TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Apr 19, 2024 9:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


மே 26 முதல் சமூக வலைதளங்கள் முடக்கப்படுமா ? புதிய விதிமுறைகளுக்கான எதிர்ப்புகள் ஏன்?

Go down

மே 26 முதல் சமூக வலைதளங்கள் முடக்கப்படுமா ? புதிய விதிமுறைகளுக்கான எதிர்ப்புகள் ஏன்? Empty மே 26 முதல் சமூக வலைதளங்கள் முடக்கப்படுமா ? புதிய விதிமுறைகளுக்கான எதிர்ப்புகள் ஏன்?

Post by வாகரைமைந்தன் Tue May 25, 2021 6:40 pm

மே 26 முதல் சமூக வலைதளங்கள் முடக்கப்படுமா ? புதிய விதிமுறைகளுக்கான எதிர்ப்புகள் ஏன்? Copy-of-it-innovation


நடைமுறையில் இருந்த டிஜிட்டல் தகவல் தொழில்நுட்பத்திற்கான இடைத்தரகர்கள் வழிகாட்டு விதிகள் 2011(Intermediary guidelines 2011)-ஐ நீக்கிவிட்டு புதிய விதிகளை (இடைத்தரகர்கள் வழிகாட்டு விதிகள் 2021) கடந்த பிப்ரவரி 25, 2021-ல் வெளியிட்டது மத்திய அரசு.

இந்த புதிய டிஜிட்டல் மீடியா விதிகளின் கீழ் இணங்க டிவிட்டர், வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற இணையதள சமூக ஊடக இடைத்தரகர்கள் பல்வேறு மாற்றங்களை வரும் மே 25 க்குள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அவ்வாறு மாற்றங்கள் செய்யப்படாத பட்சத்தில் அவை இந்தியாவில் இயங்க தடை விதக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால் இதுவரை வாட்ஸ்அப், பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட தளங்கள் எதுவும் புதிய விதிமுறைகளுக்கு இணங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்த புதிய விதிமுறைகள் மக்களின் அடிப்படை உரிமையான தனியுரிமையை பறித்து மத்திய அரசின் கண்காணிப்பு நோக்கத்தினை வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இந்த புதிய விதிகள் இந்திய அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டு, ஜனநாயகத்திற்கு விரோதமாக இந்தியாவின் இணையதள பயன்பாட்டு முறையையே எதிர்மறையாக மாற்றும் வகையாக உள்ளது என இணைய சுதந்திர அறக்கட்டளை (Internet Freedom Foundation) தெரிவித்து உள்ளது.

இந்தியாவில் வலுவான தரவுப் பாதுகாப்புச் சட்டம் (data protection act) இல்லாத நிலையில் சமூக வலைதளங்களில் ஒருவர் போட்ட பதிவு அரசால் “சட்டவிரோதமானது” எனத் தடைசெய்யப்பட்டால், அந்த தரவின் பதிவாளரை 36 மணி நேரத்துக்குள் குறிப்பிட்ட சமூக வலைதள நிர்வாகிகள் கண்டறிய வேண்டும்.

மேலும், டிஜிட்டல் செய்தி ஊடக அமைப்புகளைப் பொறுத்தவரை, “ நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கு, நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு அல்லது அண்டை நாடுகளுடனான நட்பு உறவுகள் ஆகியவற்றின் பார்வையில் இருந்து ஆட்சேபனைக்குரியதாகக் கருதப்பட்டால், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 69 ஏ இன் கீழ் எந்தவொரு செய்தியையும் அகற்றக்கோரும் உரிமை மத்திய அரசுக்கு உண்டு என்பது போன்ற விதிகள் இந்த புதிய வழிமுறைகளில் இடம்பெற்று உள்ளன. இவை அனைத்தும் அடிப்படை கருத்து உரிமைக்கு பாதகமாக அமைந்துள்ளது.

இந்த விதிகளில் உள்ள அதிகப்படியான சர்ச்சைகளின் காரணமாக இதனை எதிர்த்து இந்தியாவின் மூன்று வெவ்வேறு உயர் நீதிமன்றங்களில் குறைந்தது ஆறு ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய இணக்கங்கள் என்னென்ன ?

• 2011 விதிகளின் படி , இணைய பயனாளர் ஒருவர், அதன் விதிகள் குறித்து எதாவது புகார்களை முன்வைத்தால் புகார்களைப் பெறுவதற்கும் அவற்றைத் தீர்ப்பதற்கும் குறை தீர்க்கும் அதிகாரி ஒருவர் பொறுப்பேற்பார். இதற்கு அவருக்கான கால அவகாசம் ஒரு மாதம். தற்போது அவை 24 மணிநேரமாக குறைக்கப்பட்டு, அவர் 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

• அரசு புறம்பானது எனக் கருதும் பதிவுகளை நீக்க 2011 விதிகளின் படி இடைத்தரகர்கள் (சமூக வலைதளங்கள்) 36 மணிநேரத்துக்குள் செயல்பட்டு, பொருத்தமான சூழல் ஏற்பட்டால் அத்தகைய பதிவு செய்தவர்களுடன் இணைத்து பணியாற்றும் சூழலும் இருந்தது. ஆனால் ஐ.டி சட்டத்தின் பிரிவு 79 (3) இன் கீழ் பதிவை நீக்கும் செயல்முறையை இடைத்தரகர்கள் கட்டாயமாக 36 மணி நேரத்திற்குள் முடிக்க வேண்டும் என புதிய விதிகள் நிர்பந்திக்கிறது. அதுமட்டும் அல்லாமல் பதிவு செய்த நபர் பற்றிய தகவல்களை தர வேண்டும் அல்லது விசாரணைக்கு தேவையான ஒத்துழைப்பை இடைத்தரகர்கள் 72 மணி நேரத்திற்குள் சட்ட அமலாக்க துறைக்கு தரவேண்டும்.

• மேற்கொண்ட வழிமுறைகளுக்கு ஒத்துழையாவிட்டால் இடைத்தரகர்கள் மீது ஐ.டி சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் விதிகளின் கீழ் குற்றவியல் வழக்கு தொடரப்படும்.

இவை அனைத்துக்கும் மேலாக இடைத்தரகர் விதிகள், விதி 4-ன் கீழ் சமூக ஊடகங்களுக்கு பல கூடுதல் இணக்கங்கள் விதிக்கப்பட்டுள்ளன. மே 25 முதல் நடைமுறைக்கு வரும் இடைத்தரக விதிகளின் சில சிக்கலான விதிகள் உள்ளன. அவை விதிகள் 4(2) மற்றும் 4(4).

விதி 4(2)-ன் கீழ், செய்தியிடல் சேவைகளை (உதாரணமாக வாட்ஸ்அப்) வழங்கும் குறிப்பிடத்தக்க சமூக ஊடக இடைத்தரகர்கள் செய்திகளைத் தோற்றுவிப்பவரை கண்டுபிடிக்கும் முறையை செயல்படுத்த வேண்டும். இது அனைத்து குடிமக்களின் அடிப்படை பேச்சு மற்றும் தனியுரிமையின் உரிமைகளுக்கு கடுமையான பாதிப்பை உண்டாக்கும். இறுதி முதல் இறுதி குறியாக்கம் ( end to end encryption) போன்ற பாதுகாப்பு வசதிகளை இது மட்டுப்படுத்தும். ஒருவரது தனிப்பட்ட உரையாடல்களை கண்காணிக்கும் வகையில் இது அமையும். இது போல ஏராளமான அரசுக்கும் அதீத அதிகாரத்தை ஈட்டு தரக்கூடிய விதிகள் இந்த புதிய வழிமுறைகளில் இடம்பெற்று உள்ளது.

இந்தியாவை பொறுத்தவரை இணைய பயன்பாடு என்பது பெரும்பான்மை மக்களுக்கு சமூக வலைதள பயன்பாடுகளே. படிக்க, உரையாட, செய்தி வாசிக்க, இணைப்பில் இருக்க, பல்வேறு தலைப்புகளைப் பற்றியும், பல்வேறு சம்பவங்கள் பற்றியும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்ய கலந்துரையாட, ஏன் அவசர மற்றும் பேரழிவு காலங்களில் உதவி கேட்க, உதவி கரம் நீட்ட என சமூக வலைதளங்கள் அனைத்து தரப்பு மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பை அளிக்கக்கூடியதாகவே இருந்து வருகிறது என்பது மறுக்க முடியாதது.

(Internet Freedom Foundation/YT)
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1696
Join date : 23/05/2021

Back to top Go down

Back to top

- Similar topics
» 8 ஆம் வகுப்பு மாணவன் உருவாக்கிய புதிய சமூக வலைத்தளம்!!
» பேஸ்புக்கின் சவால் – மைக்ரோசொப்டின் புதிய சமூக வலைத்தளம் வருகிறது
» இனப்படுகொலை நடந்த மண்ணில் சர்வதேச சமூக ஆர்வலர்கள் பங்குபெரும் சர்வதேச பருவநிலை மாற்றம் மற்றும் சமூக விடய மாநாடு
» தமிழனின் புதிய வெப் அப்ளிகேசன் உங்களுக்காக முதல் பார்வை
» நேற்று முதல் , 'a‌n‌na‌ha‌za‌r‌e‌t‌h‌i‌n‌k‌s.b‌l‌o‌g‌s‌p‌o‌t.‌i‌n' என்ற புதிய வலைப்பூவை ஹசாரே தொடங்கியுள்ளார்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum