TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:28 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 1:15 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Sep 14, 2024 1:52 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


கருவேலமரங்களால் காணாமல் போகும் கண்மாய்கள்!

Go down

கருவேலமரங்களால் காணாமல் போகும் கண்மாய்கள்!  Empty கருவேலமரங்களால் காணாமல் போகும் கண்மாய்கள்!

Post by Tamil Tue Aug 18, 2015 1:49 pm

மாநில அரசு நீர் உள்ள  ஏரிகள், கண்மாயில்   மண்ணைக்கொட்டி நீர்  நிலைகளை மூடுவதற்கு  முன்பே கண்மாய்களை அழிக்கும் வேலையை  கச்சிதமாகச்  செய்து வருவது கருவேல மரங்களே.  

விவசாயிகளிடம் இருந்து நிலத்தை பறிக்கும் மத்திய  அரசின் கொள்கையில்  தீவிரமாக இருப்பதும் கருவேல மரங்களே. கருவேல மரம்,  விளைநிலங்களில் உள்ள சத்துக்களை இழக்கச் செய்து அதனை மலடாக்கும் ஒரு ஆபத்தான மரம்.  

விவசாயிகளை மிரட்டும்  மத்திய, மாநில அரசின்  பணியினை எந்த ஒரு எதிர்ப்பும் இல்லாமல் செய்து வருவதும் கருவேல மரங்களே. பக்கத்துக்கு ஊருக்கு தண்ணீர்  கொடுத்தால் கூட  மறுப்பும், மறியலும் செய்யும்  கிராமத்தினர், சத்தமில்லாமல் கண்மாயில் உள்ள நீரினை காலி செய்யும் கருவேல மரத்தைக் கண்டு கொள்ளாமல் போனது  அறியாமை.
ஒரு பக்கம் அரசு கண்மாயை மூடி அரசு அலுவலகம்,பேருந்து நிலையம் என கட்டுவதும் மறுபக்கம் கரு வேல மர ஆக்கிரமிப்பில் கண்மாய்கள் காணாமல்  போவதும் தொடர் கதையாக தொடர்கிறது. வட இந்தியாவில் தார் பாலைவனம் ஓரங்களில்,  1872 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் தூவப்பட்ட விதைகள் இன்று இந்தியா முழுதும் ஆக்கிரமித்து விட்டன.

ஆங்கிலேயர்கள் வெளியேறி 69 ஆண்டுகள் ஆனாலும், அவர்கள் விதைத்த கருவேல மரங்கள், இன்னமும் பல நூறு ஆண்டுகள் ஆனாலும் அழிக்க  முடியாத அளவிற்கு பெருகி விட்டன. 

தமிழகத்தில் காமராஜர் ஆட்சியில் கரு வேல மர விதைகள் தூவப்பட்டன. இந்தியாவில் அதிகமாக உள்ள ஒரே மர  இனம் கருவேலமரமாகத் தான் இருக்க முடியும். மழையை ஈர்த்து மண்ணுக்கு  கொடுக்கும் மர
வகைகளில்  மழையை  கெடுக்கும் ஒரே மரம் கருவேல மரமே. வறட்சியை வாரி வழங்கக்கூடிய,  விவசாயிகள்   விரும்பாத ஒரே மரம் கருவேல  மர இனம்  மட்டுமே. விவசாய அழிப்பில் முதலிடம் வகிக்கும் கருவேல மரத்தின்  ஆக்கிரமிப்பால், ஜாதிக் கலவரமும் பெருகும் என்பது விவசாய வீழ்ச்சி சொல்லும் உண்மை.
கருவேலமரங்களால் காணாமல் போகும் கண்மாய்கள்!  Acacia%20tree%20550%201
ராமநாதபுரம்,சிவ கங்கை,விருது நகர் மாவட்டங்களில் விவசாயம் பொய்த்துப் போனதால்   விளை நிலங்களில் கூட கரு வேல மரத்தை வளர்த்து மக்கள் பிழைக்கின்றனர்.  தென்   மாவட்டங்களின் வறட்சிக்கு முக்கியமான காரணம் கருவேல மரங்கள் என்றால் மிகையாகாது. இம்மரங்கள் நிலத்தடி நீர்மட்டத்தை அழிப்பதுடன்,  காற்றில் உள்ள ஈரப்பதத்தை அழிக்கும் திறன் கொண்டது. 

இந்த விஷ மரத்தின் பிடியில் வீணாகும் விவசாய நிலங்களில் சாகுபடி பரப்பளவு, ஆண்டுக்கு 2.5% குறைந்து வருவதாக வேளாண் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன் 10 செமீக்கு   ஒரு மரம்  என்றிருந்த நிலையில், தற்போது 4 செமீக்கு   ஒரு மரம் என்ற கணக்கில்  கரு வேலமரக்காடுகள்   பறந்து விரிந்து வறட்சியை கொடுத்து வருகின்றன. தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில்   மட்டும் 42,000  ஹெக்டர் பரப்பில் கருவேல மரம்  ஆக்கிரமித்துள்ளது.

விறகிற்காக  1950 ஆம் ஆண்டு, கருவேல மரத்தின் நச்சுத்தன்மை பற்றி தெரியாமல்  கொண்டு வந்து தூவிய கருவேல மர விதைகள்,   இன்று வரை மண்ணை விட்டு அகலவில்லை.  மழை   பெய்ய விடாமல் விரட்டும் ஒரே மரம் கரு வேல மரங்கள் மட்டுமே. அதோடு நில்லாமல்  இதன் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றி விடுகிறது, இந்த மரத்தின் முள் விஷத்தன்மை கொண்டது. இதன் பக்கத்தில் வேறு எந்த செடியும் வளராது, தவிர இம்மரத்தில் எந்த பறவை இனங்களும் கூடுகட்டுவதும் இல்லை.

காரணம், இந்த சீமைக் கருவேல மரங்கள், பிராணவாயுவை மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது. கரியமில வாயுவை மிக அதிக அளவில் வெளியிடுவதால் சுற்றுப்புற காற்று மண்டலமே நச்சுத் தன்மையாக மாறிவிடுகிறது. மண்ணை மலடாக்கும் இம் மரங்கள் விலங்குகளையும் விட்டு வைக்க வில்லை. இம் மரத்தின் கீழ் கட்டப்படும்  விலங்குகள் உஷ்ண   நோயாலும், மலட்டுத் தன்மையாலும்    
பாதிக்கப்படுகின்றன.

சமீபத்தில் காட்டில் இந்த மரத்தின் இலைகளை  உண்ட யானை ஒன்று இறந்து போனதாக அதிர்ச்சித் தகவலும் உண்டு.  
கருவேலமரங்களால் காணாமல் போகும் கண்மாய்கள்!  Acacia%20tree%20550%202
ஒரு கிராமத்திற்கு சராசரியாக 100 ஏக்கர் பரப்பளவில் கருவேல மரங்கள் இருப்பதாக வைத்துக்கொண்டால் தமிழகம் முழுவதுமுள்ள 12,620 கிராம  பஞ்சாயத்துக்களில் கரு வேல மர   ஆக்கிரமிப்பு மட்டும் சுமார்  12
லட்சத்து 62 ஆயிரம் ஏக்கர் வீணாகி வருகிறது.  இந்த வீணாகும் பரப்பில் பல லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பும்,  உணவு தானியங்கள்  உற்பத்தியும்  செய்ய முடியும்.

சென்ற ஆண்டு சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் வைகை ஆற்றின் கரை ஓரத்தில் கருவேல மரத்தை அகற்ற   தொடர்ந்த வழக்கில்,  கரு வேல மரத்தை அகற்ற மதுரை உயர் நீதிமன்ற கிளை  பிறப்பித்த உத்தரவின்   பேரில்,    அரசு வழக்கம்போல  மேம்போக்காக கண்ணுக்குத்  தெரிந்த இடங்களில் கருவேல மரத்தை வெட்டி "கணக்கு"  சொல்லி விட்டது.
கருவேலமரங்களால் காணாமல் போகும் கண்மாய்கள்!  Acacia%20tree%20550%2022%281%29
கடந்த  ஆகஸ்ட்  10 ஆம் தேதி, மதுரை உயர் நீதி மன்றக் கிளை,  "தமிழகம் முழுவதுமுள்ள கரு வேல மரங்களை வேரோடு அகற்ற அரசின் தலைமைச் செயலர் ,வனத்துறை ,பொதுப்பணித்துறை செயலர்கள்
தனித் திட்டம் உருவாக்க வேண்டும் " என்ற  வரவேற்கத்தக்க உத்தரவை  பிறப்பித்தது.

கருவேல மரத்தை அழிக்க என்ன செய்யலாம்?


*விவசாய நிலங்களில் சிறு செடியாக உள்ளபோதே கரு வேல மரம் வளர்வதை தடுக்க முடியும். கஞ்சா செடியை விட பல ஆயிரம் மடங்கு நச்சுத் தன்மை கொண்டது இம்மரம். எனவே விறகிற்காக கூட இம் மரத்தை வளர்க்க அரசு தடை செய்ய வேண்டும். 

*கருவேல மரத்தை அரசு கண்மாய்களில்  வேரோடு  அழித்து புங்கை,வேம்பு போன்ற இயற்கை உரம் தரும் மரங்களை நட வேண்டும்.

*கரு வேல மர ஆக்கிரமிப்பில் உள்ள கண்மாய், ஆற்றுக் கரைகளில்  நீர் மருது,வேங்கை, செம்மரம் நடவு செய்து அரசுக்கு வருமானம் ஈட்டலாம்.
கருவேலமரங்களால் காணாமல் போகும் கண்மாய்கள்!  Acacia%20tree%20550%204
*கரு வேல மரத்தை அழிக்க  எந்திரங்களை  பயன்படுத்தினால் மட்டுமே வேரோடு அழிக்க முடியும் . கண்மாய்களை தூர் வாரி நீர்பிடிப்பை அதிகரித்தாலே கருவேல மரம் அழிந்து போகும் .

*கரு வேல மரத்தை அரசு மக்கள் மூலம் குறிப்பிட்ட விலைக்கு வாங்கினால் மக்களே கருவேல மரத்தை அகற்ற வாய்ப்புள்ளது.

*மாவட்ட அளவில் கண்மாய்களில் உள்ள கருவேல மரத்தை அழிக்க  அந்தந்தப் பகுதி கிராம் மக்களிடம் அரசு ஒப்பந்தம் மூலம் கண்மாய்களை பல பகுதிகளாக பிரித்து வேருடன் மரத்தை  அகற்ற நவீன திட்டம்
வேண்டும்.  அரசு ஒப்பந்ததாரர் மூலம் கண்மாய்களை சுத்தம் செய்வது  லஞ்சம் பெருக வாய்ப்பளிக்கும்.

*வங்கிகள் கிராமத்தினருக்கு வட்டி இல்லாமல் அடமானக்   கடன் கொடுத்து, கருவேல மரத்தை அழிக்கவும் பின் அரசிடம் வங்கிகள் பணம் பெறவும் செய்தால் கருவேல மரங்கள் விரைவில் அழியும். பல நூறு ஏக்கர் பரப்பளவில் உள்ள கண்மாய்களையும், ஏரிகளையும் வனத்துறை உதவியால் மழை தரும் மரங்களை நடுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி நீடிக்கும் என்பதை விட  நீருக்கான போராட்டம் நீடிக்காது . 

கருவேல மரங்கள் காணாமல் போகுமா இல்லை நம்மை காக்கும் கண்மாய்களை  கருவேல மரங்கள்  காணாமல்  போகச் செய்யுமா என்பது நீதி மன்றத்தின் அடுத்த கட்ட நடவடிக்கையில் உள்ளது.

- எஸ்.அசோக்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum