TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:11 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Oct 16, 2024 7:35 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 15, 2024 7:59 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Oct 12, 2024 12:03 am

» சினிமா
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


பிரிந்து போவது பொருத்தமான தீர்வு அல்ல! தனித் தமிழீழம் குறித்து இந்திய சி.பி.எம். விளக்கம்

Go down

பிரிந்து போவது பொருத்தமான தீர்வு அல்ல! தனித் தமிழீழம் குறித்து இந்திய சி.பி.எம். விளக்கம் Empty பிரிந்து போவது பொருத்தமான தீர்வு அல்ல! தனித் தமிழீழம் குறித்து இந்திய சி.பி.எம். விளக்கம்

Post by மாலதி Fri Apr 19, 2013 7:00 am

பிரிந்து போவது பொருத்தமான தீர்வு அல்ல! தனித் தமிழீழம் குறித்து இந்திய சி.பி.எம். விளக்கம்
******************************************************

[You must be registered and logged in to see this image.]
கடநத வார ( 14) இதழில் கழுகார் பதில்கள் பகுதியில் 'ஈழத்தமிழர்
விவகாரத்தில் மற்ற கட்சிகளிடம் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
முரண்படுவது ஏன்?’ என்ற கேள்வி- பதில் இடம்பெற்று இருந்தது. இதற்கு
பதிலளித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாட்டை விளக்கி அந்தக் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி நமக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில், ''இலங்கைத் தமிழர் விஷயத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு
மார்க்ஸ், லெனின் வழியில் இல்லை என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.


தேர்தல்களில் தொகுதி உடன்பாடு என்பது, தேர்தல் உத்தி சம்பந்தப்பட்ட விஷயம்.
எந்தக் கட்சியுடன் உடன்பாடு செய்து கொள்கிறோமோ, அந்தக் கட்சித் தலைவரின்
வழி நடப்பதாகப் பொருள் கொள்வது அரசியல் தெரியாதவர்களின் நிலையாக
இருக்கலாம். அரசியல் புரிந்த ஒரு பத்திரிகையின் கருத்தாக வருவது
ஆச்சரியமளிக்கிறது.

இலங்கையின் இன்றைய சூழலில், அங்குள்ள
தமிழர்களுக்குத் தேவைப்படுவது, சமவாய்ப்பும் அந்தஸ்தும் உள்ள குடிமக்களாக
அவர்கள் நடத்தப்படுவதே ஆகும்.

அரசியல் தீர்வின் ஒரு பகுதியாக அதிகாரப் பரவல் உறுதிசெய்யப்பட வேண்டும்.

மறுகுடியமர்த்தப்பட்ட மக்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாட்டுக்கான ஏற்பாடுகள் துரிதமாகப் பூர்த்தியாக வேண்டும்.

தமிழர்கள் வாழும் பகுதிகளில் இருந்து இராணுவம் விலக்கிக்கொள்ளப்பட வேண்டும்.

உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் நடந்த கடுமையான மனித உரிமை
மீறல் மற்றும் போர்க் குற்றங்களுக்கான பொறுப்பாளிகள் அடையாளம் காணப்பட்டு
உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும்.

இதற்கு, நம்பகத்தன்மையுடன் கூடிய சுயேச்சையான உயர்மட்ட விசாரணை நடத்த இலங்கை அரசு முன்வர வேண்டும்.
இதற்கான சர்வதேச நிர்ப்பந்தத்தை இலங்கைக்கு உருவாக்க வேண்டும்.

இந்தியா தனது அரசியல், ராஜீய உறவைப் பயன்படுத்தியும், சர்வதேச மன்றங்களில்
இதை எழுப்பியும் கடுமையான நிர்ப்பந்தத்தை செலுத்த வேண்டும்.


இந்தப் பிரச்சினையின் இறுதித் தீர்வு தனி ஈழம் என்பது தமிழகத்தில்
செயல்படும் ஒரு சில கட்சிகளின், அமைப்புகளின் கருத்து. மார்க்சிஸ்ட்
கட்சியைப் பொறுத்தவரை, இன்றுள்ள உலகச் சூழலில் பிரிந்து போவது பொருத்தமான
தீர்வாகாது என்று கருதுகிறது.

எனினும், அடிப்படையில் எது தீர்வு
என்பதை அங்குள்ள யதார்த்தச் சூழலும், அங்குள்ள மக்களின் விருப்பமும்
அதற்கான அவர்களின் போராட்டமும்தான் நிர்ணயிக்கும். நமது விருப்பு
வெறுப்புகள் அதைத் தீர்மானிக்க முடியாது.

இலங்கை அரசு, இன
ஒடுக்குமுறையை மட்டுமல்ல, வர்க்க ஒடுக்குமுறையையும் கட்டவிழ்த்திருக்கிறது.
சமீபத்தில் அங்கு கண்டெடுக்கப்பட்ட குவியலான எலும்புக் கூடுகள் (Mass
Grave), 1988-89-ல் அரசை எதிர்த்துப் போராடியபோது படுகொலை செய்யப்பட்ட
ஜே.வி.பி.-யைச் சேர்ந்த சிங்கள இளைஞர்களில் ஒரு பகுதியினரின் எலும்புகள்
என்று தகவல் வருகிறது.

இப்போது நடக்கும் மாணவர் போராட்டத்தையும்
ராஜபக்ச அரசு ஒடுக்கி வருகிறது. மக்களின் அதிருப்தியைத் திசை திருப்ப...
இன, மத வெறியைத் தூண்டிவிட்டது.

எனவே, இத்தகைய சூழலில் இரு
பகுதிகளிலும் உள்ள உழைக்கும் மக்களும், ஜனநாயக, மதச்சார்பற்ற சக்திகளும்
ஒன்றுசேர்ந்து இந்த அரசின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்க
வேண்டும் என்பதே பொருத்தமான அணுகுமுறையாக அமையும்.

கடந்த
காலத்தில் விடுதலைப் புலிகளின் அணுகுமுறை இந்த வாய்ப்பை முற்றாக
அடைத்துவிட்டது. அதேபோல், இலங்கையில் உள்ள முஸ்லிம் தமிழர்கள் கடந்த
காலத்தில் புலிகளால் புறக்கணிக்கப்பட்டனர்.

முஸ்லிம் தமிழர்கள் 80
ஆயிரம் பேர் அவர்களின் வாழ்விடத்தில் இருந்து புலிகளால்
துரத்தியடிக்கப்பட்டனர். இப்போதாவது, கடந்த காலத்தைத் தள்ளிவைத்து,
ஒற்றுமைக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அனைத்துச்
சிங்கள மக்களையும் தமிழ் இன எதிர்ப்பாளர்கள் என இங்கிருந்து முத்திரை
குத்துவது இலங்கைத் தமிழர்களுக்கு எந்த விதத்திலும் உதவாது. அது உண்மையும்
அல்ல.

இப்படிச் சொல்பவர்களை உடனே, ராஜபக்ச ஆதரவாளர்கள் எனப் பகடி
பேசுவது, அங்கு பிரச்னை தீர்ந்துவிடாமல் இருந்தால்தான் இங்கு அரசியல் நடத்த
முடியும் என்று நினைப்பவர்களின் குறுகிய பார்வை.

குறிப்பிட்ட
வரலாற்றுச் சூழலில் அதாவது ஏகாதிபத்திய இங்கிலாந்தின் நுகத்தடியில் இருந்து
அயர்லாந்து பிரிந்துபோவது குறித்து மார்க்ஸ் சொன்னதையும், சோஷலிச தேசக்
கட்டமைப்பில் அனைத்து தேசிய இனங்களையும் ஒன்றுசேர்க்கும் சந்தர்ப்பத்தில்
சுயநிர்ணய உரிமை குறித்து லெனின் சொன்னதையும் அப்படியே நகல் எடுத்து
எல்லாக் காலத்துக்கும் எல்லாச் சூழல்களுக்கும் பொருத்த முடியாது.
மார்க்சியம் வறட்டுச் சூத்திரமல்ல. குறிப்பான நிலைமைகளில் குறிப்பாகப் பொருத்திப் பார்க்கப்படும் அறிவியல் பார்வை.

இன்றுள்ள ஏகாதிபத்தியம் கோலோச்சும் உலகச் சூழலில், அது வளரும் நாடுகளைத்
துண்டாடச் செய்யும் முயற்சிகளையும், தந்திரங்களையும் கணக்கில் எடுத்ததாக
நிலைபாடு அமைய வேண்டும் என்பதே எங்கள் கட்சியின் கருத்து என்று
குறிப்பிட்டுள்ளார்.
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» டெசோ மாநாட்டில் தனி தமிழீழம் தான் தீர்வு என்பது மட்டுமில்லை தமிழீழம் என்ற வார்த்தையை பயன்படுத்தாமல் அனைவரும் பம்மிக்கொண்டு ஈழம் என்று மட்டுமே குறித்து பேசிய பொழுது. வீரு கொண்ட வேங்கையாக தமிழீழமே தீர்வு என்று பேசிய ராம்விலாஸ் பாஸ்வானுக்கு சிரம் தாழ்ந்த வண
» தனித் தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு
» "தனித் தமிழீழம் அமைக்கப்பட வேண்டும்" வட்டுக்கோட்டை பிரகடனம் செய்யப்பட்ட நாள் இன்றாகும்- ICET
» தனித் தமிழ் ஈழம் குறித்த தன் கருத்துக்கு கருணாநிதி மீண்டும் விளக்கம்
» ஸ்டெர்லைட் ஆய்வு குறித்து வைகோ விளக்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum