் கொள்கிறார்கள்.இரண்டிற்கும் சம்பந்தம் எதுவும் கிடையாது.மனத்தில் ஏற்படும் சலனத்தின்,ஆசையின்,உணர்ச்சி வசப்படுவதின் போது , ஆணின் இரத்தோட்டம்(blood circulation)ஒழுங்காக இல்லாமால், ஆண்குறிக்கு இரத்தம் குறைவாக போக,(erectile dysfunction=ED),அதாவது மூளையின் உணர்வு நாளங்கள்(nerves) இராசயண செய்திகளை ஆண்குறியின் நாளங்களுக்கு அனுப்ப, இரத்த ஓட்டம் அதிகரித்து,விந்து தள்ளுதல்(ejaculation) நடைபெறும் செயலுக்கு தடையாக,இரத்த ஓட்டம் குறைவதால்,அல்லது தடைப்படுவதால் ஆண்மைக்குறைவு ஏற்படுகிறது.
ஆனால் விந்து தள்ளுதல் குறைவடையும் போதும் அல்லது தடைப்படும் போதும்(anejaculation ,) உயிரணுக்களின் குறைவால், இல்லாமையால்(azoospermia)அல்லது தரம் குறைந்து சுசுறுப்பாக இல்லாமையினால், உயிரணுக்கள், Fallopian Tube ல் பெண்ணின் முட்டையை அடைய முடியாமல் இருப்பதால் வருவது மலட்டுத்தன்மை. இவை இரண்டுமே சிலருக்கு உடல் காரணமாகவும்,வேறு பலருக்கு உளவியல் காரணமாகவும் ஏற்படுவதால், மனம் உளவியல் சம்பந்தமான பிரச்சனைகளை தீர்த்து விட்டாலே,குறையின் பெரும்பங்கு நிவர்த்தி செய்யப்பட்டு விடும் என்பது, மருத்துவ வட்டாரங்களின் முடிவாக இருக்கிறது.
நீரிழிவு(diabetes), தைரோய்ட் (thyroid ), இரத்த உயர் அழுத்தம், சிறுநீரக பிரச்சனைகள், இரத்த குழாய்,நாளங்கள் பழுதடைந்திருத்தல்,இருதய கோளாறு, ஹார்மோன்கள் குறைவாக சுரப்பது,தண்ணீரில் உள்ள அர்செனிக் நச்சுத்தான்மை(arsenic poison),அடிக்கடி நித்திரையில் ஏற்படும் விந்து வெளியேற்றம்(wet dream or nocturnal emission),சீரில்லாத குறைந்த இரத்தஓட்டம்,நரம்புத் தளர்ச்சி,விந்துநீர்ப்பை (prostate gland )நோய்கள் போன்ற நோய்களும் அல்லது குறைபாடுகளும்,போதை மருந்துகள்,மது,புகைப்பிடித்தல்,சில மருந்துகளின் பக்கவிளைவுகள், உணவு முறை போன்றவையும் காரணமாகின்றது.
இது தவிர நம்முடைய பழக்க வழக்கங்களும் பெரும் காரணமாக அமைந்து விடுகின்றன. இதற்கு தவறான எண்ணங்கள்,மனஅழுத்தம், பயம்,கவலை,வெட்கம்,தாழ்வு மனப்பான்மை போன்ற காரணங்களை சொல்லலாம்.சில நோய்களை மருத்துவர்கள் மூலமும்,மற்ற காரணிகளை நாமாகவே சரிப்படுத்திக் கொள்ளவும் முடியும். இரண்டு மனம் ஒன்றுபட்டு வாழ்வதும்,சுக துக்கங்களில் பங்கு கொண்டு,அதைப் பகிர்ந்து கொள்வதும் திருமணத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று என்றால்,மணமுறிவு ஏது,பிரிவு ஏது,கவலை ஏது,கண்ணீர் எது,போராட்டங்கள் ஏது,ஆண்மைக்குறைவு தான் ஏது?ஆண்மைக்குறைவுக்கு ஆண் மட்டுமல்ல,பெண்ணும் சில சமயங்களில் காரணமாகி விடுகிறாள் என்கிறது ஒரு ஆராய்ச்சித் தகவல்.
திருமணத்திற்கு முன்பு இருந்த சில பழக்கங்கள்,அதனால் ஏற்படும் பயம்,வெட்கம்,தாழ்வு மனப்பான்மை,அதை மனைவியிடம் சொல்வதில்,வெளிக்காட்டுவதில் உள்ள தயக்கம், சில ஆண்களை திருமணத்தின் பின் பாதிக்கின்றன.உங்கள் மனைவி,உங்கள் கணவன் குறைகளை எடுத்து சொல்வதில் , மனம் விட்டு பேசுவதில் என்ன தப்பு இருக்கிறது? பலரின் ஆண்மைக்குறைவுகளுக்கு கணவன்,மனைவியின் புரிந்து கொள்ளாமையும்,குறைகளை பேசி தீர்த்துக் கொள்ளாமையும் காரணம் என்கிறார்கள் மனநல ஆய்வாளர்கள்.நீங்கள் ஒன்றுபட்டு மகிழ்ச்சியுடன் வாழ விரும்புகிறீர்களா அல்லது பயம்,வெட்கம்,தாழ்வு மானப்பான்மையால் எதையும் பேசித் தீர்க்காது கவலையுடனும் ஏக்கத்துடனும் வாழ்க்கையை தொலைத்து விட்டு நிற்கப் போகிறீர்களா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
என்னால் முடியுமா,மனைவி தவறாக நினைப்பாளா,போன்ற பயத்தை,தயக்கத்தை தவிர்த்து நடந்து கொள்வதும்,நல்ல உணவு,தேகப்பயிற்சி,ஓய்வு,மனம் திறந்த பேச்சும், கூடவே மனைவி கணவனின் குறைகளை சுட்டிக் காட்டாது, வெறுக்காது புரிந்து கொண்டு நடப்பதாலும் இந்தப் குறையை போக்கி மகிழ்வுடன் வாழ முடியும்.
ஆண்குறிக்கு, விரைவாக வரும் இரத்தப் பாய்வும்(premature ejaculation),காலம் தாழ்த்தி வரும் இரத்தப் பாய்வும்(delayed ejaculation) சாதாரணமென்பதால், மனைவியுடன் மனம் திறந்து பேசுவதன் மூலம் இவற்றை தீர்த்துக் கொள்ளலாம். உடற்கட்டை அதிகமாக்கும் உடற்பயிற்சி,சரியான இருக்கை இல்லாத சையிக்கிளில் அதிக நேரம் பயணம் செய்வதை குறைப்பது,கொழுப்புள்ள உணவுகள்,அதிக சர்க்கரை,மாச்சத்து(fast food,fett,cholosterine,high sugar,carbohydrate,)குறைப்பது,மரக்கறி உணவு வகைகளை சேர்த்துக் கொள்வது,வைட்டமின்,zinc,selenium குறைபாட்டை நிவர்த்தி செய்வது, இவை மற்றக் காரணிகளென டாக்டர் கிளப்பர் கூறுகிறார்.
90 வீதமானோருக்கு உளவியல் பிரச்சனைகள் காரணமென்பதால், முதலில் அதற்கு தீர்வு காண வேண்டும் என்பதே பொதுவான மருத்துவர்களின் கருத்தாகையால்,அந்தப் பிரச்சனைகளை தீர்க்க முயற்சிக்க வேண்டும்,பிரச்சனைகள் தீராவிடின் பின்னர் டாக்டரை சந்திப்பது நல்லது எனவும் கலிபோர்னியாவை சேர்ந்த டாக்டர் பார்பரா கீசிங்க் தெரிவிக்கிறார்.இதைவிட தன்னினச் சேர்க்கை உள்ளவர்களும், திருமணத்திற்கு முன் சுயஇன்பம் கண்டவர்களும், திருமணத்திற்குப் பின் குடும்ப உறவில் பின்வாங்குவதும்,பயம் கொள்வதும் இயல்பானவை.இவை நோயும் அல்ல,தவறான பழக்கமும் அல்ல என்பதையும்,உங்களால் ஒரு பெண்ணின் உணர்ச்சிகள் உதாசீனம் செய்யப்படுகிறது என்பதையும் புரிந்து கொண்டு, மன உறுதியுடனும்,மனம் திறந்து பேசியும் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ளலாம் எனவும் டாக்டர் டேவிட் டெல்வின் தெரிவிக்கிறார்.
உடலியல் ரீதியிலான குறைகளை போக்க,இது மிகக் குறைந்தவர்களுக்கே ஏற்பட்டாலும், டாக்டரிடம் சென்று குறைகளைக் தெரிவித்து அதற்கான மருந்துகள்,மருந்து ஏற்றுதல்,சத்திரசிகிச்சை போன்ற சிகிச்சைகளையும் பெற்றுக் கொள்ளலாம்.இந்த ஆண்மைக்குறைவு 50 வயதிற்குப் பின்,மெல்ல ஆரம்பிப்பதாலும் முதிர்ச்சி காரணமாக இரத்த ஓட்டம் குறைவடைவதாலும், சில ஊக்க மருந்துகளை பாவித்து சரி செய்யலாம்.
12 வயதில் ஏற்படும் பருவ மாற்றத்திற்கு பின், 12 மாதங்களில் அநேகமாக இரவில் எல்லோருக்கும் ஏற்படக்கூடிய விந்து வெளியேற்றம்(wet dreams),விறைப்பு, இது நோயல்ல, பருவமடைந்த ஆணிடம் வழமையாக வரக் கூடியதும்,சலனம்,கனவு,சிறுநீர் நிரம்பி இருப்பது போன்ற காரணங்களாலும் வர சாத்தியமுண்டு.இது தவிர விறைப்பில் இரண்டு வகை உண்டு.சாதாரணமாக நித்திரையில் வருவது தூக்க விறைப்பு,(Nocturnal penile tumescence (NPT) இரண்டாவது மரண விறைப்பு,(death erection.) என்பது ஒருவன் தூக்கில் ஏற்றப்பட்டு அடையும் சாவின் போதும்,தற்கொலை அல்லது வன்முறை காரணத்தால் இறக்கும் போதும் ஏற்படக் கூடியது (வன்முறையினால் இறப்பு ஏற்பட்ட பெண்களிடமும் இந்த death erection காணப்படுவதை பிரேத பரிசோதனையின் போது கண்டறியப்படுகிறது.).
இது தவிர கருத்தரிப்பிற்கு,மலட்டுத்தன்மைக்கு,தடையாக இருப்பது உயிரணுக்கள் குறைவாக காணப்படுவதும்( low sperm count,Oligospermia), இல்லாமல் இருப்பதும்(Azoospermia),Aspermia,Hypospermia போன்றவையுமாகும். உயிரணுக்களின், சாதாரணமாக ஒரு முறை வெளித் தள்ளப்படும், அளவு 2-5 மில்லிலிட்டராகவும்,மில்லிலிட்டர்க்கு 20 மில்லியன் உயிரணுக்கள் இருப்பின் போதுமானதாயினும்,தரமான,சுசுறுப்பான 2 மில்லியன் கூட போதுமாகும். உயிரணுக்கள் வரவு தடைப்படுவது,ஹார்மோன்,எடை அதிகரிப்பு,உணவு,அதிக சையிக்கில் ஒட்டத்தினால் இரத்த நாளங்கள் பாதிக்கப்படுவது,மனஅழுத்தம் போன்ற காரணங்களால் வரும் குறைகளை நிவர்த்தி செய்வதால் தீர்த்துக் கொள்ளலாம். சில சந்தர்ப்பங்களில் சத்திர சிகிச்சை,மருந்துகள், பலன் தரும். எங்கோ ஒரு சிலருக்கே உயிரணுக்கள் முற்றாக இல்லாதது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
ஆண்களைப் போன்றே பெண்களுக்கும் உள்ள பெண்மைக்குறைபாட்டை,female sexual dysfunction (female sexual arousal dysfunction FSAD) எனவும்,இந்த female ejaculation ற்கு காரணம், ஆண்களுக்கு உள்ள prostategland ற்கு சமமான skene gland எனவும், இத்தாலி பல்கலைக்கழக ஆராய்ச்சி மருத்துவர்,இமானுவேல் ஜனினி தனது ஆராய்ச்சி முடிவில் தெரிவித்துள்ளார்.Prostate gland என பொதுவாக அழைக்கப்பட்டு வந்த இந்த சுரப்பி, 2002 ஆம் ஆண்டு, பெண்களின் prostate gland ஐ skenegland என பெயர் மாற்றம் செய்தார்கள்.ஆண்களுக்கு சொல்லப்பட்ட சில நோய்களையும், skene gland நோய்களையும்(female prostate ) ,மற்றும் உளவியல் காரணங்களான பிரவசகால பயம்,சிறுவயதில் ஏற்பட்ட வன்முறைகள், துஷ்பிரயோகம், மன அழுத்தம்,காதல் ஏமாற்றம்,குடும்பத்தின் மேலுள்ள அதிகப் பொறுப்புக்கள்,அக்கறை,குடிகாரக் கணவன்,கணவனின் இயலாத்தன்மை,உடலுறவின் போது சில பெண்களுக்கு ஏற்படும் வலி போன்றவைகளையும் இந்தக் குறைக்கு காரணங்களாக சொல்லலாம்.
மாதவிடாய் காலங்களிலும்,கருவுற்ற காலங்களிலும்,பிரசவத்திற்குப் பின்னும், சுகவீனமுற்ற போதும் மனைவியை கட்டாயப்படுத்தாது, பெண்கள் ரோபோட்டோக்கள் அல்ல, இரத்தத்தாலும் சதையாலும் ஆன உயிரினங்கள் என்பதை ஆண்கள் ஏற்று மதிப்பது நல்லது.வளைகாப்பு ஏன் நடத்துகிறார்கள்?அந்தக் காலத்தின் பின் கணவனும் மனைவியும் சேரக் கூடாது என்பதால் தானே.உங்கள் குடும்பம்,உங்கள் மகிழ்ச்சி,உங்கள் இன்பம்.ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டாலே போதுமானது,வழி கிடைத்து விடும்.
ஆண்களைப் போன்றே பெண்களுக்கும் விந்து தள்ளுதல் போன்று (female ejaculation)நடைபெற்றாலும்,விந்துக்குப் பதில் ஊக்கத்திரவம் மட்டுமே வெளியேற்றப்படுகிறது.ஆண்மைக்குறைவைப் போல் பெண்மைக்குறைவு அதிக அளவில் வெளிக் கொணரப்படாததற்கு காரணம்,அவர்களின் உடலமைப்பும்,ஆண்கள் பெண்களை, அவர்கள் விரும்பாத போதும் கூட, தங்கள் விருப்பத்திற்கு இணங்க வைத்து விடுவதாலும் தான். உண்மையிலேயே இது பெண்மைக்குறைபாடு என்பதை விட,மேற்கூறப்பட்ட உளவியல் காரணிகளை நோக்கும் போது, விருப்பமின்மை அல்லது வெறுப்பு என்பதே சாலப் பொருந்தும்.ஆனாலும் பல மருத்துவ,அறிவியல் உண்மைகள் வந்தும், படித்தவர்கள் கூட, தங்களின் மீது குற்றம் குறைகளை வைத்துக் கொண்டு , பெண்கள் மீது பழி சுமத்துவதும்,மலடி பட்டம் சூட்டுவதும்,பெண்கள் பிரச்சனைகளை தெரிந்து, பெண்களாக இருந்து கொண்டும் மருமகள் மீது மலடிப் பட்டம் சூட்டுவதும், மாமியார்களிடம் இன்னமும் குறையவில்லையே என்பது என்னவோ உண்மைதான்.கூடவே வரதட்சணை கொடுமையும் சேர்ந்து விட்டால், கேட்கவா வேண்டும்.
மனமது செப்பமானால் மந்திரம் செபிக்க வேண்டாம் என்பது போல்,மந்திரங்களை, மருந்துகளை விட, துணைவனின் பக்கத்துணை,பயத்தை போக்குதல், அன்பு,கவலைகளைப் போக்கி ஊக்கப்படுத்தல்,அரவணைப்பினால் சரி செய்ய முடியும்,என்பதே பொதுவான கருத்தாக இருக்கிறது. 2009 ளில் ஆண்களைப் போன்று வையாகரா போன்ற சில மருந்துகளை பெண்களுக்கு பரிசோதித்த போதிலும், சிலருக்கு எதிர்மறையான விளைவுகளையே கொடுத்ததால்,முதலில் உளவியல் ரீதியில் முயற்சிப்பதையே மருத்துவர்கள் விரும்புகின்றனர்.இரண்டு மனங்கள் ஒன்றுபடுவது திருமணமானால்,இன்பத்திலும் துன்பத்திலும் ஒன்றுபட்டு, பிரச்சனைகளை குறைகளை பேசி தீர்ப்பதும்,விட்டுக் கொடுப்பதும்,மனம் திறந்து பேசுவதும் அவசியம் என்பது என் கருத்தாகும்.ஒரு ஆணோ அல்லது பெண்ணோ ,தங்கள் துணைவன் அல்லது துணைவியின் உடலமைப்பு,சிந்தனைகள்,மனநிலை,எண்ணங்கள்,அறிவு,செயல்கள் இவற்றை புரிந்து கொண்டு செயல்படுவதால்,அவர்களின் குறைகளை இல்லாது செய்து இன்பமாக வாழ முடியும்.மருந்து மாத்திரைகள் கை கொடுக்கும் சிறிய உதவிக்கரமே தவிர,முழுமையான நிவாரணி அல்ல. தவறு செய்யாத மனிதனும் இல்லை,குறைகள் அற்ற மனிதனும் கிடையாது என்பதால் சிந்தித்து பார்த்து செயல்படலாமா? இல்லை திருவாச்சி அருவாளை கையில் எடுத்து தவ்று செய்யும்,குறைகள் உள்ள குடும்ப தலைவனையோ,தலைவியையோ வெட்டி சாய்க்கலாமா உங்கள் இஸ்டம்? என்ன செய்யப் போகிறீர்கள்?இரண்டு ஆயுதங்கள் மனம்,கத்தி எதைப் பாவிக்கப் போகிறீர்கள் என்பது உங்களைப் பொறுத்தது.மனிதனின் இயற்கைக் குணம்,தன் பேச்சை மற்றவர்கள் கேட்க வேண்டும்,அதன்படி நடக்க வேண்டும் என்பதாக இருக்கிறது.இது அவனுடைய பலமும்,பலவீனமுமாக இருக்கிறது.அப்படி நடக்காவிட்டால் அவன் வேறு வழிகளை கையாள,அது தவறான வழியாக இருந்தாலும் கூட,முடிவு செய்கிறான். இந்த வகையை சேர்ந்தது தான்,பெண்கள் மீது குறை கண்டு பிடிப்பதும்,வேறு பெண்களை தேடி செல்வதும்,பெண்களை கட்டாயப் படுத்தி இணங்க வைப்பதும் ஆகும்.
இந்தக் குறைபாடுகள் பற்றி தொலைக்காட்சிகளில் பயமுறுத்துவது போலல்லாது,மிக மிக குறைவானவர்களே உடல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும்,பலர் உளவியல் ரீதியிலேயே பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் ஒரு மருத்துவ ஏடு கருத்து தெரிவிப்பதால்,முதலில் உளவியல்,சரிவராத போது டாக்டர்.கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை ஏமாற்றுக்காரர்களிடம் கோட்டை விடாது,முதலில் இருவரும் பேசி அநேகமான குறைகளை போக்கிக் கொள்ளலாம்.
நல்லதொரு குடும்பம்,(ராக்கிங்,,பாலியல் கொடுமைகள்,குழந்தைகள்,பெண்களின் சித்திரவதைகள்,Ragging,Hazing,Mobbing,Bullying,Fagging,Eveteasing இல்லாத) நல்லதொரு பல்கலைக்கழகம்.இதை உருவாக்க வேண்டியது,இளைஞர்களாகிய நம் கடமை.
மீண்டும் அடுத்த வாரம்...................Dr. சக்தி.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum