TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:28 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 1:15 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Sep 14, 2024 1:52 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


போர்க்களத்தில் இறுதிவரை நின்றிருந்த வைத்தியரும் நாடாளுமன்றத் தேர்தலில் மகிந்தவுக்காக

Go down

போர்க்களத்தில் இறுதிவரை நின்றிருந்த வைத்தியரும் நாடாளுமன்றத் தேர்தலில் மகிந்தவுக்காக Empty போர்க்களத்தில் இறுதிவரை நின்றிருந்த வைத்தியரும் நாடாளுமன்றத் தேர்தலில் மகிந்தவுக்காக

Post by Tamil Wed Apr 07, 2010 11:34 am

போர்க்களத்தில் இறுதிவரை நின்றிருந்த வைத்தியரும் நாடாளுமன்றத் தேர்தலில் மகிந்தவுக்காக போட்டி!


கடந்த வருடம் விடுதலைப்புலிகளுக்கும் சிறிலங்கா அரச படைகளுக்குமிடையே போர்
உக்கிரமாக நடைபெற்றபோது, அங்கு ஏற்பட்ட உயிரிழப்புக்கள் தொடர்பாக
உலகத்தின் கவனத்தை ஈர்த்த வைத்தியர் ஒருவர் தமிழ் மக்களுக்கு எதிராக போரை
முன்னெடுத்த அரசதலைவரை ஆதரிக்கும் கட்சி ஒன்றின் சார்பாக நடைபெறவிருக்கும்
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.

இறுதியாக இராணுவம் வெற்றி பெற்றதையடுத்து சர்வதேச தொண்டு
நிறுவனங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் விடுதலைப்புலிகளின் தவறான
தகவல்களை வழங்கியதென்ற குற்றச் சாட்டில் வீரகத்திப்பிள்ளை சண்முகராஜா(40)
மேலும் 4 வைத்தியர்களுடன் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டார்.

தற்போது விடுதலைப்புலிகளுக்கு எதிராக தனது இராணுவ நடவடிக்கைக்குக்
கட்டளையிட்ட சனாதிபதி மகிந்த ராஜபக்சவை ஆதரிக்கும் தமிழ் கட்சி ஒன்றின்
சார்பில் அவர் வியாழனன்று நடைபெறுகின்ற நாடாளுமன்றத் தேர்தலில்
போட்டியிடுகிறார்.

'நாட்டின் தலைமைப் பொறுப்பிற்கும் போரிற்குப் பின்னர் நாட்டைக்
கட்டியெழுப்புவதற்கும் பொருத்தமான தலைவர் சனாதிபதி மகிந்த ராஜபக்சதான் என
நான் நம்புகிறேன்', என்கிறார் சண்முகராஜா.

வன்னிக் காடுகளில் எஞ்சியிருந்த புலிகளுடன் இடம்பெற்ற போரின்போது இறுதி 4
மாதங்களிலும் 7000 மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை
கூறுகிறது.

மூன்று தசாப்தங்களிற்கு மேலாக இடம்பெற்ற யுத்தம் மே 18 இல் முடிவுக்கு
வரும்வரை போர் வலயத்தினுள்ளேயே நின்ற வைத்தியர்கள் வழங்கிய தகவல்களின்
அடிப்படையிலேயே இந்தக் கணிப்பீடு மேற்கொள்ளப்பட்டது.

இறுதி மாதத்தில் மட்டும் 350 - 400 வரையான பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும்
அதுபோலவே சனவரி முதல் ஏப்ரல் வரையான மாதங்களிலும் இடம்பெற்றதாகவும்
வைத்தியர்கள் கூறுகின்றனர்.

இராணுவத்தால் தடுத்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து சண்முகராஜாவும் ஏனைய
வைத்தியர்களும் தாம் புலிகளின் அழுத்தத்தினாலே அவ்வாறு தகவல்களை
வழங்கியதாக கூறி தமது தகவல்களை மறுதலித்தனர்.

பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டு அவர்களது வேலைகளும் மீண்டும் வழங்கப்பட்டது.

'இழப்பு விபரங்கள் தொடர்பாக நான் இப்போது கதைக்க விரும்பவில்லை. அது
எல்லாம் முடிந்துவிட்டது', என்று முல்லைத்தீவிலுள்ள தனது வீட்டிலிருந்து
சண்முகராஜா AFP யிற்கு தெரிவித்தார்.

'அந்த இறுதி நாட்களில் மின்சாரமோ, தேவையான மருத்துவ வசதிகளோ, உபகரண
வசதிகளோ இன்றி நாம் மிகுந்த சிரமத்தின் மத்தியில் பணியாற்றினோம்', என்றார்.

'எறிகணைகளிலும் குண்டுகளிலும் இருந்து தப்புவதற்காக நாம் வைத்தியசாலையை
நகர்த்தவேண்டியிருந்தது. எமது மக்கள் மிகவும் துன்பப்பட்டார்கள். ஆனால்
போர் முடிவடைந்து தற்போது நிலமைகள் ஓரளவுக்கு வழமைக்கு திரும்பியுள்ளன'.

போர் இடம்பெற்ற காலத்தில் நூற்றுக் கணக்கானோருக்கு களமுனை
சத்திரசிகிச்சையினை மேற்கொண்ட சண்முகராஜா, தனது அரச பணியை கைவிட்டு
ராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருக்கும் ஈரோஸ் அமைப்பின் சார்பாக
தேர்தலில் போட்டியிடுகிறார்..

தேர்தல் திணைக்களத்தின் தகவல்களின்படி, சண்முகராஜா போட்டியிடுகின்ற
முல்லைத்தீவு மாட்டம் உள்ளிட்ட வன்னிப் பிராந்தியத்தில் 267000
வாக்காளர்கள் வாக்களிப்பதற்குத் தம்மைப் பதிவு செய்துள்ளனர்.

ஆனால் போர் முடிவடைந்து ஏறத்தாழ ஒரு வருடத்திற்கு பின்னரும் இந்த
வாக்காளர்களுள் பெரும்பாலானோர் தற்காலிக நலன்புரி நிலையங்களில்
தங்கியிருப்பதால், உண்மையில் வாக்காளர்களில் அரைவாசியினரே
வாக்களிப்பார்களென நம்பப்படுகிறது.

'எனது மக்கள், நான் சிகிச்சையளித்த நோயாளிகள் என்னைப் நாடாளுமன்றத்திற்கு
அனுப்புவார்கள் என்பதை நான் நம்புகிறேன.', என்கிறார் சண்முகராஜா.

முன்னாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற
உறுப்பினர் கனகரட்ணம் அவர்களும் இதேபோல போர் முடிவடைந்த பின்னர் சிறிலங்கா
அரசாங்கத்தால் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். சிறிலங்கா அரச தலைவர்
தேர்தலுக்கு சில நாட்களிற்கு முன்னர் விடுவிக்கப்பட்ட இவர்; சிறிலங்கா அரச
தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான தேர்தல் பிரசார கூட்டங்களில் கலந்து
கொண்டார்.

தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி, ஆளும் ஐக்கிய மக்கள்
சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார்.

சிறிலங்கா அரசாங்கத்தின் மறைமுக அழுத்தத்தின் காரணமாகவே வைத்தியர்
சண்முகராஜாவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கனகரத்தினமும்
அரசாங்கத்திற்கு ஆதரவு தரும் கட்சிகளின் சார்பாக போட்டியிடுவதாக மக்கள்
கருதுகின்றனர்.

[You must be registered and logged in to see this link.]
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» கற்காலத்தை சேர்ந்த பழங்குடியின மக்களில் கடைசி பிரிவைச் சேர்ந்தவர்கள்,முதல் முறையாக இந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்துள்ளனர்.
» பத்தாயிரம் போர்க்கப்பல்கள் நின்றிருந்த - காவிரிபூம்பட்டினம் !
» நகைச்சுவை கலாட்டா
» ஜெனிவா போர்க்களத்தில், தமிழினம் வெல்வது உறுதி! – இசைப்பிரியா
» ஜெனிவாவில் நடந்த இரகசிய பேரம்: அமெரிக்காவுடன் இறுதிவரை இழுபறி யுத்தம் நடத்திய இந்தியா.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum