Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Apr 19, 2024 9:02 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm
கேரள அரசின் துப்பாக்கி சூட்டிற்கு பலியான தெற்கெல்லைப் போர் ஈகியர் நினைவு நாள் 11.8.1954
Page 1 of 1
கேரள அரசின் துப்பாக்கி சூட்டிற்கு பலியான தெற்கெல்லைப் போர் ஈகியர் நினைவு நாள் 11.8.1954
கேரள அரசின் துப்பாக்கி சூட்டிற்கு பலியான தெற்கெல்லைப் போர் ஈகியர் நினைவு நாள்
11.8.1954
[You must be registered and logged in to see this image.]
திருவிதாங்கூர் கொச்சி சமஸ்தானப் பகுதிகளில் வாழ்ந்த தமிழர்கள் தமது தாயகப் பகுதிகளை தாய்த்தமிழகத்தோடு இணைக்கக் கோரி 1946ஆம் ஆண்டு முதல் மார்சல் நேசமணி தலைமையில் போராடி வந்தனர். 1954இல் பிரஜா சோசலிஸ்ட் கட்சியின் பட்டம் தாணுப்பிள்ளை என்பவர் முதல்வராக இருந்தார். (படத்தில் உள்ளவர் பட்டம் தாணுப்பிள்ளை)
தீவிர மலையாள இனவெறி கொண்ட பட்டம் அவர்கள் தேவிகுளம், பீர்மேடு வட்டங்களில் வாழும் தமிழர்கள் மீது கடும் ஒடுக்குமுறையை மேற்கொண்டார். அதுமட்டுமின்றி, மலையாள குடியேற்றத்தை அதிகரித்து தமிழர் தாயகத்தை இல்லாதொழிக்கவும் முற்பட்டார். இதனைக் கண்டித்து பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு குரல் கொடுக்க மார்சல் நேசமணி மூணாறு வந்த போது கைது செய்து சிறையிலடைத்தார். அப்போது நாகர்கோயில் பகுதியில் தென் தமிழர்களின் போராட்டம் தீவிரமடைந்தது.
பட்டம் தாணுப்பிள்ளையின் அடக்குமுறைக்கு எதிராக நேசமணிக்கு அடுத்த கட்டத் தலைவர்கள் போராட்டத்தில் குதித்தனர். ஆகஸ்ட் 11ஆம் நாளை தமிழர் விடுதலை நாளாக (Deliverance Day) கொண்டாடுமாறு குஞ்சன் நாடார் வேண்டு கோள் விடுத்தார். அன்று முழுகடையடைப்பு பேரணி, பொதுக்கூட்டம், மறியல் என்று அனைத்து தமிழர்களும் போர்கோலம் பூண்டனர். அப்போது பட்டம் அரசின் காவல் துறை தமிழர்களை நர வேட்டையாடியது. காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டிற்கு அரசு தந்த விவரப்படி ஒன்பது தமிழர்கள் பலியாகினர். பெயர் வருமாறு: 1.எம்.முத்துசாமி நாயகம், 2.என்.குமரன் நாடார், 3.ஏ.பீர்முகம்மது, 4.ஏ.அருளப்பன் நாடார், 5.ஏ.பொன்னையன் நாடார், 6.என்.செல்லப்பா பிள்ளை, 7.எஸ்.இராமையன் நாடார், 8.ஸ்ரீ பப்பு பணிக்கர், 9.எம்.பாலையன் நாடார்.
இது குறித்து ம.பொ.சிவஞானம் அவர்கள் தனது "செங்கோல்" (1954 செப்டம்பர்) ஏட்டில், "பட்டம் பழிவாங்குகிறாரா?" எனும் தலைப்பில் கட்டுரையெழுதினார். இது மலையாள இனவெறியை அம்பலப்படுத்தும் மிகச்சிறப்பான கட்டுரையாகும். இதன் சுருக்கம் பின்வருமாறு:
" ஆகஸ்ட் 11ந்தேதி, தமிழருக்கு வெட்கத்தையும் வேதனையையும் அளித்த நாளாகும். அன்று, திருவிதாங்கூர் தமிழ்ப்பகுதிகளில் மனித வேட்டை நடத்தியிருக்கின்றனர் மலையாளப் போலீசார். தாய்த்தமிழகத்தோடு சேர விரும்பிய ஒரே பாவத்திற்காகப் பத்துத் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர்!
இது போன்ற கொடுமை கொலை பாதகச் சம்பவம், தமிழினத்தாரின் வாழ்வில், தமிழகத்தின் வரலாற்றில் இதற்கு முன்பு நிகழ்ந்ததே இல்லை.
நாற்பத்தைந்து லட்சம் மலையாளிகளைக் கொண்டது திருவிதாங்கூர் கொச்சி ராஜ்யம். அதன் அண்டையிலுள்ள சென்னை ராஜ்யமோ மூன்று கோடித் தமிழர்களைக் கொண்டது. இருந்தும் சென்னை ராஜ்யத்தோடு கலாச்சாரத் தொடர்புள்ள மக்களை ஈவிரக்கமின்றி சுட்டுக் கொன்றிருக்கிறது அண்டையிலுள்ள சுண்டைக்காய் ராஜ்யம். எவ்வளவு துணிச்சல்!..
ஆகஸ்டு 11ந்தேதி பத்துப்பேரை சுட்டுக்கொன்ற பின்னரும் மலையாளப் போலீசாருக்கு ரத்த வெறி அடங்க வில்லை. அந்தச் சம்பவத்திற்குப் பிறகும், கல்குளம், விளவங்கோடு தாலுக்காக்களில் தமிழ்மக்கள் சித்திரவதை செய்யப்படுகின்றனர். கண்ணகி மரபில் வந்த தமிழ்ப்பெண்ணரசிகள் மாணபங்கப்படுத்தப் படுகின்றனர். தமிழ் இளம் காளையர்கள் அங்கங்கள் பழுதாகும்படி அடிக்கப்படுகின்றனர்...
ஹிட்லர் ஜெர்மனியில் அவனால் வெறுக்கப்பட்ட யூதர்களைக் கூட போலீசார் இவ்வளவு மோசமாகக் கொடுமைப் படுத்தவில்லை. ஆம், ஹிட்லரையும் மிஞ்சி விட்டார் இட்டார் இடதுசாரிக்கட்சியின் முதலமைச்சர் பட்டம் தாணுப்பிள்ளை.
துப்பாக்கிப் பிரயோகத்தால் மாண்டவர்களின் பிரேதங்களை உறவினர்களிடம் கொடுக்க மறுத்து 'புனிச்சமூடு' என்ற இடத்தில் பெட்ரோல் ஊற்றிக் கொளுத்திச் சாம்லாக்கினராம் போலீசார். மற்றும் பட்டம் தாணுவின் கொடுங்கோலாட்சியில் குடியிருக்க அஞ்சி, நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இரவோடு இரவாக திருநெல்வேலிக்கு ஓடி வந்து விட்டனவாம்.
இதெல்லாம் உண்மையென்றால், பாஞ்சாலப் படுகொலையின் போது கூட இத்தகைய கோரச்சம்பவங்கள் நிகழ்ந்ததில்லையென்று கூறலாம். ஜெனரல் டயரையும் மிஞ்சி விட்டார் பட்டம்...
திருவிதாங்கூர்த் தமிழரின் பிரதேச உரிமைக் கோரிக்கை ஜனநாயகப்படி நேர்மையானது. ஆகவே நியாயத்தை ஒட்டியது. தமிழர்களை சுட்டுக் கொல்வதால் தமிழ்ப்பகுதிகளை ஜீரணித்து விடலாம் என்று பட்டம் தாணுப்பிள்ளை கருதுவராயின் அது பலிக்கப் போவதில்லை. தென் திருவிதாங்கூர் முழுவதையுமே சுடுகாடாக்கி விட்டாலும் அந்தப்பகுதியில் ஒரு அங்குலத்தைக் கூட மலையாளிகள் அடைய முடியாது. இது திண்ணம்.
கல்குளம், விளவங்கோடு தாலுக்காக்களில் போலீசார் செய்துள்ள கொடுமைகள் பற்றி பற்றிப் பகிரங்க விசாரணை நடத்த வேண்டும். அந்த விசாரணைக்குழுவை மத்திய அரசினரே நியமிக்க வேண்டும். திருவிதாங்கூர்த் தமிழ்ப்பகுதிகளை தாய்த் தமிழகத்தோடு சேர்ப்பதற்குச் சாதகமாக மாகாண புனரமைப்புக் கமிஷன் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
மேற்சொன்ன இரண்டு கோரிக்கைகளும் உடனடியாக நிறைவேற்றப்படாவிடில், தமிழகத்தில் மலையாளிகளை வெறுக்கும் உணர்ச்சி பரவுவதை தடுக்க முடியாது. இது இனவெறியல்ல இனவெறிக்கு எதிர் நடவடிக்கை! அந்நிலை ஏற்படாமலிருப்பது பட்டம் தாணுப்பிள்ளையின் கையிலிருக்கிறது..."
1956 நவம்பர் 1ஆம் நாளில் மொழிவழி மாகாணம் அமைந்த போது உயிர்நீத்தவர்களின் ஈகம் வீண் போகவில்லை. கன்னியாகுமரி உள்ளிட்ட தென்பகுதிகள் தமிழகத்தோடு இணைக்கப்பட்டது. ஆனால் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் தேவிகுளம், பீர்மேடு வட்டங்கள் மட்டும் தமிழகத்தோடு இணைக்கப்பட வில்லை. அதன் காரணமாக தமிழர்கள் சொல்லொண்ணக் கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர். பட்டம் தாணுப்பிள்ளை வழியில் முன்பு அச்சுதானந்தனும், இப்போது உம்மன் சாண்டியும் ஆட்சி நடத்துவதால் இன்று தமிழ்க் குழந்தைகள் கல்வி கற்கும் நிலை கேள்விக்குறியாகி விட்டது. இழந்த பகுதிகளை மீட்டெடுப்பது ஒன்றே தமிழர்களை இனி வாழ வைக்கும். தெற்கெல்லைப் போரில் உயிர்நீத்த ஈகியரின் நினைவு நாளில் இழந்த பகுதிகளை மீட்டெடுக்க உறுதியேற்போம்!
11.8.1954
[You must be registered and logged in to see this image.]
திருவிதாங்கூர் கொச்சி சமஸ்தானப் பகுதிகளில் வாழ்ந்த தமிழர்கள் தமது தாயகப் பகுதிகளை தாய்த்தமிழகத்தோடு இணைக்கக் கோரி 1946ஆம் ஆண்டு முதல் மார்சல் நேசமணி தலைமையில் போராடி வந்தனர். 1954இல் பிரஜா சோசலிஸ்ட் கட்சியின் பட்டம் தாணுப்பிள்ளை என்பவர் முதல்வராக இருந்தார். (படத்தில் உள்ளவர் பட்டம் தாணுப்பிள்ளை)
தீவிர மலையாள இனவெறி கொண்ட பட்டம் அவர்கள் தேவிகுளம், பீர்மேடு வட்டங்களில் வாழும் தமிழர்கள் மீது கடும் ஒடுக்குமுறையை மேற்கொண்டார். அதுமட்டுமின்றி, மலையாள குடியேற்றத்தை அதிகரித்து தமிழர் தாயகத்தை இல்லாதொழிக்கவும் முற்பட்டார். இதனைக் கண்டித்து பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு குரல் கொடுக்க மார்சல் நேசமணி மூணாறு வந்த போது கைது செய்து சிறையிலடைத்தார். அப்போது நாகர்கோயில் பகுதியில் தென் தமிழர்களின் போராட்டம் தீவிரமடைந்தது.
பட்டம் தாணுப்பிள்ளையின் அடக்குமுறைக்கு எதிராக நேசமணிக்கு அடுத்த கட்டத் தலைவர்கள் போராட்டத்தில் குதித்தனர். ஆகஸ்ட் 11ஆம் நாளை தமிழர் விடுதலை நாளாக (Deliverance Day) கொண்டாடுமாறு குஞ்சன் நாடார் வேண்டு கோள் விடுத்தார். அன்று முழுகடையடைப்பு பேரணி, பொதுக்கூட்டம், மறியல் என்று அனைத்து தமிழர்களும் போர்கோலம் பூண்டனர். அப்போது பட்டம் அரசின் காவல் துறை தமிழர்களை நர வேட்டையாடியது. காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டிற்கு அரசு தந்த விவரப்படி ஒன்பது தமிழர்கள் பலியாகினர். பெயர் வருமாறு: 1.எம்.முத்துசாமி நாயகம், 2.என்.குமரன் நாடார், 3.ஏ.பீர்முகம்மது, 4.ஏ.அருளப்பன் நாடார், 5.ஏ.பொன்னையன் நாடார், 6.என்.செல்லப்பா பிள்ளை, 7.எஸ்.இராமையன் நாடார், 8.ஸ்ரீ பப்பு பணிக்கர், 9.எம்.பாலையன் நாடார்.
இது குறித்து ம.பொ.சிவஞானம் அவர்கள் தனது "செங்கோல்" (1954 செப்டம்பர்) ஏட்டில், "பட்டம் பழிவாங்குகிறாரா?" எனும் தலைப்பில் கட்டுரையெழுதினார். இது மலையாள இனவெறியை அம்பலப்படுத்தும் மிகச்சிறப்பான கட்டுரையாகும். இதன் சுருக்கம் பின்வருமாறு:
" ஆகஸ்ட் 11ந்தேதி, தமிழருக்கு வெட்கத்தையும் வேதனையையும் அளித்த நாளாகும். அன்று, திருவிதாங்கூர் தமிழ்ப்பகுதிகளில் மனித வேட்டை நடத்தியிருக்கின்றனர் மலையாளப் போலீசார். தாய்த்தமிழகத்தோடு சேர விரும்பிய ஒரே பாவத்திற்காகப் பத்துத் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர்!
இது போன்ற கொடுமை கொலை பாதகச் சம்பவம், தமிழினத்தாரின் வாழ்வில், தமிழகத்தின் வரலாற்றில் இதற்கு முன்பு நிகழ்ந்ததே இல்லை.
நாற்பத்தைந்து லட்சம் மலையாளிகளைக் கொண்டது திருவிதாங்கூர் கொச்சி ராஜ்யம். அதன் அண்டையிலுள்ள சென்னை ராஜ்யமோ மூன்று கோடித் தமிழர்களைக் கொண்டது. இருந்தும் சென்னை ராஜ்யத்தோடு கலாச்சாரத் தொடர்புள்ள மக்களை ஈவிரக்கமின்றி சுட்டுக் கொன்றிருக்கிறது அண்டையிலுள்ள சுண்டைக்காய் ராஜ்யம். எவ்வளவு துணிச்சல்!..
ஆகஸ்டு 11ந்தேதி பத்துப்பேரை சுட்டுக்கொன்ற பின்னரும் மலையாளப் போலீசாருக்கு ரத்த வெறி அடங்க வில்லை. அந்தச் சம்பவத்திற்குப் பிறகும், கல்குளம், விளவங்கோடு தாலுக்காக்களில் தமிழ்மக்கள் சித்திரவதை செய்யப்படுகின்றனர். கண்ணகி மரபில் வந்த தமிழ்ப்பெண்ணரசிகள் மாணபங்கப்படுத்தப் படுகின்றனர். தமிழ் இளம் காளையர்கள் அங்கங்கள் பழுதாகும்படி அடிக்கப்படுகின்றனர்...
ஹிட்லர் ஜெர்மனியில் அவனால் வெறுக்கப்பட்ட யூதர்களைக் கூட போலீசார் இவ்வளவு மோசமாகக் கொடுமைப் படுத்தவில்லை. ஆம், ஹிட்லரையும் மிஞ்சி விட்டார் இட்டார் இடதுசாரிக்கட்சியின் முதலமைச்சர் பட்டம் தாணுப்பிள்ளை.
துப்பாக்கிப் பிரயோகத்தால் மாண்டவர்களின் பிரேதங்களை உறவினர்களிடம் கொடுக்க மறுத்து 'புனிச்சமூடு' என்ற இடத்தில் பெட்ரோல் ஊற்றிக் கொளுத்திச் சாம்லாக்கினராம் போலீசார். மற்றும் பட்டம் தாணுவின் கொடுங்கோலாட்சியில் குடியிருக்க அஞ்சி, நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இரவோடு இரவாக திருநெல்வேலிக்கு ஓடி வந்து விட்டனவாம்.
இதெல்லாம் உண்மையென்றால், பாஞ்சாலப் படுகொலையின் போது கூட இத்தகைய கோரச்சம்பவங்கள் நிகழ்ந்ததில்லையென்று கூறலாம். ஜெனரல் டயரையும் மிஞ்சி விட்டார் பட்டம்...
திருவிதாங்கூர்த் தமிழரின் பிரதேச உரிமைக் கோரிக்கை ஜனநாயகப்படி நேர்மையானது. ஆகவே நியாயத்தை ஒட்டியது. தமிழர்களை சுட்டுக் கொல்வதால் தமிழ்ப்பகுதிகளை ஜீரணித்து விடலாம் என்று பட்டம் தாணுப்பிள்ளை கருதுவராயின் அது பலிக்கப் போவதில்லை. தென் திருவிதாங்கூர் முழுவதையுமே சுடுகாடாக்கி விட்டாலும் அந்தப்பகுதியில் ஒரு அங்குலத்தைக் கூட மலையாளிகள் அடைய முடியாது. இது திண்ணம்.
கல்குளம், விளவங்கோடு தாலுக்காக்களில் போலீசார் செய்துள்ள கொடுமைகள் பற்றி பற்றிப் பகிரங்க விசாரணை நடத்த வேண்டும். அந்த விசாரணைக்குழுவை மத்திய அரசினரே நியமிக்க வேண்டும். திருவிதாங்கூர்த் தமிழ்ப்பகுதிகளை தாய்த் தமிழகத்தோடு சேர்ப்பதற்குச் சாதகமாக மாகாண புனரமைப்புக் கமிஷன் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
மேற்சொன்ன இரண்டு கோரிக்கைகளும் உடனடியாக நிறைவேற்றப்படாவிடில், தமிழகத்தில் மலையாளிகளை வெறுக்கும் உணர்ச்சி பரவுவதை தடுக்க முடியாது. இது இனவெறியல்ல இனவெறிக்கு எதிர் நடவடிக்கை! அந்நிலை ஏற்படாமலிருப்பது பட்டம் தாணுப்பிள்ளையின் கையிலிருக்கிறது..."
1956 நவம்பர் 1ஆம் நாளில் மொழிவழி மாகாணம் அமைந்த போது உயிர்நீத்தவர்களின் ஈகம் வீண் போகவில்லை. கன்னியாகுமரி உள்ளிட்ட தென்பகுதிகள் தமிழகத்தோடு இணைக்கப்பட்டது. ஆனால் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் தேவிகுளம், பீர்மேடு வட்டங்கள் மட்டும் தமிழகத்தோடு இணைக்கப்பட வில்லை. அதன் காரணமாக தமிழர்கள் சொல்லொண்ணக் கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர். பட்டம் தாணுப்பிள்ளை வழியில் முன்பு அச்சுதானந்தனும், இப்போது உம்மன் சாண்டியும் ஆட்சி நடத்துவதால் இன்று தமிழ்க் குழந்தைகள் கல்வி கற்கும் நிலை கேள்விக்குறியாகி விட்டது. இழந்த பகுதிகளை மீட்டெடுப்பது ஒன்றே தமிழர்களை இனி வாழ வைக்கும். தெற்கெல்லைப் போரில் உயிர்நீத்த ஈகியரின் நினைவு நாளில் இழந்த பகுதிகளை மீட்டெடுக்க உறுதியேற்போம்!
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» இன்றைய பிறந்த நாள் மற்றும் நினைவு நாள்
» இன்றைய பிறந்த நாள் மற்றும் நினைவு நாள்
» பறிபோகிறது பரம்பிக்குளம் அணை? கேரள அரசின் அடுத்த "அட்டாக்'
» முல்லைப் பெரியாறில் புதிய அணை: கேரள அரசின் மனு நிராகரிப்பு
» ஒளி தந்தவரின் (ஹோசிமின்) நினைவு நாள் இன்று!
» இன்றைய பிறந்த நாள் மற்றும் நினைவு நாள்
» பறிபோகிறது பரம்பிக்குளம் அணை? கேரள அரசின் அடுத்த "அட்டாக்'
» முல்லைப் பெரியாறில் புதிய அணை: கேரள அரசின் மனு நிராகரிப்பு
» ஒளி தந்தவரின் (ஹோசிமின்) நினைவு நாள் இன்று!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|