TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Mar 27, 2024 11:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Mar 27, 2024 8:25 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Mar 23, 2024 3:17 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Mar 18, 2024 4:17 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


நஞ்சுண்டு உயிர் நீத்த "மொழிப்போர் ஈகி" விராலிமலை சண்முகம் நினைவு நாள்

Go down

நஞ்சுண்டு உயிர் நீத்த "மொழிப்போர் ஈகி" விராலிமலை சண்முகம் நினைவு நாள் Empty நஞ்சுண்டு உயிர் நீத்த "மொழிப்போர் ஈகி" விராலிமலை சண்முகம் நினைவு நாள்

Post by மாலதி Tue Feb 25, 2014 7:08 am

நஞ்சுண்டு உயிர் நீத்த "மொழிப்போர் ஈகி" விராலிமலை சண்முகம் நினைவு நாள்
25.2.1965
[You must be registered and logged in to see this image.]
தமிழினமே என்னுடலைப் பார்த்தாவது நீ விழித்தெழு!

1965ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போர் தீவிரமடைந்து வந்த நிலையில் அதை முன்னெடுக்க அறிஞர் அண்ணா விரும்ப வில்லை. மொழிப்போரட்டத்தை திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவித்தார். அண்ணா அவர்கள் தமிழைக் காப்பாற்ற உறுதி கொண்டு விடாது போராட வேண்டும் என்று அப்போது தமிழ் மீது பற்று கொண்ட ஒரு இளைஞன் நஞ்சுண்டான். அவனுக்கு வயது 22. அவன் பெயர் விராலிமலை சண்முகம்.

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம் நார்த்த மலை என்னும் சிற்றூரில் 11.8.1943இல் மு.இராமையா செளந்தரத்தம்மாள் இணையருக்கு மகனாக சண்முகம் பிறந்தான். இசை வேளாளர் வகுப்பைச் சேர்ந்த தந்தையார் ஒரு தவுல் கலைஞர் ஆவார். ஒரு அண்ணன், ஒரு தம்பி, ஐந்து தங்கைகள் கொண்ட பெரிய குடும்பத்தில் பிறந்த சண்முகம் 5ஆம் வகுப்பு வரை படித்தான். குடும்பச் சூழ்நிலை காரணமாக கல்வி கற்க இயலாமல் போனதால் தனது அண்ணன் மாணிக்கத்தோடு புதுகை சென்று பணியாற்றினான். 1960ஆம் ஆண்டு தாயார் பிறந்த ஊரான விராலிமலைக்கு வந்து மளிகைக் கடையில் பணி புரிந்தான்.

அப்போது அண்ணா, பாரதிதாசன், சம்பத், கருணாநிதி ஆகியோரின் நாவண்மை பேச்சைக் கேட்டு தன்னை தி.மு.க.வில் இணைத்துக் கொண்டான். அப்போது இந்தி திணிப்பிற்கு எதிராக உயிர் நீத்த ஈகியரை நினைத்து தாங்கொணா துயரம் கொண்டான். பேருந்து, சரக்குந்துகளில் தமிழ் வாழ்க! இந்தி ஒழிக! என்று முழக்கமிட்டு எழுதினான். இந்தி எதிர்ப்பு ஊர்வத்தில் இந்தி அரக்கியின் கொடும்பாவிக்கு தீமுட்டி தலையை மொட்டையடித்துக் கொண்டான். இறுதியாக அறிஞர் அண்ணாவிற்கும், தனது சகோதரருக்கும் தனித் தனியாக கடிதங்கள் எழுதினான். 23.2.1965 அன்று மூட்டைப்பூச்சி மருந்துண்டு மயங்கிக் கிடந்தான். அதனைக் கண்ட சிலர் அவனை தூக்கிக் கொண்டு திருச்சி மருத்துவமனையில் சேர்த்தனர்.

சிகிச்சை பெற்று வந்த சண்முகத்திடம், என்னடா? இப்படிச் செய்து விட்டாய்? என்று உடன் பிறந்த அண்ணன் மாணிக்கம் கண்ணீரோடு கேட்டார். சண்முகம் அப்போது, "அண்ணா! எல்லா தலைவர்களும் இப்போராட்டத்தை கைவிட்ட நிலையில், என் மூலமாவது மீண்டும் தொடரட்டும்! நமது குடும்பத்தில் தமிழுக்காக ஒருவன் இறந்தான் என்று இருக்கட்டும், என்னை மன்னித்து விடுங்கள்!" என்று கண்ணீர் மல்கக் கூறினான். உடல் முழுக்க நஞ்சு பரவி விட்டபடியால் காப்பாற்ற முயன்றும் பலனளிக்காமல் பிப்.25ஆம் நாளில் அவன் உயிர் பிரிந்தது.

மறு நாள் திருச்சி உய்யக்கொண்டான் ஆற்றங்கரையில் சண்முகத்தின் விருப்பப்படி தீக்குளித்த முதல் 'மொழிப்போர் ஈகி' கீழப்பழுவூர் சின்னச்சாமி கல்லறை அருகிலேயே அவன் உடல் புதைக்கப்பட்டது. விராலிமலை சண்முகம் அறிஞர் அண்ணாவிற்கு தமிழ் உணர்ச்சி பொங்க எழுதிய கடிதம் அன்றைக்கு அனைத்து தமிழர்களின் விழிகளிலும் கண்ணீரை வரவழைத்தது. அது வருமாறு: 

"வாழ்க தமிழ்! 
எனது உயிர் உலுத்தர் கூட்டத்தை அழிக்கும். உடல் உறங்கிய தமிழரை உணர்வு கொண்டு எழச் செய்யும். 

ஐயா! துரோகி பக்தவத்சலத்தின் ஆட்சியில் தமிழ் தழைக்க வழியின்றிப் போய் விட்டது. நேருவின் வாக்குறுதி காற்றில் பறந்து விட்டது. பக்தவத்சலத்தின் பரிசாக வடவனுக்கு ஏறத்தாழ 150 தமிழனைப் பலி கொடுத்துப் பதவியைக் காப்பாற்றிக் கொண்டார். அத்துடன் விடவில்லை. சின்னச்சாமி, சிவலிங்கம், அரங்கநாதன், முத்து இது போன்ற பல தமிழர்களைத் (இந்)தீக்கு இரையாக்கி அதைத் தனது பதவியின் பரிசாக வடவனுக்கு அளித்து விட்டார். இன்னும் எத்தனை துரோகம் இருக்கிறதோ அத்துணையும் தமிழ்த் தாய்க்குச் செய்துவிட்டார். இவர் ஆட்சியில் தமிழ்த்தாயின் குங்குமம், பூ, தாலி போன்ற சுமங்கல்யம் பறி போய் விட்டது. என் செய்வது? அந்தோ, பரிதாபம்!

திமுகழகத் தொண்டர்களையும், தமிழ்த்தாயின் புதல்வர்களையும் பாதுகாப்புச் சட்டம் என்ற போர்வையில் மூடி மறைத்து விட்டார்கள். ஆர்த்தெழுந்த மாணவர் (தமிழர்)களையும் அடக்கி ஒடுக்கி அடித்துத் துன்புறுத்தி உரிமைப்போரை நிறுத்தச் செய்து விட்டார்கள் இராணுவத்தைக் கொண்டு; என் செய்வது? நமது தலை விதி.

விதி என்ற பெயரால் வீழ்ந்து விட்ட தமிழினமே! என் போன்றோர் உடலைப் பார்த்தாவது நீ விழித்தெழு!

வருகிறேன். தமிழ்த்தாயின் பாதம் இரத்தத்தால் கரை படிந்துள்ளது. 

அண்ணா! நீங்கள் ஆணையிட்டால் தமிழகம் தங்கள் ஆணையைச் செய்யக் காத்துக் கொண்டிருக்கிறது. சும்மா இருந்து விடாதீர்கள்.

வருகிறேன், வணக்கம்.

உயிர் தமிழுக்கு, உடல் மண்ணுக்கு என்று கூறி உயிர் விட்ட அரங்கநாதன், சிவலிங்கம் இவர்களைக் காண நான் செல்கிறேன்."

தனது இன்னொரு சகோதரர் இராமலிங்கத்திற்கு எழுதியுள்ள கடிதமாவது: "தம்பி! நான் உனக்குத் துரோகம் செய்து விட்டதாக நினைப்பாய் கிடையாது. தமிழுக்கு நான் செய்ய வேண்டிய கடமையைச் செய்து விட்டேன். குடும்ப பாரம் உன்னைச் சேர்ந்து விட்டது. குடும்பத்தையும் நன்றாகப் பார்த்துக் கொள். தமிழ்த்தாயைக் காண மூட்டைப் பூச்சி மருந்து என்ற நுழைவுக் கட்டணம் வாங்கிச் சென்று விடுகிறேன்.வணக்கம்."

விடைபெற்றவரின் கனவு நனவானதா? எங்கே தமிழ்? அண்ணாவின் புகழைப் போற்றும் ஒவ்வொருவனும் இதற்குப் பதில் சொல்லியே தீரவேண்டும்!


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ||இரண்டாம் தமிழ் மொழிப்போரில் உயிர் நீத்த 'முதல் போராளி' சின்னச்சாமி நினைவு நாள் |25.1.1964||
» பிப்ரவரி 21: மல்கம் எக்ஸ்ஸின் நினைவு நாள்.
» உயிர் நீத்த செங்கொடியின் உடல் இன்று தகனம்-ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி
» இனப்படுகொலையை நிறுத்தக் கோரி உயிர் நீத்த தியாகி முத்துக்குமார் நினைவுநாள் இன்று
» ஒளி தந்தவரின் (ஹோசிமின்) நினைவு நாள் இன்று!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum