Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun May 05, 2024 7:48 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm
மறுப்பிறவி எடுக்குமா மழை நீர் சேகரிப்பு திட்டம்?
Page 1 of 1
மறுப்பிறவி எடுக்குமா மழை நீர் சேகரிப்பு திட்டம்?
மறுப்பிறவி எடுக்குமா மழை நீர் சேகரிப்பு திட்டம்?
வடகிழக்கு பருவ மழை அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை பெய்யும். இந்த காலத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, கடலோர ஆந்திரம் ஆகிய பகுதிகளில் அதிக மழை பெய்யும்.கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரை சராசரி மழை அளவை விட அதிகமாகவும், 2009 முதல் 2011 ஆம் ஆண்டு வரை சராசரி மழையும் பதிவாகின. 2012ல் 16 சதவீதம் மழை பற்றாக்குறை ஏற்பட்டது. தமிழகத்தில் ஓராண்டு பெய்யும் மழை அளவில் 48 சதவீதம் வடகிழக்கு பருவமழைக் காலத்திலேயே கிடைக்கிறது.
[You must be registered and logged in to see this image.]
தமிழகத்தில் சராசரியாக ஆண்டுக்கு 998 மில்லி மீட்டர் அளவு மழை பதிவாகும். ஆனால் பருவமழை பொய்த்ததால் மழையின் அளவு குறைந்து 10 முதல் 60 அடி வரையில் கிடைத்து வந்த நிலத்தடி நீர் தற்போது 100 முதல் 500 அடிக்கு கீழே கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது. வறட்சியான மாவட்டங்களில் ஆயிரம் அடிக்கு கீழே தான் நிலத்தடி நீர் கிடைக்கிறது. சேலம், ஈரோடு, தஞ்சாவூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்ட அளவு அதிர்ச்சி தரும்படி உள்ளது.
இதற்கு பருவமழை பொய்த்தது ஒரு காரணம் என்றால் ஆண்டுதோறும் பெருகி வரும் மக்கள் தொகையும் மற்றொரு முக்கிய காரணம். மக்கள் தேவைக்காகவும், தொழிற்சாலைகள் பயன்பாட்டிற்காகவும் ராட்சத இயந்திரங்கள் மூலம் நிலத்தடி நீர் அதிகளவு உறிஞ்சப்படுகிறது. இதனால் தமிழகத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. சுகாதாரமான குடிநீரும் கிடைப்பதில்லை. இதனால் குடிநீரை விலைக்கு வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தேவை அதிகரிப்பதால் அதன் விலையும் தாறுமாறாக விற்கப்படுகிறது.
நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்க தமிழக அரசு, கடந்த 2003 ஆம் ஆண்டு மழை நீர் சேகரிப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. வீடுகள், வணிக வளாகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், மருத்துவமனை, தொழிற்சாலைகள், தனியார், அரசு கட்டடங்கள் ஆகியவற்றில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது. பரப்பளவு ஆயிரம் சதுரஅடிக்கு மேல் உள்ள கட்டடங்களில் இத்திட்டத்தைக் கட்டாயம் செயல்படுத்த அரசு உத்தரவிட்டது. இந்த திட்டத்தை தமிழகம் முழுவதும் செயல்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மழை நீர் சேகரிப்பு திட்டம் செயல்படுத்தாத கட்டடங்களில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்படடது. புதிய கட்டடங்களுக்கான வரைபடத்தில் மழை நீர் சேகரிப்பு திட்டம் இல்லையெனில் அனுமதி மறுக்கப்பட்டது.
[You must be registered and logged in to see this image.]
இதனால், மழை நீர் சேகரிப்பு திட்டம் அனைத்து கட்டடங்களிலும் செயல்படுத்தப்பட்டன. நிலத்தடி நீர் உயர்வதற்கான இத்திட்டம் நல்ல பயனளிக்கும் ஒன்றாக திகழ்ந்தது. அரசியல் சூழலில் காலப்போக்கில் இந்த திட்டத்தை அரசு கண்டுக்கொள்ளவில்லை. அரசின் கவனம் குறைந்ததால் 75 சதவீத அரசு மற்றும் தனியார் கட்டடங்களில் மழை நீர் சேகரிப்பு திட்டம் பராமரிக்கப்படாமல் செயலிழந்தது. மழை நீர் சேகரிப்பு திட்டத்துக்கான குழாய்கள் உடைந்து வெறுமனே காட்சிப் பொருளாக அவை மாறிப்போயின. இதன் காரணமாக மழை நீர் வீணாகி கடலில் கலக்கிறது. எனவே, மழை நீரை சேமிக்க மீண்டும் மழை நீர் திட்டத்துக்கு அரசு மறுபிறவி கொடுக்க முன்வர வேண்டும். சென்னை மாநகராட்சியில் 33 கி.மீட்டர் பரப்பளவில் மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் மழை நீர் தேங்குவதை தவிர்க்க 1996 ஆம் ஆண்டு முதல் மழை நீர் வடிகால்கள் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2001ஆம் ஆண்டு முதல் மழை நீர் சேகரிக்கும் திட்டத்தை அனைத்து மாநகராட்சிக்கு கட்டடம், பள்ளிகள், மருத்துவமனைகள், அலுவலக கட்டடங்கள் சமுதாய கூடங்கள், துணை மின் நிலையங்கள், பாலங்கள், பூங்காக்கள், மேம்பாலம் உள்பட 1,344 இடங்களில் மழை நீர் சேகரிப்பு திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி வட்டாரம் தெரிவிக்கின்றது. ஆனால் மாநகராட்சி அலுவலகம் செயல்படும் ரிப்பன் மாளிகையில் கூட மழை நீர் சேகரிப்பு திட்ட குழாய்கள் உடைந்து காணப்படுகிறது. இந்த லட்சணத்தில்தான் சென்னையில் மழை நீர் சேகரிப்பு திட்டம் இருக்கிறது.
[You must be registered and logged in to see this image.]
மழை நீர் ஒன்றே எளிதில் கிடைக்கக்கூடிய, சிக்கனமான நீர் ஆதாரம். சராசரியாக நிலத்தில் பெய்யும் மழையில் 40 சதவீதம் நிலத்தின் மேல்பகுதியில் ஒடி கடலில் கலப்பதாகவும், 35 சதவீதம் வெயிலில் ஆவியாகுவதாகவும், 15 சதவீதம் மட்டுமே பூமியால் உறிஞ்சப்படுவதாகவும், 10 சதவீதம் மண்ணின் ஈரப்பதத்திற்கு உதவுவதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. பெருநகரங்களில் வீடுகள், கட்டடங்கள் அருகருகே கட்டப்படுவதாலும், திறந்த மணல் பகுதிகளை சிமெண்ட் தளங்கள் அமைத்தும், தார் சாலைகள் அமைத்தும் மூடி விடுவதால் மழை நீரில் 5 சதவீதம் கூட நிலத்தால் உறிஞ்சப்படுவதில்லை. மழை நீர் சேகரிப்பு திட்டத்தால் மட்டுமே கூடுதல் சதவீதம் நீரை பயன்படுத்த முடியும்.
இந்த நிலையில் மழை நீர் சேகரிப்பு திட்டத்திற்கு மறுவாழ்வு தரவேண்டிய அவசர சூழல் இன்று தவிர்க்க இயலாமல் உருவாகியுள்ளது. அதிர்ஷ்டவசமாக முன்பு இத்திட்டத்தை துவங்கிய இயக்கமே, தற்போதும் ஆளும் பொறுப்பில் உள்ளதால் இதை முன்னெடுப்பது என்பதும் வெற்றிகரமானதாக ஆக்குவதும் ஆளும் அரசின் கையில் உள்ளது.
-எஸ்.மகேஷ்
-vikatan-
[You must be registered and logged in to see this link.]
Similar topics
» அத்திக்கடவு அவினாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம் ஒரு வரலாறு .... ஒரு கோரிக்கை .... ஒரு தீர்வு ...
» குப்பைகளால் நாசமாகும் தமிழக நீர் நிலைகள் : நிலத்தடி நீர் வளம் குறையும் ஆபத்து
» “ நாங்கள் மற்றவர்களைப் போல் பூமியிலிருந்து நீர் எடுப்பவர்கள் அல்ல. “ பூமிக்கு நீர் அளிப்பவர்கள் “
» கபினியில் நீர் வரத்து குறைந்ததால் கே.ஆர்.எஸ்.,சில் 9,000 கன அடி நீர் திறப்பு
» வீட்டுத் தோட்டம் - எரு சேகரிப்பு
» குப்பைகளால் நாசமாகும் தமிழக நீர் நிலைகள் : நிலத்தடி நீர் வளம் குறையும் ஆபத்து
» “ நாங்கள் மற்றவர்களைப் போல் பூமியிலிருந்து நீர் எடுப்பவர்கள் அல்ல. “ பூமிக்கு நீர் அளிப்பவர்கள் “
» கபினியில் நீர் வரத்து குறைந்ததால் கே.ஆர்.எஸ்.,சில் 9,000 கன அடி நீர் திறப்பு
» வீட்டுத் தோட்டம் - எரு சேகரிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|