TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:28 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 1:15 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Sep 14, 2024 1:52 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


வேஷம் கலைந்தது : பாக்., - பயங்கரவாதிகள் தொடர்பு அம்பலம்

Go down

வேஷம் கலைந்தது : பாக்., - பயங்கரவாதிகள் தொடர்பு அம்பலம் Empty வேஷம் கலைந்தது : பாக்., - பயங்கரவாதிகள் தொடர்பு அம்பலம்

Post by மாலதி Sun Aug 01, 2010 7:37 am

கடந்த வாரம் "விக்கிலீக்'என்ற இணைய தளத்தில் வெளியான ராணுவ ரகசியங்கள்,
அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் ஆகியவற்றின் உண்மையான முகத்தை
வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருக்கின்றன. இந்த இணைய தளத்தில் வெளியான
அமெரிக்க ராணுவத்தின் ரகசியங்களால், பாகிஸ்தானின் உளவு அமைப்பான
ஐ.எஸ்.ஐ.,யின் முகத்திரை கிழிந்திருக்கிறது. காலம், காலமாக பாகிஸ்தான்
கடைப்பிடித்து வரும் இரட்டை வேடமும், உலகத்தின் முன் வெளிச்சம் போட்டு
காட்டப்பட்டுள்ளது. "என்ன நடந்தாலும் சரி, பாகிஸ்தான் தான், எங்களின்
உண்மையான நண்பன்' என, இறுமாப்புடன் தொடர்ந்து கூறி வரும் அமெரிக்காவும்,
என்ன சொல்வது என்றே தெரியாமல் திகைத்துப் போய், உலக நாடுகளின் முன் மவுனம்
காத்து வருகிறது.
ஆப்கனும், அமெரிக்காவும்: உலக போலீஸ்காரனாக தன்னை அடையாளப்
படுத்திக் கொண்டிருக்கும் அமெரிக்காவே, ஆடிப் போகும் அளவுக்கு அப்படி
என்னதான் அந்த இணைய தளத்தில் வெளியானது என்பதை தெரிந்து கொள்வதற்கு முன்,
அதன் பின்னணியை பற்றி தெரிந்து கொள்வது அவசியம். கடந்த 2001 செப்டம்பரில்
அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையம், ராணுவ தலைமையிடமான
பென்டகன் ஆகியவற்றின் மீது, விமானத்தை கடத்தி மோதச் செய்து, அல்-குவைதா
பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தால், உலகத்தில் தன்னை
அடித்துக் கொள்ள ஆள் இல்லை என, இறுமாப்புடன் கூறி வந்த அமெரிக்காவின்,
"இமேஜுக்கு' பலத்த அடி விழுந்தது.
சுதாரித்துக் கொண்ட அமெரிக்க அரசு, ஆப்கனில் கோலோச்சி வரும்
அல்-குவைதா, தலிபான் பயங்கரவாதிகள் தான், இதற்கு காரணம் என,
கொதித்தெழுந்தது. ஆப்கனுக்கு தனது படைகளை அனுப்பியது. அமெரிக்க படைகளுடன்
பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் உள்ளிட்ட பன்னாட்டு படைகளும் ஆப்கனில்
வந்திறங்கின. ஒட்டு மொத்தமாக 1.5 லட்சம் ராணுவ வீரர்கள் அங்கு
குவிக்கப்பட்டனர். பலத்த சேதத்துக்கு பின், தலிபான்களின் ஆதிக்கத்தில்
இருந்து ஆப்கன் விடுவிக்கப்பட்டது. இருந்தாலும், பாகிஸ்தான் - ஆப்கன்
எல்லையை ஒட்டியுள்ள பழங்குடியினர் அதிகம் வசிக்கும், மலைப் பிரதேசங்களில்
சென்று பயங்கரவாதிகள் பதுங்கிக் கொண்டனர். அங்கிருந்தபடியே, அமெரிக்கா
மற்றும் பன்னாட்டு படைகள் மீது, அவ்வப்போது தாக்குதல் நடத்துகின்றனர்.
பாகிஸ்தானின் பெஷாவர், கராச்சி போன்ற பகுதிகளிலும் இவர்களின் ஆதிக்கம்
உள்ளது. குறிப்பாக, ஸ்வாட், தெற்கு வாசிரிஸ்தான் போன்ற பகுதிகள்,
பயங்கரவாதிகளின் சொர்க்கமாக உள்ளன.
பாகிஸ்தானின் ஒத்துழைப்பு: தலிபான் மற்றும் அல்-குவைதா
பயங்கரவாதிகளை அடியோடு ஒழிக்க வேண்டுமெனில், அதற்கு பாகிஸ்தானின் முழு
ஒத்துழைப்பு தேவை என்பதை அமெரிக்கா உணர்ந்திருந்தது. பாகிஸ்தானில்
இருந்தபடியே, பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்துவது, அதற்காக பாக்.,
நிலப் பரப்பு மற்றும் விமான தளங்களை பயன்படுத்திக் கொள்வது ஆகிய
விஷயங்களில் பாகிஸ்தானின் உதவி அவசியம் என, அமெரிக்கா நினைத்தது. மேலும்,
பயங்கரவாதிகள் பதுங்கியுள்ள இடங்கள், பாக்., உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,க்கு
அத்துப்படி என்பதால், அந்த உளவு அமைப்பு மூலமாகவே தங்களுக்கு தேவையான
தகவல்களை திரட்டிக் கொள்ளவும் அமெரிக்கா திட்டமிட்டது. பாகிஸ்தானுடன்
அமெரிக்கா கூட்டுச் சேர்ந்து கொண்டது. ஒவ்வொரு ஆண்டும் நூறு கோடி ரூபாயை
பாகிஸ்தானுக்கு கொடுத்ததோடு, அதற்கு தேவையான நவீன ஆயுதங்கள், போர்
விமானங்கள் ஆகியவற்றையும் அளித்தது. ஐ.எஸ்.ஐ., உளவு அமைப்பையும் தனக்கு
சாதகமாக பயன்படுத்திக் கொண்டது.
குழி பறித்த பாகிஸ்தான்: பயங்கரவாதத்துக்கு எதிரான போரில்,
அமெரிக்காவுக்கு உதவுவதாக வெளி உலகிற்கு காட்டிக் கொண்டாலும், உள்ளுக்குள்
மிகப் பெரிய சதித் திட்டத்துடன் தான் பாகிஸ்தான் நடந்து கொண்டது.
அமெரிக்காவுக்கு குழி பறிக்கும் வேலையை பாக்., உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,
சாமர்த்தியமாக செய்தது. தலிபான் மற்றும் அல்-குவைதா அமைப்புகளின்
தலைவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டு
படைகளின் நடமாட்டத்தை அவர்களுக்கு ஐ.எஸ்.ஐ., தெரியப்படுத்தியது. மேலும்,
அவர்களுக்கு தேவையான ஆயுதங்கள், நிதி ஆகியவற்றையும் ஐ.எஸ்.ஐ., வாரி
வழங்கியது. அமெரிக்கா கொடுத்த நிதியை, அமெரிக்காவுக்கு எதிராகவே
பாகிஸ்தான் பயன்படுத்தியது.
கலைந்தது வேஷம்: ஆப்கனில், பன்னாட்டு படைகளுக்கு எதிரான பல
முக்கிய தாக்குதலுக்கான திட்டங்களை, பயங்கரவாதிகளுக்கு ஐ.எஸ்.ஐ., தான்
மறைமுகமாக தீட்டிக் கொடுத்துள்ளது. பாகிஸ்தானின் இந்த இரட்டை வேடத்தை
தான், தற்போது "விக்கிலீக்' இணைய தளம் அம்பலப்படுத்தியுள்ளது. ஆனால், இந்த
தகவல் அமெரிக்காவுக்கு முன் கூட்டியே தெரிந்தும், அது தொடர்ந்து மவுனம்
காத்தது ஏன் ஏன்ற விஷயம் தான், ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும்
ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனில், ராணுவ
நடவடிக்கைகள் தொடர்பான ஏராளமான அதி முக்கியத்துவம் வாய்ந்த ரகசிய ஆவணங்கள்
பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஆப்கனில் மேற்கொள்ளப்பட்டு வரும்
ராணுவ நடவடிக்கைகள் தொடர்பான விஷயங்களும் அடங்கும். பல்வேறு உளவு
அமைப்புகள் திரட்டிக் கொடுத்த ரகசியங்கள் அவை.
ஆப்கனில் கடந்த 2004ல் இருந்து 2007 வரையிலான காலத்தில்
மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கைகள் தொடர்பான 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட
செய்திக் குறிப்புகள், தகவல் பரிமாற்றங்கள், உளவு அமைப்புகளின் தகவல்கள்
ஆகிவை, அங்கிருந்து ரகசியமாக எடுக்கப்பட்டு, விக்கிலீக் இணைய தளத்தில் "தி
வார் லீக்' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாகவே இது
தொடர்பான நகல்கள், அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ், ஜெர்மனியின் டெர்
ஸ்பிஜெல் மற்றும் கார்டியன் ஆகிய பத்திரிகைகளுக்கு அனுப்பி
வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு வெளியிடப்பட்ட தகவலில் தான், தலிபான்,
அல்-குவைதா பயங்கரவாத அமைப்புகளுடன், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,
கரம் கோர்த்து செயல்பட்டது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
என்ன செய்யப் போகிறது அமெரிக்கா? "பயங்கரவாதம் இந்த உலகத்தின்
எந்த இடத்தில் இருந்தாலும், அதை அடியோடு அழிப்போம்' என, மார்தட்டிக்
கொண்டிருக்கும் தற்போதைய அதிபர் ஒபாமா மட்டுமல்ல, முன்னாள் அதிபர் ஜார்ஜ்
புஷ்சும் இந்த விவகாரத்தில் இரட்டை வேடம் போட்டது தான் ஏன் என்று
தெரியவில்லை. டில்லி, மும்பை, ஐதராபாத், ஜெய்ப்பூர் என, இந்தியாவின்
ஒவ்வொரு பகுதியாக குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய போதெல்லாம்,
இந்த தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தானும், அதன் உளவு அமைப்பான
ஐ.எஸ்.ஐ.,யும் உள்ளது என, இந்தியா தொடர்ந்து கூறி வந்தது. ஆனால், இதை
அமெரிக்கா ஒரு பொருட்டாகவே கருதவில்லை. ஆனால், தற்போது தன் கையை வைத்து,
தன்னையே குத்திய பாகிஸ்தான் மீது அமெரிக்கா என்ன நடவடிக்கை எடுக்கப்
போகிறது என்று தான் தெரியவில்லை.
மாட்டிக் கொண்ட அமெரிக்கா: உண்மையில் ஆப்கனில் உள்ள
பயங்கரவாதிகளை ஒழிப்பதற்கு, பாகிஸ்தானின் ஒத்துழைப்பு அமெரிக்காவுக்கு
இன்னும் தேவைப்படுகிறது. மேலும், ஆசிய பிராந்தியத்தில் வல்லரசாக
உருவெடுக்கும் இந்தியாவுக்கு முட்டுக்கட்டை போடுவதற்கும் பாகிஸ்தானின்
உதவி அமெரிக்காவுக்கு தேவைப்படுகிறது. பாகிஸ்தானிடம் வசமாக மாட்டிக்
கொண்டு அமெரிக்கா முழித்துக் கொண்டிருக்கிறது.
இந்தியாவின் நிலை என்ன? இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலை
இன்னும் மோசம். நாட்டில் எத்தனை பயங்கரவாத தாக்குதல் நடந்தாலும், அந்த
தாக்குதலை நடத்தியவர்கள் எந்த நாட்டிலிருந்து செயல்படுகின்றனர் என
தெரிந்திருந்தாலும், அவர்களுக்கு எதிராக எந்த ஒரு நடவடிக்கையையும்
மேற்கொள்ள முடியாத நிலையில் தான் இந்தியா உள்ளது. அதிகபட்சமாக,
அமெரிக்காவிடம் முறையிடுவதை தவிர, இந்தியாவுக்கு வேறு வழி இல்லை. இந்த
விவகாரத்தில் அமெரிக்காவிடம் கடுமையாக எந்த விஷயத்தையும் தெரியப்படுத்த
முடியாது. அதே நேரத்தில் பாகிஸ்தானையும் பகைத்துக் கொள்ள முடியாது.
எப்படியோ, பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் தீவிரமாக செயல்படுவதாக
அடிக்கடி கூறிக் கொள்ளும் பாகிஸ்தான், அமெரிக்கா ஆகிய நாடுகளின் இரட்டை
வேஷம், உலகத்தின் பார்வைக்கு பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது, மகிழ்ச்சி
அளிக்கும் விஷயம் தான்.
இந்தியர்களை கொலை செய்ய தலிபான்களுக்கு நிதி:"விக்கிலீக்' இணைய
தளத்தில் ஐ.எஸ்.ஐ., அமைப்புக்கும், பயங்கரவாத அமைப்புகளுக்கும் உள்ள
தொடர்பை தவிர, வேறு பல முக்கியமான விஷயங்களும் வெளியாகியுள்ளன. அவற்றில்
சில: ஆப்கனில் முகாமிட்டுள்ள அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டு படையில்,
"பிளாக் யூனிட்-373' என்ற பெயரில் ஒரு பிரிவு செயல்படுகிறது. இந்த படைப்
பிரிவின் முக்கியமான பணி என்ன தெரியுமா? தலிபான் அமைப்பின் தலைவர்களை,
எந்த விசாரணையும் இல்லாமல் கைது செய்வது அல்லது கொலை செய்வது மட்டுமே இந்த
படையினருக்கு உள்ள ஒரே வேலை. ஆப்கனில் பல்வேறு கட்டமைப்பு பணிகளை
இந்தியாவைச் சேர்ந்த ஒப்பந்ததாரர்கள் செய்து வருகின்றனர். இவர்களை கொலை
செய்வதற்காக, தலிபான் அமைப்புக்கு ஐ.எஸ்.ஐ., சார்பில் ஏழு
லட்சத்திலிருந்து 14 லட்சம் ரூபாய் வரை கொடுக்கப்படுகிறது.
கடந்த 2008ல் காபூலில் உள்ள இந்திய தூதரகம் பயங்கரவாதிகளால்
தாக்கப்பட்டது. ஐ.எஸ். ஐ., அமைப்பின் உத்தரவின் பேரிலேயே, இந்த தாக்குதல்
நடத்தப்பட்டது உளவு அமைப்புகள் மூலம் உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. ரிமேட்
கன்ட்ரோல் மூலம் இயங்கும் ராக்கெட் உள்ளிட்ட அதிநவீன ஆயுதங்களை
வாங்குவதற்காக, அல்-குவைதா அமைப்பின் நிதி ஆலோசகர் அமீன், கடந்த 2005
டிசம்பரில் வடகொரியா சென்று, அதற்காக பேரம் நடத்தினார். ஆப்கனில் நடந்து
வரும் சண்டையில், அப்பாவி மக்களும் உயிரிழந்துள்ளனர். இதில்
அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள எண்ணிக்கையை விட, அதிக அளவிலான
மக்கள் உயிரிழந்துள்ளனர்.
ஐ.எஸ்.ஐ., பின்னணி: பாகிஸ்தானின் பிரதான உளவு அமைப்பின் பெயர்
தான், ஐ.எஸ்.ஐ., (இன்டர் சர்வீஸ் இன்டெலிஜென்ஸ்). இதன் தற்போதைய தலைவர்
ஜெனரல் சுஜா பாஷா. தற்போது பாகிஸ்தான் ராணுவ தளபதியாக உள்ள கயானி, கடந்த
2003லிருந்து 2007 வரை, ஐ.எஸ்.ஐ., அமைப்பின் தலைவராக இருந்தார். முன்னாள்
அதிபர் முஷாரபுக்கு நெருக்கமானவர். இவரது பதவிக் காலத்தில் தான்,
ஐ.எஸ்.ஐ., அமைப்புக்கும், தலிபான் அமைப்புக்கும் நெருங்கிய தொடர்பு
இருந்ததாக, தற்போது இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இத்தனைக்கும்,
இவர் அமெரிக்காவின் முக்கிய தலைவர்களான ஹிலாரி உள்ளிட்டோரின் நம்பிக்கையை
பெற்றவராக திகழ்கிறார். தற்போது எழுந்துள்ள சர்ச்சையில், ஐ.எஸ்.ஐ.,
அமைப்பின் முன்னாள் தலைவர் ஹமித் குல் என்பவரின் பணி முக்கியமானது.
ஆப்கனில் சோவியத் ரஷ்யாவின் செல்வாக்கு இருந்த காலத்தில், இவர் அமெரிக்க
உளவு அமைப்புடன் இணைந்து செயல்பட்டார். ரஷ்ய படைகளை விரட்டுவதற்காக,
சி.ஐ.ஏ.,வுடன் இணைந்து, தலிபான் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி,
ஆயுதங்களை வழங்கியதில் முக்கிய பங்கு வகித்தவர். பணியிலிருந்து ஓய்வு
பெற்று, பல ஆண்டுகள் ஆகிவிட்டாலும் பயங்கரவாத அமைப்புகளுடன் இவருக்கு
இன்னும் தொடர்பு இருப்பதாக நம்பப்படுகிறது.
விக்கிலீக் இணைய தளம்: தற்போது உலக நாடுகள் அனைத்தின்
பார்வையும் "விக்கிலீக்'இணைய தளம் மீது தான் திரும்பியுள்ளது. இதன்
உரிமையாளர் ஜூலியன் அசனேஜ். இவர் ஆஸ்திரேலியாவில் பிறந்து, அங்கேயே
படித்தவர். இணையதளத்தில் "ஹாக்'செய்தது தொடர்பாக இவர் மீது ஏராளமான
வழக்குகள் உள்ளன. தற்போது ஆப்கன் விவகாரத்திலும் இவரது பெயர்
சிக்கியுள்ளது. இருந்தாலும், ஜூலியன் இதுகுறித்து கவலைப்படவில்லை. அவர்
கூறுகையில்,"நாங்கள் வெளியிட்டுள்ள தகவல்களால், யாருக்கும் எந்த
பாதிப்பும் ஏற்படவில்லை. எனவே இதை பாதிப்பு ஏற்படுத்தாத குற்றமாகவே கருத
வேண்டும்' என்கிறார்.
ரகசியம் வெளியானது எப்படி? "விக்கிலீக்'இணைய தளத்துக்கு ராணுவ
ரகசியங்களை கசியவிட்டது யார் என, தெரியாமல் அமெரிக்க அதிகாரிகள் விழி
பிதுங்கிப் போயுள்ளனர். அமெரிக்காவைச் சேர்ந்த புலனாய்வுத் துறை ஆய்வாளரான
பிராட்லி மேனிங் (22) என்பவர் மீது, அமெரிக்க அதிகாரிகளுக்கு பலத்த
சந்தேகம் எழுந்துள்ளது. ஈராக்கில் அமெரிக்கா நடத்திய தாக்குதல் தொடர்பான
வீடியோ காட்சிகளை வெளியிட்டதாக இவர், அமெரிக்க அதிகாரிகளால் கைது
செய்யப்பட்டுள்ளார். இவர் மீது கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது.
தற்போது "விக்கிலீக்'இணைய தளத்தில் வெளியான தவல்களையும் இவரே
வெளியிட்டிருக்கலாம் என, அமெரிக்க அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். ஆப்கன்
போர் குறித்த ரகசியங்களை இணையதளத்தில் "சேட்டிங்' செய்து ரகசியங்களை
வெளியிட்டதாக தெரிகிறது. இவர் "விக்கிலீக்' இணையதள உரிமையாளர் ஜூலியன்
அசனேஜிற்கு ரகசியங்களை கொடுத்ததாக கூறப்படுகிறது. அமெரிக்க ராணுவ
அதிகாரிகளின் விசாரணையில், கலிபோர்னியாவைச் சேர்ந்த அட்ரியன் லாமோ என்ற
இணையதள கம்ப்யூட்டர் "ஹாக்கரிடம்' "பிரடாஸ்87' என்ற பெயரில் தொடர்பு
கொண்டு, பிராட்லி மேனிங் ரகசியங்களை அளித்ததாக தெரிகிறது. இவர்களது
தொடர்ச்சியான தகவல் பரிமாற்றங்கள் குறித்து அமெரிக்க அதிகாரிகள்ஆராய்ந்து
வருகின்றனர்.
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» பாக்.விமானப்படை தளம் மீது தாக்குதல்: பயங்கரவாதிகள் 7 பேர் சுட்டுக்கொலை; பதட்டம்
» முல்லைப் பெரியாறு அணை விவகாரம் : கேரளாவின் வேஷம் கலைந்து சுயரூபம் அம்பலம்
» பயங்கரவாதிகள் மூலம் தாக்குதல் நடத்த பாக்., ஆர்வம்: அந்தோணி
» அத்வானியை கொல்ல சதி : அல் - உம்மா தொடர்பு அம்பலம்!
» ஐ.பி.எல்., போட்டியில் சூதாட்டம் அம்பலம் : 27 வீரர்களுக்கு தொடர்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum