TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:13 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:00 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தினம் ஒரு தகவல் (தொடர்)

Page 2 of 20 Previous  1, 2, 3 ... 11 ... 20  Next

Go down

தினம் ஒரு தகவல் (தொடர்) - Page 2 Empty மர்ஃபியின் விதிகள்

Post by வாகரைமைந்தன் Wed Aug 18, 2021 8:56 pm

ஒரு இடத்திற்குச் செல்ல இரண்டு பேருந்துகள் நிற்கின்றன.நாம் ஒன்றில் ஏறியதும் இன்னொரு பேருந்து கிளம்பிவிடும்;புகைவண்டி சரியான நேரத்திற்கு வர வேண்டும் என்றால் நாம் தாமதாமாகச் சென்றால் போதும்.
இது போன்ற அனுபவங்கள் எல்லோருக்கும் ஏற்பட்டிருக்கும்.இவை மர்ஃபியின் விதிகள் என்று அழைக்கப்படுகின்றன.எனக்கு மட்டும் எல்லாம் மிகச் சரியாகத் தவறாய் நடக்கின்றன என எண்ணாதாரும் உளரோ?

    மர்ஃபியின் விதிகளுக்கு ஒரு சுவாரசியமான வரலாறு இருக்கிறது.மர்ஃபி என்பவர் ஒரு விமானப் பொறியாளர்.ஒரு முறை ஒரு சோதனையின் போது விமானத்தில் உள்ள ஆறு இணைப்புக்களையும் ஒருவர் முனையை (terminal) மாற்றி இணைத்திருப்பதைக் கண்டார்.அப்போது மர்ஃபி “அந்த நபர் (இணைப்பு கொடுத்தவர்) ஒரு விஷயத்தைத் தவறாகச் செய்ய முடியும் என்றால் தவறாமல் தவறாகவே செய்வார்!” என்றார்.

  அன்று முதல் இவை மர்ஃபியின் விதிகள் என்று அழைக்கப்படுகின்றன.மர்ஃபியின் மரணம்கூட மிகப் பொருத்தமாகவோ அல்லது முரண்பாடாகவோ மர்ஃபியின் விதிப்படிதான் நடந்தது.ஒரு முறை சாலையில் நடந்துபோகும் போது எதிரே ராங் சைடில் வந்த வண்டி மோதி உயிரிழந்தார்.

   மர்ஃபியின் விதிகள் பொது விதிகள், சிறப்பு விதிகள் என வகைப் படுத்தப் பட்டிருக்கின்றன.பொது விதிகள் எல்லாச் சூழலுக்கும், துறைகளுக்கும் பொருந்துபவையாக உள்ளன.சில பொது விதிகளைக் காணலாம்:  

    1)தப்பாக வேண்டியவை தப்பாமல் தப்பாகும்-(If something can go wrong it will) இதுதான் மர்ஃபியின் பொன்விதி என்றழைக்கப் படுகிறது.(துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉ மழை. குறள் நினைவுக்கு வருகிறதா?)
    2)ஒரு வேலையை முடிக்க நமக்குப் பலரது உதவி கிடைக்கிறது என்றால் அந்த வேலை நாமே தனியாகச் செய்து முடிக்கக் கூடியதாக இருக்கும்.
    3)நாம் நிற்கும் வரிசை நகர வேண்டுமானால் நாம் வேறு வரிசைக்கு மாற வேண்டும்.
    4)மனைவியிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டுமென்றால் அவரைத் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்க வேண்டும்.
    5)நீங்கள் ஒரு காலைத் தீயிலும் இன்னொரு காலைப் பனிக்கட்டியிலும் வைத்திருந்தால் நீங்கள் சராசரியாக சுகமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
    6)நாம் தொலைத்த சாவி உடனே கிடைக்க  வேண்டுமானால் பூட்டை உடைக்க வேண்டும்.
    7)இன்றே கடைசியாக இருக்கும் எந்த ஒரு விஷயத்தையும் நாம் நாளைதான் கவனிப்போம்.
    8)எத்தனையோ பேர் பூங்காவில் இருக்கும் போது என் தலையில் தான் ஆப்பிள் விழுந்து தொலைக்கும்- இது ஐசக் ந்யூட்டனின் மர்ஃபி விதி.

மருத்துவத்திலும் மர்ஃபியின் விதிகள் உள்ளன.

    1)ஒரு நோய் எவ்வளவுக்கெவ்வளவு (நாய் குறைப்பதை ஒத்த ஓசை நயம்!) பரவலாகத் தென்படுகிறதோ அவ்வளவு குறைவாகவே அந்த நோய் வரும் காரணங்கள், மற்றும் உரிய சிகிச்சைகள் பற்றித் தெரிந்திருக்கும்.
    2) ஒரு நோயாளி அறுவை சிகிச்சை செய்து கொள்ள சம்மதித்தால் அவருக்கு அந்த அறுவை சிகிச்சை தேவையாய் இருக்காது.
   3)எல்லாப் பரிசோதனைகளும் செய்து என்ன நோய் என்று கண்டு பிடிக்கும் போது அந்த நோய் தானே குணமாகி இருக்கும்
   4)எந்த மருந்து ஒருவருடைய நோய்க்கு மிகப் பொருத்தமாயிருக்குமோ அந்த மருந்துக்கு மட்டும் அவருக்கு ஒவ்வாமை(அலர்ஜி) இருக்கும்.
   5)உங்கள் உடலில் அரிப்பெடுக்கும் பாகம் எந்த அளவுக்குக் கைகளால் எட்ட முடியாமல் இருக்கிறதோ அந்த அளவுக்கு அரிப்பின் தீவிரமும் அதிகமாக இருக்கும்.
  6)எந்த நோயாளியும் மருத்துவரிடம் ஏதோ ஒரு விஷயத்தை மறைக்காமல் இருந்ததில்லை.
  7)சில சமயம் மருத்துவரின் தீவிர முயற்சியையும் மீறி நோயாளி குணமடைந்து விடுகிறார்.
8)மன நலத்தில் ஒரு மர்ஃபியிசம்: “ஒருவரது பேச்சு எத்தனை குழப்பமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அவர் நார்மலாக இருக்கிறார் என்று அர்த்தம்.    

     சூஃபியிசம் மாதிரி தான் மர்ஃபியிசமும்.நமது தேவையற்ற அகங்காரத்திற்கு அடிக்கடி விழும் அடி.நமது அன்றாட அபத்தங்களை நம்மையன்றி வேறு யாரால் கிண்டல் செய்ய முடியும்?

ஆனாலும் அறிவியல் பார்வையில்....

ரிச்சார்ட் டௌகின்ஸ் (Richard Dawkins) கருத்துப்படி, மர்ஃபி / சாட் விதி  (Murphy / Sod law) போன்ற சட்டங்கள் முட்டாள்தனமானது அல்லது ஏற்புடையது அல்ல. ஒரு குறிப்பிட்ட வகை நிகழ்வுகள் எல்லா நேரத்திலும் ஏற்படலாம் என்று டௌகின்ஸ் சுட்டிக்காட்டுகிறார், ஆனால் அவர்கள் தொந்தரவாக இருக்கும் போது மட்டுமே கவனித்துள்ளனர்.
அவர் ஒரு உதாரணம் விமானத்தின் சத்தம் என்பதில் தலையிடுகிறார். விமானம் எல்லா நேரத்திலும் வானில் உள்ளது, ஆனால் அவை பிரச்சனையை ஏற்படுத்தும் போது மட்டுமே கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. இது உறுதிப்படுத்துதலை உறுதிப்படுத்தும் (confirmation bias) ஒரு வடிவமாகும், அது ஏற்கனவே உருவாக்கப்பட்ட கருத்துகளை உறுதிப்படுத்துவதற்கு ஆய்வாளரின் சாட்சியத்தை கோருகிறது, ஆனால் அவற்றுக்கு முரண்படுகிறது என்பதற்கான ஆதாரத்தை அவர் தேடுவதில்லை

வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1718
Join date : 23/05/2021

Back to top Go down

தினம் ஒரு தகவல் (தொடர்) - Page 2 Empty நோயா? பேயா?

Post by வாகரைமைந்தன் Thu Aug 19, 2021 11:49 am

நோயா? பேயா?

[You must be registered and logged in to see this image.]
       
    மனிதன் தோன்றிய காலம் முதலே அவனைப் பின்தொடர்கிறது நோய்.ஆதி மனிதன் தன்னால் புரிந்து கொள்ள இயலாத விஷயங்களை மதத்தின் பெயராலும் தன்னை மீறிய சக்திகளின் பெயராலும் விளக்க முற்பட்டான்.தன்னால் கட்டுப்படுத்த முடியாத விஷயங்களைக் கண்டு அஞ்சினான்.அவற்றைக் கடவுளென ,தீய சக்திகளென வணங்கினான்.

   ஒரு காலத்தில் எல்லா நோய்களுமே தீய சக்திகளால் விளைகின்றன என்று நம்பினான்.பின்பு விஞ்ஞானம் வளர வளர நோய்களுக்குக்கான காரணிகளைக் கண்டறிந்து தன் மூட நம்பிக்கையை மாற்றிக் கொண்டான்.சில காலத்துக்கு முன் கூட தொழுநோய்  பாவத்தின் விளைவு என்று நம்பிக்கொண்டிருந்தான்      
     எனினும் இன்னும் கூட மக்கள் மத்தியில் பேய்பிடித்தல்,பில்லிசூனியம்,செய்வினை போன்ற நம்பிக்கைகள்.புழங்குகின்றன.இவற்றினை அறிவியல் பூர்வமாகப் பார்ப்போம்.

     பொதுவாக பேய்பிடித்தல் போன்ற மன நிலைகளை ஆளுமைச் சிதைவு ( Dissociative Disorders) என்று மருத்துவத்தில் கூறுவர்.அதாவது தன்னுணர்வு அற்றுப் போய் தான் செய்வது இன்னவென்று தெரியாமல் இருத்தல். இது போன்ற நிலைகள் பெரும்பாலும் தற்காலிகமானவை.சில நிமிடங்கள் அல்லது சில மணி நேரங்களில் தன் உணர்வு அடைந்திடுவர்.கவனிக்கவும் :இந்த ஆளுமைச் சிதைவு என்பது மனச் சிதைவு (schizophrenia) அல்ல.தற்காலிக சமநிலைச் சீர்குலைவு என்று சொல்லலாம்.

     முன்பு ஹிஸ்டீரியா என்ற பெயரால் இவை அழைக்கப்பட்டன.ஹிஸ்டெர் என்றால் கருப்பை என்று பொருள்.இது போன்ற பாதிப்புகள் பெண்களிடம் அதிகம் காணப்பட்டதால் இவை ஹிஸ்டீரியா என்று அழைக்கப்பட்டன.(கர்ப்பப்பையில் சுரக்கும் இரசாயங்களே இதற்குக் காரணம் என்று தவறாக நினைத்திருந்தனர்)

     அதிக உணர்ச்சி வசப்படும் போது நாம் நமது மனம்,செயல், உணர்வுகள் மீதான கட்டுப்பாட்டை இழக்கிறோம். சில வகை தியானங்களிலும்,ஆன்மீக அனுபவங்களிலும் நாம் நம்மைப் பற்றிய உணர்வே இன்றி மெய்மறந்திருப்போம்.இதை Trance state ,அதாவது தன்னைக் கடந்த ஒரு பரவச நிலை என்று அழைப்பர்.இந்த அனுபவம் முற்றிலும் இயல்பானதே.

   கிட்டத் தட்ட அதே மனநிலையில்தான் நம்மைப் “பேய்’ பிடித்துக் கொள்கிறது.அதீத உணர்ச்சி வசப்பட்ட நிலையில் நம் மூளை சிந்திக்கும் திறனை இழக்கத் தொடங்குகிறது.யோசிக்காமல் சில விஷயங்களை நம்பத் தொடங்குகிறது.இதற்கு suggestibility என்று பெயர்.பகுத்தறியும் திறன்  செயலிழந்த பிறகு பிறரது கருத்துக்களையோ அடிமனதின் பாதிப்புக்களையோ ஏற்றுக் கொண்டு செயல்படத் துவங்குகின்றனர்.சுய கட்டுப்பாட்டை இழந்து செயல்படத் தொடங்குகின்றனர்.

     இந்தத் தற்காலிகச் சமநிலைச் சீர்குலைவில்(Disssociative disorders) சில வகைகள் இருக்கின்றன.

1)      பரவச நிலை (Trance) இதை நாம் ஏற்கனவே பார்த்தபடி இயற்கையான ஒன்றே.
2)      தற்காலிக மறதி,குழப்பம்: மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலை அல்லது அதிர்ச்சியில் உறைந்து போய்ச் சில நிமிடங்கள் அல்லது மணிநேரங்கள் என்ன நடந்தது என்பதையே அறியாமல் போவது.அதிர்ச்சியான சம்பவங்கள்,பாலியல் பலாத்காரம்,வன்முறை போன்ற அனுபவங்களில் இது போல் ஏற்படுகின்றன
3)      தற்காலிக உணர்வற்றுத் திரிதல் (FUGUE STATE) இது போன்ற நிலைகளில் தன்னுணர்வு இல்லாமல் தான் யாரென்பதே மறந்து குழப்பமாகத் திரிவார்கள்.இவர்களில் சிலர் நெடும்பயணங்களில் கூட ஈடுபடுவர். சுய உணர்வு வந்த பின் தான் எப்படி அந்த இடத்துக்கு வந்தோம் என்று ஆச்சரியப் படுவார்கள்.
4)       ஆளுமைச் சிதைவுக் கோளாறு (multiple personality ) நம் மீது நல்ல அல்லது கெட்ட சக்திகள் புகுந்துவிட்டதைப் போல் நடந்து கொள்வதும் ஒரு மனநிலை வெளிப்பாடே.இது பிறருக்கும் தமக்கும் தொந்தரவு இல்லாமலும்,தற்காலிகமாகவும் இருக்கும் வரை இதனை மாறுபாடானது (abnormal) என்று கூறமுடியாது.எனினும் நீண்ட நேரம் இதுபோன்ற பாதிப்பு இருந்தால் இதற்குத் தகுந்த ஆலோசனை பெறவேண்டும்.
 
         நாம் ஒரு திரைப்படத்தை மிகவும் ஒன்றிப் பார்க்கும் போது தற்காலிகமாக அந்தப் பாத்திரத்துடன் நம்மை அடையாளப் படுத்திக் கொள்கிறோம்.நம்முடைய சுய உணர்வைத் தற்காலிகமாக இழக்கிறோம்.ஆனால் திரைப்படத்தில் ‘வணக்கம்’ போட்டதும் நம் சுய உணர்வை அடைகிறோம்.அதுபோன்றே ஒரு ஆளுமையின் மீது அடிமனதில் ஈர்ப்பு இருந்து பின் மன அழுத்தம் ஏற்படும் சூழலில் தம்முடைய சுய ஆளுமை மறந்து வேறொரு நபர்போலவோ அல்லது வேறொரு சக்தி பீடித்திருப்பது போன்றோ (POSESSION) நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்.

     இது போன்ற கோளாறுகள் மட்டுமின்றி மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்களால் வரும் மனச்சிதைவு (schizophrenia) போன்ற நோய்களையும் பேய்க் கோளாறு என்று வகைப்படுத்தும் மனப்பான்மை எல்லாத் தரப்பினரிடையும் காணப்படுகிறது.

இதுபோன்ற ஆளுமைச் சிதைவுகள் உளவியல் பாதிப்புகளே என்பதைப் புரிந்து கொள்வது மிகவும் முக்கியம்.இவற்றைப் பற்றியும் பில்லி சூனியம் போன்றவற்றைப் பற்றியும் அறியாமையில் இருக்கும் ஏழைப் பெண்களை சித்திரவதை செய்யாமல், அவர்களை மதித்து அறியாமையை போக்குவதும்,இது பேய் இல்லை என்பதை புரிய வைப்பதும் ஒரு சமூக சேவையே.

வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1718
Join date : 23/05/2021

Back to top Go down

தினம் ஒரு தகவல் (தொடர்) - Page 2 Empty Re: தினம் ஒரு தகவல் (தொடர்)

Post by வாகரைமைந்தன் Thu Aug 19, 2021 9:35 pm

[You must be registered and logged in to see this image.]

ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு நவரத்னலு ஆலயம் என்ற கோயில் மற்றும் அருங்காட்சியகம் கட்டப்பட்டுள்ளது.

நவரத்தின திட்டங்களைக் கொண்டு வந்ததற்காக, சித்தூர் அருகே ஸ்ரீகாளஹஸ்தி பகுதியில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்காக எம்எல்ஏ  மதுசூதன் ரெட்டி ரூ.2 கோடி செலவில் இந்தக் கோயிலை கட்டியுள்ளார்.

இப்படித்தான் இந்து மதத்தில் பல கடவுள்கள் உருவாகின.
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1718
Join date : 23/05/2021

Back to top Go down

தினம் ஒரு தகவல் (தொடர்) - Page 2 Empty பாரத மாதா கோயில்

Post by வாகரைமைந்தன் Sat Aug 21, 2021 2:45 pm

[You must be registered and logged in to see this image.]

பாரத மாதா கோயில் இந்தியாவின் பல இடங்களில் இருந்தாலும்,உருவச்சிலையை வைக்காது இடம்பெற்றுள்ள கோயில் மிகப் பழமையான நகரான வரணாசியில் உள்ளது.

பாரத மாதா கோயில், (Bharat Mata Mandir) (Mother India Temple)உத்திரப்பிரதேசம் மாநிலம், வாரணாசி மாவட்டத்தில் உள்ள காசி வித்யாபீட வளாகத்தில் அமைந்துள்ளது. இக்கோயிலில் திருஉருவச்சிலைக்கு பதிலாக, அகண்ட பிளவு படாத விடுதலைக்கு முந்திய பாரத நாட்டின் வரைபடத்தை பளிங்கு கல்லால் செதுக்கப்பட்டு, அதனை பாரத மாதாவாக வணங்கப்படுகிறது. இந்திய விடுதலைப் போராட்ட வீரர் சிவபிரசாத் குப்தா என்பவரின் முயற்சியால் 1936ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட பாரத மாதா கோயிலை, மகாத்மா காந்தி திறந்து வைத்தார் .



உஜ்ஜயினியில் மகாகலேஸ்வர் ஜோத்ரிலிங்க கோவிலுக்கு அருகில் பாரத மாதா கோவில் உள்ளது. இது ஒரு அன்னை கோவில் சிலையுடன் கூடிய பெரிய கோவில்.

BHARAT MATA MANDIR - Daulatabad
[You must be registered and logged in to see this image.]

தௌலதாபாத் கோட்டை (Daulatabad Fort) தேவகிரி அல்லது தியோகிரி என்று அழைக்கப்படும் இது இந்திய மாநிலமான மகாராட்டிராவின் அவுரங்காபாத்துக்கு அருகிலுள்ள தௌலதாபாத் கிராமத்தில் அமைந்துள்ள பாதுகாக்கப்பட்ட ஒரு வரலாற்றுக் கோட்டையாகும். இது யாதவ வம்சத்தின் தலைநகராக இருந்தது. (கி.பி 9 ஆம் நூற்றாண்டு முதல் 14ஆம் நூற்றாண்டு வரை) சிறிது காலத்திற்கு தில்லி சுல்தானகத்தின் தலைநகரமாகவும் (1327–1334), பின்னர் அகமதுநகர் சுல்தானகத்தின் இரண்டாம் தலைநகரமாகவும் (1499-1636) இருந்தது. பொ.ச. ஆறாம் நூற்றாண்டில், தேவகிரி, மேற்கு மற்றும் தென்னிந்தியாவை நோக்கி செல்லும் பயண வழித்தடங்களில் இன்றைய அவுரங்காபாத்திற்கு அருகிலுள்ள ஒரு முக்கியமான மலைப்பாங்கான நகரமாக உருவெடுத்தது.
                                                                                              [You must be registered and logged in to see this image.]

கோட்டை ஆரம்பத்தில் 1187 ஆம் ஆண்டில் முதல் யாதவ மன்னன் ஐந்தாம் பில்லாமா என்பவரால் கட்டப்பட்டது. 1308 ஆம் ஆண்டில், இந்த நகரத்தை இந்திய துணைக் கண்டத்தின் பெரும்பகுதியை ஆண்ட வம்சமான கில்ஜி வம்சத்தைத்ச் சேர்ந்த சுல்தான் அலாவுதீன் கில்சி இணைத்துக் கொண்டார். 1327 ஆம் ஆண்டில், துக்ளக் வம்சத்தைச் சேர்ந்த முகம்மது பின் துக்ளக் இந்நகரத்தை "தௌலதாபாத்" என்று பெயர் மாற்றி, தனது ஏகாதிபத்திய தலைநகரை தில்லியில் இருந்து இந்நகரத்திற்கு மாற்றினார். தில்லியின் மக்கள் பெருமளவில் தௌலதாபாத்திற்கு குடியேறவும் உத்தரவிட்டார். இருப்பினும், முகம்மது பின் துக்ளக் 1334 இல் தனது முடிவை மாற்றி, தில்லி சுல்தானகத்தின் தலைநகரத்தை இங்கிருந்து மீண்டும் தில்லிக்கு மாற்றினார்.

1499 ஆம் ஆண்டில், இது அகமத்நகர் சுல்தானகத்தின் ஒரு பகுதியாக மாறியது. அவர்கள் இதை தங்கள் இரண்டாம் தலைநகராகப் பயன்படுத்தினர். 1610 ஆம் ஆண்டில், கோட்டைக்கு அருகில், கட்கி என்று பெயரிடப்பட்ட புதிய நகரமான அவுரங்காபாத், எத்தியோப்பிய இராணுவத் தலைவர் மாலிக் அம்பர் என்பவரால் அகமத்நகர் சுல்தானகத்தின் தலைநகராக பணியாற்ற நிறுவப்பட்டது. அவர் இந்தியாவுக்கு அடிமையாக கொண்டு வரப்பட்டார். ஆனால் அகமத்நகர் சுல்தானகத்தின் பிரதமராக உயர்ந்தார். இக்கோட்டையில் தற்போதுள்ள பெரும்பாலான பகுதிகள் அகமத்நகர் சுல்தானகத்தின் கீழ் கட்டப்பட்டது.

சிவன் இந்த பிராந்தியத்தை சுற்றியுள்ள மலைகளில் தங்கியிருப்பதாக நம்பப்படுகிறது. எனவே இந்த கோட்டை முதலில் தேவகிரி என்று அழைக்கப்பட்டது, அதாவது "கடவுளின் மலைகள்"
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1718
Join date : 23/05/2021

Back to top Go down

தினம் ஒரு தகவல் (தொடர்) - Page 2 Empty Re: தினம் ஒரு தகவல் (தொடர்)

Post by வாகரைமைந்தன் Sun Aug 22, 2021 12:29 pm

உலகில் குறைந்த வயதில் விவாகரத்துப் பெற்ற பெண்கள்.

[You must be registered and logged in to see this image.]

 Nakhi கிராமம் (Shravasti district ,Uttar Pradesh) 2013 இல் Fatima Mangre  நான்கு வயது,14 வயதுடைய Arjun Bakridi  க்கு திருமணம் நடந்தது.நான்கு வருடங்களின் பின்னர் பெண்ணை (குழந்தையை) அழைத்துச் செல்ல மணமகன் வந்த போது,தந்தை  Anil   Mangre  அனுப்ப மறுத்து,8 வயதுக் குழந்தையை அனுப்ப மாட்டேன் எனவும்,தான் செய்த தவறை சரிசெய்ய விரும்புவதாகவும்  18 வயது வரை காத்திருக்கச் சொல்லி விவாகரத்துக்கு விண்ணப்பித்தார்.

இந்த விசயம்  டில்லியில் உள்ள National Commission for Women (NCW) க்கு  வந்தது.விவாகரத்தும் கிடைத்தது.

இந்தியாவில் அதிக குழந்தைத் திருமணம் நடக்கும் மானிலம் உத்தரப்பிரதேசம் என  UNICEF தெரிவித்துள்ளது.
[You must be registered and logged in to see this image.]

யேமனைச் சேர்ந்த Nujood Ali   தனது 10 வது வயதில் விவாகரத்துப் பெற்றார்.அவருக்கு 30 வயதான  Faez Ali Thamer  ஐ மணம் முடித்து வைக்கப்பட்டது.வீட்டில் அவர் அடித்து துன்புறுத்தப்பட்டதுடன் பாலியல் துன்புறுத்தலுக்கும் உட்பட்டார்.ஏப்ரல் 2,2008 இல் அவர் வீட்டை விட்டு தப்பித்தார்.பல கஷ்டங்களை கடந்து ஏப்ரல் 15,2008 இல் அவருடைய 10 வது வயதில் விவாகரத்துக் கிடைத்தது.அவர் பட்ட கஷ்டங்களை விக்கிபீடியா விபரிக்கிறது.
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1718
Join date : 23/05/2021

Back to top Go down

தினம் ஒரு தகவல் (தொடர்) - Page 2 Empty Re: தினம் ஒரு தகவல் (தொடர்)

Post by வாகரைமைந்தன் Sun Aug 22, 2021 9:21 pm

[You must be registered and logged in to see this image.]

அதேசமயம் பெண்களை ஏமாற்றுவதில் அதிகமானோர் ஆண்களாக இருக்கின்றனர்.ஏமாறுபவர்கள் பெண்களாக இருக்கின்றனர்.
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1718
Join date : 23/05/2021

Back to top Go down

தினம் ஒரு தகவல் (தொடர்) - Page 2 Empty கபடி

Post by வாகரைமைந்தன் Mon Aug 23, 2021 2:07 pm

[You must be registered and logged in to see this image.]

கபடி அல்லது சடுகுடு அல்லது பலிஞ்சடுகுடு என்று அழைக்கப்படும் விளையாட்டு தமிழ்குடிகளால் பல காலமாக, விளையாடப்படும் தமிழர் விளையாட்டுகளுக்குள் ஒன்று. சல்லிக்கட்டிற்கு (ஏறு தழுவுதல்) தயாராகும் முன் தமிழர்கள் செய்யும் பயிற்சியே கபடி என்ற பெயரால் பல காலமாக விளையாடப்பட்டு வருகிறது. கபடி என்ற பெயரும் தமிழ்ப்பெயராக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது கை+பிடி = கபடி. இது தெற்கு ஆசியா நாடுகளில் பரவலாக விளையாடப்படுகிறது.

வங்காளத்தில் சிறுவர்கள் ஆடும் கபடி.
[You must be registered and logged in to see this image.]

இவ்விளையாட்டு இரு அணிகளுக்கு இடையே நிகழும் ஆட்களைப் பிடிக்கும் ஒரு போட்டி. ஒவ்வொரு அணியிலும் ஏழு பேர் இருப்பர். மொத்த விளையாட்டு நேரம் 40 மணித்துளிகள் (நிமிடங்கள்). இவ்வாட்டம் விளையாட வெறும் நீள்சதுரமான (ஆடுகளம்) இடம் இருந்தால் போதும். இந்த ஆடுகளத்தை ஒரு நடுக்கோட்டால் இரண்டாக பிரித்து ஒருபக்கத்துக்கு ஒரு அணியாக இரு அணியினரும் இருப்பர். ஆட்டக்காரர்கள் எப்பொழுதும் புற எல்லைக்கோடுகளைத் தாண்டி செல்லலாகாது. இவ்விளையாட்டுக்கு ஒரு நடுவரும் தேவை.

ஜல்லிக்கட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட விளையாட்டு கபடி. எதிரணிக்கு செல்லும் வீரர் மாட்டைப்போல் கருதப்படுவார். அவ்வீரரை தொடவிடாமல் மடக்கி பிடிப்பது, மாட்டை முட்ட விடாமல் அடக்குவதற்கு சமமாகும். ஒரு அணியில் இருந்து யாரேனும் ஒருவர் புறப்பட்டு நடுக்கோட்டைத் தொட்டுவிட்டு ஒரே மூச்சில் "கபடிக் கபடி" (அல்லது "சடுகுடு") என்று விடாமல் கூறிக் கொண்டே எதிர் அணியினர் இருக்கும் பகுதிக்கு சென்று எதிர் அணியினரைக் கையாலோ, காலாலோ தொட்டுவிட்டு எதிர் அணியினரிடம் பிடிபடாமல் நடுக்கோட்டைத் தாண்டி தம் அணியிடம் திரும்பிவரும் ஒரு வகை விளையாட்டு. 

தொடுபட்டவர் ஆட்டம் இழப்பார். ஆனால் எதிரணியினர் சூழ்ந்து பிடிக்க வருவர். மூச்சு விடாமல் 'கபடிக் கபடிக்" என்று சொல்லிக்கொண்டே எதிராளியைத் தொட்டுவிட்டு அகப்படாமல் திரும்பிவரவேண்டும், அகப்பட்டால் சென்றவர் ஆட்டமிழப்பார். மூச்சு விடாமல் 'கபடிக் கபடிக்' என்று சொல்வதற்குப் பாடுதல் என்று பெயர். தம் அணிக்குத் திரும்பும் முன் பாடுவர் பாட்டை நிறுத்தினாலும் ஆட்டம் இழப்பர்.

ஆண்களுக்கான சடுகுடுவும், பெண்களுக்கான சடுகுடுவும் சற்று வேறுபடும்.

இதுவரை எந்த நாட்டில் ஆரம்பமானது என்பதற்கு ஆதாரங்கள் கிடைக்கவில்லை. ஆனாலும் கபடி முதலில் மல்யுத்தத்தில் இருந்து ஆரம்பமானது என்பதற்கு ஆதாரங்கள் உண்டு.இந்த வகையில் இப்போது விளையாடும் கபடிக்கு முன் விளையாடியது போல் கபடி மல்யுத்தம் இப்போதும் பாகிஸ்தானில் விளையாடப்படுகிறது.அதில் கபடிக்கான தொழில்னுட்பம் காணலாம்.                                                                                                                                                              

[You must be registered and logged in to see this link.]இங்கே காணலாம்.    

வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1718
Join date : 23/05/2021

Back to top Go down

தினம் ஒரு தகவல் (தொடர்) - Page 2 Empty ஒலிச்சேர்க்கை (Dubbing)

Post by வாகரைமைந்தன் Wed Aug 25, 2021 11:15 pm

ஒலிச்சேர்க்கை (Dubbing) என்பது திரைப்படத் தயாரிப்பிலும், நிகழ்படத் தயாரிப்பிலும்,( films, television films, television series, cartoons, and anime) படப்பிடிப்புக்குப் பிந்திய ஒரு செயற்பாடு ஆகும். ஒலிச்சேர்க்கையின்போது, முதலில் செய்த ஒலிப்பதிவுக்குக் கூடுதலான அல்லது குறைநிரப்பு ஒலிப்பதிவு (Dubbing, mixing or re-recording ) இடம்பெறுகிறது. இந்தச் செயல்முறை, தன்னியக்க உரையாடல் பதிலீடு அல்லது கூடுதல் உரையாடல் பதிவு என்பதையும் உள்ளடக்குகிறது. இச்செயல்முறையின் போது, படத்தில் நடித்த நடிகர்களின் உரையாடல்களை மீள்பதிவு செய்கின்றனர். இசை பெரும்பாலும் ஒலிச்சேர்க்கை மூலமே திரைப்படத்தில் இணைக்கப்படுகின்றது.

திரைப்படத்தில் நடித்த நடிகர்களுக்குப் பதிலாக இன்னொருவர் அதே மொழியில் குரல் கொடுப்பதும், திரைப்படங்களை மொழிமாற்றம் செய்யும்போது நடிகர்களுக்குப் பிற மொழியில் வேறொருவர் குரல் கொடுப்பதும் ஒலிச்சேர்க்கையுள் அடங்குவதே

தன்னியக்க உரையாடல் பதிலீடு அல்லது கூடுதல் உரையாடல் ஒலிப்பதிவு என்பது, படப்பிடிப்பு முடிவடைந்த பின்னர், படத்தில் நடித்த நடிகர்கள் தமது உரையாடல்களை மீள்பது செய்யும் ஒரு செயற்பாடு ஆகும். ஒலித்தரத்தை மேம்படுத்துவதற்காகவும், உரையாடலில் மாற்றங்களை ஏற்படுத்தவும் இது அவசியமாகின்றது. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட உரையாடல்களில் இருக்கக்கூடிய சொற் தெளிவு, நேர இசைவுக் குறைபாடு, உச்சரிப்புக் குறைபாடு போன்றவற்றை நீக்குவதற்கும் இந்த முறை பயன்படுகின்றது.

வழமையான படத் தயாரிப்புக்களின்போது, படப்பிடிப்பு ஒலிப்பதிவாளர் படப்பிடிப்பின்போதே உரையாடல்களை ஒலிப்பதிவு செய்வார். ஆனாலும், கருவிகளிலிருந்து எழும் ஒலி, போக்குவரத்து ஒலி, காற்று மற்றும் சூழலிலிருந்து எழுகின்ற பிற ஒலிகள் போன்றவற்றினால், களத்தில் செய்யப்படும் ஒலிப்பதிவுகள் பெரும்பாலும் பயன்பாட்டுக்கு உதவாதவையாக ஆகிவிடுகின்றன. படப்பிடிப்புக்குப் பிந்திய கட்டத்தில், ஒரு ஒலிப்பதிவு மேற்பார்வையாளர் பதிவு செய்யப்பட்ட உரையாடல்களைக் கேட்டு மீள ஒலிப்பதிவு செய்யவேண்டிய பகுதிகள் எவை என முடிவு செய்வார்.

 Automated dialogue replacement (ADR) போன்ற வேறுபட்ட முறைகள் உண்டு.உலகில் அதிக டப்பிங்க் செய்யும்,,அதிக டப்பிங்க் கலைஞர்கள் கொண்ட நாடாக ஜேர்மனி திகழ்கிறது.

இந்த முறையை மாற்ற AI தொழிநுட்பம் வந்திருக்கிறது.சில காட்டூன்,சிறுவர் அனிமே படங்களில் பாவிக்கபட்டு  வரும் ஏ.ஐ.முறையினால் டப்பிங்க் கலைஞர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகலாம் எனச் சொல்லப்படுகிறது. deepfake technology தொழிநுட்ப உதவியுடன் traditional dubbing முறையை மாற்றும் AI and synthetic dubbing technology  மனித முறையை விட சிறப்பாக செயல்படுவதாக கூறுகிறார்கள்.நடிகர்/நடிகைகளின் உண்மையான குரலை Machine learning முறையில் அப்படியே டப்பிங்கில் கொண்டு வர முடியும்.

Jack Nicholson speaking French and German 
                 


வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1718
Join date : 23/05/2021

Back to top Go down

தினம் ஒரு தகவல் (தொடர்) - Page 2 Empty ரக்ஷா பந்தன்

Post by வாகரைமைந்தன் Fri Aug 27, 2021 8:21 pm

[You must be registered and logged in to see this image.]

ரக்ஷா பந்தன் என்பது, ஆவணி மாதப் பௌர்ணமி நாளில் கொண்டாடப்படும் பண்டிகையாகும். பெண்கள் தமது சகோதரர்கள், மற்றும் சகோதரர்களாகக் கருதுவோரின் மணிக்கட்டில் மஞ்சள் நூல் கட்டுவது இப்பண்டிகையின் முக்கிய நிகழ்ச்சி. இதனை ஏற்றுக் கொள்வதன் மூலம் ஓர் ஆண், அந்தச் சகோதரியின் பாதுகாப்பிற்கும், வாழ்க்கை நலத்திற்கும் உறுதுணையாக இருப்பேன் என்று உறுதி கூறுவதாகக் கருதப்படுகிறது. ராக்கி கட்டியவுடன் சகோதரன், அந்த அன்புச் சகோதரிக்கு ஒரு பரிசு (அல்லது பணம்) அளிப்பது வழக்கம். அடிப்படையில் இந்துக்களால் கொண்டாடப்படும் இப்பண்டிகையை மதப் பணடிகை என்பதை விட சமுதாயப் பண்டிகை என்று கூறுவது பொருந்தும்.

       [You must be registered and logged in to see this image.]

வட இந்தியாவில் பிரபலமாக உள்ள இந்த நிகழ்ச்சி தற்போது தென்னிந்தியாவிலும் பிரபலமாகி வருகிறது. வண்ணமயமான ராக்கிகள், தென்னிந்தியாவில் சின்னச் சின்ன கடைகளில் கூட தொங்குவதைக் காணலாம்.
மகாபாரதத்தில் பாண்டவர்களின் மனைவியான திரௌபதி, போர்க்களத்தில் கிருஷ்ணருக்கு ஏற்பட்ட காயத்தால் வடிந்த இரத்தத்தைத் தடுப்பதற்காக, அவரது புடவையின் ஒரு பகுதியைக் கிழித்து, அவரின் மணிக்கட்டில் கட்டினார். இந்நிகழ்வு, கிருஷ்ணரின் ஆழ்மனதைத் தொட்டதால், அவர் திரௌபதியைத் தனது சகோதரியாக ஏற்றுக்கொண்டு அவரை எல்லா தீயசக்திகளிடமிருந்தும், பிரச்சனைகளிலிருந்தும் பாதுகாப்பதாக அவருக்கு உறுதியளித்தார். அவரளித்த உறுதியைக் காப்பாற்றும் விதமாக, சூதாட்டத்தில் கௌரவர்களிடம் பாண்டவர்கள் தோற்று திரிதராஷ்டிராவின் நீதிமன்றத்தில் திரௌபதியை துகிலுரிய முயன்றபோது அவரின் மானத்தைக் கிருஷ்ணர் காப்பாற்றினார். திரௌபதி கிருஷ்ணரின் கையில் புடவையை கிழித்து கட்டிய நிகழ்வே இன்று ரக்ஷாபந்தன் விழாவாக கொண்டாடப்படுகிறது. ...இது மகாபாரதக் கதையில் வருகிறது.  இப்படி பல கதைகள் ராக்கி கட்டுவதற்கு சொல்லப்படுகிறது.
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1718
Join date : 23/05/2021

Back to top Go down

தினம் ஒரு தகவல் (தொடர்) - Page 2 Empty Bagwal Fair  (கல் எறியும் விழா)

Post by வாகரைமைந்தன் Fri Aug 27, 2021 8:29 pm

[You must be registered and logged in to see this image.]

ரக்ஷாபந்தன்  நாளில் உத்தரகாண்டில் Devidhura இல் உள்ள  Maa Varahi Devi Temple கோயிலில் ஆண்டுதோரும் நடைபெறும் ஒரு விழா Bagwal Fair  (கல் எறியும் விழா)

புராணத்தின் படி, ஒவ்வொரு வருடமும் ஒரு மனிதனை (நரபலி) மா வராஹிக்கு (பாராஹி) பலியிடும் பாரம்பரியம் 'கம்' என அழைக்கப்படும். அத்தகைய ஒரு வருடத்தில், ஒரு வயதான பெண்மணி தனது ஒரே பேரனை மா வராஹிக்கு பரிசளிக்க முடிவு செய்தாள்.. தயக்கத்துடனும் மிகுந்த துக்கத்துடனும் அவள் தன் பேரனை தியாகத்திற்கு தயார் செய்தாள். அவளது துயரத்தையும் பக்தியையும் பார்த்து, ஒரு மனிதனின் உடலில் இருக்கும் சமமான இரத்தம் அவளுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் மா வராஹி தனது பேரனின் உயிரைக் காப்பாற்ற ஒப்புக்கொண்டார். அந்த நாளிலிருந்து, பக்வால் திருவிழா கொண்டாடப்படுகிறது, அங்கு காம் உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் கற்களை வீசுகிறார்கள், இதனால் ஒருவருக்கொருவர் காயப்படுவார்கள் மற்றும் தங்கள் இரத்தத்தை கூட்டாக மா வராஹிக்கு தியாகம் செய்கிறார்கள்.  

பலர் காயங்களுக்கு உள்ளாவதைத் தொடர்ந்து,கற்களுக்குப் பதிலாக இப்போது மலர்கள்,பழங்களை எறிகிறார்கள்.கேடையம் போல் ஒன்றை பிடித்து கற்களை எறியும் போது தடுப்பார்கள்.



இதேபோல் மத்திய பிரதேசம் ஜாம் நதிக்கு அருகே உள்ள Pandhurna, Sawargaon கிராம மக்கள் கொண்டாடும் விழா Gotmar Mela  ஆகும். இதில் கல் எறியும் Gotmar Mela  விழாவில் பலர் காயம் அடைந்தும் சிலர் இறந்தும் போவதாக சொல்லப்படுகிறது.ஜாம் நதியின் நடுவே மரம் நடப்பட்டு மேலே உயரத்தில்  கொடி ஒன்றை கட்டுவார்கள்.நதியின் இரு பக்கமும் ஒவ்வொரு கிராம மக்கள் சேர்ந்து எதிர் கிராம மக்களை நோக்கி கற்களை எறிந்து கொண்டே முன்னேறுவார்கள்.அப்படி முன்னேறும் போது பலருக்கு காயங்கள் ஏற்பட்டு முன்னேற முடியாமல் போகும்.அதை சமாளித்து முன்னேறி மரத்தில் ஏறி கொடியை எடுப்பவர் அந்தக் கிராமத்தின்  வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.உயரத்தில் கட்டப்பட்டிருக்கும் கொடியை எடுக்க ஏறும் போது எறியும் கற்களிலிருந்து தப்பி ஏற வேண்டும்.

வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1718
Join date : 23/05/2021

Back to top Go down

தினம் ஒரு தகவல் (தொடர்) - Page 2 Empty மனுதர்ம விதியின் கொடூரம்

Post by வாகரைமைந்தன் Sat Aug 28, 2021 11:50 am

ஸ்ரீமன் நாராயண வைகுண்டசாமி அல்லது நாராயண பண்டாரம் என்றும் அழைக்கப்படும் விஷ்ணுவின் பத்தாவது அவதாரம் அல்லது அவதாரம் என்றும் அழைக்கப்படும் [You must be registered and logged in to see this link.]  (சி .1809 – சி .1851; வி) 19 ஆம் நூற்றாண்டின் சமூக சீர்திருத்தவாதி மற்றும் ஐகானோக்ளாஸ்ட் ஆவார், அவர் திருவிதாங்கூர் இராச்சியத்தில் நலிந்த மக்களின் முன்னேற்றத்திற்காக பணியாற்றினார்.




வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1718
Join date : 23/05/2021

Back to top Go down

தினம் ஒரு தகவல் (தொடர்) - Page 2 Empty பட்டாம்பூச்சி விளைவு (Butterfly effect)

Post by வாகரைமைந்தன் Sat Aug 28, 2021 6:42 pm

பட்டாம்பூச்சி விளைவு (Butterfly effect) எனப்படுவது ஒரு கணித கருத்துரு. ஓர் இயங்கியல் அமைப்பில் (dynamical system) நுண்ணிய தொடக்கநிலை வேறுபாடுகளே (small variationss of the initial condition) அமைப்பின் நீண்ட கால இயக்கத்தில் பெரிய வேறுபாடு கொண்ட விளைவுகளை ஏற்படுத்தலாம் என்பதுவே பட்டாம்பூச்சி விளைவின் சாரம்.

பட்டாம்பூச்சி விளைவு ஒரு குறிப்பிட்ட சில கணித பிரச்சினைகளிலேயே முக்கிய இடத்தைப் பெறுகிறது. எல்லா இடங்களிலும் இதை கருத்தில் கொண்டால் நடைமுறையாக தீர்வுகளை காண்பது சாத்தியமற்றதாகிவிடும். பல இடங்களில் கிட்ட தட்ட கணிப்பதே தேவை.
                             
வண்ணாத்திப்பூச்சி விளைவு /  பட்டாம்பூச்சி விளைவு என்றால் என்ன?
வண்ணாத்திப்பூச்சி விளைவு (Butterfly effect) எனப்படுவது ஒரு கணித கருத்துரு. Dynamical system ஒன்றில்  நுண்ணிய தொடக்கநிலை வேறுபாடுகளே அமைப்பின் நீண்ட கால இயக்கத்தில் பெரிய வேறுபாடு கொண்ட விளைவுகளை ஏற்படுத்தலாம் என்பதுவே பட்டாம்பூச்சி விளைவின் சுருக்கம்.

ஆரம்பத்தில் உருவாக்கப்படும் மிகச் சிறிய ஒரு செயல், அதன் தொடர்ச்சியான சம்பவங்களால், நாம் எதிர்பார்க்கவே முடியாத மாபெரும் விளைவைத் தோற்றுவிக்கலாம்.

இதன் அடிப்படை ஒழுங்கின்மைக் கோட்பாட்டில் இருந்து ஆரம்பிக்கிறது.  ஒழுங்கற்ற ஒரு அமைப்பிலோ / தொடர் செயற்பாட்டில் ஒரு ஒழுங்கை தேடுவதை விவரிப்பது தான் இந்த ஒழுங்கின்மைக் கோட்பாடு.

வண்ணாத்திப்பூச்சி விளைவுவிற்கான விளக்கம்
ஒழுங்கின்மைக்  கோட்பாட்டின் தந்தையான Edward Lorenz 1963 இல், இதை
பிரேசில் நாட்டில் பறந்து கொண்டிருக்கும் ஒரு வண்ணத்துப் பூச்சியின் சிறகின் படபடப்பினால் ஏற்படும் சலசலப்பிற்கும், டெக்ஸாசில் ஏற்படும் சூறாவளிக்கும் தொடர்பு உண்டு
என்றார். இதை அவர் கணித முறைப்படியும் வானிலை மாற்றங்களின்படியும் சரியென்று நிறுவிக் காட்டினார். இதனாலேயே இந்தத் தத்துவம், 'வண்ணத்துப்பூச்சி விளைவு' (Butterfly effect) எனப்பட்டது.

சங்கிலித் தொடர் விளைவுகள் (Chain reactions)
வண்ணத்துப்பூச்சி விளைவுடன் சேர்த்து  Domino effect, Snowball effect விளைவுகளையும் சங்கிலித் தொடர் விளைவுகள் (Chain reactions) என்ற பொதுவான தன்மைக்குள் அடக்கலாம்.

Domino effect
பல சிறிய Domino கட்டைகளை ஒன்றன் பின்னாக வரிசையாக அடுக்கி,  ஒன்றைத் தட்டும்போது, எல்லாமே அடுத்தடுத்து விழும். இதுவே Domino விளைவு ஆகும். ஒருவர் பேசுவது எமது காதில் ஒலியாகக் கேட்பதும் Domino விளைவேனலாம்.

டோமினோ விளைவு அல்லது சங்கிலி எதிர்வினை என்பது ஒரு நிகழ்வு ஒத்த நிகழ்வுகளின் சங்கிலியை அமைக்கும் போது ஏற்படும் ஒட்டுமொத்த விளைவு ஆகும்.  இந்த சொல் ஒரு இயக்கமுறைமை விளைவு (mechanical effect  ) என்று அழைக்கப்படுகிறது மற்றும் டோமினோக்களின் வீழ்ச்சி வரிசைக்கு ஒரு ஒப்புமையாக பயன்படுத்தப்படுகிறது. இது பொதுவாக தொடர்ச்சியான நிகழ்வுகளுக்கு இடையிலான நேரம் ஒப்பீட்டளவில் சிறியதாக இருக்கும் நிகழ்வுகளின் இணைக்கப்பட்ட வரிசையைக் குறிக்கிறது. இது உண்மையில் பயன்படுத்தப்படலாம் (உண்மையான மோதல்களின் தொடர்ச்சியான தொடர்) அல்லது உருவகமாக (உலகளாவிய நிதி அல்லது அரசியல் போன்ற அமைப்புகளுக்குள் காரண உறவுகள்). டோமினோ விளைவு என்ற சொல் ஒரு நிகழ்வு தவிர்க்க முடியாதது அல்லது அதிக வாய்ப்புள்ளது (இது ஏற்கனவே நடக்கத் தொடங்கியதால்), மற்றும் ஒரு நிகழ்வு சாத்தியமற்றது அல்லது மிகவும் சாத்தியமற்றது (ஒரு டோமினோ இடதுபுறம்) என்பதைக் குறிக்கிறது.

[You must be registered and logged in to see this image.]

Snowball effect
இது Domino effect  போன்றதுதான், ஆனால் வித்தியாசம் ஒரு செயலால் உருவாக்கப்பட்ட தாக்கத்தின் விளைவு அனைத்துத் திசையிலும் பரவி இருக்கும்.

[You must be registered and logged in to see this image.]

பனி படர்ந்த மலையின் உச்சத்தில் இருந்து ஒரு கையளவு உள்ள ஒரு பனி உருண்டை கீழே விழும்போது, அந்தச் சிறிய பனி உருண்டை, உருண்டு கீழே போகும்போது அண்மையில் இருக்கும் பனிகளையும் தன்னுடன் சேர்த்து, போகப்போக பெரிய பனி உருண்டையாக மாறுகின்றது. கடைசியில் இது மிகப்பெரிய பனிச்சரிவைக் கூட ஏற்படுத்த வாய்ப்புகளை ஏற்படுத்துகிறது.

[You must be registered and logged in to see this image.]

வண்ணாத்திப்பூச்சி விளைவுவின் வரையறைகள்
பட்டாம்பூச்சி விளைவு ஒரு குறிப்பிட்ட சில கணித பிரச்சினைகளிலேயே முக்கிய இடத்தைப் பெறுகிறது. எல்லா இடங்களிலும் இதை கருத்தில் கொண்டால் நடைமுறையாக தீர்வுகளை காண்பது சாத்தியமற்றதாகிவிடும். பல இடங்களில் கிட்ட தட்ட கணிப்பதே தேவை.

வண்ணாத்திப்பூச்சி விளைவு பொதுவாக  சுய சிந்தனை அற்ற ஒரு அமைப்பை முன்வைத்தே முன்வைக்கப்படுகிறது. தன்னிச்சையாக சிந்தித்து இயங்கக்கூடிய சமூக சூழலுக்கு இந்த விளைவு எவ்வளவு பொருத்தம் என்பது  ஐயத்துக்குரியது.

Chaos Theory இன் பயன்பாடுகள்
மருத்துவ துறையில் சீரற்று வரும் காக்கை வலிப்பு சம்பந்தமான கற்கைகளுக்கு
பொறியியலில் திரவ கொந்தளிப்பு பற்றிய கற்கைகள்,பங்கு சந்தைகள் மதிப்பீடுகள், சமூக கற்கைகள்
இலத்திரனியலில்  encryption systems, random number generators

திரைப்படங்களில் வண்ணாத்திப்பூச்சி விளைவு [Butterfly Effect]
ஹாலிவூட்டில் பல படங்கள் வந்தாலும் கூட,தமிழில் சொல்லக்கூடிய வகையில் வந்த ஒரே ஒரு படம் தசாவதாரம் தான். கமல்ஹாசனின் பத்து அவதாரங்களில் வந்து மதம் தொடர்பான சர்ச்சைகளை உள்ளடக்கிய படம்.

வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1718
Join date : 23/05/2021

Back to top Go down

தினம் ஒரு தகவல் (தொடர்) - Page 2 Empty அங்கோர்வாட்

Post by வாகரைமைந்தன் Sun Aug 29, 2021 1:03 pm

அங்கோர் வாட் (Angkor Wat) என்பது, அங்கோர், கம்போடியாவில் உள்ள இந்துக்கோயிலாக இருந்து பின்னர் புத்த மதக் கோயிலாக மாறிய ஒரு தொகுதியாகும். இது 162.6 எக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. இது உலகின் மிகப்பெரிய மத வழிபாட்டுத் தலமாகும். இது பண்டைய கெமீர் இனத்தை சேர்ந்த இரண்டாம் சூரியவர்மனால் (கிபி 1113–1150) 12ஆம் நூற்றாண்டின் போது யசோதரபுரத்தில் (இப்போதைய அங்கோர்) கட்டப்பட்டது. இது மாநில கோயிலாகவும், கல்லறை மாடமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. அப்போதைய அரசர்களின் சைவ பாரம்பரியத்தை உடைக்கும் விதமாக இக்கோயில் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கபட்டது. இக்கோயில் கெமர் பாரம்பரியத்தின் உயர்தர கட்டமைப்பை கொண்டது. இக்கோயில் கம்போடியா நாட்டின் சின்னமாக அந்நாட்டு கொடியில் இடம்பெற்றுள்ளது. அங்கோர் என்பது நகரத்தையும், வாட் என்பது கோயிலையும் குறிக்கும். இது கெமீர் மொழிச் சொல்லாகும்.


அங்கோர்வாட் -கம்போடியா இந்தக் காணொலிகளில் உள்ளவை எவ்வளவுக்கு உண்மை எனத் தெரியாது. அவர் ஒரு உலகம் சுற்றும் வாலிபன்-பார்த்ததை பதிவிடுகிறார்.




பிரவீன் மோகனின் மற்றைய காணொலிகளைக் காண.....

பிரவீன் மோகன்
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1718
Join date : 23/05/2021

Back to top Go down

தினம் ஒரு தகவல் (தொடர்) - Page 2 Empty அஃபொரிசிம் (Aphorism)

Post by வாகரைமைந்தன் Mon Aug 30, 2021 3:19 pm

[You must be registered and logged in to see this image.]

மானெக்க்ஷா வின் செப்படு வித்தை-சீர் மேவும் நுண்மொழி -நூலில் இருந்து…

[You must be registered and logged in to see this image.]

இது ஒரு அஃபொரிசிம் (Aphorism) .அஃபொரிசிம் என்றால் ஒரு நிலையான உண்மையை அழுத்தம் திருத்தமாக சொல்வது.அதாவது நேரடியான பொருள் தரக்கூடியதாக சொல்லாமல்,ஒன்றை சொல்லி அது வேறொரு அர்த்தம் தருவதாக இருக்கும்.தமிழ் சொல் தெரியாது.

முதலில் இந்த சொல்லை(aphorismos  ) கிரேக்க நாட்டைச் சேர்ந்த மருத்துவ அறிஞர் ,  ஹிப்போகிரட்டீஸ் , பயன்படுத்தி இருந்தார்.இப்படியான சொல் விளக்கம் தமிழில் பல உண்டு.

ஒரு செம்மறி ஆட்டுக் கூட்டத்தில் ஒரு ஆடு கிணற்றில் தவறி வீழ்ந்து 
விட்டால், அனைத்து ஆடுகளும் கிணற்றில் விழும்.

ஒரு செயல் சரியா, தவறா என்பதையெல்லாம் பாராது, குருட்டுத்தனமாக ஒருவன் செய்யும் செயலையே 
அனைவரும் செய்ய ஆரம்பித்தால் செம்மறி ஆட்டுக் கூட்டம் போல என்ற இந்த நியாயம் சுட்டிக் காட்டப்படும். 

வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1718
Join date : 23/05/2021

Back to top Go down

தினம் ஒரு தகவல் (தொடர்) - Page 2 Empty எஸ்தோனியா

Post by வாகரைமைந்தன் Tue Aug 31, 2021 2:47 pm

எஸ்தோனியா - உத்தியோகபூர்வமாக எஸ்தோனியக் குடியரசு என்பது , வட ஐரோப்பாவின் பால்டிக் பகுதியிலுள்ள நாடாகும். இதன் எல்லைகளாக வடக்கே பின்லாந்தும், மேற்கே பால்டிக் கடலும், தெற்கே லத்வியாவும் (343 km), கிழக்கே பெய்பசு ஏரியும் ரசியாவும் (338.6 km) அமைந்துள்ளன. பால்டிக் கடலுக்கு அப்பால் சுவீடன் மேற்கிலும், பின்லாந்து வடக்கிலும் அமைந்துள்ளன. ஜேர்மனியின் கட்டுப்பாடுக்குள் இருந்து 1940 முதல் சோவியத் ஆக்கிரமிப்பில் இருந்து 1991 இல் இருந்து விலகி,12 ஏப்ரல் 1917 இல்  தன்னாட்சியை அறிவித்தது.

எஸ்தோனிய நாட்டின் அதிபர் , Kersti Kaljulaid,ஐந்து வருட பதவி  அக்தோபர் 10 இல் முடிவடைவதைத் தொடர்ந்து  101 உறுப்பினர்களைக் கொண்ட  Riigikogu என அழைக்கப்படும் பாராளுமன்றம் புதிய அதிபரை தெரிவு செய்ய வேண்டி வந்தது.சனிக்கிழமையுடன்  விண்ணப்பத்திகதி முடிவடைந்த  நிலையில்  Alar Karis,  தவிர வேறு யாரும் போட்டியிட முன்வராததால், எஸ்தோனிய நாட்டின் முதல் பெண் அதிபராகிறார்  காரிஸ்.

தேர்தலில் போட்டியிடுவதும் ஆட்சியை பிடிக்க தில்லுமுல்லு செய்வதும் உலகம் முழுவதும் வழக்கமாகி விட்டது.ஜனநாயகம் பணநாயகமாகி மக்கள் ஆட்சி கேள்விக்குறி ஆகி உள்ளது.

ரஸ்ய அதிபர் பூட்டின் ஆயுட்கால அதிபராகிக் கொண்டதும்,பதவி விலகினால் அவர் மீது எந்த வழக்கும் தொடர முடியாதபடியும் சட்டம் இயற்றி உள்ளார்.சென்ற தேர்தலில் அவர் வெற்றி பெற செய்த சூழ்ச்சிகளை ஊடகங்கள் வெளிக் கொண்டு வந்தது.



வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1718
Join date : 23/05/2021

Back to top Go down

தினம் ஒரு தகவல் (தொடர்) - Page 2 Empty கடைசி வார்த்தை

Post by வாகரைமைந்தன் Sun Sep 05, 2021 11:01 pm

இறக்கும் மனிதன் ஒருபோதும் பொய் சொல்ல மாட்டான் -A dying Man Never lies

கடைசி வார்த்தை

அப்துல் கலாம்
2015 ஆம் ஆண்டில், ஷில்லாங் இந்திய மேலாண்மை நிறுவனத்தில் அவர் விரிவுரையாற்றிக் கொண்டிருந்தபோது மாரடைப்பால் சரிந்து இறந்தார். இறப்பதற்கு முன், அவர் ஸ்ரீஜன் பால் சிங்கிடம் புன்னகையுடன் (கலாமுக்கு உதவியாளர்) கீழ்கண்டவாறு கூறினார்.

 வேடிக்கையான பையன்! நீங்கள் நன்றாக இருக்கிறீர்களா? Funny guy! Are you doing well?

நாஸ்ட்ராடாமஸ் (Nostradamus )
நோஸ்ட்ராடாமஸ் அனைவருக்கும் தெரியும். பிரெஞ்சு ஜோதிடர் லெஸ் புரோஃபேட்டிஸ் (Les Prophéties ) என்ற புத்தகத்தில் மிகவும் பிரபலமானவர், இதில் 942 ரகசிய கவிதைகள் உள்ளன, அவை பல எதிர்கால நிகழ்வுகளை முன்னறிவித்ததாகக் கூறப்படுகிறது.

நோஸ்ட்ராடாமஸ் ஜூலை 1, 1566 அன்று மாலை தனது கடைசி வார்த்தைகளை உச்சரித்தார், மறுநாள் காலையில் அவர் இறந்துவிட்டார்.

"நாளை, சூரிய உதயத்தில், நான் இனி இங்கு இருக்க மாட்டேன்." - ( “Tomorrow, at sunrise, I shall no longer be here.”)

மகாத்மா காந்தி
ஹே ராம் - என பலராலும் சொல்லப்பட்டாலும்,இதுபற்றி சர்ச்சைகள் உண்டு.மருமகள்கள் Manu,Abha உடன் எப்போதும் சென்றாலும் அன்றைய தினம் மனு அருகில் இருந்தார்.அப்போது மனுவை தள்ளி விட்டு நெஞ்சிலும் வயிற்றிலும் சுடப்பட்டு இறந்தார்.போராட்டம் உண்ணாநோன்பு என உடல் நலிவுற்றிருந்த நிலையில் அவர் முனகியது யாருக்கும் கேட்டிருக்க வாய்ப்பில்லை.

மானு குறைந்த வயதில் சிறைக்குச் சென்றவர்,அப்போதிருந்து டயறி குறிப்பு எழுதும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்.காந்தி இறந்ததுடன் குறிப்பு எழுதுவதை நிறுத்தி விட்டார்.அவரிடமிருந்தும் எதுவித தகவலும் கிடைக்கவில்லை.

காந்தியின் உதவியாளர் கல்யாணம் கூறுகையில்,அவர் எதுவும் சொல்லவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். இப்படி தீர்க்கப்படாத சர்ச்சைகள்.

கௌதம புத்தர்..
அனைத்து கூட்டு விஷயங்களும் மறைந்து போகும். விடாமுயற்சியுடன் முயற்சி செய்யுங்கள். -"All compounded things are subject to vanish. Strive with earnestness."

கொன்பியுசியஸ்-Confucius,
சொர்க்கம் எனக்கு எதிராக திரும்பியது. எந்த புத்திசாலித்தனமான ஆட்சியாளரும் எழவில்லை, பேரரசில் யாரும் என்னை அவருடைய ஆசிரியராக்க விரும்பவில்லை. என் இறக்கும் நேரம் வந்துவிட்டது. "
"Heaven has turned against me. No wise ruler arises, and no one in the Empire wishes to make me his teacher. The hour of my death has come."

ஜூலியஸ் சீசர்
நீயுமா புரூட்டஸ் - "and you, Brutus?"
ஆனால் இந்த வசனம் சேக்ஸ்பியரால் எழுதப்பட்டது. உண்மையில் சொல்லப்பட்டது இதுவல்ல.καὶ σύ, τέκνον- "You too, my child?" என கிரேக்க மொழியில் சொல்லப்பட்டது என்கிறார்கள்.ஆனாலும் கிரேக்க மொழி பேசத் தெரிந்த சீசரின் தாய் மொழி லத்தீன் என்பதால் அதுவும் சரியாக இருக்க முடியாது.அவர் எதுவும் பேசவில்லை எனவும் வாதம் உள்ளது.Suetonius (சீசர் காலத்தில் வாழ்ந்த வரலாற்று ஆசிரியர்) ஆல் சொல்லப்பட்டது இது... "Ista, quidem vis est!" (Why, this is violence!).
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1718
Join date : 23/05/2021

Back to top Go down

தினம் ஒரு தகவல் (தொடர்) - Page 2 Empty Volkswagen-VW

Post by வாகரைமைந்தன் Tue Sep 07, 2021 7:29 pm

[You must be registered and logged in to see this image.]

Volkswagen - VW- ஃபோல்க்ஸ்வேகன் எனபது வோல்ஸ்வேகன் குழும நிறுவனத்தின் ஒரு துணை நிறுவனம் ஆகும். இது கார் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளது. இந்த நிறுவனம் ஜெர்மனியில் உள்ள வுல்ஃப்ஸ்பர்கில் ( Wolfsburg. ) 28 மே 1937ல் தொடங்கப்பட்டது. வோல்ஸ்க்வேகன் என்ற சொல் ஜெர்மானிய மொழியில் மக்களுடைய கார் என்று பொருள்.(Volks- மக்கள் ,Wagen- வாகனம்/கார் )

[You must be registered and logged in to see this image.]

ஸ்கோடா (Skoda) ஆட்டோ நிறுவனத்துடன் இணைந்து வோல்ஸ்வேகன் இந்தியாவில் செப்டம்பர் 2007ம் ஆண்டு பஸட் (Passat) மாதிரி காரை அறிமுகப்படுத்தியது.

[You must be registered and logged in to see this image.]

வோல்க்ஸ்வகேன் ( motor vehicle manufacturer )முதன் முதலில் 1937ல் பெர்லினில் ஜெர்மானிய தொழிலாளர் முன்னணியால் உருவாக்கப்பட்டது. முற்பகுதிகளில் ஜெர்மன் வாகன தொழில் ஆடம்பர மாதிரிகளை கொண்டதாகவே அமைந்தது, சராசரி ஒரு ஜெர்மானியர் அரிதாக ஒரு மோட்டார் சைக்கிளை விட வேறு ஒன்றும் பெற்று விட முடியாது.இதன் விளைவாக ஜெர்மனியில் 5௦ பேருக்கும் குறைவானோரே கார் வைத்திருந்தனர்.புதிய புதிய சந்தையை தேடிக்கொண்ட சில கார் தயாரிப்பு நிறுவனங்கள் இந்த மக்கள் கார் தயாரிப்பு திட்டத்தை பயன்படுத்திக்கொண்டன.( மெர்சிடஸ் 170H, ஆட்லர் ஆட்டோபன், ஸ்டேர் 55, மற்றும் ஹனோமக் 1.3L ஆகியவை.)

[You must be registered and logged in to see this image.]

இந்த கார் நிறுவனத்தின் தொழிற்சாலை, நகரை விட்டு அதிக தொலைவில் இருப்பதால், 1938 இல் அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களுக்காக உணவு தயாரித்து வழங்கியது.பின்னர் 1973 இல்  currywurst, sausage,ketchup என தயாரிக்கத் தொடங்கியது.2010 இல் இருந்து சைவ சோசேச்களை அறிமுகப்படுத்தியது.
 
கார் பகுதிகளை அடையாள இலக்கமாக 199 398 500 A கொண்டு இவை தயாரானது.

[You must be registered and logged in to see this image.]

VW காரைப் போல இந்த உணவுப் பொருட்களும் உலகளவில் விற்பனயானது. காரை விட அதிகமாக விற்பனையான சோசேஜ்கள் விற்பனையை நிறுத்துவதாக இப்போது அறிவித்துள்ளது.
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1718
Join date : 23/05/2021

Back to top Go down

தினம் ஒரு தகவல் (தொடர்) - Page 2 Empty தற்கொலை-Risk factors for suicide

Post by வாகரைமைந்தன் Wed Sep 08, 2021 4:25 pm


[You must be registered and logged in to see this image.]

இப்பொழுது எல்லாம் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. குடும்பத்தில் பிரச்சினை, காதலில் பிரச்சனை, மன அழுத்தம், பரிட்சையில் தோல்வி என்று சின்ன சின்ன காரணங்களுக்கு கூட நம் மனசு உடைந்து போய் விடுகிறது. தற்கொலை என்ற ஒரு நிமிட எண்ணம் எல்லாருக்கும் உடனே வருவதில்லை.

[You must be registered and logged in to see this image.]

பிரச்சனைகளை எப்படி கையாளுவது என்று தெரியாமல் குழம்பும் போது யாரும் அரவணைக்க, தோள் கொடுக்க இல்லாமல் தனிமையில் வாடும் சமயத்தில் இந்த மாதிரியான முடிவை நோக்கி மக்கள் செல்கின்றனர். உங்களிடம் யாராவது வாழ்க்கை போற போக்கை பார்த்தால் பேசாம செத்துடலாம் போல இருக்கு என்று சொன்னால் அசால்ட்டாக அவர்களை கடந்து செல்லாதீர்கள். இதுவும் தற்கொலை எண்ணத்தின் முதல் அறிகுறி தான். மனதில் ஏற்படும் விரக்தி, கோபம், வாழ்க்கையை பற்றிய பயம் தான் அவர்களை இப்படி பேச வைக்கிறது என்று உளவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

சரி உங்க நெருங்கிய நண்பரோ அல்லது உறவினரோ ஏன் உங்களுக்கு நெருக்கமான நபராக இருக்கலாம் இப்படி ஒரு முடிவெடுக்க போகிறார்கள் தெரிந்தால் என்ன செய்வீர்கள். கண்டிப்பாக தடுக்கத்தான் முயற்சி செய்வோம். அவர்களிடம் மனம் விட்டு பேசுவோம், ஆறுதல் சொல்வோம். மனதை மாற்ற முயற்சி செய்வோம். இப்படி செய்வதன் மூலம் தற்கொலையை தடுக்க முடியும் என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.

[You must be registered and logged in to see this image.]

தற்கொலை செய்து கொள்வதற்கு பல நாட்கள் அல்லது மணி நேரங்களுக்கு முன்பாகவே எச்சரிக்கை சமிக்கைகளும் துப்புகளும் வெளிப்படுகின்றன.

“இனியும் என்னால் தொடர முடியாது” “இதற்கு மேல் ஒன்றுமில்லை”அல்லது “அனைத்திற்கும் ஒரு முடிவு காண்கிறேன்.” இதுபோன்ற கருத்துக்கள் எப்போதும் மிக முக்கியமாக கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவேண்டும்.

பிறபொதுவான எச்சரிக்கை சமிக்கைகள் கீழ்வருவற்றை உள்ளடக்கும்:

மன அழுத்தமடைதல் அல்லது பிடிப்பில்லாதிருத்தல்
கவலையுற்று நடந்து கொள்ளுதல்
உறவுகளைச் சந்தித்தல் மற்றும் மதிப்பு வாய்ந்த பொருட்களை ஒப்படைத்தல்
நடத்தை, மனப்பான்மை மற்றும் தோற்றத்தில் குறிப்பிடத்தகுந்த மாற்றம்.
அளவுக்கதிகமாக மது அருந்துதல், அல்லது போதை மருந்து பயன்படுத்துதல்
மிகப்பெரிய இழப்பு அல்லது வாழ்க்கை மாற்றத்தால் பாதிக்கப்படுதல்
அதிக எடுத்துக்காட்டுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தற்கொலை செய்து கொள்வதைப் பற்றி சிந்தித்துக் கொள்வதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பவரின் அறிகுறிகளாக இவைகள் இருக்கக்கூடும். பெரும்பாலான சமயங்களில் இந்த சூழ்நிலைகள் தற்கொலையில் முடிவதில்லை. ஆனால் பொதுவாக ஒரு நபர் இந்த சமிக்கைகளை அதிக அளவில் வெளிப்படுத்தும்போது தற்கொலைக்கான வாய்ப்பையும் அதிகரிக்கிறது.

[You must be registered and logged in to see this image.]

சூழ்நிலைகள்

தற்கொலைகள் அல்லது வன்முறை உள்ள குடம்பப் பிண்ணனி
பாலியல் அல்லது உடல்ரீதியான தகாத பழக்கம்
நெருங்கிய நண்பர் அல்லது குடும்ப உறுப்பினரின் மரணம்
விவாகரத்து அல்லது பிரிவு, உறவு முறிதல்
படிப்பில் தோல்வி, வரப்போகிற தேர்வுகள், தேர்வு முடிவுகள். வேலை இழப்பு,
பணிபுரியுமிடத்தில் பிரச்சனை
வரப்போகிற சட்ட நடவடிக்கை
சமீபத்திய சிறைவாசம் அல்லது வரக்கூடிய விடுதலை
நடத்தைகள்

[You must be registered and logged in to see this image.]

அழுதல்
சண்டையிடுதல்
சட்டத்தை மீறுதல்
உணர்ச்சி வசப்பட்ட செயல்கள்
தன்னையே காயப்படுத்திக் கொள்ளல்
மரணம் மற்றும் தற்கொலை பற்றி எழுதுதல்
முன்ப தற்கொலைக்கு முயற்சித்திருத்தல்
அதீத நடத்தைகள்
நடத்தையில் மாற்றங்கள்
உடல்ரீதியான மாற்றங்கள்

பலவீனம்
உறக்கத்தில் மாற்றம் – அதிகமாக உறங்குவது அல்லது குறைவாக உறங்குவது
பசியின்மை
உடல் எடை கூடுதல் அல்லது குறைதல்
சிறு உடல் உபாதைகள் அதிகரித்தல்
பாலுறவு விருப்பத்தில் மாற்றம்
தோற்றத்தில் திடீர் மாற்றம்
தோற்றத்தைப் பற்றிய அக்கறையின்மை
எண்ணங்கள் மற்றும் உணர்வுகள்
தற்கொலை எண்ணங்கள்

தனிமை – நண்பர்களிடமிருந்து குடும்ப உறுப்பினர்களிடமிருந்து
தரவுக் குறைவு
விலக்கல், ஒதுக்கப்பட்டதாக நினைத்தல்
ஆழ்ந்த வருத்தம் அல்லது குற்ற உணர்ச்சி
குறுகிய கண்ணோட்டத்தை தாண்டி சிந்திக்க இயலாமை
பகல்கனவு காணுதல்
மனக்கவலை மற்றும் அழுத்தம்
உதவி கிடைக்காமை
சுயமதிப்பை இழத்தல்
உங்களுக்கு தெரிந்தவரைப் பற்றி நீங்கள் கவலை கொண்டிருந்தால் அவர்களுக்கு உடனடி மன நல மருத்துவ ஆலோசனை அழைத்து செல்வது அவசியம்.
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1718
Join date : 23/05/2021

Back to top Go down

தினம் ஒரு தகவல் (தொடர்) - Page 2 Empty Re: தினம் ஒரு தகவல் (தொடர்)

Post by வாகரைமைந்தன் Wed Sep 08, 2021 4:39 pm

[You must be registered and logged in to see this image.]

அமைதியாகக் கேளுங்கள்!

யாராவது ஒருவர் மனஅழுத்தமடைந்திருந்தாலோ அல்லது தற்கொலை உணர்வுடன் இருந்தாலோ, அதிலிருந்து அவர்கள் விடுபட உதவி செய்ய முயற்சித்தலே நமது முதல் செயலாகும். தீர்வுகளைக் கண்டறிய அறிவுரைகள், நமது சொந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுதல் போன்றவற்றை நாம் செய்யலாம்.

[You must be registered and logged in to see this image.]

அமைதியாக அவர்கள் கூறுவதைக் கேட்பது இன்றும் சிறந்த செயல். தற்கொலை உணர்வுள்ளவர்கள் பதில்களையோ அல்லது தீர்வுகளையோ வேண்டுவதில்லை. அவர்களது பயங்களையும், ஆபாசங்களையும் வெளிபடுத்துவதற்கான ஒரு பாதுகாப்பான இடமே அவர்களுக்குத் தேவைப்படுகிறது.

[You must be registered and logged in to see this image.]

கேட்டர் – உண்மையாகக் கேட்டல் – எளிதானதல்ல. ஏதாவது சொல்ல வேண்டும் – கருத்துக்கூறல், அறிவுரை சொல்லுதல் அல்லது வேறு ஏதாவது கூறுதல் – என்ற நமது உள்ளுணர்வை நாம் கட்டுப்படுத்த வேண்டும். அந்த நபர் நம்மிடம் கூறும் விஷயங்களைக் கேட்பது மட்டுமின்றி அதற்குப் பின்னால் உள்ள அவர்களது உணர்வுகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களது கோணத்தில் இருந்து விஷயங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும், நமது கோணத்திலிருந்து அல்ல.

தற்கொலை உணர்வுள்ள ஒருவருக்கு நீங்கள் உதவுகிறீர்கள் எனில் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய சில அம்சங்கள்

[You must be registered and logged in to see this image.]

தற்கொலை உணர்வுள்ள ஒரு நபர் என்ன விரும்புகிறார்?

கேட்கக்கூடிய ஒருவர். அவர்கள் கூறுவதை நேரம் ஒதுக்கி தூய மனதுடன் கேட்கும் ஒருவர். யூகிக்காமல் அல்லது அறிவுரைகளோ அல்லது கருத்துக்களோ கூறாமல் அவ்ரகள் கூறுவதை முழுக்கவனத்துடன் கேட்பவர்.
நம்பிக்கைக்குரிய ஒருவர். அவர்களை மதிக்கவும் பொறுப்புகள் ஏற்கவும் முயலாத ஒருவர். அனைத்தையும் முழுமையாக இரகசியமாக வைத்திருக்கக்கூடும்.


[You must be registered and logged in to see this image.]

அக்கறை காட்டும் ஒருவர். அந்த நபரை தேற்றி அமைதியாகப் பேசச் செய்ய தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்பவர். ஏற்கும், நம்பும் மற்றும் மன உறுதியளிக்கும் ஒருவர் “நான் அக்கறைப்படுகிறேன்.” என்று கூறும் ஒருவர்.
தற்கொலை உணர்வுள்ளவர்கள் என்ன விரும்புவதில்லை?

தனித்திருத்தல். புறக்கணிப்பு பிரச்சினையைப் பத்து மடங்கு மோசமானதாகக் காட்டும். கேளுங்கள்.
அறிவுரை கூறப்படுதல். விளக்கங்கள் உதவாது “எல்லாம் சரியாகிவிடும்”போன்ற சுலபமான வாக்குறுதிகள் அல்லது “தைரியமாயிருங்கள்” போன்ற கருத்துக்களும் உதவாது. புகுத்தாய்தல், ஒப்பிடுதல், வகைப்படுத்தல் அல்லது விமர்சித்தல் போன்றவற்றைச் செய்யாதீர்கள். கேளுங்கள்.

[You must be registered and logged in to see this image.]

குறுக்கு விசாரணை செய்தல். பேசிக்கொண்டிருக்கும் விஷயத்தை மாற்றவோ அல்லது ஊக்கமளிக்கவோ வேண்டாம். உணர்வுகளைப் பற்றிப் பேசுதல் கடினமானது. தற்கொலை உணர்வுள்ளவர்கள் கட்டாயப்படுத்தப்படவோ அல்லது பாதுகாப்பு நிலைக்குத் தள்ளப்படவோ விரும்புவதில்லை. கேளுங்கள்.

[You must be registered and logged in to see this image.]
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1718
Join date : 23/05/2021

Back to top Go down

தினம் ஒரு தகவல் (தொடர்) - Page 2 Empty காளிதாஸ்

Post by வாகரைமைந்தன் Fri Sep 10, 2021 1:03 pm

[You must be registered and logged in to see this image.]

பேசும் சினிமா வருவதற்கு முன்னால் ஊமைப்படங்களைத்தான் மக்கள் பார்த்தார்கள். தமிழின் முதல் பேசும் சினிமாவின் பெயர் காளிதாஸ். தென்னிந்தியாவின் முதல் பேசும் சினிமாவும் அதுதான். இதே நாளில்தான் அது வெளியானது.

கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் சமஸ்கிருத மகாகவி காளிதாஸ்.அவர் சாகுந்தலம், மேகதூதம் எனும் அமர காவியங்களை இயற்றி உள்ளார்.அவரைப் பற்றிய சினிமா இது.

தமிழ்ப்படம் என சொல்லப்பட்டாலும் அதில் தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் பேசியுள்ளனர். இதில் பி. ஜி. வெங்கடேசன், டி. பி. ராஜலட்சுமி ஆகியோர் முக்கிய நடிகர்களாக நடித்துள்ளனர். இதில் கிட்டத்தட்ட ஐம்பது பாடல்கள் இடம்பெற்றிருந்தன

(தஞ்சை மாவட்டத்தில் திருவையாறு, சாலியமங்கலம் என்ற ஊரில் பஞ்சாபகேச ஐயர், மீனாட்சி ஆகியோருக்குப் பிறந்தவர் ராஜலட்சுமி. தந்தை அந்தக் கிராமத்தின் கர்ணமாகப் பொறுப்பு வகித்தவர். ராஜலட்சுமிக்கு எட்டு வயதிலேயே திருமணமாகி விட்டது. வரதட்சணைக் கொடுமையினால் பிறந்த வீட்டுக்கே வந்த ராஜலட்சுமியின் தந்தையும் இறக்கவே விதவைத் தாயுடன் வறுமையுடன் திருச்சி வந்து சேர்ந்தார்.)

. “இந்தியர்கள் நம்மவர்க்குள் ஏனோ வீண் சண்டை” போன்ற தேசபக்திப்பாடல்கள் இடம்பெற்றிருந்தன. பாடல்களை மதுரகவி பாஸ்கரதாஸ் எழுதி இருந்தார்.அவர்தான் முதல் சினிமா பாடலாசிரியர்.
இதன் முதல் காட்சி சென்னையில் இருந்த ‘சினிமா சென்டிரல்’ எனும் திரையரங்கில் 1931, அக்டோபர் 31 இல் திரையிடப்பட்டது.

1931 செப்டம்பர் 29 சுதேசமித்திரன் பத்திரிகையில் வெளியான காளிதாஸ் விளம்பரம்
[You must be registered and logged in to see this image.]

கான் பகதூர் அர்தேசிர் இரானி எனும் புகழ்பெற்ற இயக்குநரின் இம்பீரியல் மூவிடோன் கம்பெனியின் மூலம் இந்த படம் தயாரிக்கப்பட்டது. அவரின் உதவியாளரான எச். எம். ரெட்டி படத்தை இயக்கினார். எட்டாயிரம் ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட படம் 75 ஆயிரம் வரை வசூல் செய்தது.

1931 முதல் 40 வரை எடுத்த படங்களில் பெரும்பாலானவை அழிந்துவிட்டன.அவற்றில் காளிதாஸ் படமும் ஒன்று.
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1718
Join date : 23/05/2021

Back to top Go down

தினம் ஒரு தகவல் (தொடர்) - Page 2 Empty Waterboarding

Post by வாகரைமைந்தன் Fri Sep 10, 2021 1:28 pm

Waterboarding எனப்படும் சித்திரவதை என்றால் என்ன?

water torture, simulated drowning, interrupted drowning, controlled drowning எனப் பல பெயர்களில் இன்று சொல்லப்படும்  waterboarding என்ற சித்திரவதை 16 ஆம் நூற்றாண்டில் ஸ்பானிய நாட்டில் டோக்கோ என்ற பெயரில் தொடங்கியது எனச் சொல்லலாம். இந்த முறை பல நாடுகளில் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ச் புஷ் நிர்வாகத்தில்,செப்டெம்பர் 11 தாக்குதல் விசாரணைகளில் இவை எதுவும் சித்திரவதை அல்ல, ஒரு விசாரிக்கும் முறை என CIA நியாயப்படுத்தியது.  

இன்றும் இந்த சித்திரவதையை உலக மனித உரிமை ஆர்வலர்கள்,அம்னெஸ்டி போன்றவை கண்டித்து வருகிறார்கள்.

மனித நாகரீகம் வளர்ந்துள்ளதா என்ற கேள்விக்கு ஆம் எனவும் இல்லை என்றும் பதில் வந்து கொண்டிருக்கிறது.உண்மையாகப் பார்த்தால் வளரவில்லை கீழ் நோக்கி மிருகத்தனத்திலும் கேவலமாக சென்று கொண்டிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.ஒரு புறம் அரச பயங்கரவாதம்,தன்னை சட்டப்படி பயங்கரவாதிகளாக்கி செயல்படுகிறது. விசாரணை என்ற பெயரில் காவல் நிலையங்களில் சித்திரவதைகள், கொலைகள்,பாலியல் துன்புறுத்தல்கள், என கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கிறது. இன்னொரு புறத்தில் மக்களே அதை செய்து வருகின்றனர் என்பது தான்.

புணர்வாழ்வு என்று சொல்லிக் கொண்டு இலங்கையில் அரச சித்திரவதை கூடம்,சீனாவில் மூளைச்சலவை என்ற பெயரில் சித்திரவதை. இதே போன்ற ஒன்றுதான் Waterboarding ஆகும்.

Waterboarding என்பது சித்திரவதை என்கிறது மனித உரிமை அமைப்புகள். இல்லை அது பயங்கரவாதிகளை விசாரிக்கும் முறை என்கிறது இராணுவ அமைப்புகள். பின்புறம் அசைய முடியாமல் பிணைக்கப்பட்டிருக்கும் ஒரு விசாரணைக்கைதியின் முகம் பழைய துணியினால் மூடப்பட்டு,மூச்சு காற்று செல்லும் வழியில் நீர் ஊற்றப்படும்.

Zero Dark Thirty என்ற படத்தைப் பார்த்தவர்கள் இந்த முறையை ஓரளவு தெரிந்து கொள்ள முடியும். ஒசாமா பின்லேடனை கொல்வதை சொல்லும் இப்படத்தில் முக்கிய முஸ்லிம் தீவிர வாதியிடம் இருந்து இவ்வாறு தகவல்கள் பெறப்பட்டன.

CIA இதைப்பற்றி சொல்லும் போது,.
In this procedure, A cloth is placed over the forehead and eyes. Water is then applied to the cloth in a controlled manner. As this is done, the cloth is lowered until it covers both the nose and mouth. Once the cloth is saturated and completely covers the mouth and nose, air flow is slightly restricted for 20 to 40 seconds due to the presence of the cloth... During those 20 to 40 seconds, water is continuously applied from a height of twelve to twenty-four inches. After this period, the cloth is lifted, and the individual is allowed to breathe unimpeded for three or four full breaths... The procedure may then be repeated. The water is usually applied from a canteen cup or small watering can with a spout... You have... informed us that it is likely that this procedure would not last more than twenty minutes in any one application...........
இப்படி சொல்கிறது

தாங்க முடியாத வலியையும் அச்சத்தையும் ஏற்படுத்தும் இந்த சித்திரவதைக்கு உட்படுத்தப்படும் மனிதன் தான் கொல்லப்படுவதாக நம்புகிறான்.மூச்சு காற்று செல்லும் வழியில் நீரை ஊற்றினால் கைதிக்கு நீரில் மூழ்கடிப்பதைப் போன்ற புலணுனர்வு ஏற்படும்.

விரைவாக உடலில் காயங்கள் இன்றி தகவல்களை பெற்று கொள்ளும் இந்த முறை அமெரிக்க கடற்படையில் ஒரு பயிற்சி நடவடிக்கையாகும்.இந்த முறையினால் பலர் குற்றங்கள் செய்யாமலேயே குற்றங்களை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இதன் போது வாந்தியெடுத்தல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்படுவதுடன், பாதிக்கப்பட்டவர்களில் சிலர் பல ஆண்டுகள் கடந்த பிறகும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.நீந்தத் தெரியாத ஒருவன் நீரில் மூழ்கினால் எப்படி இருக்கும்.அதே நிலை தான் இதுவும்.

டெல்லியில் ஓடும் பஸ்சில் பெண்ணை கற்பழித்தார்கள் ! இரவு நேர விடுதியில் இருந்து வெளியே வந்த பெண்ணை கற்பழித்தார்கள் ! மாணவியை கூட்டாக கற்பழித்தார்கள் ! இவை தான் தற்போது இந்தியாவில் இருந்து வெளியுலகத்திற்கு செல்லும் செய்தியாக உள்ளது.

கல்கத்தாவில் இருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள "சூரி" என்னும் கிராமத்தில் வசித்துவந்த 20 வயதான பெண் ஒருவர்,  குறித்த இப் பெண் தனது கணவரை ஏமாற்றி பிறிதொரு நபருடன் தொடர்பில் இருந்ததாக சிலர் தெரிவித்துள்ளார்கள். இதனை விசாரித்த உள்ளூர் நீதிமன்றம், அவரை குற்றவாளியாக அறிவித்தது. இதனையடுத்து அப்பெண்ணுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதில் அவரை ஒரு மரத்தில் கட்டிவைத்து 20 ஆண்கள் அவரை கற்பழிக்கவேண்டும் என்பது தான் தீர்ப்பாம். நான் நீ என முண்டியடித்து பலர் இப் பெண்ணை கற்பழித்துள்ளார்கள். இதில் குறித்த நீதிமன்றில் உள்ள நீதிபதியும் அடங்குகிறார். நீதிபதி தனது ஆசையை நிறைவேற்றிக்கொள்ளவா இப்படி ஒரு தீர்ப்பை வழங்கினார் ? என்று தெரியவில்லை. கொடுமைகளின் உச்சக்கட்டம் இது !

இப்படியான நீதிமன்றுகளுக்கு,பஞ்சாயத்துக்களுக்கு இடம் கொடுத்து விட்டு,அக்கிராமத்தினுள் பொலிசார் புகுந்து குறித்த அந்த 20 பேரையும் மற்றும் நீதிபதியையும் கைதுசெய்துள்ளார்கள். இதில் கொடுமை என்னவென்றால் கைதுசெய்யப்பட்ட நபர்களில் ஒருவர் 15 வயதுடைய நபர் என்பது தான். நீதிமன்ற உத்தரவை நாம் நிறைவேற்றினோம் இதில் என்ன தவறு என்று அவர்கள் கேட்கிறார்கள் ? யார் பதில் சொல்லப்போகிறார்கள் ?
(மீள் பதிவு)



நீர்மிகுப்பு கடுநோவுறுத்தல் (waterboarding, வாட்டர்போர்டிங்) என்பது கடுநோவுறுத்தும் ஒரு வகையாகும். தலை சாய்தளத்தில் கீழ்நோக்கி இருப்பதுடன் சித்திரவதை செய்யப்படுபவரின் பின்புறம் அசைய முடியாமல் பிணைக்கப்பட்டிருக்கும்; பின்னர் முகத்தில் மூச்சு காற்று செல்லும் வழியில் நீரை ஊற்றினால் கைதிக்கு நீரில் மூழ்கடிப்பதைப் போன்ற புலணுனர்வு ஏற்படும்.வேறு விதமாய் தலையை நீருக்கு முன்னோக்கி முகத்தை அமிழ்த்துகையில் பெரும்பாலும் விரைவாக வாந்தி எடுக்கும் உணர்வை வாட்டர்போர்டிங் ஏற்படுத்துகிறது.இதன் மூலம் உச்ச அளவான வேதனை, நீரற்ற மூழ்கடிப்பு, நுரையீரல் சேதம், ஆக்ஸிஜன் இழப்பில் இருந்து மூளைச் சேதம் ஆகியவை ஏற்படுகிறது. மேலும் கட்டுப்படுத்தி வைத்திருப்பதற்கு எதிராகப் போராடுவதன் காரணமாக எலும்புகள் உடைவது உள்ளிட்ட பிற உடல்சார்ந்த காயங்களும் ஏற்படுகிறது. மேலும் பைத்தியம் பிடிக்கும் நிலையோ அல்லது குறுக்கீடில்லாத இறப்போ ஏற்படுகிறது.ஆண்டுகள் நீண்டு உளவியல்சார் விளைவுகள் நீடித்திருக்கையில் இந்த சித்திரவதை நிகழ்ந்து மாதங்கள் கழித்து இதனால் ஏற்பட்ட உடல்சார்ந்த விளைவை அவர்களாகவே உணர முடியும்.வாட்டர்போர்டிங் என்ற பெயரானது, 2004 ஆம் ஆண்டில் புனையப்பட்டதாகும்.

2007 ஆம் ஆண்டில் அமெரிக்க புலனாய்வு சேவையான மத்தியப் புலனாய்வுத் துறை (CIA), நீதிமன்ற நேரடி வழக்குகளுக்குத் தொடர்பற்ற கைதிகளுக்கு இந்த வாட்டர்போர்டிங் முறையை பயன்படுத்துகிறது எனவும் நீதித்துறை இந்த நடைமுறையை ஆதரிக்கிறது எனவும் தகவல்கள் தெரிவித்தன. காலித் ஷேக் முகமது, அபூ ஜுபாய்தாஹ் மற்றும் அப் அல்-ரஹீம் அல்-நஷிரி ஆகியோருக்கு வாட்டர்போர்டிங் முறைய CIA பயன்படுத்தியது என அல்-கொய்தா அவர்கள் மேல் சந்தேகிக்கிறது.நீதித்துறையின் ஆவணங்களைப் பொறுத்தவரை காலித் ஷேக் முகமதுவின் மேல் உபயோகிக்கப்பட்ட வாட்டர் போர்டிங் லாஸ் ஏஞ்சல்ஸின் நடந்த தெளிவாய் அறிந்துகொள்ள முடியாத தீவிரவாதத் தாக்குதலைப் பற்றியத் தகவலை அறிய வசதியாக இருந்தது.

சித்திரவதையின் ஒரு வகையாக வாட்டர்போர்டிங்கை நம்புவதில்லை என U.S. அரசாங்க அதிகாரிகள் பல்வேறு சமயங்களில் குறிப்பிட்டுள்ளனர்.வாட்டர்போர்டிங்கின் பயன்பாட்டை நியாயமென நிரூபிப்பதற்கு ஜார்ஜ் டபிள்யூ. புஷ்ஷின் நிர்வாகமானது பகுத்தறியப்பட்ட சட்டரீதியான அபிப்ராயங்களை வெளியிட்டது. இதில் பைபீ மெமோ உள்ளிட்ட அமெரிக்க சட்டத்தின் கீழ் இந்த சித்திரவதையின் குறுகிய வரையறை விவாதிக்கப்பட்டிருந்தது. பின்னர் இது திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டது.2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஜனாதிபதி பராக் ஒபாமா, வாட்டர்போர்டிங்கை பயன்படுத்துவதைத் தடை விதித்தார். 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பயிற்சித் திட்டத்தில் இன்னும் வாட்டர்போர்டிங் பயன்படுத்தப்படுகிறதா என்பதற்கு விடையளிக்க U.S. பாதுகாப்புத் துறை மறுத்துவிட்டது
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1718
Join date : 23/05/2021

Back to top Go down

தினம் ஒரு தகவல் (தொடர்) - Page 2 Empty இலுமினாட்டி

Post by வாகரைமைந்தன் Mon Sep 13, 2021 7:39 pm

ஒரே வங்கி,    New World Order, Globalization, One World Government ..இது இலுமினாட்டியின் ஆரம்பம்.
புதிய உலக ஒழுங்கு அல்லது NWO என்ற சொல் ஒரு சர்வாதிகார "ஒரு உலகம்" அரசாங்கத்தின் தோற்றத்தைக் குறிக்கிறது.

[You must be registered and logged in to see this image.]

இல்லுமினாட்டியின் இருப்பை நியாயப்படுத்த மக்கள் பயன்படுத்தும் பல வகையான சான்றுகள் உள்ளன. உதாரணமாக, ஹோரஸ் கண் மற்றும் பிரமிடு போன்ற சில சின்னங்கள் உள்ளன (இரண்டும் அமெரிக்க நாணயத்தில்), மக்கள் இதை பிரபல ஊடகங்களில் பார்க்கும்போது, ​​இல்லுமினாட்டியில் அந்த நிறுவனம்/அமைப்பின் ஈடுபாட்டிற்கு இது சான்று என்று அவர்கள் நம்புகிறார்கள் .

(ஓரசு கடவுளின் கண் ( Eye of Horus அல்லது wadjet, wedjat)பண்டைய எகிப்தியர்களின்   பாதுக்காப்பு, அரச அதிகாரம் மற்றும் நல் வாழ்வு குறித்த சின்னமாகும். ஓரசு கடவுளின் கண் சின்னம், சூரியக் கடவுளான இராவின் கண் சின்னம் போன்றதே ஆகும்.)

[You must be registered and logged in to see this image.]

இல்லுமினாட்டி இருப்பதாக மக்கள் நம்புவதற்கான மற்றொரு காரணம், அது கடந்த காலத்தில் இருந்தது என்பதாகும். இது ஜெர்மனியில் உள்ள வைஷாப்ட் (Weishaupt )என்பவரால் உருவாக்கப்பட்டது, மதச்சார்பின்மை பற்றி மக்கள் விவாதிக்கக்கூடிய ஒரு குழுவை வைத்திருக்க அவர் விரும்பினார் . இருப்பினும், இந்த காலகட்டத்தில், இல்லுமினாட்டி மத எதிர்ப்பு மற்றும் சுதந்திர சிந்தனை பற்றி இருந்தது. ஆனால்  வைஷாப்ட் குழுவை மூடியபோது, ​​பாதாள உலகில் அது தொடர்ந்தது மற்றும் புதிய உலக ஒழுங்கு திட்டத்தின் கீழ் இன்று உள்ளது என்று பலர் நம்புகின்றனர்.

      [You must be registered and logged in to see this image.]

ஆதரவாளர்கள் பயன்படுத்தும் மற்றொரு சான்று என்னவென்றால், காவல்துறையினர் முன்னெப்போதையும் விட அதிக ஆயுதம் ஏந்தியுள்ளனர், இது அரசாங்கம் காவல்துறையை இராணுவமயமாக்குவதைக் குறிக்கிறது.ஒரு புதிய உலக ஒழுங்கின் கீழ், குடிமக்களைக் கட்டுப்படுத்த நாம் ஒரு வலுவான போலீஸ் படையை வைத்திருக்க வேண்டும். இறுதியாக, இல்லுமினாட்டி சமுதாயத்தை மூளைச்சலவை செய்யும் முயற்சியில் "பிரபலங்களைக் கொன்று அவர்களை குளோன்களால் (clone)மாற்றுகிறது" என்று பல கூற்றுகள் உள்ளன .

இப்படியான நம்பிக்கை  கூற்றுகள் YouTube போன்ற வீடியோ காட்சிகளால் ஆதரிக்கப்படுகின்றன. இதனால் பலரும் இன்னமும் இலுமினாட்டி இருக்கிறது,அவை உண்மையானதுதான் என நம்புகிறார்கள்.

இதற்கு துணையாக பிரெஞ்சுப் புரட்சி,கென்னடி கொலை,ஜோர்ஜ் புஷ் இன் 2001 செப்டெம்பர் 11 தாக்குதல்,Pearl Harbour  தாக்குதல்,2013 ஏப்ரல் பொஸ்டன் மரதொன் தாக்குதல் (Boston Marathon),அமெரிக்க மக்களை அடைத்து வைக்க   FEMA camp உருவாக்கப்படுகிறது,HAARP  ஐ வைத்து செயற்கை அனர்த்தங்களை ஏற்படுத்துவது,மார்டின் லூதர் கொலை என இலுமினாட்டிகள் ஆதாரங்களை அடுக்கிக் கொண்டே போவதை காணலாம்.(காந்தி தப்பித்துக் கொண்டார்.)

[You must be registered and logged in to see this image.]

இல்லுமினாட்டியின் இருப்பை கேள்விக்குறியாக்கும் சான்றுகளின் பட்டியலும் உள்ளது. ஒன்று, இல்லுமினாட்டி இருப்பதை உறுதியாகக் காட்டும் உறுதியான ஆதாரம் இல்லை இல்லுமினாட்டிக்கு வழங்கப்பட்ட பெரும்பாலான சான்றுகள் ஆதரவாளர்களால் உருவாக்கப்பட்ட கோட்பாடுகள் அல்லது ஆதரவாளர்களால் விளக்கப்படும் வீடியோ கிளிப்களை நம்பியுள்ளது. இருப்பினும், இல்லுமினாட்டி இருக்கிறதா என்று சோதிக்க ஒரு வழி இல்லை, ஏனென்றால் அது இல்லை என்பதை நிரூபிக்க இயலாது (ஏனெனில் இது "இரகசிய சமூகம்" எனக் கூறப்படுகிறது). கூடுதலாக, பலர் இரகசியமாக இருக்க வேண்டிய ஒரு சமூகம் ஏன் பல "குறிப்புகளை" வெளியிடும் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

சமூகம் உண்மையாக இருந்தால், அவர்களின் இருப்பை மறைப்பதே அவர்களின் முதன்மை குறிக்கோளாக இருந்தால், இல்லுமினாட்டியைப் பற்றி விவாதிக்கும் எந்த வீடியோக்களையும் அல்லது ஆன்லைன் உள்ளடக்கத்தையும் அழிப்பது அவர்களுக்கு மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கும், மேலும் உலகிற்கு எந்த ஆதாரத்தையும் காட்டாது (தற்போது ஆயிரக்கணக்கான இலுமினாட்டி சதி உள்ளது Youtube இல் காணொளிகள்). இறுதியாக, நமது முதலாளித்துவ சமுதாயத்தில், தேவையான எந்த வகையிலும் பணம் சம்பாதிக்கும் திறன் மிகவும் முக்கியமானது.

மக்கள் தங்கள் உள்ளடக்கத்தில் அமானுஷ்யம் அல்லது இல்லுமினாட்டி குறியீட்டை வைத்தால், அது அவர்களுக்கு புகழ் பெற உதவும், ஏனெனில் மக்கள் சதித்திட்டங்களைப் பற்றி பேச விரும்புகிறார்கள் .மக்கள் அதுபற்றி பேச தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள்.பேய்கள் ஆவிகள் இல்லை என்றாலும் கூட பேய்ப் படங்களை ஆர்வத்துடன் பார்ப்பது போல் இலுமினாட்டி இல்லை என்றாலும் அதை நம்பி ஆர்வம் காட்டுகிறார்கள். செல்வாக்கு செலுத்துபவர்கள் இந்த இலுமினாட்டி பற்றிய உள்ளடக்கத்தை தங்கள் உள்ளடக்கத்தில் வேண்டுமென்றே சேர்த்துக் கொள்கிறார்கள்.பிக்பாஸ் சின்னம் போல்.

நீங்கள் இல்லுமினாட்டியை நம்புகிறீர்களோ இல்லையோ, அது தற்போதுள்ள மிகவும் பிரபலமான சதித்திட்டங்களில் ஒன்று என்பதை நீங்கள் மறுக்க முடியாது. இந்த நம்பிக்கையின் பிரச்சனை என்னவென்றால், இது உலகைக் கட்டுப்படுத்தும் யூதர்களின் ஸ்டீரியோடைபிகல் நம்பிக்கைகளை (reifies stereotypical beliefs of Jews  )மறுபரிசீலனை செய்கிறது, மேலும் ஒரு நாள் சர்வாதிகார அரசாங்கத்தில் நாம் அனைவரும் கட்டுப்படுத்தப்படுவோம் என்று முன்மொழிவது சமூகத்தில் பயத்தையும் பீதியையும் உருவாக்குகிறது.

நம்பிக்கை அமைப்புக்கான உளவியல் விளக்கங்கள், உறுதிப்படுத்தல் சார்பு, தர்க்கப் பிழைகள், ஸ்டீரியோடைப் ஹியூரிஸ்டிக்ஸ் மற்றும் மந்த மனநிலை ஆகியவை இந்த சதி கோட்பாட்டின் (conspiracy theory )முழுமையான பார்வையை உருவாக்க உதவுகின்றன. மக்களுக்கு ஏன் இந்த நம்பிக்கை இருக்கிறது, அது எப்படி உளவியல் ரீதியாகப் பராமரிக்கப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வதன் மூலம், சரிபார்க்கப்படாத சதி கோட்பாடுகளைப் பற்றி மேலும் விமர்சன ரீதியாக சிந்திக்க, அதே போல் நம்மைச் சுற்றியுள்ள உலகத்தை மேலும் அறிவியல் பூர்வமாக பகுப்பாய்வு செய்ய உலகிற்கு அறிவுறுத்த முயற்சி செய்யலாம்.

உலகின் நடப்பு நிகழ்ச்சிகளை ஆதாரமாக வைத்து நம்ப வைக்கிறார்கள்.முகநூல் நிறுவனர் இலுமினாட்டி எனவும்…..இப்படி பல...ஒரே இந்தியா,..என மோடி செய்வதெல்லாம் இலுமினாட்டி என வருவதும்….
அமெரிக்கா வியட்னாமில் ஈராக்கில், ஆப்கானில் தொடர்ந்து தோல்வியை சந்திப்பது.. என வரும் போது இலுமினாட்டி சதிகாரர்கள் எங்கோ ஓடி மறைந்து விடுகிறார்கள்.
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1718
Join date : 23/05/2021

Back to top Go down

தினம் ஒரு தகவல் (தொடர்) - Page 2 Empty Re: தினம் ஒரு தகவல் (தொடர்)

Post by வாகரைமைந்தன் Tue Sep 14, 2021 2:42 pm

Herbivores-தாவர உணவை உணவாகக் கொண்ட உயிரினங்கள் .தாவர உண்ணி அல்லது இலையுண்ணி (Herbivore) என்பது மரம், செடி, கொடி, புல் பூண்டு முதலியவற்றை உண்டு உயிர்வாழும் விலங்கு வகையைக் குறிக்கும். அதாவது இவ் விலங்குகள் ஊன் (இறைச்சி, புலால்) உண்ணுவதில்லை.

 ஆடு, மாடு, எருமை, மான், யானை, குதிரை முதலிய விலங்குகள் தாவர அல்லது இலை உண்ணிகளாகும். இவை பொதுவாக முதலான நுகரிகளாக (primary consumers) இருக்கும்.

[You must be registered and logged in to see this image.]

பொதுவாக விலங்குகள் தாவரங்களை உண்ணும்போதே அவை தாவர உண்ணி என்ற பெயரைப் பெறுகின்றன. உயிருள்ள தாவரங்களில் தமக்குத் தேவையான ஆற்றலைப் பெறும் பாக்டீரியா, அதிநுண்ணுயிரி போன்ற ஏனைய உயிரினங்கள் தாவர நோய்க்காரணிகள் எனப்படும்.
இறந்த தாவரங்களில் தமக்கான ஆற்றலைப் பெறும் பூஞ்சைகள் சாறுண்ணிகள் (Saprophytes) எனப்படும். ஒரு தாவரமானது, தனது உணவை வேறு தாவரத்தில் இருந்து பெறுமாயின் அது ஒட்டுண்ணித் தாவரம் எனப்படும்.

    Carnivores- மற்ற உயிரினங்களை உணவாகக் கொண்டவை. ஊன் உண்ணிகள் (carnivore) என்பது பெரும்பாலும் பிற விலங்குகளின் இறைச்சியை மட்டுமே உணவாக உட் கொள்ளும் வகை விலங்குகள் ஆகும். சிங்கம், புலி முதலிய விலங்குகள் ஊனுண்ணிகள் ஆகும்.

ஊன் உண்ணிகளுக்கு கால் விரல்களில் கூர்மையான நகங்களும், வாயில் நீண்ட கூர்மையான கோரைப் பற்களும் இருக்கும். இவ்வகை ஊன் உண்ணிகளுக்கு, மேல் வாயில் உள்ள கடைவாய்ப் பற்களுக்கு முன்னதாக உள்ள நான்காவது பல்லானது தசையைக் கிழிக்க வல்லதாகக் கூரியதாகவும் பெரியதாகவும் இருக்கும். இதனை நாய்ப் பல், சிங்கப் பல் அல்லது புலிப்பல் என கூறுவர்.

விலங்குகள் தமது உணவை உட்கொள்ளும் முறையைக் கொண்டு மூன்று பிரிவாக வகைப்படுத்தப்படும். அவையாவன தாவர உண்ணி, ஊனுண்ணி, அனைத்துண்ணி ஆகும். ஊனுண்ணிகளுக்கு நேர் மாறாக ஆடு, மாடு, எருமை, மான், யானை, குதிரை முதலிய விலங்குகள் தாவரங்களை உண்ணும் தாவர உண்ணி வகையைச் சார்ந்த விலங்குகளாகும்.

[You must be registered and logged in to see this image.]

ஊன் உண்ணிகள் கொன்றுண்ணல் மூலமாகவோ, அல்லது தோட்டி வேலை (Scavengers  )மூலமாகவோ தமது உணவையும், ஆற்றலையும் பெறுகின்றன. ஊன் உண்ணிகள் என அழைக்கப்படுபவை பொதுவாக விலங்குகளாக இருப்பினும், பூச்சிகளைப் பிடித்து, சமிபாட்டுக்கு உட்படுத்தி தமது ஆற்றலைப் பெறும் தாவரங்களும் உள்ளன. அவை ஊனுண்ணும் தாவரங்கள் எனப்படும்.

Omnivores- தாவர மற்றும் உயிரினங்களை உணவாகக் கொண்டவை. தங்களுடைய முதன்மை உணவாக தாவரம், விலங்குகள் ஆகிய இரண்டையும் கொள்ளும் உயிரினங்கள் அனைத்துண்ணிகள் அல்லது யாவும் உண்ணிகள் (Omnivore)என்று அழைக்கப்படுகின்றன. பல அனைத்துண்ணிகளுக்கு ஆரோக்கியமான வாழ்வுக்கு குறிப்பிட்ட அளவுக்கு தாவர, விலங்கு உணவு தேவைப்படுகின்றது.

[You must be registered and logged in to see this image.]


AUTOTROPHIC AND HETEROTROPHIC Organisms 
[You must be registered and logged in to see this image.]

ஒளி (ஒளிச்சேர்க்கை) அல்லது இரசாயன ஆற்றல் (வேதியியல்) பயன்படுத்தி தங்கள் சுற்றுப்புறங்களில் கிடைக்கும் பொருட்களிலிருந்து தங்கள் சொந்த உணவை உற்பத்தி செய்யக்கூடிய உயிரினங்கள் ஆட்டோட்ரோப்கள் ஆகும். ஹீட்டோரோட்ரோப்கள் தங்கள் சொந்த உணவை ஒருங்கிணைக்க முடியாது மற்றும் ஊட்டச்சத்துக்காக மற்ற உயிரினங்களை - தாவரங்கள் மற்றும் விலங்குகளை நம்பியிருக்க வேண்டி உள்ளது.

[You must be registered and logged in to see this image.]

தொழில்நுட்ப ரீதியாக, ஆட்டோட்ரோப்கள் கார்பன் டை ஆக்சைடு (CO2) போன்ற கனிம மூலங்களிலிருந்து கார்பனைப் பெறுகின்றன, அதே நேரத்தில் ஹீட்டோரோட்ரோப்கள் மற்ற உயிரினங்களிலிருந்து குறைக்கப்பட்ட கார்பனைப் பெறுகின்றன. ஆட்டோட்ரோப்கள் பொதுவாக தாவரங்கள்; அவைகளின்  "சுய தீவனம்" அல்லது "முதன்மை தயாரிப்பாளர்கள்" என்றும் அழைக்கப்படுகின்றன.

[You must be registered and logged in to see this image.]

 Symptom and Syndrome

[You must be registered and logged in to see this image.]

நோயாளி மட்டுமே உணரக்கூடிய விஷயங்கள் அறிகுறிகளாகும் (  Symptom). நோய், காயம் அல்லது நோய் பற்றி நோயாளி அனுபவிக்கும் விஷயங்கள் இவை. அவர் அல்லது அவள் நோயை கண்டறியும் பொருட்டு இவை மருத்துவரிடம் விவரிக்கப்பட வேண்டும்.

நோயாளியைத் தவிர மற்றவர்களால் அறிகுறிகளை (Symptoms )உணர முடியாது

நோய்க்குறி (Syndrome) என்பது மருத்துவ ரீதியாக அடையாளம் காணக்கூடிய பல்வேறு அம்சங்கள், அறிகுறிகள், அறிகுறிகள், நிகழ்வுகள் அல்லது குணாதிசயங்களின் குழுவாகும்.(signs, symptoms, phenomena or characteristics that are clinically recognizable.)

அறிகுறி மற்றும் நோய்க்குறி என்ற சொற்கள் ஒரு நபரை மருத்துவரிடம் செல்லும் ஒவ்வொரு முறையும் குழப்பமடையச் செய்யும். ஒரு நபர் நோய்வாய்ப்பட்ட போதெல்லாம், என்ன நடந்தது அல்லது அவர்கள் எப்படி உணர்கிறார்கள் என்று யாராவது கேட்டால், மக்கள் தங்கள் அறிகுறிகளை விவரிக்கத் தொடங்குகிறார்கள்.

[You must be registered and logged in to see this image.]

Efficacy-ஆய்வகத்தில் ஆய்வுகளின் அடிப்படையில் கொடுக்கும் முடிவுகள்

Effectiveness  - ஆய்வக முடிவுக்குப் பின் மக்களிடம் செய்யும் சோதனை

எடுத்துக்காட்டாக..கோவிட்-19 தடுப்பூசி முதலில் ஆய்வகத்தில் பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.அதன் பின்னர் மக்களீடம் தடுப்பூசி போடப்பட்டது.இந்த முறை ஆய்வகங்களைப் பொறுத்து நாட்டைப் பொறுத்து வேறுபடும்.இந்தியாவில் தயாரான தடுப்பூசி இந்தியர்களிடம் மட்டும்  சோதனை செய்யப்பட்டது.பைசர்,ஜோன்சன்.. போன்றவை உலக நாடுகள் பலவற்றில் பல்வேறுவிதமான மக்களிடம் -ஆசிய,ஆபிரிக்க,அமெரிக்க- பிரிசோதிக்கப்பட்டது.
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1718
Join date : 23/05/2021

Back to top Go down

தினம் ஒரு தகவல் (தொடர்) - Page 2 Empty Re: தினம் ஒரு தகவல் (தொடர்)

Post by வாகரைமைந்தன் Wed Sep 15, 2021 12:43 am

மொழிகள் ஒருபோதும் கண்டுபிடிக்கப்படவில்லை.ஆனால் அவை சைகை மொழியாக தொடங்கி நீண்ட காலத்தின் ஒரு பகுதி,  அல்லது ஒரு தேசத்து/இன  மக்களிடையே தொடர்பு கொள்ளும் விதமாக உருவாகின்றன.

ஆங்கிலம்- ஜெர்மன், டச்சு, ஸ்வீடிஷ், ஐஸ்லாந்து போன்ற மொழிகளின் குடும்பத்தைச் சேர்ந்தது. இந்த மொழிகள் கூட்டாக ஜெர்மானிய மொழிகள் என்று அழைக்கப்படுகின்றன, மேலும் அவை இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் குடும்பம் என்று அழைக்கப்படும் ஒரு பரந்த குடும்பத்தின் ஒரு பகுதியாகும்.(இன்று இந்திய மொழிகளாக ஆக்கப்பட்ட இந்தி,சமஸ்கிருதம் தொடக்கத்தில் ஆங்கிலம் போல் இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தில் இருந்தது)

ஐரோப்பாவின் பிரதான நிலப்பகுதியிலிருந்து ஜெர்மானிய மக்கள் இங்கிலாந்தில் குடியேறியபோது ஆங்கில மொழி பிறந்தது. முதலில் ரோமானிய ஆக்கிரமிப்பும் பின்னர் பிரெஞ்சுக்காரர்களின் ஆட்சியும் மொழியில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியது. 56% க்கும் மேற்பட்ட ஆங்கில வார்த்தைகள் லத்தீன் அல்லது பிரெஞ்சு மொழியிலிருந்து வந்தவை,

அதேசமயம் சொந்த ஆங்கில வார்த்தைகள் 33% மட்டுமே ஆகும். லத்தீன், ஆங்கில வார்த்தைகளை வழங்கியது மட்டுமல்லாமல் அதன் அசல் எழுத்து முறையையும் கடந்த காலத்தில் உருவாக்கியது. ஆங்கிலம் முதலில் ரூனிக் எழுத்துக்களால் எழுதப்பட்டது.

(ரூனிக்ஸ் என்பது ரூனிக் எழுத்துக்கள் எனப்படும் தொடர்புடைய எழுத்துக்களின் தொகுப்பில் உள்ள எழுத்துக்கள். லத்தீன் எழுத்துக்களை ஏற்றுக்கொள்வதற்கு முன்னர் பல்வேறு ஜெர்மானிய மொழிகளை எழுதவும் அதன் பிறகு சிறப்பு நோக்கங்களுக்காகவும் ரூன்கள் பயன்படுத்தப்பட்டன. ஒரு ஒலி மதிப்பை (ஒரு ஒலிப்பு) பிரதிநிதித்துவப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அவை பெயரிடப்பட்ட கருத்துக்களைப் பிரதிநிதித்துவப்படுத்த ரூன்களைப் பயன்படுத்தின. இதற்கு எடுத்துக்காட்டுகள் பெரும்பாலும் கல்வியாளர்களால் Begriffsrunen என குறிப்பிடப்படுகின்றன. ஸ்காண்டிநேவிய வகைகள் futhark அல்லது fuþark என்றும் அழைக்கப்படுகின்றன.

[You must be registered and logged in to see this image.]
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1718
Join date : 23/05/2021

Back to top Go down

தினம் ஒரு தகவல் (தொடர்) - Page 2 Empty Re: தினம் ஒரு தகவல் (தொடர்)

Post by வாகரைமைந்தன் Thu Sep 16, 2021 12:46 am

சவுதி அரேபியாவின் டைமா ஒயாசிஸ் (Tayma Oasis ) 4,000 ஆண்டுகள் பழமையான புவியியல் மர்மத்திற்கு சொந்தமானது-ஒரு விசித்திரமான பாறை உருவாக்கம் லேசர் கற்றை துல்லியத்துடன் நடுவில் பிரித்தது போல் உள்ளது.
உலகப் புகழ்பெற்ற அல் நஸ்லா பாறை (Al Naslaa rock  ) உருவாக்கம் இரண்டு பெரிய மணற்கல் பாறைகளால் ஆனது, அதன் அடித்தளம் மிகவும் சிறியதாகத் தோன்றும் ஒரு இயற்கை பீடத்தால் ஆதரிக்கப்படுகிறது.

ஆனால் உண்மையில் மக்களின் கவனத்தை ஈர்ப்பது இரண்டு கற்பாறைகளுக்கு இடையே உள்ள சரியான பிளவு, இது ஒரு சக்திவாய்ந்த லேசர் கற்றையினால்  செய்யப்பட்டதாகத் தெரிகிறது. ஏறக்குறைய குறைபாடற்ற பிளவு இணையத்தில் நிறைய யூகங்களை ஏற்படுத்தியுள்ளது, சிலர் வரலாறு சொல்வதை விட பண்டைய நாகரிகங்கள் மிகவும் முன்னேறியிருக்கலாம் என்பதற்கு அல் நாஸ்லா சான்று என்று சிலர் கூறுகின்றனர்.



   
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1718
Join date : 23/05/2021

Back to top Go down

தினம் ஒரு தகவல் (தொடர்) - Page 2 Empty Re: தினம் ஒரு தகவல் (தொடர்)

Post by வாகரைமைந்தன் Sat Sep 18, 2021 8:33 pm

18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்காவில் வைர சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு, உலக வைரங்களின் ஒரே சப்ளையர் இந்தியா மட்டுமே, அதன் பெரும்பாலான வைரங்கள் தற்போதைய ஆந்திர மாநிலத்தில் கோல்கொண்டா என்ற சிறிய புவியியல் பகுதியில் வெட்டப்பட்டன. பிரதேசம் மற்றும் தெலுங்கானா.

[You must be registered and logged in to see this image.]

ஹைதராபாத்தில் இருந்து வெகு தொலைவில் அமைந்துள்ள கோல்கொண்டா அதன் விரிவான கோட்டையுடன் 16 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிறுவப்பட்ட குத்பா ஷாஹி வம்சத்தின் (Qutb Shahi dynasty ) ஆரம்பகால தலைநகரமாக இருந்தது. இப்பகுதியில் வைரங்கள் இருப்பதால், கோல்கொண்டா ஒரு வைர வர்த்தக மையமாக தன்னை நிலைநிறுத்தியது .

மற்றும் 19 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை, கோல்கொண்டா சந்தை உலகின் மிகச்சிறந்த மற்றும் மிகப்பெரிய வைரங்களின் முதன்மை ஆதாரமாக இருந்தது. கோல்கொண்டா பெரும் செல்வத்திற்கு ஒத்ததாக இருந்தது, இந்த பெயர் வைர வியாபாரிகள் மற்றும் சேகரிப்பாளர்களிடையே இன்னும் மரியாதையுடன் பேசப்படுகிறது.

மார்கோ போலோவின் காலத்திலிருந்தே கோல்கொண்டாவின் வைரங்கள் ஐரோப்பியர்களுக்குத் தெரிந்திருந்தது. பிரெஞ்சு மாணிக்க வியாபாரி, ஜீன்-பாப்டிஸ்ட் டேவர்னியர்( Jean-Baptiste Tavernier ), இந்தியா முழுவதும் பரவலாக பயணம் செய்த சில வெளிநாட்டவர்களில் ஒருவர், மாணிக்கச் சுரங்கங்கள் மற்றும் அரசர்களைப் பார்வையிட்டார்.

இன்றைய தமிழகம், மகாராஷ்டிரா, வங்காளம், புந்தேல்கண்ட் போன்றவற்றில் காணப்படும் கற்களைக் கொண்டு, இந்தியாவின் வைர வைப்பு எவ்வாறு விரிவானது என்பதை அவர் தனது பயணங்களின் போது  விளக்கினார்.
அவரது பயணத்தில், டேவர்னியர் கிரேட் மொகுல் டயமண்ட்டை ( Great Mogul Diamond, )ஆய்வு செய்ய அனுமதிக்கப்பட்டார்,

இது ஒரு முட்டையின் பாதியளவு வடிவிலான ஒரு மகத்தான ரத்தினமாகும் மற்றும் இந்தியாவின் மொகலாயப் பேரரசர்களில் மூன்றாவது ஷா அக்பரின் பெயரிடப்பட்டது. கல் விரைவில் மறைந்தது. சிலர் தங்கள் அடையாளத்தை மறைக்க கல் சிறிய அளவுகளில் திருடர்களால் வெட்டப்பட்டதாக நம்புகிறார்கள். பெரும்பாலான நவீன அறிஞர்கள், அந்த  சிறிய கல்,இப்போது 189 காரட் ஆர்லோவ் வைரம் (Orlov diamond ) முதலில் ரஷ்ய பேரரசி கேத்ரீன் தி கிரேட் அணிந்திருந்தது , இப்போது மாஸ்கோவின் கிரெம்ளின் ஆயுதக் களஞ்சியத்தில் வைக்கப்பட்டுள்ளது என நம்புகிறார்கள்.

[You must be registered and logged in to see this image.]

கோல்கொண்டாவில் நிலவறையில் வைக்கப்பட்ட கிரேட் டேபிள் வைரம் என்று அழைக்கப்படும் ஒரு தட்டையான வைரத்தை டேவர்னியர் பார்த்ததாகக் கூறினார். 1739 இல் இந்தியா மீது படையெடுத்த போது இந்த வைரத்தை நாடர் ஷா ( Nader Shah  ) சூறையாடினார் என்றும்  அவர் படுகொலை செய்யப்பட்ட பின்னர் காணாமல் போனது.

கோல்கொண்டா தயாரித்த புகழ்பெற்ற வைரங்களில் ஒன்று டேவர்னியர் ப்ளூ ( Tavernier Blue )ஆகும், இது டேவர்னியர் 1666 இல் வாங்கி கிங் லூயிஸ் XIV க்கு விற்றார். 67 காரட் முக்கோண வடிவிலான கல் நீல நிறத்துடன் கூடிய தங்கக் கிராவாட் முள் ( golden cravat pin )மீது வைக்கப்பட்டது, இது விழாக்களின்போது ராஜா அணிந்திருந்த கழுத்துக்கான ரிப்பனால் ஆதரிக்கப்பட்டது. லூயிஸ் XIV இன் பேரன், லூயிஸ் XV, வைரத்தை ஒரு விரிவான  பதக்கத்தில் சிவப்பு ஸ்பின்னல் மற்றும் நூற்றுக்கணக்கான கூடுதல் வைரங்களுடன் அமைத்தார்.

பிரெஞ்சு புரட்சியின் போது, ​​லூயிஸ் XVI மற்றும் அவரது குடும்பத்தினர் சிறையில் அடைக்கப்பட்ட பிறகு, கலவரக்காரர்கள் ராயல் ஸ்டோர்ஹவுஸை உடைத்து, இப்போது பிரெஞ்சு ப்ளூ என மறுபெயரிடப்பட்ட டவர்னியர் ப்ளூ உட்பட பெரும்பாலான கிரீட நகைகளை திருடினர்.

இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு, வைரம் இங்கிலாந்தில் மீண்டும் தோன்றியது. இந்த முறை 45 காரட் துண்டாகி அங்கு அது "ஹோப்" என்ற பெயரைப் பெற்றது. பல உரிமையாளர்களைச் சந்தித்த பிறகு, இது 1949 இல் நியூயார்க் மாணிக்கம் வணிகர் ஹாரி வின்ஸ்டனால் வாங்கப்பட்டது, அவர் 1958 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் தேசிய இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்திற்கு நன்கொடையாக  அளித்தார்.

[You must be registered and logged in to see this image.]

கோல்கொண்டா வைரம் மற்றொரு உரிமையாளர் சர்ச்சைக்கு வழிவகுத்தது,இது  கோ-இ-நூர். கொல்லூர் சுரங்கத்தில் தோண்டியெடுக்கப்பட்ட, கோ-இ-நூர் அநேகமாக 200 காரட் எடையுடையது இது  முதலில் முகலாய மயில் சிம்மாசனத்தின் (Mughal Peacock Throne ) ஒரு பகுதியாக இருந்தது, இது 17 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பேரரசர் ஷாஜகாணின்  புகழ்பெற்ற நகை சிம்மாசனமாகும். கோ-இ-நூர் தெற்கு மற்றும் மேற்கு ஆசியாவில் உள்ள பல்வேறு பிரிவுகளுக்கு இடையே கைமாறி, 1849 இல் பிரிட்டிஷ் பஞ்சாபில் ஆங்கிலேயர் இணைக்கப்பட்ட பிறகு விக்டோரியா மகாராணியிடம் ஒப்படைக்கப்பட்டது.

[You must be registered and logged in to see this image.]

1947 இல் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, கோ-இ-நூர் அதன் உரிமையாளரிடம் திரும்ப வேண்டும் என்று கோரியபோது, பிரிட்டிஷ் அரசு வைரம்  சட்டப்படி பெறப்பட்டது என்று கூறி திருப்பித் தர  மறுத்தது. இன்று, வைரம் லண்டன் கோபுரத்தில் உள்ள ஜுவல் ஹவுஸில் பொது காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

சில கோல்கொண்டா வைரங்கள் இந்தியாவின் கையில் உள்ளன. உலகின் மிகப்பெரிய இளஞ்சிவப்பு வைரமான டாரியா-ஐ-நூர் (Daria-i-Noor, the world’s largest pink diamond,), தற்போது தெஹ்ரானில் உள்ள ஈரான் மத்திய வங்கியின் ஈரானிய கிரீடம் நகைகள் சேகரிப்பில் உள்ளது, இது கொல்லூரில் வெட்டப்பட்டது. இது முதலில் ககத்திய வம்சத்திற்கு (Kakatiya dynasty )சொந்தமானது, பின்னர் கோ-இ-நூர் போல, இது ஷாஜஹானின் மயில் சிம்மாசனத்தின் ஒரு பகுதியாக மாறியது. 

1739 இல், ஈரானின் நாடர் ஷா வட இந்தியாவை ஆக்கிரமித்து டெல்லியை ஆக்கிரமித்தபோது, ​​அது முகலாயர்களின் முழு கருவூலத்தையும் சூறையாடி, கோ-இ-நூர் மற்றும் மயில் சிம்மாசனத்தைத் தவிர, அவருடன் டேரியா-ஐ-நூரையும் எடுத்துச் சென்றது.

[You must be registered and logged in to see this image.]

டேரியா-ஐ-நூர் 17 ஆம் நூற்றாண்டில் டேவர்னியர் விவரித்த கிரேட் டேபிள் வைரத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இந்த வைரம் இரண்டு துண்டுகளாக வெட்டப்பட்டிருக்கலாம். பெரிய பகுதி டாரியா-ஐ-நூர் ஆகும், அதே நேரத்தில் சிறிய பகுதி 60 காரட் நூர்-உல்-ஐன் வைரம் என்று நம்பப்படுகிறது, தற்போது ஈரானிய இம்பீரியல் சேகரிப்பில் தலைப்பாகையில் பதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிடம் இருக்கும் ஒரே ஒரு குறிப்பிடத்தக்க கோல்கொண்டா வைரம் ஜேக்கப் டயமண்ட், 185 காரட் நிறமற்ற கல் துண்டு மற்றும் உலகின் ஐந்தாவது பெரிய பளபளப்பான வைரம்.

[You must be registered and logged in to see this image.]

ஜேக்கப் வைரத்தை பிரபல ரத்தினங்கள் மற்றும் பழங்கால வியாபாரி அலெக்சாண்டர் மால்கம் ஜேக்கப் (அவருடைய பெயரில்  வைரம் என்று பெயரிடப்பட்டது),ஹைதராபாத்தின் ஆறாவது நிஜாம்-உலகின் பணக்காரர்களில் ஒருவர், விற்பனைக்கு வழங்கினார். வைரத்தை லண்டனில் இருந்து இந்தியாவிற்கு கொண்டு செல்ல 2.2 மில்லியன் ரூபாய் நல்ல வைப்புத்தொகையாக  நிஜாம் கேட்கப்பட்டார். நிஜாமும் ஒப்புக்கொண்டார்,

ஆனால் வைரம் அவருக்கு முன் சமர்ப்பிக்கப்பட்டபோது, ​​மஹபூப் அலிகான் கல்லில் ஒரு பார்வையை செலுத்தி, அது பிடிக்கவில்லை என்று முடிவு செய்தார். நிஜாம் ,ஜேக்கப்பிற்கு வழங்கப்பட்ட முன்பணத்தை திருப்பித் தருமாறு கோரினார். ஜேக்கப் மறுத்துவிட்டார். இது இந்தியா முழுவதும் மற்றும் சர்வதேச பத்திரிகைகளிலும் ஒரு பரபரப்பை உருவாக்கிய நீண்ட மற்றும் கசப்பான நீதிமன்றப் போருக்கு வழிவகுத்தது.

நிஜாம் கோடிக்கணக்கான தொகையை செலுத்த முடியாமல் இருந்த நிலையில், நீதிமன்றம் அவரின் பிரச்சனைகளுக்கு வைரத்தை வழங்கினாலும், ஒரு இளவரசர் பிரிட்டிஷ் நீதிமன்றத்தில் ஆஜராவது மிகவும் அவமானகரமான விஷயம் எனக் கருதிய நிஜாம்  மஹபூப் அலிகான், வைரத்தை துரதிர்ஷ்டவசமாக கருதினார் ,அவரை அவமானத்திற்கு இழுக்கும் ஒரு கல்லை எதுவும் செய்ய விரும்பவில்லை. அவர் அதை ஒரு துணியில் போர்த்தி ஒரு பழைய காலணியின் உள்ளே வைத்தார்.

மஹபூப் அலி கான் 1911 இல் இறந்தார், அவர் இறந்து பல வருடங்களுக்குப் பிறகு, நிஜாமின் மகனும், வாரிசுமான மிர் ஒஸ்மான் அலி கான்( Mir Osman Ali Khan ), ஹைதராபாத்தின் கடைசி நிஜாம், தனது தந்தையின் காலணியில் வைரத்தைக் கண்டுபிடித்தார். கல் குறைந்த மதிப்புடையது என்று நம்பிய நிஜாம், வைரத்தின் உண்மையான மதிப்பு உணரப்படும் வரை நீண்ட காலமாக அதை காகித எடையாகப் பயன்படுத்தினார்.

பல தசாப்தங்களுக்குப் பிறகு, வைரம் நிஜாமின் அறக்கட்டளையிலிருந்து இந்திய அரசால் வாங்கப்பட்டது, தற்போது மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கியின் பெட்டகங்களில் வைக்கப்பட்டுள்ளது.
(இவை அனைத்தும் ஆங்கிலேயர்களின் கொள்ளை)
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1718
Join date : 23/05/2021

Back to top Go down

தினம் ஒரு தகவல் (தொடர்) - Page 2 Empty Re: தினம் ஒரு தகவல் (தொடர்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 20 Previous  1, 2, 3 ... 11 ... 20  Next

Back to top

- Similar topics
» தினம் நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கும் பி.எஸ்.எப்., வீரர்கள்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்
» தமிழ்நாட்டில் தினம் தினம் குடித்துவிட்டு பள்ளிக்கு வந்த தலைமையாசிரியர்
» 'காதலர் தினம்' பற்றி தெரிந்தவர்களுக்கு 'தாய்மொழி தினம்' தெரியவில்லை
» தினம் தினம் ஒரு முகப்பு பக்கம்
» ஜூன் 18: திரு.கக்கன் அவர்களின் பிறந்த தினம் இன்று.. பொதுவாழ்வில் தூய்மையாகவும், அப்பழுக்கற்ற தலைவராகவும் வாழ்ந்து காட்டிய திரு.கக்கன் அவர்களின் பிறந்த தினம் இன்று..

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum