TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:45 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:44 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:24 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


போரின் இறுதிக்கட்டத்தில் பெருமளவான மக்கள், கிளஸ்டர் மற்றும் இரசாயனக் குண்டுகளினாலேயே மரணமானதாக மன்னார் ஆயர் இராயப்பு யோசப்

Go down

போரின் இறுதிக்கட்டத்தில் பெருமளவான மக்கள், கிளஸ்டர் மற்றும் இரசாயனக் குண்டுகளினாலேயே மரணமானதாக மன்னார் ஆயர் இராயப்பு யோசப் Empty போரின் இறுதிக்கட்டத்தில் பெருமளவான மக்கள், கிளஸ்டர் மற்றும் இரசாயனக் குண்டுகளினாலேயே மரணமானதாக மன்னார் ஆயர் இராயப்பு யோசப்

Post by மாலதி Sun Jan 26, 2014 6:37 pm

போரின் இறுதிக்கட்டத்தில் பெருமளவான மக்கள், கிளஸ்டர் மற்றும் இரசாயனக் குண்டுகளினாலேயே மரணமானதாக மன்னார் ஆயர் இராயப்பு யோசப் 1623664_645325408880676_1434841199_n

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கை விமானப்படை கிளஸ்டர் குண்டுகளைப் பயன்படுத்தியதா என்ற விவாதம், மூன்று வாரங்களைக் கடந்தும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
போரின் இறுதிக்கட்டத்தில் பெருமளவான மக்கள், கிளஸ்டர் மற்றும் இரசாயனக் குண்டுகளினாலேயே மரணமானதாக மன்னார் ஆயர் இராயப்பு யோசப், இம்மாத தொடக்கத்தில் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் தூதுவர் ஸ்டீபன் ராப்பிடம் எடுத்துக் கூறியிருந்தார்.

இதைக் கூறியதற்காக யாழ். மற்றும் மன்னார் ஆயர்களை பயங்கரவாதிகள் என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசாங்கத் தரப்பில் அமைச்சர்களாக உள்ளவர்களும், சிங்கள பௌத்த தேசிய இனவாதிகளும் போர்க்கொடி எழுப்பி வருகின்றனர்.

இலங்கை அரசாங்கம் போரில் கிளஸ்டர் குண்டுகளை பயன்படுத்தியதான குற்றச்சாட்டு இப்போது தான் கிளம்பியுள்ள ஒன்று அல்ல.

அது இறுதிக்கட்டப் போர், வன்னியின் கிழக்குப் பக்கம் நகரத் தொடங்டகிய போதே அவ்வப்போது, கிபிர் போர் விமானங்கள் மூலம் கிளஸ்டர் குண்டுகள் வீசப்பட்டதாக தகவல்கள் வெளியாகி வந்தன.

அவ்வாறு வீசப்பட்ட குண்டுகள் சிலவற்றின் படங்களும் விடுதலைப் புலிகளால் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டிருந்தன. ஆனால், அரசாங்கம் ஒருபோதுமே கிளஸ்டர் குண்டுகளைத் தாம் போரில் பயன்படுத்தியதாக ஒத்துக்கொண்டதில்லை. கிளஸ்டர் குண்டுகள் என்பது உலகின் அபாயகரமான ஆயுதங்களில் ஒன்றாகக் கணிக்கப்படுகின்றது.

விமானத்திலிருந்து வீசப்படும் ஒரு குண்டு, இடையில் பிரிந்து, பரந்த பிரதேசம் எங்கும் வீழந்து வெடிக்கும் திறன்கொண்டது. இதன் மூலம் குறிப்பிட்ட ஒரு பிரதேசத்தை ஆட்களற்ற பிரதேசமாக மாற்றிவிட முடியும்.

2008ம் ஆண்டின் உலகளாவிய ரீதியாக அறிமுகப்படுத்தப்பட்ட கிளஸ்டர் ஒழிப்பு பிரகடனத்தில் இதுவரை 112 நாடுகள் இணைந்து கொண்டுள்ளன.

ஆனால் இதில் கையெழுத்திடாத அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் உள்ளிட்ட 83 நாடுகளில் இலங்கையும் உள்ளடங்குகிறது.

அதுமட்டுமன்றி அண்மைக்காலத்தில் கிளஸ்டர் குண்டுகளைப் பாவித்த நாடுகள் என்று 16 நாடுகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் இலங்கையும் ஒன்றாகும்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், புதுடில்லியில் உள்ள ஏ.பி செய்தியாளர் ரவி நெஸ்மன் இலங்கையில் போரின் போது கிளஸ்டர் குண்டு பயன்படுத்தப்பட்டுள்ளதான தகவலை அம்பலப்படுத்தியிருந்தார்.

வன்னியில், கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த ஐநா அபிவிருத்தித் திட்ட அதிகாரியான அலன் போஸ்டன், வெடிக்காத கிளஸ்டர் குண்டுகளை தாம் மீட்டுள்ளதாக, அவருக்குத் தகவல் வழங்கியிருந்தார்.

ஆனால் அதனை இலங்கை அரசாங்கம் நிராகரித்திருந்தது.

இறுதிப் போர் நடந்த பகுதிகளை இராணுவம் துப்புரவு செய்த பின்னரே, அந்தப் பகுதிக்கு ஏனைய கண்ணிவெடி அகற்றும் குழுக்கள் அனுமதிக்கப்பட்டன.

எனவே போரின் இறுதிக்கட்டத்தில் பயன்படுத்தப்பட்ட குண்டுகள் தொடர்பான ஆதாரங்கள் பலவற்றைப் படையினர் முன்னரே மறைத்து விட்டதாக கூறப்படுவதுண்டு.

தாம் ஒருபோதும் கிளஸ்டர் குண்டுகளைப் பயன்படுத்தியதில்லை என்று அரசாங்கமும் படைத்தரப்பும் கூறி வந்ததற்கு இந்தத் துணிவு கூட காரணமாக இருந்“திருக்கலாம்.

அண்மையில் மன்னார் ஆயரின் குற்றச்சாட்டை மறுத்த இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய, தாம் கிளஸ்டர் குண்டுகளை ஒருபோதும் பயன்படுத்தியதில்லை என்று மட்டும் கூறவில்லை.

கிளஸ்டர் குண்டுகளை ஏவும் வசதிகள் இலங்கைப் படையினரிடம் கிடையாது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் அதறகு முரணான வகையில் கருத்து வெளியிட்டுள்ளார் முன்னாள் விமானப்படைத் தளபதிஜயான எயார் மார்ஷல் றொசான் குண்திலக.

கிளஸ்டர் குண்டுகளைப் பயன்படுத்தும் வசதிகள் இருந்தாலும், தாம் ஒருபோதும் அவற்றைப் பயன்படுத்தியது கிடையாது என்று அவர் கூறியுள்ளார்.

இலங்கை விமானப்படை போரில் பயன்படுத்திய இஸ்ரேலிய தயாரிப்பு கிபிர், ரஷயத் தயாரிப்பு மிக் 27, சீனத் தயாரிப்பு எவ் 7 ஆகிய தரைத் தாக்குதல் விமானங்களில் கிளஸ்டர் குண்டுகளைப் பயன்படுத்தும் வசதிகள் உள்ளன.

போரில் கிளஸ்டர் குண்டுகளை மனிதர்களுக்கு எதிராகப் பயன்படுத்துவதை விட, விமான ஓடுபாதைகளை அழிப்பதற்குப் பயன்படுத்துவதே முக்கியமானது.

விமான ஓடுபாதைகளைச் சேதப்படுத்தி, எதிரியின் போர் விமானங்களை தரையிலேயே செயலிழக்க வைக்க கிளஸ்டர் குண்டுகளைப் பயன்படுத்துவது வழக்கம்.

எனவே அமெரிக்கா இஸ்ரேல், ரஷ்யா, சீனா போன்ற நாடுகளால் வடிவமைக்கப்படும் போர் விமானங்களில் குறிப்பாக தரைத் தாக்குனுதல் விமானங்களில் ஓடுபாதைகளை அழிக்கும் கிளஸ்டர் குண்டுகளைச் செலுத்தும் வசதிகள் நிச்சயம் இருக்கும்.

ஆனால் அந்தப் போர் விமானங்களைப் பயன்படுத்தும் எல்லா நாடுகளும் அதற்குரிய கிளஸ்டர் குண்டுகளை வைத்திருக்க வேண்டிய அவசியம் கிடையாது.

இலங்கை அரசாங்கமோ கிளஸ்டர் குண்டுகள் தம்மிடம் இல்லை என்கிறது.

ஆனால் ஒரு கட்டத்தில் தமக்கு அமெரிக்காவோ கிளஸ்டர் குண்டுகளை கொள்வனவு செய்யுமாறு ஆலோசனை கூறியதான தகவலையும் அரசாங்கம் வெளியிட்டது. அது கிளஸ்டர குண்டு குற்றச்சாட்டில் அமெரிக்காவையும் மாட்டிவிடும் நோக்கிலானது.

2002ம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கும் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்துக்கும் இடையில் போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்த பின்னர் இலங்கைப் படையினரை பலப்படுத்துவது குறித்து அமெரிக்கா அறிக்கை ஒன்றைத் தயாரித்திருந்தது.

அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பீடத்தைச் சேர்ந்த முப்படை அதிகாரிகள் குழு 2002 செப்படம்பர் 12ம் திகதி தொடக்கம் ஒக்டோபர் 24ம் திகதி வரையான காலப்பகுதியில் ஒரு விரிவான ஆய்வை மேற்கொண்டிருந்தனர்.

மூன்றாம் கட்ட ஈழப்போரில் இலங்கைப் படையினர் புலிகளிடம் கண்டிருந்த தோல்விகளை அடிப்படையாக வைத்து, அதற்கான காரணங்களை மதிப்பிட்டு, மீண்டும் ஒரு போர் வெடித்தால் அதற்குத் தயாராக இருக்கச் செய்வதற்கான ஆய்வே அது. இதன்போது இருதரப்பு ஆயுத பலம், ஆட்பலம் படைத்தளங்களின் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்தும் கவனத்தில் எடுக்கப்பட்டன.

இதையடுத்து அமெரிக்க பசுபிக் கட்டளைப் பீடம் சமர்ப்பித்த அறிக்கையில் பெரும்பாலான அம்சங்களை இலங்கை அரசாங்கம் நிராகரித்து விட்டது.

அந்த அறிக்கையில் தான் கிளஸ்டர் குண்டுகளை விமானப்படை கொள்வனவு செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. அதைத் தாம் நிராகரித்து விட்டதாக இலங்கை அரசாங்கம் கூறியிருந்தாலும் அமெரிக்காவுக்குத் தெரியாமல் ரஷயாவிடமோ, சீனாவிடமோ அவற்றை இலங்கை அரசாங்கம் கொள்வனவு செய்திருக்கலாம்.

ஏனென்றால் போரின் இறுதிக்கட்டத்தில் பெரும்பாலான ஆயுதங்களை இந்த நாடுகள் தான் இலங்“கைக்கு விநியோகித்திருந்தன.

இலங்கை அரசாங்கம் கிளஸ்டர் குண்டுகளைப் போரில் பயன்படுத்தியதாக கூறினால் கூட அதற்கெதிராக எதுவும் செய்ய முடியாது.

ஏனென்றால கிளஸ்டர் எதிர்ப்பு பிரகடனத்தில் இலங்கை கையெழுத்திடவில்லை.

ஆனால் போரின் இறுதிக்கட்டத்தில் கிளஸ்டர் குண்டுகளைப் பயன்படுத்தியதாக ஒத்துக்கொண்டாலோ, அவை பயன்படுத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டாலோ இலங்கைக்குச் சிக்கலாகி விடும்.

பொதுமக்கள் செறிவாக குவிந்திருந்த ஒரு பிரதேசத்தில் பேரழிவை ஏற்படுத்தும் கிளஸ்டர் குண்டுகளை பயன்படுத்தியது மனித குலத்திற்கு எதிரான குற்றமாக வகைப்படுத்தப்படக்கூடிய ஆபத்து உள்ளது.

அதனால்தான் கிளஸ்டர் குண்டுகள் பற்றிய குற்றச்சாட்டுகள் வந்ததுமே அரச தரப்பு அடியோடு நிராகரித்து வருகிறது.

போரில் கிளஸ்டர் குண்டுகளைப் பயன்படுத்தியற்கான தடயங்களை அரச படையினர் அழித்து விட்டிருக்கலவாம்.

ஆனால் வெடிக்காத குண்டுகள் அனைத்தையும் அவர்களால் கண்டுபிடித்து அழித்திருக்க முடியாது.

அத்தகைய குண்டுகள் ஏதாவது வெளிநாட்டு கண்ணிவெடி அகற்றும் குழுக்களிடம் சிக்கியிருந்தால், அவை ஐநாவுக்கோ அமெரிக்காவுக்கோ முக்கியமான சான்றுப் பொருளாகக் கிடைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கை அரசு தமிழர்களுக்கு எதையும் கொடுக்காது! - மன்னார் ஆயர் இராயப்பு யோசப்.
» போரின் இறுதியில் விஸ்வமடுவில் 35 ஆயிரம் சடலங்கள்! - மன்னார் ஆயர் பிபிசிக்கு தகவல்
» யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வீடுகள், சிங்களவர்களுக்கும் அரசியல்வாதிகளின் உறவினர்களுக்குமே! - மன்னார் ஆயர்
» இந்தியப் பிரதமரிடம் மன்னார் ஆயர் கூறியது என்ன…
» ஜெனிவாக் கூட்டத் தொடரையே தமிழ் மக்கள் அதிகம் எதிர்பார்த்துள்ளதாகவும் இதிலிருந்தே நீதி, நியாயம் கிடைக்குமென நம்புவதாகவும் யாழ். மறை மாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தர நாயகம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum