TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:04 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


பேரம்… பணம்… பிரேமலதா! – சந்திரகுமார் சாட்டை – சரியும் தே.மு.தி.க.

Go down

பேரம்… பணம்… பிரேமலதா! – சந்திரகுமார் சாட்டை – சரியும் தே.மு.தி.க. Empty பேரம்… பணம்… பிரேமலதா! – சந்திரகுமார் சாட்டை – சரியும் தே.மு.தி.க.

Post by Tamil Fri Apr 08, 2016 9:33 pm

பேரம்… பணம்… பிரேமலதா! – சந்திரகுமார் சாட்டை – சரியும் தே.மு.தி.க.
பேரம்
சீட்டுக்கட்டுபோல சரிய ஆரம்பித்து இருக்கிறது தே.மு.தி.க.!
கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் மாற்றாக மக்கள் நலக் கூட்டணிக் கட்சியினரால் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார் விஜயகாந்த். ‘‘இதெல்லாம் வேலைக்கு ஆகாது” என்று அந்தக் கட்சியின் மூன்று எம்.எல்.ஏ-க்களும் ஐந்து மாவட்டச் செயலாளர்களும் கட்சியைவிட்டுக் கம்பி நீட்டிவிட்டார்கள்.
திடீர் போர்க்கொடி!

கடந்த சட்டமன்றத் தேர்தலில் எதிர்க் கட்சி அந்தஸ்தை அடைந்தது தே.மு.தி.க. ஆனால், அந்தக் கட்சியில் இருந்து 8 எம்.எல்.ஏ-க்களைத் தனியாகப் பிரித்து தன்வசம் வைத்துக்கொண்டார் ஜெயலலிதா. அதில் இருந்தே சட்டசபைக்குப் போவதையும் விஜயகாந்த் குறைத்துக்கொண்டார். இந்தத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் விஜயகாந்த் இணைவார் என்று பலராலும் எதிர்பார்க்கப் பட்டது. கருணாநிதியும் அதனை உறுதிப் படுத்தினார். இந்த நிலையில், மக்கள் நலக் கூட்டணியில் விஜயகாந்த் இணைந்தார். அவரை முதலமைச்சர் வேட்பாளராக வைகோ, திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர் அறிவித்தார்கள். இதற்கு, ‘தே.மு.தி.க. – மக்கள் நலக் கூட்டணி’ என்று பெயர் சூட்டப்பட்டது.
கூட்டணி சார்பில் நடந்த கூட்டத்தில் பேசிய கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரும் ஈரோடு எம்.எல்.ஏ-வுமான சந்திரகுமார், ‘‘இரண்டு திராவிடக் கட்சிகளின் காலம் முடிந்தது. இனி வரும் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி மகத்தான வெற்றி பெற்று முதல்வராக கேப்டன் வருவார்’’ என்று பேசினார். இப்போது இதே சந்திரகுமார்தான் போர்க்கொடி உயர்த்தி உள்ளார். இவருடன் மேட்டூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் சி.ஹெச்.சேகர் ஆகியோர் கைகோத்து உள்ளனர்.

 
துணைச் செயலாளர் பி.முருகேசன், உயர்மட்டக் குழு உறுப்பினர் கே.ஆர்.வீரப்பன், வேலூர் மத்திய மாவட்டச் செயலாளர் ஜெ.விஸ்வநாதன், திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளர் என்.கார்த்திகேயன், ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளர் இமயம் என்.எஸ்.சிவகுமார், ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர் பி.செந்தில்குமார், விழுப்புரம் வடக்கு மாவட்டப் பொருளாளர் செஞ்சி சிவா ஆகியோரும் மக்கள் நலக் கூட்டணியில் தே.மு.தி.க இணைந்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து உள்ளனர். இவர்கள் அனைவரையும் கட்சியைவிட்டு நீக்கிவிட்டார் விஜயகாந்த். ‘‘கேப்டன் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
‘‘இது தி.மு.க-வின் சதி!”

பேரம்… பணம்… பிரேமலதா! – சந்திரகுமார் சாட்டை – சரியும் தே.மு.தி.க. %E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D
தே.மு.தி.க வட்டாரத்தில் நாம் விசாரித்தபோது, “கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பே தி.மு.க-வுடன்தான் தே.மு.தி.க கூட்டணி வைக்கும் என்று நிர்வாகிகள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால், கேப்டன் ‘கிங்’ ஆக இருக்க வேண்டும் என தொண்டர்கள் விருப்பம் தெரிவித்த தால்தான் விஜயகாந்த் மக்கள் நலக் கூட்டணிக்கு ஓ.கே சொன்னார். இதே சந்திரகுமார், மக்கள் நலக் கூட்டணியில் நாங்கள் சேர்ந்தபோது எந்த எதிர்ப்பும் காட்டவில்லை. நீங்கள் ‘கிங்’காகத்தான் இருக்க வேண்டும் என்று அவரும் விஜயகாந்த்திடம் சொன்னார். ஆனால், இப்போது ‘கிங்’ ஆக இருக்கிற நேரத்தில் அவர் கட்சியைவிட்டுச் செல்வதற்கு தி.மு.க தரப்பில் இருந்து சில முக்கிய நபர்கள், சந்திரகுமார் உள்ளிட்டோரிடம் பேசியுள்ளார்கள். தி.மு.க கூட்டணி அமையாமல் போனதும் கட்சியை உடைக்கும் காரியத்தை தி.மு.க-வில் இருக்கும் முக்கியப் பிரமுகர்கள் மேற்கொண்டார்கள். சில நாட்களுக்கு முன் ஸ்டாலின், ‘தே.மு.தி.க தன்னாலே கரைந்துவிடும்’ என்று பொடிவைத்துப் பேசியதன் காரணம் இதுதான்.
தே.மு.தி.க-வை உடைக்க வேண்டும், அல்லது முடக்க வேண்டும் என்ற இரண்டு அஸ்திரங்களை தி.மு.க கையில் எடுத்து உள்ளது. அதற்கு இவர்கள் பலிகடா ஆகிவிட்டார்கள். இவர்களைவைத்து கட்சியின் சின்னத்தை முடக்க தி.மு.க திட்டமிடுகிறது” என்றனர்.
சந்திரகுமாரைச் சந்தித்து இதுபற்றி விளக்கம் கேட்டோம். ‘‘தே.மு.தி.க-வில் தான் நாங்கள் இன்னும் தொடர்கிறோம். எங்களை நீக்கும் அதிகாரம் விஜயகாந்த்துக்கு கிடையாது” என்ற பீடிகையுடன் சந்திரகுமார் பேசினார்.
‘‘தி.மு.க பிரமுகர் வீட்டில் நடந்த பேச்சுவார்த்தை!”
‘‘ ‘தி.மு.க-வுடன் கூட்டணிவைக்க வேண்டும்’ என்றுதான் நாங்கள் வலியுறுத்துகிறோம். ‘தி.மு.க-வுடன் பேசுகிறேன், தொகுதி எண்ணிக்கையில் அவர்கள் ஒத்துவராமல் உள்ளார்கள்’ என்று நேர்காணலுக்கு வந்த அனைத்து தே.மு.தி.க தொண்டர்களிடமும் சொல்லிவிட்டு, யாரிடமும் கலந்து ஆலோசனை செய்யாமல் மார்ச்-10 தேதி தனித்து நிற்பதாக  அறிவித்தார். அதன்பின் 23-ம் தேதி மக்கள் நலக் கூட்டணியோடு கூட்டணி அறிவிப்பை வெளியிட்டார். அந்தக் கூட்டணி அறிவிப்பே அன்று காலைதான் எனக்கே தெரியவந்தது. அதன்பின் 24-ம் தேதி நாங்கள் எட்டுப் பக்க கடிதம் ஒன்றை விஜயகாந்த் கையில் கொடுத்தோம். அதில், ‘நாம் தி.மு.க-வுடன் கூட்டணிவைத்தால்தான் நம்முடைய கட்சிக்கு நல்லது. ஜெயலலிதாவை வீழ்த்த தி.மு.க-வுடன் கூட்டணி வைக்கவேண்டும்’ என்று வலியுறுத்தி இருந்தோம். ஆனால், இந்த முடிவு அவராக எடுத்த முடிவு அல்ல… அண்ணியார் எடுத்த முடிவாகத்தான் உள்ளது. இந்த முடிவு ஜெயலலிதாவுக்குத்தான் சாதகம். ஜெயலலிதாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை இவர்கள் எடுப்பதால்தான் இவர்கள் மீது எங்களுக்குச் சந்தேகம் வருகிறது.

பேரம்… பணம்… பிரேமலதா! – சந்திரகுமார் சாட்டை – சரியும் தே.மு.தி.க. P2c

தமிழகம் முழுவதும் உள்ள தொண்டர்கள் ஒரு மாதமாகவே இவருடைய தன்னிலையற்ற நிலைப்பாட்டால் குமுறிவருகின்றனர். ஆனால், விஜயகாந்த்திடம் நாங்கள் கேட்டால், ‘வேட்புமனுத் தாக்கலின் கடைசி நாள்வரை கூட்டணி பேசலாம், பொறுமையாக இருங்கள்’ என்று சொன்னார். அதனால்தான் அமைதியாக இருந்தோம். இதுவரை எங்கள் கட்சி நிகழ்ச்சிக்குக்கூட அனுமதி தராத ஆண்டாள் அழகர் கல்லூரியில் மக்கள் நலக் கூட்டணி மாநாட்டுக்கு இடம் ஒதுக்கியபோது இனிமேல் இவர் மாறமாட்டார் என்ற எண்ணம் எங்களுக்கு ஏற்பட்டுவிட்டது. இது, அண்ணி பிரேமலதா எடுத்த முடிவு. அவரால்தான் கட்சி இன்று அழிவுக்குச் சென்றுகொண்டிருக்கிறது. இவர்களுக்குப் பின்னணியில் இருப்பது வைகோ. அவர்தான் அ.தி.மு.க சார்பில், தே.மு.தி.க-விடம் பேசியுள்ளார் என்ற சந்தேகம் உள்ளது.
தே.மு.தி.க உட்கட்சி விவகாரங்களில் தலையிட வைகோவுக்கு என்ன அதிகாரம் உள்ளது?
நாங்கள் பணம் வாங்கிவிட்டோம் என்று பேச வைகோ யார்? அவர் பணம் வாங்கிக் கொண்டுதான் அந்தக் காலத்தில் தி.மு.க-வை உடைத்தாரா? நாங்கள் எம்.எல்.ஏ-வாக இருக்கிறோம். ஆனால், எங்கள் நிலையை எங்கள் வீட்டில் வந்து பாருங்கள் தெரியும். லோனுக்கு கார் வாங்கி அதை அடைக்கமுடியாமல் நான் கஷ்டப்பட்டு வருகிறேன். தமிழகம் முழுவதும் கட்சித் தொண்டர்கள் என்ன நினைக்கிறார்களோ, அதை நாங்கள் தலைவருக்குத் தெரியபடுத்துகிறோம்.
விஜயகாந்த்தின் முடிவு தற்கொலைக்குச் சமமானது. தோல்வியடையப் போகிறோம் என்று தெரிந்தே ஒருவன், லட்சக்கணக்கில் எப்படி செலவு செய்ய முடியும்? நாங்கள் முதல்வராக விஜயகாந்த்தை முன்னிறுத்திப் பார்க்க ஆசைப்பட்டோம். 2011-ல் எதிர்க் கட்சி; 2016-ல் ஆட்சியில் பங்கு; 2021-ல் தே.மு.தி.க ஆட்சி என்ற பாதையில்தான் தலைவரும் இருந்தார். அதை மாற்றியது பிரேமலதாதான். தி.மு.க-வுடன் பேச்சு நடக்கிறது என்றுதான் எங்களிடம் சொல்லி வந்தார்கள். தி.மு.க-வைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர் வீட்டிலும் சந்திப்பு நடந்தது. அதன்பின் என்ன நடந்தது என்று எங்களுக்குத் தெரியாது. வைகோ பேசிய பேரம் என்ன என்பது விரைவில் தெரியவரும். இப்போது தி,மு.க-வுடன் கூட்டணி இல்லை என்று சொல்விட்டார்கள். தி.மு.க-வுடன் கூட்டணி வைத்தால் உள்ளாட்சித் தேர்தலிலும் கணிசமான இடங்களைப் பிடிக்கலாம் என்ற ஆசையில் இருந்த லட்சக்கணக்கான தொண்டர்களையும் இவர்கள் ஏமாற்றிவிட்டார்கள்.
தே.மு.தி.க-வில் நேர்காணலுக்கு நான்காயிரம் பேர் அழைக்கப்பட்டு இருந்தனர். அவர்களில் தொகுதிக்கு இருவர் என ஃபைனல் செய்யப்பட்டு அவர்களிடம் கணிசமான தொகையைக் கட்டச் சொன்னார்கள். தி.மு.க கூட்டணி அமையும் வாய்ப்பு இருந்ததால், பலர் கடன் வாங்கிக்கூட பல லட்சங்களை தலைமையிடம் அளித்தனர். மக்கள் நலக் கூட்டணியுடன் தே.மு.தி.க கூட்டு வைத்தபின் பலர் தங்கள் தொகையைத் திருப்பிக் கேட்டுள்ளார்கள். அவர்களிடம் வேட்பாளராக நில்லுங்கள். தொகையை எல்லாம் திருப்பித் தரமுடியாது என்று கூறியுள்ளார்கள். சிலருக்கு மட்டும் தொகையைத் திருப்பிக் கொடுத்து விட்டார்கள். ஆனால், இன்னும் சிலர் தொகையை வாங்க முடியவில்லை எனப் புலம்புகின்றனர். இந்த மாதிரியான நெருக்கடியை விஜயகாந்த் ஏன் சந்திக்க வேண்டும்?” என்று கேட்டார் சந்திரகுமார்.
‘‘ஜெயலலிதாவால் ஏவப்பட்ட ஏவுகணை வைகோ!”
மேட்டூர் எம்.எல்.ஏ-வான எஸ்.ஆர்.பார்த்திபனிடம் பேசினோம். ‘‘இந்தக் கூட்டணி முடிவு குறித்து நாங்கள் கடந்த ஒரு வாரமாகத் தலைவரைச் சந்தித்து எங்கள் எதிர்ப்புகளைத் தெரிவித்தோம். அதை எல்லாம் கேட்டுக்கொண்டு ‘நல்ல முடிவை எடுக்கிறேன்’ என்று சொல்லிக்கொண்டிருந்தாரே தவிர, வேறு ஒன்றும் செய்யவில்லை. அதுமட்டு மில்லாமல், ‘இந்த முடிவுக்கு நீங்கள் துவண்டுவிட வேண்டாம். வேட்புமனுத் தாக்கல் நாள்வரை கூட்டணி பேசலாம்’ என்று சொல்லி எங்களைச் சமாளித்து வந்தார். மக்கள் நலக் கூட்டணியோடு சேர்ந்தது ஒரு தற்கொலை முடிவு. தமிழ்நாடு முழுவதும் தே.மு.தி.க – தி.மு.க கூட்டணி உறுதியாகிவிட்டது என்று செய்தி வந்த நிலையில், மக்களும் தொண்டர்களும் உற்சாகத்தில் இருந்தனர். அதுதான் இயற்கையாக அமைய வேண்டிய கூட்டணி. ஆனால், அதைவிடுத்து எங்களைக் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுத்து மக்கள் நலக் கூட்டணியில் இணைந்திருக்கிறார் விஜயகாந்த். அவரை யார் ஆட்டுவிக் கிறார்கள் என்பது தெரியவில்லை. எங்கள் கேப்டனின் ஒரே சிந்தனை, அடுத்த முறை ஜெயலலிதா ஆட்சியை கைப்பற்றவிடக் கூடாது என்பதுதான். ஆனால், மக்கள் நலக் கூட்டணியில் தே.மு.தி.க இணைந்ததன் மூலம் ஜெயலலிதா எளிதாக வெற்றி பெற்றுவிடுவார். இதனால் இதன் பின்னணியில் என்ன நடந்திருக்கும், எப்படி கேப்டன் இதற்கு ஒப்புக்கொண்டார் என்கிற சந்தேகம் எங்களுக்கு இருக்கிறது. கட்சி சர்வாதிகாரப்போக்கில் சென்று கொண்டிருக்கிறது. இதுநாள் வரை கட்சியில் எங்களது கருத்துரிமை பறிக்கப்பட்டு இருந்தது. துணைச் செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள், மண்டலப் பொறுப்பாளர்கள், கிளைச் செயலாளர்கள் எனப் பலரும் இதே கருத்தைத்தான் முன்வைக்கிறார்கள். மக்கள் நலக் கூட்டணிக்குப் பிரசாரமும் போகமாட்டோம், ஓட்டும் போட மாட்டோம் என்று சொல்கிறார்கள். இவர்களுக்கு விஜயகாந்த் என்ன செய்யப் போகிறார்? இந்தக் கூட்டணி ஒவ்வொரு தொகுதியிலும் 10,000 ஓட்டுக்கள்கூட வாங்காது என்பதுதான் நிஜம். மக்கள் நலக் கூட்டணி என்பது லேகியம் விற்கும் அணி. அதோடு கேப்டனும் அவரது தொண்டர்களும் கட்சியின் எதிர்காலத்தைச் சீரழித்து விட்டார்கள். நாங்கள் செயற்குழு உறுப்பினர்கள். எங்களைத் தன்னிச்சையாக அவரால் நீக்கமுடியாது. இதனால், இந்தக் கூட்டணி முடிவை மறுபரிசீலனை செய்து தி.மு.க-வோடு கூட்டணி அமைக்க வேண்டும்’’ என்றார்.
‘‘மக்கள் நலக் கூட்டணி வெற்றி பெறாது!”
கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ சி.ஹெச்.சேகர், “இந்தத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி வெற்றி பெறாது. தொண்டர்கள் விருப்பம் இல்லாமல் கேப்டன் வீட்டில் மக்கள் நலக் கூட்டணியில் சேர முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. தே.மு.தி.க-வை தி.மு.க உடைக்கவில்லை. ஆட்சி மாற்றம் வர வேண்டும். கடந்த 5 ஆண்டுகளாக அ.தி.மு.க-வால் நாங்கள் படாதபாடு பட்டுள்ளோம். தி.மு.க-வோடு கூட்டணி சேர வேண்டும் என்று தொண்டர்கள் விரும்புகின்றனர். நேர்காணலின்போது கேப்டனே அதைத் தெரிவித்தார். மக்கள் நலக் கூட்டணியில் தே.மு.தி.க இருப்பது பலருக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் எல்லாரும் எங்கள் மனநிலையில்தான் இருக்கிறார்கள்” என்றார்.
தே.மு.தி.க-வில் போர்க்கொடி தூக்கிய வர்களுக்கு எதிராகப் பல இடங்களில் தே.மு.தி.க-வினர் உருவபொம்மை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
‘‘கட்சி கரைந்துவிடாது!”
தே.மு.தி.க எம்.எல்.ஏ மோகன் ராஜ், ‘‘கேப்டன் தன்னுடைய ரசிகர் மன்றத்தில் பொறுப்பில் இருந்தவர்களைத்தான் எம்.எல்.ஏ-வாக ஆக்கி அழகு பார்த்தார். ஆனால், அவர்கள்தான் துரோகிகளாக மாறிவருகிறார்கள். இவர்கள் சொல்லித்தான் கேப்டன்  கட்சி ஆரம்பித்தார். இத்தனை ஆண்டுகள் பதவியில் இருந்து சுகம் கண்டு இப்போது தூக்கி எறிந்துவிட்டுப் போவது அசிங்கம். யாருடன் கூட்டணி வைத்தால் கட்சிக்கு நல்லது என்று தலைவருக்குத் தெரியாதா? பிரேமலதாதான் காரணம் என்கிறார்கள். அவர் தலையிட்டபின் இவர்களால் ஆட்டம் போட முடியவில்லை. தலைவர் முடிவு செய்துவிட்டால், அவர் முடிவை சுதீஷ், பிரேமலதா யாருமே மாற்ற முடியாது. தேவையில்லாமல் அவர்களை குற்றம்சாட்டுகின்றனர். தே.மு.தி.க வளர்ச்சியையும் இவர்கள் தடுக்க முடியாது. கட்சியைவிட்டுப் போன துரோகிகளால் கட்சி கரைந்துவிடாது” என்றார்.
ஒரு பக்கம் தே.மு.தி.க அதிருப்தி நிர்வாகிகள் வைகோ மீது குற்றசாட்டு கூறி பத்திரிகையாளர் சந்திப்பை நடத்திக்கொண்டிருந்த அதே நேரம் தாயகத்தில் வைகோ, மக்கள் நலக் கூட்டணித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். அதனையடுத்து நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய வைகோ,
‘‘தி.மு.க-தான் தே.மு.தி.க-வை உடைத்துக் கொண்டிருக்கிறது. மாவட்ட நிர்வாகிகளுக்கு ரூ.3 கோடியும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ரூ.5 கோடி வரையிலும் பணப்பரிமாற்றம் நடந்து இருப்பதாகவும், இன்னமும் பல நிர்வாகிகளுடன் பேரம் பேசிக்கொண்டிக்கிறது’’ என்கிற குற்றச்சாட்டை முன்வைத்தார். ‘‘யார் யார் எவ்வளவு பணம் வாங்குகிறார்கள் என்பது வைகோ-வுக்கு மட்டும் எப்படித் தெரிகிறது?” என்று கேட்கிறார்கள் இந்தப் புதிய மக்கள் படையினர்.
தி.மு.க-வுடன் கூட்டணி கலைந்தது ஏன் என்பது பலருடைய கேள்வி! பிரிந்து போனவர்களுக்கு மட்டுமல்ல, மக்களுக்கும்தான்!
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» சரியும் இந்திய ரூபாவின் மதிப்பு காங்கிரசை விரட்டுமா?
» ‘மக்கள் தேமுதிக’: புதிய கட்சியை தொடங்கினார் சந்திரகுமார்!
» ஈழம் இல்லாத ஒன்றா? தமிழர்களுக்கு விழுந்த சாட்டை அடி.
» பதவிக்காக எம்.பி.,க்களுக்கு பணம் : ஓட்டுக்கு பணம் கொடுத்த வழக்கில் இந்துஸ்தானி வாக்குமூலம்
» வெளிநாட்டில் உள்ள பணம் அனைத்துமே கறுப்புப் பணம் அல்ல

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum