TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun May 05, 2024 7:48 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


இணையம் வராத அந்த 400 கோடி பேர்

Go down

இணையம் வராத அந்த 400 கோடி பேர் Empty இணையம் வராத அந்த 400 கோடி பேர்

Post by Tamil Fri Mar 25, 2016 4:41 pm

இன்றைய வாழ்வியல் நடைமுறையில், இணையம் நம் வாழ்க்கையோடு இணைந்த ஒரு தவிர்க்க முடியாத அம்சமாக இருந்தாலும், உலக அளவில், இன்னும் 400 கோடி பேர், இணயம் பக்கம் வராமலேயே தங்கள் வாழ்க்கையை நடத்திக் கொண்டுள்ளனர். அண்மையில் பேஸ்புக் நிறுவனம், “2015 ~ இணைய இணைப்பின் நிலை” என்ற 56 பக்க அறிக்கையை வெளியிட்டது. அதில், ஏன் இந்த மக்கள் இணையம் தேவை என்று தெரிந்திருந்தும், அதன் பக்கமே வராமல் உள்ளனர் என்பதற்கான காரணங்களை ஆய்வு செய்து முடிவுகளைத் தந்துள்ளது. அவற்றைத் தெரிந்து கொள்வதன் மூலம், அந்த


காரணங்களை நிவர்த்தி செய்து, அவர்களையும் இணையத் தொடர்பில் கொண்டு வரலாம். இதையே அந்த அறிக்கையும் சுட்டிக் காட்டியுள்ளது. அதனை இங்கு காணலாம்.
இணைய வழி சேவைகளை மக்கள் பயன்படுத்தத் தொடங்கி, 46 ஆண்டுகள் ஆகிவிட்டன. மக்கள் தாங்களாக, முதன் முதலில், என்.சி.எஸ்.ஏ. மொசைக் (NCSA Mosaic) பிரவுசரைப் பயன்படுத்தி, உலக வைய விரிந்த இணையத்தைப் பயன்படுத்த ஆரம்பித்து 23 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், உலக மக்கள் தொகையில் 401 கோடி மக்கள் இன்னும் இணையத்தைப் பயன்படுத்துவதில்லை.
சென்ற பத்து ஆண்டுகளாக, ஒவ்வொரு ஆண்டும், இணையத்தில் இணையும் மக்கள் தொகை 20 கோடி முதல் 30 கோடி வரை உள்ளது. இந்த வேகத்தில் போனால், உலகில் உள்ள மக்கள் அனைவரும், இணையத்தில் இணைய 15 முதல் 20 ஆண்டுகள் வரை ஆகலாம். ஏன், இன்னும் அதிக ஆண்டுகள் ஆகலாம் என்று இந்த பேஸ்புக் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதற்கு முக்கியமாக நான்கு காரணங்கள் தரப்பட்டுள்ளன. அவை: 1. இணையத் தொடர்பு கிடைக்காத நிலை, 2. நிதி வசதி இல்லாமை, 3. இணையம் தேவைப்படாத வாழ்க்கை முறை மற்றும் 4. மக்களின் தயார் நிலை.
இணையத் தொடர்பு கிடைக்காத நிலை: பலர் இன்னும் இணையத்துடன் தொடர்பு கொள்ளாமல் இருக்க, தொடர்பு கிடைக்காத நிலையே முதன்மைக் காரணமாக உள்ளது. தற்போது, 3ஜி மற்றும் 4ஜி மொபைல் ஸ்மார்ட் போன்கள் தான் எங்கும் இடம் பெற்றுள்ளனவே. அவற்றின் வழியாக இணைய இணைப்பினைப் பெறலாமே என்றுதான் நாம் எண்ணுவோம். பல நாடுகளில் இந்நிலை ஏற்படவில்லை. மொபைல் பிராட்பேண்ட் தொடர்பு கிடைக்காத இடங்களில் இன்னும் 160 கோடி பேர் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில், 9-0 சதவீதம் பேர், தென்கிழக்கு ஆசியா, பசிபிக் நாடுகள் மற்றும் ஆப்பிரிக்காவின் ஒரு பகுதியில் வாழ்கின்றனர். இவர்களில், பெரும்பாலான்வர்கள், இந்த நாடுகளின் கிராமப் புறங்களில் வாழ்பவர்கள்.
இந்த இடங்களில் இணைப்பு தர இயலாமையை, நெட்வொர்க் சேவையை வழங்கும் நிறுவனங்கள் கடுமையாகவே எதிர் கொள்கின்றனர். நகர்ப்புற ஊர்களுடன் ஒப்பிடுகையில், இந்த கிராமங்களில், மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே மக்கள் வாழ்கின்றனர். ஆனால், இவர்களுக்கு இணைய இணைப்பு கொடுப்பதற்கான, கட்டமைப்பினை ஏற்படுத்த, நகர்ப்புறங்களில் ஆகும் செலவினைப் போல இரண்டு அல்லது மூன்று மடங்கு நிதி செலவாகிறது. அந்த செலவினை ஈடு கட்டும் வகையில், இந்தக் கிராம மக்களிடம் கட்டணம் வசூலிக்க முடியாது.
இந்த கட்டுப்படியாகாத நிலை, இந்தியக் கிராமப்புறம் அல்லது ஆப்பிரிக்க நாடுகளில் மட்டுமில்லை. வளர்ந்த நாடுகளான பிரிட்டன் மற்றும் அமெரிக்காவிலும் உள்ளது. இதில் முதலில் கூறப்பட்ட இந்திய மற்றும் ஆப்பிரிக்க நாட்டின் பகுதிகளில், மின் இணைப்பே இன்னும் தரப்படாமல் உள்ளது. அதனால் தான், பேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனங்கள், தங்களின் பலூன்கள் மற்றும் ஆளில்லா பறக்கும் சிறிய விமானங்கள் மூலமாக, இங்கு வாழும் மக்களுக்கு இலவச இணைய இணைப்பு வழங்கும் திட்டங்களை சோதனை முறையில் மேற்கொண்டு வருகின்றன.
நிதி வசதி இல்லாமை: இந்த மக்களில், பெரும்பாலானவர்களிடம், இணைய இணைப்பிற்கென செலவழிக்கும் அளவிற்கு நிதி இல்லாமை, அடுத்த முதன்மை காரணமாக உள்ளது. வளர்ந்த நாடுகளில் கூட, 30% மக்கள், வறுமைக் கோட்டுக்கும் கீழாக வாழ்கின்றவர்களாக உள்ளனர் என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 200 கோடி மக்கள், மாதத்திற்கு 500 எம்.பி. டேட்டா கூட வாங்க இயலாத நிலையில் உள்ளனர். பிரிட்டனில், சராசரியாக, ஒரு நபர் தன் மொபைல் இணைய இணைப்பிற்குத் தன் வருமானத்தில் 1% பணத்தைச் செலவழிக்கிறார். அமெரிக்காவில் இது 2% ஆக உள்ளது. இந்தியாவில், இது 4% க்கும் சற்று அதிகமாக உள்ளது. நைஜீரியாவில், இது 7%க்கும் அதிகமாக உள்ளது. இதனுடன், இதற்கான சாதனங்களுக்கான செலவு, கூடுதல் தகவல் பெற்று அனுப்பும் செலவினை இணைத்தால், மேலே குறிப்பிட்ட சராசரி செலவினத்தைக் காட்டிலும் இரண்டு அல்லது மூன்று மடங்கு பணத்தை இவர்கள் செலவழிக்க வேண்டியதுள்ளது.
உயரும் பொருளாதார நிலை மற்றும் இணைய இணைப்பு கட்டணக் குறைப்பு ஆகியவற்றினால், கூடுதலான மக்கள் இணைய இணைப்பினைப் பெறும் சூழ்நிலை வளர்ந்து வரும் நாடுகளில் உருவாகி வருகிறது. அதனால், 50 கோடி பேருக்கு, 500 எம்.பி. டேட்டா பெறுவது எளிதான ஒன்றாக மாறி வருகிறது. இருப்பினும், பலர் இன்னும் ஒரே மொபைல் போனை தங்களுக்குள் பகிர்ந்து பயன்படுத்துகின்றனர். இன்னும் பலர் அது கூட இல்லாமல் உள்ளனர்.
இணையம் தேவைப்படாத வாழ்க்கை: மூன்றாவதான முக்கிய காரணம், பலர், இணையம் தேவைப்படாத வாழ்க்கையை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், இதனை உறுதி செய்வது சற்று சிரமமான செயல்பாடாகும். இந்நிலைக்கு முதல் காரணம், இணையத்தில் பெரும்பாலான மக்கள் புரிந்து கொள்ளும் மொழி இல்லாமையே. பன்னாட்டளவில், ஏறத்தாழ 7,000 மொழிகள் புழக்கத்தில் உள்ளன. ஆனால், 56% இணைய தளங்கள், ஆங்கில மொழியில் மட்டுமே உள்ளன. மிகப் பிரபலமான 10 மொழிகள், 89% இணைய தளத்தை ஆக்கிரமித்துள்ளன. எனவே, நூறு கோடி மக்களுக்கும் மேல், தங்கள் மொழிகளில், தங்களுக்குத் தேவையான தகவல்களைப் பெற முடியாதவர்களாகவே உள்ளனர்.
இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்களின்படி, கூகுள் ஆண்ட்ராய்ட் இயக்கம் 76 மொழிகளில் இணையத்தைத் தருகிறது. பேஸ்புக்கில், 139 மொழிகளை மட்டுமே கையாள முடிகிறது. இந்த மொழிகள் 89% பேரின் முதல் அல்லது இரண்டாவது மொழியாக உள்ளதால், பேஸ்புக் 83% மக்களைச் சென்றடைய முடிகிறது. ஆனால், 98% மக்களைச் சென்றடைய, 800 மொழிகளைக் கையாளும் கட்டமைப்பினை, பேஸ்புக் ஏற்படுத்த வேண்டும்.
மக்களின் தயார் நிலை: இறுதியாக, இணையத்தைப் பயன்படுத்த மக்களின் ஆயத்த நிலை. இதனை அறிவது மிகவும் கடினம். இந்நிலை என்பது மக்களின் கம்ப்யூட்டர் மற்றும் இணையத் தொடர்பு குறித்த அறிவு, இணையத்தில் செயல்படுவதால் கிடைக்கும் நன்மைகளை உணர்ந்திருப்பது மற்றும் கலாச்சாரம் மற்றும் சமூக ரீதியாக, இணையத்தை ஏற்றுக் கொள்வது. இறுதியாகக் குறிக்கப்படுள்ள சமூக ரீதியாக ஏற்றுக் கொள்ளல் குறித்து இதுவரை எந்த ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை. ஆனால், பன்னாட்டளவில், பெண்களுக்கு இது ஒரு பெரும் சவாலான சங்கதியாகவே உள்ளது.
“இணையத் தொடர்பில் இல்லாதவர்களில், மூன்றில் இரு பங்கு மக்கள் இணையம் என்றால் என்னவென்றே அறியாமல் உள்ளனர். நைஜீரியாவில் வாழும் பெரும்பகுதி மக்கள், “இணையம்” என்ற சொல்லை இதுவரை கேட்டறியாதவர்களாகவே உள்ளனர்.
இதனை உடனடியாக நிவர்த்தி செய்திட இயலாது. படிப்படியாக, இந்த நோக்கில் மக்களைக் கற்றவர்களாக, இதனைத் தெரிந்தவர்களாக மாற்றுவதே தீர்வாகும். குறிப்பாக, பள்ளி சிறுமியர்கள் மற்றும் பெண்களிடம் இது விரைவாகச் சென்றடைய வேண்டும். பப்புவா நியு கினியா நாட்டில், எஸ்.எம்.எஸ். வழி கதைகளை அம்மக்கள் மொழியில் அனுப்பி, மக்களை டிஜிட்டல் சாதனங்களுக்குத் தயார்ப்படுத்தி வருகின்றனர். இதற்கான பயன்களும் தற்போது தெரியவந்துள்ளன.
400 கோடி மக்களுக்கு இணையத்தைக் கொண்டு செல்வது என்பது, மிகப் பெரிய சவாலான பணியாகும்.
இந்த சவால் தொடர்ந்து தீவிரமாகிக் கொண்டு தான் செல்கிறது. வறுமையில் வாழும் மக்கள், அடிப்படை தொழில் நுட்பம் கூட அறியாத நிலை, மொபைல் போன் போன்ற சாதாரண சாதனங்களைக் கூட தெரியாத நிலை எனப் பல நிலைகள் இந்த சவாலுக்கு எதிரான இயக்கத்தினை மந்தப்படுத்தி வருகின்றன. இருப்பினும் நாம் அந்த 400 கோடி பேரை நம்முடம் அழைத்துச் செல்ல முயற்சிப்பதே, இந்த உலகத்தின் அனைத்து மக்களும் இணையாக உயர்வதற்கான வழிகளைத் தரும்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» இணைய இணைப்பு இல்லாமல் 440 கோடி பேர்; ஆய்வில் தகவல்!
» தமிழகத்தில் 7 கோடி பேர்: நகரத்தில் மக்கள் தொகை 48 சதவீதம் உயர்வு; சென்னையில் சதுர கிலோ மீட்டருக்கு 27 ஆயிரம் பேர்
» அந்த 17,500 பேர் எங்கே? புலிகளின் தளபதி எழிலன் மனைவி ஆனந்தியின் போர் வாக்குமூலம் இது!
» சென்னையில் 20 கோடி வரி ஏய்ப்பு : 4 பேர் கைது
» நியுசிலாந்து பூகம்பத்தில் 400 பேர் பலி? ரூ.60 ஆயிரம் கோடி இழப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum