TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:22 pm

» Simon Daniel
by வாகரைமைந்தன் Yesterday at 10:02 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 25, 2024 12:46 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 23, 2024 4:19 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Sep 22, 2024 7:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


'காது இரைச்சல்' சாதுவையும் கடுகடுப்பாக்கும்

Go down

'காது இரைச்சல்' சாதுவையும் கடுகடுப்பாக்கும் Empty 'காது இரைச்சல்' சாதுவையும் கடுகடுப்பாக்கும்

Post by Tamil Fri Mar 01, 2013 6:30 pm

ஆபீசில் இருந்த அவருக்கு தனது வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. ஏதோ
ஒன்று அவரைத் துன்புறுத்திக் கொண்டிருக்கிறது என்பதை அவரின் கீழ் வேலை
செய்யும் ஏனைய பணியாளர்களால் உணர முடிந்தது. வழமையாகச் சிரித்துக்
கலகலப்பாக இருப்பவர் இன்று எதையோ பறி கொடுத்தவர்போல அமைதியின்றி நிலை
கொள்ளாது தவித்தார்.

அவரை ஒரு நோய் திடீரெனத் துன்புறுத்த ஆரம்பித்திருக்கிறது. மற்றவர்களால்
புரிந்து ஆறுதல் கொடுக்கக் கூடிய நோயல்ல. காய்ச்சலோ, வலியோ, புண்ணோ
எதுவுமில்லை. அவரால் தனது பிரச்சனையை மற்றவர்களுக்குப் புரிய வைக்க
முடியவில்லை.



[You must be registered and logged in to see this image.]

ஏதோவொரு இரைச்சல் காதில் எழுகிறது. அக்கம் பக்கத்தில் யாரும் பேசாதபோதும்,
ரேடியோ கரகரக்காத போதும், வேறு எந்த வித ஓசையுமின்றி நிசப்பதமாக
இருந்தபோதும் காதில் சத்தம் விழுகிறது.

மருத்துவத்தில் ரினிட்டஸ் (Tinnitus)
என்பார்கள். போலி ஒலி எனச் சொல்வதுமுண்டு. கரகரப்பது போலவோ, இரைவது போலவோ, ரீங்காரமிடுவது போல அல்லது வேறு ஏதோ ஓசை போலவோ கேட்கும்.



[You must be registered and logged in to see this image.]

ஆனால் வெளியிலிருந்து வரும் ஓசையாக அல்லாமல், உள்ளிருந்து எழுவதுதான் இது.
பெரும்பாலும் ஆபத்தான நோயல்ல. இருந்தபோதும் பொறுக்க முடியாத அரியண்டம்
எனலாம்.

15%
சதவிகிதமானவர்களுக்கு சிலநேரங்களில் மட்டுமே இவ்வாறு இரைச்சல் ஏற்படுவதுண்டு. மாறாக 2% க்கு மிகக் கடுமையான காது இரைச்சல் ஏற்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.



[You must be registered and logged in to see this image.]

இதனால் இவர்களது நாளந்தச் செயற்பாடுகள், தொழில், நித்திரை யாவுமே பாதிப்படைகிறதாகத் தெரிகிறது. இதனால் பலர் உளநெருக்கீடு, பதகளிப்பு நோய், மனவிரக்திக்கு போனறவற்றிற்கு ஆளாவதும் உண்டு.



[You must be registered and logged in to see this image.]


ஏன் ஏற்படுகிறது

காது இரைச்சல் என்பது ஒரு குறிப்பிட்ட உறுப்பிலிருந்து எழுவதில்லை. அது
ஏற்படுவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். வெளிக்காது, நடுக்காது, உட்காது
அல்லது காதுக்கு அப்பால், மூளை நரம்புகளிலிருந்தும் ஏற்படலாம்.

சிலருக்கு இது இயல்பானதாகவும் பாதிப்பை ஏற்படுத்தாததாகவும் இருக்கலாம்.
நிசப்பதமான அறைக்குள் நுழையும்போது அல்லது புறச் சத்தங்கள் குறைவாக
இருக்கும்போது மட்டும் அவரின் கவனத்தை ஈர்க்கக் கூடும்.

வேறு சிலருக்கு காதிற்குள் குடுமி, அல்லது அந்நியப் பொருள் காதை
அடைத்திருப்பதால் புறச் சத்தங்கள் குறைவாகவே கேட்பதால் காதின் இரைச்சல்
கவனத்தை ஈர்ப்பது அதிகமாகலாம்.

காதில் கிருமித் தொற்று, அதனால் நடுக் காதினுள் நீர் சேர்தல், செவிப்பறை எலும்புகளில் நோய், போன்றவையும் ஏற்படுத்தலாம்.

காதுக்கான நரம்புகளில் ஏற்படும் நுண்ணிய சேதங்கள் மற்றொரு காரணமாகும்.
பொதுவாக மூப்படையும்போது நரம்புகளில் பாதிப்பு ஏற்படுவதால் வயதானவர்களில்
அதிகமாகத் தோன்றுவதுண்டு.

கடுமையான சத்தங்களுக்கு அதிகமாக முகங்கொடுப்பது முக்கிய காரணமாக
மாறிவருகிறது. என்ஜின் ஒலிகள், உச்சஸ்தாயி வாத்திய ஒலிகள், ஆகாய விமான
ஒலிகள் துப்பாக்கி வெடிச் சத்தங்கள் போன்றவற்றை தொடர்ந்து கேட்பதாலும் இது
நேர்கிறது.

அஸ்பிரின் போன்ற சில மருந்துகளும் காதிரைச்சலை ஏற்படுத்துவதுண்டு.

அதேபோல உட் காதில் ஏற்படுகிற மெனியர்ஸ் (Meniere's
syndrome)
நோயும் காரணமாகலாம்.

மூளைக்குள் தோன்றிய கட்டியால் இது இருக்குமா எனப் பலரும் பயப்படுகிற போதும், மிக அரிதாகவே அவ்வாறு ஏற்படுவதுண்டு.

மருத்துவரிடம் செல்லும்போது

காதில் இரைச்சலானது தொடர்ந்து இருக்கிறதா அல்லது விட்டு விட்டு வருகிறதா,
தலைச்சுற்றும் சேர்ந்திருக்கிறதா, வாந்தி வருகிறதா, தலைச்சுற்றுடன் காதும்
மந்தமாக இருக்கிறதா போன்ற விடயங்களை மருத்துவர் அறிய விரும்புவார். இவை
நோய்க்கான காரணத்தைக் கண்டறிய அவருக்கு உதவும்.

பொதுவாக நோயைக் கண்டறிவதற்கு ஆய்வுகூடப் பரிசோதனைகள் எதுவும் தேவைப்படாது.

இருந்தபோதும் உங்களது காது கேட்கும் திறனை மதிப்பீடு செய்வதற்காக சிலவேளை யரனழைபசயஅ செய்ய நேரிடலாம். CT
Scan, MRI
போன்ற பரிசோதனைகளும் அரிதாகத் தேவைப்படலாம்.



நீங்கள் செய்யக் கூடியவை.


அடிக்கடி கோப்பி குடிப்பவராயின் அதைக் குறையுங்கள். கொக்கோகோலா போன்ற
பானங்களும் கூடாது. புகைத்தலை நிறுத்துவது நிறைய உதவும். உணவில் உப்பைக்
குறைப்பதும் உதவலாம்.



[You must be registered and logged in to see this image.]

சிலரது குருதியில் Zinc
ன் அளவு குறைவாக இருப்பதுண்டு. அத்தகையவர்களுக்கு Zinc
மாத்திரைகள் உதவலாம்.

காது குடைவது கூடாது. துணி, இயர் பட்ஸ் போட்டு சுத்தம் செய்ய முனையும்போது
காதுக் குடுமி மேலும் உட்சென்று செவிப்பறையுடன் அழுத்துப்படும். இதனால்
இரைச்சல் ஏற்படும்.

உங்கள் வேலைத்தளம் அதீத இரைச்சல் உடையதாயின் அச் சத்தங்கள் உங்கள்
காதுகளைப் பாதிக்காது பாதுகாக்க வேண்டும். அத் தருணங்களில் அதைக்
குறைப்பதற்கான இயர் பிளக் உபயோகிப்பது நல்லது.

இசை விழாக்கள், விளையாட்டுப் போட்டிகள், ஏன் பல வணக்கச் ஸ்தலங்களும் அதீத
ஓசைகளால் சூழலை மாசுபடுத்துகின்றன. இவை உங்கள் காதுகளையும் பாதிக்கும்.
அரசாங்கங்களும் பொலீசும் அவற்றைக் கண்டு கொள்வதில்லை என்பதால் எமது காதுகளை
நாம் தான் பாதுகாக்க வேண்டும்.



[You must be registered and logged in to see this image.]

உங்கள் வீட்டிலும் உங்களுக்கு எதிரிகள் இருக்கலாம். ஹெயர் ரையர்,
நீரியக்கும் இயந்திரம், மிக்ஸிகள் போன்ற உபகரணங்களுடன் உங்கள் ரேடியோ,
தொலைக் காட்சி, மொபைல் போன்றவையும் அதீத அதிர்வுகளை ஏற்படுத்திக் காதுகளைப்
பாதித்து இரைச்சலை ஏற்படுத்தலாம்.

உயர் இரத்த அழுத்தம் மற்றொரு காரணம்.எனவே அவற்றிற்காக மருத்துவர் தரும் மருந்துகளை வேளை தவறாது உட்கொள்வதும் அவசியம்.

மனப்பதற்றம் அதிகமானால் காது இரைச்சலும் அதிகமாகும். எனவே மனதை அலட்டிக்
கொள்ளாதீர்கள். காதில் இரைச்சல் தொல்லை கொடுக்கும்போது மனம் அமைதியாக
இருக்க முடியாது என்பது உண்மைதான். ஆயினும் அந்த இரைச்சலிலேயே உங்கள்
மனத்தை ஆழச் செலுத்தினால் மனம் அந்தரித்து நோய் அதிகரிப்பதாகத் தோன்றும்.

வெளிச் சத்தங்கள் குறைந்திருக்கும்போது காது இரைச்சல் அதிகமாகத் தோன்றும்.
தூங்கச் செல்லும் போது வீடு முழுவதும் துயிலில் ஆழ்ந்திருக்க சூழலே மயான
அமைதியில் இருக்கும்போது இரைச்சலின் தொல்லை வெறுக்க வைப்பதாக இருக்கும்.
ஒரு கடிகாரத்தை அருகில் வைப்பதாலோ, மின்விசிறியைச் சுழலவிடுவதாலோ அன்றி
ரேடியோவை மெல்லிய தொனியில் போடுவதாலோ, காதின் இரைச்சலை இவற்றால் மேவலாம்.

உடற் பயிற்சி, போதிய ஓய்வு, சோர்வடையாதிருத்தல் போன்ற வாழ்க்கை நடைமுறைகளும் இரைச்சலின் வேகத்தைத் தணிக்கும்.

சிகிச்சை

காரணத்தைக் கண்டறிந்து அதற்கான சிகிச்சையை செய்ய வேண்டும். அதற்கு நீங்கள் மருத்துவரைத்தான் நாட வேண்டியிருக்கும்.

குட் மோனிங்' சொல்லிச் சிரித்துக் கொண்டே ஆபிசில் நுழைந்தார் அந்த ஆபீஸர். புகைத்தல், மது, இரண்டிற்கும் டாட்டா சொல்லிவிட்டாராம்.

இனி இல்லை காது இரைச்சல் அவருக்கு.



டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), MCGP (col)

குடும்ப மருத்துவர்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum