TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Apr 19, 2024 9:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


இல்லற வாழ்வின் பிரச்சினைகளும் ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களும் தீர்வுகளும்

2 posters

Go down

இல்லற வாழ்வின் பிரச்சினைகளும் ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களும் தீர்வுகளும்  Empty இல்லற வாழ்வின் பிரச்சினைகளும் ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களும் தீர்வுகளும்

Post by KAPILS Fri May 17, 2013 11:06 pm

திருமணங்கள் சுவர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்பார்கள். இரு மனங்கள் கலந்தால் திருமணம் என்பார்கள். திருமணம் ஆயிரம் காலத்து பயிர் என்பார்கள். ஒருவருடைய வாழ்வில் மிக இனிமையானதும், மங்களகரமானதும், மறக்க முடியாததுமான விடயம்தான் திருமணம்.

திருமணத்தின் போது ஒருமை ஓரங்கட்டப்பட்டு பன்மை பதவிக்கு வருகிறது. ஈருயிர் ஓருயிராகிறது. மூன்றாவது உயிர் பிறக்கிறது. சட்ட ரீதியான முறையிலும் சமயம் மற்றும் குடும்ப சமூக அங்கீகாரத்துடன் ஆண், பெண் ஜோடி இணைந்து வாழ்வதற்கு திருமணம் புரிவது அவசியமாகிறது. மேலும் பல காரணங்களும் உள்ளன.

திருமணம் புனிதமானதும் மனித தேவையுடையதுமான விடயமாகும். எமது நாட்டு கலை, கலாசார பண்பாட்டு விழுமியங்களில் திருமணத்திற்கு முக்கிய இடம் வழங்கப்பட்டுள்ளது.

மேலைத்தேய நாடுகள் போல ஆண், பெண் ஜோடிகள் சட்ட ரீதியான முறையில் திருமணம் செய்யாமல் இணைந்து வாழ்வதை எமது சமூகம் அங்கீகரிப்பதில்லை. அந்த நாட்டவர்கள் போல் சிறிய சிறிய விடயங்களுக்கெல்லாம் விவாகரத்து செய்யும் கலாசாரமும் எம்மிடம் இல்லை.

ஆயினும், புதிய ஆய்வுகளின்படி எமது நாட்டில் திருமணங்கள் பல தோல்வியில் முடிவடைவது அதிகரித்து வருவதாகவும், விவாகரத்து செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் கண்டறியப்பட்டு அபாய ஒலி எழுப்பப்பட்டுள்ளது.

திருமண வாழ்க்கையின் தோல்விகள், ஏமாற்றங்கள் , பிரிவுகள் என்பன தனி மனிதனின் ஆரோக்கியத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதற்காகவே இந்தக் கட்டுரையில் இந்த விடயம் பற்றி ஆராயப்படுகிறது.

25வயதிற்கும் குறைந்தவர்கள் செய்து கொள்ளும் திருமணங்களில் 75சதவீதம் தோல்வியில் முடிவடைவதாக சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றிலிருந்து தெரிய வந்துள்ளது.

குடும்ப வாழ்க்கை தோல்வியில் முடிவடைவதற்குக் காரணம் 25 வயதிற்கும் குறைந்த வயதில் திருமணம் செய்து கொள்வது எனவும், கிராமப் பகுதிகளில் இவ்வாறான திருமணங்கள் அதிகம் இடம்பெறுவதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நிரந்தர தொழில் இல்லாத ஒருவருக்கு இவ்வாறு திருமணம் செய்து வைப்பதால் அல்லது திருமணம் செய்வதால் சிறிது காலத்தில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு குடும்ப வாழ்க்கை தோல்வியில் சென்று முடிகிறது எனவும், கல்வி அறிவு குறைவும் குடும்ப வாழ்க்கையின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைகிறது எனவும் சுகாதார அமைச்சின் ஆய்வில் தெரிய வந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

காதலித்து திருமணம் செய்வோரில் 30 சதவீதமானோரின் திருமணம் தோல்வியில் முடிவடைவதாகவும் சுகாதார அமைச்சு மேற்கொண்ட அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் திருமணம் செய்யும் 60 சதவீதமானவர்களுக்கு திருமணமாகி மூன்று வருடங்களுக்குள் திருமணம் கசப்பதாகவும் அதிக எண்ணிக்கையானோர் விவாகரத்து செய்வதாகவும் இன்னொரு ஆய்வொன்றின் மூலம் தெரிய வந்துள்ளது.

இவ்வாறு விவாகரத்து செய்யும் பெரும்பாலான தம்பதிகள் காதலித்து திருமணம் செய்தவர்கள் என்றும் அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தம்பதியினர் ஒருவரையொருவர் புரிந்து கொள்ள வேண்டிய காலத்தில் உணர்வுபூர்வமாக சரியாக புரிந்து கொள்ளாமை, ஒருவருக்கொருவர் அர்ப்பணிப்புடன் நடக்காமை, சகிப்புத்தன்மையுடன் நடந்துகொள்ளாமை, பாலியல் தேவைகளை சரியாகப் புரிந்து கொள்ளாமை மற்றும் பாலியல் தொடர்பாக தவறாக புரிந்து கொண்டுள்ளமையே இது போன்ற விவாகரத்துக்கு பிரதான காரணம் என அந்த ஆய்வின் மூலமாக மேலும் தெரிய வந்துள்ளது.

அதேபோல், நாட்டில் விவாகரத்து புரிவோர் வீதாசாரம் சீக்கிரமாக அதிகரித்து வருவதாகவும், மாவட்ட நீதிமன்றங்களில் விசாரிக்கப்படும் வழக்குகளில் அதிக எண்ணிக்கையானவை விவாகரத்து தொடர்பானவை எனவும் அந்த ஆய்வினை மேற்கொண்ட சட்டத்தரணி ரொஜி ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

ஆய்வுகளின் முடிவுகள் அதிர்ச்சியளிப்பனவாக உள்ளன அல்லவா?

பிரச்சினைகள், காதல் தோல்விகள், விவாகரத்துக்கள், பிரிவுகள் என்பன சம்பந்தப்பட்டோரில் மேலும் பல பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்பது உண்மை.

அவை அவர்களது உடல், உள, சமூக ரீதியான ஆரோக்கியத்திலும் தாக்கங்களை ஏற்படுத்தும்.

அவற்றில் முக்கியமானவைகளை பார்ப்போம்.

1. கவலைகளை மறப்பதற்காக சிகரட், மதுபானம் மற்றும் போதைப் பொருட்களை பயன்படுத்துதல் அல்லது அடிமையாதல்.

2. இதன் காரணமாக நோய்களுக்கும் (இதய நோய்கள், நீரிழிவு, புற்றுநோய் போன்றன) உடல் பாதிப்புக்களுக்கும் ஆளாதல்.

3. உள ரீதியான பாதிப்புகளுக்கு ஆளாதல்.

4. விரக்தி, வெறுப்பு.

5. ஒதுக்கி வாழுதல்.

6. உணவில் நாட்டமின்மை.

7. எளிதில் நோய்களுக்கு ஆளாதல்.

8. உடல் ஆரோக்கியத்திலும் உடல் தோற்றத்திலும் கவனம் செலுத்தாமை.

9. தற்கொலை முயற்சி அல்லது தற்கொலை புரிதல்.

10. தவறான பாலியல் பழக்க வழக்கங்கள் மற்றும் தவறான பாலியல் தொடர்புகள் ஏற்படும் வாய்ப்பு.

11. திருமணத்திற்கு அப்பாலான தொடர்புகள், நட்புகள், உறவுகள் ஏற்படல்.

இன்னும் இது போன்றன.

இப்பிரச்சினைக்கான தீர்வுகள் சில

1. பிரச்சினைகள் ஏற்படும் போது அறிவு ரீதியாக தீர்மானம் எடுத்தல்.

2. ஒருவரையொருவர் வெளிக்கவர்ச்சிகளுக்கு மயங்கி காதலித்து திருமணம் செய்யாமல் உணர்வுபூர்வமாக புரிந்து கொள்ளல்.

3. சகிப்புத் தன்மையுடன் நடந்து கொள்ளல்.

4. விட்டுக் கொடுப்புடன் நடத்தல்.

5. ஒருவரை ஒருவர் உண்மையாக நேசித்தல், துரோகம் இழைக்காமை.

6. திருமணமான தம்பதிகள் ஒருவருக்கொருவர் புரிந்துணர்வுடன் தாம்பத்திய உறவை பேணுதல்.

7. காதலர்கள் திருமணத்திற்கு முன்னர் பாலியலில் ஈடுபடாமை.

8. பிரச்சினைகள் ஏற்படும் போது தமக்குள்ளேயே தீர்த்துக் கொள்ள முயற்சித்தல்.

9. பொருளாதார ரீதியில் தம்மை வளப்படுத்திக் கொள்ளல்.

10. சமய நெறிமுறைகளை பின்பற்றல்.

11. தொலைக்காட்சி நாடகம், திரைப்படங்களில் வரும் கதாபாத்திரங்கள் மற்றும் மேலைத்தேய கலாசாரங்களை பின்பற்றும் விடயத்தில் கவனமாக இருத்தல்.

12. குடும்ப வன்முறைகளில் ஈடுபடாமை. (அடித்தல், அச்சுறுத்தல், எச்சரித்தல், தீங்கிளைத்தல், கொடுமைப்படுத்தல், ஏசுதல் போன்றன)

13. மிக இளவயதில் திருமணம் செய்யும் போது ஏற்படும் குடும்ப, பொருளாதார ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து தீர்மானம் எடுத்தல்.

14. பெற்றோரின் விருப்பத்துடன் அல்லது அனுமதியுடன் திருமணம் செய்தல்.

15. விவாகரத்து செய்வதை முடிந்தளவு தவிர்த்தல்.

16. பாடசாலை வாழ்க்கையில் கல்விக்கு மாத்திரம் முக்கியம் கொடுத்தல். காதலில் ஈடுபட்டு கல்வியையும் வாழ்க்கையையும் வீணாக்காதிருத்தல்.

17. குடும்ப பொறுப்புடன் நடந்து கொள்ளல்.

- கலாநெஞ்சன் ஷாஜஹான் B.Ed
KAPILS
KAPILS
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 4340
Join date : 11/12/2011
Location : Tamilnadu

http://kabiltech.blogspot.in/

Back to top Go down

இல்லற வாழ்வின் பிரச்சினைகளும் ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களும் தீர்வுகளும்  Empty Re: இல்லற வாழ்வின் பிரச்சினைகளும் ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களும் தீர்வுகளும்

Post by அருள் Sat May 18, 2013 7:12 am

மனிதராக பிறந்த ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட பருவத்தில் திருமணம் செய்து கொள்ளவேண்டும். என்று அனைத்து மத சாஸ்தி ர[You must be registered and logged in to see this image.]ங்களும்
தெரிவிக்கின்றன. திரு மணம் என்பது அர்த்தமுள்ள வாழ்க் கையின் ஆரம்பம்
எனலாம். திரு மணம் என்பது இருவர் மனமொத்து மகிழ்ச்சியாக வாழ்ந்து குழந்தை
கள் பெற்று மகிழ்ச்சியை இன் னும் அதிகரிக்கச் செய்வது. இந்த மகிழ் ச்சி
என்பது பணமோ, புகழோ , அழ கோ, படிப்போ, நல்ல குணமோ, வீர மோ ,காமமோ ஏதோ ஒன்றை
அடிப்படையாக கொண்டிருக்கலாம். ஆனால் திருமணம் என்றாலே இன்றைய இளைஞர்கள் மிகவும் யோசிக்கின்றனர்.


[You must be registered and logged in to see this image.]திருமணம்
செய்து கொண்டவர்க ளும், “உனக்கு என்னப்பா நீ சுதந்தி ரப் பறவை, நான்
குடும்பஸ்தன்” என்று சலிப்பு வசனம் பேசுகிறார் கள். இளம் பருவத்தினர்
இருபால ரிடமும் திருமணத்தைப் பற்றி எதிர் மாறான கருத்துக்களே இருக் கிறது.
அதாவது திருமணத்தை கூடுதல் சுமையா கவும், கவலையாக கருதும் எண் ணம் அவர்க
ளிடம் உள் ளது.


லிவிங்-டுகெதர் :

திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்கும் பலரும் கூட லிவிங்-டுகெதர் [You must be registered and logged in to see this image.]வாழ்க்கைக்கு
சம்மதிக்கின்றனர். இத னால் குடும்பம் குறித்த சுமையில் லை, குழந்தை
பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இருவரின் தேவைகளை மட்டும்
நிறை வேற்றிக் கொண்டு தேவைப்ப டாவிட்டால் பிரிந்து விடலாம் என்ற
சூழ்நிலைக்கு வந்து விட்டனர். இணை ந்து வாழ்தல் என்றா லே உட னே காமம்
மட்டும் தான் என்றால் அது அலுத்துபோகும் மனமொத்து போகா பட்சத்தில்.
இப்படியான வாழ்வில் பெண்ணுக்குத்தான் அதிக பாதிப்பு என்று பயப்படுகின்றனர்
பலர்.. இது நிஜம்..


லிவிங்-டுகெதரில் நுழைபவர்கள் 100% இல்லற வாழ்வை ஆயுசு [You must be registered and logged in to see this image.]க்கும்
அதே நபரோடு தொடர வே ண்டும் என்ற ஆவலில்தான் தொட ங்கு கின்றார்கள்.. விளை
யாட்டு க்கல்ல. அதுமட்டுமல்ல 50 வயது க்கு மேலுள்ளவர்கள் , விவா கரத்
தானவர்கள், துணையை இழந்த வர்கள், பல காரணத்துக்காக மேல் நாட்டில் இணைந்து
வாழ்கின்ற னர் .


திருமணம் குறித்த ஆய்வுகள்

அவ்வப்போது நடக்கும் ஆய்வுகளோ ஒவ்வொருவருக்கும் திருமண ம் அவசியம். அதனால் உடல் ரீதியாக பல நன்மைகள் கிடைக்கிறது [You must be registered and logged in to see this image.]என்கிறது. இதேபோல் மனோரீதி யாகவும் பல நன்மைகள் உண்டு என்கிறது சமீபத்திய ஆய்வு.

சர்வதேச
நல அமைப்பான ஹூ (WHO ) வின் மனநலப் பிரிவு மற்றும் நியூ சிலாந்து
பல்கலைக்கழகம் இணை ந்து இது தொடர்பான ஆய்வில் ஈடு பட்டது. 15 நாடுகளைச்
சேர்ந்த 34 ஆயிரத்து 500 பேர் ஆய்வு க்கு உட்படுத்தப்பட்டனர். கடந்த 10
ஆண்டு களாக நடந்து வந்த இந்த ஆய்வின் முடிவுகள் சமீபத்தில் வெளியி
டப்பட்டது. இதில் வெளியா ன சில முக்கிய தகவல்கள்


மனரீதியான நன்மைகள் :

[You must be registered and logged in to see this image.]திருமணம்
செய்து கொள்வ தால் மனச்சோர்வு, கவலை மற்றும் மன நல பாதிப்புகள் குறைகிறது.
பெண்களைவிட ஆண்கள் திரு மணம் செய்வத ற்கு விருப்பக் குறைவுடன்
இருக்கிறார்கள். அதிக மனச் சோர்வு அடைகி றார்கள். அதே நேரத்தில் திரு மணம்
செய்து கொண்ட பிறகு பெண் களைவிட ஆண்கள் அதிகமான மனச்சோர்வு, கவலை களில்
இருந் து விடுபடுகிறார்கள். டிஸ்ஆர்டர் பாதிப்புகளும் குறைவாக இருக்கி ற[You must be registered and logged in to see this image.]து. பெண்கள் அதிகம் கல்வி அறி வு பெற்றிருப்பதால் சோர்வு நிலை குறைவாக இருக் கிறது. சிலரிடம் மட்டும் அதிகமி ருக்கிறது.


தம்பதிகள்
பிரிந்து வாழ்வது, யாரே னும் ஒருவர் இறந்துவிடுவது, விவாகரத்து பெற்றுக்
கொள்வது போன்ற காரணங்களால் ஏற்படும் மனநல பாதிப்புகள் அதிகரித்து உள்ளன.
குழந்தைக்காக சார்ந்து வாழ்வதில் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
புயலும் சீற்ற மும் இருக்கும் கடலிலே கப்பலோ ட்ட க்கூடிய மாலுமியே சிறந்த
வன். இன்றைய இளைய தலைமுறை யினரும் இதனை உணர்ந்து கொள்ளவேண்டும்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum