TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:13 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:00 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


சனிப்பெயர்ச்சி பலன்கள்!

Go down

சனிப்பெயர்ச்சி பலன்கள்! Empty சனிப்பெயர்ச்சி பலன்கள்!

Post by Tamil Mon Dec 15, 2014 3:31 pm

[size=12]சனிப்பெயர்ச்சி பலன்கள்! Wrapper(1)[/size]
[size=12]சனிப்பெயர்ச்சி பொது பலன்கள்[/size]
ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்
நிகழும் ஜய வருடம் மார்கழி மாதம் 1ம் தேதி செவ்வாய்க்கிழமை (16.12.14), கிருஷ்ண பட்சம், தட்சிணாயன புண்ய காலம், ஹேமந்த ருது, ஆக்ரஹாயனம், தசமி திதி, அஸ்த நட்சத்திரம், சௌபாக்யம் நாமயோகம் பத்தரை நாமகரணம், நேத்தரம், ஜீவனம், சித்தயோகம் கூடிய சுபயோக சுப தினத்தில், பஞ்ச பட்சியில் காகத்தின் வல்லமை காலத்தில், மதியம் 2 மணி 16 நிமிடத்துக்கு திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி நிகழ்கிறது.
சனிபகவான் துலாம் ராசியை விட்டு விலகி விருச்சிக ராசிக்குள் நுழைகிறார். இங்கு 16.12.14 முதல் 17.12.2017 வரை அமர்ந்து, தனது கதிர்வீச்சுகளை உலகெங்கும் செலுத்துவார்.
சனிப்பெயர்ச்சி பலன்கள்! P122வியாபாரம் தழைக்கும்...
கடந்த இரண்டரை ஆண்டு காலமாக வியாபார வீடான துலாம் ராசியில் அதாவது தராசுத் தட்டில் அமர்ந்து வியாபாரத்தை முடக்கிய சனிபகவான், இப்போது பூமி காரகனாகிய செவ்வாயின் வீட்டில் நுழைகிறார். விருச்சிக ராசிக்குள் சனி அமர்வ தால் வியாபாரம் தழைக்கும்.
மக்களிடையே ஓரளவு பணப் புழக் கமும் அதிகரிக்கும். உலகெங்கும் நிலத்தின் விலை அதிகரிக்கும். பூமியின் பயன்பாடும் அதிகரிக்கும். விளை நிலங்கள் குடியிருப்புகளாக மாறும்.
மண் வளம் குறையும்!
சுனாமி  வெள்ளப் பெருக்கு போன்ற இயற்கை சீற்றங்களால் மண் வளம் குறையும். கட்டுமானப் பணிகளுக்கு மணலைப் பயன் படுத்தாமல் வேறு மாற்றுப் பொருளை பயன்படுத்தும் நிலை ஏற்படும். பழைமையான மூலிகைகள், மரம், செடி கொடிகள் அழிவைச் சந்திக்கும். வனங்களைப் பாதுகாக்க கடுமையான சட்டதிட்டங்கள் நடைமுறைக்கு வரும்.
ரசாயனப் பொருட்கள், உரங் களைப் பயன்படுத்தாமல் இயற்கை உரங்களைப் பயன்படுத்தி உருவா கும் தானியங்களுக்கு மதிப்பு அதிகரிக்கும்.
கூட்டுக்குடும்ப வாழ்வு...
சகோதர காரகனாகவும் செவ்வாய் வருவதால் கூட்டுக் குடும்பங்கள் பிரியும். சகோதரர்களுக்கு இடையே சண்டை சச்சரவுகள் அதிகமாகும். சொத்துப் பிரச்னைகளால் பாரம்பரிய குடும்பங்களில் மோதல்கள் மூளும். சொத்து வழக்குகள் அதிகரிக்கும்.
20 முதல் 45 வயதுக்கு இடைப்பட்டவர்கள் விபத்து மற்றும் விநோத நோய்களுக்கு ஆளாகும் நிலை ஏற்படும். உலகெங்கும் வன்முறைகளும் அதிகரிக்கும். பாலியல் தொடர்பான வழக்குகள் அதிகமாகும். ஒரு பக்கம் அதிக விளைச்சல் இருந் தாலும் மறுபக்கம் உணவுப் பொருள் தட்டுப்பாடும் நீடிக்கும். பருப்பு வகைகளின் விலை அதிகரிக்கும்.
புதிய மருந்துகள்!
அறிவியல் அறிஞர்கள், மருத்து வர்கள் பிரபலம் அடைவர். புதிய கண்டுபிடிப்புகள் நாளுக்கு நாள் அதிகரிக்கும். கேன்சருக்கு புதிய மருந்துகள் கண்டுபிடிக்கப்படும். அதேபோன்று முடக்குவாதம், வெண் தழும்புகள், தோல் நோய்கள் ஆகியவற்றை தடுக்கவும், குணப்படுத்தவும்  புதிய மருந்துகள் கண்டுப்பிடிக்கப்படும்.
மனித குலத்தை சீரழிக்கும் வைரஸ்கள் நிறைந்த ஏவுகணைகள், வெடிமருந்துகள், ரசாயன குண்டுகள் தயாரிப்பதில் சில நாடுகள் தீவிரமாக இறங்கும். எல்லைப் பகுதியில் அறிவிக்கப்படாத யுத்தம் நடந்து கொண்டிருக்கும்.  எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்களின் விலை உயரும்.
பாதுகாப்பு துறை மேம்படுமா?
காவல், ராணுவ துறையினருக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். இந்த துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கடத்தப்படவும் பாதிக்கப்படவும் வாய்ப்புகள் உள்ளன. இந்திய ராணுவத்துக்காக கூடுதல் நிதி ஒதுக்கப்படும். புதிய தளவாடங்கள், ஏவுகணைகளை இந்தியா வாங்கும். சீனாவுடன் சுமுகமான நட்புறவு உண்டாகும்.
மக்களிடையே சேமிப்புகள் குறையும். சிற்றின்பத்துக்கு பலர் அடிமையாவார்கள். பகை வீட்டில் சனி அமர்வதால், மக்களிடையே மனஅமைதி குறையும். மன இறுக்கம், அழுத்தத்தினால் தற்கொலைகள் அதிகமாகும்.
சாஃப்ட்வேர் துறை என்ன ஆகும்?
வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கும். சாஃப்ட்வேர், சினிமா துறைகளில் வேலைத் தட்டுப்பாடு அதிகமாகும். பேங்கிங், இன்ஷூரன்ஸ் துறைகள் வளர்ச்சி அடையும். அரசாங்க பங்குகளின் ஒருபகுதி தனியார்வசப்படும். ஐரோப்பிய நாடுகள் மற்றும் கனடா, அமெரிக்க நாடுகளில் தீவிரவாத தாக்குதலின் அச்சம் அதிகமாகும். இந்தியாவில் தீவிரவாதிகள் கடுமை யாக ஒடுக்கப்படுவார்கள். என்றாலும் ஆங்காங்கே அசம்பாவிதங்கள் தொடரும்.
பாரம்பரிய சின்னங்களை பாது காக்க புதிய சட்டங்கள் வரும். அதேபோல விலைநிலங்கள், நீர் நிலைகளைப் பாதுகாக்கவும் சட்டங்கள் வரும். நதிகள் இணைப்பு, சுத்தப்படுத்துவதற்கான திட்டங்களும் அமலுக்கு வரும்.நாடெங்கும் புதிய பாதைகளும் அமைக்கப்படும். துறைமுகங்கள் விரிவுப்படுத்தப்படும்.
வயதானவர்கள் வளம் பெறுவர்!
வயதானவர்களின் எண்ணிக்கை கூடும். வயதானவர்களுக்கு ஆரோக்கியமும் அதிகரிக்கும். பல துறைகளில், நடுத்தர வயதைத் தாண்டியவர்களின் ஆதிக்கம் அதிகரிக்கும்.
சனி பகவான் ரிஷபத்தைப் பார்ப்பதால் ஆடு மாடுகளை விநோத நோய் தாக்கும். நாட்டு மாடுகளின் எண்ணிக்கை குறைந்து, கலப்பின மாடுகள், ஆடுகள், கோழி களின் எண்ணிக்கை அதிகமாகும். மரபணு மாற்றப்பட்ட காய், கனிகள் சந்தையில் திணிக்கப்படும். பாரம்பரியமான உணவுகளை மக்கள் விரும்பி உண்பார்கள். உணவே மருந்து என்பதையும் மக்கள் உணரக் கூடிய அமைப்பு உண்டாகும். சிவாலயங்கள் பாதிப்படையும்.
சனிப்பெயர்ச்சி பலன்கள்! P122bரிஷபமும் சிம்மமும்!
ரிஷப ராசிக்காரர்களுக்கு உடல்நிலை பாதிக்கும். சின்ன சின்ன அறுவை சிகிக்சைகளும் வந்துபோகும். சிம்ம ராசியையும் சனிபகவான் பார்ப்பதால் உலகெங்கும் ஆளுபவர்களுக்கு அருகிலுள்ளவர்களின் ஆதிக்கம் அதிகரிக்கும். இரண்டாம் கட்ட அதிகார வர்க்கங்களின் கை ஓங்கும். இதய நோயாளிகள் அதிகரிப்பார்கள். ரத்த அழுத்தம், ரத்தக் கொதிப்பு ஆகியவற்றால் பாதிக்கப்படுபவர்களும் அதிகம் ஆவார்கள். மக்கள் நிம்மதியைத் தேடி அலைவார்கள்.
சனி தன் வீடான மகரத்தை பார்ப்பதால் புதிய தொழிற்சாலைகள் உருவாகும். பழைய தொழிற்சாலைகள் சீரழியும். புதிய பணக்காரர்கள் உருவாவர். உலகெங்கும் அரசியலில் மாற்றம் உண்டாகும். பல வருடங்களாக ஆட்சிப் புரிந்த கட்சிகள் வலுவிழந்து புதிய கட்சிகள் வலுவடைந்து ஆட்சி அமைக்கும். சனிபகவான் விருச்சிக ராசியில் அமர்வதால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். தொழிலாளர்களின் உரிமைகள் படிப்படியாக பறிக்கப்படும்.
பெண்ணாதிக்க வீட்டில் சனியின் பார்வை...
சனி பகவான் 7ம் பார்வையால் பெண்ணாதிக்க வீடான ரிஷபத்தைப் பார்ப்பதால், பெண்கள் மறைமுகமாக ஒடுக்கப் படுவார்கள். பெண்களின் உரிமைகள் மறுக்கப்படும். எனினும், பெண்களும் மாறுபட்ட வகையில் யோசிப்பார்கள். வியாபாரம் மற்றும் பெரிய பொறுப்புகளில் இருக்கும் பெண்கள் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.
முகத்தைப் பாதிக்கும் நோய்கள் உலகெங்கும் பரவும். முக சீரமைப்பு, பல் சீரமைப்புக்கு நவீன சிகிச்சை முறைகள் அறிமுகமாகும். மலைகள் அதிகமாக பாதிப்படையும். மலைச்சரிவு, மண் சரிவால் உயிரிழப்புகள் அதிகரிக்கும். குறுந்தொழில்கள் பாதிப்படையும். வியாபாரத்தில் அயல்நாட்டில் இருப்பவர்களின் முதலீடுகள் அதிகமாகும். அதனால் பாரம்பரியமாக இங்குத் தொழில் செய்பவர்கள் பாதிக்கப்படுவார்கள்.
ராணுவம், அணு உலை, விண்வெளி மற்றும் செயற்கைகோள் ரகசியங்களைக் கடத்தும் உளவாளிகள் கண்டறியப்படுவார்கள். நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்படும். பல பெரிய மனிதர்களின் அந்தரங்க வாழ்க்கை விஷயங்கள் வெளிச்சத்துக்கு வரும். மாணவர் கள், இளைஞர்கள் இடையே பாலுணர்வு பற்றிய விழிப்பு உணர்வு அதிகரிக்கும். திருநங்கைகளுக்கு முக்கியத்துவம் கிடைக்கும். அவர்கள் பெரிய பதவியில் அமர்வார்கள்.
சனிப்பெயர்ச்சியும் அரசியலும்!
விபச்சாரத்தைத் தடுக்க புதிய சட்டங்கள் வரும். போதை மருந்து தடுப்புச் சட்டங்களும் மிகக் கடுமை ஆகும். நதிகள், கடலில் கலக்கும் கழிவுகளைச் சுத்தப்படுத்தும் பணி தொடங்கப்படும்.
சனிப்பெயர்ச்சி பலன்கள்! P122aமத்திய அரசில் குழப்பங்கள் உருவாகும். மத்திய அரசில் பெரிய பொறுப்புகள் வகிப்பவர்களுக்கு உடல் நிலை பாதிப்படையும். முக்கிய பதவிகளில் இருப்பவர்கள் விபத்து களில் உயிரிழக்க நேரிடும்.
தமிழகத்தில் அரசியல் மாற்றங் கள் அதிகரிக்கும். மூன்று அணிகள் உருவாகும். தனிப் பெரும்பான்மை கிடைக்காமல் கூட்டணி ஆட்சி உருவாகவும் வாய்ப்பு உண்டு.
விளையாட்டுத் துறையில் இந்தியா சாதிக்கும். விளையாட்டுத் துறை நவீனப்படுத்தப்படும்.
ரத்தத்தை பாதிக்கும் நோய்கள் அதிகரிக்கும். ஹீமோகுளோபின், கால்சியம் சத்துக் குறைபாடால் பலருக்கும் புதிய நோய்கள் வரும். பொதுவாக மக்களிடையே தூக்கம் குறையும்.
பணப்புழக்கம் அதிகரிக்கும்!
ஆகமொத்தத்தில், இந்த சனிப் பெயர்ச்சி, கடந்த இரண்டரை ஆண்டுகளாக இருந்து வந்த பணப் பற்றாக்குறை மற்றும் பணமுடக்கம் ஆகியவற்றில் இருந்து உலகை விடுபடவைக்கும். உலகெங்கும் தாராளமயமாக்கலால் வியாபார அபிவிருத்தி, பணப்புழக்கம் அதிகரிப்பு, சாதிக்கும் எண்ணம், போட்டி மனப்பான்மை மற்றும் ஆரோக்கியத்தின் மீது அக்கறையை வளர்க்க வைப்பதாக அமையும்.


சில பரிகாரங்கள்...
பூமி காரகன் மற்றும் சகோதர காரகனாகிய செவ்வாய் வீட்டில் சனி பகவான் அமர்கிறார். எனவே, விளை நிலங்களை விற்பதைத் தவிருங்கள். உடன்பிறந்தவர்களுக்கு எதிராக வழக்குகள் தொடரவேண்டாம். ரத்தத்துக்கு அதிபதியான செவ்வாயின் வீட்டில் சனி அமர்வதால் விபத்தில் சிக்கியவர்களுக்கு, ரத்த தானம் செய்வது நல்லது. பாரம்பரிய சின்னங்களை பாதுகாக்க உங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுங்கள். செவ்வாய் அதிகாரப் பதவிகளுக்கு உரிய கிரகம். எனவே, அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் கொஞ்சம் மனிதாபிமானத்துடன் நடந்துகொள்வது நல்லது. பொதுவாக 'விருச்சிக சனி’ மக்களிடையே பரபரப்பையும், அமைதியின்மையையும் உருவாக்கும்.
இறை வழிபாடும், இனிய செயல்களும், உதவும் மனப்பான்மையும் உலகம் செழிக்க உதவிசெய்யும்.
சனிப்பெயர்ச்சி பலன்கள்! P123
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

சனிப்பெயர்ச்சி பலன்கள்! Empty மேஷ ராசி

Post by Tamil Mon Dec 15, 2014 3:32 pm

சனிப்பெயர்ச்சி பலன்கள்! Meshamஎதிலும் முதலிடத்தை விரும்பும் மேஷ ராசி நேயர்களே, 16.12.14 முதல் 17.12.17 வரை 8ம் வீட்டில் இருந்து செயல்படப் போகிறார் சனி பகவான். குடும்ப விஷயங்களில் மற்றவர்களை அனுமதிக்காதீர்கள்.
அதேநேரம், உங்களின் குறைகளை மற்றவர்கள் சுட்டிக்காட்டினால் ஏற்றுக்கொள்ளுங்கள். பேச்சில் கவனம் தேவை. இரவில், சொந்த வாகனங்களில் பயணிப்பதைத் தவிர்க்கவும். எவருக்காகவும் ஜாமின் கொடுக்க வேண்டாம். நெருங்கிய உறவினர், நண்பர்களிடமும் இடைவெளிவிட்டுப் பழகவும்.
சொத்துப் பிரச்னைக்காக கோர்ட், கேஸ் என்று நேரத்தை வீணடிக்க வேண்டாம். எவ்வளவு பணம் வந்தாலும் செலவுகளும் துரத்தும்.
உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை. சட்டத்துக்குப் புறம்பான வகையில் எவருக்கும் உதவ வேண்டாம்.  
சனி பகவான் சஞ்சார பலன்கள்:
16.12.14 முதல் 24.1.15 வரை; 30.4.15 முதல் 13.6.15 வரை; 6.9.15 முதல் 17.10.15 வரையிலும் உங்களின் பாக்கியாதிபதி குருவின் சாரத்தில், விசாகம் 4ம் பாதத்தில், 8ம் வீட்டில் சனி செல்கிறார். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரனும், மகனுக்கு நல்ல வேலையும் கிடைக்கும். எனினும் அஷ்டமத்து சனி என்பதால், அலைச்சல் அதிகமாகும். முன்கோபம் வேண்டாம். ஆபரணங் களை கவனமாகக் கையாளுங்கள்.
14.6.15 முதல் 5.9.15 வரை உங்கள் ராசிக்கு கண்டகச் சனியாக 7ம் வீடான துலாம் ராசி விசாகம் 3ம் பாதத்தில் சனி செல்கிறார். இந்த காலகட்டத்தில் மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு,
அடிவயிற்றில் வலி, ஃவைப்ராய்டு பிரச்னைகள் வந்து போகும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். 30.4.15 முதல் 1.8.15 வரை குருவின் விசாகத்தில் சனி வக்கிரத்துடன் செல்வதால், புது முதலீடுகள் வேண்டாம்.பங்குதாரர்களுடன் பிரச்னை வரலாம். சிலர் உங்களுக்கு உதவுவதாக சொல்லி உபத்திரவத்தில் சிக்கவைப்பார்கள்.
உங்கள் பாதகாதிபதியான சனி தனது சுய நட்சத்திரமான அனுஷத்தில் 25.1.15 முதல் 29.4.15 வரை; 18.10.15 முதல் 15.11.16 வரை செல்கிறார். இந்த காலகட்டத்தில் மனஉளைச்சல், திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும்.சிலர், உங்கள் மீது வீண் பழி சுமத்த முற்படுவர். கடன் பிரச்னை பயம் தரும்.
15.3.15 முதல் 29.4.15 வரை; 19.5.16 முதல் 12.8.16 வரை சனி அனுஷத்தில் வக்கிரம் ஆவதால், ஆரோக்கிய குறைவு ஏற்படும். பணவரவு உண்டு. வாகனம் வாங்குவீர்கள். மூத்த சகோதரரால் ஆதாயம் உண்டாகும்.      
16.11.16 முதல் 17.12.17 வரை உங்கள் திருதியாதிபதியும்சஷ்டமாதி பதியுமான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் சனி செல்கிறார். இளைய சகோதரருக்கு உடல் நிலை பாதிப்பு, அவருடன் கருத்துமோதல்கள் வரும். வழக்கு, கடன் அச்சம் தரும். 8.4.17 முதல் 5.8.17 வரை புதனின் கேட்டை நட்சத்திரத்திலேயே சனி வக்ரமாகி செல்வதால், பழைய சிக்கல்கள் தீரும். வீட்டை விரிவுபடுத்துவீர்கள். வங்கிக் கடன் கிடைக்கும்.
சனி ராசிக்கு 2ம் வீட்டைப் பார்ப்ப தால் சாமர்த்தியமாகப் பேசுவீர்கள். ஆனால், சிலநேரம் அதுவே பாதகமா கும். பணப்பற்றாக்குறை ஏற்படும். சனி பகவான் 5ம் வீட்டைப் பார்ப்பதால், சுற்றியுள்ளவர்கள் ஏமாற்றுவதாக நினைப்பீர்கள். பூர்வீகச் சொத்தை போராடிப் பெறுவீர்கள். சனி 10ம் வீட்டைப் பார்ப்பதால் வேற்று மொழிக் காரர்களால் திருப்பம் உண்டு.
வியாபாரத்தில் போட்டிகள், இழப்பு கள் உண்டு. புதியவரை நம்பி பெரிய  முதலீடுகள் செய்யவேண்டாம்.பங்கு தாரர்களில் சிலர், பங்குப் பணத்தைக் கேட்டு தொந்தரவு தருவார்கள். உணவு, கட்டட உதிரி பாகங்கள், பெட்ரோ கெமிக்கல் வகைகள் ஆதாயம் தரும்.
உத்தியோகத்தில் வேலைப்பளு, மன உளைச்சல் உண்டு. சிலர் உங்கள் மீது பொய் வழக்குப் போடுவார்கள். புது வாய்ப்புகளும், சலுகைகளும் சற்று தாமதமாகக் கிடைக்கும்.
கன்னிப் பெண்கள், புதிய நண்பர் களைத் தவிர்க்கவும். எதிலும் பெற்றோர் ஆலோசனையை ஏற்பது நல்லது. மாணவர்கள் விருப்பப்பட்ட கல்விப் பிரிவில் சேர, சிலரது சிபாரிசுகளை நாடவேண்டியது வரும்.
மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி, ஒருபுறம் மன உளைச்சலை தந்தாலும், மறுபுறம் வாழ்வின் நெளிவு சுளிவுகளைக் கற்றுத் தருவதாக அமையும்.
பரிகாரம்: பூச நட்சத்திர நாளில் அல்லது பிரதோஷ நாளில், குச்சனூர் சென்று ஸ்ரீசுயம்பு சனீஸ்வரருக்கு தீபம் ஏற்றி வணங்குங்கள். பார்வையற்றவர்களுக்கு உதவுங்கள்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

சனிப்பெயர்ச்சி பலன்கள்! Empty ரிஷப ராசி

Post by Tamil Mon Dec 15, 2014 3:32 pm

சனிப்பெயர்ச்சி பலன்கள்! Rishpaகடந்துவந்த பாதையை மறவாத ரிஷப ராசிக்காரர்களே, 16.12.14 முதல் 17.12.17 வரை உங்கள் ராசிக்கு 7வது வீட்டில் நுழைந்து பலன் தரப் போகிறார், சனிபகவான். '7வது வீடு எனில் கண்டகச் சனி ஆயிற்றே’ என்று பயம் வேண்டாம். அவர், உங்களுக்கு யோகாதிபதியாக வருவதால் நல்லதே செய்வார்.
எனினும், களத்திர ஸ்தானமான 7ல் சனி அமர்வதால், சிலருக்குத் திருமணம் தள்ளிப்போகும்.தம்பதிக்குள் பிரிவு ஏற்படக்கூடும்.  விட்டுக்கொடுத்துப் போகவும். மனைவி சுட்டிக்காட்டும் நல்ல விஷயங்களை ஏற்றுக்கொள்ளுங்கள். புதியவர்களை வீட்டுக்குள் அழைத்து வர வேண்டாம்.
முக்கிய விஷயங்களை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது. முக்கிய ஆவணங்களை கவனமாகக் கையாளுங்கள். வழக்கில் வழக்கறி ஞரை ஆலோசித்து  முடிவெடுங்கள்.அரசு வரிகள் செலுத்துவதில் தாமதம் வேண்டாம். தீய நட்பைத் தவிர்க்கவும். எவரிடமும் வரம்பு மீறி பேசவேண்டாம்.உத்தியோகம், வியாபாரத்தின் பொருட்டு குடும்பத்தைப் பிரிய நேரிடும்.
வீண் செலவுகளைத் தவிர்க்கவும். மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம்.
சனி பகவான் சஞ்சார பலன்கள்:
16.12.14 முதல் 24.1.15; 30.4.15 முதல் 13.6.15 வரை; 6.9.15 முதல் 17.10.15 வரை... உங்கள் அஷ்டம லாபாதிபதியான குருவின் சாரத்தில் விசாகம் 4ம் பாதம், 7ம் வீட்டில் சனி செல்வதால் மனைவிக்கு மருத்துவச் செலவுகள், அவர்வழி உறவினருடன் பிணக்குகள், சிறு விபத்துகள், மூச்சுத் திணறல், வேலைப்பளு வந்துபோகும்.
14.6.15 முதல் 5.9.15 வரை உங்கள் ராசிக்கு 6ம் வீடான துலாம் ராசி விசாகம் 3ம் பாதத்தில் சனி செல்வதால், எவரை நம்புவது என்று  குழப்பம் ஏற்படும். ஒரு சொத்தை விற்று மறுசொத்தை காப்பாற்றுவீர்கள். காசோலை தரும்போது, வங்கி கையிருப்பை சரிபார்ப்பது நல்லது.
30.04.15 முதல் 01.08.15 வரை குருவின் விசாகம் நட்சத்திரத்திலேயே சனி வக்கரித்து செல்வதால், எதிர்ப்பு கள் அடங்கும். பணவரவு உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். புது வேலைக்கான முயற்சி பலன் தரும்.
உங்கள் பாதகாதிபதியான சனி, சுய நட்சத்திரமான அனுஷத்தில் 25.1.15 முதல் 29.4.15 வரை; 18.10.15 முதல் 15.11.16 வரை செல்வதால், புதிய முயற்சிகள் பலிதமாகும். கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாகும். புறநகரில் வீடு, மனை வாங்குவீர்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். 15.3.15 முதல் 29.4.15 வரை; 19.5.16 முதல் 12.8.16 வரை... சனி அனுஷத்திலேயே வக்ரம் ஆவதால், அக்கம் பக்கத்தாருடன் அனுசரித்து செல்லவும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள்.
16.11.16 முதல் 17.12.17 வரை உங்கள் தனபூர்வ புண்யாதிபதியான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் சனி செல்வதால், பேச்சால் சாதிப்பீர்கள்.எதிர்பார்த்த தொகை வரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளால் செல்வாக்கு உயரும். பூர்வீகச் சொத்தை
புதுப்பிப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. 8.4.17 முதல் 5.8.17 வரை புதனின் கேட்டையிலேயே சனி வக்ரமாகி செல்கிறார். பிள்ளைகளால் அலைச்சல், செலவுகள் உண்டு.பூர்வீகச் சொத்துக்கான வரியை செலுத்தி சரியாகப் பராமரியுங்கள். புது பதவிகள் தேடி வரும்.
சனி ராசியைப் பார்க்கிறார். வெளி உணவுகளைத் தவிர்க்கவும். மறதி, பித்த மயக்கம் வந்து நீங்கும். சனி 4ம் வீட்டைப் பார்ப்பதால், அபராதம் செலுத்தும் சூழல் ஏற்படலாம்; வாகன லைசென்ஸ் விஷயத்தில் கவனம் தேவை. தாயாரின் உடல் நிலை பாதிக்கும். சனி 9ம் வீட்டைப் பார்ப்ப தால் அதீத செலவுகள் இருக்கும்.
வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் உண்டு. கடனுதவியும் கிடைக்கும். புரோக்கரேஜ், கமிஷன், ஸ்டேஷனரி வகைகளால் லாபம் உண்டாகும். பங்குதாரர்களால் பிரச்னைகள் வரும்.
உத்தியோகத்தில், சிலர் உங்கள் ஐடியாக்களை தனதாக்கிக் கொள் வார்கள். ஒப்பந்தப் பத்திரங்களில் கையெழுத்திட வேண்டாம். கன்னிப் பெண்கள், உயர்கல்வியில் போராடி வெற்றி பெறுவார்கள். திருமணம் தாமதமாகி முடியும். மாணவர்கள், பாடங்களில் அதீத கவனம் செலுத்த வேண்டும்.
மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி, அலைச்சலையும் தாமதத்தையும் தந்தாலும், கடின உழைப்பால் உங்களை முன்னேறவைக்கும்.
பரிகாரம்: உங்கள் ஜென்ம நட்சத்திர நாளில் திருவிடைமருதூர் சென்று ஸ்ரீமகாலிங்கேஸ்வரருக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்து, நெய் தீபமேற்றி வணங்குங்கள். மனநலம் குன்றியவர்களுக்கு உதவுங்கள்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

சனிப்பெயர்ச்சி பலன்கள்! Empty மிதுன ராசி

Post by Tamil Mon Dec 15, 2014 3:32 pm

சனிப்பெயர்ச்சி பலன்கள்! Mithuna(1)சமாதானத்தை விரும்பும் மிதுன ராசிக்காரர்களே... 16.12.14 முதல் 17.12.17 வரை, 6ல் அமர்ந்து பல இன்ப அதிர்ச்சிகளை அள்ளித் தரவுள்ளார், சனிபகவான்.
சிந்தனை சிறப்புறும். முக மலர்ச் சியுடன் திகழ்வீர்கள். பிரிந்திருந்த தம்பதியினர் ஒன்றுசேர்வர்.அழகு, ஆரோக்கியம் கூடும்.மாறுபட்ட  அணுகுமுறைகளால் பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். நிம்மதியான தூக்கம் கிடைக்கும். இதுவரை ஏமாற்றி வந்த உறவுகளும், நட்பு வட்டாரமும் வலியவந்து மன்னிப்பு வேண்டுவர்.
பூர்வ புண்ய ஸ்தானமான 5ம் வீட்டைவிட்டு சனி விலகுவதால், குழந்தை பாக்கியம் ஸித்திக்கும்.பூர்வீகச் சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். அவர்களின் திறமைகளை வெளிக் கொண்டு வருவீர்கள். பழைய வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். மகளுக்கு அழகான மணமகன் அமைவார். மகனுக்கு நல்ல வேலை அமையும். அதிகவட்டிக் கடனை பைசல் செய்ய வழி வகை பிறக்கும்.  
சனி பகவான் சஞ்சார பலன்கள்:
16.12.14 முதல் 24.01.15 வரை; 30.4.15 முதல் 13.6.15 வரை; 6.9.15 முதல் 17.10.15 வரை... உங்களின் சப்தம ஜீவனாதிபதியான குருவின் சாரத்தில், விசாகம் 4ம் பாதம், 6ம் வீட்டில் சனி செல்வதால் திடீர் இழப்புகள், இனம்புரியாத பயம், பண விரயம், மனைவிக்கு முதுகு, மூட்டு வலி, சிறு அறுவை சிகிச்சைகள் வந்துபோகும்.
14.6.15 முதல் 5.9.15 வரை சனி உங்கள் ராசிக்கு 5ம் வீடான துலாம் ராசியில், விசாகம் 3ம் பாதத்தில் செல்வதால், முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் வரும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் தாமதமாகி முடியும். பூர்வீக சொத்துப் பிரச்னை தலைதூக்கும். கர்ப்பிணிகள் உணவில் கட்டுப்பாடைக் கடைப்பிடிக்குவும்.
30.4.15 முதல் 1.8.15 வரை குருவின் விசாகம் நட்சத்திரத்திலேயே சனி வக்கரித்துச் செல்வதால் வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தடைப்பட்ட காரியங்களெல்லாம் நிறைவேறும். உங்களின் அஷ்டமபாக்யாதிபதியான சனி, சுய நட்சத்திரமான அனுஷத்தில் 25.1.15 முதல் 29.4.15 வரை; 18.10.15 முதல் 15.11.16 வரை செல்வதால், வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். வீடு கட்ட, தொழில் தொடங்க வங்கிக் கடன் கிடைக்கும்.  
15.3.15 முதல் 29.04.15 வரை; 19.5.16 முதல் 12.08.16 வரை சனி அனுஷத்திலேயே வக்ரமாவதால், திட்டமிடாத பணிகளில் ஈடுபடாதீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. 16.11.16 முதல் 17.12.17 வரை உங்கள் ராசியாதிபதியும், சுகாதிபதியுமான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் சனி செல்வ தால் எதிர்ப்புகள் குறையும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புது வேலை அமையும். ஷேர் மூலம் பணம் வரும். வீடு, வாகனம் வாங்குவீர்கள். தாய்வழிச் சொத்துக்களைப் பெறுவதில் இருந்த தடைகள் நீங்கும்.    
8.4.17 முதல் 5.8.17 வரை புதனின் கேட்டை நட்சத்திரத்திலேயே சனி வக்ரமாகி செல்வதால் வேலைச் சுமை, உறவினர் பகை, சிறு விபத்துகள் வந்து நீங்கும். சொத்து வாங்கும்போது பட்டா, வில்லங்க சான்றிதழ்களை சரி பார்க்கவும்.  
சனி 3ம் வீட்டைப் பார்ப்பதால், தைரியம் கூடும். புதுப் பதவி தேடி வரும். எனினும் ஒருவித மன இறுக்கம் ஏற்படும். சனி 8ம் வீட்டைப் பார்ப்பதால் முக்கிய கோப்புகளில் கையெழுத்திடுமுன் சட்ட நிபுணர் களை ஆலோசிப்பது நல்லது. சனி 12ம் வீட்டைப் பார்ப்பதால் சுப நிகழ்ச்சிகளை எடுத்து நடத்துவீர்கள்.
வியாபாரத்தில், புதிய சரக்குகளை் கொள்முதல் செய்வீர்கள். கூட்டுத் தொழில் வளர்ச்சி அடையும். முக்கிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். உத்தியோகத்தில் பாராட்டு, விரும்பிய இடமாற்றம், சம்பளம்பதவி உயர்வு உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.    
கன்னிப்பெண்களுக்கு வேற்று மாநிலம் அல்லது அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பு, போட்டிகளில் வெற்றி உண்டு!
மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி சவாலான காரியங்களையும் எளிதாக முடிக்கவைப்பதுடன், அடிப்படை வசதி வாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாக அமையும்.
பரிகாரம்: சனிக்கிழமையில் கும்பகோணம் அருகிலுள்ள உப்பிலியப்பன் கோயிலுக்குச் சென்று ஸ்ரீபெருமாளை வழிபட்டு வாருங்கள். ஏழை மாணவியின் கல்விக்கு உதவுங்கள்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

சனிப்பெயர்ச்சி பலன்கள்! Empty கடகராசி

Post by Tamil Mon Dec 15, 2014 3:33 pm

சனிப்பெயர்ச்சி பலன்கள்! Kadaga(1)வசீகரப் பேச்சும், வழிநடத்தும் திறனும் மிக்க கடகராசி நேயர்களே... 16.12.14 முதல் 17.12.17 வரை 5ம் வீட்டில் அமர்கிறார், சனி பகவான்.
குடும்பத்தில் சந்தோஷம் குடி கொள்ளும். சொத்து தீர்ப்பு சாதகம் ஆகும். ப்ளான் அப்ரூவல், வங்கிக் கடன் கிடைத்து வீடு கட்டத் தொடங்குவீர்கள். புதிய சொத்து வாங்கும் முயற்சி பலிக்கும். சனிபகவான் பூர்வ புண்ய ஸ்தானமான 5ல் அமர்வதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
பிள்ளைகளை அரவணைத்துப் போவது நல்லது. மகளின் திருமணத் துக்காக கடன் வாங்க வேண்டி வரும். கல்வி, உத்தியோகத்தின் பொருட்டு மகனைப் பிரிய நேரிடலாம். கர்ப்பிணிகள் நெடுந்தூரப் பயணங் களைத் தவிருங்கள்.
சனி பகவான் சஞ்சார பலன்கள்:
16.12.14 முதல் 24.1.15 வரை; 30.4.15 முதல் 13.6.15 வரை; 6.9.15 முதல் 17.10.15 வரை... உங்கள் சஷ்டம பாக்கியாதிபதி குருவின் சாரத்தில் விசாகம் 4ம் பாதம், 5ம் வீட்டில் சனி செல்வதால் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். பண வரவு அதிகரிக்கும். அரசால் ஆதாயம் உண்டு. புது வேலை அமையும். 14.6.15 முதல் 5.9.15 வரை, உங்கள் ராசிக்கு அர்த்தாஷ்டமச் சனியாக 4ம் வீடான துலாம் ராசி, விசாகம் 3ம் பாதத்தில் சனி செல்வதால், தாய்வழி சொத்தைப் பெறுவதில் தடைகள், வீண் பழி வந்துபோகும்.
30.4.15 முதல் 1.8.15 வரை குருவின் விசாக நட்சத்திரத்திலேயே சனி வக்கரித்து செல்கிறார். சிலர், புதுத் தொழில் தொடங்குவார்கள். அடகில் இருந்த நகை மற்றும் வீட்டுப் பத்திரத்தை மீட்க வழி பிறக்கும். உங்கள் சப்தம அஷ்டமாதிபதியான சனி, சுய நட்சத்திரமான அனுஷத்தில் 25.1.15 முதல் 29.4.15 வரை மற்றும் 18.10.15 முதல் 15.11.16 வரை செல்வதால், செலவுகள் அதிகமாகும். மற்றவர் முன்னிலையில் மனைவியைக் குறைவாகப் பேச வேண்டாம். விமர்சனங் களைத் தவிர்க்கவும். வழக்கால் நிம்மதி இழப்பீர்கள். அரசு அதிகாரிகளை பகைக்காதீர்கள்.
15.3.15 முதல் 29.4.15 வரை; 19.5.16 முதல் 12.08.16 வரை, சனி அனுஷத்திலேயே வக்ரமாவதால் தம்பதிக்குள் அந்நியோன்யம் பிறக்கும். ஷேர் மூலமாகவும் பணம் வரும். அதிக வட்டிக் கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். 16.11.16 முதல் 17.12.17 வரை உங்கள் திருதியாதிபதியும்விரயாதிபதியுமான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் சனி செல்வதால் தன்னம்பிக்கை குறையும். கடந்த கால இழப்புகள், ஏமாற்றங்களை நினைத்து வருந்துவீர்கள். இளைய சகோதர வகையில் பிணக்குகள், பயணங்களால் அலைச்சல் உண்டு. பூர்வீகச் சொத்துப் பராமரிப்புச் செலவுகள் வந்துபோகும். 8.4.17 முதல் 5.8.17 வரை புதனின் கேட்டை நட்சத்திரத்தி லேயே சனி வக்ரமாக்ச் செல்வதால், இந்த கால கட்டத்தில் தொழிலதிபர் களின் நட்பு கிடைக்கும். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள்.
சனி 2ம் இடத்தைப் பார்ப்பதால்,  எவரையும் எடுத்தெறிந்துப் பேச வேண் டாம். அக்கம்பக்கத்தாரிடம் அளவுடன் பழகுங்கள். வாக்குறுதிகளை நிறை வேற்றப் போராட வேண்டி வரும். சனி 7ம் வீட்டைப் பார்ப்பதால் மனை வியுடன் வாக்குவாதம், அவருக்கு மருத் துவச் செலவுகள் வந்துபோகும். சனி பகவான் லாப வீட்டைப் பார்ப்பதால் மதிப்பு கூடும். மூத்த சகோதரர் பக்க பலமாக இருப்பார்.  
வியாபாரத்தில், புது யுக்திகளால் லாபத்தை அதிகப்படுத்துவீர்கள். முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வெளிநாட்டு நிறுவனங்களின் வாய்ப்பு களும் வரும். இரும்பு, அழகு சாதனங்கள், ரசாயனம், மருந்து வகைகள் மூலம் லாபம் அதிகரிக்கும்.
உத்தியோகத்தில், உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். எதிர்பார்த்த இடமாற்றம், சம்பள உயர்வு கிடைக்கும். பதவி உயர்வுக்காக தேர்வெழுதிக் காத்திருந்தவர்களுக்கு முக்கியப் பொறுப்புகள் தேடி வரும். கன்னிப் பெண்கள், பாதியிலேயே விட்ட கல்வியைத் தொடர்வார்கள். நினைத்தபடி திருமணம் முடியும். மாணவர்கள் படிப்பில் மட்டுமல்ல விளையாட்டிலும் பரிசுபாராட்டுகள் பெறுவார்கள்.
மொத்தத்தில் இந்தச் சனிப்பெயர்ச்சி உங்களை சுறுசுறுப்பாக்குவதுடன், புதிய திட்டங்களை நிறைவேற்றும் வல்லமையையும், மன நிம்மதியையும் தரக்கூடியதாக அமையும்.
பரிகாரம்: பௌர்ணமி அல்லது தசமி திதி நாளில், திண்டிவனம் அருகிலுள்ள திருவக்கரை சென்று ஸ்ரீவக்ரகாளி அம்மனுக்கு நெய் தீபமேற்றி வணங்குங்கள். விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவுங்கள்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

சனிப்பெயர்ச்சி பலன்கள்! Empty சிம்மராசி

Post by Tamil Mon Dec 15, 2014 3:33 pm

சனிப்பெயர்ச்சி பலன்கள்! Simma(1)எல்லோர் மீதும் நம்பிக்கை கொண்ட சிம்மராசி நேயர்களே... 16.12.14 முதல் 17.12.17 வரை சுக வீடான 4ம் வீட்டில் சனி அமர்கிறார். இந்த காலத்தில் வாழ்க்கை சற்று சவாலாகவே இருக்கும்.
உங்கள் ராசிக்கு 6 மற்றும் 7ம் வீட்டதிபதியாக சனி வருவதால் மனைவிக்கு உடல்நிலை பாதிக்கும். சிலர் சொந்த ஊரை விட்டு இடம் பெயர்வீர்கள். ஒப்பிடுதலைத் தவிர்க்கவும். எதிலும் முன்யோசனை யுடன் செயல்படவும். செலவுகள் துரத்தும். முக்கிய வேலைகளை நீங்களே முடிப்பது நல்லது. சொத்து வாங்கும்போது பட்டா, வில்லங்கச் சான்றிதழ், தாய் பத்திரங்களை சரிபார்ப்பதுடன், வழக்கறிஞரை ஆலோசித்துச் செயல்படவும். டிரைவிங் லைசென்ஸ், இன்ஷூரன்ஸ் ஆகியவற்றை உரியநேரத்தில் புதுப்பிக்கவும்; அபராதம் செலுத்த நேரிடலாம். சிலர், குடும்பத்தில் குழப்பம் ஏற்படுத்த முற்படுவர். அவர்களின் பேச்சைக் கேட்டு, வீண்  சந்தேகத்தை வளர்த்துக் கொள்ளா தீர்கள். அரசின் அனுமதி பெறாமல் கூடுதல் தளங்கள் கட்ட வேண்டாம். சாட்சிக் கையொப்பமிட வேண்டாம்.
சனி பகவான் சஞ்சாரப் பலன்கள்:
16.12.14 முதல் 24.1.15 வரை; 30.4.15 முதல் 13.6.15 வரை; 6.9.15 முதல் 17.10.15 வரை உங்கள் பூர்வ புண்யாதிபதி குருவின் சாரத்தில் விசாகம் 4ம் பாதம், 4ம் வீட்டில் சனி செல்வதால் எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வழக்கு சாதகமாகும். மகளின் திருமணம் சிறப்புற நிகழும். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.
14.6.15 முதல் 5.9.15 வரை உங்கள் ராசிக்கு 3ம் வீடான துலாம் ராசி, விசாகம் 3ம் பாதத்தில் சனி செல்கிறார். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். இளைய சகோதர வகையில் உதவிகள் உண்டு. குழந்தை பாக்யம் கிடைக்கும்.  30.4.15 முதல் 1.8.15 வரை குருவின் விசாக நட்சத்திரத்திலேயே சனி வக்கரித்து செல்வதால், நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வேற்றுமொழி பேசுபவர் களால் திருப்புமுனை உண்டாகும்.
உங்கள் சஷ்டமசப்தமாதிபதியான சனி சுய நட்சத்திரமான அனுஷத்தில் 25.1.15 முதல் 29.4.15 வரை; 18.10.15 முதல் 15.11.16 வரை செல்வதால் எதிர்ப்புகள், ஏமாற்றங்கள், வந்து போகும். பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். 15.3.15 முதல் 29.4.15 வரை; 19.5.16 முதல் 12.8.16 வரை சனி அனுஷத்திலேயே வக்ரமாவதால், புதிய திட்டங்கள் நிறைவேறும். மனைவிக்கு வேலை கிடைக்கும்.
16.11.16 முதல் 17.12.17 வரை உங்கள் தனாதிபதியும் லாபாதிபதியான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் சனி செல்வதால் உங்களின் புகழ் உயரும். வேலை கிடைக்கும். கைமாற்றுக் கடனை அடைப்பீர்கள். புதுப் பதவி தேடிவரும். 8.4.17 முதல் 5.8.17 வரை புதனின் கேட்டை நட்சத்திரத்தில் சனி வக்ரமாகி செல்வதால், சுபச் செலவுகள் அதிகரிக் கும். பூர்வீகச் சொத்தை செலவு செய்து சீர் செய்வீர்கள்.
சனி பகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால் வயிற்று உபாதைகள் வந்து நீங்கும். சனி 6ம் வீட்டைப் பார்ப்பதால் கடனாகக் கொடுத்ததை வசூலிப்பீர்கள். மறைமுக எதிரிகளை இனங்கண்டறிந்து ஒதுக்குவீர்கள். சனி 10ம் வீட்டைப் பார்ப்பதால் உத்தியோகத்தில் வேலைப்பளு, விரும்பத் தகாத இடமாற்றங்கள், வீண் பழிகள் வந்துசெல்லும்.
வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிக்க அதிகம் உழைக்க வேண்டும். யாருக்கும் கடன் தரவேண்டாம். மற்றவர்களை நம்பி முக்கிய முடிவு களோ, முதலீடுகளோ வேண்டாம். ரியல் எஸ்டேட், ஸ்டேஷனரி, துரித உணவகம், பெட்ரோகெமிக்கல் வகைகளால் லாபம் உண்டு. உத்தியோகத்தில் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். திடீர் இடமாற்றங்கள் வந்துபோகும். உங்களை வழக்கில் சிக்கவைக்க சிலர் முயற்சிப்பார்கள்.
கன்னிப் பெண்களுக்கு திருமணம் நிச்சயம் ஆகும். தாயாரை அனுசரித்துப் போகவும். மாணவர்களே, விளையாடும்போது சிறு காயங்கள் ஏற்படக்கூடும்; கவனம்!
மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி வேலைச்சுமை, இடமாற்றங்களை தந்தாலும், தொலைநோக்குச் சிந்தனையால் வெற்றிபெற வைக்கும்.
பரிகாரம்: உத்திராடம் நட்சத்திர நாள் அல்லது அமாவாசை தினங்களில், திருவெண்ணெய்நல்லூர் ஸ்ரீகிருபாபுரீஸ்வரரை தீபமேற்றி வணங்கி வாருங்கள். இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

சனிப்பெயர்ச்சி பலன்கள்! Empty கன்னி ராசி

Post by Tamil Mon Dec 15, 2014 3:33 pm

சனிப்பெயர்ச்சி பலன்கள்! Kanni(1)கலகலப்பான கன்னி ராசிக் காரர்களே... 16.12.14 முதல் 17.12.17 வரை சனிபகவான் 3ம் வீட்டில் வலுவாக அமர்கிறார்.
பிரிந்திருந்த கணவன்மனைவி ஒன்றுசேர்வார்கள். தோல்வி முகம் மாறும். குடும்பத்தில், உங்கள் ஆலோசனைகளை எல்லோரும் ஏற்பர். மருந்து, மாத்திரையிலிருந்து விடுபடுவீர்கள். மகளுக்கு, நல்ல வரன் அமையும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பழைய வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.
சிலர், கடன்பட்டாவது வீடு, மனை வாங்குவீர்கள். மாதாமாதம் லோனுக்காக பெரிய தொகை கட்ட வேண்டி வருகிறதே என்றெல்லாம் கலங்கவேண்டாம். அதற்கான வழி வகைகள் பிறக்கும். வீண் பழிகள் விலகும். உங்களைத் தவறாகப் புரிந்துகொண்டு விலகிச் சென்ற பழைய உறவினர், நண்பர்கள் வலிய வந்து உறவாடுவர்.
சனி பகவான் சஞ்சார பலன்கள்:
16.12.14 முதல் 24.1.15 வரை; 30.4.15 முதல் 13.6.15 வரை; 6.9.15 முதல் 17.10.15 வரை உங்கள் சுகசப்தமாதிபதி குருவின் சாரத்தில் விசாகம் 4ம் பாதம், 3ம் வீட்டில் சனி செல்வதால் தைரியம் கூடும்.அரசு காரியங்கள் விரைந்து முடியும். இளைய சகோதர வகையில் மன வருத்தம் நீங்கும். வீடு, மனை வாங்கு வது, விற்பது லாபகரமாக முடியும்.
14.6.15 முதல் 5.9.15 வரை உங்கள் ராசிக்கு பாதச் சனியாக 2ம் வீடான துலாம் ராசி, விசாகம் 3ம் பாதத்தில் சனி செல்வதால், பேச்சால் பிரச்னைகள் வரும். பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் எச்சரிக்கையாக இருங்கள்.  
30.4.15 முதல் 1.8.15 வரை குரு பகவானின் விசாகம் நட்சத்திரத்திலேயே சனி வக்கரித்துச் செல்வதால் சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். பாதியில் நின்ற வேலைகள் விரைந்து முடியும். எனினும் பழைய கடனை நினைத்துக் குழம்புவீர்கள்.
உங்கள் பூர்வ புண்யாதிபதியும் சஷ்டியாதிபதியுமான சனி, சுயநட்சத் திரமான அனுஷத்தில் 25.1.15 முதல் 29.4.15 வரை; 18.10.15 முதல் 15.11.16 வரை செல்கிறார். இக்கால கட்டத்தில் பூர்விகச் சொத்து கிடைக்கும். மக்களால் நலம் உண்டாகும். மகப்பேறு பாக்கியம் பெறுவீர்கள். விளையாட்டு விநோதங்களில் ஈடுபடுபவர்கள் பாதுகாப்புடன் செயல்படவும். 15.3.15 முதல் 29.4.15 வரை; 19.5.16 முதல் 12.8.16 வரை உள்ள காலகட்டங்களில் சனி அனுஷத்தில் வக்ரமாவதால், சுற்றி இருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். பண வரவு இருந்தாலும் செலவு களும் இருக்கும். மகளின் திருமண விஷயத்தில் அவசரம் வேண்டாம். 16.11.16 முதல் 17.12.17 வரை உங்கள் ராசிநாதனும் ஜீவனாதிபதியுமான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் சனி செல்வதால் பணப்புழக்கம் அதிகமாகும். வீடு, வாகனம் அமையும். 8.4.17 முதல் 5.8.17 வரை புதனின் கேட்டை நட்சத்திரத்திலேயே சனி வக்ரமாகி செல்வதால், சளி, இறுமல், கழுத்து வலி வந்துபோகும்.
சனி 5ம் வீட்டைப் பார்ப்பதால் பூர்வீகச் சொத்து வழக்கு சாதகமாகும். உயர்கல்வி, பணியின் நிமித்தம் பிள்ளைகளைப் பிரிய நேரிடும். சனி 9ம் வீட்டைப் பார்ப்பதால் செலவுகள் அதிகமாகும். தந்தையின் உடல்நிலை பாதிக்கும். சனி 12ம் வீட்டைப் பார்ப்பதால் திடீர் பயணங்கள், கனவுத் தொல்லை, வந்துபோகும்.
வியாபாரம் சூடுபிடிக்கும். சந்தை நிலவரம், வாடிக்கையாளர்களின் ரசனைகளுக்கு ஏற்ப புது முதலீடுகள் செய்வீர்கள். உணவு, எரிபொருள், வாகனம், கட்டுமானப் பொருட்களால் லாபம் அடைவீர்கள். உத்தியோகத்தில், உங்களுக்கு எதிராக செயல்பட்ட அதிகாரி வேறு இடத்துக்கு மாற்றப் படுவார். பதவி உயர்வுக்காக உங்கள் பெயர் பரிந்துரைக்கப்படும்.
கன்னிப் பெண்களுக்கு ஆடை, ஆபரணம் சேரும். உங்களுடைய ஆசைகளை பெற்றோர் நிறைவேற்றி வைப்பார்கள். திருமணம் விரைந்து முடியும். மாணவர்களுக்கு நினைவாற்றல் கூடும். விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வெல்வீர்கள்.
மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி, உங்களை அனைத்திலும் வெற்றி பெற வைப்பதுடன், பணம் பதவியை அள்ளித் தருவதாக அமையும். 
பரிகாரம்: திருவோணம் மற்றும் ஏகாதசி தினங்களில், விருத்தாசலம் அருகில் ஸ்ரீமுஷ்ணம் தலத்தில் அருளும் பூவராகவப் பெருமாளை வணங்கி வாருங்கள். காது கேளாதவர்களுக்கு உதவுங்கள்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

சனிப்பெயர்ச்சி பலன்கள்! Empty துலாம் ராசி

Post by Tamil Mon Dec 15, 2014 3:34 pm

சனிப்பெயர்ச்சி பலன்கள்! Dhulam(1)எல்லோருக்கும் நல்லவர்களாகத் திகழும் துலாம் ராசிக்காரர்களே,
16.12.14 முதல் 17.12.17 வரை சனிபகவான், உங்கள் ராசியை விட்டு விலகி பாதச் சனியாக அமர்ந்து பலன் தரப் போகிறார்.
உங்களின் பிரபல யோகாதிபதியான சனிபகவான் 2ம் வீட்டுக்கு வந்து அமர்வதால், இனி உடல் ஆரோக்கியம் மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.பிரிந்திருந்த கணவன்மனைவி ஒன்று சேருவார்கள்.
என்றாலும், பாதச்சனியாக வருவதால், வெளி வட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். எதிலும் உணர்ச்சிவசப்படாமல், அறிவுபூர்வமான அணுகுவது நல்லது.  எவருக்காகவும் சாட்சிக் கையெழுத்து போட வேண்டாம். அரசு காரியங்கள் தாமதமாகி முடியும்.
சனி பகவான் சஞ்சார பலன்கள்
16.12.14 முதல் 24.1.15 வரை; 30.4.15 முதல் 13.6.15 வரை மற்றும் 6.9.15 முதல் 17.10.15 வரை உங்கள் திருதியாதிபதிசஷ்டமாதிபதி குருவின் சாரத்தில் விசாகம் 4ம் பாதம் 2ம் வீட்டில் சனி செல்வதால்,  எதிர்பாராத சில காரியங்கள் முடிவடையும். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள்.
14.6.15 முதல் 5.9.15 வரை உங்கள் ராசிக்குள் ஜென்மச் சனியாக துலாம் ராசி விசாகம் நட்சத்திரம் 3ம் பாதத்தில் சனி செல்வதால், இந்தக் காலகட்டத்தில் விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஆரோக்கியம் பாதிக்கக்கூடும்.
30.4.15 முதல் 1.8.15 வரை குருபகவானின் விசாகம் நட்சத்திரத்திலேயே சனி வக்கரித்து செல்வதால், இழுபறியாக இருந்த வேலைகள் முடிவடையும். உங்கள் யோகாதிபதியான சனிபகவான் தன் சுய நட்சத்திரமான அனுஷம் நட்சத்திரத்தில் 25.01.15 முதல் 29.04.15 வரை மற்றும் 18.10.15 முதல் 15.11.16 வரை செல்வதால், குடும்ப வருமானம் உயரும். புது வேலை கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. 15.3.15 முதல் 29.4.15 வரை மற்றும் 19.5.16 முதல் 12.8.16 வரை உள்ள காலகட்டங்களில் சனிபகவான் அனுஷம் நட்சத்திரத்திலேயே வக்ரமாவதால், நம்பிக்கையின்மை, பிள்ளைகளின் வருங்காலம் குறித்த கவலைகள் வந்து நீங்கும். 16.11.16 முதல் 17.12.17 வரை உங்கள் பாக்யாதிபதியும், விரயாதிபதியுமான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால், குழந்தை பாக்யம் கிடைக்கும். சிலர் வீடு கட்டத் தொடங்குவீர்கள். பணம் வரும். 8.4.17 முதல் 5.8.17 வரை புதனின் கேட்டை நட்சத்திரத்திலேயே சனி வக்ரமாகிச் செல்வதால், மனைவிவழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
சனிபகவான் 4ம் வீட்டைப் பார்ப்பதால், அடுக்கடுக்கான வேலைகளால் அவதிக்குள்ளாவீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் செய்யவேண்டி வரலாம். 8ம் வீட்டைப் பார்ப்பதால், வீண் அலைச்சல், சிறுசிறு விபத்துகள் வந்து நீங்கும். லாப வீட்டைப் பார்ப்பதால், திடீர் செல்வம், செல்வாக்கு கூடும். மூத்த சகோதர வகையில் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும்.  
வியாபாரத்தில், கணிசமான லாபம் கிடைக்கும். புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். கடையை விரிவுபடுத்தவோ, புதிய இடத்துக்கு மாற்றவோ செய்வீர்கள். ஸ்டேஷனரி, ஏற்றுமதிஇறக்குமதி வகைகளால் ஆதாயமடைவீர்கள். உத்தியோகத்தில், உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பா். அதிக சம்பளத்துடன் சலுகைகளும் கிட்டும்.
கன்னிப்பெண்களே! பாதச் சனி தொடர்வதால், எல்லோரையும் நல்லவர்கள் என்று நினைத்து ஏமாற வேண்டாம். திருமணம் நிச்சயமாகும். உயர்கல்வியில் போராடி வெற்றி பெறுவீர்கள். மாணவர்கள், மொழி அறிவை வளர்த்துக்கொள்வார்கள். பேருந்து பயணம், விளையாட்டில் கவனம் தேவை.
மொத்தத்தில் இந்த சனிப் பெயர்ச்சி, முடங்கிக் கிடந்த உங்களை முடுக்கிவிடுவதுடன் செல்வம்  செல்வாக்கையும் மகிழ்ச்சியையும் பெற்றுத் தருவதாக அமையும்.
பரிகாரம்: கும்பகோணம்  திருபுவனத்தில் அருளும் கம்பகரேஸ்வரரையும் சரபேஸ்வரரையும் அஷ்டமி திதி அல்லது சனிக்கிழமைகளில் தரிசித்து வாருங்கள். அநாதைக் குழந்தைகளின் கல்விக்கு உதவுங்கள்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

சனிப்பெயர்ச்சி பலன்கள்! Empty விருச்சிக ராசி

Post by Tamil Mon Dec 15, 2014 3:35 pm

சனிப்பெயர்ச்சி பலன்கள்! Viruchi(1)நேர்மையை நேசிக்கும் விருச்சிக ராசிக்காரர்களே, உங்களுக்கு 16.12.14 முதல் 17.12.17 வரை ஜென்மச்சனியாக அமர்கிறார் சனிபகவான். அதற்காகப் பதறவேண்டாம். அவர், உங்களுக்கு திருதியாதிபதியாகவும், சுகாதிபதியாகவும் வருவதால் ஓரளவு நல்லதையே செய்வார்.
சமயோசிதமான பேச்சாலும், செயலாலும் வெற்றி பெறுவீர்கள். கைமாற்றுக் கடனை அடைப்பீர்கள்.குடும்பத்தில் அமைதி திரும்பும். சந்தேகத்தால் பிரிந்திருந்த தம்பதி ஒன்றுசேர்வீர்கள். எனினும் ஜென்மச் சனி என்பதால், ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவேண்டும். பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரமை வந்துபோகும். நேரம் தவறி உண்பதால், அல்சர் வரக் கூடும். சிலநேரம் சந்தேகம், மனக்கலக்கத்தால் நிம்மதி பறிபோகும். ஒரு சொத்தை விற்று, மற்றொரு சொத்தைக் காப்பாற்ற வேண்டி வரும். அயல்நாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் அடைவீர் கள். எவருக்காகவும்  பரிந்துரை செய்ய வேண்டாம். வழக்கில் வழக்கறிஞரின் ஆலோசனையை ஏற்பது நல்லது. வி.ஐ.பிகளின் நட்பால் சில காரியங் களைச் சாதிப்பீர்கள்.
சனி பகவான் சஞ்சார பலன்கள்
16.12.14 முதல் 24.01.15 வரை; 30.4.15 முதல் 13.6.15 வரை; 6.9.15 முதல் 17.10.15 வரை உங்கள் தனபூர்வ புண்யாதிபதி குருவின் சாரத்தில் விசாகம் 4ம் பாதத்தில், உங்கள் ராசிக்குள்ளேயே சனி செல்வதால் பணம், சொத்து சேரும். வழக்கில் வெற்றி உண்டு. ஆனால் மனஇறுக்கம், வீண் பிரச்னை வந்து போகும். கர்ப்பிணிகள் பயணங் களைத் தவிர்ப்பது நல்லது. 14.6.15 முதல் 5.9.15 வரை உங்கள் ராசிக்கு விரயச் சனியாக 12ம் வீடான துலாம் ராசி, விசாகம் 3ம் பாதத்தில் சனி செல்கிறார். பழைய கடனை நினைத்துக் கலங்குவீர்கள். சொத்து வாங்கும்போது தாய்ப்பத்திரத்தை சரிபார்த்து வாங்கவும். 30.4.15 முதல் 1.8.15 வரை குருவின் விசாகம் நட்சத்திரத்தில் சனி வக்கரித்து செல்வ தால், திடீர் பணவரவு உண்டு. கல்யாண முயற்சிகள் பலிதமாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். உங்கள் திருதியாதிபதியும்சுகாதிபதியுமான சனி, சுய நட்சத்திரமான அனுஷத்தில் 25.1.15 முதல் 29.4.15 வரை; 18.10.15 முதல் 15.11.16 வரை செல்வதால், தைரியமாக முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்று, புதிதாக வீடு வாங்குவீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். 15.3.15 முதல் 29.4.15 வரை மற்றும் 19.5.16 முதல் 12.8.16 வரை, சனி அனுஷத்திலேயே வக்ரமா வதால், கூடாப் பழக்கவழக்கங்கள் தொற்றிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. 16.11.16 முதல் 17.12.17 வரை உங்கள் அஷ்டமலாபாதிபதியான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் சனி செல்வதால், வேலைகள் தடையின்றி முடிவடையும். வெளிநாட்டில், வெளி மாநிலத்தில் இருப்பவர்களால் ஆதாயம் அடைவீர்கள். 8.4.17 முதல் 5.8.17 வரை
புதனின் கேட்டை நட்சத்திரத்திலேயே சனி வக்ரமாகி செல்கிறார். புதிய முயற்சிகள் பலிதமாகும். புதிய நபரால் ஆதாயம் அடைவீர்கள்.
சனி 3ம் வீட்டைப் பார்ப்பதால், சவால்களைச் சமாளிக்க வேண்டி வரும். வீடு மனை வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வரும். 7ம் வீட்டைப் பார்ப்பதால் மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, சிறுசிறு அறுவை சிகிச்சைகள் வந்துபோகும்.
10ம் வீட்டை பார்ப்பதால் உத்தியோகத் தில் வேலை அதிகமாகும். சுயதொழில் தொடங்கவும் வாய்ப்பு உண்டு.
வியாபாரத்தில் அதிக முதலீடுகள் வேண்டாம். கூட்டுத்தொழிலில் பங்கு தாரர்களால் பிரச்னைகள் வரும். அரசு விஷயங்களில் அலட்சியப்போக்கு வேண்டாம். கமிஷன், புரோக்கரேஜ், உணவு வகைகளால் லாபம் அடை வீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். உயரதிகாரிகளை விமர்சிக்க வேண்டாம்.
கன்னிப்பெண்கள், இணையதளத் தில் கவனமுடன் செயல்படுங்கள்.பெற்றோரிடம் எதையும் மறைக்க வேண்டாம். மாணவர்கள் தகாத நட்புகளைத் தவிர்க்கவும்.
மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி ஒருவித அச்சத்தைத் தந்தாலும், ஓரளவு பணவரவையும், அனுபவத்தையும் பெற்றுத் தருவதாக அமையும்.
பரிகாரம்: திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரரையும், ஸ்ரீசனிபகவானையும் சனிக்கிழமை அல்லது வியாழக்கிழமைகளில் வணங்கி வாருங்கள். ஏழைகளுக்கு ஆடை தானம் செய்யுங்கள்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

சனிப்பெயர்ச்சி பலன்கள்! Empty தனுசு ராசி

Post by Tamil Mon Dec 15, 2014 3:36 pm

சனிப்பெயர்ச்சி பலன்கள்! Dhanushu(1)கூடி வாழ ஆசைப்படும் தனுசு ராசிக்காரர்களே, 16.12.14 முதல் 17.12.17 வரையிலான காலம், விரயச் சனியாகவும், ஏழரைச் சனியின் தொடக்கமாகவும் அமைகிறது. எதிலும் முன்னெச்சரிக்கை தேவை.
சனி உங்களுக்கு தனாதிபதியாகவும், தைரிய ஸ்தானாதிபதியாகவும் இருப்பதால், ஏழரைச் சனியால் ஏற்படும் கெடுபலன்கள் குறையும். ராசிக்கு 12ல் சனி மறைவதால், உங்கள் அடிப்படை நடத்தையை மாற்றிக் கொள்ளாதீர்கள். இழுபறியான வேலைகள் விரைந்து முடியும். வீண் செலவுகள் வேண்டாம்.
இதுவரை உங்கள் ராசி மீது வீழ்ந்த சனியின் பார்வை இனி விலகுவதால் உங்கள் பேச்சில் முதிர்ச்சி வெளிப்படும். கணவன்மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். ஒரு சொத்தை விற்று பழைய பிரச்னைகள், சிக்கல்களை தீர்ப்பீர்கள். அரசாங்க விஷயங்கள் சற்றுத் தாமதமாகி முடியும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்கு வீர்கள். என்றாலும், அவ்வப்போது வீண் அவநம்பிக்கை, எதிர்காலம் பற்றிய பயம் வந்துபோகும். எவருக்கும் ஜாமீன் கொடுக்க வேண்டாம். முக்கிய கோப்புகளைக் கையாளும்போது அலட்சியம் வேண்டாம்.
சனி பகவான் சஞ்சார பலன்கள்:
16.12.14 முதல் 24.01.15 வரை; 30.4.15 முதல் 13.6.15 வரை; 6.9.15 முதல் 17.10.15 வரை... உங்கள் ராசி நாதன் சுகாதிபதி குருவின் சாரத்தில் விசாகம் 4ம் பாதம், விருச்சிக ராசி 12ம் வீட்டில் சனி செல்வதால், குடும்பத்தில் நிம்மதி உண்டு. தடைப்பட்டிருந்த வீடு கட்டும் பணி மீண்டும் துவங்கும்.14.6.15 முதல் 5.9.15 வரை உங்கள் ராசிக்கு 11ம் வீடான துலாம் ராசி, விசாகம் 3ம் பாதத்தில் சனி செல்வதால், நினைத்த காரியம் நிறைவேறும். அரசால் அனுகூலம் உண்டு.  30.4.15 முதல் 1.8.15 வரை குருவின் விசாகம் நட்சத்திரத்திலேயே சனி வக்கரித்து செல்வதால், பழைய பிரச்னைகள் தலைதூக்கும். மற்றவர்கள் விஷயத் தில் தலையிடவேண்டாம்.
உங்கள் தனசேவகாதிபதியான சனி, சுய நட்சத்திரமான அனுஷத்தில் 25.1.15 முதல் 29.4.15 வரை; 18.10.15 முதல் 15.11.16 வரை செல்வதால், சவால்களில் வெற்றி பெறுவீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பலப்படும்.
அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும்.  15.3.15 முதல் 29.4.15 வரை; 19.5.16 முதல் 12.8.16 வரை, சனி அனுஷத்திலேயே வக்ரமாவதால் அவ்வப்போது பலவீனமாக இருப்பதாக நினைப்பீர்கள். சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். 16.11.16 முதல் 17.12.17 வரை உங்கள் சப்தமஜீவனாதிபதியான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் சனி செல்வதால் கணவன்மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு. புது வேலை கிடைக்கும். 8.4.17 முதல் 5.8.17 வரை புதனின் கேட்டை நட்சத்திரத்திலேயே சனி வக்ரமாகி செல்வதால், பொருள் இழப்பு, வீண் டென்ஷன், நரம்புக் கோளாறு வந்து நீங்கும். உறவினர், நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும்.
சனி 2ம் வீட்டைப் பார்ப்பதால் பணவரவு இருந்தாலும் பற்றாக் குறையும் ஏற்படும். பேச்சில் கடுமை வேண்டாம். சனி 6ம் வீட்டைப் பார்ப்பதால் வழக்கில் தீர்ப்பு தாமதமாகும். மறைமுக எதிர்ப்புகள் வரக்கூடும். சனி 9ம் வீட்டைப் பார்ப் பதால், தந்தைக்கு நெஞ்சு எரிச்சல், ரத்த அழுத்தம், வந்து நீங்கும்.
வியாபாரத்தில் சில சூட்சுமங் களையும், ரகசியங்களையும் தெரிந்துகொண்டு அதற்கேற்ப லாபம் ஈட்டுவீர்கள். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். மூலிகை, செங்கல் சூளை, லாட்ஜ், வாகன உதிரிபாகங்களால் ஆதாயமடைவீர்கள்.
உத்தியோகத்தில் சவால்களைச் சந்திக்க நேரிடும். என்றாலும் பெரிய பொறுப்புகள் கிட்டும். சம்பளம் உயரும். வேறு சில நல்ல வாய்ப்புகளும் கூடி வரும். கன்னிப்பெண்களுக்கு, கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமா கும். மாணவர்கள், போட்டித் தேர்வு களில் போராடி வெற்றி பெறுவார்கள்.
மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி, ஓரளவு நன்மையையும், பணவரவை யும், பிரபலங்களின் நட்பையும் பெற்றுத் தருவதாக அமையும்.
பரிகாரம்: திருவாதிரை நட்சத்திர நாளில் சிதம்பரம் சென்று ஸ்ரீநடராஜரை நெய் தீபமேற்றி வழிபடுங்கள்.  புற்றுநோயால் அவதிப்படும் ஏழைகளின் மருத்துவத்துக்கு உதவி செய்யுங்கள்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

சனிப்பெயர்ச்சி பலன்கள்! Empty மகர ராசி

Post by Tamil Mon Dec 15, 2014 3:36 pm

சனிப்பெயர்ச்சி பலன்கள்! Magaramபோராடி ஜெயிக்கும் மகர ராசிக்காரர்களே, உங்கள் ராசி நாதன் சனிபகவான், 16.12.14 முதல் 17.12.17 வரை, லாப வீட்டில் அமர்வதால், உங்கள் புகழ், கௌரவம் ஒருபடி உயரும்.
கடினமான காரியங்களையும் எளிதில் முடித்துக் காட்டுவீர்கள். வருமானம் உயரும். கணவன்மனைவிக்குள் பாசப்பிணைப்பு அதிகரிக்கும். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். குழந்தை பாக்கியம் உண்டாகும்.
சேமிக்கத் துவங்குவீர்கள். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். வங்கி லோன் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் உண்டு. நண்பர்கள், உறவினர்கள் உதவியுடன் புதுத் தொழில் தொடங்குவீர்கள்.
சனி பகவான் சஞ்சார பலன்கள்
16.12.14 முதல் 24.1.15 வரை; 30.4.15 முதல் 13.6.15 வரை மற்றும் 6.9.15 முதல் 17.10.15 வரை உங்கள் திருதியாதிபதி குருவின் சாரத்தில் விசாகம் 4ம் பாதத்தில் 11ம் வீட்டில் சனி செல்வதால் எதிர்பார்ப்புகள் தடையின்றி நிறைவேறும். புது வீடு கட்டி குடிபுகுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். புது வேலை கிடைக்கும்.
14.6.15 முதல் 5.9.15 வரை உங்கள் ராசிக்கு 10ம் வீடான துலாம் ராசி விசாகம் 3ம் பாதத்தில் சனி செல்வதால், புது பொறுப்புகள், தேடி வரும். எனினும் உத்தியோகத்தில் சிறு சிறு பிரச்னைகள் வந்துபோகும்.
30.4.15 முதல் 1.8.15 வரை குருவின் விசாகம் நட்சத்திரத்திலேயே சனி வக்கரித்துச் செல்வதால், குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளி நபர்களிடம் பகிர்ந்துகொள்ளாதீர்கள். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் குறுக்கே நிற்கவேண்டாம். காணாமல் போன முக்கிய ஆவணம் ஒன்று திரும்பக் கிடைக்கும்.
உங்கள் ராசிநாதன் சனி சுய நட்சத்திரமான அனுஷத்தில் 25.1.15 முதல் 29.4.15 வரை; 18.10.15 முதல் 15.11.16 வரை செல்வதால், நீண்ட ஆசைகள் நிறைவேறும்.
15.3.15 முதல் 29.4.15 வரை மற்றும் 19.5.16 முதல் 12.8.16 வரை சனி அனுஷத்திலேயே வக்ரமாவதால், விரயம் உண்டு. ஆனால் உங்கள் வளர்ச்சி தடைப்படாது.
16.11.16 முதல் 17.12.17 வரை உங்கள் சஷ்டம பாக்யாதிபதியான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் சனி செல்வதால், இழுபறியான வேலைகள் அனைத்தும் இனி தடையின்றி முடியும். தந்தைவழி சொத்து கைக்கு வரும்.  
8.4.17 முதல் 5.8.17 வரை புதனின் கேட்டை நட்சத்திரத்திலேயே சனி வக்ரமாகி செல்வதால் நண்பர்கள், உறவினர்கள் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள்.  
சனி ராசியைப் பார்ப்பதால் ஒருவித படபடப்பு, பதற்றம் வந்து நீங்கும். சனி 5ம் வீட்டைப் பார்ப்பதால் பிள்ளைகளின் கல்வி, திருமணம் விஷயங்களில் சிற்சில தடைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. பூர்வீகச் சொத்தைப் போராடிப் பெறுவீர்கள். சனிபகவான் 8ம் வீட்டைப் பார்ப்பதால் வாகனத்தில் செல்லும்போதும், சாலைகளைக் கடக்கும்போதும் கவனம் தேவை. அயல்நாட்டுப் பயணம் சாதகமாகும்.            
வியாபாரத்தில் புது முதலீடுகள் செய்து விரிவுபடுத்துவீர்கள். அயல்நாட்டு தொடர்புடைய நிறுவனங் களுடன் புது ஒப்பந்தங்கள் செய்வதன் மூலம் உங்கள் நிறுவனத்தின் புகழ் கூடும். ரியல் எஸ்டேட், பதிப்பகம், சிமென்ட் வகைகளால் லாபம் அடைவீர்கள்.
உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். வேலைச்சுமை குறையும். தலைமைப் பொறுப்பு தேடி வரும். தொந்தரவு தந்த உயரதிகாரி வேறு இடத்துக்கு மாற்றப்படுவார். மூத்த அதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.  
கன்னிப்பெண்களுக்கு நல்ல கணவர் அமைவார். தடைப்பட்ட கல்வியில் வெற்றியுண்டு. பெற்றோரின் ஆலோசனையை ஏற்றுச் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள்.
மாணவர்களுக்கு படிப்பு மேம்படும்.எதிர்பார்த்த கல்விநிறுவனத்தில் உயர் கல்வியைத் தொடர இடம் கிடைக்கும். விளையாட்டில் பரிசு, பாராட்டு உண்டு.
மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி, அணைக்கட்டில் இருந்து வெளியேறும் நீரைப்போல், உங்களின் செயல் வேகத்தை அதிகரிப்பதுடன், பல வெற்றிகளைப் பெற்றுத் தருவதாக அமையும்.
பரிகாரம்: சதுர்த்தி தினங்களில் பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபட்டு வாருங்கள். பிள்ளைகள் இல்லாத முதியவர்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்யுங்கள்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

சனிப்பெயர்ச்சி பலன்கள்! Empty கும்ப ராசி

Post by Tamil Mon Dec 15, 2014 3:37 pm

சனிப்பெயர்ச்சி பலன்கள்! Kumba(1)இனிய சொல்லும் செயலும் கொண்ட கும்ப ராசிக்காரர்களே, 16.12.14 முதல் 17.12.17 வரையிலும் சனிபகவான் 10ம் வீட்டில் அமர்கிறார். புதிய முயற்சிகள் வெற்றியடையும். சதா சர்வகாலமும் ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருந்த நீங்கள் இனி அதற்கான நற்பலனை அடைவீர்கள். தொலைநோக்குச் சிந்தனை அதிகரிக்கும். மனப் போராட்டங்கள் ஓயும்.
குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். எங்கு சென்றாலும் முதல் மரியாதை கிடைக்கும். கணவன்மனைவிக்குள் இருந்து வந்த ஈகோ பிரச்னை விலகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். தந்தையாரின் உடல் நலம் சீராகும். பிதுர்வழிச் சொத்தில் தடைகள் நீங்கும். அரசு காரியங்கள் விரைந்து முடிவடையும். சி.எம்.டி.ஏ., எம்.எம்.டி.ஏ. ப்ளான் அப்ரூவல் கிடைத்து வீடு கட்டத் தொடங்குவீர்கள். வங்கி கடன் உதவி கிடைக்கும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். சிலர் சொந்தமாக தொழில் தொடங்குவார்கள்.
சனி பகவான் சஞ்சார பலன்கள்
16.12.14 முதல் 24.1.15 வரை; 30.4.15 முதல் 13.6.15 வரை; 6.9.15 முதல் 17.10.15 வரை, உங்கள் தனாதிபதி குருவின் சாரத்தில், விசாகம் 4ம் பாதம் 10ம் வீட்டில் சனி செல்வதால், சமயோசிதமாகப் பேசி சாதிப்பீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். அரசால் ஆதாயம் உண்டு. வழக்கு சாதகமாகும். புது பதவிக்கு உங்கள் பெயர் பரிந்துரைக்கப்படும். 14.6.15 முதல் 5.9.15 வரை உங்கள் ராசிக்கு 9ம் வீடான துலாம் ராசி, விசாகம் 3ம் பாதத்தில் சனி செல்வதால், எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். தந்தையுடன் மோதல்கள், அவருக்கு மருத்துவச் செலவுகள் வந்துபோகும்.
30.4.15 முதல் 1.8.15 வரை குருவின் விசாக நட்சத்திரத்திலேயே சனி வக்கரித்துச் செல்வதால் புது முதலீடுகளைத் தவிர்க்கவும். பிரிவுகள், விபத்துகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. முக்கிய ஆவணங்களை கவனமாக கையாளுங்கள். திருமணம் கூடி வரும். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும்.
உங்கள் ராசியாதிபதியும் விரயாதிபதியுமான சனி சுய நட்சத்திரமான அனுஷத்தில் 25.1.15 முதல் 29.4.15 வரை மற்றும் 18.10.15 முதல் 15.11.16 வரை செல்வதால், மறைந்து கிடந்த திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வீடு கட்டுவீர்கள். 15.3.15 முதல் 29.4.15 வரை; 19.5.16 முதல் 12.8.16 வரை சனி அனுஷத்திலேயே வக்ரமாவதால் சொத்துப் பிரச்னைக்கு சுமுக தீர்வு காண்பது நல்லது. 16.11.16 முதல் 17.12.17 வரை உங்கள் அஷ்டமபூர்வ புண்யாதிபதியுமான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் சனி செல்வதால், மகளுக்கு நல்ல வரன் அமையும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். 8.4.17 முதல் 5.8.17 வரை புதனின் கேட்டை நட்சத்திரத்தில் சனி வக்ரமாகி செல்வதால், தயக்கம், தடுமாற்றம், சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும்.  
சனி 4ம் வீட்டைப் பார்ப்பதால் தாயாருக்கு மருத்துவச் செலவுகள், அவருடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். ஒரு சொத்தை விற்று மற்றொரு சொத் தைக் காப்பாற்ற வேண்டி வரும். சனி 7ம் வீட்டைப் பார்ப்பதால் தம்பதிக்குள் அனுசரித்துப் போகவும்.சனி 12ம் வீட்டைப் பார்ப்பதால் சுபச்செலவுகள் அதிகமாகும்.    
வியாபாரத்தில், விளம்பர யுக்தி களால் லாபத்தை உயர்த்துவீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகமாகும். ஷேர், ஸ்பெகுலேஷன், ஹோட்டல் மூலம் லாபமடைவீர்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.
10ம் வீட்டில் சனி வந்தமர்வதால் உத்தியோகத்தில் உயர்வு உண்டு. என்றாலும் திடீர் இடமாற்றம் உண்டு. சிலருக்கு அயல்நாட்டு நிறுவனங்களில் புது வாய்ப்புகள் வரும்.
கன்னிப் பெண்களுக்கு, தள்ளிப் போன திருமணம் கூடி வரும்.சிலருக்கு அண்டை மாநிலத்தில் வேலை கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பார்கள். போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள்.
மொத்தத்தில் இந்த சனிப் பெயர்ச்சி, பண வரவையும், புதிய சகாப்தத்தைப் படைக்கும் வல்லமையையும் பெற்றுத் தருவதாக அமையும்.
பரிகாரம்: ஆரணிபடவேடு வழியில் ஏரிக்குப்பம் எனும் ஊரில் வீற்றிருக்கும் யந்திர சனீஸ்வரபகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபட்டு வாருங்கள். ஆதரவு இல்லாத மூதாட்டிகளின் பசியாற்ற இயன்றளவு உதவி செய்யுங்கள்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

சனிப்பெயர்ச்சி பலன்கள்! Empty மீன ராசி

Post by Tamil Mon Dec 15, 2014 3:37 pm

சனிப்பெயர்ச்சி பலன்கள்! Meenaஎதிலும் மாற்றத்தை விரும்பும் மீன ராசிக்காரர்களே,16.12.14 முதல் 17.12.17 வரை, 9ம் வீட்டில் சனி பகவான் அமர்கிறார். நீங்கள் இனி வெளிச்சத்திற்கு வருவீர்கள்.
உற்சாகமாகச் செயல்படுவீர்கள். எந்த விஷயத்திலும் சுயமாக சிந்தித்து முடிவெடுங்கள். நிம்மதி யும், தன்னம்பிக்கையும் உண்டு. குடும்பத்தினர் உங்கள் பேச்சுக்கு மதிப்பளிப்பார்கள். கணவன் மனைவிக்குள் கசப்பு உணர்வுகள் நீங்கும். அடகிலிருந்த நகை, வீட்டு பத்திரங்களை மீட்பீர்கள்.  பழைய பிரச்னைகள், சிக்கல்களுக்கு தீர்வு காண்பீர்கள். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத் தில் வேலை கிடைக்கும். அதிக வட்டிக் கடனை குறைந்த வட்டிக்கு பணம் வாங்கி பைசல் செய்வீர்கள். வீடு இடம் வாங்கும் ஆசை நிறைவேறும்.
பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரமையிலிருந்து விடுபடுவீர் கள். வழக்கு சாதகமாகும். தந்தை யின் உடல்நிலை சற்று பாதிக்கப்படும்.
பிதுர்வழிச் சொத்துப் பிரச்னை விஸ்வரூபம் எடுக்கும். பணம் வந்தாலும் செலவுகளும் துரத்தும்.
சனி பகவான் சஞ்சார பலன்கள்
16.12.14 முதல் 24.1.15 வரை; 30.4.15 முதல் 13.6.15 வரை; 6.9.15 முதல் 17.10.15 வரை, உங்கள் ராசி நாதனும்  ஜீவனாதிபதியுமான குருவின் சாரத்தில் விசாகம் 4ம் பாதத்தில் 9ம் வீட்டில் சனி செல்வ தால், தடைப்பட்ட வேலைகள் விரைந்து முடியும். நாடாளுபவர்கள், தொழிலதிபர் களின் நட்பு கிடைக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு வாரிசு உருவாகும். புது வீடு கட்டத் தொடங்குவீர்கள்.அரசால் அனுகூலம் உண்டு. 14.6.15 முதல் 5.9.15 வரை, உங்கள் ராசிக்கு
அஷ்டமத்துச் சனியாக 8ம் வீடான துலாம் ராசி, விசாகம் 3ம் பாதத்தில் சனி செல்வதால், வீண் பிரச்னைகள், காரியத் தடைகள், பண இழப்புகள், ஏமாற்றங்கள் ஏற்படலாம். வழக்கில் தீர்ப்பு தள்ளிப்போகும். 30.4.15 முதல் 1.8.15 வரை குருவின் விசாகம் நட்சத்திரத்திலேயே சனி வக்கரித்து செல்வதால் புதிய திட்டங்கள் நிறைவேறும். உங்கள் லாபாதிபதியும் விரயாதிபதியுமான சனிபகவான் சுய நட்சத்திரமான அனுஷத்தில் 25.1.15 முதல் 29.4.15 வரை; 18.10.15 முதல் 15.11.16 வரை செல்வதால், திடீர் யோகம், பண வரவு உண்டாகும். புது வேலை கிடைக்கும். புதிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.
15.3.15 முதல் 29.4.15 வரை; 19.5.16 முதல் 12.8.16 வரை, சனி அனுஷத்திலேயே வக்ரமாவதால், உற்சாகம் கூடும். சிக்கனம் தேவை.  16.11.16 முதல் 17.12.17 வரை உங்கள் சுகசப்தமாதிபதியான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் சனி செல்வ தால் மனைவிக்கு வேலை கிடைக்கும். தாயாரின் உடல் நிலை சீராகும். தாய் சொத்து கைக்கு வரும்.
8.4.17 முதல் 5.8.17 வரை புதனின் கேட்டை நட்சத்திரத்திலேயே சனி வக்ரமாகி செல்வதால், கணவன் மனைவிக்குள் விவாதம் எழும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். மனைவியின் ஆரோக்கியத் தில் கவனம் தேவை.
சனி 3ம் வீட்டைப் பார்ப்பதால் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். அரசு விஷயம் சாதகமாகும். சனி 6ம் வீட்டைப் பார்ப்பதால் மறைமுக எதிரிகளாலும் ஆதாயம் அடைவீர்கள். சனி லாப வீட்டைப் பார்ப்பதால் மதிப்பு கூடும். பணம் வரும் என்றா லும் செலவுகளும் இருக்கும்.
வியாபாரத்தில் புது யுக்திகளைக் கையாளுவீர்கள். கடையை விரிவு படுத்துவீர்கள். கான்ட்ராக்ட், கமிஷன், புரோக்கரேஜ் மூலம் லாபம் அடை வீர்கள். உத்தியோகத்தில், வேலை குறையும். அதிக சம்பளத்துடன் வேறு வாய்ப்புகளும் வரும். பணி சம்பந்தமாக அயல்நாடு சென்று வருவீர்கள். கன்னிப்பெண்களுக்கு கல்வி விஷயங்களில் சாதகமான சூழல் நிலவும். கல்யாணம் கூடிவரும். புது வேலை கிடைக்கும். மாணவர்கள், உயர்கல்வியில் வெற்றி பெறுவார்கள். விரும்பிய கோர்ஸில் சேருவார்கள்.
மொத்தத்தில் இந்த சனிப் பெயர்ச்சி உங்களை விஸ்வரூபம் எடுக்க வைப்பதுடன், அடுத்தடுத்து வெற்றி  களை பெற வைப்பதாக அமையும்.
பரிகாரம்: சஷ்டி திதிநாட்களில் குன்றக்குடி சென்று, அங்கு கோயில் கொண்டிருக்கும் முருகப்பெருமானை வழிபட்டு வாருங்கள். துப்புரவுப் பணியாளருக்கு உதவுங்கள்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

சனிப்பெயர்ச்சி பலன்கள்! Empty Re: சனிப்பெயர்ச்சி பலன்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum