Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:04 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 01, 2024 7:37 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Apr 27, 2024 3:03 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்
2 posters
TamilYes :: பொதுஅறிவு களம் :: அறிவுக்களஞ்சியம் :: பொதுஅறிவு களம் :: பொதுஅறிவு
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்
போலீஸாரால் கைது செய்யப்படுவதை அரசியல்வாதிகள் விரும்புவது ஏன் ?
அரசியல்வாதி
என்றால் ( மக்களுக்காக ! ). ஒருமுறையாவது ஜெயிலுக்குப் போயிருக்க வேண்டும்
என்கிற அபத்தமான தகுதி இங்கு உண்டு. ( சுதந்திரப் போராட்டம் என்பது வேறு
!). ஆகவேதான் ஏதாவது போராட்டத்தை ஆரம்பித்து, சில நாட்கள் ( மட்டுமே !)
ஜெயிலில் இருந்து விட்டு வருவார்கள். சில அரசியல்வாதிகள் வேறு
குற்றங்களுக்காக ( எப்போதாவது ) கைது செய்யப்படுவதும் உண்டு. அப்போதும்
வேனில் ஏறும் போது, "" அடக்குமுறை வீழ்க !'' என்று கூவி, தெருவில்
கூடியிருக்கும் மக்களைத் திசை திருப்புவார்கள் !
அரசியல்வாதி
என்றால் ( மக்களுக்காக ! ). ஒருமுறையாவது ஜெயிலுக்குப் போயிருக்க வேண்டும்
என்கிற அபத்தமான தகுதி இங்கு உண்டு. ( சுதந்திரப் போராட்டம் என்பது வேறு
!). ஆகவேதான் ஏதாவது போராட்டத்தை ஆரம்பித்து, சில நாட்கள் ( மட்டுமே !)
ஜெயிலில் இருந்து விட்டு வருவார்கள். சில அரசியல்வாதிகள் வேறு
குற்றங்களுக்காக ( எப்போதாவது ) கைது செய்யப்படுவதும் உண்டு. அப்போதும்
வேனில் ஏறும் போது, "" அடக்குமுறை வீழ்க !'' என்று கூவி, தெருவில்
கூடியிருக்கும் மக்களைத் திசை திருப்புவார்கள் !
Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்
காப்புரிமை எப்போது, எங்கு புழக்கத்துக்கு வந்தது மதன்ஜி ?
கிரேக்க,
ரோம் நாடுகளில், ப்ளேட்டோ, அரிஸ்டாட்டில் மற்றும் இலக்கிய, நாடக மேதைகள்
காலத்தில் அவர்களுடைய தனிப்பட்ட செல்வாக்கின் காரணமாக ஒரு விதமான
காப்புரிமை இருந்ததுண்டு. அதோடு சரி. பிறகு, 1710-ல் பிரிட்டனில் முதல்
காப்புரிமைச் சட்டம் வந்தது. 1790-ல் அமெரிக்காவிலும் சட்டம் வந்தது.
1790-ல் அமெரிக்காவிலும் சட்டம் வந்தது. வீக்கான சம்பிரதாயத்துக்கு
(பர்மிஷன் வாங்கினால் போதும் !) சட்டங்கள் தான். சென்ற நூற்றாண்டில்தான்
உலகரீதியில் விலாவரியாக காப்புரிமைச் சட்டத்தைத் தீட்டினார்கள்.
கிரேக்க,
ரோம் நாடுகளில், ப்ளேட்டோ, அரிஸ்டாட்டில் மற்றும் இலக்கிய, நாடக மேதைகள்
காலத்தில் அவர்களுடைய தனிப்பட்ட செல்வாக்கின் காரணமாக ஒரு விதமான
காப்புரிமை இருந்ததுண்டு. அதோடு சரி. பிறகு, 1710-ல் பிரிட்டனில் முதல்
காப்புரிமைச் சட்டம் வந்தது. 1790-ல் அமெரிக்காவிலும் சட்டம் வந்தது.
1790-ல் அமெரிக்காவிலும் சட்டம் வந்தது. வீக்கான சம்பிரதாயத்துக்கு
(பர்மிஷன் வாங்கினால் போதும் !) சட்டங்கள் தான். சென்ற நூற்றாண்டில்தான்
உலகரீதியில் விலாவரியாக காப்புரிமைச் சட்டத்தைத் தீட்டினார்கள்.
Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்
காந்தி குல்லாய் நேருவுக்கு அழகா, நேதாஜிக்கு அழகா ?
சுபாஷ்
சந்திரபோஸ் தீரம் மிகுந்த போராளி. காந்திஜியின் அணுகுமுறையை
"சென்ட்டிமென்டல் டிராமா'' வாக அவர் வெறுத்தார். ராணுவ யூனிஃபார்ம் உடையும்
காக்கி குல்லாயும்தான் அவருக்குப் பொருத்தமாக இருந்தது. இருப்பினும்,
ஆரம்பத்தில் காங்கிரஸ் மாநாடுகளில் காந்தி குல்லாயை நேதாஜி அணிந்ததுண்டு.
மென்மையான தோற்றத்தைத் தந்த ( இப்போது கூட காந்தி குல்லாயோடு வீச்சரிவாளைச்
சுழற்றும் ஒரு ஆளை நம்மால் கற்பனை செய்ய முடியவில்லையே ! ) காந்தி
குல்லாய், நேருவுக்காகவே உருவானதுபோலத்தான் தோன்றுகிறது. காந்தி குல்லாயில்
மிகமிக வசீகரமாக ( திருமதி மவுன்ட் பேட்டனே மயங்கும் அளவுக்கு ) இருந்தவர்
நேரு மட்டுமே !
சுபாஷ்
சந்திரபோஸ் தீரம் மிகுந்த போராளி. காந்திஜியின் அணுகுமுறையை
"சென்ட்டிமென்டல் டிராமா'' வாக அவர் வெறுத்தார். ராணுவ யூனிஃபார்ம் உடையும்
காக்கி குல்லாயும்தான் அவருக்குப் பொருத்தமாக இருந்தது. இருப்பினும்,
ஆரம்பத்தில் காங்கிரஸ் மாநாடுகளில் காந்தி குல்லாயை நேதாஜி அணிந்ததுண்டு.
மென்மையான தோற்றத்தைத் தந்த ( இப்போது கூட காந்தி குல்லாயோடு வீச்சரிவாளைச்
சுழற்றும் ஒரு ஆளை நம்மால் கற்பனை செய்ய முடியவில்லையே ! ) காந்தி
குல்லாய், நேருவுக்காகவே உருவானதுபோலத்தான் தோன்றுகிறது. காந்தி குல்லாயில்
மிகமிக வசீகரமாக ( திருமதி மவுன்ட் பேட்டனே மயங்கும் அளவுக்கு ) இருந்தவர்
நேரு மட்டுமே !
Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்
"சந்திரலேகா''
படத்தின் டைட்டில் கார்டில் முக்கிய நடிகர்களான எம்.கே.ராதா.
ரஞ்சன்,என்.எஸ்.கே., போன்றவர்களின் பெயர்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு,
கதாநாயகியான அன்றைய கனவுக்கன்னி டி.ஆர்.ராஜகுமாரியின் பெயரை முதலில்
போடுகிறார்கள். இன்றைய கதாநாயகர்கள் இதற்கு ஒப்புக்கொள்வார்களா ?
டி.ஆர்.ராஜகுமாரி
"கனவுக்கன்னி'யாகக் கொடிகட்டிப் பறந்துகொண்டு இருந்தபோது,எம்.கே.ராதாவும்
ரஞ்சனும் அநேகமாகப் புதுமுகங்கள்தான். தவிர, அப்போது பல ஹாலிவுட் படங்களில்
க்ரெட்டோ கார்போ, எலிசபெத் டெய்லர், ஆவா கார்ட்னர் போன்ற பெரும்
நடிகைகளின் பெயரைப் பெரிசாக முன்னிலைப்படுத்திப் போடுவது சாதாரண விஷயம்.
""ராஜகுமாரியும் அவர்களுக்கு இணையானவர்தானே ?!'' என்று எஸ்.எஸ். வாசன்
கருதியிருக்கலாம்.
படத்தின் டைட்டில் கார்டில் முக்கிய நடிகர்களான எம்.கே.ராதா.
ரஞ்சன்,என்.எஸ்.கே., போன்றவர்களின் பெயர்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு,
கதாநாயகியான அன்றைய கனவுக்கன்னி டி.ஆர்.ராஜகுமாரியின் பெயரை முதலில்
போடுகிறார்கள். இன்றைய கதாநாயகர்கள் இதற்கு ஒப்புக்கொள்வார்களா ?
டி.ஆர்.ராஜகுமாரி
"கனவுக்கன்னி'யாகக் கொடிகட்டிப் பறந்துகொண்டு இருந்தபோது,எம்.கே.ராதாவும்
ரஞ்சனும் அநேகமாகப் புதுமுகங்கள்தான். தவிர, அப்போது பல ஹாலிவுட் படங்களில்
க்ரெட்டோ கார்போ, எலிசபெத் டெய்லர், ஆவா கார்ட்னர் போன்ற பெரும்
நடிகைகளின் பெயரைப் பெரிசாக முன்னிலைப்படுத்திப் போடுவது சாதாரண விஷயம்.
""ராஜகுமாரியும் அவர்களுக்கு இணையானவர்தானே ?!'' என்று எஸ்.எஸ். வாசன்
கருதியிருக்கலாம்.
Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்
எருமை மாடுகள் மட்டும் ஏன் மிகவும் சோம்பேறியாக உள்ளன ?''
எருமை
மாடு உங்களை நேருக்கு நேர் கூர்ந்துகூடப் பார்க்காது. ( அதாவது சட்டை
செய்யாது.) நமக்குப் பொறாமை வரக்கூடிய அளவுக்கு, எல்லாம் கடந்த ஞானியைப்
போல, ""ரிலாக்ஸ்'' ஆக அது இருக்கிறது. வெயிலும் மழையும் அதற்கு ஒன்றே. இதை
"இரு வினையொப்பு' என்பார்கள் புலவர்கள். மரணத்தின் ரகசியங்கள் எமதர்மனின்
வாகனமாகிய எருமைக்கு நிஜமாகவே தெரியுமோ என்றுகூடத் தோன்றுகிறது. நான்கூ
அதைப் போல ஒரே இடத்தில் நகராமல் உட்கார்ந்திருப்பது உண்டு. கல்யாண வீட்டுச்
சாப்பாட்டுப்பந்தியில் குறுக்கும் நெடுக்கும் ஓடும் சிலரைப் போல அல்லாமல்,
சாவதானமாக இருந்தால் அது சோம்பேறித்தனமா ? இதை நான் ஆட்சேபிக்கிறேன்.
எருமை
மாடு உங்களை நேருக்கு நேர் கூர்ந்துகூடப் பார்க்காது. ( அதாவது சட்டை
செய்யாது.) நமக்குப் பொறாமை வரக்கூடிய அளவுக்கு, எல்லாம் கடந்த ஞானியைப்
போல, ""ரிலாக்ஸ்'' ஆக அது இருக்கிறது. வெயிலும் மழையும் அதற்கு ஒன்றே. இதை
"இரு வினையொப்பு' என்பார்கள் புலவர்கள். மரணத்தின் ரகசியங்கள் எமதர்மனின்
வாகனமாகிய எருமைக்கு நிஜமாகவே தெரியுமோ என்றுகூடத் தோன்றுகிறது. நான்கூ
அதைப் போல ஒரே இடத்தில் நகராமல் உட்கார்ந்திருப்பது உண்டு. கல்யாண வீட்டுச்
சாப்பாட்டுப்பந்தியில் குறுக்கும் நெடுக்கும் ஓடும் சிலரைப் போல அல்லாமல்,
சாவதானமாக இருந்தால் அது சோம்பேறித்தனமா ? இதை நான் ஆட்சேபிக்கிறேன்.
Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்
இங்கிலாந்து ராணி
எலிசபெத் Vergin Queen என்று அழைக்கப்பட்டதாகவும், அவர் பெயரில் வர்ஜீனியா
என்று அமெரிக்காவின் மாநிலத்துக்குப் பெயரிட்டப்பட்டதாகவும் படித்தேன்.
Vergin Queen என அவர் அழைக்கப்பட்டதற்கு என்ன காரணம் ?
உலக
வரலாற்றில் ""கன்னி மகாராணி'' என்று அழைக்கப்படுவர் முதலாம் எலிசபெத்
மட்டுமே ! பெரிய அழகி இல்லை என்றாலும், நிரம்ப படித்த மகா கெட்டிக்காரி.
எவ்வளவு புகழ்ந்தாலும் ராணிக்கு அலுக்காது. கவிஞர்கள் அவளை வர்ணித்துப்
பாடிக்கொண்டே இருந்தார்கள் !
நூற்றுக்கணக்கான இளம் பிரபுக்கள்
அவளோடு படுக்கக் காத்துக்கிடந்தார்கள். ஜொள்ளு விடுபவர்களை மிகவும்
ரசித்தாள் ராணி. ஆனால், படுக்கையறைக்குள் நுழைய முடியாது. அவளுடைய
""ரசிகர்களில்' ஒருவரான சர் வால்டேர் ராலே ( யு.எஸ். மாநிலத்துக்கு ) வைத்த
பெயர்தான் வர்ஜீனியா. மகாராணியின் ""ஹைமன்'' திரை ரொம்ப ஸ்டிராங்காக
இருந்ததால், யாராலும் அவளுடன் முழுமையான உடலுறவு கொள்ள முடிந்ததில்லை என்று
அப்போதே சில டாக்டர்கள் குறிப்பிட்டதுண்டு. மற்றபடி வெர்ஜினாவது, மண்ணாவது
!
எலிசபெத் Vergin Queen என்று அழைக்கப்பட்டதாகவும், அவர் பெயரில் வர்ஜீனியா
என்று அமெரிக்காவின் மாநிலத்துக்குப் பெயரிட்டப்பட்டதாகவும் படித்தேன்.
Vergin Queen என அவர் அழைக்கப்பட்டதற்கு என்ன காரணம் ?
உலக
வரலாற்றில் ""கன்னி மகாராணி'' என்று அழைக்கப்படுவர் முதலாம் எலிசபெத்
மட்டுமே ! பெரிய அழகி இல்லை என்றாலும், நிரம்ப படித்த மகா கெட்டிக்காரி.
எவ்வளவு புகழ்ந்தாலும் ராணிக்கு அலுக்காது. கவிஞர்கள் அவளை வர்ணித்துப்
பாடிக்கொண்டே இருந்தார்கள் !
நூற்றுக்கணக்கான இளம் பிரபுக்கள்
அவளோடு படுக்கக் காத்துக்கிடந்தார்கள். ஜொள்ளு விடுபவர்களை மிகவும்
ரசித்தாள் ராணி. ஆனால், படுக்கையறைக்குள் நுழைய முடியாது. அவளுடைய
""ரசிகர்களில்' ஒருவரான சர் வால்டேர் ராலே ( யு.எஸ். மாநிலத்துக்கு ) வைத்த
பெயர்தான் வர்ஜீனியா. மகாராணியின் ""ஹைமன்'' திரை ரொம்ப ஸ்டிராங்காக
இருந்ததால், யாராலும் அவளுடன் முழுமையான உடலுறவு கொள்ள முடிந்ததில்லை என்று
அப்போதே சில டாக்டர்கள் குறிப்பிட்டதுண்டு. மற்றபடி வெர்ஜினாவது, மண்ணாவது
!
Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்
மழைக் காலங்களில் கொசுவின் றெக்கைகள் நனைந்துவிடுவதால் தானே கொசுக்கள்அதிகம் வெளியே வருவது இல்லை?
உண்மைதான்!
ஆனால் ‘மழை பெய்யும்போது மட்டும்’ என்று சொல்லுங்கள். மழை நின்றவுடன்
‘வட்டியும் முதலுமாக’ கொசுக்களின் அட்டாக் இன்னும் அதிகரிக்கும். இரண்டு
நாட்கள் ‘டாஸ்மாக்’ கடை களை மூடிவிட்டுப் பிறகு திறந்தால், ஆவேசமான
ஆர்வத்துடன் கூட்டம் அலை மோதும் இல்லையா?!
உண்மைதான்!
ஆனால் ‘மழை பெய்யும்போது மட்டும்’ என்று சொல்லுங்கள். மழை நின்றவுடன்
‘வட்டியும் முதலுமாக’ கொசுக்களின் அட்டாக் இன்னும் அதிகரிக்கும். இரண்டு
நாட்கள் ‘டாஸ்மாக்’ கடை களை மூடிவிட்டுப் பிறகு திறந்தால், ஆவேசமான
ஆர்வத்துடன் கூட்டம் அலை மோதும் இல்லையா?!
Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்
பார்வையே இல்லாதபோது வெளவாலுக்குக் கண் எதற்கு?
அது கண்கள் அல்ல… அதன் மிச்சம்! வெளவால்கள் உருவாகும்போது கண்களுக்கான
‘செல்’கள் உருவாக ஆரம்பித்து, பிறகு தேவையில்லை என்று அகன்று விடுகின்றன.
ஆணுக்கும் முலைக்காம்பு (Nipple) இருப்பது போலத்தான்!
அது கண்கள் அல்ல… அதன் மிச்சம்! வெளவால்கள் உருவாகும்போது கண்களுக்கான
‘செல்’கள் உருவாக ஆரம்பித்து, பிறகு தேவையில்லை என்று அகன்று விடுகின்றன.
ஆணுக்கும் முலைக்காம்பு (Nipple) இருப்பது போலத்தான்!
Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்
இறைபக்தி இல்லாத இசை மேதைகள் இருக்கின்றார்களா?
இறைவனைப்
பார்க்க முடியுமா? ஆனால் கேட்க முடியும்… அதுதான் இசை. எல்லா
நாகரிகங்களிலும் நாடுகளிலும், அத்தனைவிதமான இசை வடிவங்களும் இறைவனுடன்
இரண்டறக் கலந்தே இருக்கின்றன. நம் நாட்டைப்பற்றிச் சொல்லத் தேவையில்லை.
மேலை நாட்டுப் புராணப்படியும் ஜீயஸ் (தேவேந்திரன்) பெற்றெடுத்த ஒரு
தேவதைதான் (மூசெ) மனிதனுக்கு இசை தந்தது. (’மூசெ’ லிருந்துதான் மூசிச்)
சுருக்கமாக, இசைக் கலைஞர்களுக்கு இசை என்பதே இறைவன்தான். குறிப்பாக எந்த
மதத்தின் கடவுள், அவர் பெயர் என்ன என்றெல்லாம் அபத்தமாக நாம் கேட்க வேண்டாம்!
இறைவனைப்
பார்க்க முடியுமா? ஆனால் கேட்க முடியும்… அதுதான் இசை. எல்லா
நாகரிகங்களிலும் நாடுகளிலும், அத்தனைவிதமான இசை வடிவங்களும் இறைவனுடன்
இரண்டறக் கலந்தே இருக்கின்றன. நம் நாட்டைப்பற்றிச் சொல்லத் தேவையில்லை.
மேலை நாட்டுப் புராணப்படியும் ஜீயஸ் (தேவேந்திரன்) பெற்றெடுத்த ஒரு
தேவதைதான் (மூசெ) மனிதனுக்கு இசை தந்தது. (’மூசெ’ லிருந்துதான் மூசிச்)
சுருக்கமாக, இசைக் கலைஞர்களுக்கு இசை என்பதே இறைவன்தான். குறிப்பாக எந்த
மதத்தின் கடவுள், அவர் பெயர் என்ன என்றெல்லாம் அபத்தமாக நாம் கேட்க வேண்டாம்!
Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்
மணிபர்ஸ் உபயோகிக்கும் பழக்கம் இருக்கா?
விகடனில்
சேர்ந்த புதிதில் ரொம்பப் பெருமையாக மணிபர்ஸ் உபயோகித்தது உண்டு. ஒரு முறை
பஸ்ஸில் அதை பிக்பாக்கெட் அடித்துவிட்டார்கள். அடுத்த ஸ்டாப்பில்
கண்டக்டர் என்னை இறக்கி விட்டுவிட்டார். பர்ஸில் இருந்தது சுமார் 40
ரூபாய். இடிந்து போய்விட்டேன். அதிலிருந்து பர்ஸ் கிடையாது. பிறகு ‘லெதர்
பேக்’ ஒன்றைக் கையோடு (கெட்டியாகப் பிடித்துக்கொண்டு) எடுத்துச் செல்வேன்.
அண்மைக் காலமாக நான் சந்திக்கும் வி.ஐ.பி-க்கள் அனை வரும் கை
வீசிக்கொண்டுதான் வருகிறார்கள். நாமும் அப்படி இருந் தால், மதிப்பு கூடுமோ
என்று ஓர் அல்ப ஆசை. இப்போது மீண்டும் மணிபர்ஸ் வந்துவிட்டது. பிக்பாக்கெட்
அடிப்பார்கள் என்பதால் பஸ்ஸில் அவ்வளவாகப் போவது இல்லை. பார்ப்போம்!
விகடனில்
சேர்ந்த புதிதில் ரொம்பப் பெருமையாக மணிபர்ஸ் உபயோகித்தது உண்டு. ஒரு முறை
பஸ்ஸில் அதை பிக்பாக்கெட் அடித்துவிட்டார்கள். அடுத்த ஸ்டாப்பில்
கண்டக்டர் என்னை இறக்கி விட்டுவிட்டார். பர்ஸில் இருந்தது சுமார் 40
ரூபாய். இடிந்து போய்விட்டேன். அதிலிருந்து பர்ஸ் கிடையாது. பிறகு ‘லெதர்
பேக்’ ஒன்றைக் கையோடு (கெட்டியாகப் பிடித்துக்கொண்டு) எடுத்துச் செல்வேன்.
அண்மைக் காலமாக நான் சந்திக்கும் வி.ஐ.பி-க்கள் அனை வரும் கை
வீசிக்கொண்டுதான் வருகிறார்கள். நாமும் அப்படி இருந் தால், மதிப்பு கூடுமோ
என்று ஓர் அல்ப ஆசை. இப்போது மீண்டும் மணிபர்ஸ் வந்துவிட்டது. பிக்பாக்கெட்
அடிப்பார்கள் என்பதால் பஸ்ஸில் அவ்வளவாகப் போவது இல்லை. பார்ப்போம்!
Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்
சுப்ரீம் பவரினால் (கடவுள்) ஏன் எடுத்த எடுப்பிலேயே ஒரு சூப்பர் மனிதனை (அதாவது நம்மை) உருவாக்க முடியவில்லை?!
அதாவது,
ஒரு குரங்கு மனிதனைத்தான் உருவாக்க முடிந்தது, ஆகவே உருவாக்கியவருக்கு
‘சூப்பர் பவர்’ இல்லை என்கிறீர்கள். தான் ரசிப்பதற்காக, அந்த சுப்ரீம்
பவர், பரிணாம வளர்ச்சி என்ற ஒன்றையும் உருவாக்கியிருக்கலாம் இல்லையா?!
அதாவது,
ஒரு குரங்கு மனிதனைத்தான் உருவாக்க முடிந்தது, ஆகவே உருவாக்கியவருக்கு
‘சூப்பர் பவர்’ இல்லை என்கிறீர்கள். தான் ரசிப்பதற்காக, அந்த சுப்ரீம்
பவர், பரிணாம வளர்ச்சி என்ற ஒன்றையும் உருவாக்கியிருக்கலாம் இல்லையா?!
Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்
தொப்புளுக்கு ‘செக்ஸில்’ உள்ள பங்கு என்ன?
தொப்புளுக்கு எந்தப் பங்கும் இல்லை. ஆனால், பாலூட்டிகள் மேற்கொண்ட உறவின் மூலம் பிறந்தவர் என்பதை நிரூபிப்பதற்கே தொப்புள்!
தொப்புளுக்கு எந்தப் பங்கும் இல்லை. ஆனால், பாலூட்டிகள் மேற்கொண்ட உறவின் மூலம் பிறந்தவர் என்பதை நிரூபிப்பதற்கே தொப்புள்!
Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்
மதுரையை ஆண்ட ராணி மங்கம்மாவின் மகன் முத்து வீரப்பரின் துணிச்சலைக்
கண்டு பேரரசர் ஒளரங்கசீப் வியந்துபோனாராமே?
டெல்லி
பாதுஷாவான ஒளரங்கசீப், தன்னுடைய செருப்பு ஒன்றை யானை மீது வைத்து
தென்னாட்டுக்கு ஊர்வலமாக அனுப்பினார். அந்தச் செருப்பு பயணிக்கும்
ராஜ்ஜியங்களின் மன்னர்கள் அதற்குத் தலை வணங்கி மொகலாய அரசுக்குக் கப்பம்
கட்ட வேண்டும். முத்து வீரப்பர் அந்தச் செருப்பை வணங் காமல்
சர்வசாதாரணமாகத் தன் காலில் அணிந்து கொண்டு மொகலாய படைத் தளபதியிடம்,
‘மனிதர்களுக்கு இரண்டு கால்கள் உண்டு என்பது உங்கள் பாதுஷாவுக்குத்
தெரியாதா? இன்னொரு செருப்பு எங்கே?’ என்று இகழ்ச்சியாகக் கேட்க, கூடவே
மெகலாய வீரர்கள் விரட்டி அடிக்கப்பட்டனர். இது பற்றிக் கேள்விப்பட்ட
ஒளரங்கசீப் முதலில் கோபப்பட்டாலும், பிறகு யோசித்து, ‘செருப்பு ஊர்வலப்
பழக்கத்தை’க் கைவிட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கான திட்டவட்டமான சான்றுகள்
இல்லை என்றாலும், அ.கி.பரந்தாமனார், தான் எழுதிய ‘மதுரை நாயக்கர் வரலாறு’
புத்தகத்தில் இது உண்மையில் நடந்ததாகவே குறிப்பிடுகிறார்!
கண்டு பேரரசர் ஒளரங்கசீப் வியந்துபோனாராமே?
டெல்லி
பாதுஷாவான ஒளரங்கசீப், தன்னுடைய செருப்பு ஒன்றை யானை மீது வைத்து
தென்னாட்டுக்கு ஊர்வலமாக அனுப்பினார். அந்தச் செருப்பு பயணிக்கும்
ராஜ்ஜியங்களின் மன்னர்கள் அதற்குத் தலை வணங்கி மொகலாய அரசுக்குக் கப்பம்
கட்ட வேண்டும். முத்து வீரப்பர் அந்தச் செருப்பை வணங் காமல்
சர்வசாதாரணமாகத் தன் காலில் அணிந்து கொண்டு மொகலாய படைத் தளபதியிடம்,
‘மனிதர்களுக்கு இரண்டு கால்கள் உண்டு என்பது உங்கள் பாதுஷாவுக்குத்
தெரியாதா? இன்னொரு செருப்பு எங்கே?’ என்று இகழ்ச்சியாகக் கேட்க, கூடவே
மெகலாய வீரர்கள் விரட்டி அடிக்கப்பட்டனர். இது பற்றிக் கேள்விப்பட்ட
ஒளரங்கசீப் முதலில் கோபப்பட்டாலும், பிறகு யோசித்து, ‘செருப்பு ஊர்வலப்
பழக்கத்தை’க் கைவிட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கான திட்டவட்டமான சான்றுகள்
இல்லை என்றாலும், அ.கி.பரந்தாமனார், தான் எழுதிய ‘மதுரை நாயக்கர் வரலாறு’
புத்தகத்தில் இது உண்மையில் நடந்ததாகவே குறிப்பிடுகிறார்!
Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்
கணவன் - மனைவி இடையே நடைபெறும் பிரச்னையில் நியாயத்தை விட்டுவிட்டு,
பெண்கள் தங்கள் தாய் வீட்டுக்கே பரிந்து பேசுகிறார்களே? நியாயம் என்னாவது?
பெற்று
வளர்த்தவர்களையும் அத்தனை பேரையும் விட்டுவிட்டு, யாரோ ஓர் அந்நியனுடன்
வந்து சேர்ந்துகொண்டவள்தான் மனைவி. ஆழ் மனதில் அந்தக் குற்ற உணர்வு
இருக்குமா, இருக்காதா? மற்றபடி ஆஃப்டர் ஆல் கணவன் - மனைவிபிரச்னை தானே? ஏதோ
காஷ்மீர் பிரச்னை மாதிரி டென்ஷன் ஆக வேண்டியது இல்லை!
பெண்கள் தங்கள் தாய் வீட்டுக்கே பரிந்து பேசுகிறார்களே? நியாயம் என்னாவது?
பெற்று
வளர்த்தவர்களையும் அத்தனை பேரையும் விட்டுவிட்டு, யாரோ ஓர் அந்நியனுடன்
வந்து சேர்ந்துகொண்டவள்தான் மனைவி. ஆழ் மனதில் அந்தக் குற்ற உணர்வு
இருக்குமா, இருக்காதா? மற்றபடி ஆஃப்டர் ஆல் கணவன் - மனைவிபிரச்னை தானே? ஏதோ
காஷ்மீர் பிரச்னை மாதிரி டென்ஷன் ஆக வேண்டியது இல்லை!
Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்
நமது அரசியல் தலைவர்கள் ஏன் இன்னும் சொந்தமாக ஹெலிகாப்டர் வாங்கவில்லை?
வெறும் 30 கோடி ரூபாய்கூட அவர்களிடம் இல்லையா, என்ன?
ஒவ்வொரு
தலைவரும் ஒரு டஜன் ஹெலிகாப்டர்களை வாங்க முடியும். ஆனால், தெருவில்
இருபுறமும் உள்ள சாமான்ய மக்களைப் பார்த்து வணங்க முடியாது, கை அசைக்க
முடியாது, ஹெலிகாப்டரை நிறுத்தி குழந்தை களுக்குப் பெயர் சூட்ட முடியாது.
பாதி வழியில் டீக்கடையில் நிறுத்தி ஏழை களோடு டீ அருந்த முடியாது.இதை
எல்லாம் செய்ய வேண்டும் என்பதற்காக நம் தலைவர்கள் மேற்கொண்டு இருக்கும்
தியாகம்தான் ஹெலிகாப்டர் வாங்காமல் இருப்பது என்பது கூட உங்களுக்குப்
புரியவில் லையா?
சினிமாக்களில் கேரட், ஆரஞ்சு, மக்காச்
சோளங்களைப் பல்லாயிரக்கணக்கில் பரப்பி, அவற்றின் மீது நடிக, நடிகையர்
செருப்புக் கால்களுடன் நடனமாடுகிறார்கள்.அவை பிறகு என்னவாகின்றன ? - எஸ். சேதுகுமாரி, கள்ளக்காம்பட்டி.
சினிமாவில்
அப்படிப்பட்ட காட்சிகள் வரும்போது நானும் உங்களைப்போல கவலைப்படுவது உண்டு.
மிதிப்பதற்கு முன்பு புதுச் செருப்புக்களையாவது ஹீரோ, ஹீரோயின்
அணிந்துகொள்கிறார்களா, பிற்பாடு அந்தக் காய்கறிகளை நீரில் அலம்புகிறார்களா
என்றெல்லாம் தெரியவில்லை !
மார்க்கெட்டுக்குப் போய், பிறகு யார்
வீட்டுக்கு வேண்டுமானாலும் அந்தக் காய்கறிகள் வரலாம். ""இந்த மக்காச்
சோளத்தை இந்த ஹீரோயின் மிதித்தது'' என்று குறிப்பாக ரொம்பத் தீவிர
ரசிகர்கள் வேண்டுமானால் கண்ணில் ஒற்றிக் கொண்டு சாப்பிடலாம். மற்றவர்கள் ?!
மத்திய விவசாய மந்திரி இந்த மாதிரிக் காட்சிகளுக்க தடை விதித்தால் கூட
நல்லது !
வெறும் 30 கோடி ரூபாய்கூட அவர்களிடம் இல்லையா, என்ன?
ஒவ்வொரு
தலைவரும் ஒரு டஜன் ஹெலிகாப்டர்களை வாங்க முடியும். ஆனால், தெருவில்
இருபுறமும் உள்ள சாமான்ய மக்களைப் பார்த்து வணங்க முடியாது, கை அசைக்க
முடியாது, ஹெலிகாப்டரை நிறுத்தி குழந்தை களுக்குப் பெயர் சூட்ட முடியாது.
பாதி வழியில் டீக்கடையில் நிறுத்தி ஏழை களோடு டீ அருந்த முடியாது.இதை
எல்லாம் செய்ய வேண்டும் என்பதற்காக நம் தலைவர்கள் மேற்கொண்டு இருக்கும்
தியாகம்தான் ஹெலிகாப்டர் வாங்காமல் இருப்பது என்பது கூட உங்களுக்குப்
புரியவில் லையா?
சினிமாக்களில் கேரட், ஆரஞ்சு, மக்காச்
சோளங்களைப் பல்லாயிரக்கணக்கில் பரப்பி, அவற்றின் மீது நடிக, நடிகையர்
செருப்புக் கால்களுடன் நடனமாடுகிறார்கள்.அவை பிறகு என்னவாகின்றன ? - எஸ். சேதுகுமாரி, கள்ளக்காம்பட்டி.
சினிமாவில்
அப்படிப்பட்ட காட்சிகள் வரும்போது நானும் உங்களைப்போல கவலைப்படுவது உண்டு.
மிதிப்பதற்கு முன்பு புதுச் செருப்புக்களையாவது ஹீரோ, ஹீரோயின்
அணிந்துகொள்கிறார்களா, பிற்பாடு அந்தக் காய்கறிகளை நீரில் அலம்புகிறார்களா
என்றெல்லாம் தெரியவில்லை !
மார்க்கெட்டுக்குப் போய், பிறகு யார்
வீட்டுக்கு வேண்டுமானாலும் அந்தக் காய்கறிகள் வரலாம். ""இந்த மக்காச்
சோளத்தை இந்த ஹீரோயின் மிதித்தது'' என்று குறிப்பாக ரொம்பத் தீவிர
ரசிகர்கள் வேண்டுமானால் கண்ணில் ஒற்றிக் கொண்டு சாப்பிடலாம். மற்றவர்கள் ?!
மத்திய விவசாய மந்திரி இந்த மாதிரிக் காட்சிகளுக்க தடை விதித்தால் கூட
நல்லது !
Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்
நகைச்சுவைக்கு என்று இந்தக் காலத்தில்
பத்திரிக்கை, திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி அலைவரிசை இருப்பதைப் போன்று
மன்னர் காலத்தில் வாழந்த மக்கள் நகைச்சுவைக்காக ஏதாவது ஏற்படுத்தி
இருந்தார்களா ? அப்படி இருந்தால் அதை நகைச்சுவையுடன் விளக்கவும். ! - தெ.ம. ஸ்வர்ணா, நாகர்கோவில்-3.
வேதங்களே
காது வழியாக ஓதப்பட்டபோது, ஜோக்குகள் அப்படி வந்திருக்காதா ? மன்னர்கள்
அதற்காகவே காமெடியன்களைத் தர்பாரில் நியமித்து இருந்தார்கள். தவிர,
தெருக்கூத்துகளில் ஜோக் விஷயத்தில் புகுந்து ( அத்துமீறிக்கூட)
விளையாடுவார்கள் !
பத்திரிக்கை, திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி அலைவரிசை இருப்பதைப் போன்று
மன்னர் காலத்தில் வாழந்த மக்கள் நகைச்சுவைக்காக ஏதாவது ஏற்படுத்தி
இருந்தார்களா ? அப்படி இருந்தால் அதை நகைச்சுவையுடன் விளக்கவும். ! - தெ.ம. ஸ்வர்ணா, நாகர்கோவில்-3.
வேதங்களே
காது வழியாக ஓதப்பட்டபோது, ஜோக்குகள் அப்படி வந்திருக்காதா ? மன்னர்கள்
அதற்காகவே காமெடியன்களைத் தர்பாரில் நியமித்து இருந்தார்கள். தவிர,
தெருக்கூத்துகளில் ஜோக் விஷயத்தில் புகுந்து ( அத்துமீறிக்கூட)
விளையாடுவார்கள் !
Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்
இந்திய ஜனாதிபதி விடுமுறை எடுக்கலாமா ? இதுவரை யாரேனும் லீவ் லெட்டர் கொடுத்து இருக்கிறார்களா ?''- ""ஃபீனிக்ஸ்'' பழனி, கோவை-3
லீவ்
லெட்டரை ஜனாதிபதி யாருக்குக் கொடுப்பார் ? தனக்குத்தானே கொடுத்துக் கொள்ள
வேண்டியதுதான். உண்மையில் பதவிக்காலம் முழுவதுமே நம்ம ஜனாதிபதிக்கு
விடுமுறை மாதிரிதான். விடுமுறையை இன்னும் ஜோராகக் கொண்டாட வேண்டும்
என்றால், இருக்கவே இருக்கிறது வெளிநாட்டுப் பயணம் !
லீவ்
லெட்டரை ஜனாதிபதி யாருக்குக் கொடுப்பார் ? தனக்குத்தானே கொடுத்துக் கொள்ள
வேண்டியதுதான். உண்மையில் பதவிக்காலம் முழுவதுமே நம்ம ஜனாதிபதிக்கு
விடுமுறை மாதிரிதான். விடுமுறையை இன்னும் ஜோராகக் கொண்டாட வேண்டும்
என்றால், இருக்கவே இருக்கிறது வெளிநாட்டுப் பயணம் !
Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்
அடுத்தவர்களுக்கு அட்வைஸ் செய்பவர்கள், பிறர் தங்களுக்கு அட்வைஸ் செய்தால் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பது இல்லையே, ஏன் ? மஞ்சு வாசுதேவன், நவிமும்பை.
அட்வைஸ் என்பது உதை மாதிரி. மற்றவர்களுக்குத் தரலாம். வாங்கக் கூடாது !
அட்வைஸ் என்பது உதை மாதிரி. மற்றவர்களுக்குத் தரலாம். வாங்கக் கூடாது !
Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்
வெட்கித் தலை குனிந்தான்''..,""அவளுக்கு
வெட்கத்தால் முகம் சிவந்து போனது''- இரு வெட்கங்களுக்கும் மூளை எவ்விதம்
கட்டளை இடுகிறது. இதுவும் ஒருவகை அனிச்சை செயல்தானே ?
ஒன்று-
எதிராளியை நேரில் பார்க்க முடியாமல், அவமான உணர்வில் தரையைப் பார்ப்பது,
வெட்கத்தால் முகம் சிவப்பது அடியோடு வேறு வகை. ஒரு காலத்தில் பெண்
பார்க்கப் போகும் போது வேண்டும் என்றே எசகுபிசகாக ஜோக் அடிப்பார்கள்.
பெண்ணின் முகம் சிவந்தால் அவள் கன்னி கழியாதவள் என்று முடிவு கட்டப்படும்.
உடலிலேயே மென்மையான பகுதி கன்னம். அங்கே ரத்தம் அதிகம் பாய்ந்தால் உடனே
சிவப்பது கண் கூடாகத் தெரிகிறது. கோபத்தால் சிவப்பது வேறு. அப்போது
மொத்தமாகச் சிவக்கும். வெட்கம் என்றால் கன்னத்தின் மையத்தில் இருந்து
சிவப்பு பரவும்.
சில நூற்றாண்டுகளுக்கு முன்பு, இத்தாலியில் ஸினோரா
டொஃபானா என்னும் மேக்கப் சாதனங்கள் விற்கும் பெண்மணி, பெண்களின் கன்னத்தைச்
சிவக்க வைப்பதற்கென்றே ஸ்பெஷல் க்ரீம் ஒன்றைத் தயாரித்தார். பிரமாத
விற்பனை ! அந்த க்ரீமில் விஷம் கலந்து இருக்கும். கணவனை ( அல்லது காதலனை)
க்ளோஸ் பண்ண முடிவு எடுக்கும் பெண்கள் அதைத் தடவிக்கொண்டு தழுவலில்
ஈடுபடுவார்கள். கன்னத்தில் தொடர்ந்து முத்தம் கொடுக்கும் கணவன் (அல்லது
காதலன்) கொஞ்ச நேரத்தில் ஆள் அவுட் !
வெட்கத்தால் முகம் சிவந்து போனது''- இரு வெட்கங்களுக்கும் மூளை எவ்விதம்
கட்டளை இடுகிறது. இதுவும் ஒருவகை அனிச்சை செயல்தானே ?
ஒன்று-
எதிராளியை நேரில் பார்க்க முடியாமல், அவமான உணர்வில் தரையைப் பார்ப்பது,
வெட்கத்தால் முகம் சிவப்பது அடியோடு வேறு வகை. ஒரு காலத்தில் பெண்
பார்க்கப் போகும் போது வேண்டும் என்றே எசகுபிசகாக ஜோக் அடிப்பார்கள்.
பெண்ணின் முகம் சிவந்தால் அவள் கன்னி கழியாதவள் என்று முடிவு கட்டப்படும்.
உடலிலேயே மென்மையான பகுதி கன்னம். அங்கே ரத்தம் அதிகம் பாய்ந்தால் உடனே
சிவப்பது கண் கூடாகத் தெரிகிறது. கோபத்தால் சிவப்பது வேறு. அப்போது
மொத்தமாகச் சிவக்கும். வெட்கம் என்றால் கன்னத்தின் மையத்தில் இருந்து
சிவப்பு பரவும்.
சில நூற்றாண்டுகளுக்கு முன்பு, இத்தாலியில் ஸினோரா
டொஃபானா என்னும் மேக்கப் சாதனங்கள் விற்கும் பெண்மணி, பெண்களின் கன்னத்தைச்
சிவக்க வைப்பதற்கென்றே ஸ்பெஷல் க்ரீம் ஒன்றைத் தயாரித்தார். பிரமாத
விற்பனை ! அந்த க்ரீமில் விஷம் கலந்து இருக்கும். கணவனை ( அல்லது காதலனை)
க்ளோஸ் பண்ண முடிவு எடுக்கும் பெண்கள் அதைத் தடவிக்கொண்டு தழுவலில்
ஈடுபடுவார்கள். கன்னத்தில் தொடர்ந்து முத்தம் கொடுக்கும் கணவன் (அல்லது
காதலன்) கொஞ்ச நேரத்தில் ஆள் அவுட் !
Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்
ஓபாமாவின் வெற்றிக்கு காரணம் அவரிடம் இருந்த ஆஞ்சநேயர் சிலை தான் என்கிறார்களே, நிஜமா?- பொன்விழி, அன்னூர்.
ஓபாமாவிடம்
குட்டி ஆஞ்சநேயர் சிலை உண்டு. அதையும், கூடவே அவர் வைத்திருக்கும் வேறு
சிறிய சிலைகளையும் (டைம் பத்திரிகையில்) போட்டோவில் நான் பார்த்தேன்.
ஆஞ்சநேயர் சிலை எப்படி கிடைத்தது. அவரை பற்றி உங்களுக்குத் தெரியுமா,
உங்கள் வெற்றிக்கு அந்த சிலை காரணமா என்றெல்லாம் யாரும் அவரை பேட்டி
எடுத்து நான் படித்தது இல்லை. ஓபாமா புத்திசாலி. நிச்சயம் ஆஞ்சநேயர் பற்றி
விசாரித்து இருப்பார். இந்தியாவுக்கு அவர் வரும்போதாவது யாராவது நிருபர்
அது பற்றி விசாரித்து சொல்கிறாரா என்று பார்ப்போம்.
ஓபாமாவிடம்
குட்டி ஆஞ்சநேயர் சிலை உண்டு. அதையும், கூடவே அவர் வைத்திருக்கும் வேறு
சிறிய சிலைகளையும் (டைம் பத்திரிகையில்) போட்டோவில் நான் பார்த்தேன்.
ஆஞ்சநேயர் சிலை எப்படி கிடைத்தது. அவரை பற்றி உங்களுக்குத் தெரியுமா,
உங்கள் வெற்றிக்கு அந்த சிலை காரணமா என்றெல்லாம் யாரும் அவரை பேட்டி
எடுத்து நான் படித்தது இல்லை. ஓபாமா புத்திசாலி. நிச்சயம் ஆஞ்சநேயர் பற்றி
விசாரித்து இருப்பார். இந்தியாவுக்கு அவர் வரும்போதாவது யாராவது நிருபர்
அது பற்றி விசாரித்து சொல்கிறாரா என்று பார்ப்போம்.
Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்
மரங்களுக்கு அத்தனை இலைகள் அவசியமா (பழங்கள்மட்டும் உள்ள மரங்கள் ஏன் இல்லை) - கே.வித்யாசுகுமார்.
இலைகள்
அத்தியாவசியம். இலைகள் இல்லையேல் பழங்கள் கிடையாது. மனித குலமே அழிந்து
விடும். ஏன் இலைகள்? மரங்களுக்கு உணவு சூரிய ஒளி தான். அந்த சூரிய ஒளியை
தாங்கி கைப்பற்றுவது இலைகள் தான். இலைகள் தான் கைகள். அமேசான் காடுகளில்
அடர்த்தியான மரங்கள் சூழ்ந்திருப்பதால், இண்டு இடுக்கு வழியாக எல்லாம்
சூரிய ஒளி புகுந்து நிலத்தை தொட்டாக வேண்டியது இல்லை. ஆகவே மரங்களுக்கு
கீழே வளரும் கொடிகளின் இலைகள் அகலமாக தாம்பாளம் மாதிரி இருக்கும். நிறைய
ஒளியை கையில் வாங்கி கொள்ள, மலை மீது இருக்கும் செடிகளின் இலைகள் சின்னதாக
இருந்தால் போதும். தாராளமான சூரிய வெளிச்ச சப்ளை இருப்பதால் சூரிய ஒளியை
உள்வாங்கி போட்டோசின்தஸிஸ் மூலம் இலைகள் தான் மரத்துக்கு உணவு
பரிமாறுகின்றன. ஆக்ஸிஜனும் இலைகள் மூலமாகத்தான் (நமக்காக) வெளிப்படுகிறது.
போட்டோசின்தஸிஸ் விவரமாக விளக்க வேண்டிய, இயற்கையின் பெரிய ஆச்சர்யம்.
இலைகள்
அத்தியாவசியம். இலைகள் இல்லையேல் பழங்கள் கிடையாது. மனித குலமே அழிந்து
விடும். ஏன் இலைகள்? மரங்களுக்கு உணவு சூரிய ஒளி தான். அந்த சூரிய ஒளியை
தாங்கி கைப்பற்றுவது இலைகள் தான். இலைகள் தான் கைகள். அமேசான் காடுகளில்
அடர்த்தியான மரங்கள் சூழ்ந்திருப்பதால், இண்டு இடுக்கு வழியாக எல்லாம்
சூரிய ஒளி புகுந்து நிலத்தை தொட்டாக வேண்டியது இல்லை. ஆகவே மரங்களுக்கு
கீழே வளரும் கொடிகளின் இலைகள் அகலமாக தாம்பாளம் மாதிரி இருக்கும். நிறைய
ஒளியை கையில் வாங்கி கொள்ள, மலை மீது இருக்கும் செடிகளின் இலைகள் சின்னதாக
இருந்தால் போதும். தாராளமான சூரிய வெளிச்ச சப்ளை இருப்பதால் சூரிய ஒளியை
உள்வாங்கி போட்டோசின்தஸிஸ் மூலம் இலைகள் தான் மரத்துக்கு உணவு
பரிமாறுகின்றன. ஆக்ஸிஜனும் இலைகள் மூலமாகத்தான் (நமக்காக) வெளிப்படுகிறது.
போட்டோசின்தஸிஸ் விவரமாக விளக்க வேண்டிய, இயற்கையின் பெரிய ஆச்சர்யம்.
Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்
ஆங்கிலத்தில் செக்ஸ் என்ற வார்த்தை பாலினம்
என்பதை குறிக்கிறது. அதே சொல் எப்படி பாலுறவை குறிக்கும் சொல்லாகவும்
இருக்க முடியும்? -ரா.பிரசன்னா, மதுரை.
நீங்கள் சொல்வது சரியே. முதலில் செக்ஸ் என்பது ஆங்கில வார்த்தை இல்லை. லத்தீனிலிருந்து வந்தது.
செக்ஸுக்கும்,
செக்ஷனுக்கும் தொடர்பு உண்டு. மனிதர்களை ஆண், பெண் என்று இரு இனங்களாக,
செக்ஷன்களாக பிரிக்கிறார்கள். செக்ஸ் என்ற வார்த்தைக்கு பாலின உறவு என்கிற
அர்த்தம் வந்தது 20ம் நூற்றாண்டில் தான். முதலில் அப்படி ஓர் அர்த்தத்தில்
பயன்படுத்தியவர் லேடி சேட்டர்லிஸ் நாவலை எழுதிய டிஹெச். லாரன்ஸ். ரொம்ப
காலமாக தமிழில் ஆண் பால், பெண் பால், பாலின சேர்க்கை, ஓரின சேர்க்கை
என்றெல்லாம் கச்சிதமாக பெயர்கள் இருக்கின்றன.
என்பதை குறிக்கிறது. அதே சொல் எப்படி பாலுறவை குறிக்கும் சொல்லாகவும்
இருக்க முடியும்? -ரா.பிரசன்னா, மதுரை.
நீங்கள் சொல்வது சரியே. முதலில் செக்ஸ் என்பது ஆங்கில வார்த்தை இல்லை. லத்தீனிலிருந்து வந்தது.
செக்ஸுக்கும்,
செக்ஷனுக்கும் தொடர்பு உண்டு. மனிதர்களை ஆண், பெண் என்று இரு இனங்களாக,
செக்ஷன்களாக பிரிக்கிறார்கள். செக்ஸ் என்ற வார்த்தைக்கு பாலின உறவு என்கிற
அர்த்தம் வந்தது 20ம் நூற்றாண்டில் தான். முதலில் அப்படி ஓர் அர்த்தத்தில்
பயன்படுத்தியவர் லேடி சேட்டர்லிஸ் நாவலை எழுதிய டிஹெச். லாரன்ஸ். ரொம்ப
காலமாக தமிழில் ஆண் பால், பெண் பால், பாலின சேர்க்கை, ஓரின சேர்க்கை
என்றெல்லாம் கச்சிதமாக பெயர்கள் இருக்கின்றன.
Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்
வைகுண்ட பதவி, சிவலோக பதவி ஆகியவற்றை பற்றி அரசியல்வாதிகள் சிந்திப்பது இல்லையே ஏன்?
- ச.ஆ.கேசவன், இனாம் மணியாச்சி.
அதற்கு
காரணம்- அந்த பதவிகளை அடையும்போது, அதை அனுபவிக்க அவர்கள் இருப்பது இல்லை.
யாராவது அரசியல் தலைவரிடம் சென்று உங்கள் கொள்ளுப்பேரனின் மகனுக்கு 5 கோடி
ரூபாய் தர ஏற்பாடு செய்கிறேன். எனக்கு இந்த வேலையை செய்து தாருங்கள் என்று
கேட்டு பாருங்கள். ஒப்புக்கொள்வாரா? அவர் உயிருடன் இருக்கும்போது அவர்
கையிலேயே பணம் வைத்தால் தான் ரசிப்பார். பதவியும் அப்படித்தான்.
- ச.ஆ.கேசவன், இனாம் மணியாச்சி.
அதற்கு
காரணம்- அந்த பதவிகளை அடையும்போது, அதை அனுபவிக்க அவர்கள் இருப்பது இல்லை.
யாராவது அரசியல் தலைவரிடம் சென்று உங்கள் கொள்ளுப்பேரனின் மகனுக்கு 5 கோடி
ரூபாய் தர ஏற்பாடு செய்கிறேன். எனக்கு இந்த வேலையை செய்து தாருங்கள் என்று
கேட்டு பாருங்கள். ஒப்புக்கொள்வாரா? அவர் உயிருடன் இருக்கும்போது அவர்
கையிலேயே பணம் வைத்தால் தான் ரசிப்பார். பதவியும் அப்படித்தான்.
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» பொது அறிவுக் கேள்வி - பதில்கள்
» பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம். கணினி கேள்வி - பதில், பகுதி - 2 ன் பதில்கள்.
» அறிவை வளர்த்துக் கொள்வோம்.கணினி கேள்வி பதில். பகுதி - 4 ன் பதில்கள்
» வேலன்:-குழந்தை வளர்ப்பு கேள்வி பதில்கள்.
» வேலன் :-உறக்கம் பற்றிய விரிவான கேள்வி பதில்கள்.
» பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம். கணினி கேள்வி - பதில், பகுதி - 2 ன் பதில்கள்.
» அறிவை வளர்த்துக் கொள்வோம்.கணினி கேள்வி பதில். பகுதி - 4 ன் பதில்கள்
» வேலன்:-குழந்தை வளர்ப்பு கேள்வி பதில்கள்.
» வேலன் :-உறக்கம் பற்றிய விரிவான கேள்வி பதில்கள்.
TamilYes :: பொதுஅறிவு களம் :: அறிவுக்களஞ்சியம் :: பொதுஅறிவு களம் :: பொதுஅறிவு
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|