TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:04 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


பருவமழையால் ஓராண்டுக்கு பின் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து

Go down

பருவமழையால் ஓராண்டுக்கு பின் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து Empty பருவமழையால் ஓராண்டுக்கு பின் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து

Post by mmani Mon Jun 03, 2013 8:15 am

தென்மேற்கு பருவமழை, குறிப்பிட்ட காலத்தில் துவங்கி
உள்ளதால், மேட்டூர் அணை நிரம்பும் வாய்ப்பு அதிகரித்திருக்கிறது. வறண்டு
கிடந்த மேட்டூர் அணைக்கு, காவிரியில் இருந்து, நேற்று செம்மண் கலந்து
வெள்ளம் பாய்ந்தது. இது, விவசாயிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவில்,
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில்,
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில், பரவலாக மழை பெய்து
வருகிறது. இதனால், வெப்பத்தின் தீவிரமும் குறைந்துள்ளது.ஆண்டுதோறும், ஜூன்
முதல் வாரத்தில், தென்மேற்கு பருவமழை துவங்கி, செப்., மாதம் வரை பெய்யும்.
இந்த ஆண்டு, வானிலை ஆய்வு மையம் கணித்தபடி, குறிப்பிட்ட காலத்தில், மழை
துவங்கி உள்ளது. கர்நாடகாவில், பருவமழை பெய்து வருவதால், காவிரியில்
நீர்வரத்து துவங்கி உள்ளது.



ஓராண்டுக்கு பின்...:
வினானாடிக்கு,
600 கனஅடி நீர் வெளியேற்றியதால், மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று, 18.430
அடியாகவும், நீர் இருப்பு, 3.657 டி.எம்.சி.,யாகவும்
குறைந்துவிட்டது.ஆனால், காவிரி நீர்பிடிப்பு பகுதியில், பருவமழை தீவிரம்
அடைந்துள்ளதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து துவங்கி உள்ளது. நேற்று
முன்தினம் வினாடிக்கு, 72 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை, 300
கனஅடியாக உயர்ந்துள்ளது.மேட்டூர் அணை, பண்ணவாடி நீர்பரப்பு பகுதியில்,
செம்மண் நிறத்தில், நேற்று புதிய நீர் கரைபுரண்டு ஓடிவந்தது. ஓராண்டுக்கு
பின், மேட்டூர் அணை நீர்பரப்பில் ஓடும் காவிரியாற்றில், தண்ணீர் புரண்டு
வந்ததால், கரையோர மக்களும், விவசாயிகளும் மிகவும் மகிழ்ச்சியடைந்து
உள்ளனர்.மழையால், குறிப்பிட்ட காலத்தில் மேட்டூர் அணை குறிப்பிட்ட
காலத்தில் நிரம்பும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டு உள்ளது.


ஒகேனக்கல்:


தமிழகத்திற்கு
காவிரி நீர், மிகவும் குறைந்த அளவே வந்து கொண்டிருந்ததால், ஒகேனக்கலில்
உள்ள மெயின் அருவி, அய்வால் அருவிகளில் தண்ணீரை காண்பது அரிதாக இருந்தது.
இதனால், ஒகேனக்கல்லுக்கு, இந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் சுற்றுலா
பயணிகள் வரத்து குறைந்திருந்தது.நேற்று காலை முதல், தமிழக எல்லையான
பிலிகுண்டலுவில், நீர்வரத்து, 300 கனஅடியாக உயர்ந்துள்ளது. வெள்ளம் வருவதை
அடுத்து ஒகேனக்கலுக்கு, பயணிகள் வரத்து அதிகரிக்கும் வாய்ப்பு
உள்ளது.இதனிடையே, தமிழகத்தில் கடந்த, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக
உத்திரமேரூர், திருத்தணியில் தலா, 4, ஆம்பூர், தேவாலா பகுதிகளில் தலா, 3
செ.மீ., மதுக்கூர், வாணியம்பாடி, ஏற்காடு, சத்தியமங்கலம், வால்பாறையில்
தலா, 2, உதகைமண்டலம், நடுவட்டம், கூடலூர் பஜார், ஆலங்குடி, சத்திரப்பட்டி,
திருமயம், கன்னியாகுமரி, காவேரிபாக்கம், சேலம், செங்கோட்டையில் தலா, 1
செ.மீ., மழை பெய்துள்ளது.



சென்னையில் மேகக்கூட்டம்:


சென்னை
நகரில், நேற்று காலை வெயில், "சுள்' என அடித்தது. பிற்பகலில், வானத்தில்
கருமேகங்கள் திரண்டு, சில இடங்களில் மழை பெய்தது. குறிப்பாக கிண்டி,
செங்குன்றம், வடபழனி உள்ளிட்ட சில இடங்களில், 20 நிமிடங்கள் மழை பெய்தது.
திடீரென பெய்த மழையால், சென்னைவாசிகள் மகிழ்ச்சியடைந்தனர்.சென்னை வானிலை
ஆய்வு மைய அதிகாரி கூறுகையில், ""தென் தீபகற்பத்தில், மேலடுக்கில் ஏற்பட்ட
காற்று சுழற்சி காரணமாக, தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்தது. அடுத்த,
24 மணி நேரத்தில், தமிழகத்தில் சில இடங்களில், இடியுடன் மழை பெய்யக்கூடும்.
சென்னை நகரில் சில இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யலாம்,'' என்றார்.


தென்பெண்ணையில் வெள்ளப்பெருக்கு :


தென்பெண்ணை
ஆற்றில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோர கிராமங்களுக்கு, அபாய
எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம், நந்திமலை நீர்பிடிப்பு
பகுதியில் மழை பெய்து வருவதால், தென்பெண்ணை ஆற்றில், நீர்வரத்து
அதிகரித்து, கடந்த மாதம், ஓசூர் கெலவரப்பள்ளி அணை நிரம்பியது. அணையில், 43
அடி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.கர்நாடகாவில் மழையால், தென்பெண்ணை
ஆற்றில், நேற்று அதிகாலை முதல், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கெலவரப்பள்ளி அணைக்கு, நேற்று அதிகாலை, 550 கன அடி தண்ணீர் வந்ததை
அடுத்து, அணையில் இருந்து, கே.ஆர்.பி., அணைக்கு, 450 கன அடி தண்ணீர்
திறந்து விடப்பட்டுள்ளது. தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு
ஏற்பட்டுள்ளதால், கரையோர கிராமங்களுக்கு, வெள்ள அபாய எச்சரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.தொரப்பள்ளி, பார்த்தக்கோட்டா உள்ளிட்ட தரைப்பாலம் உள்ள
இடங்களில், தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

வறண்டு கிடந்த விவசாய நிலங்களை நனைய வைத்த மழை : விவசாயிகள், வேளாண் துறையினர் மகிழ்ச்சி :
வறட்சியால், வறண்டு கிடந்த விவசாய நிலங்களை, தென்மேற்கு பருவமழை மற்றும்
வெப்பசலன மழை நனைய வைத்துள்ளதால், விவசாயிகள் மட்டுமின்றி வேளாண்
துறையினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை போதுமான
அளவில் பெய்யாததால், சாகுபடி பாதிக்கப்பட்டது. ஆறுகள், அணைகள்,
நீர்தேக்கங்கள், ஏரிகள், குளம் உள்ளிட்ட நீராதாரங்கள் வறண்டன. ஈரப்பதம்
குறைந்ததால், விவசாய நிலங்கள் விரிசல் விட துவங்கின.

இது,
விவசாயிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.இந்நிலையில்,
திட்டமிட்டபடி, தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளது. இதன் எதிரொலியாக மேற்கு
தொடர்ச்சி மலையை ஒட்டிய தமிழக மாவட்டங்களில், சீராக மழை பெய்து வருகிறது.
வெப்பசலனம் காரணமாகவும் பல மாவட்டங்களில் மழை பெய்கிறது. வறட்சியின்
பிடியில் சிக்கி, வறண்டு கிடந்த விவசாய நிலங்கள் இந்த மழையால், நனைய
துவங்கியுள்ளது. வறட்சியால், உருவான விரிசல்களும் மறைய துவங்கியுள்ளது.
இதனால், விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.

இதேநிலை
தொடர்ந்தால், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில், இந்தாண்டு
சாகுபடி சிறப்பாக இருக்கும் என தெரிகிறது. வெப்பசலன மழையால், பல
மாவட்டங்களில் பம்ப் மோட்டார் விவசாயம் களைக்கட்டும் வாய்ப்புள்ளது.கர்நாடக
மாநிலத்தில், தென்மேற்கு பருவமழை தீவிரமாகும்பட்சத்தில், டெல்டா விவசாய
பாசனத்திற்கு, தண்ணீர் கிடைக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இது
வேளாண்துறை அதிகாரிகளையும் மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

இதுகுறித்து,
வேளாண்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "சம்பா சாகுபடியை போல, குறுவை
சாகுபடிக்கும் சிறப்பு திட்டங்கள் வகுக்கப்பட்டு உள்ளன. எதிர்பார்த்தபடி,
மழை திருப்திகரமாக இருக்கும் என்பதால், நிலங்களில் உழவு பணியை
துவங்கும்படி, விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. சாகுபடிக்கான
சிறப்பு திட்டங்களை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் முதல்வர் அறிவிக்க
வாய்ப்புள்ளது' என்றார்.

சென்னையில் பெய்த திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி: கோடை
வெப்பத்தில் தவித்த பொதுமக்கள், நேற்று பிற்பகலில் சென்னை நகரில்
ஆங்காங்கே பெய்த திடீர் மழையால் மகிழ்ச்சியடைந்தனர்.கோடையின் உச்சகட்ட
கத்திரி வெயில், கடந்த மே 28ம் தேதியுடன் முடிவுக்கு வந்தது. ஆயினும்,
சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் வெப்பத்தின் தீவிரம் குறையவில்லை.


மகிழ்ச்சி:


சென்னை
நகரில் நேற்று காலையில் வெயில் சுட்டெரித்தது. இந்த நிலையில்,
பிற்பகலுக்கு பின் கருமேக கூட்டம் திரண்டு வந்தது. தொடர்ந்து, சில
இடங்களில் இடியுடன் மழை பெய்தது. கிண்டி, வடபழனி, செங்குன்றம், வேளச்சேரி,
அமைந்தகரை, பம்மல், வளசரவாக்கம், கோடம்பாக்கம், வடபழனி உள்ளிட்ட இடங்களில்
20 நிமிடத்திற்கு மிகாமல் மழை பெய்தது. இந்த திடீர் மழையால், கோடை வெயிலில்
தவித்த சென்னை வாசிகள் மகிழ்ச்சியடைந்தனர்.


மரம் சாய்ந்தது:


கனமழை
காரணமாக வடபழனி - போரூர் ஆற்காடு, சாலையெங்கும் மழைநீர் குளம்போல்
தேங்கியது. மாநகராட்சி 159வது வார்டு, மீனம்பாக்கம், பாரதியார்தெருவில்
உள்ள கிருஷ்ணமூர்த்தி என்பவரது வீடு உள்ளது. நேற்று, பலத்து காற்று
அடித்ததால், 50 ஆண்டு பழமை வாய்ந்து மரம், கிருஷ்ணமூர்த்தி வீட்டில்
சாய்ந்து விழந்தது.கிண்டி தீயணைப்புபடை வீரர்கள் மரத்தை அப்புறப்படுத்தும்
பணியை மேற்கொண்டனர்.


சுரங்கபாதையில் தண்ணீர்:


பழவந்தாங்கல்,
ஆலந்தூர், தில்லை கங்காநகர் ரயில்வே சுரங்க பாதையில் மழைநீர் நிரம்பி
இருந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இது குறித்து சென்னை வானிலை
ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறுகையில்,"வெப்ப சலனத்தால் சென்னை நகரில் சில
இடங்களில் மழை பெய்தது. அடுத்த 24 மணிநேரத்தில் சென்னை நகரில் சில
இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய கூடும். 36 டிகிரி செல்சியசை ஒட்டியே
வெப்பம் நீடிக்கும்' என்றார்.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு: மேட்டூர் நீர்மட்டம் இனி அதிகரிக்கும்
» கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட காவிரிநீர் மேட்டூர் அணைக்கு வந்தது
» பெரியாறு அணைக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை: ஜெ., கோரிக்கை
» பக்ராநங்கல் அணைக்கு தீவிரவாதிகளால் ஆபத்து: உளவுத்துறை தகவல்
» மேட்டூர் அணை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum