TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:02 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ஐ.நாவில் முழங்கிய தமிழ் ஈழம்

2 posters

Go down

ஐ.நாவில் முழங்கிய தமிழ் ஈழம் Empty ஐ.நாவில் முழங்கிய தமிழ் ஈழம்

Post by sakthy Mon Aug 13, 2012 12:11 am

ஐ.நாவில் முழங்கிய தமிழ் ஈழம்

சரித்திரங்களையும்,வரலாற்று நிகழ்வுகளையும் நாம் மீள் அசை போடுவதால் புத்துணர்வும்,எழுச்சியும் பெறுவோம் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.தவிர போலிகளாய்,துரோகிகளாய் வாழ்ந்த பலர் இன்று நல்லவர்களாய் புனிதர்களாக வேடம் போடும் போது, அவர்களை இனம் காணவும் முடியும்.

டேசோ மகா நாட்டில் தமிழ் ஈழம் பற்றியோ,விடுதலைப் புலிகளின் வீரம் தியாகம் பற்றியோ எண்ணிப் பார்க்காத போதும் கூட ஒருவராவது ஈழமே தீர்வு என எடுத்துக் கூறிய போது சிறிய ஆறுதல் கிடைத்தது. கருணாநிதியோ மவீரர்களின் தியாகம் என்ற ஒரு வார்த்தையுடன் தன்னை சமாதானப் படுத்திக் கொண்டதுடன் திருமாவளவனின் பேச்சால் உச்சி குளிர்ந்து தன்னையே கதாநாயகனாக்கிக் கொண்டார்.ஈழம் என்ற ஒரு சொல்லை சொல்வதற்கே பயம் கொண்ட இவர்களின் இரட்டை வேட சுயநலத்தின் முன்னே வேங்கையாய் ஐ.நா.வில் முழங்கிய தமிழனை நினைவு கூருவது இந்த நேரத்தில் சாலச் சிறந்தது என எண்ணுகிறேன்.

1977 பொதுத் தேர்தலில் தமிழ் ஈழத்திற்கு மக்கள் கொடுத்த உறுதியான நிலைப்பாடும்,அதைத் தொடர்ந்து
1977 ஆகஸ்ட்டில் நடந்த கொடுமையான இனக் கலவரமும் மக்களை சிந்திக்க வைத்த நேரத்தில்.............
1978 ம் ஆண்டு அக்டோபர் 5 ம் திகதி. உலக தொலைக் காட்சிகளும் பத்திரிகைகளும் முதல் செய்தி ஆக்கிய சம்பவம் ஒன்று நடந்தது.இது பற்றி பிரபல அமெரிக்க பத்திரிகையாளர் பி.பி.கூப்பர் சுவையாக எழுதியதை இங்கு தருகிறேன்.

நியுஜோர்க் ஐ.நா. மன்றில் அன்றைய தினம்,மதிய உணவு வேளை நெருங்கிக் கொண்டிருந்தது.சைப்பிரஸ் நாட்டின் பிரதிநிதி பேசி முடிந்ததும்,சூரிநாம் நாட்டின் பிரதிநிதி பேசினார்.அதை தொடர்ந்து இலங்கை வெளி நாட்டமைச்சர் பேச வேண்டும்.150 நாட்டு பிரதி நிதிகளும் அனைவரின் பேச்சுக்களையும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தனர்.பொதுவாக ஐ.நா. சபையில் பேசும் பிரதிநிதிகளின் பேச்சுக்களும் அவர்கள் பெயர் விபரங்களுடன் முன்னரே நகல்களாக கொடுக்கப்பட்டு விடும்.அதைப் படித்திருந்தால் யார் பேசுகிறார்கள் என்பது அவர்கள் எழுந்ததுமே தெரிந்து விடும். உலகின் பல நாடுகளின் அதிபர்கள்,பிரதம மந்திரிகள் வெளிநாட்டு அமைச்சர்கள்,பிரதிநிதிகள் என அவையில் 2000 பேர் வரை குழுமி இருப்பார்கள்.முக்கியமான தலைவர்கள் தவிர ஒருவர் முகம் மற்றவருக்கு தெரியவராது. பேச்சுக்களின் நகல்கள் கிடைத்திருப்பதால் பலர் காதில் மாட்டிக் கொள்ளும் ஒலிபரப்புக் கருவிகளைக் கூட மாட்டிக் கொள்ளமாட்டார்கள்.

சூரிநாம் நாட்டு பிரதிநிதி பேசி முடித்ததும் சபைத் தலைவர் இலங்கை வெளிநாட்டு அமைச்சரை பேச அழைத்தார். அப்போது ஒரு அதிசயம் நடந்தது. கனத்த உருவமும்,ஆங்காங்கே நரைத்த முடியுடனும் ஒருவர் பிரதிநிதிகள் இடத்தில் இருந்து மேடைக்கு நடந்து வந்தார்.பிரதிநிதிகள் யாரென்பது பற்றி யாருக்கும் தெரியாததால் யாரும் எதையும் கவனிக்காது அவர் பேசுவதைக் கேட்பதற்காக காத்திருந்தனர்.எந்த வித சந்தேகமும் கொள்ளவில்லை.ஆனால் இலங்கைக் குழுவினர் மத்தியில் மட்டும் ஒரு குழப்பம்.தமது நாட்டு பிரதி நிதியை அழைக்கும் போது வேறு ஒருவர் போகிறாரே என்ற கேள்வி.

வந்த அந்த மனிதர் பெயர் வைகுந்தவாசன். மேடைக்கு வந்த வைகுந்தவாசனை சபைத் தலைவரும் கொலொம்பியா நாட்டை சேர்ந்தவருமான இண்டெலிசியோலிவியேனா புன்நகையுடன் வரவேற்று பேச அனுமதி தந்தார்.
சபைத் தலைவர் அவர்களே,உலகத் தலைவர்களே என்ற முழக்கம்,சபை அதிரும் ஒலி,காதில் ஒலிபெருக்கி சாதனத்தை மாட்டிக் கொள்ளாதிருந்த அனைவரும் வெகு வேகமாக காதுகளில் மாட்டிக் கொண்டனர். காரணம்,உலகத் தலைவர்களே என்று யாரும் பேச்சின் ஆரம்பத்தில் சேர்த்துக் கொள்வது கிடையாது என்பது தான்.ஆனாலும் சபையில் இருந்தவர்கள் அதை பெரிதாக கண்டு கொள்ளவில்லை.அவரை இலங்கை வெளி நாட்டு அமைச்சர் என்றே கருதி இருந்ததாலும்,அவர் என்னத்தைப் பேசப் போகிறார் என்ற அசட்டையாலும் இருந்த அவர்கள் தற்போது உசாராகி விட்டனர். பேச வந்த வைகுந்தவாசனுக்கோ அவசரம். தான் சொல்ல வந்ததை உடனே சொல்லி விட வேண்டும் என்ற வேகம்.

அவர் தன் பேச்சை தொடங்கினார். தமிழ் ஈழம் போன்ற ஒடுக்கப்பட்ட சிறுபான்மை இனங்கள் கொண்ட நாடுகள் தங்கள் குறைகளை உலக நாடுகள் சபையில் சொல்லாது வேறெங்கே சொல்ல முடியும். தயவு செய்து என்னை ஒரு நிமிடம் பேச அனுமதியுங்கள், என்று தொடர்ந்தார். சபைத் தலைவர் முகம் மாற்றம் அடைந்தது.பிரதி நிதிகள் உசாரானதுடன் தமிழ் ஈழமா அது எங்கே என்ற முணு முணுப்புக்கள்.

ஆனாலும் அவர் நிறுத்தவில்லை. தொடர்ந்தார்.என் பெயர் கிருஷ்னா.இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே 25 இலட்சம் தமிழர்கள் வாழும் தமிழ் ஈழத்தின் பிரதிநிதியாக இங்கு வந்திருக்கிறேன்.இலங்கை அரசு சிறுபான்மையினரை துன்புறுத்தி ஒடுக்கும் கொள்கையை தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது.

இப்போது சபை ஊழியர் ஒருவர் ஒலிபெருக்கி வசதியை துண்டிக்கிறார். பாதுகாப்பு ஊழியர்கள் அவரை நோக்கி விரைகிறார்கள்.ஆனால் வைகுந்தவாசனோ எதுவித சலனுமும் இன்றி பேச்சை தொடருகிறார்.

தனி நாடாக வாழ்வதற்கு உள்ள எங்கள் உரிமையை நாங்கள் உபயோகித்து அறிவித்துள்ளோம்.தமிழர் பிரச்சனை இந்தியப் பகுதியை அச்சுறுத்திக் கொண்டுள்ளது.உலகத் தலைவர்களாகிய நீங்கள் இதில் தலையிட்டு தீர்வு காணா விட்டால்,எங்கள் பிரச்சனையும் பாலஸ்தீன விடுதலை இயக்கம் போல், சைப்பிரஸ் போராட்டம் போல் உருவெடுத்து விடும்.
இப்போது பாதுகாப்பு அதிகாரிகள் நிலைமையை உணர்ந்து மேடையில் இருந்து அவரை அகற்றுகிறார்கள்.இனிமேல் இப்படி நடக்கக் கூடாது என எச்சரித்து அவரை அனுப்புகிறார்கள். அப்போதய இலங்கை வெளி நாட்டு அமைச்சர் சாகுல் அமீதுவை பார்த்து பிரதி நிதிகள் ஏளனமாக சிரிக்கின்றனர்.

இந்த வைகுந்தவாசன் என்ற வழக்குரைஞருக்கு எப்படி இப்படி பேச வேண்டும் என்ற எண்ணம் வந்தது?
அமெரிக்காவில் அப்போது நடந்து வந்த உலக வழக்குரைஞர் கூட்டத்திற்கு வந்த அவர் சி.வி.நரசிம்மன் என்ற இந்திய தமிழரை சந்தித்து, ஐ.நா.வில் பேச ஒழுங்கு செய்யும்படி கேட்கிறார். பால்ஸ்தீனம் சார்பில் யாசர் அரபாத் பேச முடியுமானால்,தமிழ் ஈழத்தின் பிரதிநிதியாக நான் ஏன் பேச முடியாது என வாதிக்கிறார்.ஆனாலும் நரசிம்மனிடம் இருந்து சாதகமான எந்தப் பதிலும் வராத போதும், மனம் தளராது உறுதியுடன் திட்டமிடுகிறார்.தினமும் அவைக்கு செல்வதும்,அங்கே உறுப்பினர்கள் எப்படி பேசுகிறார்கள்,நுழை வாயிலில் பாதுகாவலர்களின் காவல் என்று அனைத்தையும் கவனித்து திட்டம் போடுகிறார்.தினமும் செல்லும் போது பாதுகாவலர்களுடன் சிரித்து பேசியும்,மற்ற பிரதிநிதிகளுடனும் ஓரிரு நிமிடங்கள் பேச்சுக் கொடுத்தும்,ஒரு விருந்தில் அப்போது இருந்த பொது செயலாளர் குர்ட் வால்ட் கைம் உடனும் பேசிக் கொள்கிறார்.சில நிமிடங்கள் பேசியதாலும்,நடந்து கொண்ட முறையும் அவர்களை சந்தேகிக்க வைக்கவில்லை.இலங்கையின் பிரதிநிதி என்றே எண்ணிக் கொண்டார்கள்.மற்றவர்களீடம் தன்னை இலங்கையின் பிரதிநிதி என்றே அறிமுகப் படுத்திக் கொண்டார்.

அன்றைய தினமும் மற்ற பிரதிநிதிகளுடன் இடையிடையே ஓரிரு நிமிடங்கள் பேசிக் கொண்டு இலங்கைப் பிரதி நிதியை அழைக்கும் நேரத்தை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார். இலங்கைப் பிரதிநிதி அழைக்கப்பட்ட உடன் வேகமாக சென்று தன் திட்டத்தை நிறைவேற்றிக் கொண்டார்.

அன்று அவர் பேசிய மூன்று நிமிட வரலாற்று முக்கியத்துவம் பெற்ற பேச்சு உலகெங்கும் எதிரொலித்தது.

A Travers Le Monde என்ற பிரெஞ்சுப் பத்திரிகையும், Neue Arbeiter Presse என்ற ஜேர்மன் நாட்டு பத்திரிகையும்,அமெரிக்க,நோர்வே,பிரிடிஷ் பத்திரிகைகளும் அதிக முக்கியத்துவம் கொடுத்து பல பக்கங்களில் செய்தி வெளியிட்டது. அதைத் தொடர்ந்து இந்திரா காந்தியும் இலங்கைப் பிரச்சனையை கையில் எடுப்பதாக கடித மூலம் தெரிவித்திருந்தார்.

ஈழம் பற்றி பேசக் கூடாது என்ற உடனேயே அதை கைவிட்டவர்கள், இன்று மாநாடு நடத்தி தங்களை வீரர்களாக காட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் வீரம் கொத்துக் கொத்தாக இனப்படுகொலைக்கு அப்பாவி மக்கள் ஆளான போது, மானாட மயிலாட பார்த்துக் கொண்டு பதவிக்காகவும்,பணத்திற்காகவும் அந்த மக்களைக் கைவிட்ட சோகத்தை நாம் மறக்க முடியுமா என்ற கேள்வியுடன்.............

சக்தி.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

ஐ.நாவில் முழங்கிய தமிழ் ஈழம் Empty Re: ஐ.நாவில் முழங்கிய தமிழ் ஈழம்

Post by அருள் Mon Aug 13, 2012 7:04 am

கருணாநிதி போன்ற துரோகிகள் இருக்கும் வரை தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு கிடைப்பது சற்று கடினமான காரியம் ஐ.நாவில் முழங்கிய தமிழ் ஈழம் 917304
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum