Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 0:27
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 16:46
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed 4 Sep 2024 - 22:34
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed 4 Sep 2024 - 15:27
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon 20 May 2024 - 20:42
» How to earnings online?
by Tamil Mon 11 Dec 2023 - 21:45
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon 11 Dec 2023 - 20:22
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon 11 Dec 2023 - 20:19
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon 11 Dec 2023 - 20:14
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon 11 Dec 2023 - 20:08
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun 29 Oct 2023 - 19:56
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun 22 Oct 2023 - 16:45
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat 21 Oct 2023 - 22:01
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun 17 Sep 2023 - 22:49
» நாவல் தேவை
by jayaragh Sat 10 Jun 2023 - 23:28
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon 24 Oct 2022 - 16:56
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun 18 Sep 2022 - 14:45
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri 12 Aug 2022 - 1:58
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon 8 Aug 2022 - 18:18
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri 22 Jul 2022 - 12:44
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri 15 Jul 2022 - 13:29
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue 3 May 2022 - 16:46
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon 31 Jan 2022 - 17:37
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu 27 Jan 2022 - 19:17
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun 2 Jan 2022 - 17:34
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon 13 Dec 2021 - 8:14
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Sat 11 Dec 2021 - 0:44
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu 2 Dec 2021 - 17:39
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri 19 Nov 2021 - 18:15
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon 8 Nov 2021 - 13:43
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon 8 Nov 2021 - 13:41
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon 8 Nov 2021 - 13:36
» பக்தி பாடல்கள்
by veelratna Mon 8 Nov 2021 - 13:34
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon 8 Nov 2021 - 13:28
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon 8 Nov 2021 - 13:26
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue 26 Oct 2021 - 13:21
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue 26 Oct 2021 - 13:18
» மெல்லிசை பாடல்
by veelratna Mon 25 Oct 2021 - 13:05
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon 25 Oct 2021 - 13:01
» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed 20 Oct 2021 - 14:23
சிங்கள அரசே இயக்குகிறதாஇந்திய ராணுத் துறையை ? வைகோ கேள்வி
Page 1 of 1
சிங்கள அரசே இயக்குகிறதாஇந்திய ராணுத் துறையை ? வைகோ கேள்வி
சென்னை: இந்திய ராணுத் துறையை சிங்கள
அரசே இயக்குகிறதா? என்ற கேள்வி எழுப்பியுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ,
தமிழக மக்கள் கண்களில் மண்ணைத் தூவி விடலாம் என்று கருதிக்கொண்டு மத்திய
ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி செயல்படுகிறாரா? என்றும் வினவியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், " சிங்கள அரசு நடத்திய
ஈழத் தமிழர் இனப் படுகொலையால், ரத்தம் கசியும் தமிழர்களின் நெஞ்சில்
காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசு மேலும் ஒரு சூட்டுக்கோலை திணித்துள்ளது.
தமிழ்நாட்டின் வெலிங்டனில் சிங்கள ராணுவத்தினருக்கு பயிற்சி கொடுக்க மத்திய
அரசு செய்துள்ள ஏற்பாடு, தமிழர்களுக்கு எதிரான மத்திய காங்கிரஸ் அரசு
வஞ்சகமாகத் தொடர்கின்ற துரோகத்தின் சாட்சியமாகும்.
லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை ஈவு இரக்கமின்றி சிங்கள அரசு தன் ராணுவத்தை
ஏவி நடத்திய கோரமான கொலைக் குற்றத்திற்கு இந்திய அரசும் உடந்தையாகச்
செயல்பட்ட கூட்டுக் குற்றவாளி ஆகும்.
2004 ஆம் ஆண்டில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அமைந்தவுடன் இலங்கையோடு
ராணுவ ஒப்பந்தம் செய்ய முயன்றது. இதனால் கொடிய விபரீதம் தமிழர்களுக்கு
நேரும் என கடும் எதிர்ப்பைத் தெரிவித்ததால், ஒப்பந்தத்தில் கையெழுத்துப்
போடாமல், ரகசியமாகவே அந்த ஒப்பந்தத்தை காங்கிரஸ் அரசு செயல்படுத்தியது.
இலங்கையின் முப்படைகளுக்கும் தேவையான சக்திவாய்ந்த நவீன ஆயுதங்களைத்
தந்தது. பலாலி விமான தளத்தை இந்திய விமானப்படை தன் செலவில் பழுது பார்த்து
புதுப்பித்தது. சிங்களரின் வான்வெளித் தாக்குதலுக்கு ரடார்களைக் கொடுத்தது.
இந்தியாவின் முப்படைத் தளபதிகளை இலங்கைக்கு இரகசியமாக அனுப்பி வைத்து,
விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை இந்தியாவே இயக்கியது.
இலங்கை கடற்படையோடு இந்திய கடற்படை 2007 இல் தகவல் பரிமாற்ற ஒப்பந்தம்
போட்டது. “இந்திய கடற்படையினுடைய உதவியால்தான் விடுதலைப் புலிகளுக்கு வந்த
14 கப்பல்களை கடலில் மூழ்கடித்தோம்” என சிங்கள கடற்படை துணைத் தளபதியே
பகிரங்கமாகச் சொன்னான்.
களத்தில் ஆயுதம் ஏந்தாத தமிழ் மக்கள், குழந்தைகள், தாய்மார்கள், வயது
முதிர்ந்தோர், நோயாளிகள் என ஒரு லட்சத்து 37 ஆயிரம் தமிழர்கள்
முள்ளிவாய்க்காலில் முடிந்த இறுதிக் கட்ட யுத்தத்தின் போது துடிக்கத்
துடிக்கக் கொல்லப்பட்டதை ஐ.நா.வின் மூவர் குழு அறிக்கையே
அம்பலப்படுத்தியது.
சிங்கள ராணுவத்தினர் மருத்துவமனைகள் மீதும், சின்னஞ்சிறு பிள்ளைகள் நடுங்கி
ஒடுங்கிய பதுங்கு குழிகள் மீதும் குண்டு வீசிக் கொன்ற செயல் இரண்டாம்
உலகப்போருக்குப் பின்னர் நடைபெற்ற கொடிய மனிதப் பேரழிவுகளில் ஒன்றாகும்.
சிங்கள ராணுவம் என்பது காட்டுமிராண்டித் தனமாக தமிழர்களை மனித வேட்டை ஆடிய
கொடியோர் கூட்டமாகும்.
“இந்திய அரசும்-இந்திய ராணுவமும் தான் நாங்கள் நடத்திய போரை இயக்கியது”
என்று சிங்கள அமைச்சர்களும், அதிபர் கொடியவன் ராஜபக்சேயும் மமதையோடு
கூறினர். இந்திய ராணுத் தளபதியை கொழும்புக்கு அழைத்துச் சென்று விருதும்
வழங்கினர்.
சிங்களர் கொடுஞ்செயலை எதிர்த்து, மைய அரசைக் கண்டித்து முத்துக்குமார்
உள்ளிட்ட 19 வீரத் தமிழ் இளைஞர்கள் தீக்குளித்து மடிந்தனர். இத்தனைக்குப்
பிறகும் ராஜபக்சேவை இந்தியாவுக்கு திரும்பத் திரும்ப அழைத்துக் கொண்டு
வந்து விருந்து வைத்து காங்கிரஸ் அரசு வரவேற்றது. சிங்கள
விமானப்படையினருக்கும், இராணுவத்தினருக்கும் தமிழ்நாட்டில் மத்திய அரசு
பயிற்சி கொடுத்தது. தமிழ்நாட்டில் எழுந்த எதிர்ப்பை மத்திய அரசு துச்சமாகக்
கருதியது.
இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டம்
வெலிங்டனில் சிங்கள ராணுவத்தினருக்கு பயிற்சி கொடுப்பதை எதிர்த்து
போராட்டங்கள் நடைபெற்றன. தமிழக முதல்வர் இதற்குக் கடும் எதிர்ப்பைத்
தெரிவித்து, பிரதமருக்கு மூன்று கடிதங்களும் எழுதினார்.
வெலிங்டனில் இருந்து சிங்கள ராணுவத்தினர் வெளியேற்றப்பட்டுவிட்டதாக மத்திய
அரசு ஒரு பொய்யான தகவலை முதலில் கொடுத்தது. உண்மை வெளிவந்து எதிர்ப்பு
வலுத்த பின்னரே, வெலிங்டனில் இருந்து அவர்கள் வெளியேற்றப்பட்டாலும்,
இந்தியாவின் வேறுறொரு பகுதியில் பயிற்சி பெற்றனர்.
ஒவ்வொரு நாளும் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் தாக்குவதும், பல
நேரங்களில் நமது மீனவர்கள் அதனால் கொல்லப்படுவதும் அன்றாட தொடர்
நிகழ்ச்சியாகி விட்டது.
இத்தகைய சூழலில் இலங்கை ராணுவத்தின் விங் காமாண்டர் பண்டார தச
நாயகேவுக்கும், மேஜர் ஹரிசந்திராவுக்கும் இந்த மே மாதம் 27 ஆம் தேதியில்
இருந்து குன்னூர் வெலிங்டனில் இந்திய ராணுவ பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி
கொடுக்கப்பட்டு வருகிறது.
தமிழக மக்களும்-தமிழ்நாடு அரசும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்த பின்னரும்,
திருட்டுத்தனமாக தமிழ்நாட்டில் சிங்கள ராணுவத்தினருக்கு மத்திய அரசு
பயிற்சி கொடுப்பது மன்னிக்க முடியாத துரோகம் ஆகும்.
இந்தியாவின் வேறொரு மாநில மக்களின் தொப்புள்கொடி உறவுகளை கொன்று குவிக்கும்
பிறநாட்டு ராணுவத்தை இந்தியாவுக்கு அழைத்து வந்து விருந்து வைக்க
முடியுமா? பயிற்சி தர முடியுமா?
தமிழ்நாட்டை - தமிழக மக்களை கிள்ளுக் கீரையாக நினைத்து மத்திய காங்கிரஸ்
அரசு இந்த அக்கிரமத்தைச் செய்கிறது. இதில் மிக அதிர்ச்சி தருகின்ற செய்தி
யாதெனில், மே 27 ஆம் தேதி அன்று தஞ்சாவூரில் இந்திய ராணுவ அமைச்சர்
ஏ.கே.அந்தோணி, “இலங்கை ராணுவத்துக்கு தமிழ்நாட்டில் பயிற்சி தருவது இல்லை”
என்று கூறினார். ஆனால், அந்தத் தேதியில் இருந்துதான் சிங்கள
ராணுவத்தினருக்கு பயிற்சியே தொடங்கி உள்ளது.
அப்படியானால், இந்திய ராணுவத்தின் நடவடிக்கைகள் அமைச்சர் அந்தோணிக்கு
தெரியாமலே நடக்கிறதா? இந்திய ராணுத் துறையை சிங்கள அரசே இயக்குகிறதா?
இந்திய ராணுவத் தளபதிகளும், அதிகாரிகளும் ஏ.கே.அந்தோணியை முட்டாள்
ஆக்குகின்றனரா? அல்லது தமிழக மக்கள் கண்களில் மண்ணைத் தூவி விடலாம் என்று
கருதிக்கொண்டு அந்தோணி செயல்படுகிறாரா?
தலைமை அமைச்சர் டாக்டர் மன்மோகன்சிங் இதனை எல்லாம் அறிவாரா? அறிய மாட்டாரா?
ஈழத்தில் தமிழ் இனப் படுகொலைக்கு உடந்தையாகச் செயல்பட்ட ஐக்கிய
முற்போக்குக் கூட்டணி அரசும், அதில் பங்கேற்ற கட்சிகளும் தமிழ்
இனக்கொலையின் பொறுப்பாளிகள் ஆவார்கள்.
இலங்கையில் 2009 க்குப் பின்னரும் ஈழத் தமிழர்கள் வதைக்கப்படுவதும், தமிழர்
தாயகத்தில் சிங்களக் குடியேற்றம் நடைபெறுவதும், தமிழர் பகுதிகள் ராணுவ
முகாம்களாகத் தொடர்வதும் இன்று வரை தொடர்கதையாகிக்கொண்டு இருக்கிறது.
இக்கொடுமைகளை எதிர்த்து தமிழ்நாட்டின் மாணவர்கள் லட்சக்கணக்கில் போர்க்கொடி
ஏந்தி, அறவழியில் கிளர்ச்சி செய்தனர். இதற்குப் பின்னரும் தமிழர்களுக்கு
எதிராக இந்தியாவின் மத்திய அரசு செயல்படுவது நெருப்போடு விளையாடுகிற
விபரீதமாகவே விளையும்.
உடனடியாக சிங்கள ராணுவத்தினர் தமிழ்நாட்டில் இருந்து மட்டுமல்ல,
இந்தியாவில் இருந்தே வெளியேற்றப்பட வேண்டும். ஈழத் தமிழர்களுக்கும், தமிழ்
இனத்துக்கும் தீங்கும் துரோகமும் செய்து வரும் மத்திய காங்கிரஸ் அரசுக்கு
உரிய நேரத்தில், உரிய விதத்தில் தமிழக மக்கள் சரியான பாடம் கற்பிப்பார்கள்"
என்று வைகோ கூறியுள்ளார்.
-VIKADAN -
அரசே இயக்குகிறதா? என்ற கேள்வி எழுப்பியுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ,
தமிழக மக்கள் கண்களில் மண்ணைத் தூவி விடலாம் என்று கருதிக்கொண்டு மத்திய
ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி செயல்படுகிறாரா? என்றும் வினவியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், " சிங்கள அரசு நடத்திய
ஈழத் தமிழர் இனப் படுகொலையால், ரத்தம் கசியும் தமிழர்களின் நெஞ்சில்
காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசு மேலும் ஒரு சூட்டுக்கோலை திணித்துள்ளது.
தமிழ்நாட்டின் வெலிங்டனில் சிங்கள ராணுவத்தினருக்கு பயிற்சி கொடுக்க மத்திய
அரசு செய்துள்ள ஏற்பாடு, தமிழர்களுக்கு எதிரான மத்திய காங்கிரஸ் அரசு
வஞ்சகமாகத் தொடர்கின்ற துரோகத்தின் சாட்சியமாகும்.
லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை ஈவு இரக்கமின்றி சிங்கள அரசு தன் ராணுவத்தை
ஏவி நடத்திய கோரமான கொலைக் குற்றத்திற்கு இந்திய அரசும் உடந்தையாகச்
செயல்பட்ட கூட்டுக் குற்றவாளி ஆகும்.
2004 ஆம் ஆண்டில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அமைந்தவுடன் இலங்கையோடு
ராணுவ ஒப்பந்தம் செய்ய முயன்றது. இதனால் கொடிய விபரீதம் தமிழர்களுக்கு
நேரும் என கடும் எதிர்ப்பைத் தெரிவித்ததால், ஒப்பந்தத்தில் கையெழுத்துப்
போடாமல், ரகசியமாகவே அந்த ஒப்பந்தத்தை காங்கிரஸ் அரசு செயல்படுத்தியது.
இலங்கையின் முப்படைகளுக்கும் தேவையான சக்திவாய்ந்த நவீன ஆயுதங்களைத்
தந்தது. பலாலி விமான தளத்தை இந்திய விமானப்படை தன் செலவில் பழுது பார்த்து
புதுப்பித்தது. சிங்களரின் வான்வெளித் தாக்குதலுக்கு ரடார்களைக் கொடுத்தது.
இந்தியாவின் முப்படைத் தளபதிகளை இலங்கைக்கு இரகசியமாக அனுப்பி வைத்து,
விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை இந்தியாவே இயக்கியது.
இலங்கை கடற்படையோடு இந்திய கடற்படை 2007 இல் தகவல் பரிமாற்ற ஒப்பந்தம்
போட்டது. “இந்திய கடற்படையினுடைய உதவியால்தான் விடுதலைப் புலிகளுக்கு வந்த
14 கப்பல்களை கடலில் மூழ்கடித்தோம்” என சிங்கள கடற்படை துணைத் தளபதியே
பகிரங்கமாகச் சொன்னான்.
களத்தில் ஆயுதம் ஏந்தாத தமிழ் மக்கள், குழந்தைகள், தாய்மார்கள், வயது
முதிர்ந்தோர், நோயாளிகள் என ஒரு லட்சத்து 37 ஆயிரம் தமிழர்கள்
முள்ளிவாய்க்காலில் முடிந்த இறுதிக் கட்ட யுத்தத்தின் போது துடிக்கத்
துடிக்கக் கொல்லப்பட்டதை ஐ.நா.வின் மூவர் குழு அறிக்கையே
அம்பலப்படுத்தியது.
சிங்கள ராணுவத்தினர் மருத்துவமனைகள் மீதும், சின்னஞ்சிறு பிள்ளைகள் நடுங்கி
ஒடுங்கிய பதுங்கு குழிகள் மீதும் குண்டு வீசிக் கொன்ற செயல் இரண்டாம்
உலகப்போருக்குப் பின்னர் நடைபெற்ற கொடிய மனிதப் பேரழிவுகளில் ஒன்றாகும்.
சிங்கள ராணுவம் என்பது காட்டுமிராண்டித் தனமாக தமிழர்களை மனித வேட்டை ஆடிய
கொடியோர் கூட்டமாகும்.
“இந்திய அரசும்-இந்திய ராணுவமும் தான் நாங்கள் நடத்திய போரை இயக்கியது”
என்று சிங்கள அமைச்சர்களும், அதிபர் கொடியவன் ராஜபக்சேயும் மமதையோடு
கூறினர். இந்திய ராணுத் தளபதியை கொழும்புக்கு அழைத்துச் சென்று விருதும்
வழங்கினர்.
சிங்களர் கொடுஞ்செயலை எதிர்த்து, மைய அரசைக் கண்டித்து முத்துக்குமார்
உள்ளிட்ட 19 வீரத் தமிழ் இளைஞர்கள் தீக்குளித்து மடிந்தனர். இத்தனைக்குப்
பிறகும் ராஜபக்சேவை இந்தியாவுக்கு திரும்பத் திரும்ப அழைத்துக் கொண்டு
வந்து விருந்து வைத்து காங்கிரஸ் அரசு வரவேற்றது. சிங்கள
விமானப்படையினருக்கும், இராணுவத்தினருக்கும் தமிழ்நாட்டில் மத்திய அரசு
பயிற்சி கொடுத்தது. தமிழ்நாட்டில் எழுந்த எதிர்ப்பை மத்திய அரசு துச்சமாகக்
கருதியது.
இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டம்
வெலிங்டனில் சிங்கள ராணுவத்தினருக்கு பயிற்சி கொடுப்பதை எதிர்த்து
போராட்டங்கள் நடைபெற்றன. தமிழக முதல்வர் இதற்குக் கடும் எதிர்ப்பைத்
தெரிவித்து, பிரதமருக்கு மூன்று கடிதங்களும் எழுதினார்.
வெலிங்டனில் இருந்து சிங்கள ராணுவத்தினர் வெளியேற்றப்பட்டுவிட்டதாக மத்திய
அரசு ஒரு பொய்யான தகவலை முதலில் கொடுத்தது. உண்மை வெளிவந்து எதிர்ப்பு
வலுத்த பின்னரே, வெலிங்டனில் இருந்து அவர்கள் வெளியேற்றப்பட்டாலும்,
இந்தியாவின் வேறுறொரு பகுதியில் பயிற்சி பெற்றனர்.
ஒவ்வொரு நாளும் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் தாக்குவதும், பல
நேரங்களில் நமது மீனவர்கள் அதனால் கொல்லப்படுவதும் அன்றாட தொடர்
நிகழ்ச்சியாகி விட்டது.
நாயகேவுக்கும், மேஜர் ஹரிசந்திராவுக்கும் இந்த மே மாதம் 27 ஆம் தேதியில்
இருந்து குன்னூர் வெலிங்டனில் இந்திய ராணுவ பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி
கொடுக்கப்பட்டு வருகிறது.
தமிழக மக்களும்-தமிழ்நாடு அரசும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்த பின்னரும்,
திருட்டுத்தனமாக தமிழ்நாட்டில் சிங்கள ராணுவத்தினருக்கு மத்திய அரசு
பயிற்சி கொடுப்பது மன்னிக்க முடியாத துரோகம் ஆகும்.
இந்தியாவின் வேறொரு மாநில மக்களின் தொப்புள்கொடி உறவுகளை கொன்று குவிக்கும்
பிறநாட்டு ராணுவத்தை இந்தியாவுக்கு அழைத்து வந்து விருந்து வைக்க
முடியுமா? பயிற்சி தர முடியுமா?
தமிழ்நாட்டை - தமிழக மக்களை கிள்ளுக் கீரையாக நினைத்து மத்திய காங்கிரஸ்
அரசு இந்த அக்கிரமத்தைச் செய்கிறது. இதில் மிக அதிர்ச்சி தருகின்ற செய்தி
யாதெனில், மே 27 ஆம் தேதி அன்று தஞ்சாவூரில் இந்திய ராணுவ அமைச்சர்
ஏ.கே.அந்தோணி, “இலங்கை ராணுவத்துக்கு தமிழ்நாட்டில் பயிற்சி தருவது இல்லை”
என்று கூறினார். ஆனால், அந்தத் தேதியில் இருந்துதான் சிங்கள
ராணுவத்தினருக்கு பயிற்சியே தொடங்கி உள்ளது.
அப்படியானால், இந்திய ராணுவத்தின் நடவடிக்கைகள் அமைச்சர் அந்தோணிக்கு
தெரியாமலே நடக்கிறதா? இந்திய ராணுத் துறையை சிங்கள அரசே இயக்குகிறதா?
இந்திய ராணுவத் தளபதிகளும், அதிகாரிகளும் ஏ.கே.அந்தோணியை முட்டாள்
ஆக்குகின்றனரா? அல்லது தமிழக மக்கள் கண்களில் மண்ணைத் தூவி விடலாம் என்று
கருதிக்கொண்டு அந்தோணி செயல்படுகிறாரா?
தலைமை அமைச்சர் டாக்டர் மன்மோகன்சிங் இதனை எல்லாம் அறிவாரா? அறிய மாட்டாரா?
ஈழத்தில் தமிழ் இனப் படுகொலைக்கு உடந்தையாகச் செயல்பட்ட ஐக்கிய
முற்போக்குக் கூட்டணி அரசும், அதில் பங்கேற்ற கட்சிகளும் தமிழ்
இனக்கொலையின் பொறுப்பாளிகள் ஆவார்கள்.
இலங்கையில் 2009 க்குப் பின்னரும் ஈழத் தமிழர்கள் வதைக்கப்படுவதும், தமிழர்
தாயகத்தில் சிங்களக் குடியேற்றம் நடைபெறுவதும், தமிழர் பகுதிகள் ராணுவ
முகாம்களாகத் தொடர்வதும் இன்று வரை தொடர்கதையாகிக்கொண்டு இருக்கிறது.
இக்கொடுமைகளை எதிர்த்து தமிழ்நாட்டின் மாணவர்கள் லட்சக்கணக்கில் போர்க்கொடி
ஏந்தி, அறவழியில் கிளர்ச்சி செய்தனர். இதற்குப் பின்னரும் தமிழர்களுக்கு
எதிராக இந்தியாவின் மத்திய அரசு செயல்படுவது நெருப்போடு விளையாடுகிற
விபரீதமாகவே விளையும்.
உடனடியாக சிங்கள ராணுவத்தினர் தமிழ்நாட்டில் இருந்து மட்டுமல்ல,
இந்தியாவில் இருந்தே வெளியேற்றப்பட வேண்டும். ஈழத் தமிழர்களுக்கும், தமிழ்
இனத்துக்கும் தீங்கும் துரோகமும் செய்து வரும் மத்திய காங்கிரஸ் அரசுக்கு
உரிய நேரத்தில், உரிய விதத்தில் தமிழக மக்கள் சரியான பாடம் கற்பிப்பார்கள்"
என்று வைகோ கூறியுள்ளார்.
-VIKADAN -
Similar topics
» அ.தி.மு.க. ஆட்சியில் மதுக் கடைகளை அரசே ஏற்றதன் பின்னணி என்ன? முதல்வர் கேள்வி
» மீனவர்கள் உயிர்பலிக்கு மத்திய அரசே பொறுப்பு: வைகோ ஆவேசம்
» சிங்கள வீரர்களை உபசரிக்கும் மத்திய அரசின் தொடர் துரோகம் : வைகோ
» இலங்கையில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்! வைகோ"
» குட்டிமணியை சிங்கள அரசிடம் ஒப்படைத்தது யார்..? நடந்தது என்ன..? வைகோ வெளியிட்ட திடுக்கிடும் தகவல்..!
» மீனவர்கள் உயிர்பலிக்கு மத்திய அரசே பொறுப்பு: வைகோ ஆவேசம்
» சிங்கள வீரர்களை உபசரிக்கும் மத்திய அரசின் தொடர் துரோகம் : வைகோ
» இலங்கையில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்! வைகோ"
» குட்டிமணியை சிங்கள அரசிடம் ஒப்படைத்தது யார்..? நடந்தது என்ன..? வைகோ வெளியிட்ட திடுக்கிடும் தகவல்..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|