TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ஃபேஸ்புக்கில் கருத்து வெளியிட்டால் கைது செய்ய தடை? சட்ட மாணவி மனுவை விசாரணைக்கு ஏற்றது சுப்ரீம் கோர்ட்!

Go down

ஃபேஸ்புக்கில் கருத்து வெளியிட்டால் கைது செய்ய தடை? சட்ட மாணவி மனுவை விசாரணைக்கு ஏற்றது சுப்ரீம் கோர்ட்! Empty ஃபேஸ்புக்கில் கருத்து வெளியிட்டால் கைது செய்ய தடை? சட்ட மாணவி மனுவை விசாரணைக்கு ஏற்றது சுப்ரீம் கோர்ட்!

Post by மாலதி Thu May 16, 2013 2:42 pm

சமூக வலைத்தளங்களில் சர்ச்சை கருத்து வெளியிட்டால் மாநில அரசுகள் கைது
செய்ய தடை விதிக்க வேண்டும் என்று கோரி சட்ட மாணவி ஒருவர் மனு தாக்கல்
செய்தார். அதை சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றது.

மும்பையில் சிவசேனா தலைவர் பால்தாக்கரே மரணம் அடைந்தபோது அங்கு
கடையடைப்பு நடைபெற்றது. இதை விமர்சித்து, மும்பையை அடுத்த பால்கரை சேர்ந்த
ஷஹீன் ததா என்ற பெண் ‘பேஸ் புக்’ சமூக வலைத்தளத்தில், கருத்து
வெளியிட்டார்.

இந்த கருத்துக்கு அவரது தோழியான ரேணு சீனிவாசன் ‘லைக்’ போட்டு ஆதரவு
தெரிவித்தார். இது தொடர்பாக சிவசேனா பிரமுகர் ஒருவர் செய்த புகாரின்பேரில்,
அவர்கள் மீது தகவல் தொழில் நுட்பச்சட்டம் பிரிவு 66–ஏயின்படி தானே போலீஸ்
வழக்கு பதிந்து, கைது செய்தது. இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை
ஏற்படுத்தியது.
ஃபேஸ்புக்கில் கருத்து வெளியிட்டால் கைது செய்ய தடை? சட்ட மாணவி மனுவை விசாரணைக்கு ஏற்றது சுப்ரீம் கோர்ட்! 16-m-Information-Technology-Act
அதை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் ஸ்ரேயா சிங்கால் என்ற மாணவி ஒரு பொது நல
வழக்கு தொடுத்தார். வழக்கில் அவர் தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 66–ஏ
அரசியல் சட்டத்துக்கு எதிரானது என கூறி, அதை செல்லாது என்று அறிவிக்க கோரி
உள்ளார்.இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு இது தொடர்பாக
மத்திய அரசிடமும், தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சகத்திடமும், மராட்டிய
அரசிடமும் விளக்கம் கேட்டது.

அப்போது மத்திய அரசு, ‘‘தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 66–ஏ பேச்சு
சுதந்திரத்தை பாதிப்பதாக இல்லை. சில குறிப்பிட்ட அதிகாரிகளின்
அராஜகப்போக்கால் சட்டம் தவறானது என்று அர்த்தம் இல்லை’’ என கூறியது.மேலும்
தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் தாக்கல் செய்த
பதில் மனுவில், ‘‘இந்தச் சட்டப்பிரிவை தவறாக பயன்படுத்தக்கூடாது, மிகுந்த
கவனத்துடன்தான் பயன்படுத்த வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு ஆலோசனை
கூறப்பட்டுள்ளது’’ என தெரிவிக்கப்பட்டது.

மராட்டிய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், ”தானே போலீஸ் எடுத்த
நடவடிக்கை விரும்பத்தகாதது என ஒப்புக்கொண்டதுடன், சம்பந்தப்பட்ட போலீஸ்
சூப்பிரண்டு சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த
வழக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், தமிழக கவர்னர் ரோசய்யா, ஆந்திர மாநில காங்கிரஸ்
எம்.எல்.ஏ. அமாஞ்சி கிருஷ்ணமோகன் ஆகிய இருவர் மீதும் ஆந்திராவை சேர்ந்த
சிவில் உரிமைகளுக்கான மக்கள் யூனியனின் பொதுச்செயலாளர் ஜெயா விந்தயாள் என்ற
பெண், ‘பேஸ் புக்’ சமூக வலைத்தளத்தில், சர்ச்சைக்கிடமான கருத்துக்களை
வெளியிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக அவர் மீது அமாஞ்சி கிருஷ்ணமோகன், பிரகாசம் மாவட்ட போலீசில்
புகார் செய்தார். உடனே பிரகாசம் மாவட்ட போலீசார் ஜெயா விந்தயாள் மீது தகவல்
தொழில்நுட்ப சட்டம் பிரிவு 66–ஏயின்படி வழக்கு பதிவு செய்து, அவரை கைது
செய்து பிரகாசம் மாவட்ட மாஜிஸ்திரேட்டு இல்லத்தில் ஆஜர்செய்து, 12 நாள்
நீதிமன்ற காவலில் வைத்தனர். சமூக வலைத்தளத்தில் இவர் சர்ச்சைக்குரிய
கருத்துக்களை வெளியிடுவதற்கு முன்பாக அது தொடர்பாக துண்டு பிரசுரங்கள்
அச்சிட்டு வினியோகித்ததாகவும் தெரிகிறது. இந்த பிரச்சினை ஆந்திராவில்
பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, சட்ட மாணவி ஸ்ரேயா சிங்கால், தனது வழக்கினை விசாரித்து
வருகிற நீதிபதிகள் பி.எஸ். சவுகான், தீபக் மிஷ்ரா ஆகியோர் முன்னிலையில்
இன்று ஆஜரானார்.அப்போது அவர் நீதிபதிகளிடம், ‘‘நான் ஏற்கனவே தொடுத்த பொது
நல வழக்கு, இந்த நீதிமன்றத்தின் விசாரணையில் உள்ளது. இந்த நிலையில்,
ஆந்திராவில் ஜெயா விந்தயாள் என்ற பெண் மீது தகவல் தொழில்நுட்ப சட்டம்
பிரிவு 66–ஏயின்படி வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்து உள்ளனர். நான்
தொடுத்த வழக்கு விசாரணை முடியும் வரையில், இப்படி சமூக வலைத்தளங்களில்
சர்ச்சைக்கிடமான கருத்து வெளியிட்டதாக கூறி ஒருவரை கைது செய்து மாநில
அரசுகள் நடவடிக்கை எடுப்பதை தடுக்க வேண்டும்’’ என்று முறையிட்டார்.

இது தொடர்பாக அவர் ஒரு மனுவையும் தாக்கல் செய்தார். அந்த மனுவை
நீதிபதிகள் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டனர். எனவே இந்த மனுவின் விசாரணை
முடிவில், சமூக வலைத்தளங்களில் சர்ச்சை கருத்து வெளியிட்டால், மாநில
அரசுகள் கைது நடவடிக்கை எடுக்க தடை விதிக்கப்படுமா என்பது தெரிய வரும்.

Crackdown over Facebook, Google posts: SC to hear plea on content
**********************************************************************************
The Supreme Court today agreed to hear a plea seeking to restrain
government authorities from taking any coercive action against anyone
for posting alleged objectionable content on social networking sites
like Facebook and Google.
An application was filed before the apex court seeking its direction to
the authorities not to take action for posting such comments during the
pendency of a case before it pertaining to constitutional validity of
section 66A of the Information Technology Act in India.
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்டால் அனுமதியின்றி கைது செய்யக்கூடாது: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
» ஹசாரே கைது : சுப்ரீம் கோர்ட் கருத்து
» ஆள் கடத்தல் வழக்கில் அமைச்சரை சேர்க்க கோரிய மனு விசாரணைக்கு ஏற்றது கோர்ட்: ஆதரவாளர்கள் அதிர்ச்சி
» 120 அடியாக குறைக்க கோரும் கேரள அரசின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
» சுப்ரீம் கோர்ட் அனுமதி!ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியைத் தொடங்க சுப்ரீம் கோர்ட் அனுமதி!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum