TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:37 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 30, 2024 11:10 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Apr 27, 2024 3:03 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


குருமா

Go down

குருமா Empty குருமா

Post by Tamil Sun Jan 10, 2010 1:56 pm

குருமா Kuruma
மிகவும் சுவையான பக்க உணவு.
தயாரிப்பதற்கு சற்று எளிதானது. பூரி, சப்பாத்தி போன்ற சிற்றுண்டிகளுக்கு
பொருத்தமான துணை உணவு. குருமா என்றாலே வெங்காயம், இஞ்சி, பூண்டு, பட்டை
முதலியவை தவறாமல் இடம் பெற்று விடும். சைவ வகை குருமாக்களின் சுவை ஒரு
புறம் இருக்க, அசைவ வகை குருமாக்கள் ருசியில் மிகவும் அசத்தும்.
சிற்றுண்டி என்று இல்லாமல், சாத வகைகளுடன் சேர்த்து சாப்பிட அசைவ
குருமாக்கள் மிகவும் சுவையாய் இருக்கும்.

குருமா Kuruma_recipes
இஞ்சி பூண்டு சேர்த்து
செய்யப்படுவதால், குருமாக்களில் பாஸ்பரஸ் (Phosporous), மெக்னீசியம்
(Magnesium), கால்சியம் (Calcium), இரும்பு (Iron) போன்ற தாதுச்
சத்துக்கள் அதிகம். இவை சுவை கூட்டுவதோடு, செரிமானத்திற்கும் உதவியாய்
இருக்கின்றன. வாசனைக்கு சேர்க்கப்படும் கிராம்பு, பட்டை போன்றவை குறைவாய்
சேர்க்கப்படுதல் நல்லது.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

குருமா Empty Re: குருமா

Post by Tamil Sun Jan 10, 2010 1:57 pm

தேவையானப் பொருட்கள்





  • வேக வைக்க:
  • உருளை - ஒன்று
  • கேரட் - பாதி
  • கருணைக்கிழங்கு - ஒரு சிறிய துண்டு
  • காலிஃப்ளவர் - ஆறு பூக்கள்
  • பட்டாணி - இரண்டு மேசைக்கரண்டி
  • மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
  • உப்பு - ஒரு தேக்கரண்டி
  • அரைக்க - 1:
  • பட்டை - ஒரு சிறுத் துண்டு
  • கிராம்பு - ஒன்று
  • தனியா - கால் தேக்கரண்டி
  • இஞ்சி - ஒரு சிறுத்துண்டு
  • பச்சை மிளகாய் - இரண்டு
  • கொத்தமல்லி - கால் கட்டு
  • பூண்டு - ஒன்று
  • தேங்காய் துருவல் - ஒரு மேசைக்கரண்டி முழுவதும்
  • அரைக்க - 2:
  • முந்திரி - நான்கு
  • வறுத்த வேர்கடலை - நான்கு
  • வெள்ளை எள் - கால் தேக்கரண்டி
  • கசகசா - கால் தேக்கரன்டி
  • சோம்பு - கால் தேக்கரன்டி
  • தாளிக்க:
  • பட்டர் - இரண்டு தேக்கரண்டி
  • எண்ணெய் - இரண்டு தேக்கரண்டி
  • பட்டை - சிறுத் துண்டு
  • கிராம்பு - ஒன்று
  • கறிவேப்பிலை - ஆறு இதழ்



காய்கறிகளை
கழுவி விட்டு நறுக்கி வைக்கவும். அரைக்க கொடுத்துள்ள இரண்டையும்
தனித்தனியாக அரைக்கவும். முதலில் பொடி செய்ய வேண்டிய பொருட்களை போட்டு
அரைத்து விட்டு பின்னர் மற்ற பொருட்களை அரைக்கவும்.


வாயகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளிக்கவும்.


அதன் பிறகு அரைக்க கொடுத்துள்ள முதல் கலவையை சேர்த்து கொதிக்க விடவும்.


நன்கு கிளறி விட்டு பச்சை வாடை போகும் வரை கொதிக்க விடவும்.


இப்பொழுது வெந்த காய்கறிகளை சேர்த்து மீண்டும் கொதிக்க விடவும்.


கடைசியில்
இரண்டாவதாக அரைக்க கொடுத்துள்ளவைகளை அரைத்து சேர்த்து தீயின் அளவை மிதமாக
வைத்து சிறிது நேரம் கொதிக்க விட்டு பின்னர் இறக்கி விடவும்.


சுவையான
பச்சை வெஜ் குருமா ரெடி. அறுசுவையில் 500க்கும் மேற்பட்ட சமையல்
குறிப்புகள் மற்றும் பயனுள்ள வீட்டு உபயோகக் குறிப்புகள் கொடுத்து தனக்கென
ஒரு இடத்தைப் பிடித்துள்ள திருமதி. ஜலீலா அவர்கள் நேயர்களுக்காக செய்து காட்டியுள்ள குறிப்பு இது.



இதை ஆப்பம், சப்பாத்தி, இடியாப்பத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.











இதில்
கொத்தமல்லி தழை இன்னும் சேர்ப்பதாக இருந்தால் சேர்த்து கொள்ளலாம், காரம்
விரும்புவோர் இன்னும் இரண்டு பச்சைமிளகாய் சேர்த்து கொள்ளலாம்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

குருமா Empty ஆட்டுக்கால் சால்னா(பாயா)

Post by Tamil Sun Jan 10, 2010 1:58 pm

தேவையான பொருட்கள்




  • ஆட்டுக்கால் - 2 செட்
  • வெங்காயம் - 2 (பெரியது)
  • தக்காளி - 2 (பெரியது)
  • இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
  • கரம் மசாலா - கால் தேக்கரண்டி
  • மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி
  • சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி
  • மல்லித்தூள் - 3 தேக்கரண்டி
  • மஞ்சள் பொடி - கால் தேக்கரண்டி
  • சில்லி பவுடர் - ஒரு தேக்கரண்டி (விருப்பப்பட்டால்)
  • எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
  • மல்லிக்கீரை, கறிவேப்பிலை - சிறிது
  • பச்சை மிளகாய் - 2
  • தேங்காய் துருவல் - 4 மேசைக்கரண்டி
  • முந்திரி பருப்பு - 8
  • மைதா - 2 மேசைக்கரண்டி
  • உப்பு - தேவைக்கு




செய்முறை




  • வெங்காயம், தக்காளி, மல்லிக்கீரையை நறுக்கி கொள்ளவும். தேங்காய் மற்றும் முந்திரி பருப்பை நன்றாக அரைத்து வைக்கவும்.
  • ஆட்டுக்காலை வக்கி சுத்தம் செய்து கழுவி வைக்கவும். இல்லையெனில் வக்கிய ஆட்டுக்காலே கடையில் கிடைக்கிறது
  • சுத்தம் செய்த ஆட்டுக்காலை மைதாமாவு, சிறிது உப்பு சேர்த்து கலந்து சிறிது நேரம் ஊற வைக்கவும்.
  • ஆட்டுக்காலை
    கழுவி குக்கரில் போட்டு நறுக்கின வெங்காயம், தக்காளி, மல்லிக்கீரை,
    மசாலாத்தூள் வகைகள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கால் மூழ்கும் அளவு
    தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
  • கொதி வந்த பின்பு குக்கரை மூடி
    வெயிட் போட்டு 2-3 விசில் வந்த பின்பு அடுப்பை குறைத்து வைக்கவும்.
    இளங்காலாக இருந்தால் அரைமணி நேரம், சிறிது வழுவாக இருந்தால் ஒரு மணி நேரம்
    வைத்து வேக வைக்கவும்
  • கால் வெந்து விட்டதை உறுதி செய்துக் கொண்டு அரைத்த தேங்காய், முந்திரிபருப்பு விழுதை சேர்க்கவும்.
  • சிம்மில் வைத்து கால் மணி நேரம் கொதிக்க விடவும்.தேங்காய் வாடை அடங்கி சால்னா நெலுநெலுப்பாக இருக்கும்.
  • பின்பு தாளிப்பு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், கருவேப்பிலையை இளஞ்சிவப்பாக வதக்கி கொட்டவும்
  • சுவையான சத்தான ஆட்டுக்கால் சால்னா ரெடி.





குறிப்பு:

இதனை
பரோட்டா, சப்பாத்தி, இடியப்பம், ஆப்பம், தோசை, சாதம் ஆகியவற்றுடன்
சேர்த்து சாப்பிடலாம். சில்லி பவுடர் விருப்பட்டால் சேர்த்துக் கொள்ளவும்,
தனித்தனியாக மசாலா சேர்க்காமல் கறி மசாலா மட்டும் சேர்த்தும் செய்யலாம்.
அவரவர் சுவைக்கு தக்க மசாலா சேர்த்து இந்த முறையில் சமைத்தால் அருமையாக
இருக்கும்


வழங்கியவர்


ஆசியா உமர்.





பரிமாறும் அளவு



8 நபர்களுக்கு
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

குருமா Empty ஈஸி வெஜிடபுள் குருமா

Post by Tamil Sun Jan 10, 2010 1:59 pm

தேவையானப் பொருட்கள்





  • வெங்காயம் - 3/4 கப் (பொடியாக நறுக்கியது)
  • தக்காளி - ஒரு மேசைக்கரண்டி (பொடியாக நறுக்கியது)
  • பச்சை மிளகாய் - 2 அல்லது 3 (பொடியாக நறுக்கியது)
  • இஞ்சி பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
  • கேரட் - அரை கப் (பொடியாக நறுக்கியது)
  • உருளைக்கிழங்கு - அரை கப் (பொடியாக நறுக்கியது)
  • பீன்ஸ் - கால் கப் (பொடியாக நறுக்கியது)
  • பீட்ரூட் - கால் கப் (பொடியாக நறுக்கியது)
  • தேங்காய் பால் - கால் கப்
  • கறிவேப்பிலை - ஒரு கொத்து
  • மல்லிக்கீரை - ஒரு மேசைக்கரண்டி (பொடியாக நறுக்கியது)
  • எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
  • உப்பு - தேவையான அளவு



காய்கறிகள் எல்லாவற்றையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.


குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.


அதில் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.


வெங்காயம் பாதியளவு(கண்ணாடி போல் ஆனதும்) வதங்கியதும் தக்காளி சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.


அதனுடன் நறுக்கின எல்லா காய்கறிகளையும் சேர்த்து மேலும் ஒரு நிமிடம் வதக்கவும்.


காய்கறிகள் மூழ்கும் அளவு தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும்.


குக்கரை மூடி மிதமான தீயில் வைத்து 4 முதல் 5 விசில் வரும் வரை வேக விடவும்.


குக்கர் பிரஷர் அடங்கியதும் திறந்து குழிவான கரண்டியால் காய்கறிகளை லேசாக மசித்து விடவும்.(முழுவதும் மசிக்க வேண்டாம்)


அதில் தேங்காய் பால் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க விடவும்.


இறுதியாக மல்லிக்கீரையை சேர்த்து கிளறி இறக்கி வைக்கவும்.


சூடாக சப்பாத்தியோடு பரிமாற வெஜிடபிள் குருமா தயார். இந்த சுவையான ஈஸி வெஜிடபுள் குருமாவை செய்து காட்டியவர் திருமதி. கவிசிவா அவர்கள். இந்த குறிப்பினை நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்தினை பகிர்ந்துக் கொள்ளவும்.





தேங்காய் பாலுக்கு பதிலாக லோ ஃபேட் பாலும் பயன் படுத்தலாம் அல்லது ஒரு மேசைக்கரண்டி அளவு தேங்காயை மையாக அரைத்தும் சேர்க்கலாம்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

குருமா Empty அவசர உருளை கிழங்கு குருமா.

Post by Tamil Sun Jan 10, 2010 2:00 pm

தேவையான பொருட்கள்




  • உருளைகிழங்கு - 4(வேக வைத்து மசித்து கொள்ளவும்)
  • எண்ணெய் - 4 தேக்கரண்டி
  • பட்டை - 1
  • லவங்கம் - 3
  • சோம்பு - 1 தேக்கரண்டி
  • பெருங்காயம் - தேவைக்கேற்ப
  • வெங்காயம் - 2
  • தக்காளி - 2
  • இஞ்சி விழுது - 2 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  • மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
  • கொத்தமல்லி தூள் - 1 தேக்கரண்டி
  • கறி மசாலா தூள் - 1 தேக்கரண்டி
  • உப்பு - சிறிது
  • தேங்காய் துறுவல் - 5 தேக்கரண்டி
  • கருவேப்பிலை - சிறிது




செய்முறை




  • கடாயில் எண்ணெய் விட்டு பட்டை,லவங்கம்,சோம்பு,பெருங்காயம்,வெங்காயம்,இஞ்சி விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பின் தக்காளி,மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பின் மிளகாய் தூள்,கொத்தமல்லி தூள்,கறி மசாலா தூள் சேர்த்து வதக்கி தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
  • பின் வேக வைத்து மசித்த உருளைகிழங்கை சேர்த்து கொதிக்க வைக்கவும்.
  • பின் தேங்காய் துறுவல்,கருவேப்பிலை சேர்த்து ஒரு கொதி வந்ததும் சுவையான குருமா தயார்.





வழங்கியவர்


காந்தி - மஸ்கட்





ஆயத்த நேரம்


சமைக்கும் நேரம்



15 நிமிடம்

10 நிமிடம்


<table border="0" cellpadding="0" cellspacing="0" width="98%"><tr> <td align="left" valign="top">
</td></tr></table>
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

குருமா Empty காலிப்ளவர் குருமா

Post by Tamil Sun Jan 10, 2010 2:03 pm

தேவையான பொருட்கள்




  • 1) காலிப்ளவர் - 1 (பெரியது)
  • 2) பெரிய வெங்காயம் - 2 (பெரியது)
  • 3) தக்காளி- 3 (நடுத்தர அளவு)
  • 4) இஞ்சி, பூணடு விழுது - 1 டீஸ்பூன்
  • 5) சோம்பு - 1 1/2 டேபிள்ஸ்பூன்
  • 6) பட்டை - 2
  • 7) இலவஙம் - 3
  • 8) ஏலக்காய் - 2
  • 9) மிளகாய்த் தூள் - 3/4 டீஸ்பூன்
  • 10) தேங்காய்த் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
  • 11)பச்சை மிளகாய் - 1
  • 12) எண்ணெய் - தேவைக்கேற்ப
  • 13) கொத்தமல்லித் தழை - அலங்கரிக்க




செய்முறை




  • 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவலுடன் 1 டேபிள் ஸ்பூன் சோம்பையும் சேர்த்து மைய அரைக்கவும்.
  • வெங்காயத்தை பொடி பொடியாகவும், தக்காளியை சுமாராகவும் அரிந்து கொள்ளவும்.
  • தண்ணீரில் சிறிதளவு உப்பு கலந்து, காலிப்ளவரை சின்ன சின்ன பூக்களாகப் பிரித்து அந்த தண்ணீரில் போடவும்.
  • 15 நிமிடம் ஊறிய பின்பு அதை நன்றாகக் கழுவி வைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மீதமிருக்கும் சோம்பு, பட்டை, லவங்கம், ஏலக்காய் போட்டு தாளிக்கவும்.
  • இஞ்சி, பூண்டு விழுது போட்டு நன்கு கலக்கவும்.
  • அடுத்து வெங்காயம் போட்டு சிவக்க வதக்கவும்.
  • மேலும் தக்காளி சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
  • இதனுடன் ஊறிய காலி ப்ளவரை போட்டு மிருதுவாகும் வரை வதக்கவும்.
  • இப்போது தேங்காய் - சோம்பு அரைத்த விழுது, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும்.
  • முடியைப் போட்டு மூடி குறைந்த தீயில், காலி ப்ளவர் வெந்து, குருமா கெட்டியாகும் வரை வேக வைக்கவும்.
  • வெந்தவுடன் இறக்கி கொத்தமல்லி தூவி அலங்கரிக்கவும்.





வழங்கியவர்


SubhaAravind, Hyderabad





பரிமாறும் அளவு


ஆயத்த நேரம்


சமைக்கும் நேரம்



3 நபர்களுக்கு

30 mins

25 mins
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

குருமா Empty கொத்தமல்லிதலை குருமா

Post by Tamil Sun Jan 10, 2010 2:04 pm

தேவையான பொருட்கள்




  • எண்ணெய் - சிறிது
  • பட்டை - 3
  • லவங்கம் - 5
  • ஏலக்காய் - 2
  • பிரின்ஜி இலை - 1
  • சோம்பு - 1/2 தேக்கரண்டி
  • வெங்காயம் - 2 பெரியது
  • தக்காளி - 2 பெரியது
  • மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
  • உப்பு - தேவையான அளவு
  • கொத்தமல்லி தூள் - 1 தேக்கரண்டி
  • தனியாக அரைத்து கொள்ளவும்
  • (((தேங்காய் - 1/2 கப்
  • முந்திரி - 10
  • பொட்டுகடலை - 2 தேக்கரண்டி)))
  • அரைக்க தேவையான பொருட்கள்
  • கொத்தமல்லி தலை - 1 கப்
  • இஞ்சி - 1 துண்டு
  • பூண்டு - 12 பள்
  • சோம்பு - 1 தேக்கரண்டி
  • பச்சை மிளகாய் - 6




செய்முறை




  • கடாயில் எண்ணெய் விட்டு பட்டை,லவங்கம்,ஏலக்காய்,பிரின்ஜி இலை,சோம்பு சேர்த்து வதக்கவும்.
  • பின் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பின் தக்காளி,மஞ்சள்தூள்,உப்பு,கொத்தமல்லி தூள் சேர்த்து நன்கு எண்ணெய் மிதக்கும் வரை வதக்கவும்.
  • பின் (கொத்தமல்லி தலை,இஞ்சி,பூண்டு,சோம்பு,பச்சை மிளகாய்) அரைத்த விழுதை சேர்த்து மிதமான தீயில் நன்கு வதக்கவும்.
  • பின் நன்கு வதக்கிய பின் தண்ணீர் 2 கப் விட்டு மூடி போட்டு கொதிக்க விடவும்.
  • பின் (தேங்காய்,முந்திரி,பொட்டுகடலை) அரைத்த விழுதை போட்டு கொதிக்க வைக்கவும்.
  • பின் உப்பு, காரம் பார்க்கவும்.
  • காரம் போதவில்லை என்றால் மிளகாய் தூள் அல்லது பச்சை மிளகாய் சேர்க்கவும்.
  • பின் கொத்தமல்லி தலை தூவி பரிமாறவும்





குறிப்பு:


இட்லி,தோசைக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்.



வழங்கியவர்


காந்தி - மஸ்கட்





பரிமாறும் அளவு


ஆயத்த நேரம்


சமைக்கும் நேரம்



4 நபர்களுக்கு

15 நிமிடம்

30 நிமிடம்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

குருமா Empty பச்சை பட்டாணி உருளை குருமா

Post by Tamil Sun Jan 10, 2010 2:05 pm

தேவையான பொருட்கள்




  • 1. பச்சை பட்டாணி - 1/2 கப்
  • 2. உருளை கிழங்கு - 1 (அ) 2
  • 3. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
  • 4. மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
  • 5. கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி
  • 6. பச்சை மிளகாய் - 1
  • 7. பச்சரிசி - 1 தேக்கரண்டி
  • 8. துவரம் பருப்பு - 1 தேக்கரண்டி
  • 9. உப்பு - தேவைக்கு
  • 10. வெங்காயம் - 1
  • 11. தக்காளி - 1
  • 12. கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு, எண்ணெய் - தாளிக்க
  • 13. கறிவேப்பிலை, கொத்தமல்லி




செய்முறை




  • பட்டாணி ஊர வைத்து வேக வைக்கவும்.
  • உருளை மிதமான அளவு துண்டுகளாக வெட்டி வேக வைக்கவும்.
  • பச்சரிசி, துவரம் பருப்பு கழுவி ஊர வைத்து, பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும்.
  • வெங்காயம், தக்காளி பொடியாக நறுக்கவும்.
  • பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும்.
  • வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • பின் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  • இத்துடன் கறிவேப்பிலை, கொத்தமல்லி, கரம் மசாலா, மிளகாய் தூள், மஞ்சள் தூள், அரைத்த மசாலா சேர்த்து லேசாக வதக்கவும்.
  • இதில் வேக வைத்த பட்டாணி, உருளை, தேவையான நீர், உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு எடுக்கவும்.





குறிப்பு:


சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை, இடியாப்பம் அனைத்துக்கும் நன்றாக இருக்கும்.



வழங்கியவர்


VaniVasu
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

குருமா Empty பனீர் முந்திரி குருமா

Post by Tamil Sun Jan 10, 2010 2:05 pm

தேவையான பொருட்கள்




  • பால் - 1/2 கப்
  • பனீர் - 1 கப்
  • இஞ்சி,பூண்டு விழுது - 5 தேக்கரண்டி(தேவைக்கேற்ப)
  • உப்பு - (தேவைக்கேற்ப)
  • வெண்ணெய் - 3 தேக்கரண்டி
  • எண்ணெய் - 2 தேக்கரண்டி
  • பட்டை - 3
  • லவங்கம் - 5
  • ஏலக்காய் - 2
  • பிரியாணி இலை - 2
  • வெங்காயம் - 1 கப்
  • மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  • மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
  • கொத்தமல்லி தூள் - 1 தேக்கரண்டி
  • கறி மசாலா - 1 தேக்கரண்டி
  • தக்காளி - 3
  • மிளகு தூள் - 2 தேக்கரண்டி
  • தேங்காய் துருவல் - 1/2 கப்
  • முந்திரி துருவல் - தேவைக்கேற்ப
  • கொத்தமல்லி தலை - சிறிது.




செய்முறை




  • கடாயில் வெண்ணெய்,எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை,லவங்கம்,ஏலக்காய்,பிரியாணி இலை சேர்த்து வதக்கவும்.
  • பின் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பின் பாதி உப்பு மற்றும் இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பின் மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,கொத்தமல்லி தூள்,கறி மசாலா தூள் சேர்த்து வதக்கவும்.
  • பின் தக்காளி சேர்த்து தேவையானால் தண்ணீர் தெளித்து,எண்ணெய் வேண்டும் எனில் சிறிது ஊற்றி நன்கு எண்ணெய் மிதக்கும் வரை வதக்கவும்.
  • பின் தண்ணீர் 2 கப் ஊற்றவும்.
  • பின் மிளகு தூள், பால் சேர்க்கவும்.
  • பின் பனீர்,தேங்காய் துருவல்,முந்திரி துருவல்,கொத்தமல்லி தலை சேர்த்து நன்கு கொதி வந்ததும் சுவையான குருமா தயார்.





குறிப்பு:


குருமாவை செய்யும் போது நன்றாக எண்ணெய் மிதக்கும் வரை வதக்குவது மிக மிக முக்கியம்.



வழங்கியவர்


காந்தி - மஸ்கட்





பரிமாறும் அளவு


ஆயத்த நேரம்


சமைக்கும் நேரம்



4 நபர்களுக்கு

15 நிமிடம்

30 நிமிடம்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

குருமா Empty சிந்தாதி சிக்கன் குருமா

Post by Tamil Sun Jan 10, 2010 2:06 pm

தேவையான பொருட்கள்




  • கோழிக்கறி - 1/2 கிலோ (நடுத்தர துண்டுகள்)
  • வெங்காயம் - 1/4 கிலோ
  • தக்காளி - 3
  • பச்சை மிளகாய் - 3
  • மிளகாய்த்தூள் - 2 டீ ஸ்பூன்
  • இஞ்சி - 1 துண்டு
  • பூண்டு - 7 பல்
  • கரம் மசாலா - 1 டீ ஸ்பூன்
  • தயிர் - 1 கப்
  • கசகசா - 2 டேபிள் ஸ்பூன்
  • முந்திரி - 10
  • தேங்காய் துருவல் - 1 கப்
  • சோம்பு - 1 ஸ்பூன்
  • பட்டை - 1 துண்டு
  • கிராம்பு - 3
  • ம்ஞ்சள் தூள் - 1/4 டீ ஸ்பூன்
  • கருவேப்பிலை
  • கொத்தமல்லி
  • எண்ணை - 4 டேபிள் ஸ்பூன்
  • உப்பு - தேவைக்கேற்ப




செய்முறை




  • குக்கரில் எண்ணய் ஊற்றி, சோம்பு, பட்டை, கிராம்பு, கீறிய பச்சை மிளகாய் போட்டு, மிளகாய் வெள்ளையாக வரும் வரை வதக்கவும்.
  • பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, நன்கு வதக்கவும்.
  • இத்துடன்
    இஞ்சி, பூண்டு விழுது, கோழி கறி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம்
    மசாலாத்தூள் மற்றும் தயிறையும் சேர்த்து, நன்கு வதக்கி, ஒரு டம்ளர்
    தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து வேகவிடவும்.
  • கசகசா, முந்திரியை சிறிது வெந்நீரில் ஊரவைத்து, தேங்காயை சேர்த்து அரைத்து, கொதித்துக்கொண்டிருக்கும் குழம்புடன் சேர்க்கவும்.
  • நன்கு கொதித்தவுடன், கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்க்கவும்.
  • சுவையான சிந்தாதி குருமா தயார்.





வழங்கியவர்


Kanthimathi





பரிமாறும் அளவு


ஆயத்த நேரம்


சமைக்கும் நேரம்



6

20 நிமிடங்கள்

20 நிமிடங்கள்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

குருமா Empty வெஜ் குருமா

Post by Tamil Sun Jan 10, 2010 2:07 pm

தேவையான பொருட்கள்




  • கேரட் -1
  • உருளை -1
  • பீன்ஸ் -10
  • காலிஃபிளவர் -சிறிது
  • வெங்காயம் -1
  • தக்காளி -1
  • இன்சி பூண்டு விழுது -1ஸ்பூன்
  • கறிமசால்பொடி -2ஸ்பூன்
  • மஞ்சள்பொடி -1/4ஸ்பூன்
  • உப்பு -தேவையான அளவு
  • கொத்தமல்லி,புதினா -1கைப்பிடி அளவு
  • அரைக்க:
  • தேங்காய்துறுவல் -1/4கப்
  • பொட்டுகடலை -2ஸ்பூன்
  • முந்திரி -5
  • சோம்பு -1/4ஸ்பூன்
  • தாளிக்க:
  • எண்ணை -2ஸ்பூன்
  • பிரியாணி இலை -1
  • பட்டை,கிராம்பு,ஏலம் -2




செய்முறை




  • காய்களை வேண்டிய அளவில் நறுக்கி வேகவைக்கவும்.
  • அரைக்க குடுத்தவற்றை சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைக்கவும்.
  • கொத்தமல்லி,புதினா பொடியாக நறுக்கவும்.
  • வெங்காயம்,தக்காளி பொடியாக நறுக்கவும்.
  • வாணலியில் எண்ணை ஊற்றி தாளிப்பதை போட்டு வெங்காயம் போட்டு நன்குவதக்கவும்.
  • இஞ்சி
    பூண்டு விழுது போட்டு வதக்கி தக்காளி சேர்க்கவும்.தக்காளி வதங்கியவுடன்
    கறிமசால்பொடி.மஞ்சள்பொடி,கொத்தமல்லி,புதினா போட்டு நன்கு வதக்கி வேகவைத்த
    காய்களை போடவும்.
  • உப்பு போட்டு நன்கு பிரட்டிவிட்டு அரைத்ததை
    ஊற்றி நன்கு கலந்துவிட்டு சிறிது தண்ணீர் ஊற்றி முடிவைத்து
    வேகவிடவும்.குருமா திக்கானவுடன் உப்பு சரிபார்த்து இறக்கவும்.





வழங்கியவர்


செல்வி
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

குருமா Empty மீல் மேக்கர் குருமா

Post by Tamil Sun Jan 10, 2010 2:08 pm

தேவையான பொருட்கள்




  • மீல் மேக்கர் - 1 கப்(கொதிக்கும் நீரில் போட்டு எடுத்து கொள்ளவும்)
  • பால் - 1/2 கப்
  • பனீர் - 1/2 கப்(துறுவியது)அல்லது முழுதாகவும் போடலாம்
  • இஞ்சி,பூண்டு விழுது - 5 தேக்கரண்டி(தேவைக்கேற்ப)
  • உப்பு - (தேவைக்கேற்ப)
  • வெண்ணெய் - 3 தேக்கரண்டி
  • எண்ணெய் - 2 தேக்கரண்டி
  • பட்டை - 3
  • லவங்கம் - 5
  • ஏலக்காய் - 2
  • பிரியாணி இலை - 2
  • வெங்காயம் - 1 கப்
  • மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  • மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
  • கொத்தமல்லி தூள் - 1 தேக்கரண்டி
  • கறி மசாலா - 1 தேக்கரண்டி
  • தக்காளி - 3
  • மிளகு தூள் - 2 தேக்கரண்டி
  • தேங்காய் துருவல் - 1/2 கப்
  • முந்திரி துருவல் - தேவைக்கேற்ப
  • கொத்தமல்லி தலை - சிறிது.




செய்முறை




  • கடாயில் வெண்ணெய்,எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை,லவங்கம்,ஏலக்காய்,பிரியாணி இலை சேர்த்து வதக்கவும்.
  • பின் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பின் பாதி உப்பு மற்றும் இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பின் மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,கொத்தமல்லி தூள்,கறி மசாலா தூள் சேர்த்து வதக்கவும்.
  • பின் தக்காளி சேர்த்து தேவையானால் தண்ணீர் தெளித்து,எண்ணெய் வேண்டும் எனில் சிறிது ஊற்றி நன்கு எண்ணெய் மிதக்கும் வரை வதக்கவும்.
  • பின் தண்ணீர் 1 கப் ஊற்றி,மீல் மேக்கர் சேர்த்து மூடி வைத்து வேக விடவும்.
  • பின் மிளகு தூள், பால் சேர்க்கவும்.
  • பின் தேங்காய் துருவல்,பனீர்,முந்திரி துருவல்,கொத்தமல்லி தலை சேர்த்து நன்கு கொதி வந்ததும் சுவையான குருமா தயார்.





குறிப்பு:


குருமாவை செய்யும் போது நன்றாக எண்ணெய் மிதக்கும் வரை வதக்குவது மிக மிக முக்கியம்.
பரோட்டா,சப்பாத்தி,பூரி,சாதம்,இட்லி,தோசை என எல்லாத்துக்கும் பொருத்தமாக இருக்கும்.



வழங்கியவர்


காந்தி - மஸ்கட்





பரிமாறும் அளவு


ஆயத்த நேரம்


சமைக்கும் நேரம்



4 நபர்களுக்கு

15 நிமிடம்

20 நிமிடம்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

குருமா Empty கோவைக்காய் குருமா

Post by Tamil Sun Jan 10, 2010 2:10 pm

தேவையான பொருட்கள்




  • கோவைக்காய் -- 200 கிராம்
  • வெள்ளை கொண்டைக்கடலை -- 1 1/2 கப் (இரவே ஊறவைக்கவும்)
  • தேங்காய் -- 1/2 மூடி (நைசாக அரைக்கவும்)
  • சின்ன வெங்காயம் -- 25 என்னம் (பொடியக நறுக்கவும்)
  • பச்சை மிளகாய் -- 1 என்னம் (நீளமாக கீறியது)
  • தக்காளி -- 2 என்னம் (பொடியாக நறுக்கியது)
  • வறுத்து பொடிக்க -- 1 :
  • தனியா -- 1 கைப்பிடி
  • மிளகாய் வத்தல் -- 8 என்னம்
  • கறிவேப்பிலை -- 1 இனுக்கு
  • வறுத்து பொடிக்க -- 2 :
  • பட்டை -- 1 என்னம்
  • கிராம்பு -- 4 என்னம்
  • சீரகம் -- 1 டீஸ்பூன்
  • சோம்பு -- 1 டீஸ்பூன்




செய்முறை




  • வறுத்து பொடிக்க -- 1 யை வாணலியில் எண்ணைய் ஊற்றி தனித்தனியாக வறுத்து பின் அனைத்தும் சேர்த்து பொடிக்கவும்.
  • வறுத்து பொடிக்க -- 2 யை வெறும் வாணலியில் வறுத்து பொடிக்கவும்.
  • கோவைக்காயை வட்டமாக நறுக்கி கொஞ்சமாக உப்பு சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி குக்கரில் 2 விசில் வைத்து எடுக்கவும்.
  • சுண்டலை தனியாக வேகவைத்து எடுக்கவும்.
  • வாணலியில் எண்ணைய் ஊற்றி கடுகு, உளுந்து தாளித்து பச்சைமிளகாய், வெங்காயம் போட்டு வதக்கி பின் தக்காளி போட்டு நன்றாக வதக்கவும்.
  • அதனுடன்
    கோவைக்காய், கொண்டைக்கடலை போட்டு வதக்கி பொடிக்கப்பட்ட மசாலா, மஞ்சள் தூள்
    போட்டு வதக்கி கொதித்தபின் தேங்காய் ஊற்றி கொதித்து வரும் போது கொத்தமல்லி
    தழை தூவி இறக்கி பரிமாறலாம்.
  • ரெடி.





குறிப்பு:


கோவைக்காயை வேகவைத்த தண்ணீரை வடிகட்டி விடவும்.
கொண்டைக்கடலை வேகவைத்த தண்ணீரை பயன்படுத்தலாம். தேவையான அளவு தண்ணீரை மட்டும் பயன் படுத்தலாம்.



வழங்கியவர்


Subha Jayaprakash





பரிமாறும் அளவு


சமைக்கும் நேரம்



5 நபர்களுக்கு

1 hr 25 mins
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

குருமா Empty கறுப்பு கொண்டல் கடலை குருமா

Post by Tamil Sun Jan 10, 2010 2:10 pm

தேவையான பொருட்கள்




  • கறுப்பு கொண்டல் கடலை-1 கப்
  • வெங்காயம்-2
  • தக்காளி-2
  • கடுகு-1/2 தே.க
  • பெருஞ்சீரகம்-1 தே.க
  • கறுவா சிறு துண்டு
  • கராம்பு-3
  • மஞ்சள்-1 தே.க
  • மிளகாய்த்தூள்-2 தே.க
  • கறிவேப்பிலை சிறிதளவு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய்
  • மசாலா அரைப்பதற்கு
  • ----------------------------
  • கசகசா-2 தே.க
  • பொட்டுக் கடலை-1 மே.க
  • தேங்காய்ப்பூ-1 மே.க
  • இஞ்சி சிறிய துண்டு
  • பூண்டு- 5 பல்
  • பச்சை மிளகாய்- 5




செய்முறை




  • கடலையை 7-8 மணி நேரம் ஊறவைக்கவும்.
  • ஊறவைத்த கடலையை உப்பு சேர்த்து வேகவிடவும்.
  • வெங்காயம்,தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்
  • அரைக்கக் கொடுத்த பொருள்களை விழுதாக அரைத்து வைக்கவும்.
  • ஒரு
    பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு அது வெடித்ததும்,கறுவா,
    கராம்பு,கறிவேப்பிலை போட்டு பின்பு வெங்காயம்,பெருஞ்சீரகம் சேர்த்து
    வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  • தக்காளி வதங்கியதும் மஞ்சள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
  • பின்பு அரைத்த விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  • வேகவைத்த கடலையை தண்ணீருடன் சேர்த்து 5-10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.
  • இது இட்லி, தோசை, இடியப்பம், சப்பாத்திக்கு மிகவும் நல்லது.





வழங்கியவர்


திருமதி வத்சலா நற்குணம்





பரிமாறும் அளவு


ஆயத்த நேரம்


சமைக்கும் நேரம்



6 நபர்களுக்கு

7-8 மணி நேரம்

20-30 நிமிடம்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

குருமா Empty பாசிப் பயிறு தால்

Post by Tamil Sun Jan 10, 2010 2:17 pm

தேவையான பொருட்கள்




  • பாசிப் பயிறு - 250 கிராம்
  • பெரிய வெங்காயம் - 2
  • தக்காளி - 4
  • ஏலக்காய், கிராம்பு - தலா 1
  • இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்
  • உருளைக் கிழங்கு - 2
  • மிளகாய்ப் பொடி - 1 ஸ்பூன்
  • கறி மசாலா தூள் - 1 ஸ்பூன்
  • சீரகம், சோம்பு - தலா 1 ஸ்பூன்
  • ரீஃபைண்ட் ஆயில் - 2 ஸ்பூன்
  • பச்சைக் கொத்தமல்லி - சிறிது
  • உப்பு - சுவைக்கேற்ப




செய்முறை




  • பாசிப் பயிறை முதல் நாள் இரவே ஊற வைக்கவும்.
  • வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும்.
  • நறுக்கிய
    வெங்காயம், தக்காளியில் பாதி அளவு(1 பெரிய வெங்காயம், 2 தக்காளி)எடுத்து,
    கிராம்பு, ஏலக்காயுடன் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுத்து வைத்துக்
    கொள்ளவும்.
  • உருளைக் கிழங்கை தோல் சீவி, சிறிய சதுரங்களாக நறுக்கவும்.
  • பிரஷர் பானில் எண்ணெய் ஊற்றி, சீரகம், சோம்பு இரண்டையும் போட்டு, வெடிக்க விடவும்.
  • வெங்காயத்தை முதலில் அதில் போட்டு வதக்கவும்.
  • பின் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
  • பின் அரைத்து வைத்துள்ள கலவையை அதில் போட்டு கிளறவும்.
  • நறுக்கிய உருளைக் கிழங்கு, பாசிப் பயிறு இரண்டையும் அதில் போட்டு, மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றவும்.
  • மிளகாய்ப்
    பொடி, இஞ்சி பூண்டு விழுது, கறி மசாலா தூள் எல்லாவற்றையும் போட்டு,
    குக்கரை மூடி, இரண்டு விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விடலாம்.
  • குக்கர் சூடு தணிந்ததும் திறந்து, உப்பு சேர்க்கவும்.
  • பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழையை மேலே தூவவும்.





வழங்கியவர்


சீதாலஷ்மி





பரிமாறும் அளவு


ஆயத்த நேரம்


சமைக்கும் நேரம்



5 பேருக்கு

15 நிமிடம்

15 நிமிடம்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

குருமா Empty டபுள் பீன்ஸ் கிரேவி

Post by Tamil Sun Jan 10, 2010 2:18 pm

தேவையான பொருட்கள்




  • டபுள் பீன்ஸ் - 1/4 கிலோ,
  • பெரிய வெங்காயம் - 2,
  • பூண்டு - 10 பல்,
  • தக்காளி - 2,
  • மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,
  • மிளகாய்த்தூள் - 1தேக்கரண்டி,
  • சீரகத்தூள் - 1/2 தேக்கரண்டி,
  • சோம்பு - 1/4 தேக்கரண்டி,
  • தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி,
  • தனியாத்தூள் - 2 தேக்கரண்டி,
  • கரம் மசாலா தூள் - 1 தேக்க்ரண்டி,
  • உப்பு - தேவையான அளவு,
  • கறிவேப்பிலை - சிறிது,
  • எண்ணெய் - 2 மேசைக்கரண்டி.




செய்முறை




  • வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
  • பூண்டை நசுக்கி வைக்கவும்.
  • டபுள் பீன்ஸை குக்கரில் 4 விசில் விட்டு வேக வைத்து எடுக்கவும்.
  • தேங்காய் துருவலை ஒரு ஓட்டு ஓட்டி வைக்கவும்.
  • வாணலியில் எண்ணெயை ஊற்றி, சோம்பு, கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
  • அத்துடன் நசுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும்.
  • நன்கு வதங்கியதும் வேகவைத்த டபுள் பீன்ஸ், அரைத்து வைத்த தேங்காய் சேர்த்து மஞ்சள் தூள், உப்பு போட்டு கொதிக்க விடவும்.
  • கிரேவி கெட்டியானதும் இறக்கவும்.





குறிப்பு:


சப்பாத்தி, தோசைக்கு நன்றாக இருக்கும்.




வழங்கியவர்


இ. செந்தமிழ் செல்வி, பாண்டிச்சேரி.





பரிமாறும் அளவு


சமைக்கும் நேரம்



4 நபர்களுக்கு.

30 நிமிடங்கள்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

குருமா Empty மட்டன் சப்ஜி குருமா

Post by Tamil Sun Jan 10, 2010 2:19 pm

இஸ்லாமிய கல்யாண வீடுகளில் நிறைய பேருக்கு காலை டிபன் செய்வதாக இருந்தால் பூரிக்கு தொட்டு கொள்ள செய்யும் டிஷ் இது.
சிலருக்கு (பூரிக்கு உருளை கிழங்கு பிடிகும் சிலருக்கு மட்டன் கொஞ்ச்ம் சேர்த்தால் தான் பிடிக்கும்.) அப்போது இப்படி செய்யலாம்.









தேவையான பொருட்கள்




  • மட்டன் - கால் கிலோ (பொடியாக அரிந்து கொள்ளவேண்டும்)
  • உருளை - கால் கிலோ
  • கேரட் - இருநூரு கிராம்
  • பிரெஷ் பட்டாணி - நூரு கிராம்
  • தக்காளி - கால் கிலோ
  • வெங்காயம் - கால் கிலோ
  • கொத்து மல்லி - ஒரு கட்டு
  • புதினா - அரை கட்டு
  • பச்சமிளகாய் - நான்கு
  • மிளகாய் துள் - இரண்டு தேக்கரண்டி
  • மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி
  • தயிர் - ஐம்பது மில்லி
  • தேங்காய் - ஒரு முறி
  • உப்பு - தேவைக்கு
  • எண்ணை + டால்டா - ஐம்பது மில்லி
  • பட்டை - இரண்டு அங்குலம் முன்று
  • கிராம்பு - ஆறு
  • ஏலக்காய் - நான்கு
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் - இரண்டு மேசை கரண்டி குவியலாக




செய்முறை




  • முதலில் கறியை பொடியாக அரிந்து தண்ணீரை வடித்து வைக்கவேண்டும்.
  • உருளை, கேரட்டை பொடியாக அரிந்து வைக்க வேண்டும்.
  • ஒரு
    பெரிய சட்டியை அடுப்பி ஏற்றி எண்ணையை ஊற்ற வேண்டும், எண்ணை சூடு வந்ததும்
    பட்டை,கிராம்பு, ஏலம் போட்டு வெடிக்க விட்டு வெங்காயத்தை நீளவக்கில்
    அரிந்து சேர்த்து நன்கு கிளறி ஐந்து நிமிடம் சிம்மில் வைக்கவேண்டும்.
  • நன்கு
    வெங்காய்ம் மடங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்க வேண்டும்,இஞ்சி
    பூண்டு கலர் மாறி பச்சை வாடை போகும் வரை நன்கு கிளறி சிம்மில்
    வைக்கவேண்டும் அடி பிடிக்காமல் பார்த்து கொள்ளவும்.
  • பிறகு
    கொத்துமல்லி, புதினாவை சிறிது வைத்து விட்டு போட்டு கிளறவேண்டும் ஒரு
    நிமிடம் கழித்து கறியையும், பச்சமிளகாயையும் போட்டு வதக்க வேண்டும்.
  • அடுத்து
    உருளை, கேரட், தக்காளியை போட்டு நன்கு கிளறி மிளகாய் தூள்,மஞ்சள் தூள்,
    உப்பு போட்டு கிளறி பத்து நிம்டிஅம் சிம்மில் விட்டு வேக விட வேண்டும்.
  • பிறகு தயிரை அடித்து கலக்கி விட்டு சிறிது தண்ணீர் சேர்த்து வேக விட வேண்டும்.
  • கடைசியில் தேங்காயை மை போல் அரைத்த்து தேவைக்கு சால்னாவிற்குண்டாண தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இரக்கவும்.
  • கடைசியில் மீதி எடுத்து வைத்துள்ள கொத்துமல்லி, புதினாவை போட்டு இரக்கவேண்டும்.
  • பூரிக்கு ஏற்ற சுவையான மட்டன் சப்ஜி குருமா ரெடி.





வழங்கியவர்


ஜலீலா





பரிமாறும் அளவு


ஆயத்த நேரம்


சமைக்கும் நேரம்



12 நபர்களுக்கு

20 நிமிடம்

30 நிமிடம்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

குருமா Empty ஈசி தக்காளி குருமா

Post by Tamil Sun Jan 10, 2010 2:20 pm

தேவையான பொருட்கள்




  • தக்காளி - 4,
  • பெரிய வெங்காயம் - 2,
  • பச்சை மிளகாய் - 3,
  • பொட்டுக்கடலை - 1 மேசைக்கரண்டி,
  • தேங்காய்த் துருவல் - 2 மேசைக்கரண்டி,
  • கடுகு - 1/2 தேக்கரண்டி,
  • மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,
  • கறிவேப்பிலை - 5,
  • உப்பு - தேவையான அளவு,
  • எண்ணெய் - 2 தேக்கரண்டி.




செய்முறை




  • வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும்.
  • தேங்காய், பொட்டுக்கடலை, பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும்.
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
  • தக்காளி நன்கு வதங்கியதும், அரைத்ததை ஊற்றி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, கொதிக்க விட்டு இறக்கவும்.





குறிப்பு:


சப்பாத்தி, இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும்.




வழங்கியவர்


இ. செந்தமிழ்செல்வி, பாண்டிச்சேரி.





பரிமாறும் அளவு


சமைக்கும் நேரம்



2 நபர்களுக்கு.

10 நிமிடங்கள்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

குருமா Empty Re: குருமா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum