TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Jun 26, 2024 9:47 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Jun 25, 2024 11:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jun 20, 2024 4:05 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Jun 07, 2024 6:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ஈழத்தில் ராஜீவ் நிகழ்த்திய போர்க் குற்றங்கள் (2) – புரட்சிப்பெரியார் முழக்கம்

Go down

ஈழத்தில் ராஜீவ் நிகழ்த்திய போர்க் குற்றங்கள் (2) – புரட்சிப்பெரியார் முழக்கம் Empty ஈழத்தில் ராஜீவ் நிகழ்த்திய போர்க் குற்றங்கள் (2) – புரட்சிப்பெரியார் முழக்கம்

Post by அருள் Sat Oct 15, 2011 3:56 pm

ராஜீவ் காந்தி ஈழத்துக்கு அனுப்பி வைத்த
இந்திய ராணுவம் 1987 ஆம் ஆண்டில் நிகழ்த்திய போர்க் குற்றங்கள், இனப்
படுகொலைகள் பற்றிய ஒரு தொகுப்பு 15.10.87 இன்று சிங்கள இராணுவத்தால் நடமாட
முடியாத இடங்களிலெல்லாம் ஆட்லரி செல் விழுந்து வெடித்தது. இந்தியப்
படையினர் கண்மூடித் தனமாகச் செல் அடித்ததனால் ஏராளமான பொது மக்கள்
கொல்லப்பட்டும் பலர் காயமடைந்தும் உள்ளனர்.
பாதிக்கப்பட்ட ஏராளமான மக்கள் வீதியோரங்களிலும், மர நிழலிலும்
தங்கியுள்ளனர். இவ்விடங்களில் ஏராளமான பெண்களை இந்தியப் படையினர் பாலியல்
வன்முறைக்கு உள்ளாக்கினர். இதில் 11 பெண்களது சடலங்கள் ஒரு அறையினுள்
காணப்பட்டன. உடைகள் இல்லாத நிலையில் பெண்களின் சில உறுப்புகள்
வெட்டப்பட்டும், மனிதப் பல் அடையாளங்கள் காணப்பட்ட நிலையிலும் இருந்தன.
(இதில் திருமணமான பெண்களும் அடங்குவர்) 40 பெண்களை இந்தியப் படையினர்
இராணுவ முகாமுக்கு கொண்டு சென்று பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட பின்னர்
கவச வாகனத்தால் அடையாளம் தெரியாதவாறு நெரித்துக் கொன்றனர்.

ஈழத்தில் ராஜீவ் நிகழ்த்திய போர்க் குற்றங்கள் (2) – புரட்சிப்பெரியார் முழக்கம் Rajiv_prema-300x187மட்டக்களப்பு
மாவட்டத்திலுள்ள சந்திவெளி என்னும் இடத்தில் வைத்து விடுதலைப் புலிகள்
மேற்கொண்ட கண்ணி வெடித் தாக்குதலில் 3 இந்தியப் படையினர் கொல்லப்பட்டனர். 5
பேர் காயமடைந்தனர். இவர்கள் வந்த டிரக் முற்றாகச் சேதமடைந்தது.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மயிலம்
வெளியில் தமிழர்களின் 300 வீடுகளை எரித்த இந்தியப் படையினர் அங்குள்ள
சர்வோதயத்தில் இருந்த 25 அப்பாவித் தமிழ்ப் பெண்களை பாலியல் வன்முறைக்கு
உள்ளாக்கினர். இதே இடத்தில் விடுதலைப் புலிகள் இவர்கள் மீது மேற்கொண்ட
கண்ணி வெடித் தாக்குதலில் 24 இந்தியப் படையினர் அந்த இடத்திலேயே
கொல்லப்பட்டனர். அவர்களின் டிரக் வண்டி முற்றாகச் சேதமுற்றது.

கிரான், வாழைச்சேனை, சந்திவெளி, முறக்
கொட்டாஞ் சேனை, வந்தாறு மூலை ஆகிய இடங்களில் இந்தியப் படையினர் ஏராளமான
இளம் பெண்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி யதுடன் அவர்களது உடைகளைக்
களைந்து வீதியில் நிர்வாணமாக நடக்க வைத்து, நிற்க வைத்து
அவமானப்படுத்தியுள்ளது.

கொக்கட்டிச் சோலை என்னும் இடத்தில் தேடுதல் நடத்திய இந்தியப் படையினர் இரு அப்பாவிப் பொது மக்களைக் கொன்றுள்ளனர்.

முறக்கொட்டாஞ்சேனை ரெயில் நிலைய அதிபர்
சுப்பிரமணியம், சந்திவெளி பேக்கரி உரிமையாளர் ராம் ஆகியோரது வீடுகள் உட்பட
ஏராளமான தமிழர்களது வீடுகளில் நகைகள், பணம் மற்றும் விலையுயர்ந்த
பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். பேக்கரி உரிமையாளர் வீட்டில்

28 ஆயிரம் ரூபாய் பணத்தையும், இரண்டு தங்க மாலைகளையும் எடுத்துள்ளனர்.

மாலை 2 மணியளவில் தெல்லிப்பழைக்கும்
மல்லாகத்துக்கும் இடையில் வைத்து இந்திய அமைதி காக்கும் படையினரின் செயின்
கவச வாகனத்தின் மீது விடுதலைப் புலிகள் மேற்கொண்ட கண்ணிவெடித் தாக்குதலில்
வண்டி பாவிக்க முடியாத அளவுக்குச் சிதறியது. அதன் சில பாகங்களை விடுதலைப்
புலிகள் எடுத்துச் சென்றனர்.

15 ஆம் தேதி மாலை 5.30 மணியளவில்
முறிகண்டியில் நடந்த கண்ணிவெடித் தாக்குதலில் 6 இந்தியப் படையினர்
கொல்லப்பட்டனர். சாவகச்சேரி புதுக்காட்டுச் சந்தியிலும் 6 இந்தியப்
படையினர் கொல்லப்பட்டனர்.

14, 15 ஆம் தேதிகளில் நாவற்குழி
முகாமிலிருந்து வெளியே வந்த இந்திய அமைதி காக்கும் படையினர் மீது விடுதலைப்
புலிகளால் 6 தடவையாக மேற் கொள்ளப்பட்ட “கிளைமர்” கண்ணிவெடித் தாக்கு
தல்களினால் இந்திய அமைதி காக்கும் படையினர் பலத்த இழப்புக்களுடன் முகாம்
திரும்பினர்.

15 ஆம் தேதி நடைபெற்ற மோதலின்போது ஜேம்ஸ், பீரிஸ் ஆகிய இரு விடுதலைப் புலிகள் இயக்க வீரர்கள் வீர மரணமடைந்தனர்.

16, 17.10.87

16, 17 ஆம் தேதிகளில் மட்டக் களப்பில்
இந்திய அமைதி காக்கும் படையினரால் 10 இளம் பெண்கள் பாலியல் வன்முறைக்கு
உள்ளாக்கினர். இவர்களில் 7 பேர் மரணமடைந்துள்ளனர். மீதி மூவரின் நிலை
கவலைக்கிடமாக உள்ளது. பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களின்
உடல்களில் ஏராளமான காயங்கள் காணப்பட்டன. மேலும் சில பெண்களைக் காணவில்லை.
இப்பகுதிகளில் இருந்த தமிழர்களின் 200 வீடுகளை இந்திய அமைதி காக்கும்
படையினர் தீ வைத்துக் கொளுத்தினர். இதைத் தொடர்ந்து விடுதலைப் புலிகள்
மேற்கொண்ட கடும் தாக்குதலில் இந்தியப் படையினருக்கு பெருத்த இழப்பு
ஏற்பட்டது.

17 ஆம் தேதி கல்லுண்டா வெளியில் நடைபெற்ற
மோதலில் 36 இந்தியப் படையினர் கொல்லப் பட்ட னர். ஒரு ஜீ.பி.எம்.ஜீ. உட்பட
பல ரைபிள்களையும், 10,000-க்கும் மேற்பட்ட ரவைகளையும் விடுதலைப் புலிகள்
கைப்பற்றினர். கோப்பாயில் நடந்த சண்டையில் ஒரு மோட்டாரும், ஆறு செல்களும்
விடுதலைப் புலிகளால் கைப்பற்றப் பட்டன. 16 ஆம் தேதி நடைபெற்ற மோதலின்போது
விடுதலைப் புலிகளின் தரப்பில் வல்வெட்டித் துறையைச் சேர்ந்த காப்டன் அசோக்
வீரமரணமடைந்தார்.

உரும்பிராய்ப் பகுதியில் இந்திய அமைதி
காக்கும் படையினரின் கண்மூடித்தனமான தாக்குதலில் அப்பகுதியைச் சேர்ந்த
வாழைத் தோட்டங்கள் மற்றும் பயிர்கள் எல்லாம் முற்றாக அழிந்துவிட்டன. செயின்
கவச வாகனங்களைத் தோட்டங்களுக் கூடாகச் செலுத்தி பயிர்களையெல்லாம் நாசம்
செய்த இந்திய அமைதி காக்கும் படையினர் 14 இளம் பெண்களைப் பிடித்துச்
சென்றனர். இந்திய அமைதி காக்கும் படையினரின் அராஜகத்தை எதிர்த்து வீரப்
போர் புரிந்து வரும் விடுதலைப் புலிகள் அவர்களிட மிருந்து பறித்தெடுத்த
ஆயுதங்களையும், ரவைகளை யும் வைத்தே தொடர்ந்து போராடுகிறார்கள்.

கிழக்கு மாகாணத்தில் கிரான்,
கொம்மாந்துறை, சம்பு வெளி, சித்தாண்டி ஆகிய இடங்களில் தமிழர்களின் மீது
தாக்குதல் நடத்தியதுடன், அப்பகுதிகளில் இருந்த 50-க்கும் மேற்பட்ட
தமிழர்களின் வீடுகளையும் எரித்தனர். அவர்களை எதிர்த்து விடுதலைப் புலிகள்
கடும் தாக்குதல் நடத்தினர். கண்ணுமுனை என்ற இடத்தில் விடுதலைப் புலிகள்
நடத்திய எதிர்த் தாக்குதலில் 24 இந்தியப் படையினர் கொல்லப்பட்டனர். ரவைகள்
நிரம்பிய 3 எல்.எம்.ஜீ. மகசீன்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டன.

17 ஆம் தேதி இரவு உரும்பராயில் 16 இளம் பெண்களை இந்திய அமைதி காக்கும் படையினர் பிடித்துச் சென்றனர்.

(தொடரும்)thanks:http://www.periyarthalam.com/2011/10/14/rajiv-gandhis-war-crime-in-eelam-2/
ஈழத்தில் ராஜீவ் நிகழ்த்திய போர்க் குற்றங்கள் (1) – புரட்சிப்பெரியார் முழக்கம்http://www.usetamil.com/t18537-1#28962
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum