TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:04 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தனித் தமிழ் ஈழம் குறித்த தன் கருத்துக்கு கருணாநிதி மீண்டும் விளக்கம்

Go down

தனித் தமிழ் ஈழம் குறித்த தன் கருத்துக்கு கருணாநிதி மீண்டும் விளக்கம் Empty தனித் தமிழ் ஈழம் குறித்த தன் கருத்துக்கு கருணாநிதி மீண்டும் விளக்கம்

Post by மாலதி Thu Apr 19, 2012 6:49 pm


தனித் தமிழ் ஈழம் குறித்த தன் கருத்துக்கு கருணாநிதி மீண்டும் விளக்கம் Karuna





சென்னை, ஏப்.19: தனித் தமிழ் ஈழம் குறித்த தன் கருத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி இன்று மீண்டும் விளக்கம் அளித்துள்ளார். தனித் தமிழ் ஈழம் நிச்சயம் ஒருநாள் மலர்ந்தே தீரும் என அவர் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக தொண்டர்களுக்கு எழுதிய கடிதமாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கைப்
பிரச்சினை தொடர்பாக செய்தியாளர்கள் என்னைச் சந்தித்து வினாக்கள்
தொடுத்தபோது; “இதுவரை உங்களுடைய நிறைவேறாத ஆசை என்ன என்ற கேள்விக்கு “தனி
ஈழம்” என்று பதிலளித்திருந்தீர்கள்; அந்தத் “தனி ஈழம்” தொடர்பாக பொது
வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை தற்போது எழுந்துள்ளதே?” என்ற
கேள்வி ஒன்றுக்கு “தனி ஈழம்” வழங்குவதற்கு தமிழர்கள் மத்தியில் பொது
வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று எழுந்துள்ள கோரிக்கை வரவேற்கத்தக்கதே;
ஐக்கிய நாடுகள் மன்றத்தின் தலையீட்டின் பேரில் இதைப்போல பொது வாக்கெடுப்பு
நடத்தப்பட்டு ஒருசில நாடுகள்தனி நாடுகள் என்ற அங்கீகாரத்தைப்
பெற்றிருக்கின்றன; அதன் அடிப்படையில் தமிழர்கள் மத்தியில் பொது
வாக்கெடுப்பு நடத்தி, அந்த வாக்கெடுப்பு முடிவின் அடிப்படையில் “தனி ஈழம்”
கிடைப்பதற்கு ஐக்கிய நாடுகள் மன்றம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்; அதற்கு
நமது இந்திய அரசு தேவையான அழுத்தம் தர வேண்டும்” என்று நான் பதிலளித்து,
அனைத்து ஏடுகளிலும் அது வெளிவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து பல தொலைபேசிகள் -
வைரமுத்து போன்றோர் - அதைப்பற்றிஎன்னிடம் பேசியதைத் தொடர்ந்து சற்று விரிவாக இதுபற்றி இந்த கடிதத்தை எழுதுகிறேன். இந்தக்
கேள்விக்கும் பதிலுக்கும் அடிப்படை யாக அமைந்தது கடந்த 12-4-2012 தேதிய
“விடுதலை” நாள் இதழில் முதல் பக்கத்தில் வந்த ஒரு செய்திதான்! அந்தச்
செய்திக்கு தலைப்பே “தமிழ் ஈழத்துக்கான வாக்கெடுப்பு”. அதில், “தமிழ் ஈழம்
வேண்டுமா வேண்டாமா என்பது குறித்த முடிவை தமிழர் விருப்பத்துக்கே விட்டு
விடுவது என்ற நிலையை ஐ.நா. சபை விரைவில் எடுக்கும் என்று தெரிகிறது.
இதுகுறித்த வாக்கெடுப்பு ஒன்றை இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு
மாகாணங்களில் நடத்துவது குறித்த ஆலோசனைகளை சில நாடுகள் ஐ.நா.வில்
தொடங்கியிருப்பதாகத் தெரிகிறது. இதன் மூலம் வட்டுக்கோட்டை தீர்மானம் என்ற
ஈழப் போராட்டத்தின் அடிப்படை சாசனத்தை சர்வதேசம் அங்கீகரிக்கும் சூழல்
உருவாகியுள்ளது. கொசோவோ, தெற்கு சூடான், கிழக்கு திமோர், மாண்டி நீக்ரோ
ஆகியவற்றை தனி நாடாகபிரகடனப்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையால் நடத்தப்பட்ட வாக்கெடுப்புகளே காரணமாக அமைந்தன.அதேபோல
இலங்கையிலும் வாக்கெடுப்பு நடத்துவது குறித்து சிலர் ஆலோசிக்கத்
துவங்கியுள்ளனர். அவ்வாறு வாக்கெடுப்பு நடந்தால் அதில் பங்கேற்று
வாக்களிக்க வெளிநாடுகளில் வாழும் ஈழத் தமிழர்களுக் கும் வாய்ப்பளிக்க
வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.”இந்தச் செய்தியினைத் தொடர்ந்துதான் நான் என்னுடைய பதிலை எழுதியிருந்தேன்.கிழக்கு
தைமூர் 16ஆம் நூற்றாண்டில் போர்ச்சுகல் நாட்டின் காலனி ஆதிக்கத்தின் கீழ்
இருந்தது. 1975ஆம் ஆண்டு கிழக்கு தைமூர் தனிச் சுதந்திரத்தைப் பிரகடனம்
செய்து கொண்டது.ஆனால் அதே ஆண்டு இந்தோனேசியாவால் படையெடுக்கப்பட்டு,
அந்த நாட்டின் 27வது மாகாணமாக இணைத்துக் கொள்ளப்பட்டது. 1999ஆம்
ஆண்டிலேதான் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் தலையீட்டின் பேரில் கிழக்கு
தைமூருக்கு சுய நிர்ணய உரிமை வழங்கப்பட்டது. 2002ஆம் ஆண்டு மே 20ஆம்
நாளன்று 21ஆம் நூற்றாண்டின் சுய நிர்ணய உரிமை பெற்ற முதல் நாடாக
சரித்திரத்திலே இது இடம் பெற்றது.கிழக்கு தைமூர் நாட்டைப்
போலவேதான், யூகோஸ்லோவியா நாட்டிலிருந்து மாண்டி நீக்ரோ எனும் தனி நாடு,
3-6-2006 அன்றும்; செர்பியாவிலிருந்து கொசோவோ எனும் தனி நாடு 17- 2-2008
அன்றும்; எகிப்து நாட்டிலிருந்து தெற்கு சூடான் எனும் தனி நாடு 2011ஆம்
ஆண்டிலும் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் தலையீட்டின் பேரில் பொது வாக்கெடுப்பு
நடைபெற்று உருவாக்கப்பட்டன.அதேபோன்ற ஒரு நடைமுறையைத்தான் தனித்
தமிழ் ஈழத்தைப் பொறுத்தவரை பின்பற்ற வேண்டுமென்று நாம் கோருகிறோம்.
அதற்குத் தான் இந்திய அரசின் ஒத்துழைப்பை நாடுகிறோம். இந்த வாக்கெடுப்பு
பற்றி, நான் இப்போதல்ல, 14-10-1987 அன்று சென்னையில் சைதாப் பேட்டையில்
நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசும்போதே, “ஒப்பந்தத்தில் ஒரு முக்கியமான
ஷரத்து-வட கிழக்கு பகுதிகள் இரண்டு மாகாணங்கள்-அவை இரண்டையும் ஒன்றாகச்
சேர்த்து ஈழத்தமிழ் மாநிலமாக தமிழர் தாயகமாக ஒரு மாநில அரசு அங்கே
உருவாகக்கூடிய அளவிற்கு அதிக அதிகாரங்களைக் கொண்ட சுயாட்சி உரிமையோடுகூடிய
ஒரு மாநில அரசு உருவாகக்கூடிய அளவிற்காவது இடைக் காலத்தில்-- குறிக்கோள்
தமிழ் ஈழம் என்றிருந்தாலும்கூட, ஒரு ஏற்பாடு ஒப்பந்தத்தில் வேண்டும் என்று
போராளிகள் கேட்டார்கள். நாமும் அதைத்தான் வலியுறுத்தினோம். ஆனால் வடக்கு,
கிழக்கு மாநிலங்கள் இப்பொழுது ஒன்றாக ஒரு நிர்வாகத்திலே வரும்
என்றாலுங்கூட, சில மாதங்களுக்குப் பிறகு “ரெபரெண்டம் (வாக்கெடுப்பு)”
வைக்கப்படும். பொதுமக்களுடைய வாக்கெடுப்பு நடைபெறும்.அதிலே கிழக்கு மாகாண மக்கள் வடக்கு மாகாணத் தோடு இணைந்திருக்க சம்மதித்தால் இரண்டும் ஒன்றாக தொடர்ந்திருக்கும்.இல்லையேல்
வடக்கு மாகாணம் தனி, தமிழர்களை அதிகமாகக் கொண்டிருக் கின்ற கிழக்கு
மாகாணம் தனி. இரண்டும் ஒரு மாகாணமாக இருக்கமுடியாது என்று ஒப்பந்தத்தில்
ஒரு ஷரத்து காணப்பட்டது.கேட்டபோது சொன்னார்கள். பொது வாக்கெடுப்பு
நடைபெற்றால் கூட, அது நியாயமாக நடைபெறும்; இந்திய அரசு இலங்கை அரசு என்ற
இரண்டு அரசுகளும் தலையிடாமலேயே அந்தப் பொது வாக்கெடுப்பு நடைபெறும்
என்றெல்லாம் சொன்னார்கள்” என்று விளக்கிப் பேசினேன். ஆனால் ஒப்பந்தம்
கையெழுத்தான அடுத்த வாரமே, இலங்கையிலே, கொழும்பிலேஜெயவர்த்தனா,
ராஜீவ் காந்திக்கு பக்கத்திலே அமர்ந்து ஒப்பந்தத்திலே கையெழுத்து போட்ட
ஜெயவர்த்தனா - கிழக்கு மாகாண மக்கள் விரும்பினால் இணைந்திருக்கலாம்;
இல்லாவிட்டால் தனித்திருக்கலாம் என்ற கருத்தமைந்த ஷரத்தை எழுதிக்
கையெழுத்துப் போட்ட அதே ஜெயவர்த்தனா - “அப்படி ஒரு பொதுத் தேர்தல்
வரும்போது, வாக்கெடுப்பு நடத்தும் போது, நான்கிழக்கு
மாகாணத்திற்குச் செல்வேன், கிழக்கு மாகாணம், வடக்கு மாகாணத்தோடு இணைகின்ற
அந்தக் கருத்திற்கு எதிராகப் பேசுவேன்” என்று சொன்னார்.எனவே ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டு விட்டு, அப்போதே அதற்கு மாறாக இலங்கை அதிபர் பேசினார்.27-8-1983 அன்று சென்னையில் நடைபெற்ற தி.மு. கழகப் பொதுக் குழுவில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலேயே,This
Council does not think that it would be possible for the Tamils in Sri
Lanka to live in peace with the Sinhalese under the same flag and
preserve their culture, individuality, language and way of life in the
wake of the recent perpetration of genocide. Therefore, this Council
feels that a separate Tamil EELAM, shall be the only remedy and
permanent solution to the problem and extends its whole-hearted support
for all such efforts that shall be aimed at creating a new Tamil EELAM”(நடைபெற்ற
இனநாசக் கோரக் கொலை களுக்கும் சொத்து சேதத்திற்கும் பிறகு இனியும்
தமிழர்களும், சிங்களவர்களும் ஒரே அரசமைப்பின் கீழ் தங்கள் உயிரையும்
உடைமையையும் தனிக் கலாச்சாரத்தையும், மொழியையும் வாழ்க்கை முறையையும்
காப்பாற்றிக்கொண்டு வாழ முடியும் என்று இந்தப் பொதுக் குழுவால் கருத
முடியவில்லை. எனவே விடுதலை பெற்ற தனித் தமிழ் ஈழம் தான் இதற்கு நிரந்தரப்
பரிகாரம் என்று இந்தப் பொதுக்குழு கருதுகிறது. அதற்கான முயற்சிக்கு தி.மு.கழகம் ஈழத் தமிழர்களுக்கு தன் மனப்பூர்வமான ஆதரவை நல்கும் என்றும் இந்தப் பொதுக்குழு தெரிவித்துக் கொள்கிறது)இந்தத்
தீர்மானத்தை விளக்கி 28-8-1983 அன்று சென்னை கடற்கரையில் நடைபெற்ற பொதுக்
கூட்டத்தில் நான் உரையாற்றும்போது, “இலங்கையில் இந்தியப் படை நுழைந்து ஈழத்
தமிழகத்தை உருவாக்கித் தருமானால், இங்கே காங்கிரஸ் கட்சியே ஆளட்டும்,
பத்தாண்டு காலத்திற்கு ஆட்சிக்கு வர தி.மு.க. முயற்சி எடுக்காது” என்று
நான் பேசினேன்.1976ஆம் ஆண்டு ஈழத்தில் வட்டுக்கோட்டை என்ற இடத்தில்
நடைபெற்ற மாநாட்டில் - ஈழத் தந்தை செல்வா “தமிழர் ஐக்கிய முன்னணி” என்பதை
“தமிழர் விடுதலை ஐக்கிய முன்னணி” எனத் திருத்தி அறிவித்ததோடு - ஈழத்
தமிழகம் - சுதந்திரம் பெற வேண்டுமென்ற பிரகடனத்தை வெளியிட்டார்.ஆனால் அதற்கு அடுத்த ஆண்டே அந்தப் பெருமகன் மறைந்து விட்டார்.தனித்
தமிழ் ஈழம் என்பது வரலாற்று ரீதியாக தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டிய
உரிமையாகும். ஏழாயிரம் ஆண்டு களுக்கு முன் இலங்கையும், தமிழ் நாடும் ஒரே
நிலப்பகுதியாக இருந்தன என்ற உண்மையினை பல ஆராய்ச்சியாளர்கள்
நிரூபித்துள்ளனர். இலங்கை, கடலால் பிரிக்கப்படுவதற்கு முன்பு வாழ்ந்த
மக்களின் வழித்தோன்றல்களே ஈழத் தமிழர்கள் ஆவர்.ஆதி இரும்புக் காலம்
என்று கூறப்படுகின்ற; மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் யாழ்ப்பாணம்
ஆனைக்கோட்டையில் தமிழ் மக்கள் சிற்றரசு அமைத்து வாழ்ந்ததற்கான ஆதாரம்
புதைபொருள் அகழ்வாராய்வின்போது கிடைத்துள்ளது. இக்கால கட்டத்தில் கந்தரோடை,
தமிழ்ச் சிற்றரசின் தலைநகராக இருந்துள்ளது என்று வரலாற்றாசிரியர்கள்
கருதுகிறார்கள்.இந்தப் பின்னணியிலேதான் - இலங்கை வரலாற்றில் கண்டியை
1815 வரை ஆண்ட தமிழ் மன்னர் கண்ணுச்சாமி என்கிற விக்ரமராஜ சிங்கன்
வெள்ளையருடன் நடந்த போரில் தோல்வியுற்று கைது செய்யப்பட்டு, தமிழ் நாட்டில்
வேலூரில் சிறைவைக்கப்பட்டிருந்தார். 16 ஆண்டுகள் சிறையில் இருந்த அந்த
மன்னர் வேலூரில் சிறையிலேயே மாண்டு போனார். அந்த மன்னரின் பெயரையும்
இலங்கைத் தமிழர்களின் பழம்பெரும் வரலாற்றையும் மறந்துவிடாமல் நினைவூட்ட கழக
அரசு காலத்தில் 1.7.1990 அன்று வேலூரில் அவர் அடக்கம் செய்யப்பட்ட
இடத்தில் “முத்து மண்டபம்” அமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டது.“தென்றிசையைப் பார்க்கின்றேன்; என் சொல்வேன் என்றன்சிந்தையெல்லாம் தோள்களெலாம் பூரிக்கு தடடா!அன்றந்த லங்கையினை ஆண்டமறத் தமிழன்ஐயிரண்டு திசைமுகத்தும் தன்புகழை வைத்தோன்”என்ற
பாவேந்தர் பாரதிதாசனின் எழுச்சிக் கவிதை வரிகளை எண்ணிப் பார்க்கும்
போதெல்லாம்; சரித்திரத்தின் தொடர்ச்சியாக, தனித் தமிழ் ஈழம் மலர்ந்திட
வேண்டும் என்ற தாகம் என்னுள் ஏற்படுவதை நான் ஏக்கத்தோடு உணருகிறேன்.“தனித்
தமிழ் ஈழம்” எனும் விடுதலை கீதம் தரணியெங்கும் வாழும் தமிழர்களின் செவி
களிலே இடையறாது ஒலித்துக் கொண்டிருக் கின்றது. இலங்கை மண்ணில் தமிழர்கள்
சிந்திய இரத்தமும், கொடுத்த உயிர்ப் பலிகளும், நிச்சயம் வீண் போகாது.
இன்றில்லாவிட்டால் நாளை - நாளை இல்லா விட்டால் நாளை மறுநாள் - தனித் தமிழ்
ஈழம் நிச்சயம் உருவாகும்! ஈழத் தமிழினத்தின் இணையற்ற அடையாளம் குன்றின்
மேலிட்ட விளக்காக குவலயத்திலே ஒளி வீசும்!இவ்வாறு கருணாநிதி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» தனித் தமிழ் ஈழம் அமைப்பதற்கான முன்முயற்சிகளை இந்தியா தொடங்க வேண்டும்: இராமதாஸ்
» "தமிழ் ஈழம் கண்ட பிறகு தான் உயிர் விடுவேன்': கருணாநிதி ஆவேசம்
» தேர்தல் ஆணையரை நியமிக்கக் குழு அத்வானி கருத்துக்கு கருணாநிதி ஆதரவு
» தமிழனின் தாகம் தாயகம் தமிழ் ஈழம்
» ரஜினி உடல்நிலை குறித்த உண்மை: சத்யநாராயணா விளக்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum