TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 1:16 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Oct 05, 2024 3:15 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 10:52 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 7:38 pm

» Simon Daniel
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


இன்று நடந்த -பெண்கள் மீதான வன்முறை- கருத்தரங்கின் தமிழாக்க சுருக்கம்.

Go down

இன்று நடந்த -பெண்கள் மீதான வன்முறை- கருத்தரங்கின் தமிழாக்க சுருக்கம். Empty இன்று நடந்த -பெண்கள் மீதான வன்முறை- கருத்தரங்கின் தமிழாக்க சுருக்கம்.

Post by sakthy Sun Aug 10, 2014 8:57 pm

இன்று நடந்த -பெண்கள் மீதான வன்முறை- கருத்தரங்கின் தமிழாக்க சுருக்கம்.

பெண்கள் மீதான வன்முறை - என்ன சொல்கிறார்கள்? இன்று  நடந்த கருத்தரங்கு- கலந்துரையாடலின்-SEMINAR- தமிழாக்கம். சுருக்கமாக தரப்படுகிறது.

தலைப்பு - How to talk to women -

பேரூந்து மற்றும் தொடரூந்திலும் அதன் நிலையங்கள் மற்றும் சில இடங்களில் பெண்கள் மீதான பாலியல் தொல்லைகள்,பாலியல் வன்முறைகள்,கேலி போன்றவைகள்  -Street Harassment - eve teasing – சமிப காலமாக என்றும் இல்லாதளவு அதிகரித்து வருவது கவலையைத் தரும் நிலையில், பெண்களிடம் எப்படி பேச வேண்டும் நடந்து கொள்ள வேண்டும் -How to talk to women – என சில நிறுவனங்கள் அறிவுறுத்தியும் சொல்லியும் தருகிறார்கள்.

இந்த துன்புறுத்தல்- sexual harassment -இருவகையாக நடந்து வருவதைக் காணமுடிகிறது.ஒன்று தெருக்கள்,பேரூந்து,தொடரூந்து நிலையங்கள் போன்ற பொது இடங்கள்-,இரண்டாவது பள்ளி,கல்லூரிகளில் நடந்து வருவதும் ஆகும். பள்ளி,கல்லூரிகளில் நடந்து வருவதை student-to-student peer harassment (Peer sexual harassment ) இது சமீப காலமாக தமிழ் நாட்டில் அதிகரித்து வருவதை செய்திகள் மூலம் தெரிந்து கொள்ள  முடிகிறது.

சினிமா, பல இடங்களில் மக்களை தவறாக நடத்திச் செல்கிறது. நாம் சமூகத்திற்கு ஒரு செய்தியை சொல்லிப் படம் எடுத்திருக்கிறோம் என்று சொல்லிக் கொள்ளும் தயாரிப்பாளர்கள், அதைச் சொல்லி விட்டு,சொல்லக் கூடாத பலவற்றை சொல்லி மிகக் கொடூரமான வழியில் கொண்டு செல்கிறார்கள்.

இதுபோல்...தமிழ் நாட்டில்.................
மதிக்க வேண்டிய நிலையில் உள்ள பெரியவர்களை-பெரிசு -எனக் கேலியாக சொல்வதும்,பெண்களை  பிகர் என்று சொல்வதும்,பெண்கள் கூட இதைப் பாவிப்பதும், திரு நங்கைகளை கேலி செய்வதும் சினிமாவில் அதிகரித்து வருவதைக் காண முடிகிறது. இவை நகைச்சுவை என அவர்களால் சொல்லிக் கொண்டாலும், பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது என்கிறார்கள்.

Hey baby, Hi cutie எனச் சொல்வதை நிறுத்தும்படி அறிவுறுத்துகிறார்கள்.

சமூகத்தில்-பொது இடங்களில் ஆண்களும் பெண்களும் சமமாகப் பார்க்கப்படுவதில்லை. பொது இடங்களில் பெண்களை கேலி செய்வதும்,அவர்களை பற்றி விமர்சனம் செய்வதையும்,அந்த விமர்சனம் நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ இருந்தாலும் கூட, ஆண்கள் நிறுத்த வேண்டும். பெண்களை பொது இடங்களில்,முக்கியமாக பலர் முன்னால், மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடத்த வேண்டும். பண்புடன் கலோ-hello- என அழைப்பதை விடுத்து,பலர் விசில் அடித்தும்,கூச்சல் இட்டும் வேறு முறையிலும் அழைப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

ஒரு பெண் எந்த விதமான உடை அணிந்திருந்தாலும்,அதை விமர்சனம் செய்யும் உரிமை நமக்குக் கிடையாது என்பதை மரியாதையுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும். அந்தப் பெண் தனது உடை அலங்காரத்தை சில நிகழ்ச்சிகள்,விருந்துகள் போன்றவற்றுக்காக வெவ்வேறு விதமான உடைகளை அணியலாம். அது அவளுடைய சொந்த விருப்பமாகும். எனது ஆடை எப்படி இருக்கிறது என்று கேட்டால் தவிர,அவளின் ஆடைகளை,அலங்காரங்களை விமர்சிக்கும் உரிமை நமக்குக் கிடயாது,அது தனி நபர் உரிமை மீறல் என்பதை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்.

தெரியாத ஒருவர் தெருவில்,தரிப்பு நிலையங்கள்,நிறுத்தும் இடங்கள் போன்றவற்றில், முக்கியமாக இரவில் நின்றால்,பாலியல் வன்முறைகள்,கேலி நிறைந்த இன்றைய நாட்களில், சற்று தூரத்தில்-respectful distance - நின்று கொள்ள வேண்டும். எந்த விதத்திலும் அவளை நெருங்கவோ -approach- அணுகவோ கூடாது.

முக்கியமாக ஒரு சிலவற்றை ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
எல்லாப் பெண்களும், ஆண்களை விரும்புபவர்களாகவோ,அவர்களை நோக்கி செல்பவர்களாகவோ,ஆசை கொண்டவர்களாகவோ,காதல் கொள்ள விரும்புபவர்களாகவோ,திருமணம் செய்யாதவர்களாகவோ இருப்பார்கள் என்று எண்ணிவிடக் கூடாது.

அவர்கள் திருமணம் செய்து கொண்டவர்களாக,வேறு ஆணை விரும்பி நிச்சயம் செய்து கொண்டிருப்பவர்களாக, பல பிரச்சனைகளை உடையவர்களாக இருக்க முடியும். எனவே பண்புடன் நடந்து கொள்ள வேண்டும்.

ஒரு பெண் உதவிக்காக ,செல்லும் வழி கேட்க, இப்படி ஏதாவது ஒரு காரணமாக ஒரு ஆணை நோக்கி வரலாம். அதை சாதகமாக வைத்து அந்தப் பெண்ணை அணுக முயற்சிக்கக் கூடாது. உதவி செய்து விட்டு விலகி விடல் வேண்டும்.

ஒரு ஆணுடன் தொடர்பை வேண்டி எந்தப் பெண்ணும் சாலையில் பேரூந்து தரிப்பு நிலையங்களில் நிற்க மாட்டாள். அப்படி நிற்கும் பெண்ணை வேறு மாதிரியாகக் கூறுவார்கள். பெண்கள் பள்ளிக்கு,வேலைக்கு, என பல்வேறு காரணங்களுக்காக அங்கே நிற்கலாம். அவளும் உங்களைப் போல் ஒரு மனித உயிர் என்பதை மனத்தில் கொண்டு மரியாதையுடன் நடந்து கொள்ளுங்கள்.

எந்தக் காரணங்களுக்காகவும் ஒரு பெண்ணை தொடர்ந்து செல்லாதீர்கள். அப்படிச் செல்வது அவளை மேலும் பயமுறுத்தும் செயலாக இருக்கலாம். பணப்பை,வேறு பொருட்களை தவற விட்டிருந்தால்,அதைக் கொடுக்க பல வழிமுறைகள் உண்டு. அதைவிட்டு அதையே சாக்காக வைத்து பின் தொடருவதோ, தொல்லை கொடுக்கவோ வேண்டாம்.

கால தாமதம் இப்படி ஏதாவது காரணங்களால் சேர்ந்து செல்ல உதவி கேட்டால், அதை மரியாதையுடன் ஏற்று உதவி செய்யலாமே தவிர, அதையே சாக்காக வைத்து அவளை கேலியோ,வேறு தொந்தரவுகளோ செய்ய முற்படாதீர்கள். தொடர்ந்து சந்திக்க தொலைபேசி இலக்கம் பெற முயற்சிக்காதீர்கள். நீங்கள் செய்த உதவி கேலியாகவோ, கெட்ட நோக்குடனேயோ செய்ததாகி விடும்.

தெரிந்த/பார்த்த/தெரியாத ஒரு பெண்ணை நோக்கி நீங்கள் சிரித்தோ அல்லது கலோ என்று சொல்லும் போதோ,அவள் கண்டு கொள்ளாது சென்றால் அப்படியே விட்டு விடுங்கள். பின் தொடராதீர்கள். அவள் அவசரமாகக் கூடச்  செல்லலாம் அல்லது முன்னர் அவளுக்கு ஏற்பட்ட மோசமான அனுபவங்கள் கூடக் காரணமாக இருக்கலாம்.உங்களை விரும்பாமல் கூட இருக்கலாம்.

தெரியாத ஒரு பெண்ணுடன்  எங்காவது பேச முற்பட்டால், அவள் பேச அசௌகரியப் பட்டால் ,  ஒரு சொல்லில் பதிலளித்தால் தொந்தரவு செய்யாது விலகி விடுங்கள்.

உங்கள் மனைவி,தாய்,காதலி,சகோதரி,மகள்  இவர்களுடன், யாராவது அவர்கள் அசௌகரியப்படும் வகையில் பேசினால் அல்லது நடந்து கொண்டால் உங்கள் மனம் நிலை என்னவாக இருக்கும்?

தனியாக ஒரு அறையில்,தனி இடத்தில்  மனைவி,தாய்,காதலி,சகோதரி இவர்களுடன் யாராவது தவறாக நடக்க முயற்சித்தால், அல்லது முயற்சிக்கும் போது உங்கள் மன நிலை என்னவாக இருக்கும்?

அவர்களிடம் அல்லது உங்களிடம் அப்படி ஏதாவது முறையில் யாராவது நடந்து கொண்டு,அதை நிறுத்தாது தொடர்ந்தால்,மன்னிப்புக் கேட்காவிட்டால் உங்களுடைய மன நிலை எப்படி இருக்கும்?
அல்லது நீங்கள் தவறாக நடந்து மற்றவரிடம் தவறுக்கு மன்னிப்புக் கேட்கா விட்டால் அவர் மன நிலை என்னவாக இருக்கும்? அவர் நேரடியாக உங்களைத் தாக்க முயற்சித்தால்................?

சிந்தியுங்கள்.
இப்படிப் பல வினாக்கள் அவர்களாலும்,அவர்களிடமும் வைக்கப்பட்டது.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» பெண்கள் மீதான வன்முறை தொடருகிறது....
» இன்று நடந்த முக்கிய நிகழ்வுகளின் செய்தி சுருக்கம்
» இலங்கையில் தமிழ்ப் பெண்கள் மீதான பாலியல் வன்முறை நீடிக்கிறது: சீமான் குற்றச்சாட்டு
» உலகில் 75 ஊடகவியலாளர்கள் 2013ல் படுகொலை - ஊடகங்கள் மீதான வன்முறை உச்சத்தில் சிறீலங்கா
» பேஸ்புக்கில் விமர்சித்த பெண்கள் மீதான வழக்கு வாபஸ். சட்டம் என்ன சொல்கிறது?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum