TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:18 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 1:18 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Aug 24, 2024 3:20 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Aug 24, 2024 2:56 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தரைமட்டமான அடுக்குமாடி... வாங்கும்முன் ஜாக்கிரதை!

Go down

தரைமட்டமான அடுக்குமாடி... வாங்கும்முன் ஜாக்கிரதை! Empty தரைமட்டமான அடுக்குமாடி... வாங்கும்முன் ஜாக்கிரதை!

Post by Tamil Mon Jul 07, 2014 9:57 pm

பெரிய விபத்து ஒன்று நடந்தபிறகே அதுமாதிரி இனி எதுவும் நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து யோசிப்பது நமக்கு வழக்கமாகவே ஆகிவிட்டது. சென்னையை அடுத்துள்ள போரூருக்குப் பக்கத்தில் இருக்கும் மவுலிவாக்கத்தில் அடுக்குமாடிக் கட்டடம் ஒன்று அடியோடு விழுந்து தரைமட்டமானதில்  58 பேர் பலியாகியிருக்கிறார்கள்.
இந்த விபத்துக்குப்பின், ஃப்ளாட் வாங்கலாம் என்ற யோசனையில் இருந்தவர்கள் சற்று யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். பொதுவாக, ஃப்ளாட் வாங்க வீட்டுக் கடன் கிடைக்குமா, அந்த ஃப்ளாட்டுக்கு வந்துசெல்ல போக்குவரத்து வசதி உண்டா, அருகில் பள்ளிக்கூடம், மருத்துவமனை உண்டா என்கிற மாதிரியான விஷயங்களைத்தான் ஃப்ளாட் வாங்குபவர்கள் பார்த்தார்கள்.  ஆனால், முகலிவாக்கம் அடுக்குமாடி விபத்துக்குப்பின், புதிதாக ஃப்ளாட் வாங்குபவர்கள் வேறு சில முக்கிய விஷயங்களையும் கவனிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. அந்த விஷயங்கள் என்னென்ன என்று பல்வேறு தரப்பினருடன் பேசினோம். கட்டட அனுமதி வாங்குவதில் தொடங்கி, கட்டிய வீட்டை வாடிக்கை யாளர்களிடம் ஒப்படைப்பது வரை கவனிக்க வேண்டிய விஷயங்களை அடுக்கினார்கள் அவர்கள். அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
[You must be registered and logged in to see this image.]
நிறுவனமா, பொறியாளரா?
சிறிய அளவிலான அடுக்குமாடிக் குடியிருப்போ அல்லது பல அடுக்குக் குடியிருப்போ, எந்தக் கட்டுமானமாக இருந்தாலும் அதை மேற்கொள்ளும் நிறுவனத்தின் நம்பகத்தன்மையை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். அந்தக் கட்டுமான திட்டம் நேரடியாக ஒரு பொறியாளரால் கட்டப்படுகிறதா அல்லது அடுக்குமாடி வீடுகள் கட்டுவதைத் தொழிலாகக்கொண்ட  ஒரு நிறுவனம் கட்டுகிறதா என்பதைப் பார்க்க வேண்டும்.
ஒரு பொறியாளரின் நேரடி கண்காணிப்பின் மூலம் கட்டப்பட்டு வரும் திட்டம் எனில், தொழில்நுட்ப விவரங்களை நமக்கு நேரடியாக விளக்குவார். ஆனால், கட்டுமான நிறுவனம் மேற்கொள்ளும் திட்டம் எனில் நிறுவனத்தின் சார்பாக அவர்களின் பிரதிநிதிகளோடுதான் பேச முடியும். அவர்களது வாக்குறுதிகள் அனைத்திலும் உண்மை இருக்கும் என்று சொல்ல முடியாது. வாடிக்கையாளர்களைக் கவர்வதற்கேற்ப, பொய்யான பல தகவல்களை அவர்கள் சொல்வதற்கு நிறையவே வாய்ப்புண்டு.
நம்பகத்தன்மை!
கட்டுமானத் திட்டத்தை மேற்கொள்ளும் நிறுவனம் அல்லது பொறியாளரின் நம்பகத்தன்மையைப் பார்க்க வேண்டியது அவசியம். எத்தனை வருடமாக அவர் இந்தத் துறையில் இருக்கிறார் என்பதைக் கவனிக்க வேண்டும். குறைந்தபட்சம் ஐந்து வருடம் இந்தத் துறையில் அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும். இதற்குமுன் கட்டியுள்ள கட்டடங்களை எந்தப் பகுதியில் கட்டியுள்ளார், அதன் தற்போதைய நிலை, அங்கு வசிப்பவர்களின் அனுபவம் போன்றவற்றைக் கேட்டறிய வேண்டும். அவரால் சமீபத்தில் கட்டி முடிக்கப்பட்ட கட்டுமானம் என்ன என்பதைக் கேட்டறிந்து அதையும் பார்த்துவர வேண்டும்.
நிலத்தின் தன்மை!
கட்டடம் அமைந்துள்ள நிலத்தின் தன்மை என்ன என்பதை நாம் நேரடியாகத் தெரிந்துகொள்வது அவசியம். அந்த இடத்தில் ஏற்கெனவே கட்டடம் அமைந்திருந்ததா அல்லது முதல்முறையாக கட்டப்படுகிறதா என்பதைத் தெரிந்துகொள்வது முக்கியம். ஏற்கெனவே கட்டடம் இருந்த இடமாக இருந்தால், மண் கெட்டிப்பட்டு கடினத்தன்மை கொண்டதாக மாறியிருக்கும். இப்போதுதான் முதல்முறையாகக் கட்டப்படும் இடத்தில் மண் இளகும்தன்மையோடு இருக்கும்.
கட்டடம் கட்டுவதற்குமுன் மண் பரிசோதனை செய்வது அவசியம். பல அடுக்குக் கட்டடம் என்றால், தளம் அமையவுள்ள பகுதிகளில் சராசரியாக ஆறு இடங்களில் மண் பரிசோதனை செய்ய வேண்டும். இந்தப் பரிசோதனை அறிக்கையில் அந்தப் பகுதியில் உள்ள மண்ணின் அடர்த்தி, எடை தாங்கும் தன்மை, எத்தனை அடிக்கு கீழே உறுதியான மண் அடுக்கு உள்ளது, அதில் கட்டப்பட வேண்டிய கட்டுமானம், தூண்கள் அமைக்கப்பட வேண்டிய விவரம் போன்றவை குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த அறிக்கையின் விவரங்கள் நமக்குப் புரியவில்லை எனில், அந்த அறிக்கையைக் கேட்டுவாங்கி நமக்குத் தெரிந்த பொறியாளர்களிடத்தில் விவரங்களைக் கேட்கலாம்.
கட்டுமான வடிவமைப்பு (ஸ்ட்ரக்சுரல் டிசைனிங்)!
மண் பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில், அந்த இடத்தில் எந்தவகையான கட்டுமானம் அமைக்கலாம் என்பதைக் குறிப்பிட்டு வழங்கப்படுவது கட்டுமான வடிவமைப்பு (ஸ்ட்ரக்சுரல்  டிசைனிங்) அறிக்கை. இதை புரமோட்டர்கள், அதற்கென இருக்கும் நிறுவனங்களிடம் வாங்கித் தர வேண்டும். இந்த அறிக்கை அடிப்படையில்தான் உள்ளாட்சி அமைப்பு திட்ட வரைபடத்துக்கான அனுமதியை வழங்கும். இந்த அறிக்கை யில் கட்டடத்தின் எடைக்கு ஏற்ப செய்யப்பட வேண்டியவை என்னென்ன என குறிப்பிடப்பட்டிருக்கும்.
உதாரணமாக, கட்டடம் கட்டப்படும் இடம் நீர்ப்பிடிப்புத் தன்மை கொண்ட நிலமாக இருந்தால், அதற்கு எந்தவகையான தொழில்நுட்பம் பயன்படுத்தினால் சரியாக இருக்கும் என்கிற ஆலோசனைகள் இந்த அறிக்கை யின்படிதான் முடிவு செய்யப்படும். குறிப்பாக, எத்தனை அடி ஆழத்தில் பில்லர்கள் அமைக்கப்பட வேண்டும்; அவற்றின் சுற்றளவு, பயன்படுத்த வேண்டிய கம்பிகளின் தடிமன்கள், காங்க்ரீட், ஜல்லிகள் அளவு விவரங்கள் இந்த அறிக்கையில் இருக்கும்.
சட்ட விவரங்கள்!
திட்ட அனுமதியின்படிதான் வரைபட அனுமதி வாங்கப்பட்டுள்ளதா என்பதைக் கவனிக்க வேண்டும். குறிப்பாக, இந்த அனுமதி காலாவதியாகாமல் அமலில் உள்ளதா என்று பார்க்க வேண்டும். அனுமதியில் உள்ளபடிதான் கட்டடம் கட்டப்பட்டுள்ளதா, எத்தனை அடுக்குகளுக்கு அனுமதி வாங்கப்பட்டிருக்கிறது, கட்டடத்தில் எங்காவது ஒருபகுதியில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதா, இதனால் எதிர்காலத்தில் என்னமாதிரியான பாதிப்புகள் வரும் என்பதையெல்லாம் தெரிந்துகொள்வது அவசியம்.
[You must be registered and logged in to see this image.]
கம்ப்ளீஷன் சான்றிதழ்!
கட்டடம் கட்டிமுடிக்கப்பட்டபின் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அதிகாரி களால் குடியிருக்கத் தகுதியானது, விதிமுறைகள் எதுவும் மீறப்படவில்லை என்கிற கம்ப்ளீஷன் சான்றிதழ் வாங்கப்பட்டிருக்க வேண்டும். இந்தச் சான்றிதழை வீடு வாங்குபவர்கள் கேட்டு வாங்க வேண்டியது கடமை. ஒரு கட்டடம் எப்படி கட்டப்பட்டு இருக்கிறது என்பதை ஆராய்ந்தபின்பே அதிகாரிகள்  இந்தச் சான்றிதழைத் தரவேண்டும். இதேபோல, கட்டுமானத் தரமும் சோதிக்கப்பட வேண்டும்.  ஆனால், நடைமுறையில் இப்படி சோதனை செய்வது மிகக் குறைவுதான். இந்தச் சான்றிதழ் இல்லாத  கட்டடங் களை பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்ளவே கூடாது.
அடுக்குமாடி வீடுகள் நமது காலத்தின் தவிர்க்க முடியாத தேவையாக இருக்கிறது. தவிர, வங்கிக் கடன் மூலமாகத்தான் வீடு வாங்க வேண்டிய நிலைமையில் உள்ளனர் நடுத்தர மக்கள். கட்டடம் கட்டும் பில்டர் பணத்துக்கு ஆசைப்பட்டோ, அல்லது அலட்சியம் காரணமாகவோ விதிமுறைகளை சரியாகப் பின்பற்றாமல் போனால், இதுபோன்ற விபத்துகளை எதிர்காலத்தில் தவிர்க்க முடியாமல் போய்விடும்.
அடுக்குமாடிக் கட்டடங்கள் எப்படி கட்டப்படுகின்றன என்பதை அரசாங்கம் தனது கழுகுக் கண்களால் கவனிக்க வேண்டும். அதேநேரத்தில், அதை வாங்குகிற மக்களும் கவனமாக இருந்தால்தான்  அடுக்குமாடி வீட்டில் நிம்மதியாகத் தூங்க முடியும்!
படம்: ப.சரவணகுமார்


மவுலிவாக்கம் கட்டட விபத்து: சுட்டிக்காட்டப்படும் தவறுகள்!
இடிந்துபோன இந்தக் கட்டடத்துக்கு அனுமதி வழங்கியதில் எந்தத் தவறும் இல்லை என சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் அறிவித்துள்ளது. ஆனால்,  ஆரம்பத்தில் 6 மாடி கட்டடம் கட்டத்தான் அனுமதி வாங்கப்பட்டதாம்.  அதற்கு ஏற்பதான் அஸ்திவாரம் போடப்பட்டு கட்டடம் கட்டப்பட்டிருக்கிறது. இடையில் கூடுதலாக 5 மாடிக்கு, அதாவது 11 மாடிக்கு அனுமதி வாங்கப்பட்டிருக்கிறது. அதாவது, 6 மாடிக்கு போடப்பட்ட அஸ்திவாரத்தில் 11 மாடி கட்டப்பட்டிருக்கிறது.  
கட்டடம் கட்டியதில் காட்டப்பட்ட அலட்சியமே காரணம் என்கிறார்கள்  இன்ஜினீயர்கள். குறிப்பாக, ஏரிப்பகுதியாக இருந்த அந்த இடத்தில், இதுபோன்ற கட்டடம் கட்டும்போது கீழே இறக்கப்படும் பில்லர்கள் பாறை அடுக்கு வரையிலும் இறக்கப்பட்டிருக்க வேண்டும். இந்தக் கட்டடத்தில் அது செய்யப்படவில்லை.  அதாவது, 85 அடி தோண்டி அடித்தளம் அமைத்திருக்க வேண்டிய இடத்தில் பாதிகூட தோண்டப்படவில்லை. தவிர, பில்லர்களின் தடிமன் பத்துக்கும் மேற்பட்ட அடுக்குகள் தாங்கக்கூடியதாக இல்லை.
கட்டடத்தை வடிவமைத்த விஜய் பர்காத்ரா அங்கீகாரம் பெற்ற வடிவமைப்பாளர் இல்லையாம். மதுரையைச் சேர்ந்த ப்ரைம் சிருஷ்டி நிறுவனம் சென்னையில் மேற்கொள்ளும் முதல் வேலை இதுதான். வங்கி வேலை பார்த்த இதன் உரிமையாளர் மனோகரன் ஓய்வுபெற்ற பிறகு 2011-ல்தான் கட்டுமான துறையில் இறங்கியுள்ளார். அனுபவம் இல்லாததும் விபத்துக்கு காரணம் என்கிறார்கள்.
இன்ஷூரன்ஸ் க்ளைம் கிடைக்காது!
[You must be registered and logged in to see this image.]''இயற்கை பேரிடர்களால் நிகழும் கட்டட விபத்துகளுக்கு மட்டுமே காப்பீடு பெற முடியும். கட்டுமானத் தவறுகள், தொழில்நுட்பத் தவறுகளால் கட்டடங்கள் சேதம் அடைந்தாலோ, இடிந்தாலோ சம்பந்தபட்டவர்கள் க்ளைம் செய்ய முடியாது. வீட்டுக் கடனுக்கான இன்ஷூரன்ஸ் என்பது தனிநபர் சம்பந்தப்பட்டது. ஆனால், சொத்து மற்றும் உடைமைகளுக்குப் பாதிப்பு என்கிறபோது, இந்த நடைமுறைதான் பின்பற்றப்படும். தீ விபத்து, நிலநடுக்கம், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களால் பாதிப்பு ஏற்படும்போது மட்டுமே க்ளைம் கிடைக்கும். சாதாரண மழைக்கு வீடு இடிந்தால் க்ளைம் செய்ய முடியாது.
பில்டர்கள் கட்டும் கட்டுமான நிறுவனத்துக்கு இன்ஷூரன்ஸ் எடுக்கலாம். கட்டுமானம் முடிந்து வாடிக்கையாளர்களிடம் ஒப்படைக்கும் காலம் வரை இயற்கைப் பேரிடர்களால் இழப்பு நேரிட்டால் அதை ஈடுசெய்யும் விதமாக இந்த பாலிசி இருக்கும். பொதுவாக, கட்டடம் கட்டும்போது பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தினால் உருவாகும் பிரச்னைகளால் பாதிப்பு ஏற்படுமாயின் க்ளைம் கிடைக்காது. ஆனால், தொழில்நுட்பம் காரணமாக ஏற்படும் பிரச்னைகளுக்கும் இழப்பீடு கிடைக்கும்படி சில பாலிசிகள் வந்திருக்கிறது!''
[size=12]கட்டப்படும் வீடுகளின் மேற்பார்வை![/size]
''பாதுகாப்பு அம்சத்தைக் கணக்கில் கொண்டால் கட்டி முடிக்கப்பட்ட கட்டடங்களில் வீடு வாங்குவதைவிட கட்டுமானம் நடந்துகொண்டிருக்கும் திட்டங்கள் அல்லது தொடங்க உள்ள திட்டங்களில் வீடு வாங்க முயற்சிக்கலாம். ஏனென்றால், வரைபட அறிக்கை அடிப்படையில்தான் வேலை நடக்கிறதா என்பதைக் கண்காணிக்க முடியும்.
[You must be registered and logged in to see this image.]
கட்டுமான வேலைகள் எப்படி நடக்கிறது, ரூஃப் டைப், சென்டிரிங்குகள், லென்டில் பீம் கட்டியபின் தண்ணீர் விட்டு காயவைப்பது, எத்தனை நாட்களுக்குப் பிறகு சென்டிரிங்குகளைப் பிரிக்கிறார்கள் என்பதையெல்லாம் கண்காணிக்கலாம். தவறு நடந்தால் உடனடியாகச் சுட்டிக்காட்டுவதற்கு கட்டிக்கொண்டிருக்கும் வீடுகளை வாங்குவது பாதுகாப்பானதாக இருக்கும்.''
-விகடன் -
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum