TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 27, 2024 8:13 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 23, 2024 4:07 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 21, 2024 2:55 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 12:02 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் 2 லட்சம் ஏழை மாணவர்களுக்கு இடம்

Go down

தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் 2 லட்சம் ஏழை மாணவர்களுக்கு இடம் Empty தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் 2 லட்சம் ஏழை மாணவர்களுக்கு இடம்

Post by ஜனனி Sat Apr 14, 2012 10:31 am


தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் 2 லட்சம் ஏழை மாணவர்களுக்கு இடம் 13stud





சென்னை, ஏப்.13: இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஏழை
மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டின் கீழ் தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் 2 லட்சம் பேர்
தனியார் பள்ளிகளில் சேர வாய்ப்புள்ளது.
இந்த ஒதுக்கீட்டின்கீழ் சேரும் அனைத்து மாணவர்களுக்கும் கல்விச் செலவை அரசே
ஏற்கும். தமிழகத்தில் இந்தச் சட்டத்தை அமல்படுத்தவும், ஏழை மாணவர்களுக்கான கல்விச்
செலவுக்காகவும் மாநில அரசுக்கு 13-வது நிதிக் குழு ரூ.141 கோடி ஒதுக்கியுள்ளதாக
பள்ளிக் கல்வித் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த மாணவர் சேர்க்கையை மே 1-ல் தொடங்க வேண்டும் என்று தனியார் பள்ளிகளுக்கு
உத்தரவிடப்பட்டுள்ளது.
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி எல்.கே.ஜி., யு.கே.ஜி., ஒன்றாம்
வகுப்பு, ஆறாம் வகுப்பு ஆகிய தொடக்க வகுப்புகளில் அருகமையில் உள்ள ஏழை மாணவர்கள்,
சமூக ரீதியாகப் பின்தங்கிய மாணவர்களுக்கு குறைந்தபட்சம் 25 சதவீத இடங்களை தனியார்
பள்ளிகள் ஒதுக்க வேண்டும்.
இந்தச் சட்டத்தை எதிர்த்து தனியார் பள்ளிகள் உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றன.
அந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு
இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வியாழக்கிழமை தீர்ப்பளித்தது. இதையடுத்து,
தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் இந்தச் சட்டம் எவ்வாறு அமல்படுத்தப்பட உள்ளது
என்பது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறையின் மூத்த அதிகாரி கூறியதாவது:
இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்த தமிழக அரசு தயார் நிலையில்
உள்ளது. இந்தச் சட்டம் தொடர்பான விதிமுறைகள் கடந்த ஆண்டே வெளியிடப்பட்டன. பள்ளிக்
கல்வித் துறை சார்பில் விளக்கக் கையேடுகளும் வெளியிடப்பட்டுள்ளன.
சட்டம் குறித்து பள்ளிகள், பொதுமக்களுக்கு எழும் சந்தேகங்களைத் தீர்ப்பதற்காக
சிறப்பு தொலைபேசி மையமும் (044-2827 8742) ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சட்டம் தொடர்பாக 4 ஆயிரம் தனியார் பள்ளி முதல்வர்கள், மாவட்ட கல்வி
அதிகாரிகள், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள், கல்வித் துறை மூத்த அதிகாரிகள்,
ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள், தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கு பயிற்சிகள்
வழங்கப்பட்டுள்ளன.
கடும் நடவடிக்கை: தமிழகத்தில் இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதற்காக 13-வது
நிதிக் குழு ரூ.141 கோடியை வழங்கியுள்ளது.
எனவே, தனியார் பள்ளிகளில் சேரும் ஏழை மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை
சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு வழங்குவதில் எந்தவித சிரமும் இருக்காது. இந்த ஒதுக்
கீட்டின் மாணவர் சேர்க்கை மே மாதத்தில் தொடங்கும்.
ஏழை, பின்தங்கிய மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டை முறையாகப் பின்பற்றாத
பள்ளிகளின் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
"ரேண்டம்' முறை: இந்த ஒதுக்கீட்டின் கீழ் தனியார் பள்ளிகளில் அதிகமான
மாணவர்கள் விண்ணப்பித்தால், அந்த மாணவர்களைத் தேர்வு செய்ய "ரேண்டம்' முறையைப்
பின்பற்ற வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தச் சட்டத்தின் கீழ்
மாணவர்களைப் பள்ளியில் சேர்ப்பதற்கு அவர்களுக்கோ, அவர்களது பெற்றோருக்கோ நேர்முகத்
தேர்வு எதையும் நடத்தக் கூடாது. நேர்முகத் தேர்வு நடத்தினால் முதல்முறை ரூ.25
ஆயிரமும், அதற்குப் பிறகு ரூ.50 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும்.
தனியார் பள்ளிகளுக்கு
அரசு வழங்கும் கட்டணம் எவ்வளவு?
அரசுப் பள்ளிகளில் ஒரு மாணவருக்குச் செலவிடப்படும் தொகை அல்லது கட்டண நிர்ணயக்
குழுவால் அந்த தனியார் பள்ளிக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் இதில் எது குறைவோ, அந்தத்
தொகையை அந்தத் தனியார் பள்ளிக்கு மாநில அரசு வழங்கும். செப்டம்பர், மார்ச் ஆகிய
மாதங்களில் இரண்டு தவணைகளாக தனியார் பள்ளிகளுக்கு இந்தத் தொகை வழங்கப்படும்.
ஒவ்வோர் கல்வியாண்டிலும் தங்களது பள்ளிகளில், இந்த ஒதுக்கீட்டின் கீழ்
சேர்ந்த மாணவர்களின் பட்டியலை ஜூலைக்குள் உள்ளூர் கல்வி அதிகாரிகளிடம் பள்ளிகள்
சமர்ப்பிக்க வேண்டும். இந்த மாணவர் சேர்க்கைக்கு கட்டணத்தைப் பெறுவதற்காக தனியார்
பள்ளிகள் தனி வங்கி கணக்கைத் தொடங்க வேண்டும்.
கிராமப்புறங்களில் இடங்கள் நிரம்புமா?
தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் அறிமுக வகுப்புகளில் ஒவ்வோர் ஆண்டும்
சுமார் 8 லட்சம் மாணவர்கள் சேருகின்றனர். இதில் குறைந்தபட்சமாக 25 சதவீதம் பேர்
என்றாலும் கூட, சுமார் 2 லட்சம் ஏழை மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேரலாம்.
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவர்களுக்கு இலவசப் புத்தகங்கள், சிறப்பு
ஊக்கத் தொகை, இலவச லேப்-டாப், சீருடைகள், உபகரணப் பெட்டிகள், செருப்புகள் என
ஏராளமான திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
எனவே, கிராமப்புறங்களில் உள்ள தனியார் பள்ளிகளில் இந்த ஒதுக்கீட்டின் கீழ் ஏழை
மாணவர்கள் அதிகமானோர் சேருவார்கள் என எதிர்பார்க்க முடியாது. அங்கெல்லாம் 25 சதவீத
இடஒதுக்கீடு நிரம்பாத நிலையும் இருக்கும் என்று கல்வித் துறை அதிகாரிகள்
தெரிவித்தனர்.
மே இறுதிக்குள் இந்த இடஒதுக்கீட்டில் மாணவர்களைத் தேர்வு செய்து அந்தப்
பட்டியலை பள்ளிகளின் தகவல் பலகையில் ஒட்ட வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை
உத்தரவிட்டுள்ளது.

யாருக்கு இடஒதுக்கீடு?
பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கும் குறைவாக
இருந்தால் அவர்களது குழந்தைகள் இந்த இடஒதுக்கீட்டைப் பெறலாம்.தாழ்த்தப்பட்டோர்,
பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பெற்றோர் இல்லாத
குழந்தைகள், எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டோர், திருநங்கையர், துப்புரவுத்
தொழிலாளர்களின் குழந்தைகளும் இந்த இடஒதுக்கீட்டைப் பெறலாம்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் கிடுகிடு உயர்வு
» தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம்? புகார் அளித்தால் நடவடிக்கை: முதல்வர்
» பார்வையற்றவரின் மகள் 1168 மதிப்பெண் எடுத்து சாதனை: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 2-ம் இடம் பிடித்தார்
» தமிழகத்தில் சிபிஎஸ்இ பள்ளிகளில் தமிழ் கட்டாயம்:அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்த அரசு உத்தரவு
» தமிழகத்தில் பொதுத்தேர்வு மாணவர்களுக்கு ஜாக்பாட்: கடினமில்லா வினாத்தாள் தயாரிக்க உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum