TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:02 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது : சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Go down

தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது : சுப்ரீம் கோர்ட் உத்தரவு Empty தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது : சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Post by மாலதி Fri Dec 17, 2010 8:54 am

புதுடில்லி : தனியார் பள்ளிகள் கல்வி கட்டணம் நிர்ணயம் தொடர்பாக,
சென்னை ஐகோர்ட் டிவிஷன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவில் தலையிட சுப்ரீம்
கோர்ட் மறுத்து விட்டது. இந்த கல்வியாண்டில் ஜூனில் வசூலிக்கப்பட்ட
கட்டணத்தை விட, கூடுதல் கட்டணம் வசூலிக்கவும் கூடாது என்றும் தனியார்
பள்ளிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்ய, ஓய்வு பெற்ற
நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் கமிட்டியை தமிழக அரசு நியமித்தது.
கேள்விப் பட்டியலை இக்குழு தயாரித்து, 10 ஆயிரத்து 934 பள்ளிகளுக்கு
அனுப்பியது. இதில், 10 ஆயிரத்து 233 பள்ளிகள், படிவத்தை நிரப்பி அனுப்பின.
அதன்பின், ஒவ்வொரு பள்ளிக்கும் கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்து,
தனித்தனியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கான உத்தரவு, கடந்த மே மாதம்
பிறப்பிக்கப்பட்டது. கல்வி கட்டணம் நிர்ணயம் செய்ததில் அதிருப்தியடைந்த
6,400 பள்ளிகள், ஆட்சேபனை தெரிவித்து கமிட்டியிடம் மேல்முறையீடு செய்தன.
"தங்களுக்கு நிர்ணயம் செய்த கட்டணம் மிகக்குறைவானது, அதை மாற்றியமைக்க
வேண்டும்' என, கோரின. இதையடுத்து, பள்ளிகளை நேரில் ஆய்வு செய்து கட்டணத்தை
நிர்ணயிக்க கால அவகாசமாகும் என்பதால், இந்த கல்வியாண்டில் ஏற்கனவே கமிட்டி
நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என, நீதிபதி கமிட்டி அறிவிப்பு
வெளியிட்டது. இதை எதிர்த்து பள்ளிகளின் சங்கங்கள் சார்பில் ஐகோர்ட்டில்
மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை தலைமை நீதிபதி இக்பால்,
நீதிபதி சிவஞானம் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது.
பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு விவரம் வருமாறு:
கட்டணத்தை எதிர்த்து ஆட்சேபனை தெரிவித்துள்ள 6,400 பள்ளிகளும் கல்வியாண்டு
துவக்கத்தில் (ஜூன்) வசூலித்த கட்டணத்துக்கும் மேலாக வசூலிக்க
உரிமையில்லை. அதாவது, 2009-10ம் ஆண்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட
கட்டணத்துக்கும் மேலாக வசூலிக்க உரிமையில்லை. வசூலிக்கப்பட்ட கட்டணமானது,
கமிட்டி நிர்ணயித்த கட்டணத்துக்கும் அதிகமாக இருந்தால், அந்த கூடுதல்
கட்டணத்தை அந்த பள்ளிகள் டிபாசிடாக கருதி வைத்திருக்க வேண்டும். கமிட்டி
எடுக்கும் இறுதி முடிவுக்கு அது கட்டுப்பட்டது. ஐகோர்ட் இடைக்கால
உத்தரவுக்குப் பின், 6,400 பள்ளிகளில் கூடுதலாக கட்டணம்
வசூலித்திருந்தால், அதையும் டிபாசிடாக வைத்திருந்து, கமிட்டி எடுக்கும்
இறுதி முடிவுக்கு கட்டுப்பட வேண்டும். கமிட்டி பிறப்பித்த உத்தரவை ஏற்றுக்
கொண்ட 4,534 பள்ளிகள், கமிட்டி அனுமதித்ததை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்க
உரிமையில்லை. மேலே குறிப்பிட்டதற்கும் அதிகமாக கட்டணத்தை, பெற்றோரிடம்
எந்த கல்வி நிறுவனமும் கேட்க கூடாது. குறிப்பிட்ட பள்ளிக்கு எதிராக
அதிகாரிகளுக்கு புகார் வந்தால், அந்தப் பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பிய பின்,
சட்டப்படி பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு ஐகோர்ட் டிவிஷன் பெஞ்ச்
உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சம்மேளனம்
சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில்
கூறப்பட்டதாவது: கட்டண நிர்ணயத்தை எதிர்த்து 6, 400 பள்ளிகளும்
ஆட்சேபனைகள் தெரிவித்துள்ளன. இவற்றை 30 நாட்களுக்குள் கமிட்டியானது
பரிசீலிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட சட்ட விதிகளைப் பரிசீலிக்காமல்
ஐகோர்ட் சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. எனவே, ஐகோர்ட்டின் உத்தரவை
ரத்து செய்ய வேண்டும். அதன் செயல்பாட்டிற்கு இடைக்கால தடை விதிக்க
வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சதாசிவம் மற்றும் சவுகான் ஆகியோர்
அடங்கிய சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு: தனியார் பள்ளிகள்
கட்டணம் நிர்ணயம் தொடர்பாக, சென்னை ஐகோர்ட்டின் டிவிஷன் பெஞ்ச் அக்டோபர்
5ம் தேதி பிறப்பித்த உத்தரவில் குறுக்கிட எந்த முகாந்திரமும் இல்லை.
அதனால், இந்த கல்வியாண்டின் துவக்கத்தில் அதாவது ஜூனில், வசூலிக்கப்பட்ட
கட்டணத்தை விட கூடுதல் கட்டணத்தை தனியார் பள்ளிகள் வசூலிக்க முடியாது.
கட்டண நிர்ணயத்தை எதிர்த்து பள்ளிகள் தாக்கல் செய்துள்ள அப்பீல் மனுக்களை,
கமிட்டியானது விரைவாக விசாரித்து தங்களது உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.
மேலும், இந்த வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள முக்கியமான ரிட்
மனுவை, விரைவாக விசாரித்து 2011 ஏப்ரல் 30ம் தேதிக்குள் சென்னை
ஐகோர்ட்டின் டிவிஷன் பெஞ்ச் தீர்ப்பு வழங்க வேண்டும். கட்டண நிர்ணயம்
தொடர்பாக நிபுணர் குழு ஒன்று ஆய்வு செய்து வருகிறது. அதனால், இது தொடர்பான
அனைத்து விவகாரங்களிலும் நாங்கள் தலையிட முடியாது. கட்டண நிர்ணய கமிட்டி
முன், மனுத்தாரர்கள் தங்களின் குறைகளை தெரிவிக்க வேண்டும். அதை கமிட்டி
பரிசீலித்து உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்கும். இவ்வாறு நீதிபதிகள்
உத்தரவில் குறிப்பிட்டனர்.
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» கூடுதல் கல்வி கட்டணம் வசூலிக்க கல்லூரிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்: உயர்நீதிமன்றம்
» ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்குகளை விசாரிக்க விசேஷ கோர்ட்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
» தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம்? புகார் அளித்தால் நடவடிக்கை: முதல்வர்
» மருந்து விலைக்கட்டுப்பாட்டு உத்தரவு – சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு!
» பெங்களூரு கோர்ட்டில் ஜெ., ஆஜராக வேண்டும்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum