TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun May 05, 2024 7:48 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


கற்க கசடற விற்க அதற்குத் தக!

Go down

கற்க கசடற விற்க அதற்குத் தக!  Empty கற்க கசடற விற்க அதற்குத் தக!

Post by mmani Wed Oct 22, 2014 6:23 am

அரசுப் பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ள ஆங்கில வழிக் கல்வியின் நிலை என்ன? 2011-12 கல்வி ஆண்டில் ஒரு மாவட்டத்துக்கு 10 பள்ளிகள் வீதம், 320 பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கப்பட்டன. மொத்தம் 24 ஆயிரம் மாணவர்கள் அதில் சேர்க்கப்பட்டனர். 2012-13  கல்வி ஆண்டில் 640 பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்பட்ட இந்தத் திட்டம், இந்த ஆண்டு 3,500 பள்ளிகளில் 80 ஆயிரம் மாணவர்கள் எனப் பிரமாண்டமாக விஸ்தரிக்கப்பட்டுள்ளது. 'அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் சேரும் மாணவர்களின் பெற்றோர்களில், குறைந்தது 20 பேர் விரும்பினால், அந்தப் பள்ளியில் ஆங்கில வழிப் பிரிவைத் தொடங்கலாம்’ என்பது அரசின் அறிவிப்பு. தலைமை ஆசிரியர் விரும்பினாலும் ஆங்கில வழிப் பிரிவைத் தொடங்கிக் கொள்ளலாம். தொடங்குவது சரி... ஆங்கில வழியில் பாடம் நடத்த ஆசிரியர்களுக்கு எங்கு போவது? ஆங்கில வழியில் பாடம் நடத்துவதற்கு எனப் பிரத்யேகமாக ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. ஏற்கெனவே இருப்பவர்கள்தான் இதையும் நடத்த வேண்டும். அனைத்து ஆசிரியர்களும் ஆங்கிலப் புலமை பெற்றவர்கள் இல்லை என்ற நிலையில், அது ஆசிரியர்களுக்கு மிகவும் சவால். பல அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழி வகுப்புகளுக்குச் செல்வதை ஆசிரியர்கள் முடிந்த வரை தவிர்க்கிறார்கள். அல்லது தங்களுக்குத் தெரிந்த ஆங்கிலத்தை வைத்துச் சமாளிக்கின்றனர்.
இது ஆசிரியர்களின் தவறு அல்ல. அரசு, ஆங்கில வழியில் வகுப்புகளைத் தொடங்குவது என முடிவு செய்வதற்கு முன்பு, தகுதிவாய்ந்த ஆசிரியர்களைத் தயார்படுத்தி இருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் அவசரகதியில் அமல்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டம், ஆசிரியர்களையும் துன்புறுத்தி, மாணவர்களின் எதிர்காலத்தையும் பாழ்படுத்துகிறது. அரசுத் தொடக்கப் பள்ளிகள் பலவற்றில் இரண்டு ஆசிரியர்கள்தான் இருக்கின்றனர். ஐந்து வகுப்புகளில் 50 மாணவர்கள் படிக்கிறார்கள் என்றால், இரண்டு ஆசிரியர்கள்தான், அனைத்து வகுப்புகளையும் சமாளித்தாக வேண்டும். இப்போது ஆங்கிலவழிக் கல்வி என்பது கூடுதல் சுமை. மொத்தத்தில் ஆங்கில வழி வகுப்புகள் செயல்படும் விதம் எந்த விதத்திலும் மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை.
[You must be registered and logged in to see this image.]
அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் சொல்வதைக் கேளுங்கள்... ''இங்கிலீஷ்ல பரீட்சை எழுதின பசங்களோட பேப்பரைத் திருத்தச் சொல்வாங்க. 'இல்ல சார், எனக்கு அவ்வளவா இங்கிலீஷ் நாலெட்ஜ் இல்லை’னு சொன்னா, 'சார், ஆன்ஸர் கீ கையில் கொடுத்துடப்போறோம். இதில் இருக்கிற விடையை எழுதியிருந்தா, மார்க் போடுங்க. இல்லைன்னா போடாதீங்க. நாமெல்லாம் டீச்சர்ஸ். இதைக்கூடச் செய்யலைனா எப்படி?’னு சொல்லித் திருத்தச் சொல்றாங்க. என்னதான் ஆன்ஸர் கீ கொடுத்தாலும், பையன் நேரடியா விடை எழுதாம சுத்தி வளைச்சு சரியான விடையை எழுதியிருந்தா, அதுக்கு அந்த ஆசிரியர் மார்க் போடமாட்டார். முக்கியமா நவீன சி.சி.இ முறை கேள்விகளுக்கு சுயமா சிந்திச்சு விடை எழுதச் சொல்லுது. ஒரு பையன் சுயமா சிந்திச்சு விடை எழுதினா, அதைப் புரிஞ்சுக்கிட்டு மதிப்பெண் வழங்குற திறன் ஆசிரியருக்கு இருக்கணுமே... 'ஆன்ஸர் கீ’ல இல்லேனு திருத்துற ஆசிரியர் மார்க் போடலைன்னா, பாதிப்பு மாணவர்களுக்குத்தான். ஆனா, இதுதான் பல இடங்கள்ல நடக்குது'' என்று இந்த ஆசிரியர் சொல்வது நடைமுறை உண்மையை முகத்தில் அறைகிறது!
'ஆங்கில வழி வகுப்பு’ எனச் சொல்லிவிட்டு தேர்வில் தமிழில் கேள்வித்தாள்கள் வழங்கப்படுவதில் இருந்தே, இதன் அபத்தத்தைப் புரிந்துகொள்ளலாம். எனினும் ஆங்கில மோகம், மக்கள் அடிமனதில் ஆழப் பதிந்துள்ளதால், மாணவர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கிறது. உதாரணமாக, திருப்பூர் மாவட்டத்தில் கடந்த கல்வி ஆண்டில் 45 தொடக்கப் பள்ளிகள் மற்றும் 57 நடுநிலைப் பள்ளிகளில் 2,736 மாணவர்கள் ஆங்கில வழி வகுப்புகளில் சேர்ந்தனர். இந்தக் கல்வி ஆண்டில் 83 தொடக்கப் பள்ளிகள் மற்றும் 98 நடுநிலைப் பள்ளிகளில் 7,067 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் இந்த நிலைதான். இதற்குக் காரணம், தனியார் பள்ளிகளில் அதிகப் பணம் கட்டி பிள்ளைகளைச் சேர்க்க முடியாத ஏழைப் பெற்றோர்கள், தங்கள் பிள்ளையும் ஆங்கிலம் பேசாதா என ஏங்குகின்றனர். அரசுப் பள்ளிகளில் இலவசமாகவே இங்கிலீஷ் மீடியம் என்றதும், அந்த ஏக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள கிடைத்த வாய்ப்பு என எண்ணுகின்றனர்.
'ஆனால் அரசு ஒண்ணும் தமிழ் வழிக் கல்வியைக் கைவிடலையே... அதுவும் இருக்கு; இதுவும் இருக்கு. மக்கள் ஆங்கில வழியைத்தான் தேர்வு செய்யுறாங்கனா, அதுக்கு அரசாங்கம் என்ன செய்ய முடியும்?’ என்பது கல்வித் துறை அதிகாரிகள் சிலரின் எதிர்வாதம். இரண்டும் இருப்பது உண்மைதான். ஆனால் இது தந்திரம் நிறைந்த உண்மை. மக்கள் ஆங்கில மோகத்தில் ததும்பி வழியும் நிலையில் இரண்டையும் ஒன்றாக நீட்டினால், ஆங்கிலம் பக்கம்தான் சாய்வார்கள். ஆகவே இரண்டுக்கும் சம மதிப்பு கொடுத்திருப்பதாகக் கூறுவது ஏமாற்று வேலை.
[You must be registered and logged in to see this image.]
ஆங்கில அறிவைப் பெறுவதற்கு ஆங்கில மொழிக் கல்வியே போதும்; ஆங்கில வழிக் கல்வி தேவை இல்லை. ஆங்கிலத்தை ஒரு மொழிப் பாடமாகப் படித்து, மற்றப் பாடங்களை தாய்மொழியிலேயே படிப்பதன் வழியேதான் ஒரு குழந்தை சுயமாகச் சிந்திக்க முடியும். குழந்தையின் முழுமையான திறமை தாய்மொழி வழிக் கல்வியில்தான் வெளிப்படும். வீட்டில், சமூகத்தில், நண்பர்கள் வட்டத்தில் என அனைத்து இடங்களிலும் தமிழில் பேசி, சிந்தித்துக்கொண்டிருக்கும் குழந்தைகளை பள்ளியில் மட்டும் இவற்றை ஆங்கிலத்தில் செய்ய வேண்டும் எனச் சொல்வது, அவர்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறை. இது குழந்தைகளின் சிந்திக்கும் திறனையே முடக்கிப்போடுகிறது; அவர்களின் மொத்த ஆளுமையையும் சிதைக்கிறது.
தாய்மொழி வழிக் கல்விதான் ஒரு குழந்தையின் உண்மையான அறிவுத்திறனை வளர்க்கிறது என்பது எத்தனையோ ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பணக்காரப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் அறிவுத்திறனைச் சோதிக்கும்விதமாக 2009-ம் ஆண்டு 'பிசா-2009’ (Programme for International Student Assessment) என்ற சோதனை நடந்தது. இதில் இந்தியா சார்பாக தமிழ்நாடு மற்றும் இமாச்சலப்பிரதேச மாநிலங்களில் [You must be registered and logged in to see this image.]இருந்து மாணவர்கள் கலந்துகொண்டனர். மொத்தம் 74 நாடுகள் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் வாசித்தல், கணிதம் ஆகிய இரண்டு பிரிவுகளிலும் இந்தியா 72 மற்றும் 73-வது இடத்தையும், அறிவியலில் 74-வது இடத்தையும் பிடித்தது. இருப்பதிலேயே கடைசி!
ஆனால், ஆங்கிலம் படித்தால்தான் வேலைவாய்ப்பு என்ற கருத்து தொடர்ந்து பரப்பப்படுகிறது. இது எவ்வளவு பொய்யானது என்பதற்கு, வேலை கிடைக்காமல் திண்டாடும் லட்சக்கணக்கான பொறியியல் பட்டதாரிகளே சாட்சிகள். இவர்களில் கணிசமானோர் ஆங்கில வழியில் படித்தவர்கள். மேலும், 'இப்படித்தான் இந்தி படிப்பதைத் தடுத்து வேலைவாய்ப்பைக் கெடுத்துவிட்டார்கள்’ என்ற வாதத்தையும் இணைத்தே பேசுகின்றனர். இதுவும் பொய்யான கூற்று என்பதற்கு, தமிழகத்தின் வீதிகள்தோறும் பணிபுரியும் இந்தி பேசும் வட இந்தியத் தொழிலாளர்களே சாட்சி. 'இந்தி பேசினால் நல்ல வேலை கிடைக்கும்’ என்றால், அவர்கள் ஏன் ஐந்தாயிரம் ரூபாய்க்கு ஆயிரம் மைல் கடந்துவந்து இங்கு அல்லாட வேண்டும்? ஒரு மொழியைப் பேசினாலே வேலை கிடைத்துவிடும் என்பது மூட நம்பிக்கை.
இது தொடர்பான இன்னொரு கோணத்தையும் அடுத்த வாரம் அலசுவோம்..!
- பாடம் படிப்போம்...
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum