TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jun 20, 2024 4:05 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Jun 17, 2024 11:51 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Jun 07, 2024 6:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


சிறிலங்காவின் போர்க் குற்றங்கள்: 11 நீதிபதிகள் கொண்ட சிறப்பு மக்கள் நீதிமன்றம்

Go down

சிறிலங்காவின் போர்க் குற்றங்கள்: 11 நீதிபதிகள் கொண்ட சிறப்பு மக்கள் நீதிமன்றம் Empty சிறிலங்காவின் போர்க் குற்றங்கள்: 11 நீதிபதிகள் கொண்ட சிறப்பு மக்கள் நீதிமன்றம்

Post by Tamil Mon Jan 11, 2010 10:36 pm

மகிந்த ராஜபக்ச தலைமையிலான சிறிலங்கா அரசாங்கம் மற்றும் அதன் ஆயுதப் படைகள் மீது பல போர்க் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ன.

அவை தொடர்பாக - அயர்லாந்து நாட்டின் தலைநகரான டப்ளினில் 11 நீதிபதிகளைக் கொண்ட சிறப்பு நீதிமன்றம் ஒன்று விசாரணை செய்யவுள்ளது.

விடுதலைப் புலிகளை அழிப்பதற்காக நடத்தப்பட்ட வன்னிப் போரின் போது
அப்பாவிப் பொது மக்கள் மீது மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்
குற்றங்களை இழைத்ததாக சிறிலங்கா அரசாங்கம் மற்றும் அதன் ஆயுதப்படைகள் மீது
குற்றச்சாட்டுகள் உள்ளன.

மனிதாபிமானத்துக்கு எதிரான இந்தக் குற்றங்கள் தொடர்பாக - மிகவும்
மதிப்பு மிக்கதும், மிலன் நகரினைத் தளமாக் கொண்டதுமான 'மக்களின் நிலையான
நீதிமன்றம்' [Milan based Permanent Peoples’ Tribunal - PPT] விசாரணைகளை
மேற்கொள்ளவுள்ளது.

எதிர்வரும் ஜனவரி 14 ஆம்,15 ஆம் திகதிகளில் அயர்லாந்து தலைநகர்
டப்ளின் நகரில் உள்ள ட்றினிற்றி கல்லூரியில் [Trinity College, Dublin,
Ireland] இந்த நீதிமன்றம், குறி்ப்பிட்ட இந்த வழக்குத் தொடர்பாகக்
கேட்டறியும்.

இதன் பின்னர் - மறுநாள் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள
பொதுக் கூட்டத்தில் தாம் கேட்டறிந்த விடயங்கள் தொடர்பாகத் தற்காலிகமான
கருத்தை நீதிமன்றம் வெளியிடும்.

இந்த நீதிமன்றத்தை - அயர்லாந்திலுள்ள டப்ளின் ரினிற்றி கல்லூரியின்
ஐரிஸ் பொருளாதாரப் பாடசாலை மற்றும் டப்ளின் சிற்றி பல்கலைக்கழகத்தின் சட்ட
மற்றும் அரசுத்துறைப் பாடசாலை [Irish School of Ecumenics, Trinity
College Dublin and the School of Law and Government, Dublin City
University, Dublin, Ireland] ஆகியவை இணைந்து உருவாக்கியுள்ளன.

சிறிலங்காவில் அமைதிக்கான ஐரிஸ் அமைப்பு [Irish Forum for Peace in Sri Lanka - IFPSL].

இந்த நிகழ்வுக்கான ஒழுங்குகளைச் செய்துள்ளது.

இந்த நீதிமன்றத்தில் -




  • சகிப்புத்தன்மை மற்றும் வன்முறைகளுக்கு எதிரான யுனெஸ்கோ விருது
    பெற்றவரும், பொருளாதார வீழ்ச்சி தொடர்பான ஐ.நா. ஆணைக் குழுவின்
    உறுப்பினரும், பெல்ஜியம் லுவெய்ன் பல்கலைக்கழகத்தின் [University of
    Louvain, Belgium] பேராசிரியருமான பிரான்சுவா ஹுராட் [Francois Houtart],






  • புதுடெல்கி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசரும், இந்தியாவில்
    முஸ்லிம்களின் சமூகப் பொருளாதாரக் கல்வி நிலை தொடர்பாக ஆராய இந்தியப்
    பிரதமர் மன்மோகன் சிங்-கினால் நியமிக்கப்பட்ட சச்சார் ஆணைக்குழுவின்
    தலைவருமான ராஜிந்தர் சச்சார் [Rajinder Sachar],






  • எகிப்திய எழுத்தாளரும், பயிற்சி பெற்ற மருத்துவரும், எகிப்தில்
    பெண்கள் உரிமைகள் தொடர்பாக குரல் கொடுப்பவரும், ஆபிரிக்காவிலும் மத்திய
    கிழக்கிலும் பெண்களுக்கான திட்டங்கள் தொடர்பான ஐ.நா.வின் ஆலோசகராக
    இருந்தவருமான நவல் அல் சடாவி [Nawal al Saadawi],






  • பௌத்த அமைதிப் பிரசாரங்களை மேற்கொள்பவரும், எழுத்தாளரும்,
    தாய்லாந்தில் சமூக மனிதாபிமான அமைப்புகளின் செயற்பாட்டாளரும்,
    மாற்று-நொபேல் பரிசு பெற்றவருமான [Alternative Nobel Prize - Right
    Livelihood Award] ளருமான சுலக் சிவரக்ஸா [Sulak Sivaraksa],






  • ஐ.நாவின் முன்னாள் உதவிச் செயலாளரும், ஈராக்கிற்கு எதிராக ஐ.நா.
    பாதுகாப்புச் சபை பொருளாதாரத் தடைகளை விதித்த போது அதற்கு எதிர்ப்புத்
    தெரிவித்து, தனது 34 ஆண்டு கால பணியில் இருந்து விலகியவரும், காந்தி
    சர்வதேச அமைதி விருதை [Laureate of the Gandhi International Peace Award]
    பெற்றவருமான டெனிஸ் ஹலிடே [Denis Halliday],






  • மிலன் நிலையான மக்கள் நீதிமன்றத்தின் செயலாளர் நாயகம் கியானி ரொக்னோனி [Gianni Tognoni],






  • இனப் படுகொலைகள் பற்றிய கல்வி நிலையத்தின் [Centre for Genocide
    Studies at the Universidad Nacional de Tres de Febrero] பணிப்பாளரும்,
    ஆர்ஜென்ரீனாவின் புவனஸ்அயர்ஸ் பல்கலைக்கழகத்தின் இனப்படுகொலைகள் பீடத்தின்
    [Faculty of Genocide at the University of Buenos Aires]
    விரிவுரையாளருமான டானியல் பியேஸ்ரன் [Daniel Feierstein],






  • டப்ளினில் உள்ள மனித உரிமைகளைக் காப்போரின் பாதுகாப்புக்கான அமைப்பின்
    [Director, Front Line – The International Foundation for the Protection
    of Human Rights Defenders] முன்னிலைப் பணிப்பாளரான மேரி லோலர் [Mary Lawlor],






  • அனைத்துலகச் சட்டங்கள் தொடர்பான நிபுணரும், பிலிப்பைன்சில்
    மேற்கொள்ப்பட்ட சட்டத்துக்குப் புறம்பான படுகொலைகள் மற்றும் மனித உரிமை
    மீறல்கள் பற்றிய மக்கள் நீதிமன்றத்தின் [People’s Tribunal on
    extra-judicial killings and violations of human rights in the
    Philippines] உறுப்பினருமான ஒய்ஸ்ரென் ரிவெற்றர் [Oystein Tveter],






  • குர்திஸ் சட்டத்தரணியும், துருக்கியின் மனித உரிமைச்
    செயற்பாட்டாளரும், இஸ்தான்புல் மனித உரிமைகள் அமைப்பின் [Human Rights
    Association, Istanbul.] உதவித் தலைவருமான எரென் கெஸ்கின் [Eren Keskin],







  • இத்தாலியின் முன்னாள் செனெட் உறுப்பினரும் அரசு சார்பற்ற அமைப்புகளின் முன்னணிச் செயற்பாட்டாளருமான பிரான்சிஸ்கோ மார்ரோன் [Francesco Martone]

ஆகியோர் இந்த நீதிமன்றத்தில் நீதிபதிகளாக பொறுப்பு வகிக்கின்றனர்.

இந்த
மக்கள் நீதிமன்றம் சிறிலங்கா அரசு மற்றும் அதன் படைகளுக்கு எதிரான
அனைத்துப் போர்க் குற்ற மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள்
குறித்தும் விசாரணைகள் நடத்தும்.

2002 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்த போர் நிறுத்த உடன்பாடு முறிவடைந்த
பின்னர் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து இந்தக் குழு பரிசீலனை
செய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசியாவைச் சேர்ந்த பல
மனித உரிமை அமைப்புகள், ஐரோப்பிய ஒன்றியம், ஐ.நா. சபை ஆகியனவும் - மனித
நேயத்துக்கு எதிரான போர்க் குற்ற மற்றும் அமைதிக்கு எதிரான குற்றங்கள்
தொடர்பிலான அறிக்கைளைச் சமர்பிக்கத் திட்டமிட்டுள்ளன.

அதே வேளை, லண்டனில் உள்ள சிறிலங்காவின் தூதுவர் நிகால்
ஜெயசிங்கவுக்கும் இந்த நீதிமன்றத்தின் அமைப்பாளர்களால் அழைப்பு
அனுப்பட்டுள்ளது.

ஆனால் - அவரிடம் இருந்து எந்தப் பதிலும் இன்னும் வரவில்லை.

எனினும் - சிறிலங்கா அரசின் சார்பில் சட்டவாளர் ஒருவர் நேரடியாகச் சமூகமளித்து இந்த விசாரணையை அவதானிக்கவுள்ளார்.

போர்க் குற்றங்கள் தொடர்பான தனிப்பட்ட மற்றும் குழுச் சாட்சியங்கள் முதலில் கவனத்தில் எடுக்கப்படும்.

ஐ.நா.வின்
உட்சுற்று ஆவணங்களின் படி - 2009 ஏப்ரலில், வான் மற்றும் தரை வழி கனரக
ஆயுதத் தாக்குதல்களின் போது அண்ணளவாக 116 பொது மக்கள் பலியானதாகக்
கூறப்பட்டுள்ளது.

போரின் கடைசி வாரங்களில் சிறியதொரு பகுதிக்குள் முடங்கிப் போயிருந்த
நூறாயிரக்கணக்கான பொது மக்கள் மீது சிறிலங்காப் படைகள் மேற்கொண்ட
பீரங்கித் தாக்குதல்களின் போது 20 ஆயிரத்துக்கும் அதிகமான பொது மக்கள்
கொல்லப்பட்டதாக பிரெஞ்சு மற்றும் பிரித்தானிய ஊடகங்கள் கூறியிருந்தன.

2008 டிசம்பர் 8ஆம் நாளுக்கும் - 2009 மே 2 ஆம் நாளுக்கும் இடையில் 30
தடவைகள் மருத்துவமனைகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக மனித உரிமைகள்
காப்பகம் [Human Rights Watch] அறிக்கையிட்டிருந்தது.

அதே வேளை -
பிரெஞ்சு மருத்துவக் குழுவின் தகவல்களின் படி - 'வெள்ளை பொஸ்பரஸ்'
இரசாயணங்கள் மற்றும் கொத்துக் குண்டுகள் [cluster munitions and white
phosphorous] என்பன பொது மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டதாகவும்
கூறப்பட்டிருந்தது.


--
தோழமையுடன்......
Muthuraja.I
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum