TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Yesterday at 10:47 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 11, 2024 4:12 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 10, 2024 4:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Page 5 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 5 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 22, 2014 11:42 am

தொடர்கிறது
திருக்குறள் கவிதைகள்
இதுவரை 100 கவிதை எழுத ஊக்கமளித்த
அனைத்து உள்ளங்களுக்கும்
நன்றி

கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 5 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 22, 2014 12:21 pm

யாரிடம் சொல்லி கதறுவேன் ...?

என்னவனே ....
நீ என்னை விட்டு பிரிய ..
விடைகொடுத்தது நானே ...
அன்று தெரியவில்லை ..
இதனை துன்பத்தை ....!!!

இப்போ நான் படும் ...
துன்பத்தை -என் உடல் ...
படும் வேதனையை யாரிடம் ...
யாரிடம் சொல்லி கதறுவேன் ...?

திருக்குறள் : 1181
+
பசப்புறுபருவரல்
+
நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்
பண்பியார்க்கு உரைக்கோ பிற.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
கவிதை எண் - 101
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 5 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 22, 2014 5:41 pm

பிரிவு கொடுமையானதே ...

என்னவனின் பிரிவு ..
கொடுமையானதே ...
அதனால் வந்த பசப்பும் ...
கொடுமையானதே ....!!!

என்னவன் ....
தந்த பிரிவின் வலியை...
என் உடல் முழுதும்
படர்கிறது - நினைத்தால்
சுமைகூட சுகம் தான் ...!!!

திருக்குறள் : 1182
+
பசப்புறுபருவரல்
+
அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்
மேனிமேல் ஊரும் பசப்பு.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
கவிதை எண் - 102
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 5 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 22, 2014 5:54 pm

காதல் ஒருவகை பரிமாற்றம் ...

என்னவன் ..
காதல் நோயையும் .....
உள்ளதுன்பத்தையும்...
எனக்கு கைமாறாய் தந்து ....!!!

என் அழகையும் ...
காதல் வெட்கத்தையும் ...
கொண்டு சென்று விட்டான் ...
காதல் ஒருவகை பரிமாற்றம் ...
தான் போல் இருக்கிறதே ...!!!

திருக்குறள் : 1183
+
பசப்புறுபருவரல்
+
சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும் தந்து.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
கவிதை எண் - 103
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 5 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 22, 2014 6:08 pm

ஒரு வஞ்சகம் அல்லவோ ...!!!

நான்
நினைப்பதும் அவரை ...
எந்தநேரமும் பேசுவதும் ..
அவரை பற்றியே ....
அவரின் நேர்மையும் ..
திறமையுமே கூறுகிறேன் ...!!!

எப்படி...?
என் உடலில் என்னை
அறியாமல் உண்ணராமல்...
பசலை நிறம் வந்தது ..?
இது ஒரு வஞ்சகம் அல்லவோ ...!!!

திருக்குறள் : 1184
+
பசப்புறுபருவரல்
+
உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால்
கள்ளம் பிறவோ பசப்பு.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
கவிதை எண் - 104
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 5 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 22, 2014 6:50 pm

அவர் பிரிந்து செல்லும் நொடியில் ...!!!

ஒரு
நொடிகூட பிரியவில்லை ...
சிறு தூரம் கூட அவர்...
செல்ல வில்லை .....!!!

எப்படி என் உடலில் ...
காதல் நோய் அதற்குள் ..
தொற்றியது ....?
அவர் பிரிந்து செல்லும் ..
நொடியில் காதல் பசலை
நிறமும் என்னில் படர்கிறதே
என்ன மாயம் இது ...?

திருக்குறள் : 1185
+
பசப்புறுபருவரல்
+
உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என்
மேனி பசப்பூர் வது.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
கவிதை எண் - 105
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 5 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 06, 2014 7:18 am

என்னை விரும்பும் -நீ

என்னவனே ....
என்னை விரும்பும் -நீ
உன்னால் பெற்ற பாக்கியம் ...
என்றே நினைக்கதோன்றும் ....!!!

காதலர்
ஒருவரை ஒருவர் ...
விரும்புவது - விதையில்லா
கனிபோல் அன்பே ....
முழுபயனையும் நாமே ...
சுவைக்கிறோம் ....!!!

திருக்குறள் : 1191
+
தனிப்படர்மிகுதி
+
தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
காமத்துக் காழில் கனி.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கவிதை எண் - 111
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 5 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 06, 2014 7:20 am

காதல் பருவமழை ....!!!

என்னவனே ...
உன்னை நானும் ..
என்னை நீயும் -சந்திக்கும்
கணப்பொழுது இன்பத்தின் ...
உச்சமடா ....!!!

காதலர் நாம் ...
ஒருவரை ஒருவர் சந்திக்கும் ...
அந்த கணப்பொழுது ...
காதலர் இதயத்தில் பொழியும் ..
காதல் பருவமழை ....!!!

திருக்குறள் : 1192
+
தனிப்படர்மிகுதி
+
வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
வீழ்வார் அளிக்கும் அளி
.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கவிதை எண் - 112
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 5 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 06, 2014 7:22 am

உனக்கு நான் எனக்கு நீ

எம் அன்பு ....
உன்னால் நானும் ...
என்னால் நீயும் -காதல்
என்னும் கயிற்றால்
கட்டப்பட்ட உணர்வு ....!!!

காதல்
அன்பால் கட்டப்பட்ட ...
செருக்கில் வாழ்கிறேன் ...
உனக்கு நான் எனக்கு நீ ...
செருக்கு இருக்கும் தானே ...!!!

திருக்குறள் : 1193
+
தனிப்படர்மிகுதி
+
வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே
வாழுநம் என்னும் செருக்கு
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கவிதை எண் - 113
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 5 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 06, 2014 7:25 am

நான் பாவம் செய்த பெண்

உயிரானவனே ....
உன்னால் நான் கவரப்பட ..
அருகதை அற்றவள் எனின் ...
உன் உள்ளத்தில் நான் ..
இல்லையென்றே அர்த்தம் ...!!!

உன் உள்ளத்தில் நான் ...
இல்லையென்றால் ....
நான் பாவம் செய்த பெண் ...
உண்மை காதல் இருவரும்
ஒருவரை ஒருவர் நினைப்பது ...
இல்லையேல்.....
நான் பாவியானேன் ...!!!

திருக்குறள் : 1194
+
தனிப்படர்மிகுதி
+
வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்
வீழப் படாஅர் எனின்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கவிதை எண் - 114
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 5 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 06, 2014 7:28 am

என்னை நினைக்கிறாயா ...?

என்னவனே ....
உன்னை உயிராய்
நினைக்கிறேன் - நீயும்
என்னை நினைக்கிறாயா ...?

என்னை நீ ...
உயிராய் நினைக்காதபோது ..
எனக்கேதடா இன்பம் ...?
உன்னால் எப்படி இன்பம் ...
கிடைக்கும் ....?


திருக்குறள் : 1195
+
தனிப்படர்மிகுதி
+
நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ
தாம்காதல் கொள்ளாக் கடை.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கவிதை எண் - 115
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 5 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 13, 2014 9:48 am

காதலில் வலி இருக்கும் ...

காதல்
வலி பொதுவானது ....
காதலில் வலி இருக்கும் ...
அது எனக்கு மட்டும் ..
இருப்பது வேதனை ....!!!

தராசு
இருபக்கம் நின்றாலே...
நீதி -அதுபோல் ...
காவடியின் இருபக்கம் ...
சுமை ஒரே அளவாக ...
இருக்கும் -காதலின்
வலியும் இருவருக்கும் ...
சமனாக இருக்கவேணும்
உயிரே .....!!!

திருக்குறள் : 1196
+
தனிப்படர்மிகுதி
+
ஒருதலையான் இன்னாது காமம்காப் போல
இருதலை யானும் இனிது.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கவிதை எண் - 116
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 5 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 13, 2014 9:59 am

நான் மட்டும் துன்பப்படுவதா ,,,?

ஏய் காமனே ....!!!
நீ இருவரிடமும் இரு ...
என்னில் மட்டும் இருக்காதே ...
நான் மட்டும் துன்பப்படுவதா ,,,?

நீ என்னில் தரும் வலி ...
என் மேனியில் படரும் ....
காதல் தேமல் அங்கும் ...
படர செய் - இல்லையேல் ...
என் வலியை என்னவன்
உணரமாட்டான் ....!!!

திருக்குறள் : 1197
+
தனிப்படர்மிகுதி
+
பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்
ஒருவர்கண் நின்றொழுகு வான்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கவிதை எண் - 117
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 5 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 13, 2014 10:12 am

கல் நெஞ்சக்காரி நான் ...!!!

என்னவனே ....
இதுவரை என் நினைவு ..
உனக்கு வரவில்லையோ ..?
பிரிந்து சென்று இத்தனை ..
நாட்கள் என் நினைவு ...
வரவில்லையோ ...?

உன் பதில் வராமல் ...
துடிக்கும் என் மனம்போல் ...
உலகில் எந்த கொடிய செயல் ...
இருக்கபோகிறது ...?
உயிரோடு இருக்கும்...
கல் நெஞ்சக்காரி நான் ...!!!

திருக்குறள் : 1198
+
தனிப்படர்மிகுதி
+
வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து
வாழ்வாரின் வன்கணார் இல்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கவிதை எண் - 118
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 5 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 13, 2014 10:22 am

நீ என்னில் அன்பு காட்டாமல்...

என்னவனே ....
நீ என்னில் அன்பு காட்டாமல் ...
எத்தனை நாள் இருந்தாலும் ..
இருந்து விட்டு போ ....!!!

உன்னிடம் இருந்து
வரும் ,வரப்போகும் ...
செய்திகள் எனக்கு ..
எப்போதும் இன்பம் ...
செவிகளுக்கு இன்ப..
ஊற்றுதான்உயிரே ,....!!!


திருக்குறள் : 1199
+
தனிப்படர்மிகுதி
+
நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு
இசையும் இனிய செவிக்கு.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கவிதை எண் - 119
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 5 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 13, 2014 10:37 am

என்னவனின் இதயத்துக்கு ...

என் நெஞ்சே ...
நீ வாழ்க உன்னை ...
எப்படி போற்றுவேன் ..?
இத்தனை துன்பத்தை ...
அனுபவிக்கும் உன் பண்பை ...
எப்படி போற்றுவேன் ...?

உன்னிடம் அன்பில்லாத ...
சடப்பொருளை கொண்ட ...
என்னவனின் இதயத்துக்கு ...
நீ உன் துன்பத்தை கூறி ...
என்ன பயன் ...?
இதை காட்டிலும் -மனமே ...
நீ கடலைத் தூர்ப்பது எளிது ...!!!

திருக்குறள் : 1120
+
தனிப்படர்மிகுதி
+
உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச்
செறாஅஅய் வாழிய நெஞ்சு.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கவிதை எண் - 120
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 5 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Fri Nov 14, 2014 8:29 am

நம் பிரிவு ஒரு பிரிவல்ல ....!!!

இதயமானவளே ...
உன்னை நினைக்கும் போது ...
இன்பத்தை ஊற்றாய் தருகிறாய் ...
இன்ப கடலில் நீந்தவைகிறாய்....
நம் பிரிவு ஒரு பிரிவல்ல ....!!!

உடலால் பிரிந்திருக்கிறோம்...
நினைவால் இணைந்திருக்கிறோம் ...
உயிராய் இணைந்திருந்தபோது ...
நீ தந்த இன்பத்தை காட்டிலும் ...
பிரிவின் போது வரும் இன்பம் ...
மதுவை காட்டிலும் இன்பம் தரும் ..
மாதுவடி நீ .....!!!

திருக்குறள் : 1121
+
நினைந்தவர்புலம்பல்.
+
உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கவிதை எண் - 121
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 5 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Fri Nov 14, 2014 8:43 am

காதலே - இனியது..!!!

நாம்
என்ன அன்பில்லாமல் ....
இணைந்தவர்களா..?
இல்லை - உள்ளத்தால் ..
உயிரால் இணைந்தவர்கள் ....!!!

விரும்பி இணைந்த நாம் ..
பிரிந்து வாழ்கிறோம் ...
நம் பிரிவு பிரிவல்ல ...
நினைவுகளால் இன்பம் ...
காணும் காதலே - இனியது..!!!

திருக்குறள் : 1122
+
நினைந்தவர்புலம்பல்.
+
எனைத்தொனறு ஏனிதேகாண் காமம்தாம் வீழ்வார்
நினைப்ப வருவதொன்று ஏல்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கவிதை எண் - 122
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 5 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Fri Nov 14, 2014 9:02 am

நினைக்காமல் இருப்பாயோ ..?

வரும் தும்மலை ...
தும்ம முயற்சிக்கும் போது ...
வராமல் விடும் தும்மல் போல ...
தும்மல் இல்லை என்ற ..
அர்த்தம் இல்லையே....!!!

என்னவனே ....
நீ அருகில் இல்லை ...
அதற்காக நீ என்னை ...
நினைக்கவில்லை என்று ...
நான் கருதமாட்டேன் ....!!!
என் நினைவில் துடிப்பானே ..
நினைக்காமல் இருப்பாயோ ..?

திருக்குறள் : 1123
+
நினைந்தவர்புலம்பல்.
+
நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கவிதை எண் - 123
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 5 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Fri Nov 14, 2014 9:16 am

நீ நிறைந்திருப்பதுபோல்

என் இதயத்தில் ....
கோயிலாய் இருப்பவனே ...
என் இதயத்தில் முழு மூச்சும்
நீ தானேடா என்னவனே ....!!!

என் இதயத்தில் ...
நீ நிறைந்திருப்பதுபோல் ...
உன் இதயத்தில் நான் ...
இல்லாமலா இருப்பேன் ...?
என்னவனே நான் உன்னுள் ..
இருக்கிறேனா ....?

திருக்குறள் : 1124
+
நினைந்தவர்புலம்பல்.
+
யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து
ஓஒ உளரே அவர்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கவிதை எண் - 124
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 5 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Fri Nov 14, 2014 9:28 am

வெட்கம் இல்லையோ ...?

என்னவனே ....
என் இதயத்தில் குடி ...
கொண்டிருப்பவனே ...
நினைவுகளால் .....
விளையாடுபவனே ....!!!

தங்கள் ...
இதயத்தில் எனக்கு ...
இடம் கொடுக்காமல் ...
இருக்க உங்களுக்கு ...
வெட்கம் இல்லையோ ...?
இது என்ன நியாயம் ...?

திருக்குறள் : 1125
+
நினைந்தவர்புலம்பல்.
+
தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்
எம்நெஞ்சத்து ஓவா வரல்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கவிதை எண் - 125
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 5 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 17, 2014 9:50 am

இந்த நிமிடம் வரை வாழ்கிறேன் ...!!!

என்னவனே ....
உன்னோடு சேர்ந்திருந்த ...
நிமிடங்களை நினைத்தே ..
இந்த நிமிடம் வரை வாழ்கிறேன் ...!!!

உன் நினைவுகள் ....
இல்லாமல் எப்படி வாழ்வேன் ...
அப்படிஎன்றால் நான் ..
இறந்த சடலமாக அல்லவோ ..
இருந்திருப்பேன் ....!!!

குறள் 1206
+
மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடியான்
உற்றநாள் உள்ள உளேன்.

+
நினைந்தவர்புலம்பல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கவிதை எண் - 126
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 5 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 17, 2014 10:19 am

மறந்தால் வாழ்வது எப்படி?.

என்னவனே ...
அந்த நாட்களை உன் அருகில்
இருந்த நாட்களை - மறதி
இல்லாமல் நினைக்கும் போதே
நெஞ்சு சுடுகிறது .....!!!

உன் நினைவுகளை ...
மறந்தால் எப்படி இருக்கும் ..?
வாழ்வதற்கே நினைவுகள் ...
வாழமுடியுமோ ஒருவரால் ...?
அப்படி இருக்க மறந்தால்
வாழ்வது எப்படி?.

குறள் 1207
+
மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்
உள்ளினும் உள்ளம் சுடும்.

+
நினைந்தவர்புலம்பல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கவிதை எண் - 127
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 5 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 17, 2014 10:30 am

நினைவுகளை தந்தமையே ...!!!

நினைவுகளுக்கு மேல் ....
நினைவுகளால் உன்னை ...
நினைக்கிறேன் -நிச்சயம்
என்னவனே என்னை -நீ
வெறுக்க மாட்டாய் ....!!!

என்னவனே ...
நீ செய்த உதவி -உன்னை ..
உன்னை நினைப்பதற்கான ...
நினைவுகளை தந்தமையே ...!!!

குறள் 1208
+
எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ
காதலர் செய்யும் சிறப்பு.

+
நினைந்தவர்புலம்பல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கவிதை எண் - 128
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 5 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 17, 2014 10:48 am

நீ வேறு நான் வேறு இல்லை

உயிராளனே ....
நீ வேறு நான் வேறு இல்லை ...
நாம் இணைந்த உயிர் ..
என்றெல்லாம் வார்த்தை ...
கூறியவனே....!!!

உன் பிரிவு ...
கொஞ்சம் கொஞ்சமாய் ...
கொல்லுதடா...
நீ சொன்ன வார்த்தைகளை ...
மறந்து விட்டீரோ ....?

குறள் 1209
+
விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்
அளியின்மை ஆற்ற நினைந்து.

+
நினைந்தவர்புலம்பல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கவிதை எண் - 129
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 5 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 17, 2014 10:58 am

நீ மறையாமல் இருப்பாயோ ...!!!

நிலவே ....
எனக்கு ஒரு உதவி செய் ...
என்று உன் உதவியுடன் ...
அவர் அருகில் இருந்தேன் ...
இணையில்லா இன்பத்தை ...
பெற்றேன் ....!!!

இன்று அவரை ...
தேடுகிறேன் - காணும் ..
நிமிடம் வரை -நிலவே ...
நீ மறையாமல் இருப்பாயோ ...!!!

குறள் 1210
+
விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்
படாஅதி வாழி மதி.

+
நினைந்தவர்புலம்பல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கவிதை எண் - 130
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 5 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum