TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Apr 19, 2024 9:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


வாழ்க்கை கட்டுரைகள்

Go down

வாழ்க்கை கட்டுரைகள் Empty வாழ்க்கை கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed May 20, 2015 11:30 am

உடன்பாடும் முரண்பாடும்
--------------------------------------

மனம் போல் தான் வாழ்க்கை என்பதை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் மனத்தின் தன்மை அதன் செயற்பாடுகளை எமக்கும் எம்மைச் சார்ந்தவர்களுக்கும் நன்மை தரும் வகையில் செயற்படுத்துவது எப்படி? மனத்தின் இரண்டு நிலைகள் உடன்பாடும் முரண்பாடும் தான்.

நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு விடயத்திலும் நாம் உடன்படுவோம் அல்லது முரண்படுவோம். உடன்பாடும் முரண்பாடும் வாழ்வியல் நகர்வின் சக்கரங்கள். உடன்பாடு மட்டுமே எமக்கு மகிழ்ச்சியைத் தருவதாக அமைகின்றது. அப்படியானால் முரண்பாட்டை எப்படிக் கையாள்வது? ஒரேஒரு வழி இது தான். ஒரு விடயம் உடன்படக்கூடியதாக இருப்பின் உடன்படுங்கள்.

முரண்பாடாக இருப்பின் முரண்படுங்கள். முரண்பாட்டுக்கு எதிரான முரண்பாடும் மறைமுகமான உடன்பாடுதான். முரண்பாடுக்கு எதிரான முரண்பாடு எமது மனதளவில் மட்டுமே இருக்க வேண்டும். அதாவது பிறரைக் காயப்பப்டுத்தும் வகையில் சொல்லாகவோ அல்லது செயலாகவோ அமையக் கூடாது. பிறர் காயப்படுத்தப்பட்டால் முரண்பாடுக்கு உடன்பாடு கொடுத்தவராகி விடுவோம்.

நன்றியுடன் KG Master.
வாழ்க்கை கட்டுரைகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

வாழ்க்கை கட்டுரைகள் Empty Re: வாழ்க்கை கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed May 20, 2015 11:34 am

ஓதுவோரும் ஊதுவோரும்
-------------------------------------------

அன்று . . . .

தகவல் பரிமாற்றமானது சமூகங்களை இலகுவாகத் தொடர்புபடுத்தும் அளவுக்கு வளர்ச்சி அடைந்திராத காலங்களில் ஒவ்வொரு சமூகமும் அந்தச் சமூகம் சார்ந்த விடயங்களை (சரி, தவறு என்ற பாகுபாடின்றி) முழுமையாக ஏற்டுக்கொள்ள வேண்டியிருந்தது. இந்த விடயங்கள் அந்தந்த சமூகத்திற்கு சமூக முன்னோடிகளாக கருதப்பட்டவர்களால் நேருக்கு நேராக கதைகள், மேடை நாடகங்கள், நாட்டுக்கூத்துக்கள், வில்லுபாட்டுக்கள், போன்ற மூலங்களின் ஊடாக தொடர்ச்சியான முறையில் சொல்லபட்டு (ஓதப்பட்டு) வந்தன.

இந்த ஓதுவோர்கள் அறிந்தோ அறியாமலோ தமது சமூக, பொருளாதார நிலையைத் தக்க வைத்துக் கொள்வதற்காக தாம் சார்ந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களை ‘குண்டுச் சட்டிக்குள் குத்திரையை ஓட்டுபவர்களாக’ உருவாக்கியர்களாவர். இந்த ஓதுவோர்களின் உதவியின்றி ஒரு அடி கூட முன்னே எடுத்து வைக்க விரும்பாத சமூக அங்கத்தவர்கள் குண்டுச் சட்டிக்குள் குதிரையை ஓட்டுவதில் நிபுணத்துவம் பெற்று அவர்களும் ஒதுவோர்களாகி இளைப்பாறும் ஒதுவோர்களின் இடங்களை நிரப்பிக் கொண்டிருந்தார்கள். இந்த நிலை உலகின் ஒவ்வொரு சமூகத்திற்கும் பொதுவானதாக அமைந்திருந்தது.

இன்று . . .

தகவல் பரிமாற்றத்தின் வளர்ச்சியும் வேகமும், சமூகங்களுக்கு இடையிலான புரிந்துணர்வும், ஒரு சமூகம் ஒரு நாடு என்ற எல்லைகளுக்கு அப்பால் உலகம் முழுவதிலும் பரந்து வாழ்வதற்கான வாய்ப்புக்களளையும் வசதிகளையும் உருவாகியிருக்கின்றன. இந்த விரிவாக்கம், குண்டுச் சட்டிக்குள் குதிரையை ஓட்டிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு சமூகத்திற்கும் அந்தக் குண்டுச் சட்டிக்குள் இருந்து வெளியே வருவதற்கான அரிய வாய்ப்பாகும்.

ஆனால் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தாம் சார்ந்துள்ள சமூகம் குண்டுச் சட்டிக்குள் இருந்து வெளியே வருமானால் தமது சுய இலாபம் பாதிக்கப்பட்டுவிடுமே என்பதால் அந்தச் சட்டிக்குள்ளேயே குதிரையை ஓட வைத்திருப்பதற்கு இன்றைய ஊதுவோர்கள் மிகவும் தந்திரமாகவும் வேகமாகவும் செயற்பட்டுவருகிறார்கள்.

யார் இந்த ஊதுவோர்கள்?


இவர்கள் வேறு யாருமல்ல. உருமாற்றம் பெற்றுள்ள ஓதுவோர்கள். தகவல் பரிமாற்றத்தின் வளர்ச்சியை தமக்குச் சாதகமாக்கி கடுகளவு விடயம் ஒன்றை மலையளவு பெரிதாக ஊதி (ஊதுவதால் - ஊதுவோர்) அந்த விடயம் சரியா அல்லது தவறா என்ற சிந்தனைக்கு இடமளிக்காமல் உணர்ச்சிகளைத் தூண்டி சுய இலாபம் அடைபவர்கள்.

இந்த ஊதுவோர்களில் ஒரு பகுதியினர் பத்திரிக்கை, வானொலி, தொலைக்காட்சி, இணையத்தளங்கள் என்பவற்றின் ஊடாக அவர்களுக்குள் ஏற்படுகின்ற போட்டி காரணமாக குண்டுச் சட்டிக்குள் குதிரையை ஒட்டிக்கொண்டிருக்கும் ஒவ்வொருவரது உணர்வையும் தூண்டி தமது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் சுய பொருளாதார வளத்தைப் பெருக்குகிறார்கள். மறுபகுதியினர் சமூக வலைத்தளங்கள் ஊடாக எத்தனை பேர் விருப்பம் (Like) தெரிவிப்பதன் மூலம் குண்டுச் சட்டிக்குள் குதிரையை ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பதில் மகிழ்ச்சி அடைகிரார்கள்.

ஒரு விடயத்தை நாம் கவனத்தில் கொள்ளல் வேண்டும். அன்றைய ஓதுவோர்கள் அறிந்தோ அறியாமலோ செய்ததை இன்றைய ஊதுவோர்கள் அறிந்தே செய்கிறார்கள் என்பது தான் அது.

அதுமட்டுமல்ல. ஒவ்வெரு மனிதனும் தனது தலையில் இருந்து இறங்கி இதயத்துக்குள் நுழையும் வரை குண்டுச் சட்டிக்குள் தான் குதிரையை ஒட்டிக்கொண்டிருப்பான்.

நன்றியுடன் – KG Master.
வாழ்க்கை கட்டுரை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

வாழ்க்கை கட்டுரைகள் Empty Re: வாழ்க்கை கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed May 20, 2015 11:36 am

ஜிம்மியும் நானும்
--------------------------

எதிர் வீட்டு நாயின் பெயர் ஜிம்மி.
என்னைக் காணும்போதெல்லாம் கண்களை உயர்த்தி
காதுகளை நிமிர்த்தி வாலை ஆட்டிக்கொள்ளும்.

முற்றத்தில் நான் விதைக்காமல்
முளைத்திருந்த புல் பூண்டுகளை அகற்றுவதற்காக
வெளியில் வந்தேன்

கண்களில் சோர்வு, கால்களில் தளர்ச்சி
காதுகள் தொங்கிய நிலையில் என்னை நோக்கி
வந்தது ஜிம்மி.

‘என்ன ஜிம்மி, உடல்நிலை சரியில்லையா?’ என்றேன்
‘இல்லையில்லை, மனநிலைதான் சரியில்லை’ என்றது ஜிம்மி

‘என்ன நடந்தது?’ என்றேன்

‘இரண்டு நாட்களுக்கு முன் எனது எஜமானின் ‘நட்பு’ பற்றிய சொற்பொழிவு என் காதில் விழுந்தது தான் காரணம்’ என்றது ஜிம்மி

‘அதற்கும் உன் மனச் சோர்வுக்கும் என்ன தொடர்பு?’ என்றேன்

‘‘எனது எஜமான், நட்பு ஒரு வரப்பிரசாதம், பகைமை உணர்வின்றி வாழும் ஒவ்வொரு கணமும்
வாழ்க்கை வசந்தமாகிறது என்றார்’ என்றது ஜிம்மி

‘அவர் சொல்வது நியாயமானது தானே!
எதற்காக நீ சோர்வடைய வேண்டும்’ என்றேன்

சில கணங்கள் மௌனமாக இருந்துவிட்டு
கண்களை உயர்த்தி காதுகளைத் தொங்கவிட்டு....

‘நேற்று இரவு வீட்டுக்குள் நுழைந்த பூனையை
விரட்டி அடிக்கவில்லையாம் நான் என்று விடிந்ததில் இருந்து விடாமல் திட்டிக்கொண்டிருக்கிறார் எஜமான்’ என்றது ஜிம்மி.

நன்றியுடன் – கே.ஜி. மாஸ்டர்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

வாழ்க்கை கட்டுரைகள் Empty Re: வாழ்க்கை கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Jul 14, 2015 5:20 pm

அறிந்ததும் அறியவேண்டியதும்
------------------------------------------------

அறிந்திருத்தல் சம்பந்தமாக நாம் புரிந்து கொள்ள வேண்டியது, எதை அறிந்திருக்கின்றோம், எவ்வாறு அறிந்திருக்கின்றோம், எவ்வளவு அறிந்திருக்கின்றோம் என்பவை தான். எதை அறிந்திருக்கின்றோம் என்பதை நாம் எமது நினைவுகளின் தொகுப்பில் இருந்துதான் அடையாளம் காண முடியும். நிகழ்வுகளின் சேகரிப்புத்தான் நினைவுகள். இந்த நிகழ்வுகள் ஐம்புலன்களின் ஊடாக எமது ஆழ் மனதில் பதியப்படுகின்றன. தொட்டுணர்தல், சுவைத்தல், பார்த்தல், நுகர்தல், கேட்டல் என்பவற்றின் மூலம் பதிவு செய்யப்படுகின்றன. இப்பதிவுகளை நாம் அறிந்திருத்தல் என்கிறோம்.

எந்தெந்த விடயங்களை நாம் அறிந்திருக்கின்றோம் என்பதை நாம் இலகுவாக அடையாளம் காண்பதற்கு, ஒன்றை நாம் பார்க்கும்போதோ, கேட்கும்போதோ, நுகரும்போதோ, சுவைக்கும் போதோ அல்லது தொட்டு உணரும்போதோ உடனடியாக அதை அடையாளப்படுத்தவோ அல்லது இனங்கண்டு கொள்ளவோ முடியுமாயின் அது ஒரு மீள் நிகழ்வாக இருப்பதனால் அந்த விடயம் ஏற்கனவே அறியப்பட்டாதாக அமைகின்றது. மாறாக, நாம் எதிர்கொள்ளும் ஒன்றை அடையாளப்படுத்தவோ அல்லது இனங்கண்டு கொள்ளவோ முடியாவிடின் அது இதுவரையில் அறியப்படவில்லை என்பதாகப் பொருள்படும்.

அடுத்து, எவ்வளவு அறிந்துள்ளோம் என்பதைப் பொறுத்தவரையில் நாம் எந்தவிதமான அளவீட்டையும் மேற்கொள்ள முடியாது. ஏற்கனவே குறிப்பிட்டதைப் போன்று ஒரு விடயம் மீண்டும் நிகழும்போது அதை இனங்கான முடியுமாயின் அதை அறிந்திருக்கின்றோம் என்பதால் நிகழ்வுகளால் மட்டுமே எமது அறிதலை அளவிடமுடியும். ஆனால் நிகழ்வுகளின் எண்ணிக்கை வரையறையற்று இருப்பதனால் நாம் எவ்வளவு அறிந்துள்ளோம் என்பதை அளவிடுவதற்கு வாய்ப்பு இல்லை.

அறிந்திருத்தலில் உள்ள மிகப் பெரிய பின்னடைவு என்னவெனில் நாம் அறிவு பூர்வமாக ஏற்றுக்கொண்டவை அனைத்தும் நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்றுக்கொண்டவையாகவே அமைகின்றன. ஆனால் நம்பிக்கை அதன் தன்மையில் பலவீனமானது ('நம்பிக்கையின் இரு பலவீனங்கள்' என்ற கட்டுரையை வாசிக்கவும்). நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்டவை அனைத்தும் பிறரின் உள்ளீடுகளே. இந்த உள்ளீடுகள் மதம், மொழி, கலாச்சாரம், பண்பாடு, சட்ட திட்டங்கள், சமுதாய ஒழுங்கு விதிகள் என்ற வடிவில் எமக்குள் செலுத்தப்படுகின்றன. இவ்வாறு உள்வாங்கப்பட்டவற்றை நாம் வேறுபாடுகளைக் கண்டறியும் கருவியாக பயன்படுத்திக் கொள்கிறோம். இதனால் நாம் அறிந்திருப்பவை அனைத்தும் வேறுபாடுகளே. எமக்கும் பிறருக்குமான வேறுபாடுகளே.

நாம் அறிந்திருக்கும் இந்த வேறுபாடுகள் தான் எமக்குள் பிளவுகளையும், பிரச்சனைகளையும், முரண்பாடுகளையும் உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. இந்த வேறுபாடுகள் அனைத்தினதும் தயாரிப்பாளர்கள் நாம் தான். இந்த வேறுபாடுகள் குடும்பத்துக்குள், குடும்பங்களுக்கிடையில், சமூகத்துக்குள், சமூகங்களுக்கிடையில், நாட்டுக்குள், நாடுகளுக்கிடையில் வெறுப்பை உருவாக்கி அதன் மூலம் ஒருவரை ஒருவர் அழித்துக்கொண்டிருக்கின்றோம். இந்த அழிவில் இருந்து எம்மை நாம் காப்பாற்றிக் கொள்வதற்கு அறிந்துகொள்ள வேண்டியது எமக்கும் மற்றவர்களுக்கும் இடையிலான ஒத்த இயல்புகளைத் தான். அப்போது தான் மனிதன் மனிதனாக வாழ முடியும். எனவே, இதுவரை நாம் அறிந்திருக்கும் வேறுபாடுகளைக் குழி தோண்டிப் புதைத்துவிட்டு எமக்கும் மற்றவர்களுக்கும் இடையிலான ஒத்த இயல்புகளை அறிந்து கொள்வோம்.

நன்றியுடன் - KG Master
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

வாழ்க்கை கட்டுரைகள் Empty Re: வாழ்க்கை கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Jul 14, 2015 5:23 pm

உறவுக்கும் உணர்வுக்கும் தடையானது
---------------------------------------------------------

உறவுக்கும் உணர்வுக்கும் தடையானது எது?' என்றதும் முதலில் நாம் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டியது என்னவெனில் ஏதோ ஒன்று இந்த இரண்டுக்கும் தடையாக இருக்கின்றது என்பது தான். அதாவது உறவுக்கு எது தடையாக இருக்கின்றதோ அதுவே உணர்வுக்கும் தடையாக இருக்கின்றது என்பதாகும். ‘உறவுக்குத் தடையானது எது?’ என்றதும் பல விடயங்கள் எமது மனக் கண் முன் குவிந்து விடுகின்றன.. உறவுக்குத் தடையானவையாக போட்டி, பொறாமை, சந்தேகம், அகம்பாவம், துரோகம், தற்பெருமை, பொய் பேசுதல், சுயநலம் போன்றவை உள்ளடங்கலாகப் பல விடயங்கள் அமைகின்றன.

உணர்வுகளைப் பொறு த்தவரையில் அவற்றின் சிறப்பம்சம் என்னவெனில் ஒவ்வொரு உணர்வும் தனித்தே இயங்கும் என்பதாகும். உறவு என்பது கூட்டு அல்லது இணைப்பு என்பதை அடித்தளமாகக் கொண்டது. ஆனால் உணர்வுகளோ ஒன்றுடன் ஒன்று சேர்ந்து இயங்குவதில்லை. அவை தனித்தனியாகவே வெளிப்படும். அதாவது ஒரே நேரத்தில் ஒருவர் கவலை கொண்டவராகவும் மகிழ்ச்சியுடையவராகவும் இருக்க முடியாது. அதே போன்றே ஒருவர் கோபமாக இருப்பார் அல்லது சாந்தமாக இருப்பார். அதுமட்டுமன்றி உணர்வுகள் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் உறவுக்குத் தடையாக இருப்பதுமில்லை. உதாரணமாக, தனது பிள்ளை மீது ஒரு தாய்க்கு கோபம் ஏற்படும் போது அது உறவைப் பாதிப்பது மிகவும் அரிதானதாகவே நிகழ்கின்றது.

இப்போது உறவுக்கும் உணர்வுக்கும் தடையானது எது என்பதைப் பார்ப்போம். கேள்வி அல்லது வினா (Question) என்பதே உறவுக்கும் உணர்வுக்கும் தடையானதாக அமைகின்றது. 'கேள்வியா?' 'கேள்வி இல்லாமல் எப்படி விடயங்களை அறிந்து கொள்வது?'. 'கேள்வி பிறந்ததால் தானே மனிதன் இந்த அளவிற்கு அறிவாலும் ஆற்றலாலும் வளர்ந்திருக்கின்றான்?' என்றெல்லாம் கேள்வி மேல் கேள்விகளைக் கேட்டு காலத்தை வீணாக்காதீர்கள்.

மனைவியைப் பார்த்து 'நீ என் மனைவியா?' என்றால் பந்தம் போய்விடும். தாயைப் பார்த்து 'நீ என் தாயா? என்றால் பாசம் தொலைந்து விடும். நண்பனைப் பார்த்து 'நண்பனா நீ?' என்றால் நட்புப் போய்விடும். இவை எல்லாம் கேள்வியின் விளைவுகள் தான். அதே போன்று தான் வார்த்தைகளால் அன்றி உள்ளுணர்வால் நாம் புரிந்துகொள்ள வேண்டிய விடயங்களில் கேள்விகளைத் தொடுப்பதன் மூலம் அதன் உண்மைத் தன்மையை நாம் உள்வாங்க முடியாமல் போய்விடுகிறது. உதாரணமாக, ஒரு குழந்தையின் சிரிப்பை உள்ளுணர்வால் உள்வாங்குவதற்குப் பதிலாக அது ஏன் சிரிக்கின்றது என்று கேட்போமாயின் குழந்தையின் சிரிப்பின் உணர்வு ரீதியான இணைப்பு துண்டிக்கப்பட்டுவிடும்.

இப்போது நாம் கேள்வி என்றால் என்ன? என்பதைப் புரிந்துகொள்வோம்.

கேள்வி என்பது பலவீனத்தின் வெளிப்பாடு. எது எதுவோ அதை அதுவாக ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இன்மையினதும் உள்ளதை உள்ளபடி உணர்ந்து கொள்ளவதில் (புரிதலில்) ஏற்படும் தடுமாற்றத்தினதும் வெளிப்பாடே கேள்வியாகும். ஏற்றுக்கொள்ளலும், புரிதலும் அதிகரிக்க அதிகரிக்க கேள்விகள் குறையும். கேள்விகளைக் குறைக்கக் குறைக்க ஏற்றுக்கொள்ளலும் புரிதலும் வளரும். உறவுக்கும் உணர்வுக்குமான தடைகள் அற்றுப் போகும்.

நன்றியுடன்: KG Master
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

வாழ்க்கை கட்டுரைகள் Empty Re: வாழ்க்கை கட்டுரைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பருந்து மனிதனுக்கு தரும் பாடம் - வலிகள் இல்லாத வாழ்க்கை இல்லை. வலிகள் பல நிறைந்ததுதான் வாழ்க்கை.
» விக்கிபீடியா 30 லட்சம் கட்டுரைகள்
» வாழ்க்கையை வளமாக்கும் வாழ்கை கட்டுரைகள்
» வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்.. (நிமிடக் கட்டுரைகள் - 12 - ஆசை) வித்யாசாகர்
» நேரம் கிடைக்கின்ற போது தவறாமல் படியுங்கள் -கே ஜி மாஸ்டர் - குடும்ப கட்டுரைகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum