TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:11 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Oct 16, 2024 7:35 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 15, 2024 7:59 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Oct 12, 2024 12:03 am

» சினிமா
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


மரணதண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் -தெரிந்ததும் தெரியாததும்-உண்மை என்ன?

2 posters

Go down

மரணதண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் -தெரிந்ததும் தெரியாததும்-உண்மை என்ன? Empty மரணதண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் -தெரிந்ததும் தெரியாததும்-உண்மை என்ன?

Post by sakthy Fri Nov 07, 2014 2:09 pm

ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த கிளாட்வின் என்பவரது படகில், 5 தமிழக மீனவர்கள் ( வேண்டுமானால் இந்திய மீனவர்கள் என்றும் கூட சொல்லிக் கொள்ளலாம் )– 2011, நவம்பர் 28ந்தேதி, கடலில் மீன் பிடிக்கப்போய் -

இலங்கை ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டு, போதைப்பொருள் கடத்தியதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு, இறுதியாக கொழும்பு உயர்நீதி மன்றத்தால் 2014, அக்டோபர் 30ந்தேதி மரண தண்டனையும் விதிக்கப்பட்டாகி விட்டது.

இந்த விவகாரத்தில் யார் என்ன செய்தார்கள் …?

மீனவர்கள், தமிழக அரசின், மீன்பிடிப்பதற்கான, அனுமதி அடையாள அட்டையுடன் தான் சென்றிருக்கிறார்கள். நடுக்கடலில் வழிமறித்த இலங்கை ராணுவம் அவர்களுடன் மற்ற படகுகளில் சென்ற மீனவர்களை
அடித்துத் துரத்தி விட்டு, இந்த 5 பேரை மட்டும் பிடித்துச் சென்றிருக்கிறது.

இரண்டு நாட்களுக்குப் பிறகு அவர்களை இலங்கை மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அவர்கள் மீது போதைப்பொருட்களை வைத்திருந்ததாக பொய் வழக்கு  போட்டிருக்கிறார்கள். ( இவர்களுடன் 3 இலங்கைத் தமிழ் மீனவர்களையும் வழக்கில் சேர்த்திருக்கிறார்கள்..)

விஷயம் தெரிந்த பிறகு, இவர்களது குடும்பத்தினரும், மற்ற சக மீனவர்களும், தமிழக அரசின் அதிகாரிகளை அணுகி இருக்கிறார்கள். தமிழக அரசின் உளவுப் பிரிவு அதிகாரிகள், இந்த 5 மீனவர்களின் பின்னணிகளைப் பற்றி காவல் துறையின் உதவியோடு, விவரமாக விசாரணை செய்திருக்கிறார்கள்.

அவர்கள் அனைவரது மொபைல் போன்களிலும் கடந்த ஒரு வருடத்தில் அவர்கள் யார் யாருடன் பேசி இருக்கிறார்கள், என்ன பேசி இருக்கிறார்கள் என்பன போன்ற விவரங்களை எல்லாம் திரட்டி, அலசி விட்டு, மீனவர்கள் எந்தவித சந்தேகத்திற்கும் உரியவர்கள் அல்ல என்று தமிழக அரசுக்கு ரிப்போர்ட் கொடுத்திருக்கிறார்கள்.

தமிழக அரசு, இந்த 5 குடும்பங்களுக்கும் தலைக்கு இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீடும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் இது வரை தினமும் 250 ரூபாய் உதவிப்பணமும் கொடுத்திருக்கிறது. உடனடியாக இந்த விஷயத்தை மத்திய அரசிடம் எடுத்துச்சென்று, ஆவன செய்ய வேண்டி இருக்கிறது. இந்த மீனவர்கள் இலங்கையில் தங்களது தரப்பை எடுத்து வாதாட உதவிக்கு வழக்குரைஞரையும் ஏற்பாடு செய்திருக்கிறது.

வழக்கு முடிந்து மரண தண்டனை தீர்ப்பு வரும் வரை -இவர்களை விடுவிக்க – மத்திய அரசு ராஜரீக ரீதியாக எத்தகைய தீவிர முயற்சியிலும் ஈடுபடவில்லை. (முன்னால் இருந்த மன்மோகன் சிங் அரசும் சரி, பின்னால் வந்த மோடிஜி அரசும் சரி….)

இப்போது விஷயம் விபரீத திருப்பம் எடுத்த பிறகும் - மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரும் சரி ( மீனவர் நலனுக்கு என்று தான் மத்தியில் தனி அமைச்சர் யாரும் கிடையாதே ….) பிரதமரும் சரி - இதுவரை இந்த விஷயத்தைப் பற்றி வாயே திறக்கவில்லை. தமிழக மீனவர்களுக்கு அதற்கான தகுதி இல்லை போலும் …

இதுவே, இலங்கைக்கு பதிலாக பாகிஸ்தானாக இருந்திருந்தாலும், மத்தியில் அத்தனை பேருமே குதித்து எழுந்திருந்திருப்பார்கள்…!!

டெல்லியில் தெருவில் கிடக்கும் குப்பைகளுக்கு கூட பிரதமரின் கடைக்கண் பார்வை கிடைத்தது. -clean  India -அந்த பாக்கியம் கூட மரண தண்டனை பெற்று, திகிலில் தவிக்கும் தமிழக மீனவர்களுக்கும்,
அவர்களது குடும்பத்தினருக்கும் கிட்டவில்லை. வெளியுறவுத்துறை செயலாளர் அளவில் சில அறிக்கைகள் விடப்பட்டதோடு சரி.

இப்போது தமிழக பாஜக தலைவர் திருமதி தமிழிசை அவர்கள் ஒரு அறிக்கை விட்டிருக்கிறார் – அவர் விட்ட அறிக்கையிலிருந்து சில பகுதிகள் கீழே –

5 மீனவர்களுக்காக வாதாடுவதற்கு இலங்கையின் தலைசிறந்த வழக்கறிஞரை இந்திய தூதரகம் நியமித்துள்ளது.

மரண தண்டனையை விதிக்கப்பட்டுள்ள 5 தமிழ் மீனவரை காப்பாற்ற இலங்கை நிதிமன்றத்தின் தீர்ப்பின் நகல் கிடைத்தவுடன் இலங்கை உயர் நிதிமன்றதில் மேல்முறையீடு செய்யப்படும். இலங்கை அதிபரின் உயர்மட்ட சட்ட ஆலோசகர்களின் ஒருவராக அனில் சில்வாவை தமிழ் மீனவர்களுக்கு வாதாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் 5 மீனவர்கள் தூக்கு தண்டனையில் இருந்து காக்கப்படுவது உறுதி என்று அனில்சில்வா நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஏனெனில்,
ஜிபிஎஸ் எனப்படும் தொலைதுறை தகவலை பதிவு கருவியில்
பதிவான ஆதாரங்களின் அடிப்படையில் தமிழக மீனவர்கள் படகுகள் குற்றம் சாட்டப்பட்ட பகுதியில் சென்றதாக பதிவாகவில்லை என்பதும், அதேபோல் இலங்கை கடற்படை படகும் அந்தப் பகுதியில் அதேநேரத்தில் செல்லவில்லை என்பதனை சுட்டிகாட்டிவுள்ளதை ஆறுதல் அளிக்கும் சான்று.

இந்த போதைபொருள் கடத்தல் நவம்பர் 2011-ல் டெல்ப்ட் தீவுக்கருகில் நடந்தாக கூறப்படும் இடத்தில தமிழக மீனவர்களின் படகுகள் சென்றதாக எந்த ஆதாரமும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து
சட்டபூர்வமாகவும், ராஜிய தூதரக உறவுகள் மூலமாகவும் எல்லா நடவடிக்கைகளையும் மத்திய அரசு அக்கறையுடன் எடுத்து வருகிறது.

எனவே, மீனவ சகோதரர்கள் உண்ணாவிரதம் போராட்டங்களால்
தங்களை வருத்திக்கொள்வதை நிறுத்திக்கொண்டு இதை அரசியலாக்கி குளிர்காய நினைக்கும் சக்திகளுக்கு துணை போகாமல் மத்திய அரசின் முயற்சிகளை புரிந்துகொண்டு போராட்டங்களை நிறுத்தவேண்டும்.
——————————————————-

இந்த நிலையில் சில முக்கிய விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது -

நீதிமன்ற விசாரணை முழுவதும் சிங்களத்தில் தான் நடைபெற்றிருக்கிறது. விசாரணையில் என்ன நடக்கிறது என்பதையே புரிந்து கொள்ள முடியாத நிலையில் தான் இந்த 5 மீனவர்களும் இருந்திருக்கிறார்கள். இறுதித் தீர்ப்பை மட்டும் தான் இவர்களிடம் தமிழில் சொன்னார்களாம்…!

மீனவர்கள் பிடிபட்டதாகச் சொல்லப்படும் இடத்தில், அதாவது குற்றம் நிகழ்ந்து, போதைப்பொருள் கண்டு பிடிக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் குற்றப்பதிவு செய்யப்பட்டிருக்கும் இடத்தின் அருகில் கூட மீனவர்களின்
படகு செல்லவில்லை என்பதும் -

குற்றச்சாட்டில் பதிவு செய்யப்பட்டிருக்கும் நேரத்தில், இவர்களது படகு வேறு வெகு தூரத்தில் எங்கோ இருந்தது என்பதும் -

ஜிபிஎஸ் கருவிகளின் – பதிவு ஆவணங்களின் மூலம் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது என்று திருமதி தமிழிசை அவர்களின் அறிக்கையின் மூலம் இப்போது தெரிய வருகிறது. அப்படியானால் – மரண தண்டனை விதிக்கப்பட்ட கோர்ட்டில் விசாரணையின்போது – இந்த விவரங்கள், ஆவணங்கள் தரப்பட்டனவா -இல்லையா ..?

இந்த ஆவணங்கள் கொழும்பு நீதிமன்றத்தில் ஏற்கெனவே விசாரணையின் போது சமர்ப்பிக்கப்பட்டன என்றால் - அந்த ஆவணங்களை ஏற்றுக் கொள்ளாமல், அதையும் மீறித்தான் இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டதா …?

ஒருவேளை இப்போது தான் இந்த ஆவணங்கள் பற்றிய நினைவே இவர்களுக்கு வருகிறது என்றால் - அது எப்பேர்ப்பட்ட அலட்சியம்…?

இந்த் விஷயம் ஏன் முன்னரே கவனிக்கப்படவில்லை….?

5 மீனவர்களின் உயிர் சம்பந்தப்பட்ட இவ்வளவு சீரியஸான
விவகாரத்தில் இத்தகைய அலட்சியம் காட்டப்பட்டதற்கு யார் காரணம் ….?

இது ஒரு பக்கமிருக்க -

திரும்பத் திரும்ப பாஜக வினரும், Liar மிஸ்டர் சுப்ரமணியன் சுவாமியும் கூறி வரும் ஒரு விஷயம் – இரு நாடுகளுக்கிடையே இருக்கும் கைதிகள்
பரிவர்த்தனை ஒப்பந்தப்படி, அந்த 5 கைதிகள் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு ஒப்படைக்கப்பட்டு, இந்தியாவிலேயே, மேல் விசாரணை நிகழ்த்தப்படலாம் என்பது.

இது அப்பட்டமான – தெரிந்தே சொல்லப்படும் - பொய்களின் வரிசை….

முதல் பொய் – வழக்கு முடிந்து, தண்டனை விதிக்கப்பட்ட பிறகு தான் கைதிகள் பரிவர்த்தனை நடக்க முடியும். இந்த 5 பேர் விவகாரத்தில் – அப்பீல் இனிமேல் தான் விசாரிக்கப்பட வேண்டும். அது எத்தனை ஆண்டுகள் இழுத்தடிக்கப்படுமோ….? அது வரை காத்திருக்க வேண்டும்.

இரண்டாவது பொய் – சிறைத்தண்டனை பெற்றவர்களை  மட்டும் பரிமாறிக்கொள்ளத்தான் ஒப்பந்தத்தில் வழி வகை இருக்கிறது. மரண தண்டனை பெற்றவர்களை அல்ல…. ஒரு வேளை அப்பீலிலும் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டால்…?

மூன்றாவது பொய் – வழக்கு விசாரணை, அப்பீலின் மூலம் என்றெல்லாம் போகாமல் -

உண்மையின் அடிப்படையில், ஜிபிஎஸ் பதிவுத்தகவல்களின்
அடிப்படையிலேயே – இது ஜோடிக்கப்பட்ட வழக்கு என்பது வெளிப்படையாகவே தெரிவதால், வழக்கு உடனடியாக விலக்கிக் கொள்ளப்பட்டு 5 மீனவர்களும் விடுவிக்கப்பட வேண்டும் என்று இந்திய அரசு – இலங்கை அரசுடன் பேச முடியும் என்கிற உண்மையை மறைப்பது. ஜோடிக்கப்பட்ட வழக்கு என்று உறுதியான பிறகு அது எதற்காகத் தொடர வேண்டும்… அதன் முடிவு தெரிய காத்திருக்க வேண்டும்…?

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் முடியும் வரையில் -(பிப்ரவரி, 2015 …?? ) இந்த நெருக்குதலை நீடிப்பதன் மூலம், சிங்கள மக்களிடையே -

இந்தியா-ஸ்ரீலங்கா இடையேயான உறவில் பதற்றத்தைத் தோற்றுவித்தால் - இந்திய எதிர்ப்பு உணர்வுகளைத் தூண்டி விடுவதன் மூலம் சிங்கள இனவாத மக்களிடையே ஓட்டு அறுவடை செய்ய முடியும் – தான் அதன் பலனைப் பெற முடியும் என்கிற உத்தியை  Liar மிஸ்டர் ராஜபக்சே கடைப்பிடிக்க முயல்வதாலும்,

அதற்கு Liar மிஸ்டர் சுப்ரமணியன் சுவாமியும் துணை போவதாலும் – இப்போதைக்கு இந்த பிரச்சினைக்கு தீர்வு ஏதும் கிடைக்காது என்பது நமக்கும் புரியும் - அறிக்கை விடும் திருமதி தமிழிசை அவர்களுக்கும் தெரியும்…

எனவே தமிழிசை அவர்கள் மீனவ மக்களுக்கு அறிவுரை சொல்வதற்கு பதில்- எண்பத்தி சொச்சம் படகுகளை ராஜபக்சே யிடமிருந்து மீட்டுக் கொண்டு வர முகூர்த்த நாள் முடிவு பண்ணியாகி விட்டதா, அது எப்போது என்பதை மட்டும் சொன்னால் போதும்.

(நேற்றைய விசாரணையில்,இந்தியாவில் மேமுறையீட்டை தொடர்ந்து விசாரிக்க கோரப்பட்ட மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.)
—————–
இரண்டு நாட்களுக்கு முன்னதாக Times Now ஆங்கில தொலைக்காட்சி சேனலில் வந்த Liar மிஸ்டர் சுப்ரமணியன் சுவாமியின் உண்மை உருவத்தை உரித்துக் காட்டும் விவாதம் கீழே - இதுவரை பார்க்காதவர்கள் அவசியம் இந்த விவாதத்தைக் காண வேண்டுகிறேன்.

avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

மரணதண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் -தெரிந்ததும் தெரியாததும்-உண்மை என்ன? Empty Re: மரணதண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் -தெரிந்ததும் தெரியாததும்-உண்மை என்ன?

Post by Tamil Fri Nov 07, 2014 10:33 pm

மொத்தத்தில் தமிழன் எப்றால் இலங்கையிலும் இந்தியாவிலும் மதிப்பது கிடையாது
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum