TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Yesterday at 10:47 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 11, 2024 4:12 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 10, 2024 4:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Page 2 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 2 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Sat Aug 02, 2014 7:17 pm

25) எப்போது கூடினாலும் இன்பம்தான் ...!!!

சிலவற்றை பார்க்கும் போது ...
இன்பம் கிடைக்கும்...
சிலவற்றை கேட்கும் போது...
இன்பம் கிடைக்கும்...
பொருட்கள் எல்லாம் ...
விரும்பியபோதே ...
இன்பம் தருகிறது ....!!!

என்னவளே -நீ
தலை நிறைய பூசூடி
மெல்லிய தொள்ளுடைய
உன்னுடன் எப்போது
கூடினாலும் இன்பம்தான் ...!!!



திருக்குறள் : 1105

புணர்ச்சிமகிழ்தல்

வேட் ட பொழுதின் அவையவை போலுமே
தோட் டார் கதுப்பினாள் தோள்.


திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 25


கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 2 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Mon Aug 04, 2014 1:39 pm

என் உயிரே துளிர்விட்டு வளருதடி ....!!!

என்னவளே உன்னை தழுவும் ...
போதெல்லாம் வாடிக்கிடக்கும் ....
செடி மீண்டும் துளிர்ப்பதுபோல் ....
என் உயிரே துளிர்விட்டு ....
வளருதடி ....!!!

தேவதையே உன் தோள்
என்னை வாழவைக்கும்
ஜிவனடி....நீயோ
சாகாவரம் பெற்ற சிரஞ்ச்சீவியடி ...!!!


திருக்குறள் : 1106

புணர்ச்சிமகிழ்தல்

உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள்.

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 26
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 2 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Mon Aug 04, 2014 1:51 pm

அந்த சுகத்தை தந்தாய்

என்னவளே
அழகிய சிற்பமே ...
உன்னிடம் இருந்து தானடி
மாநிறம் என்ற சொல்லே
தோன்றியதோ ....?

தானே உழைத்து
தானே கட்டிய வீட்டில்
குடியிருப்பது ஒரு சுகம்
அந்த சுகத்தை தந்தாய்
உயிரே நீ என்னை தழுவும்
இன்பமடி ....!!!


திருக்குறள் : 1107

புணர்ச்சிமகிழ்தல்

தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு.

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 27
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 2 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Mon Aug 04, 2014 2:18 pm

இன்பசுகம் இதுதானே உயிரே ....!!!

என்னவள் எங்கே....?
நான் எங்கே...?
என்று தேடும் அளவுக்கு
நெருக்கமாகிவிட்டோம் ...!!!

நம்
இருவருக்கும் நடுவில் ...
தூசி கூட நுழைய முடியாது ...
காற்றே புகமுடியாத ..
நெருக்கமடி நமக்குள் ...
காதலின் இன்பசுகம்
இதுதானே உயிரே ....!!!


திருக்குறள் : 1108

புணர்ச்சிமகிழ்தல்

வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு.


திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 28
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 2 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Mon Aug 04, 2014 2:38 pm

அவளிடம் சிறுகோபம்

அவள் என்னை சீண்ட
நான் அவளைசீண்ட
அவளிடம் சிறுகோபம்
தோன்ற அவளிடம்
கொஞ்சுவதற்கு கெஞ்ச ....!!!

சின்ன சின்ன ஊடல்
நம் கூடலுக்கு நடக்கும்
ஒத்திகை நாடகமாடி
இதுதானே அன்பே உன்னை
கரம் பிடித்ததன் இன்பமடி ...!!!


திருக்குறள் : 1109

புணர்ச்சிமகிழ்தல்

வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு.


திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 29
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 2 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Mon Aug 04, 2014 2:58 pm

முகத்தில் புன்னகையுடன் ...!!!

படித்தேன் பல புத்தகம்
அறிந்தேன் பொது விடயம்
கசக்கி புளிந்தேன் மூளையை
தெரிந்தது என் இறந்த கால
அறியாமை ....!!!

கைபிடிதவளே ...
உடல் முழுதும் நகையுடன்
முகத்தில் புன்னகையுடன்
இருக்கும் என்னவளே
உன்னை தழுவ தழுவ
கிணற்று நீர் ஊற்று எடுப்பது
போல் பொங்குதடி இன்ப ஊற்று ...!!!


திருக்குறள் : 1110

புணர்ச்சிமகிழ்தல்

அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு.


திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 30
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 2 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Wed Aug 06, 2014 10:40 am

அழகுக்கும் மென்மைக்கும் -நீ

ஏய் பூக்களின் ராணியே
மென்மையில் சிகரமாம் நீ
அழகின் வானமாம் நீ
பூக்களில் கர்வம் கொண்டவளே
அனிச்சம் பூவே! - நீ
எதுவாகவும் இருந்திட்டுப்போ ...!!!

என்னவளின்
அழகுக்கும் மென்மைக்கும் -நீ
ஏணிவைத்தாலும் எட்டாதவள்
மென்மைக்கு அனிச்சம் இல்லை
என் மனைவிதான் இனி மேல் ...!!!



திருக்குறள் : 1111

நலம்புனைந்துரைத்தல்

நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள்.


திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 31
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 2 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Wed Aug 06, 2014 11:05 am

சீ சீ என்னே உன் அறிவு ....!!!

ஓ மனமே ....
நீ பூக்களின் ராணிகளை ...
பார்த்திருப்பாய் வியந்திருப்பாய் ...!!!
என் கண்கண்ட என்னவளின் ...
கருவிழிகண்கள் -மனமே...
நீ இதுவரை கண்ட மலர்களை ....
போல் இருக்கும் என்று மயங்காதே ...!!!

மனமே இதுவரை
பிறர் பார்த்த பூக்களைப்போல்
என்னவளின் கண்னை
பார்க்கிறாயே ....!
சீ சீ என்னே உன் அறிவு ....!!!


திருக்குறள் : 1112

நலம்புனைந்துரைத்தல்

மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூவொக்கும் என்று.


திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 32
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 2 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Wed Aug 06, 2014 11:30 am

தேவதை என் இதயதேவதை ...!!!

என் இதய தேவதையே ....
கொல்கிறாய் அழகால் ..?
மினுமினுப்பாய் மூங்கில்போல்
இருக்கும் தோள்...!
உடம்போ மேனி இளந்தளிர் ...
ஆழ்கடல் தேடி எடுத்த முத்து
உன் பற்றொடர் ....!

நான் இதுவரை முகராத
நறுமணம் உன் மேனிவாசம் ...
என் இதயத்தை கூர் வேல்
கொண்டு குற்றும் உன்
வேல் கொண்ட கண் ....!
அத்தனையும் பெற்ற அழகு
தேவதை என் இதயதேவதை ...!!!


திருக்குறள் : 1113

நலம்புனைந்துரைத்தல்

முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு.

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 33
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 2 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Wed Aug 06, 2014 11:53 am

பூக்களே தலை குனியும் அழகியே ....!!!

உயிரே
அழகையும் கண்ணையும் காணும்
பாக்கியத்தை குவளை பூக்கள்
பெற்றிருந்தால் ....!!!

உன்
பொன் நகையையும்
புன்னகையும் அழகையும்
காந்த கண்ணையும் கண்டு
உனக்கு நிகராக தாம் இல்லையே
வெட்கப்பட்டு வேதனை பட்டு
தலைகுனியும் -என் அழகியே ...!!!


திருக்குறள் : 1114

நலம்புனைந்துரைத்தல்

காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழை கண்ணொவ்வேம் என்று.

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 34
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 2 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Wed Aug 06, 2014 12:14 pm

உன் இடை மெல்ல சாகப்போகிறது ....!!!

மெல்லிடையாளே ....
உன் இடையின் மென்மை..
அறியாதவளே ..
மென்மை ராணி பூவாம்
அனிச்சம் பூவை காம்போடு
அணிந்து விட்டாயடி ....!!!

போச்சு போச்சு ...
உன் மெல்லிடை ஒடிந்து
இடையின் ஓசையை இழக்க
போகிறேன் -பூவின் காம்பின்
கனம் தாங்காமல் உன் இடை
மெல்ல சாகப்போகிறது ....!!!


திருக்குறள் : 1115

நலம்புனைந்துரைத்தல்

அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு
நல்ல படாஅ பறை.


திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 35
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 2 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Tue Aug 12, 2014 6:38 pm

பூலோக வெண்ணிலா ...!!!

என்னவளே
வெண்ணிலா வானத்தில்
தானே இருக்கும் - நீ
எனக்காக படைக்கப்பட்ட
பூலோக வெண்ணிலா ...!!!

நீ
தரையில் நடமாடுவதை
பார்த்த விண் மீன்கள்
தலை சுற்றி நிற்கின்றன
நிலவு ஏன் நிலத்தில்
நடமாடுகிறது ...?



திருக்குறள் : 1116

நலம்புனைந்துரைத்தல்

மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன்.

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 36
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 2 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Tue Aug 12, 2014 6:55 pm

என்னவளின் அழகில்

ஏய் நட்சத்திரங்களே ...
ஏன் குழப்பம் அடைகிறீர்கள்
என்னவளின் முகத்துக்கும்
முழு நிலாவுக்கும் என்ன
வேறுபாடு கண்டீர்கள் ..?

தேய்ந்து வளரும் மதி
போல் என்னவளின்
அழகும் வளந்து கொண்டே
செல்கிறது நிலவை ஒத்த
என்னவளின் அழகில்
என்ன குழப்பம்
விண் மீன்களே ..?


திருக்குறள் : 1117

நலம்புனைந்துரைத்தல்

அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
மறுவுண்டோ மாதர் முகத்து.

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 37
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 2 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Tue Aug 12, 2014 7:16 pm

காதலிக்க மனம் தூண்டும் ...!!!

வான் மதியே ...
அழகு தேவதையே ...
என்னவளின் அழகுக்கு
நிகரானவளோ ....?

என் உயிரானவளின்
அழகுக்கு அழகு அவளே
நீ என்னவளின்
அழகுக்கு நிகராய் ஒளி
வீசுவாயானால் உன்னை
காதலிக்க மனம் தூண்டும் ...!!!


திருக்குறள் : 1118

நலம்புனைந்துரைத்தல்

மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி.

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 38
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 2 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Tue Aug 12, 2014 7:37 pm

அழகுக்கு சிகரமானவளே....

வெண்ணிலவே
அழகுக்கு சிகரமானவளே....
என்னவளின் கண்கள்
ஆயிரம் ஆயிரம் மலர்
அழகுக்கு நிகரானவை ....!!!

என்னவளின் கண்ணுக்கு
நீ ஆசைப்படாதே
அழகு கண்ணை நீ பெற்றால்
சந்தை பூவாக மாறி விடாதே
நான் ரசிக்கும் பூவாக
இருந்து விடு .....!!!


திருக்குறள் : 1119

நலம்புனைந்துரைத்தல்

மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி.


திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 39
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 2 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Tue Aug 12, 2014 7:54 pm

வருந்தம் தருகிறதோ ...?

பூக்களின்
மென்மை ராணியே
அழகுகளின் ராணியே
அனிச்சம் பூவே ....!!!

அன்னப்பறவையே
அழகின் உருவமே
என்னவளின் பாத அழகு
நெருஞ்சிப்பழம் போல்
வருந்தம் தருகிறதோ ...?

திருக்குறள் : 1120

நலம்புனைந்துரைத்தல்

அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்.


திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 40
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 2 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Thu Aug 14, 2014 8:05 pm

உதட்டோரம் என்னவளின் வார்த்தை ...!!!

உதட்டோரம் என்னவள் ...
மெல்லிய வார்த்தை ...
ஆயிரம் முத்துக்களை ..
கூடவே கொண்ட பேரழகு
வெண்மை பற்கள்....!!!

பற்களும் என்னவளின்
உதடும் உரசி தோன்றிய
உமிழ் நீர் - பஞ்சா
அமிர்த்தத்தில்
பாலும் தேனும் இணைந்த
கூட்டு கலவையடி....!!!


திருக்குறள் : 1121

காதற்சிறப்புரைத்தல்

பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர்.


திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 41
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 2 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Thu Aug 14, 2014 8:26 pm

நான் உடல் அவள் உயிர் ....!!!
****************************

நானும் என்னவளும்
நகமும் சதையும் போல்
என்று சொல்ல மாட்டேன் ...!!!
நான் கண் என்றால் அவள்
பார்வை .....!!!
நான் மொழி என்றால் அவள்
வார்த்தை ....!!!
நான் உடல் என்றால் அவள்
உயிர் ....!!!


திருக்குறள் : 1122

காதற்சிறப்புரைத்தல்

உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு.

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 42
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 2 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Thu Aug 14, 2014 8:42 pm

விலகிவிடு கருவிழி கண்மணியே ...!!!

என்
கண்ணில் இருக்கும் ...
கருவிழியே கண்மணியே ....
என்னவளின் இடத்தை ..
பிடித்த என் கண்ணின்
கருவிழியே ....!!!

எனக்கொரு
உதவிசெய் கருவிழியே....!
என்னவளை
கருவிழியாக்கபோகிறேன்
என் கண்ணில் இருந்து
விலகிவிடு கருவிழி
கண்மணியே ...!!!


திருக்குறள் : 1123
+
காதற்சிறப்புரைத்தல்
+
கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற்கு இல்லை இடம்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 43
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 2 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Thu Aug 14, 2014 9:00 pm

சடலமானேன் உயிரே ...!!!

என்னவளும் நானும் ...
எம்மை மறந்து இணையும்
தருணத்தில் -என் உடலுக்கு
உயிராவாள் என் உடல் உயிரை
உணரும் ....!!!

என்னவளே நீ என்னை
விலகும் போது என் உடலில்
உயிர் பிரியும் உணர்வடி ...
நீ என்னை பிரியும் போது
சடலமானேன் உயிரே ...!!!


திருக்குறள் : 1124
+
காதற்சிறப்புரைத்தல்
+
வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
அதற்கன்னள் நீங்கும் இடத்து.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 44
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 2 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Thu Aug 14, 2014 9:26 pm

உன்னை நினைப்பதுமில்லை ..!!!

மின்னலின் ஒளி கொண்ட ...
கண் அழகியே ....
வாழ்க்கை துணைவிக்கு
அனைத்தையும் கொண்ட
என்னவளே ....!!!

உன்னை மறப்பதா ...?
உன்னை நினைப்பதா ...?
உன்னை மறைந்தால்..
தானே நினைக்க - உன்னை
நினைத்தால் தானே உயிரே
உன்னை மறப்பதற்கு ...?
உன்னை மறப்பதுமில்லை
உன்னை நினைப்பதுமில்லை ..!!!


திருக்குறள் : 1125
+
காதற்சிறப்புரைத்தல்
+
உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்
ஒள்ளமர்க் கண்ணாள் குணம்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 45
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 2 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Thu Aug 21, 2014 11:00 am

என்
கண்ணுக்குள் இருப்பவனே
கண்ணாய் இருப்பவனே
என்னை .....
விட்டு எப்படி விலகுவாய் ,,?

நான் ஒரு நொடி
கண் மூடி இமைத்தாலும்
என் கண்ணுள் இருப்பவன்
வருத்தபடமாட்டான் ...
பிற ஆண்களை போல் இல்லை
என்னவன் ..!!!
என்னை புரிந்துகொண்ட நுண்
அறிவு மிக்கவன் என் ஆடவன் ...!!!


திருக்குறள் : 1126
+
காதற்சிறப்புரைத்தல்
+
கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருகுவரா
நுண்ணியர்எம் காத லவர்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 46
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 2 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Thu Aug 21, 2014 11:01 am

நீ மறைந்து விடுவாயோ

என்
கண்ணுக்குள் இருக்கும்
கண்ணாலனே .....!!!
கண் இமைக்க பயப்பிடுவது
என் மனம் ....!!!

என்
வில் கொண்டகண்ணுக்கு
மை தீட்டவும் தயங்குகிறேன்
மை தீட்டும் தருணத்தில்
என்னவனே நீ மறைந்து
விடுவாயோ என்று மனம்
வருந்துவதால் - மை
தீட்ட மாட்டேன் என்னவனே...!!!


திருக்குறள் : 1127
+
காதற்சிறப்புரைத்தல்
+
கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக்கு அறிந்து.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 47
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 2 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Thu Aug 21, 2014 11:01 am

இதயத்தில் குடியிருப்பவனே ...!!!

என் நெஞ்சுக்குள்ளே
குடியிருக்கும் என்னவனே
இதயமே உனக்கு கோயில்
நீயே என் இதய தெய்வம் ...!!!

என் இதய தெய்வமே
இதயத்தில் குடி கொண்டு
வாழ்பவனே - உனக்கு
சுட்டு விட கூடாது என்பதால்
சூடான உண்பதையே
தவிர்த்து விட்டேன்
என்னவனே ....!!!

திருக்குறள் : 1128
+
காதற்சிறப்புரைத்தல்
+
நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக் கறிந்து.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 48
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 2 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Thu Aug 21, 2014 11:02 am

இரக்கமற்றவன் என்கிறார்களே ...!!!

கண்ணுக்குள் கரு விழியாய்
இருப்பவன் நீயடா ...!!!
கண் இமைக்க விடாமல்
கலக்கம் செய்பவன் நீ

கண் இமைத்தால் நீ
மறைந்து விடுவாயோ ...
என்ற ஏக்கத்தால் கண்
மூடாது கண் இமைக்காமல் ...
உன்னோடு நானிருக்கிறேன் ...!
நம் காதலை புரியாத...
என் அயலவர் உன்னை
இரக்கமற்றவன் என்கிறார்களே ...!!!


திருக்குறள் : 1129
+
காதற்சிறப்புரைத்தல்
+
இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே
ஏதிலர் என்னும் இவ் வூர்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 49
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 2 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Thu Aug 21, 2014 11:03 am

ஓர் உயிராய் வாழ்கிறோம் ...!!!

எனக்குள் அவரும்
அவருக்குள் நானும்
இரு உடலாக இருந்தும்
ஓர் உயிராய் வாழ்கிறோம் ...!!!

உடல் தான் வேறு
உயிர் ஒன்றுதானே உயிரே
உயிருக்கு உயிராய் இருக்கும்
எம்மை புரியாத இவர்கள்
பிரிந்து இருக்கும் உடலை
பார்த்து பிரிந்து வாழ்கிறோம்
என்கிறார்களே ....!!!

திருக்குறள் : 1130
+
காதற்சிறப்புரைத்தல்
+
உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்
ஏதிலர் என்னும் இவ் வூர்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 50
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 2 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum