TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:08 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 08, 2024 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


அலகாபாத் ஐகோர்ட் தீர்ப்பு மாறுபட்ட ஒன்று : சுப்ரீம் கோர்ட் விதித்தது தடை

Go down

அலகாபாத் ஐகோர்ட் தீர்ப்பு மாறுபட்ட ஒன்று : சுப்ரீம் கோர்ட் விதித்தது தடை Empty அலகாபாத் ஐகோர்ட் தீர்ப்பு மாறுபட்ட ஒன்று : சுப்ரீம் கோர்ட் விதித்தது தடை

Post by மாலதி Tue May 10, 2011 7:21 am

புதுடில்லி :அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம்
தொடர்பாக அலகாபாத் ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பிற்கு, சுப்ரீம் கோர்ட் தடை
விதித்துள்ளது. சர்ச்சைக்குரிய நிலத்தை மூன்றாகப் பிரிக்க வேண்டும் என,
எந்த தரப்பினரும் கோராத நிலையில், அதை பிரிக்கும்படி அலகாபாத் ஐகோர்ட்
வழங்கிய தீர்ப்பு மாறுபட்ட தீர்ப்பு என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

அயோத்தியில்
உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்குச் சொந்தம் என்பது
தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு செப்டம்பரில் அலகாபாத் ஐகோர்ட்
தீர்ப்பு வழங்கியது. மூன்று நீதிபதிகள் பெஞ்ச் வழங்கிய இந்த தீர்ப்பில்,
"சர்ச்சைக்குரிய நிலம் முஸ்லிம்கள், இந்துக்கள் மற்றும் நிர்மோகி அகடா
ஆகிய மூன்று தரப்பினருக்கும் சொந்தம்.நிலம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு,
மூன்று தரப்பினருக்கும் வழங்கப்பட வேண்டும்' என, உத்தரவிட்டது.

ஐகோர்ட்டின்
இந்த தீர்ப்பை எதிர்த்து, நிர்மோகி அகடா, அகில பாரத இந்து மகா சபா, ஜமாயத்
உலமா -ஐ- ஹிந்த், சன்னி மத்திய வக்ப் வாரியம் உட்பட பல அமைப்புகள்,
சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் மனு தாக்கல் செய்தன. இந்த மனுக்கள் எல்லாம்
நேற்று நீதிபதிகள் அப்டாப் ஆலம் மற்றும் லோதா ஆகியோர் அடங்கிய சுப்ரீம்
கோர்ட் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தன.

அப்போது நீதிபதிகள் கூறியதாவது:அயோத்தியில்
உள்ள சர்ச்சைக்குரிய நிலத்தை மூன்றாகப் பிரிக்க வேண்டும் என்ற, அலகாபாத்
ஐகோர்ட்டின் உத்தரவிற்கு தடை விதிக்கிறோம். நிலத்தை மூன்றாகப் பிரிக்க
வேண்டும் என, வழக்கு தொடர்ந்த எந்த தரப்பினரும் கோராத நிலையில், அது போன்ற
தீர்ப்பை ஐகோர்ட் வழங்கியது மாறுபட்ட ஒன்று. இதன் மூலம் புதிய பரிமாணம்
உருவாக்கப்பட்டுள்ளது.ஐகோர்ட்டின் உத்தரவு மாறுபட்ட உத்தரவு என்பதால்,
அதற்கு தடை விதிக்க வேண்டியது அவசியம். நிலம் மூன்று தரப்பினருக்கும்
சொந்தம் என தெரிவித்ததன் மூலம், கோர்ட் தானாகவே ஏதோ ஒன்றைச் செய்துள்ளது.
இது போன்ற உத்தரவுகள் செயல்பாட்டுக்கு வர அனுமதிக்க முடியாது. நிலத்தை
மூன்று தரப்பினரும் பிரித்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்ததால், இந்த
வழக்கில் புதிய சர்ச்சை உருவாகியுள்ளது. திரும்ப திரும்ப கூறப்பட்ட
வாசகங்களை கொண்ட சர்ச்சையை தீர்க்காத தீர்ப்பாக அது அமைந்திருக்கிறது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில் தற்போதைய நிலை தொடரும். மேலும்,
சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சுற்றியுள்ள, மத்திய அரசால்
கையகப்படுத்தப்பட்டுள்ள 67 ஏக்கர் நிலத்திலும் எந்த விதமான மத
நடவடிக்கைகளையும் மேற்கொள்ளக்கூடாது. அந்த நிலத்திலும் தற்போதைய நிலை தொடர
வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டனர்.

சுப்ரீம்
கோர்ட் பிறப்பித்த இந்த தடை உத்தரவால், அயோத்தியில் சர்ச்சைக்குரிய
நிலத்தில் இப்போதுள்ள ராமர் கோவிலில் நடைபெறும் வழிபாடுகளில் எந்தப்
பாதிப்பும் ஏற்படாது. அவை வழக்கம் போல நடைபெறும் என,
தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டில் சன்னி வக்ப் வாரியம் தாக்கல் செய்த மனுவில்,
"அலகாபாத் ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அந்த
தீர்ப்பு, ஆதாரங்கள் அடிப்படையில் வழங்கப்படவில்லை; நம்பிக்கையின்
அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய நிலத்தில் தற்போதுள்ள
கட்டடம் ராமர் பிறந்த இடம் என தெரிவித்ததன் மூலம், ஐகோர்ட் மிகப்பெரிய
தவறு செய்துள்ளது' என தெரிவித்தது.

இந்து மகா சபா தாக்கல் செய்த
மனுவில், ""அலகாபாத் ஐகோர்ட்டின் மூன்று நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில்,
ஒரே ஒரு நீதிபதி மட்டும், அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம்
முழுவதும் இந்துக்களுக்கே சொந்தம் என, கூறியுள்ளார். அந்த தீர்ப்பை உறுதி
செய்ய வேண்டும். மற்ற இரண்டு நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ய
வேண்டும்,'' என, கோரப்பட்டது.

"தடை விதித்தது திருப்தி அளிக்கிறது':"அலகாபாத்
ஐகோர்ட்டின் தீர்ப்பிற்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது திருப்தி
அளிக்கிறது' என, ராமஜென்ம பூமி வழக்கில் தொடர்புடைய பல்வேறு தரப்பினரும்
கூறியுள்ளனர்.

"அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில் தற்போதுள்ள
ராமர் கோவிலின் இப்போதைய நிலை தொடர வேண்டும். அங்கு நடைபெறும் பூஜைகள்
தொடரலாம் என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது மகிழ்ச்சி அளிக்கிறது' என,
ராம்லாலா விராஜ்மான் அமைப்பு சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ரவிசங்கர்
பிரசாத் கூறியுள்ளார்.

சன்னி வக்ப் வாரிய வக்கீல் ஜப்பார்யப் ஜிலானி கூறுகையில்,
""சுப்ரீம் கோர்ட்டின் இன்றைய (நேற்றைய) உத்தரவின் மூலம் நாங்கள் திருப்தி
அடைந்துள்ளோம். இது, நாட்டில் அமைதியான சூழ்நிலை தொடர உதவும்.
சர்ச்சைக்குரிய நிலம் தங்களுக்கே சொந்தம் என, ஒவ்வொரு தரப்பினரும் உரிமை
கோருகின்றனர். அதனால், ஐகோர்ட் தீர்ப்பிற்கு சுப்ரீம் கோர்ட் தடை
விதித்துள்ளது. இந்த வழக்கின் விசாரணையை விரைவுபடுத்தும்படியும் கோர்ட்டை
நாங்கள் கேட்டுக் கொள்வோம்,'' என்றார்.

இந்து மகா சபா சார்பில் ஆஜரான வக்கீல் கூறுகையில்,
""சர்ச்சைக்குரிய நிலத்தை மூன்றாகப் பிரிக்க வேண்டும் என, வழக்கு தொடர்ந்த
எந்த ஒரு தரப்பினரும் கோரவில்லை. சர்ச்சைக்குரிய நிலம் என அழைக்கப்படும்
ராமஜென்ம பூமி முழுவதும் இந்து மகா சபாவுக்கே சொந்தம்,'' என்றார்.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
»  அஜ்மல்கசாப் மரணத்தண்டனைக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது
» பெல்லாரியில் சுரங்க பணிகள்: தடை விதித்தது சுப்ரீம் கோர்ட்
» விக்கிலீக்ஸ் ஆதரவாக ஐஸ்லேன்ட் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு
» பரம்பரை சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு : சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
» நார்கோ சோதனை சட்ட விரோதமானது : சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum