TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:29 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:23 pm

» Simon Daniel
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 23, 2024 4:19 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Sep 22, 2024 7:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


ஏன் இப்படி?

Go down

ஏன் இப்படி? Empty ஏன் இப்படி?

Post by ஜனனி Fri Apr 20, 2012 7:52 am


ஏன் இப்படி? Edi





பேருந்து நிலையங்களில் வாகனங்கள் நிறுத்துமிடம், கட்டணக் கழிப்பிடம்,
பொருள்கள் வைப்பிடம், பயணிகளுக்கான கட்டண ஓய்விடம் எல்லாமும் சமூக விரோதிகளின்
கைகளுக்கு மாறியுள்ள நிலையில் அதை அநியாயக்காரர்களின் கூடாரம் என்று சொல்லாமல் வேறு
என்னவென்று சொல்வது?
இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடத்தில் நடைபெறும் அநியாயங்கள் சொல்லி மாளாது.
தமிழ்நாட்டின் எந்த நகரின் பேருந்து நிலையம் என்றாலும் இதே நிலைதான். முதலாவதாக,
நிர்ணயிக்கப்பட்ட தொகைக்கு மேலாகத்தான் கட்டணம் வசூலிக்கிறார்கள். நிர்ணயிக்கப்பட்ட
தொகை எவ்வளவு என்பதை பயனாளிகளின் கண்ணில் படும்படியாக எழுதி வைப்பதில்லை. எழுதி
வைத்தாலும், அவர்கள் கேட்பதைக் கொடுத்தாக வேண்டும்.
நேற்றைய முன்தினம், மதுரை மாநகராட்சி ஆணையர் (பொறுப்பு)என். ஆறுமுகநயினார்
சில வாகன நிறுத்துமிடத்தில் திடீர் ஆய்வு நடத்தினார். வணிக வளாகப் பேருந்து நிலைய
இருசக்கர வாகன நிறுத்துமிடத்தில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் ரூ. 3-க்குப் பதிலாக ரூ.
5 வசூலிக்கப்படுவதை நேரில் பார்த்து, அதை நுகர்வோருக்குத் திருப்பித் தரச் செய்தார்.
அவரால் வசூலித்த அதிகப் பணத்தைத் திருப்பிக் கொடுக்கச் சொல்ல முடிந்ததே தவிர,
வசூலித்த நபர் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை. இதே நிலைமைதான், மாட்டுத்தாவணி
பேருந்து நிலையத்திலும்.
இந்த ஒருநாள் சோதனை என்ன பயன் தரும்? நடவடிக்கை எடுக்காமல், ஒப்பந்தத்தை ரத்து
செய்யாமல், இனி இப்படிச் செய்யக்கூடாது என்று சொல்வதால் இவர்கள் திருந்தப்
போகிறார்களா என்ன என்று கேட்கலாம். உண்மைதான். ஆனால், தனக்குப் பல்வேறு வகைகளில்
எதிர்ப்பும், அச்சுறுத்தலும் வரும் என்று தெரிந்தும் தேன் கூட்டில் கைவைப்பது போன்ற
இந்தப் பிரச்னையில் துணிந்து செயல்படத் துணிந்த மதுரை மாநகராட்சி ஆணையர் (பொறுப்பு)
நேர்மையாளர்களின் பாராட்டுக்கு உரியவர் என்பதில் சந்தேகமே இல்லை.
வாகன நிறுத்துமிடத்தில் 12 மணி நேரத்துக்கு மட்டுமே ரூ. 3 அல்லது சிறிய
ஊர்களில் ரூ. 2 என நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால், நள்ளிரவு 12 மணிக்கு மேல் அடுத்த
நாள் கணக்கு என்கிறார்கள். அதாவது, இரவு 10 மணிக்கு வாகனத்தை நிறுத்திவிட்டு அதிகாலை
2 மணிக்கு வாகனத்தை எடுத்தால், அது அடுத்த நாள் கணக்கு. இவர்களிடம் மல்லுக்கட்ட
சாதாரண குடிமக்களால் முடியாது. இங்கே வாகனத்தின் இருக்கை கிழிக்கப்படாமல் அல்லது
பெட்ரோல் திருடப்படாமல் இருந்தால் அதற்காக இறைவனுக்கு நன்றி சொல்லத்தான் வேண்டும்.
அவர்களிடம் கேட்க முடியாது.
பொருள்கள் வைப்பறையிலும் நிர்ணயித்த கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. மிக
அதிகமான கட்டணம் வசூலிக்கிறார்கள். ரயில்நிலையங்களில் முன்பதிவு செய்த பயணச்சீட்டைக்
காட்டினால் மட்டுமே, பிஎன்ஆர் எண்ணைக் குறித்துக்கொண்டு பொருள்களைக் கட்டணத்துடன்
வைத்துச் செல்ல சம்மதிக்கிறார்கள். ஆனால், பேருந்து நிலையத்தில் அந்தக்
கட்டுப்பாடுகள் ஏதுமில்லை. களவாடிய சூட்கேசைக் கூட யார் வேண்டுமானாலும்
வைத்துவிட்டுச் செல்லலாம். போலீஸ் தேடி ஓய்ந்த பிறகு வந்து எடுத்துச் செல்லலாம்.
அவ்வளவு எளிய நடைமுறை. ஆனால், கட்டணமோ அவர்கள் மனம்போக்கில்!
காத்திருக்கும் பயணிகள் அமரும் கல்மேடைகளில் பிச்சைக்காரர்கள் அல்லது சமூக
விரோதிகள் படுத்து உறங்கிக்கொண்டிருப்பார்கள். உறங்கினால் பரவாயில்லை. அந்த இடத்தை
அசிங்கப்படுத்தியும் விடுகிறார்கள். பயணிகளுக்காகக் கட்டண ஓய்வறைகள் பெரிய
நகரங்களில் உள்ள பேருந்து நிலையங்களில் இருக்கின்றன. ஆனால், அவை எழுத முடியாத
செயல்களுக்காகவே கட்டப்பட்ட இடங்களாக மாற்றப்பட்டுக் கிடக்கின்றன.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இத்தகைய கட்டண ஓய்வறை இருக்கிறது. அதற்குள்
அதிகாரிகள் யாராவது ஒரு நாளாவது போய்ப் பார்த்திருப்பார்களா? அடிக்கடி அதிகாரிகள்
குடும்பத்துடன் தங்கட்டுமே, அப்போதாவது அந்த ஓய்வறைகள் துப்புரவாகப்
பராமரிக்கப்படுமே...
இதற்கெல்லாம் உச்சமான அநியாயக்கூடமாக இருக்கின்றன பேருந்து நிலையங்களின்
கட்டணக் கழிப்பறைகள். இப்போதெல்லாம் உள்ளே செல்வதற்கே ரூ. 4 கேட்கிறார்கள். மக்கள்
வேறு வழியின்றி இதைப் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. அவற்றிலிருந்து நோய்த்தொற்று
இல்லாமல் வெளியே வந்தால் அதற்காக இறைவனுக்கு நன்றி சொல்லலாம். இந்த அளவுக்கு
அநியாயக் கொள்ளை நடைபெறக் காரணம் - அரசியல்வாதிகளும் அதிகாரிகளும்தான்.
இவர்களுக்குக் கொட்டி அழுத பிறகுதான் பேருந்து நிலையத்தில் கடை விரிக்க முடியும்.
ஆகவே, ஒப்பந்தக்காரர்கள் அநியாயக்காரர்களாக மாறுவதில் வியப்பென்ன?
வெளிநாடுகளில் இத்தகைய பொதுக்கழிப்பிடங்கள் பேருந்து நிலையங்களில் மிகத்
தூய்மையாக இருக்கின்றன. மலேசியா போன்ற இடங்களில் நிர்ணயிக்கப்பட்ட தொகைக்கு மேலாகக்
கட்டணம் வசூலிப்பதில்லை. தென் கொரியத் தலைநகர் சோல் போன்ற நகரங்களில்
கழிப்பிடங்களைத் தனியார் மூலம் அரசே பராமரிக்கிறது. கட்டணம் வசூலிப்பதில்லை. ஏன்
நம்மால் மட்டும் அப்படிச் செய்ய முடியவில்லை?
இந்தியாவில் விமான நிலையங்களிலும் முக்கிய நகரங்களில் உள்ள சில மெட்ரோ
ரயில்நிலையங்களிலும் கழிப்பிடங்கள் தூய்மையாகவும் முறையாகவும் பராமரிக்கப்படுகின்றன.
ஆனால், 90% பொதுமக்கள் பயன்படுத்தும் பேருந்து நிலையங்களில் பராமரிப்போ, பாதுகாப்போ
இல்லாத நிலைமை. இது என்ன மக்களாட்சியோ, தெரியவில்லை.
பொதுமக்களே இதுபற்றிக் கவலைப்படவில்லை, நாம் ஏன் கவலைப்பட வேண்டும் என்று அரசு
நினைக்கலாம். மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளும், மக்களின் வரிப்பணத்தில்
சம்பளம் வாங்கும் அதிகாரிகளும் நினைக்கலாம். நம்மால் அப்படிக் கவலைப்படாமல் இருக்க
முடியவில்லையே, என்ன செய்ய?
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum