TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Apr 19, 2024 9:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


சீரடி சாய்பாபா பாடல்கள்

Go down

சீரடி சாய்பாபா பாடல்கள் Empty சீரடி சாய்பாபா பாடல்கள்

Post by மாலதி Fri Jan 31, 2014 9:06 pm

பாபா என்றால் தந்தை
சாயி என்றால் கடவுள்
எங்கள் தெய்வத் தந்தையே
தெய்வத் தந்தையே
விந்தை செய்யும் தந்தையே
தெய்வத் தந்தையே

உன் கோயில் சுற்றி
உன் பாதம் பற்றி
வருவது எங்கள் கடமையே
பெறுவது மன அமைதியே
வஞ்சம் செய்தோரின் எண்ணமது
ஏதும் பலிக்கவேயில்லையே
வள்ளல் உன்பேரை சொல்லசொல்ல
வாயும் வலிக்கவேயில்லையே

உன் புகழ் பேசி
உன் அருள் பேசி
உலகிலே பல கூட்டமே
உன்னிடம் ஒரு நாட்டமே
அன்னம் தானமென அங்கும் இங்கும்
என அன்றாடம் நடக்கும்
எண்ணம் தூய்மையென நீயும் நானும்
வர எல்லாமும் சிறக்கும்


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

சீரடி சாய்பாபா பாடல்கள் Empty பாமாலை

Post by மாலதி Fri Jan 31, 2014 9:07 pm

பாமாலை
உயிரெனும் நாரெடுத்து
நினைவெனும் மலர்தொடுத்து
பாபா உனக்கு ஒரு பூமாலை !
பாபா உனக்கு ஒரு பாமாலை !

உன்னை தாங்கியது
உவகை வாங்கியது
பாபா உன்னை இந்த மண்ணுலகம் !
பாபா உன்னை இந்த விண்ணுலகம் !

புலர்ந்தது புதுப்பொழுது
மலர்ந்தது மனநிறைவு
பாபா உந்தனது புன்னகையால் !
பாபா உந்தனது திருக்கரத்தால் !

பாத கமலம் தொட்டு
பாவம் கழுவி விட்டு
பாபா உன்னை நிதம் தொழுதிடுவோம் !
பாபா உன் புகழை எழுதிடுவோம் !

தேவைகள் கிடைப்பதற்கு
சேவைகள் தொடர்வதற்கு
பாபா பரிபூரண அருள்வேண்டும் !
பாபா உதாரண நிலைவேண்டும் !

சமதர்மம் நிலைக்க
சகலரும் மகிழ்ந்திருக்க
பாபா வாழுகின்றார் இன்னமும் !
பாபா வழங்குகின்றார் அன்னமும் !

அத்தனை ஊர்களிலும்
உந்தன் திருக்கோயில்
பாபா அமைந்ததொரு அற்புதமே ! 
பாபா அகிலத்திலே ஆனந்தமே !

பதற்றம் பறந்ததய்யா
பரவசம் பிறந்ததய்யா
பாபா நின்னுருவம் பார்க்கையிலே !
பாபா நின்கோயில் வருகையிலே !

கோடி மலர்களது
நாளும் பூக்கிறது
பாபா உன்தாளில் சேர்ந்திடவே   !
பாபா உன்தோளில் சாய்ந்திடவே !

உலகின் பேரொளியே
உணர்வின் மெல்லிசையே
பாபா உனைப்பற்றி உரைத்திடவே !
பாபா உனக்குள்எமை கரைத்திடவே !


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

சீரடி சாய்பாபா பாடல்கள் Empty குருவிற்கு ஆரத்தி

Post by மாலதி Fri Jan 31, 2014 9:08 pm

குருவிற்கு ஆரத்தி
ஆரத்தி உனக்கு ஆரத்தி உனக்கு
வழிநடத்து குருவே
ஆரத்தி உனக்கு ஆரத்தி உனக்கு
வலியுறுத்து குருவே

ஆரத்தி உனக்கு ஆரத்தி உனக்கு
தினம் மலர்வாய் குருவே
ஆரத்தி உனக்கு ஆரத்தி உனக்கு
சினம் களைவாய் குருவே

ஆரத்தி உனக்கு ஆரத்தி உனக்கு
வலம் வருவாய் குருவே
ஆரத்தி உனக்கு ஆரத்தி உனக்கு
பலம் தருவாய் குருவே

ஆரத்தி உனக்கு ஆரத்தி உனக்கு
இருள்அகற்று குருவே
ஆரத்தி உனக்கு ஆரத்தி உனக்கு
துயர் துடைப்பாய் குருவே

ஆரத்தி உனக்கு ஆரத்தி உனக்கு
நம்பிடுவோம் குருவே
ஆரத்தி உனக்கு ஆரத்தி உனக்கு
நன்றி சொல்வோம் குருவே

ஆரத்தி உனக்கு ஆரத்தி உனக்கு
பணிகின்றோம் குருவே
ஆரத்தி உனக்கு ஆரத்தி உனக்கு
பணிசெய்வோம் குருவே

ஆரத்தி உனக்கு ஆரத்தி உனக்கு
நல்லவைதரும் குருவே
ஆரத்தி உனக்கு ஆரத்தி உனக்கு
வல்லமைதரும் குருவே

ஆரத்தி உனக்கு ஆரத்தி உனக்கு
சரணம் சத் குருவே
ஆரத்தி உனக்கு ஆரத்தி உனக்கு
சரணம் ஜகத் குருவே


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

சீரடி சாய்பாபா பாடல்கள் Empty விரதமுறை

Post by மாலதி Fri Jan 31, 2014 9:09 pm

விரதமுறை
விரதம் இருக்கலாம்
விரதம் இருக்கலாம்

ஜாதிமத பேதமின்றி
விரதம் இருக்கலாம்

ஆண்பெண் குழந்தைகளும்
விரதம் இருக்கலாம்

சாயிநாமம் சொல்லிவிட்டு
விரதம் இருக்கலாம்

மஞ்சள்துணி விரித்து
மன்னவனை அமர்த்து

தூயநீரை ஊற்று
துணியாலே துடைத்து

சந்தனம் குங்குமமிட்டு
மஞ்சள்நிற மலரணிந்து

ஊதுபத்தி சூடம் ஏற்று
விரதக்கதையை சொல்லு

பட்டினி அல்லது
பாலும் பழமுண்டு

இருந்தாலே நல்லது - இல்லை
ஒருவேளை சாப்பிடு

மாதவிலக்கு வந்தால்
மங்கையர்கள் கலங்காது

வாரங்கள் நகர்த்தலாம்
விரதத்தை தொடரலாம்


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

சீரடி சாய்பாபா பாடல்கள் Empty அறிவாயா பாபா ?

Post by மாலதி Fri Jan 31, 2014 9:09 pm

அறிவாயா பாபா ?
கள்ளம் இல்லா பிள்ளை நலத்தை
நீதான் அறிவாயா ?
உள்ளம் சுமக்கும் காயங்களுக்கு
மருந்தாய் வருவாயா ? 
இதயம் என்னும் பிச்சை பாத்திரம்
கேட்குது பசியோடு
அருளை அள்ளி பிச்சை தன்னை
அய்யா நீ போடு
நாயாய் நானும் அலைகின்றேனே
கருணை நீ காட்டு
சேயை காத்து தயவை சேர்த்து
நம்பிக்கை ஊட்டு

உண்மை கொண்ட உறவாய் இருந்தால்
அதுதானோ பிழையா ?
உயிர்கள் தம்மை கவர்வது தானே
அவர்கேட்கும் விலையா ?
சோகம் தன்னை சொல்லில் வைக்க
முடியாத நிலையா ?
நாடகம் இங்கே நடக்குது நாளும்
தவறான கலையா ?

கரடாய் முரடாய் மனித மனங்கள்
புரியாத புதிராய்
கடமை மீறிய கவலைகள் சொன்னால்
எப்போதும் எதிராய்
பேச்சும் மூச்சும் வார்த்தை வீச்சும்
என்றென்றும் அனலாய்
மகிழ்ச்சி வேண்டும் மாற்றிட வேண்டும்
வாழ்கையினை புதிதாய்


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

சீரடி சாய்பாபா பாடல்கள் Empty எங்கள் பாபா

Post by மாலதி Fri Jan 31, 2014 9:11 pm

எங்கள் பாபா
தன்னலமில்லா
தன்னிகரில்லா
தனிப்பெரும் சக்தி
பாபா
விளம்பரமில்லா
வித்தைகளில்லா
வியத்தகு சக்தி
பாபா
உன் நூலை படித்தவன்
காலை பிடித்தவன்
தோற்றது இல்லை
பாபா
பிறர் வாழ்வை கெடுத்தவன்
வருத்தம் கொடுத்தவன்
வாழ்ந்தது இல்லை
பாபா

சீடர்கள் கோடி
சீரடி தேடி
வருகின்றோமே பாபா
ரட்சகனே நீ
அட்சதை தூவி
வாழ்த்திடவேண்டும் பாபா
தியானச் சுடரே
ஞானக் கதிரே
பார்த்திடவேண்டும் பாபா
கருணை மழையால்
கவலைகள் தம்மை
கரைத்திடவேண்டும் பாபா

ஊனம் இல்லா
உள்ளம் எல்லாம்
சாத்தியமா சொல் பாபா
உலவிடும் இந்த
உறவுகள் எல்லாம்
சத்தியமா சொல் பாபா
ஆசைகள் போடும்
ஆட்டம் எல்லாம்
அடங்கிவிடாதோ பாபா
தீயவர் வீசிடும்
தீமைத் தீயது
தீய்ந்துவிடாதோ பாபா

வெள்ளை உடையில்
பிள்ளை நடையில்
எல்லை கடந்தவன் பாபா
காலைச்   சூரியன்
மாலைச் சந்திரன்
எல்லாம் எங்கள் பாபா
பசுவின் மடியினில்
சுரக்கும் அருளெனும்
பாலும் எங்கள் பாபா
வாசப் பூவில்
வாசம் செய்யும்
தேனும் எங்கள் பாபா !


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

சீரடி சாய்பாபா பாடல்கள் Empty பிருந்தாவனம்

Post by மாலதி Fri Jan 31, 2014 9:12 pm

பிருந்தாவனம்

செய்வோம் தவம்
பெறுவோம் வரம்
சாயி சாயி என்று சொல்ல
பரவும் சுகம்
நந்த வனம்
பூங்கா வனம்
சீரடி தான் எங்களுக்கு பிருந்தாவனம்

யாமிருக்க பயமது
வேண்டமென்றாய்
யாவருக்கும் நலமது
தருவேனென்றாய்
கோரிக்கை எதுவென்று
நீயும் கேட்டாய்
நம்பிக்கை கொண்டோர்க்கு
முகவரி தந்தாய்

விண்ணுலகம் கலந்து
கண்ணீர் தந்தாய்
மண்ணுலகை மறந்து
ஏன் நீ சென்றாய்
பூவுலகில் மறுபடியும்
என்று வருவாய்
புன்னகைகள் எப்போது
நீயும் தருவாய்


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

சீரடி சாய்பாபா பாடல்கள் Empty நாயகன்

Post by மாலதி Fri Jan 31, 2014 9:13 pm

நாயகன்

சீரடி வாழும் துறவி
ஈரடி தொட்டு தழுவி
விழிகளிலே விழிகளிலே ஈரமே
விலகுதம்மா விலகுதம்மா பாரமே
அருளை வழங்கும் அருவி
அகிலத்தில் மேன்மை தருவி
வருவதிலே வருவதிலே இன்பமே
விலகிடுமே விலகிடுமே துன்பமே

அருள்மழையே கருணைக்கடலே 
அற்புதப் பேரொளியே
பொருள்தருவாய் புகழ்தருவாய்
உதவிட உயர்ந்திடவே
கனவிலும் நனவிலும் வருகைசெய்
கடமைகள் நன்றாய் நடத்திவை
பணிகளை காத்திடு பிணிகளை போக்கிடு
பக்தனை வாழ்த்திடு

பற்றியதே பரவியதே
பரம்பொருளின் புகழே
ஆகாரம் ஆதாரம்
நீயே அவதாரம்
நோய்கள் நீக்கும் மருத்துவன்
உயிர்கள் காக்கும் காவலன்
ஏணிகள் தருபவன் ஏழைக்கு சேவகன்
எங்களின் நாயகன்


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

சீரடி சாய்பாபா பாடல்கள் Empty எங்களுக்கு கிழக்கு

Post by மாலதி Fri Jan 31, 2014 9:14 pm

நீ  தானே எங்களுக்கு கிழக்கு
எங்களுக்கு கிழக்கு
நீர் ஊற்றினாய் எரியுது விளக்கு
கொதிகலனில் கைகள் கொண்டு
சமைத்தாய்
மதங்களை தாண்டி மனிதம்
அமைத்தாய்
யாசகம் எடுத்தாய் தர்மமும் கொடுத்தாய்
யாரய்யா என்றால் நீயும் சிரித்தாய்
கோடானுகோடி இதயம் பிடித்தாய்

பஞ்ச பூதங்களும் உன் கட்டுக்குள்
பக்தரெல்லாம் உன் கட்டளைக்குள்
பாபா பாபா என்று உருகி
வருகின்றார்
பாவம் நீங்கி பாதை கண்டு
எழுகின்றார்


எங்கெங்கு காணினும் உன் கோயில்கள்
அங்கங்கு தர்மத்தின் வாயில்கள்
நாளும் உந்தன் தலத்தை நோக்கி
வருகின்றார்
குருவே உன்னை கண்ணீர் மல்க
தொழுகின்றார்


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

சீரடி சாய்பாபா பாடல்கள் Empty விரதமிரு...

Post by மாலதி Fri Jan 31, 2014 9:14 pm

விரதமிரு...
விரதமிரு விரதமிரு வியாழன் தோறும்
விருப்பங்களும் திருப்பங்களும் உன்னை சேரும்

உள்ளத்தில் அவன் நினைவை நீயும் ஏற்று
ஊதுவத்தி தீபம்தனை நீயும் ஏற்று

மஞ்சள்நிற மலர்களையே நீயும் சூடு
மகனாவான் திருப்புகழை நீயும் பாடு

சந்தனமும் குங்குமமும் அவனுக்கு சாற்று
சாயிநாதன் நாமாவளி சொல்லிப் போற்று

பாலும் கொஞ்சம் பழங்களும் நீயும் உண்ணு
பாபாவின் திருநாமம் நீயும் எண்ணு

நிவேதனம் செய்ததை பிறருக்கு கொடு
நிம்மதிகள் வந்துகூடும் கவலையை விடு

வாரங்கள் ஒன்பது விரதம் நீ இரு
வரங்கள் தரும் சுகங்களை நீயும் பெறு


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

சீரடி சாய்பாபா பாடல்கள் Empty சாயிநாதா

Post by மாலதி Fri Jan 31, 2014 9:15 pm

சாயிநாதா
கன்னத்தில் வழிந்தோடும் கண்ணீரை துடைக்கின்ற
விரலானவன் நீ விரலானவன்
நிறைகளை பார்க்கின்ற குறைகளை கேட்கின்ற
குரலானவன் நீ குரலானவன்
புத்தியை சுத்தி செய்தோம்
புத்தி புதிதானதே
புத்தியில் பக்தி சேர்த்தோம்
புத்தி மணமானதே
நீயே எங்கள் துணைவன்
நீயே எங்கள் தலைவன்
நீயே எங்கள் இறைவன்
சாயிநாதா
சாயிநாதா


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

சீரடி சாய்பாபா பாடல்கள் Empty சகலமுமே நீயானாய்

Post by மாலதி Fri Jan 31, 2014 9:16 pm

சகலமுமே நீயானாய்
எண்ணமெல்லாம் நிறைந்தவன்
வண்ணமெல்லாம் வரைந்தவன்
எங்களுக்கு என்றுமே தாயுமானவன்
சிந்தையிலே வாழுகின்ற தந்தையானவன்
சகலமுமே நீயானாய் சாயிநாதா
சத்தியமும் சந்தோஷமும் யாவும்நீ தா

உள்ளமெனும் தாள் தனிலே
உன்பெயர் எழுதிவிட்டோம்
உதியின் மகிமைதனை
உலகுக்கு சொல்லிவைத்தோம் 
உன் நாமம் சொல்லசொல்ல
உதட்டுக்கு வலிக்கவில்லை
உந்தன் நினைவை விட
வேறேதும் பிடிக்கவில்லை

கண்கள் கலங்கினால்
ஆறுதல் உன்மடிதான்
கைகள் எப்பொழுதும்
தொழுவது உன்னடிதான்
நிழலாய் இருக்குதையா
உந்தன் சந்நிதிதான்
நித்தமும் கிடைக்குதய்யா
நெஞ்சுக்கு நிம்மதிதான்


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

சீரடி சாய்பாபா பாடல்கள் Empty சீரடி பாபா

Post by மாலதி Fri Jan 31, 2014 9:17 pm

சீரடி பாபா
விதியாலும் மதியாலும் சதியாலும் இங்கே
விளைவுகள் கோடி கோடி
அலைந்தோமே கலைந்தோமே தொலைந்தோமே  நாங்கள்
வழிதனை தேடி தேடி
யாரிடம் சொல்வது
யாரிடம் செல்வது
எங்களுக்கு ஏது கதி !
யாரிங்கு உண்மையாய் ?
யாரிங்கு வன்மையாய் ?
உன்னிடம் சரணாகதி !
சீராக்கு எம்வாழ்வை சீரடி பாபா !
சிறப்பாக்கு எம்வால்வை சீரடி பாபா !
ஆகாயம் நீதானே சீரடி பாபா !
ஆனந்த மழையாய்வா சீரடி பாபா !


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

சீரடி சாய்பாபா பாடல்கள் Empty யாரவன் ???

Post by மாலதி Fri Jan 31, 2014 9:17 pm

யாரவன் ???

புண்ணியம் செய்ததொரு வேப்பமரம்
புனிதனை நிழல்தந்து பார்த்தமரம்
யாருடன் பேசாமல் யாரென்று கூறாமல்
இரவையும் பகலையும் கடந்தான் ஒருவன்
குளிரிலும் வெயிலிலும் நடந்தான் ஒருவன்
யாரவன் அவன் யாரவன்
உலகினை காக உதித்தவன்
உள்ளத்தில் தம்மை பதித்தவன்
பாபா பாபா பாபா பாபா
பாபா பாபா
பாபா பாபா பாபா பாபா
சாயி பாபா

ஆண்டியா ? இல்லை அரசனா ?
யாரவன் அவன்
யாரவன் அவன்
யாரவன்
யாரவன் அவன்
யாரவன் அவன்
யாரவன்
கண்ணனா ? தத்தாத்ரேயனா ?
யாரவன் அவன்
யாரவன் அவன்
யாரவன்
யாரவன் அவன்
யாரவன் அவன்
யாரவன்
ஆதியும் அந்தமும் அற்றவன்
அகிலத்தை ஆளுகின்ற கொற்றவன்
பாபா பாபா பாபா பாபா
பாபா பாபா
பாபா பாபா பாபா பாபா
சாயி பாபா

யோகியா ? இல்லை தியாகியா ?
 யாரவன் அவன்
யாரவன் அவன்
யாரவன்
யாரவன் அவன்
யாரவன் அவன்
யாரவன்
நாடோடியா ?  வழிப்போக்கனா ?
யாரவன் அவன்
யாரவன் அவன்
யாரவன்
யாரவன் அவன்
யாரவன் அவன்
யாரவன்
நன்மைகள் ஏராளம் புரிந்தவன்
நம்மையும் நன்றாக அறிந்தவன்
பாபா பாபா பாபா பாபா
பாபா பாபா
பாபா பாபா பாபா பாபா
சாயி பாபா


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

சீரடி சாய்பாபா பாடல்கள் Empty மகானே

Post by மாலதி Fri Jan 31, 2014 9:18 pm

மகானே
மகானே உன் மடி கொடு
நான் சோகம் சொல்லி அழவேண்டும்
மகானே தலை கோதிடு
நான் வாழ்வு பெற்று எழவேண்டும்
பயனுற வாழ - பயன்
பலரையும் சூழ
பகவானே நீ உதவிடு
பகலவனே நீ ஒளிகொடு

மதங்களை கடந்தவன் நீ
மனங்களில் நிறைந்தவன்
லீலைகள் புரிந்தவன் நீ
வேளைகள் அறிந்தவன்
காடுமலைகளில் அலைந்தவன்
காட்சியில் நீ எளியவன்
உலகம் முழுதும் உன்னை புகழும்
நீதானே என் இறைவன்

பாடல்கள் பாடினாய் நீ
ஆடல்கள் ஆடினாய்
உணவினை நாடினாய் நீ
உணவினை வழங்கினாய்
கோபத்தில் நீ உணர்த்தினாய்
நோய்களை நீ நீக்கினாய்
உலகம் முழுதும் உன்னை புகழும்
நீதானே என் தாயானாய்


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

சீரடி சாய்பாபா பாடல்கள் Empty Re: சீரடி சாய்பாபா பாடல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum