TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:03 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தனியார் பஸ்களில் கட்டணம் உயர்வு

Go down

தனியார் பஸ்களில் கட்டணம் உயர்வு Empty தனியார் பஸ்களில் கட்டணம் உயர்வு

Post by அருள் Tue Jul 05, 2011 6:47 am

Last Updated :



தனியார் பஸ்களில் கட்டணம் உயர்வு Bus





சென்னை, ஜூலை 4: டீசல் விலை உயர்வைத் தொடர்ந்து தமிழகத்தில் பல பகுதிகளில்
தனியார் பஸ்களில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளன. இதுதொடர்பாக அரசுத் தரப்பில்
நடவடிக்கை எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை.
கடந்த ஜூன் 24-ல் டீசல் விலை உயர்வு, 30-ம் தேதி கமிஷன் உயர்வு ஆகியவற்றை
அடுத்து டீசல் விலை லிட்டருக்கு ரூ.40.86 ஆக உயர்ந்துள்ளது. இதனால் லாரிகளில் வாடகை
உயர்ந்துவிட்டது.
பஸ்களைப் பொருத்தவரை அரசு அறிவித்தால்தான் கட்டணத்தை உயர்த்த முடியும் என்ற
நிலை இதுவரை இருந்து வந்தது.
ஆனால் சமீப காலமாக தனியார் பஸ் உரிமையாளர்கள் அந்தந்தப் பகுதியில் முடிவு
செய்து கட்டணத்தை ரூ.1 முதல் ரூ.2 வரை உயர்த்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டு கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட சில பகுதிகளில் இதுபோல தனியார்
பஸ்களில் கட்டண உயர்வு இருந்தது.
அவ்வாறு வசூலிக்கக் கூடாது என்றும், வசூலித்தால் கடும் நடவடிக்கை
எடுக்கப்படும் என்றும் அரசுத் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால்
உயர்த்தப்பட்ட கட்டணம் குறையவே இல்லை.
எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் பலரும் பஸ் உரிமையாளர்களாக இருப்பதால்தான்
இதுகுறித்து அதிகாரிகள் கண்டுகொள்வது இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
இப்போது டீசல் விலை உயர்வை அடுத்து நீண்டதூரம் செல்லும் தனியார் ஆம்னி
பஸ்களில் ரூ.50 முதல் ரூ.100 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளன. ஏற்கெனவே ரயிலில் ஏ.சி.
பயணத்தைவிட அதிகமாக சில ஆம்னி பஸ்களில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இப்போது அதுவும்
அதிகரித்துவிட்டது.
அரசு விரைவு பஸ்களின் எண்ணிக்கையை அதிகரித்து, மூட்டைப் பூச்சி தொந்தரவு
இல்லாமல், செüகரியமான பயணத்துக்கு ஏற்பாடு செய்தால், ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம்
கொடுத்து பயணிக்கும் தேவை குறைந்துவிடும். ஆனால் இதில் அதிகாரிகள் அக்கறை
காட்டுவதாகத் தெரியவில்லை.
இப்போது காஞ்சிபுரம், விழுப்புரம், தர்மபுரி, கடலூர், கன்னியாகுமரி உள்ளிட்ட
மாவட்டங்களில் தனியார் பஸ்களில் கட்டணம் உயர்ந்துள்ளது.
மினி பஸ்களின் கட்டணமும் பல இடங்களில் ரூ.1 அதிகமாகிவிட்டதாகத் தகவல்கள்
தெரிவிக்கின்றன.
காஞ்சிபுரத்தில் அரசு எக்ஸ்பிரஸ் பஸ் கட்டணத்துக்கு இணையாக தனியார் பஸ்களில்
இப்போது ரூ.2 கூடுதலாக வசூலிக்கின்றனர்.
கடலூர் - புதுவை இடையே பஸ்களுக்கு அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் ரூ.6.50.
புதுவையில் பதிவு செய்து இயக்கப்படும் பஸ்களில் ரூ.7 வசூலிக்கப்படுகிறது. இதை தமிழக
அதிகாரிகளால் தடுக்க முடியவில்லை. இப்போது தமிழக தனியார் பஸ்களில் ரூ.8
வசூலிக்கப்படுகிறது.
கடலூர் நகருக்குள் தனியார் நகர பஸ்களில் குறைந்தபட்சக் கட்டணம் ரூ.3 என்பது
ரூ.4 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வெளியூர் பஸ்களில் குறைந்தபட்சம் ரூ.4 ஆக இருந்த
கட்டணம் ரூ.5 ஆக உயர்ந்துள்ளது. கடலூர் - பண்ருட்டி இடையே கட்டணம் ரூ.8-ல் இருந்து
ரூ.9 ஆக உயர்ந்துள்ளது. கடலூர் - சிதம்பரம் வழியில் ரூ.1.50 அதிகரித்துள்ளது.
தர்மபுரி- கிருஷ்ணகிரி, தர்மபுரி - சேலம் வழியில் ரூ.1 முதல் ரூ.1.50 வரை
கட்டணம் உயர்ந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.3 வரை கட்டணம் உயர்ந்துள்ளது. நீண்டதூர பஸ்களில்
ரூ.5 வரை அதிகரித்துள்ளது.
டீசல் லிட்டர் ரூ.18-க்கு விற்றபோது நிர்ணயித்த கட்டணமே இப்போதும் அமலில்
இருப்பதாக பஸ் உரிமையாளர்கள் கூறுகின்றனர். அப்போது ரூ.14 ஆயிரத்துக்கு விற்ற டயர்
இப்போது ரூ.32 ஆயிரமாகிவிட்டதாகவும், காப்பீட்டுத் தொகை ரூ.20 ஆயிரம்
உயர்ந்துவிட்டதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதேபோல மற்ற செலவுகளும் அதிகரித்துள்ளதாகப் பட்டியலிடுகின்றனர்.
அரசு பஸ்களில் சொகுசு பஸ், எக்ஸ்பிரஸ் என வெவ்வேறு பெயர்களில் கூடுதல் கட்டணம்
வசூலித்து, வருவாயை ஈடுகட்டிக் கொள்கிறார்கள். ஆனால் தனியார் பஸ் உரிமையாளர்கள்தான்
பாதிக்கப்படுகிறோம் என அவர்கள் கூறுகின்றனர்.
டீசல் விலை உயரும்போது அதற்கேற்ற விகிதாசாரத்தில் பஸ் கட்டணத்தையும் உயர்த்த
அரசு அனுமதிக்க வேண்டும் என பஸ் உரிமையாளர்கள் கோருகின்றனர்.
தனியார் பஸ் உரிமையாளர்கள் பெரும்பாலானோர் அரசியல் செல்வாக்கு உள்ளவர்களாக
இருந்தாலும், கட்டண உயர்வு விஷயத்தில் அரசின் அனுமதியைப் பெற முடியாத நிலை உள்ளது.

அரசே கட்டணத்தை உயர்த்தினால் தேர்தல் நேரத்தில் மக்களின் அதிருப்தியை
சந்திக்க வேண்டி வரும் என்பதே இதற்குக் காரணம்.
எனவே பஸ் உரிமையாளர்கள் தாங்களாக கட்டணத்தை உயர்த்திக் கொண்டுள்ளனர்.
நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் இதைக் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.
தனியார் பஸ் உரிமையாளர்களை அரசு தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதோடு, அரசு
பஸ்களிலும் தரமான சேவையை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள்
எதிர்பார்க்கின்றனர்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum