Latest topics
» நாவல் தேவைby jayaragh Yesterday at 11:09 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Jun 07, 2023 6:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 31, 2023 7:57 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 30, 2023 4:47 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Thu Feb 16, 2023 8:07 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm
» கண்ணகி என்னும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி
by veelratna Wed Oct 20, 2021 12:51 pm
» கொரோனா பாடல் அண்மையில் வெளியாகிய
by veelratna Mon Oct 18, 2021 12:44 pm
» மாவிடடபுரம் கந்தசுவாமி கோவிலில் இடம் பெற்ற தேர்த்திருவிழாவின் பழைய காணொளி ஒன்று
by veelratna Mon Oct 18, 2021 11:54 am
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில்.
by veelratna Fri Oct 15, 2021 1:48 pm
» தலைமுறை இடைவெளி
by veelratna Fri Oct 15, 2021 1:44 pm
» தமிழால் பூசை நடக்கும் ஒரேகோவில்
by veelratna Tue Oct 12, 2021 10:58 am
» அண்ணை ரெயிட் கே எஸ் பாலச்சந்தர்
by veelratna Tue Oct 12, 2021 10:52 am
» ஓடலிராசையா KS Balachandran
by veelratna Mon Oct 11, 2021 10:21 am
» சுகுமாரி கதை தேடி நான் உயிரை கொடுத்ததோ
by veelratna Sun Oct 10, 2021 8:43 pm
» கலாவிநோதன் சின்னமணிஅவர்களின் பகுதி ;1
by veelratna Fri Oct 08, 2021 9:26 am
ஒளி தந்தவரின் (ஹோசிமின்) நினைவு நாள் இன்று!
3 posters
Page 1 of 1
ஒளி தந்தவரின் (ஹோசிமின்) நினைவு நாள் இன்று!
ஒளி தந்தவரின் (ஹோசிமின்) நினைவு நாள் இன்று!
[You must be registered and logged in to see this image.]வியட்நாமின் விடுதலைக்கு களமாடிய ஹோசிமின்னுக்கு பெற்றோர் வைத்த பெயர் சிங்சுங். ஆனால் தங்கள் நாட்டை ஒளியேற்ற வந்தவர் என்பதாக குறிக்கும் ஹோசிமின் என்று மக்கள் அழைத்த பெயரான ஹோசிமின் என்பதே வரலாற்றில் நிலைத்து நின்று விட்டது.
ஹோசிமின் சிறுவனாக இருந்தபோது வியட்நாமை பிரான்ஸ் ஆண்டு கொண்டிருந்தது. அங்கு போராடிக்கொண்டிருந்த கெரில்லா குழுக்களுக்கு ஹோசிமின் தனது சிறு வயதிலேயே சிறுசிறு உதவிகள் செய்து தன்னை தொடர்பு படுத்திக்கொண்டிருக்கிறார். அந்த சிறுவயதிலேயே வியட்நாமை அந்நியரிடமிருந்து விடுதலை பெறச்செய்யவேண்டும் எனும் கனல் ஹோசிமின் உள்ளத்தில் எரிந்துகொண்டிருந்தது. பிரான்ஸின் பெரும்படையை எதிர்கொள்ளமுடியாமல் பிரான்ஸைப் பற்றி அறிந்துகொள்ள அந்த நாட்டிற்கே சென்று அங்கு ஒரு கடையில் வேலை பார்த்துக்கொண்டே தான் வந்த வேலையையும் செய்துவந்தார்.
அந்த சூழலில் ஜப்பானிய படைகள் வியட்நாமில் நுழைந்து பிரான்ஸை விரட்ட, மக்கள் மகிழ்ச்சியில் இருந்தபோது ஹோசிமின் தனது நாட்டிற்கு திரும்பி வந்தார். வந்ததும் மக்களை எச்சரித்தார். 'நமக்கான மூக்கணாங்கயிறுதான் மாறியிருக்கிறதே தவிர, விடுதலை கிடைக்கவில்லை' என்றார். ஜப்பானிய படை இவரைக் கைதுசெய்ய தேட, காட்டிற்குள் தங்கி பெரும்படையை நிர்மாணித்தார். தக்க சமயத்தில் ஜப்பான் படையை வீழ்த்தி, உடனே தேர்தல் நடத்த மக்கள் இவரையே தலைவராக தேர்ந்தெடுத்தனர்.
அதற்கு பின் பிரான்ஸ் உள்ளிட்ட மற்ற நாடுகளில் தாக்குதல்களை வெற்றிகரமாக சமாளித்து வியட்நாமை சுதந்திர பூமியாக்கிய ஹோசிமினின் நினைவு நாள் இன்று!
-அபூர்வா.
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Re: ஒளி தந்தவரின் (ஹோசிமின்) நினைவு நாள் இன்று!
1969 இல் கோசிமின் எழுதியது ஈழத் தமிழர்களுக்கும் பொருந்தும்.
.......................................
அமெரிக்காவின் ஆக்கிரமிப்பை எதிர்த்து, தேசிய விடுதலைக்காக நமது மக்கள் நடத்தும் போராட்டம், நம் மக்கள் அனைவரும் படும் கஷ்டங்கள், அவர்களின் தியாகங்களைத் தாண்டி முற்றிலுமாக வெற்றியடையும். இந்த வெற்றி நிச்சயம்.
வெற்றி கிட்டிய பின்னர், தெற்கு வடக்கு பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து, நமது மக்களை, தோழர்களை, ஊழியர்களை, போராளிகளை, முதியோர், இளைஞர்கள், குழந்தைகளை நேரில் சந்தித்து வீரத்துடன் போராடியதற்கு வாழ்த்து தெரிவிக்க விரும்புகிறேன்.
பின்னர், நம் மக்களின் சார்பில் சோஷலிச முகாமிலுள்ள சகோதர நாடுகளுக்கும், நேச நாடுகளுக்கும் சென்று, அமெரிக்க ஆக்கிர மிப்பை எதிர்த்த நமது இயக்கத்திற்கு முழு மனதுடன் ஆதரவளித்து உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பேன்.
சீனாவின் “டாங்” கால கவிஞர் து பூ எழுதினார் : “எல்லாக் காலங்களிலும் எழுபது வயதை எட்டியவர்கள் சிலரே” இந்த ஆண்டு 79 வயதை தொடும் நான் அந்த சிலரில் ஒருவன் என நினைக்கிறேன். கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் எனது உடல்நலம் சற்று மோசமாகியுள்ள போதிலும், என்னால் தெளிவாக சிந்திக்க முடிகிறது. எழுது வசந்தங்களைக் கண்ட ஒருவரின் உடல்நலம் வயதாகும்போது குறைவது இயல்பு. அது ஒன்றும் அதிசயமல்ல.
ஆனால், என் தாய் நாட்டிற்கு எனது மக்களுக்கு, புரட்சிக்கு நான் இன்றும் எவ்வளவு நாட்கள் பணியாற்ற முடியுமென யாரால் கூற இயலும்? எனவே, கார்ல் மார்க்ஸ், வி.ஐ.லெனின் மற்றும் இதர புரட்சியாளர்களை நான் சென்றடையும் முன்பு சில வரிகள் எழுத வேண்டுமென்று நினைக்கிறேன். இதன் மூலம் நமது மக்கள், கட்சித் தோழர்கள், உலகெங்கிலுமுள்ள நமது நண்பர்கள் ஆச்சரியமடையத் தேவை இருக்காது.
முதலில் கட்சி பற்றி
நமது கட்சி துவக்கப்பட்டது முதல் ஒற்றுமையுடன், அனை வரையும் திரட்டி, தீர்மானகர மான போராட்டத்திற்கு தலைமை ஏற்று வெற்றி மேல் வெற்றி பெற்றுள்ளோம். உழைக்கும் வர்க்கம், மக்கள், தாய்நாடு ஆகியவற்றின் முன்னேற்றத்திற்காக முழு அர்ப்பணிப்புடனும், நெருக்கமான ஒற்றுமையை கட்டி காத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒற்றுமை என்பது நமது கட்சியின் மக்களின் விலை மதிப்பில்லாத பாரம்பரியமாகும். மத்திய கமிட்டி தோழர்கள் முதல் கிளை வரை ஒருமித்த சிந்தனையுடன் ஒற்றுமையாக கட்சி இருப்பது கண்ணின் மணி போன்றது.
கட்சிக்குள் பரந்த ஜனநாயகம் வேண்டும். அதேசமயம் விமர்சனங்கள், சுயவிமர்சனங்கள் முறையாக, கவனத்துடன் நடைபெறுவது கட்சியின் ஒற்றுமையை வளர்க்க, கட்டிக்காக்க உதவும், தோழமை உணர்வு நிலவுவது அவசியம். நம் கட்சி தற்போது அதிகாரத்தில் உள்ளது. ஒவ்வொரு கட்சி உறுப்பினரும், ஊழியரும் புரட்சிகர ஒழுக்கத்தை ஆழமாக தமக்குள் கொண்டிருக்க வேண்டும். திறமை, கடும் உழைப்பு, சேமிப்பு, உண்மை, மக்கள் நலனில் முழு அர்ப்பணிப்பு, சுயநலம் இன்றி முழு பொதுநலனுக்காக பாடுபடும் குணங்களை கொண்டிருத்தல் அவசியம். மக்களின் நம்பிக்கையான ஊழியன் மற்றும் சிறந்த தலைவன் என்ற பெருமைக்கு உகந்த கட்சியாக செயல்பட, நம் கட்சி தூய்மையுடன் செயலாற்ற வேண்டும்.
உழைக்கும் இளம் சங்க உறுப்பினர்கள் மற்றும் இதர இளைஞர்கள் பொதுவாக நல்லவர்கள், கஷ்டங்களை கண்டு அஞ்சாது, முன்னேற்றத்தை விரும்பி, எப்பொழுதும் செயல்படத் தயாராக உள்ளனர். அவர்களுடைய புரட்சிகர நல்லெண்ணங்களை வளர்த்து, சோஷலிசத்தை கட்டுவதற்கு தகுந்த வண்ணம், ‘சிவப்பான’ தியமையான அடுத்த தலைவர்களாக வளர்வதற்கு கட்சி பயிற்சி அளிக்க வேண்டும். அடுத்த தலைமுறையை பயிற்றுவிப்பதும், கற்பிப்பதும் மிகவும் முக்கியமானது. மிகவும் அவசியமானது. மலைகளிலும், சமவெளிகளிலும் உள்ள நமது தொழிலாளர்கள் தலைமுறை, தலைமுறையாக பல்வேறு கஷ்டங்களை அனுபவித்தவர்கள். நிலப்பிரபுத்துவ காலனிய ஆதிக்கம், சுரண்டலுக்கு ஆட்பட்டவர்கள் அத்துடன் பல ஆண்டுகளாக போரையும் எதிர் கொண்டவர்கள்.
இருப்பினும், நமது மக்கள், வீரம், தைரியம், ஊக்கத்துடன் கடும் பணியாற்றுகின்றனர். நமது கட்சி துவக்கப்பட்டதிலிருந்து அதை பின்பற்றுபவர்களாக, விசுவாசிகளாக இருந்து வருகின்றனர்.
பொருளாதார, கலாச்சார வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களைத் தீட்டி, நமது மக்களின் வாழ்க்கை முன்னேற தொடர்ந்து கட்சி பாடுபட வேண்டும்.
அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிரான போர் தொடரலாம். நமது மக்கள் புதிய தியாகங்களை செய்ய வேண்டி வரலாம். உடைமைகளை இழக்கலாம். ஆனால் எது நடந்தாலும், இறுதி வெற்றி கிட்டும் வரை அமெரிக்க ஆதிக்கத்தை எதிர்த்து போரிடும் உணர்வை தளரவிடக் கூடாது.
‘நமது மலைகள் எப்பொழுதும் இருக்கும்
நமது ஆறுகள் எப்பொழுதும் இருக்கும்
நமது மக்கள் எப்பொழுதும் இருப்பார்கள்:
அமெரிக்க படையெடுப்பாளர்கள் தோற்பார்கள்,
நாம் நமது பூமியை மேலும்
பத்து மடங்கு அழகாக நிர்மாணிப்போம்’
எவ்வளவு கஷ்டங்களை எதிர்கொள்ள வேண்டி வருமோ தெரியாது. ஆனால் நம் மக்கள் முழு வெற்றி கிட்டுமென உறுதி பூண்டுள்ளனர். அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் கண்டிப்பாக நம் நாட்டிலிருந்து வெளியேறுவர். நம் தாய்நாடு மீண்டும் ஒன்றிணையும். தெற்கிலுள்ள நமது சகோதரர்களும், வடக்கிலுள்ள நம்மக்களும், மீண்டும் ஒரே கூரையின் கீழ் ஒன்றிணைவார்கள். நாம் சிறிய நாடுதான். ஆனால் வீரஞ்செறிந்த போராட்டத்தின் மூலம், உலகின் இரண்டு, மாபெரும் ஏகாதிபத்திய சக்திகளான அமெரிக்காவையும் பிரான்சையும், போராடி தோற்கடித்தோம் என்ற பெருமை நமக்கு உண்டு. உலக தேசிய விடுதலை இயக்கத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை செலுத்தி இருக்கிறோம் என்ற பெருமை உண்டு.
உலக கம்யூனிச இயக்கம் பற்றி..
எனது வாழ்க்கை முழுவதையும் புரட்சிக்கு அர்ப்பணித்தவன் என்ற முறையில், சர்வதேச கம்யூனிச இயக்கமும், தொழிலாளர் இயக்கமும் வளர்ச்சி அடைவதைக் கண்டு கூடுதல் பெருமை அடைகிறேன். சகோதர கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள பிளவு என்னை வருத்தமடையச் செய்கிறது.
மார்க்சிய – லெனினியம் மற்றும் தொழிலாளி வர்க்க சர்வதேசியம் என்ற அடிப்படையில் உணர்வு மற்றும் காரண காரியங்களைக் கொண்டு சகோதர கட்சிகளிடையே ஒற்றுமையை மீட்டெடுக்க நமது கட்சி சிறந்ததொரு பங்களிப்பை செலுத்துமென நம்புகிறேன். சகோதர கட்சிகள், நாடுகள் மீண்டும் இணையும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை எனக்கு உள்ளது.
எனது தனிப்பட்ட விஷயங்கள் பற்றி
எனது வாழ்க்கை முழுவதையும் முழு மனதுடன், பலத்துடன், தாய்நாட்டிற்காக, புரட்சிக்காக, மக்களுக்காக பணியாற்றுவதில் அர்ப்பணித்துவிடும். இவ்வுலகிலிருந்து, நான் மறையும் பொழுது, இன்னும் நீண்டகாலம் என் பணி தொடர இயலாதே என்பதைத் தவிர, வருத்தப்பட எனக்கு எதுவுமில்லை.
நான் இறந்த பின்பு ஆடம்பரமான இறுதி நிகழ்ச்சியை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அதனால் மக்களின் நேரமும், பணமும் விரயமாகும்.
இறுதியாக, அனைத்து மக்களுக்கும், கட்சி முழுமைக்கும், ராணுவம் முழுமைக்கும், எனது மருமகன்கள், மருமகள்கள், இளைஞர்கள், குழந்தைகள் அனைவருக்கும் எல்லையற்ற, அளவில்லா என் அன்பை விட்டுச் செல்கிறேன். உலகிலுள்ள நமது தோழர்கள், நண்பர்கள், இளைஞர்கள், குழந்தைகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
அமைதியான, மீண்டும் ஒன்றிணைந்த, சுதந்திரமான, ஜனநாயகப்பூர்வமான மற்றும் செழிப்பான வியத்நாமை கட்டுவதற்கு கட்சி முழுவதும், மக்கள் அனைவரும், நெருக்கமாக இணைந்து ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டு மென்பதும், உலக புரட்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை செலுத்த வேண்டுமென்பதே எனது இறுதி ஆசை.
- ஹனோய் 10, மே 1969
ஹோ-சி-மின்
நன்றி - ஹோ-சி-மின் கடிதங்கள்.
.......................................
அமெரிக்காவின் ஆக்கிரமிப்பை எதிர்த்து, தேசிய விடுதலைக்காக நமது மக்கள் நடத்தும் போராட்டம், நம் மக்கள் அனைவரும் படும் கஷ்டங்கள், அவர்களின் தியாகங்களைத் தாண்டி முற்றிலுமாக வெற்றியடையும். இந்த வெற்றி நிச்சயம்.
வெற்றி கிட்டிய பின்னர், தெற்கு வடக்கு பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து, நமது மக்களை, தோழர்களை, ஊழியர்களை, போராளிகளை, முதியோர், இளைஞர்கள், குழந்தைகளை நேரில் சந்தித்து வீரத்துடன் போராடியதற்கு வாழ்த்து தெரிவிக்க விரும்புகிறேன்.
பின்னர், நம் மக்களின் சார்பில் சோஷலிச முகாமிலுள்ள சகோதர நாடுகளுக்கும், நேச நாடுகளுக்கும் சென்று, அமெரிக்க ஆக்கிர மிப்பை எதிர்த்த நமது இயக்கத்திற்கு முழு மனதுடன் ஆதரவளித்து உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பேன்.
சீனாவின் “டாங்” கால கவிஞர் து பூ எழுதினார் : “எல்லாக் காலங்களிலும் எழுபது வயதை எட்டியவர்கள் சிலரே” இந்த ஆண்டு 79 வயதை தொடும் நான் அந்த சிலரில் ஒருவன் என நினைக்கிறேன். கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் எனது உடல்நலம் சற்று மோசமாகியுள்ள போதிலும், என்னால் தெளிவாக சிந்திக்க முடிகிறது. எழுது வசந்தங்களைக் கண்ட ஒருவரின் உடல்நலம் வயதாகும்போது குறைவது இயல்பு. அது ஒன்றும் அதிசயமல்ல.
ஆனால், என் தாய் நாட்டிற்கு எனது மக்களுக்கு, புரட்சிக்கு நான் இன்றும் எவ்வளவு நாட்கள் பணியாற்ற முடியுமென யாரால் கூற இயலும்? எனவே, கார்ல் மார்க்ஸ், வி.ஐ.லெனின் மற்றும் இதர புரட்சியாளர்களை நான் சென்றடையும் முன்பு சில வரிகள் எழுத வேண்டுமென்று நினைக்கிறேன். இதன் மூலம் நமது மக்கள், கட்சித் தோழர்கள், உலகெங்கிலுமுள்ள நமது நண்பர்கள் ஆச்சரியமடையத் தேவை இருக்காது.
முதலில் கட்சி பற்றி
நமது கட்சி துவக்கப்பட்டது முதல் ஒற்றுமையுடன், அனை வரையும் திரட்டி, தீர்மானகர மான போராட்டத்திற்கு தலைமை ஏற்று வெற்றி மேல் வெற்றி பெற்றுள்ளோம். உழைக்கும் வர்க்கம், மக்கள், தாய்நாடு ஆகியவற்றின் முன்னேற்றத்திற்காக முழு அர்ப்பணிப்புடனும், நெருக்கமான ஒற்றுமையை கட்டி காத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒற்றுமை என்பது நமது கட்சியின் மக்களின் விலை மதிப்பில்லாத பாரம்பரியமாகும். மத்திய கமிட்டி தோழர்கள் முதல் கிளை வரை ஒருமித்த சிந்தனையுடன் ஒற்றுமையாக கட்சி இருப்பது கண்ணின் மணி போன்றது.
கட்சிக்குள் பரந்த ஜனநாயகம் வேண்டும். அதேசமயம் விமர்சனங்கள், சுயவிமர்சனங்கள் முறையாக, கவனத்துடன் நடைபெறுவது கட்சியின் ஒற்றுமையை வளர்க்க, கட்டிக்காக்க உதவும், தோழமை உணர்வு நிலவுவது அவசியம். நம் கட்சி தற்போது அதிகாரத்தில் உள்ளது. ஒவ்வொரு கட்சி உறுப்பினரும், ஊழியரும் புரட்சிகர ஒழுக்கத்தை ஆழமாக தமக்குள் கொண்டிருக்க வேண்டும். திறமை, கடும் உழைப்பு, சேமிப்பு, உண்மை, மக்கள் நலனில் முழு அர்ப்பணிப்பு, சுயநலம் இன்றி முழு பொதுநலனுக்காக பாடுபடும் குணங்களை கொண்டிருத்தல் அவசியம். மக்களின் நம்பிக்கையான ஊழியன் மற்றும் சிறந்த தலைவன் என்ற பெருமைக்கு உகந்த கட்சியாக செயல்பட, நம் கட்சி தூய்மையுடன் செயலாற்ற வேண்டும்.
உழைக்கும் இளம் சங்க உறுப்பினர்கள் மற்றும் இதர இளைஞர்கள் பொதுவாக நல்லவர்கள், கஷ்டங்களை கண்டு அஞ்சாது, முன்னேற்றத்தை விரும்பி, எப்பொழுதும் செயல்படத் தயாராக உள்ளனர். அவர்களுடைய புரட்சிகர நல்லெண்ணங்களை வளர்த்து, சோஷலிசத்தை கட்டுவதற்கு தகுந்த வண்ணம், ‘சிவப்பான’ தியமையான அடுத்த தலைவர்களாக வளர்வதற்கு கட்சி பயிற்சி அளிக்க வேண்டும். அடுத்த தலைமுறையை பயிற்றுவிப்பதும், கற்பிப்பதும் மிகவும் முக்கியமானது. மிகவும் அவசியமானது. மலைகளிலும், சமவெளிகளிலும் உள்ள நமது தொழிலாளர்கள் தலைமுறை, தலைமுறையாக பல்வேறு கஷ்டங்களை அனுபவித்தவர்கள். நிலப்பிரபுத்துவ காலனிய ஆதிக்கம், சுரண்டலுக்கு ஆட்பட்டவர்கள் அத்துடன் பல ஆண்டுகளாக போரையும் எதிர் கொண்டவர்கள்.
இருப்பினும், நமது மக்கள், வீரம், தைரியம், ஊக்கத்துடன் கடும் பணியாற்றுகின்றனர். நமது கட்சி துவக்கப்பட்டதிலிருந்து அதை பின்பற்றுபவர்களாக, விசுவாசிகளாக இருந்து வருகின்றனர்.
பொருளாதார, கலாச்சார வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களைத் தீட்டி, நமது மக்களின் வாழ்க்கை முன்னேற தொடர்ந்து கட்சி பாடுபட வேண்டும்.
அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிரான போர் தொடரலாம். நமது மக்கள் புதிய தியாகங்களை செய்ய வேண்டி வரலாம். உடைமைகளை இழக்கலாம். ஆனால் எது நடந்தாலும், இறுதி வெற்றி கிட்டும் வரை அமெரிக்க ஆதிக்கத்தை எதிர்த்து போரிடும் உணர்வை தளரவிடக் கூடாது.
‘நமது மலைகள் எப்பொழுதும் இருக்கும்
நமது ஆறுகள் எப்பொழுதும் இருக்கும்
நமது மக்கள் எப்பொழுதும் இருப்பார்கள்:
அமெரிக்க படையெடுப்பாளர்கள் தோற்பார்கள்,
நாம் நமது பூமியை மேலும்
பத்து மடங்கு அழகாக நிர்மாணிப்போம்’
எவ்வளவு கஷ்டங்களை எதிர்கொள்ள வேண்டி வருமோ தெரியாது. ஆனால் நம் மக்கள் முழு வெற்றி கிட்டுமென உறுதி பூண்டுள்ளனர். அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் கண்டிப்பாக நம் நாட்டிலிருந்து வெளியேறுவர். நம் தாய்நாடு மீண்டும் ஒன்றிணையும். தெற்கிலுள்ள நமது சகோதரர்களும், வடக்கிலுள்ள நம்மக்களும், மீண்டும் ஒரே கூரையின் கீழ் ஒன்றிணைவார்கள். நாம் சிறிய நாடுதான். ஆனால் வீரஞ்செறிந்த போராட்டத்தின் மூலம், உலகின் இரண்டு, மாபெரும் ஏகாதிபத்திய சக்திகளான அமெரிக்காவையும் பிரான்சையும், போராடி தோற்கடித்தோம் என்ற பெருமை நமக்கு உண்டு. உலக தேசிய விடுதலை இயக்கத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை செலுத்தி இருக்கிறோம் என்ற பெருமை உண்டு.
உலக கம்யூனிச இயக்கம் பற்றி..
எனது வாழ்க்கை முழுவதையும் புரட்சிக்கு அர்ப்பணித்தவன் என்ற முறையில், சர்வதேச கம்யூனிச இயக்கமும், தொழிலாளர் இயக்கமும் வளர்ச்சி அடைவதைக் கண்டு கூடுதல் பெருமை அடைகிறேன். சகோதர கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள பிளவு என்னை வருத்தமடையச் செய்கிறது.
மார்க்சிய – லெனினியம் மற்றும் தொழிலாளி வர்க்க சர்வதேசியம் என்ற அடிப்படையில் உணர்வு மற்றும் காரண காரியங்களைக் கொண்டு சகோதர கட்சிகளிடையே ஒற்றுமையை மீட்டெடுக்க நமது கட்சி சிறந்ததொரு பங்களிப்பை செலுத்துமென நம்புகிறேன். சகோதர கட்சிகள், நாடுகள் மீண்டும் இணையும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை எனக்கு உள்ளது.
எனது தனிப்பட்ட விஷயங்கள் பற்றி
எனது வாழ்க்கை முழுவதையும் முழு மனதுடன், பலத்துடன், தாய்நாட்டிற்காக, புரட்சிக்காக, மக்களுக்காக பணியாற்றுவதில் அர்ப்பணித்துவிடும். இவ்வுலகிலிருந்து, நான் மறையும் பொழுது, இன்னும் நீண்டகாலம் என் பணி தொடர இயலாதே என்பதைத் தவிர, வருத்தப்பட எனக்கு எதுவுமில்லை.
நான் இறந்த பின்பு ஆடம்பரமான இறுதி நிகழ்ச்சியை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அதனால் மக்களின் நேரமும், பணமும் விரயமாகும்.
இறுதியாக, அனைத்து மக்களுக்கும், கட்சி முழுமைக்கும், ராணுவம் முழுமைக்கும், எனது மருமகன்கள், மருமகள்கள், இளைஞர்கள், குழந்தைகள் அனைவருக்கும் எல்லையற்ற, அளவில்லா என் அன்பை விட்டுச் செல்கிறேன். உலகிலுள்ள நமது தோழர்கள், நண்பர்கள், இளைஞர்கள், குழந்தைகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
அமைதியான, மீண்டும் ஒன்றிணைந்த, சுதந்திரமான, ஜனநாயகப்பூர்வமான மற்றும் செழிப்பான வியத்நாமை கட்டுவதற்கு கட்சி முழுவதும், மக்கள் அனைவரும், நெருக்கமாக இணைந்து ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டு மென்பதும், உலக புரட்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை செலுத்த வேண்டுமென்பதே எனது இறுதி ஆசை.
- ஹனோய் 10, மே 1969
ஹோ-சி-மின்
நன்றி - ஹோ-சி-மின் கடிதங்கள்.
sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010

» ஜனவரி 26: கணிதவியலாளர் ஆர்தர் கெய்லியின் நினைவு நாள் இன்று.
» செப்டம்பர்16: பேச்சாளர் தென்கச்சி கோ. சுவாமிநாதனின் நினைவு நாள் இன்று
» புகழ்பெற்ற இத்தாலிய ஓவியர் மைக்கலாஞ்சலோவின் நினைவு நாள் இன்று.
» செப்டம்பர் 11: முண்டாசு கவி பாரதியின் நினைவு நாள் இன்று.
» பிப்ரவரி 17: தமிழறிஞர் வையாபுரி பிள்ளையின் நினைவு நாள் இன்று.
» செப்டம்பர்16: பேச்சாளர் தென்கச்சி கோ. சுவாமிநாதனின் நினைவு நாள் இன்று
» புகழ்பெற்ற இத்தாலிய ஓவியர் மைக்கலாஞ்சலோவின் நினைவு நாள் இன்று.
» செப்டம்பர் 11: முண்டாசு கவி பாரதியின் நினைவு நாள் இன்று.
» பிப்ரவரி 17: தமிழறிஞர் வையாபுரி பிள்ளையின் நினைவு நாள் இன்று.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|