TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Yesterday at 10:47 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 11, 2024 4:12 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 10, 2024 4:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Page 3 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 3 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Thu Aug 21, 2014 11:03 am

ஓர் உயிராய் வாழ்கிறோம் ...!!!

எனக்குள் அவரும்
அவருக்குள் நானும்
இரு உடலாக இருந்தும்
ஓர் உயிராய் வாழ்கிறோம் ...!!!

உடல் தான் வேறு
உயிர் ஒன்றுதானே உயிரே
உயிருக்கு உயிராய் இருக்கும்
எம்மை புரியாத இவர்கள்
பிரிந்து இருக்கும் உடலை
பார்த்து பிரிந்து வாழ்கிறோம்
என்கிறார்களே ....!!!

திருக்குறள் : 1130
+
காதற்சிறப்புரைத்தல்
+
உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்
ஏதிலர் என்னும் இவ் வூர்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 50

கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 3 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Thu Aug 21, 2014 6:08 pm

கொடுமை தரவில்லை ...!!!

என்னவளும் நானும்
இன்புற்ற இன்பம் இனிமை
இன்பம் இல்லாமல் இருக்கும்
இந்தவேளையில் அந்த இன்பம்
கொடுமை தரவில்லை ...!!!

அவளை நான் மீண்டும்
அடையும் வரை அவள் தந்த
இன்பமும் நினைவுகளும் தான்
அவளை அடையும் வரை
என் துணைவி ...!!!

திருக்குறள் : 1131
+
நாணுத்துறவுரைத்தல்
+
காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடலல்லது இல்லை வலி.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 51
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 3 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Thu Aug 21, 2014 6:38 pm

துன்புற்று கொண்டிருக்கிறது ...!!!

அவளின் பிரிவை இனியும்
தாங்கமுடியாது ...!!!
என் உயிரும் உடலும்
துன்புற்று கொண்டிருக்கிறது ...!!!

நாணத்தை துறந்தேன்
பாதுகாப்பான முறையில்
மட குதிரை ஏற துணிந்து
விட்டேன் .....!!!



திருக்குறள் : 1132
+
நாணுத்துறவுரைத்தல்
+
நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
நாணினை நீக்கி நிறுத்து.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 52
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 3 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Thu Aug 21, 2014 6:52 pm

எல்லாவற்றையும் இழந்து நிற்கிறேன் ....!!!

என்னவளை இன்புறமுன்
நாணமும் ஆண்மையும்
கொண்டவனாய் இருந்தேன்
என்னவளை இன்புற்றபின்
எல்லாவற்றையும் இழந்து
நிற்கிறேன் ....!!!

அவள் தந்த இன்பம்
என்னையும் ஆண்மையையும்
தொலைத்து விட்டது
எல்லாவற்றையும் மறந்து
மடலேறப்போகிறேன்...!!!


திருக்குறள் : 1133
+
நாணுத்துறவுரைத்தல்
+
நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
காமுற்றார் ஏறும் மடல்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 53
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 3 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Thu Aug 21, 2014 7:04 pm

கட்டழகனாக இருந்தேன்

கட்டழகனாக இருந்தேன்
ஆணழகனாகவும் இருந்தேன்
ஆண்மை மாறாத பண்புடனும்
இருந்தேன் ...!!!

அத்தனையும் போனது
காற்றில் அடிபட்டுப்போன
கப்பல் போல் ...
என்னவளின் மீது இருந்த
இன்ப மோகத்தால் ...!!!


திருக்குறள் : 1134
+
நாணுத்துறவுரைத்தல்
+
காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு
நல்லாண்மை என்னும் புணை.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 54
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 3 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Thu Aug 21, 2014 7:26 pm

இருள இருள எங்கும் என் மனசு ...!!!

இருள இருள எங்கும்
என் மனசு ...!!!
துடிக்கும் மனசுக்கும்
ஏங்கும் இளமைக்கும்
மருந்தாய் இருப்பவள்
என்னவள் தான் ...!!!

அத்தனை சுகத்தையும்
தந்தவள் என் மனது கன்னி
அவளின் வளையல் நிறைந்த
மெல்லுடல் தானே தந்தது ...!!!

திருக்குறள் : 1135
+
நாணுத்துறவுரைத்தல்
+
தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 55
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 3 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Sun Aug 24, 2014 3:57 pm

என்னை பாடாய் படுத்துகிறது ....!!!

மெல்லிடையாளே ...
பூவிதழ் கொண்டவளே ...
உன் எண்ணங்கள் என்னை
பாடாய் படுத்துகிறது ....!!!

என் கண்கள் உறக்கத்தை
தொலைத்து விட்டன
தூங்கிய என் கண்களை
நானறியேன் ...!!!
என் வெட்கத்தைவிட்டு
நள்ளிரவு - மடலேற
நினைத்துள்ளேன் ...!!!

திருக்குறள் : 1136
+
நாணுத்துறவுரைத்தல்
+
மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
படல்ஒல்லா பேதைக்கென் கண்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 56
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 3 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Sun Aug 24, 2014 4:07 pm

பரகசியமாகப்போகுதே ....!!!


என்னவள்
நாணம் நிறைந்தவள்
இரக்கம் நிறைந்தவள்
அடக்கம் உடையவள்
இதையெல்லாம் கடந்து ..
இரக்கம் இல்லாமல்
என்னவளையும் ......!!!

எம் இருவருக்கும்
இருக்கும் உன்னத காதல்
எம்மையும் கடந்து ஊருக்குள்
எல்லோரும் பேசி ...
பரகசியமாகப்போகுதே ....!!!

திருக்குறள் : 1138
+
நாணுத்துறவுரைத்தல்
+
நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்
மறையிறந்து மன்று படும்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 58
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 3 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Sun Aug 24, 2014 4:11 pm

என் காதல் பரவி கிடக்குறது ...!!!

என் காதல்
யாரும் அறியாதவாறு
என் மன அடக்கத்தால் ..
யாருக்கும் தெரியவில்லை
என்றிருந்தேன் ....!!!

என் காதல்
தெருத்தெருவாய்
அம்பலும் அலருமாய்
சுற்றிச் சுற்றி வருகிறது....!
காதலை காமத்தை
நீண்டகாலம் மறைத்து
வைத்திருக்க முடியாதோ ...?


திருக்குறள் : 1139
+
நாணுத்துறவுரைத்தல்
+
அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்
மறுகின் மறுகும் மருண்டு.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 59
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 3 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Sun Aug 24, 2014 4:13 pm

காதல் வலி புரியாதவர்கள் ...!!!

நான் படும் வேதனை
படாதபடும் துன்பத்தை
என்னை பார்க்கும் மூடர்கள்
சிரிக்கிறார்கள் .....!!!
நன்றாக சிரிக்கட்டும்
காதலின் வலி என்ன
என்பதை அனுபவிக்காத
மூடர்கள் தான் சிரிப்பார்கள்
காதலித்துப்பார் வலிபுரியும் ...!!!

திருக்குறள் : 1140
+
நாணுத்துறவுரைத்தல்
+
யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா ஆறு.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 60
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 3 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Tue Aug 26, 2014 12:09 pm

நம் காதலின் உயிர்ப்பு....

நம் காதலின் உயிர்ப்பு....
காதலின் மகத்துவம்....
புரியாதடி ஊர் மக்களுக்கு.....
ஊர் வாயை மூட முடியாது ..
எதுவென்றாலும் பேசிட்டு ...
போகட்டும் .....!!!

ஊரவரின் பேச்சு ....
எம் காதலுக்கு மூச்சு ...
அவர்கள் பேச பேச தான்
நம் காதல் வளர்கிறது ..
என்பதை மறந்து விட்டார்கள் ...!!!

திருக்குறள் : 1141
+
அலரறிவுறுத்தல்
+
அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்
பலரறியார் பாக்கியத் தால்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 6
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 3 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Tue Aug 26, 2014 12:22 pm

ஏதேதோ பேசுகிறார்கள் ..

பூவிலும் மென்மையான
என்னவளை காணத்துடிக்கும்
என் கண்ணும் உயிரும்
இன்னும் நான் அவளை
நெருங்கவில்லை .....!!!

என்னவளை ...
சந்திப்பேனா ..? அடைவேனா..?
என்பதை அறியாத என் அயலவர்
ஏதேதோ பேசுகிறார்கள் ..
இதுவும் நம் காதலுக்கு ....
ஒரு உரம்தான் உயிரே ....!!!

திருக்குறள் : 1142
+
அலரறிவுறுத்தல்
+
மலரன்ன கண்ணாள் அருமை அறியாது
அலரெமக்கு ஈந்ததிவ் வூர்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 62
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 3 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Tue Aug 26, 2014 1:01 pm

நம் வாழ்நாள் வரை .....!!!

என்னவளுக்கும் ..
எனக்கும் இடையே இருக்கும்
காதலை ஊர் பேசியே
உறுதியாக்கி விடுவார்கள்
போலும் ......!!!

நான்
உன்னை அடைவேனா ...?
நம் வாழ்கை இணையுமா ..?
ஏக்கங்கள் நிறைந்த காதலை
ஊராரின் பேச்சு உரமாக்கி விடும்
நம் வாழ்நாள் வரை .....!!!


திருக்குறள் : 1143
+
அலரறிவுறுத்தல்
+
உறாஅதோ ஊரறிந்த கௌவை அதனைப்
பெறாஅது பெற்றன்ன நீர்த்து.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 63
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 3 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Tue Aug 26, 2014 1:46 pm

இருவரும் பேசிவந்த காதல்

மனத்தால்
நாம் இருவரும் பேசிவந்த
காதல் - இன்று ஊரார்
பேச்சில் சாதாரணமாகி
விட்டது ....!!!

உப்பில்லா ...
பண்டம் குப்பையிலே....
ஊர் பேச்சில்லா காதல்
உயிரற்ற காதலே ....
ஊர் பேச்சு காதலுக்கு
ஒரு வீச்சு .....!!!

திருக்குறள் : 1144
+
அலரறிவுறுத்தல்
+
கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 64
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 3 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Tue Aug 26, 2014 2:16 pm

காதலில் தருகிறது இன்பம் ...!!!

மதுவின் பழக்கம்
பருக பருக மயக்கம் தரும் ...
என்னவளின் இன்பம் ...
ஊரார் பேச பேச ....
போதை தரும் ....!!!

பருகுவது போதை தான்
மகிழுகிறது மனம் ..
பேசுவது ஊராரின் பேச்சு...
காதலில் தருகிறது இன்பம் ...!!!

திருக்குறள் : 1145
+
அலரறிவுறுத்தல்
+
களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்
வெளிப்படுந் தோறும் இனிது.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 65
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 3 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Wed Sep 03, 2014 12:44 pm

எட்டு திக்கும் பேசப்படுகிறதே ....!!!

என்னவனை
காண்பதும் பேசுவதும் ...
மிக அரிது அவனை
நெஞ்சில் சுமந்தே இன்பம்
காணுகிறேன் .......!!!

ஊரார்
பேச்சு கடும் பேச்சு ....
வாயில் வந்தபடி என் காதல்
உலாவுகிறதே ....
நிலவை பாம்பு பிடிப்பது
போல் - என் காதல் கதை
எட்டு திக்கும் பேசப்படுகிறதே ....!!!

திருக்குறள் : 1146
+
அலரறிவுறுத்தல்
+
கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 66
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 3 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Wed Sep 03, 2014 1:03 pm

காதல் செடி வளர உதவுகிறார்கள்

பேசுங்கள் பேசுங்கள் ...
நன்றாக பேசுங்கள் ....
ஊர் பெண்கள் சேர்ந்தால் ...
சும்மாவா விடுவீர்கள் ...?

ஊர் மக்களின் பேச்சும்...
என் தாயின் கடும் சொல்லும்...
என் காதலுக்கு உரமும்....
தண்ணீரும் போல் ...
இவர்களே என் காதல் செடி
தளர்த்து ஒங்க உதவுகிறார்கள் ....!!!


திருக்குறள் : 1147
+
அலரறிவுறுத்தல்
+
ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல்
நீராக நீளும்இந் நோய்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 67
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 3 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Wed Sep 03, 2014 1:12 pm

அணைக்க துடிக்கிறார்கள் ...!!!

எங்கள் காதலை
யாரும் எவரும் அழித்து
விட முடியாது - ஊரார்
என்ன பேசினாலும் என்ன
நடவடிக்கை எடுத்தாலும்
எம் காதல் அழியாது ...!!!

எம் காதலை ...
ஊரார் பேசி பேசி அழித்து..
விடலாம் என்று பகல் ...
கனவு காண்கிறார்கள் ....
நெய்யை ஊற்றி நெருப்பை
அணைக்க துடிக்கிறார்கள் ...!!!

திருக்குறள் : 1148
+
அலரறிவுறுத்தல்
+
நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கௌவையால்
காமம் நுதுப்பேம் எனல்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 68
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 3 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Wed Sep 03, 2014 1:53 pm

உறுதியாய் கூறி விட்டான் ....!!!

என்
நெஞ்சில் நிறைந்தவன்
கலங்காதே கை பிடிப்பேன்
என்று விட்டான் -என் காதலை
ஏற்று விட்டான் .....!!!

எதற்காக நான்
அஞ்ச வேண்டும் ..?
ஊராருக்கு இனி எதற்கு
தயங்க வேண்டும் ...?
உயிரானவன் உறுதியாய்
கூறி விட்டான் ....!!!


திருக்குறள் : 1149
+
அலரறிவுறுத்தல்
+
அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்
பலர்நாண நீத்தக் கடை.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 69
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 3 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Wed Sep 03, 2014 2:07 pm

கரம் பிடிப்பான் நிச்சயம் ...!!!

என்னவனையும் ..
என்னையும் பற்றியே
ஊரார் பேசுகிறார்கள் ..
அதுவும் ஒருவகையில்
நன்மைதான் .....!!!

ஊரார் பேசிவிட்டார்கள்
ஊர் முழுதும் பரவிவிட்டது
ஊரறிய என்னவன் என்னை
கரம் பிடிப்பான் நிச்சயம் ...!!!

திருக்குறள் : 1150
+
அலரறிவுறுத்தல்
+
தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
கௌவை எடுக்கும்இவ் வூர்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 70
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 3 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Fri Sep 05, 2014 8:33 am

என் மரண நொடிகள் ...!!!

என்னவனே .....!!!
உன் பிரிவை உயிர் தாங்காது
பிரிய மாட்டேன் என்பதை
என்னிடம் சொல் - நான்
அந்த செய்தியுடன் உயிர்
வாழ்வேன் .....!!!

பிரிந்தே ஆகவேண்டும் ...
என்றால் நீ திரும்பி வரும் ..
வேளையில் உயிருடன் ..
இருப்பவரிடம் சொல் உயிரே ...
உன்னை பிரிந்து வாழும்
நொடிகள் என் மரண நொடிகள் ...!!!

திருக்குறள் : 1151
+
பிரிவாற்றாமை
+
செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 71
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 3 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Fri Sep 05, 2014 9:03 am

என் உள்ளம் அச்சப்படுகிறது ...!!!

என்னவனின் பார்வை ....!!!
உள்ளம் முழுதும் இன்பம் ...
ஊற்றெடுப்பதாய் இன்புற்றேன் ..
அவரின் பார்வையால் இன்பம்
காணாத பொழுதே இல்லை ...!!!

பிரியப்போகிறார் ....
என்கிறாரே - இப்போதான்
அவர் பார்த்த பார்வை
கொடுமையை ஏற்படுத்துகிறது ..
எப்படி தாங்குவேன் என்று
என் உள்ளம் அச்சப்படுகிறது ...!!!

திருக்குறள் : 1152
+
பிரிவாற்றாமை
+
இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
புன்கண் உடைத்தால் புணர்வு.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 72
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 3 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Fri Sep 05, 2014 9:42 am

புரிந்துகொள்ள முடியவில்லை

நான் படும் துயரம் ...
அறிந்தவனே என்னவனே ...
என் துயரத்தை அறியாதவன்
நீ அல்ல .....
அத்தனை அறிவும் அழகும்
உடையவன் - நீ

நீ
திரும்பிவருவாய்
என்று நினைத்தாலும் ...
உன் அறிவுக்கு ஆற்றலுக்கும்
புரிந்துகொள்ள முடியவில்லை
என்னவனே ....!!!

திருக்குறள் : 1153
+
பிரிவாற்றாமை
+
அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்
பிரிவோ ரிடத்துண்மை யான்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 73
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 3 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Fri Sep 05, 2014 9:56 am

நம்பியது தவறோ ....!!!

உன்னை எப்போதுமே ..
பிரிந்திடமாட்டேன்
பிரிந்திட மாட்டேன்
அடிக்கடி சொன்னவனே ....!!!
அஞ்சாதே கண்ணே என்று ..
ஆறுதல் சொன்னவனே ...!!!

பிரிவு
நிச்சயமாகி விட்டதடா ...
நீ கூறிய ஆறுதலை ..
நம்பியது தவறோ ....!!!


திருக்குறள் : 1154
+
பிரிவாற்றாமை
+
அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்
தேறியார்க்கு உண்டோ தவறு.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 74
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 3 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Fri Sep 05, 2014 10:12 am

துன்பத்தை என்னால் தாங்க முடியாது ....!!!

என்னை
காக்க விரும்பினால் ..
என்னவன் என்னை ...
பிரியக்கூடாது .....
பிரிந்த பின் அவனுடன்
சேர்வது எளிதல்ல .....!!!

என்னவனை எப்படியாவது
என்னில் இருந்து பிரிவதை
தடுத்தே ஆகணும்
இல்லாவிடில் அவனின்
துன்பத்தை என்னால் தாங்க
முடியாது ....!!!

திருக்குறள் : 1155
+
பிரிவாற்றாமை
+
ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்
நீங்கின் அரிதால் புணர்வு.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 75
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 3 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Mon Sep 08, 2014 4:59 pm

நம்புதில்லை இந்த மனம் ....!!!

கண்ணாளனே....!!!
செல்லபோவது உறுதி
சொல்லப்போவதும் உறுதி
எப்படி உங்கள் மனம்
கல்லானது ...?

இங்கிருந்து துடிக்கபோகும்
என் உள்ளத்தை ஒருகணம்
சிந்தித்து பார்த்தாயா ...?
சென்றுவருவேன் கண்ணே
கலங்காதே என்றாலும்
நம்புதில்லை இந்த மனம் ....!!!

திருக்குறள் : 1156
+
பிரிவாற்றாமை
+
பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்
நல்குவர் என்னும் நசை.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 76
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 3 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum