TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 1:54 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 1:15 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


புஜாரா ஜோர்! * இரட்டை சதம் விளாசினார் * இந்திய "சுழலில்' சிக்கியது இங்கிலாந்து

Go down

புஜாரா ஜோர்! * இரட்டை சதம் விளாசினார் * இந்திய "சுழலில்' சிக்கியது இங்கிலாந்து Empty புஜாரா ஜோர்! * இரட்டை சதம் விளாசினார் * இந்திய "சுழலில்' சிக்கியது இங்கிலாந்து

Post by மாலதி Sat Nov 17, 2012 8:21 am

புஜாரா ஜோர்! * இரட்டை சதம் விளாசினார் * இந்திய "சுழலில்' சிக்கியது இங்கிலாந்து Pujara-318_1



ஆமதாபாத்: ஆமதாபாத்
டெஸ்டில் புஜாரா இரட்டை சதம் அடிக்க, இந்திய அணி முதல் இன்னிங்சில் 521
ரன்கள் குவித்தது. பின் அஷ்வின், ஓஜாவின் "சுழலில்' சிக்கிய இங்கிலாந்து
அணி, விக்கெட்டுகளை விரைவாக இழந்து திணறியது.
இந்தியா,
இங்கிலாந்து அணிகள் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கின்றன.
ஆமதாபாத்தில் முதல் டெஸ்ட் நடக்கிறது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில்,
இந்திய அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 323 ரன்கள்
எடுத்திருந்தது.
யுவராஜ் அரைசதம்:
நேற்று
இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. தனது அபார ஆட்டத்தை தொடர்ந்த புஜாரா,
சுவான் பந்தில் பவுண்டரி அடித்து சதம் கடந்தார். இதே ஓவரில் யுவராஜ் சிங்
தன்பங்கிற்கு ஒரு சிக்சர், பவுண்டரி அடித்தார். பின் சமித் படேல் பந்தை
பவுண்டரிக்கு அனுப்பிய இவர், 11வது அரைசதம் கடந்தார். இதன் மூலம் டெஸ்ட்
போட்டியில் விளையாட தேவையான உடற்தகுதி தனக்கு உள்ளது என்பதை அழுத்தமாக
நிரூபித்தார். யுவராஜ்(74), படேல் "சுழலில்' சிக்கினார்.
தோனி ஏமாற்றம்:
அடுத்து
வந்த தோனியை(5), போல்டாக்கிய சுவான், தனது 5வது விக்கெட்டை பெற்றார்.
பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய புஜாரா, ஆண்டர்சன் பந்தை ஒரு ரன்னுக்கு
தட்டி விட்டு, டெஸ்ட் அரங்கில் தனது முதலாவது இரட்டை சதத்தை பதிவு
செய்தார். பின் வந்த அஷ்வின்(23) ஓரளவு கைகொடுத்தார். இந்திய அணி முதல்
இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 521 ரன்கள் எடுத்த நிலையில், "டிக்ளேர்'
செய்தது. புஜாரா(206) அவுட்டாகாமல் இருந்தார்.
இங்கிலாந்து அணியின் சுவான் 14வது முறையாக 5 விக்கெட் வீழ்த்தினார்.
அஷ்வின் அசத்தல்:
பின்
முதல் இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து அணி, இந்திய "சுழலில்' சிக்கி
தவித்தது. முதல் ஓவரையே அஷ்வின் வீசினார். இவரது வலையில் முதலில் அறிமுக
வீரர் காம்டன் (9) சிக்கினார். "நைட் வாட்ச்மேன்' ஆண்டர்சனை (2) ஓஜா
வெளியேற்றினார். தொடர்ந்து மிரட்டிய அஷ்வின் பந்தில் டிராட் "டக்'
அவுட்டானார். இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில், இங்கிலாந்து அணி முதல்
இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 41 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் குக்(22),
கெவின் பீட்டர்சன்(6) அவுட்டாகாமல் இருந்தனர்.
தற்போது 480 ரன்கள் பின்தங்கியுள்ள இங்கிலாந்து அணி, இந்திய அணியின் இரும்பு பிடியில் இருந்து தப்புவது மிகவும் கடினம்.
தொடரும் ரன்மழை
உள்ளூர் போட்டிகளில் அசத்திய புஜாரா, தற்போது டெஸ்ட் அரங்கி<லும் ரன் மழை பொழிகிறார்.
கடந்த
1988, ஜன., 25ல் புஜாரா, குஜராத்தின் ராஜ்கோட்டில் பிறந்தார். 2008ல் ஒரே
மாதத்தில் மூன்று "டிரிபிள் செஞ்சுரி' அடித்து சாதித்தார். 22
வயதுக்குட்பட்டோருக்கான தொடரில் சவுராஷ்டிரா அணிக்காக விளையாடிய இவர், 386,
322 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து ஒடிசா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை
போட்டியில் 302 ரன்கள் எடுத்தார்.
* 2010ல் ஆஸ்திரேலிய அணிக்கு
எதிரான பெங்களூரு டெஸ்டில் அறிமுகமான இவர், நான்காவது இன்னிங்சில் 72
ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார்.
* இந்த ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான ஐதராபாத் டெஸ்டில் 159 ரன்கள் எடுத்தார்.
* தற்போது இரட்டை சதம் அடித்து, தன் இன்னொரு "டிராவிட்' என்பதை நிரூபித்தார்.
19வது வீரர்
சர்வதேச
டெஸ்ட் அரங்கில் புஜாரா, தனது முதல் இரட்டை சதத்தை (206*) நேற்று பதிவு
செய்தார். இவர், டெஸ்ட் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த 19வது இந்திய வீரர்
என்ற பெருமை பெற்றார். இங்கிலாந்துக்கு எதிராக இரட்டை சதம் அடித்த 6வது
இந்திய வீரராகிறார்.
* இதற்கு முன், மன்சூர் அலி கான் பட்டோடி
(203, டில்லி-1963-64), கவாஸ்கர் (221, லண்டன்-1979), குண்டப்பா விஷ்வநாத்
(222, சென்னை-1981-82), வினோத் காம்ப்ளி (224, மும்பை-1992-93), டிராவிட்
(217, லண்டன்-2002) ஆகியோர் இங்கிலாந்துக்கு எதிராக இரட்டை சதம் அடித்தனர்.
* இந்திய மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக இரட்டை சதம் அடித்த நான்காவது வீரர் புஜாரா.
*
ஆமதாபாத் மைதானத்தில் டிராவிட் (222, நியூசி., 2003-04), சச்சினை (217,
நியூசி., 1999-2000) அடுத்து இரட்டை சதம் அடித்த மூன்றாவது வீரர் இவர்
தான்.
சாதிக்க தூண்டிய பயிற்சி போட்டி
இரட்டை
சதம் அடித்த புஜாரா கூறுகையில்,"" இங்கிலாந்து லெவன் அணிக்கு எதிரான
பயிற்சி போட்டியின் போது, மும்பை "ஏ' அணி சார்பில் 87 ரன்கள் எடுத்து
அவுட்டானேன். இது தான் இன்று சதம் மற்றும் இரட்டை சதம் அடிக்க தூண்டுகோலாக
இருந்தது. பயிற்சி ஆட்டத்தில் சுவான் தவிர, அனைத்து பவுலர்களையும்
சந்தித்தேன். இதனால், முதல் டெஸ்டில் சுவானின் சில ஓவர்களை நன்கு கவனித்து,
பின் அனைவரையும் எளிதாக சமாளித்து விளையாடினேன். இரட்டை சதம் அடித்ததற்கு
டிராவிட் வாழ்த்து தெரிவித்தார்,'' என்றார்.
"சூப்பர்' ஜோடி
இங்கிலாந்துக்கு
எதிரான ஆமதாபாத் டெஸ்டில், புஜாரா-யுவராஜ் சிங் இணைந்து ஐந்தாவது
விக்கெட்டுக்கு, அதிக ரன்கள் (130) சேர்த்த வரிசையில், மூன்றாவது சிறந்த
ஜோடி என்ற பெருமை பெற்றது . இதற்கு முன், இங்கு டிராவிட்-கங்குலி ஜோடி,
நியூசிலாந்துக்கு எதிராக (2003) 182 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளது.
இரண்டாவது முறை
ஆமதாபாத்
சர்தார் படேல் மைதானத்தில் இரண்டாவது முறையாக 500 ரன்களுக்கும் மேல்
குவித்து அசத்தியது இந்திய அணி (521/8). இதற்கு முன் நியூசிலாந்துக்கு
எதிரான 1999 டெஸ்டில் 583/7 ரன்கள் எடுத்துள்ளது.
* இலங்கை அணி 2009ல், இங்கு 760/7 ரன்கள் (எதிர்-இந்தியா) குவித்து முதலிடத்தில் உள்ளது.
அஷ்வின் "50'
நேற்று
இங்கிலாந்தின் காம்ப்டனை "போல்டு' செய்த தமிழக வீரர் சுழற்பந்து
வீச்சாளர், இந்திய கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகத்தில் 50 விக்கெட்
வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமை பெற்றார். 9 வது டெஸ்டில் பங்கேற்றுள்ள
இவர், இதுவரை 51 விக்கெட் கைப்பற்றியுள்ளார்.
ஓய்வு பெற்ற சுழல் "ஜாம்பவான்' கும்ளே, 10 வது டெஸ்டில் தான் 50 விக்கெட்டை வீழ்த்தி இருந்தார்.
யுவராஜ் "1000'
யுவராஜ்
சிங் நேற்று 73 ரன்கள் எடுத்த போது, இந்திய மண்ணில் டெஸ்ட் அரங்கில் 1000
ரன்களை கடந்தார். இந்தியாவில் 17 டெஸ்டில் பங்கேற்ற இவர் ஒரு சதம், 7
அரைசதம் உட்பட 1001 ரன்கள் எடுத்துள்ளார்.
* இங்கிலாந்துக்கு எதிராக 11வது டெஸ்டில் விளையாடும் யுவராஜ் சிங், நான்காவது அரைசதத்தை பதிவு செய்தார்.
சிறந்த பவுலிங்
இங்கிலாந்து
சுழற்பந்து வீச்சாளர் சுவான், நேற்று இந்தியாவுக்கு எதிராக தனது இரண்டாவது
சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தார்.(144/5). இதற்கு முன் 2011, ஓவல்
டெஸ்டில் இந்தியாவுக்கு எதிராக 106 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்
வீழ்த்தியுள்ளார்.
* இதுவரை 197 விக்கெட் (47 டெஸ்ட்)
கைப்பற்றிய இவர், 14 முறை ஐந்து அல்லது அதற்கு மேல் விக்கெட் வீழ்த்தினார்.
இந்த ஆண்டு மட்டும் 11வது முறையாக, இப்படி அசத்தினார்.
* அன்னிய
மண்ணில் அதிக முறை 5 அல்லது அதற்கு மேல் விக்கெட் வீழ்த்திய சிட்னி
பார்னஸ் (15), இயான் போத்தம் (10), வரிசையில் சுவானும் (10) இணைந்தார்.
*
ஆமதாபாத்தில் 51 ஓவர்கள் பவுலிங் செய்த சுவான், ஒரு இன்னிங்சில் 50 அல்லது
அதற்கு மேல் ஓவர்கள் வீசுவது மூன்றாவது முறை. இதற்கு முன் வெஸ்ட் இண்டீஸ்,
தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக அதிக ஓவர்கள் பவுலிங் செய்தார்.
*
இந்தியாவில் ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் விட்டுக் கொடுத்த இங்கிலாந்தின்
ஜான் எம்புரேயின் (144/2) சாதனையை சுவான் நேற்று (144/5) சமன் செய்தார்.
டிராவிட்டுடன் ஒப்பிடலாமா
புஜாராவை
அனைவரும் டிராவிட்டுடன் ஒப்பிட்டு பேசுகின்றனர். இதுகுறித்து கபில் தேவ்
கூறுகையில்,""இப்போது தான் டெஸ்ட் போட்டிகளில் விளையாடத் துவங்கியுள்ளார்
புஜாரா. சிறப்பான திறமை வெளிப்படுத்துகிறார். அணியில் நிரந்தர இடம்
பிடித்து, தனக்கென ஒரு பெயர் எடுக்கட்டும். அதற்குள் அவரை டிராவிட்டுக்கு
மாற்று வீரர் என பேசி, நெருக்கடி ஏற்படுத்தக் கூடாது. டிராவிட்டாக
உருவெடுக்க, அவர் 15 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட வேண்டியிருந்தது,''
என்றார்.


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» புஜாரா, விஜய் ஜோர்: சதம் கடந்து அசத்தினர் : இந்தியா முன்னிலை : ஆஸி., பவுலர்கள் திணறல்
» புஜாரா சதம்: மீண்டது இந்தியா: சுழலில் பனேசர் அசத்தல்
» இரட்டை சதம் விளாசினார் சச்சின் : குவாலியர் போட்டியில் விஸ்வரூபம்
» இந்திய "சுழலில்' சிக்கியது நியூசி., * அஷ்வின், ஓஜா அபாரம்
» பீட்டர்சன் இரட்டை சதம்: இங்கிலாந்து அபாரம்! * 5 விக்கெட் வீழ்த்தினார் பிரவீண்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum