TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 27, 2024 8:13 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 23, 2024 4:07 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 21, 2024 2:55 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 12:02 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


உலகில் 75 ஊடகவியலாளர்கள் 2013ல் படுகொலை - ஊடகங்கள் மீதான வன்முறை உச்சத்தில் சிறீலங்கா

Go down

உலகில் 75 ஊடகவியலாளர்கள் 2013ல் படுகொலை - ஊடகங்கள் மீதான வன்முறை உச்சத்தில் சிறீலங்கா Empty உலகில் 75 ஊடகவியலாளர்கள் 2013ல் படுகொலை - ஊடகங்கள் மீதான வன்முறை உச்சத்தில் சிறீலங்கா

Post by Tamil Thu Jan 02, 2014 7:27 pm

உலகில் 75 ஊடகவியலாளர்கள் 2013ல் படுகொலை - ஊடகங்கள் மீதான வன்முறை உச்சத்தில் சிறீலங்கா
உலகில் 75 ஊடகவியலாளர்கள் 2013ல் படுகொலை - ஊடகங்கள் மீதான வன்முறை உச்சத்தில் சிறீலங்கா 1526528_505055182946337_422011994_n
உலகத்தின் அடக்குமுறை நாடுகளில் விடுதலைக்கான புரட்சிகளில் பெரும்பங்கை ஆற்றியும் விடுதலையில் பெரும்பங்கையும் ஆற்றி ஊடகத்துறை இன்று சிறீலங்காவின் கொடூர அடக்குமுறைக்குள் மூச்சுத்திணறிக் கொண்டிருக்கின்றது.

வெளிநாடுகளில் கூட புலம்பெயர் ஊடகங்களின் மீதான தமது அடக்கு முறைகளைத் தமது ஏவலாளிகளைக் கோத்தபாய ஏவி விட்டுள்ளார். 2013ம் ஆண்டில் இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் 75 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு அளித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்திரிக்கையாளர்கள் அச்சுறுத்தப்படுவதும், கொலை செய்யப்படுவதும் உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. இதில் ஆசிய நாடுகள் முதல் இடத்தில் உள்ளன. அதிகபட்சமாக ஆசியாவில் மட்டும் 24 ஊடகவியலாளர்கள் வேலை தொடர்பாக கொலை செய்யப்பட்டுள்ளனர். சிரியா, சோமாலியா, மாலி, பாகிஸ்தான், பலோசிஸ்தான் ஆகிய நாடுகளில் 39 சதவிகித செய்தியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆபிரிக்காவில் 23 செய்தியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.



உலகமெங்கும் ஊடகவியலாளர்களிற்கான அச்சுறுத்தல் அதிகரித்து வரும் இந்த வேளையில் எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு உலகின் பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் கொடூர ஆட்சியாளர்களைப் பட்டியலிட்டுள்ளது. இதில் ராஜபக்ச குடும்பம் முக்கிய இடம்பிடித்துள்ளது. இது கோத்தபாய ராஜபக்ச ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளும் வன்முறைகளையும் அடக்குமுறைகளையும் அவரது வாக்குமூலம் போலவே சித்தரித்து கட்டுரை வெளியிட்டுள்ளது.

‘எனது அரசாங்கம், அதாவது ராஜபக்ச குடும்பம் ஊடகவியலாள்களின் சுதந்திரத்தை மிகவும் மரியாதையுடன் பேணுகின்றது. வேலையாட்களின் காலை உணவு வேளைகளில நான் ஊடகவியலாளர்களை அழைத்து அவர்களது தொழிலின் அடிப்படையை விளக்குவேன். அவர்கள் எனது அறிவின் அனுபவத்தைப் பெற்றுக் கொள்வதுடன் எனது கண்காணிப்பையும் அருளையும் பெற்றுக்கொள்வார்கள். அவர்கள் எந்தச் செய்தியை எழுத வேண்டும் அல்லது தவிர்க்க வேண்டும் என்பதை அவர்களிற்கு அச்சுறுத்துவேன். அதைக் கேட்டு நடப்பதே அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்.

ஓர் ஆபத்து நடந்தபின் அதற்காக வருந்துவதை விட அதைத் தடுத்துக் கொள்வதே புத்திசாலித்தனம். ஊடகத்திற்கெதிரான கடுமையான குற்றங்கள் எல்லாம் கூட எனது காவற்துறை என்னதான் தீவிரமாகப் புலனாய்வு செய்தாலும் கூட தண்டனைகளின்றியே போவது வியப்பாக இல்லையா? ஊடகத்துறையில் உள்ள ஆண்களும் பெண்களும் அவர்கள் மீதான எந்தத் தாக்குதலுக்கும் எனது உறுதியான பாதுகாப்பில் நம்பிக்கை செலுத்த முடியும். ஏனெனில் அவர்கள் எனது ஆட்சியின் மீது விமர்சனங்களை வைக்கும் போது மட்டுமே தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். 

உதாரணத்திற்கு சண்டே லீடர் பெரஸ் சௌகாத் அலியை எடுத்துக் கொள்ளுங்கள். எனது அரசாங்கம் மீது விமர்சனங்களை வைத்தபோது நான் உடனடியாக அவர்களின் தலைமையை மாற்றி விட்டேன். அதன் பின்னர் தானாகவே எம்மை விமர்சித்த ஊடகவியலாளர்கள், தங்கள் புலனாய்வு ஊடகத்துறை தங்கள் உயிர்களைப் பறிக்க இருக்கையில் தம்மைக் காப்பாற்றிக்கொள்ள நாட்டை விட்டுத் தப்பி ஓடி விட்டார்கள். நான் அவர்கள் மீது மிகவும் அவதானமான நெருங்கிய பாதுகாப்பை உறுதி செய்ய முயன்றபோதும் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். எனது தலைமையிலான தளத்தில் இதற்கு நன்றி தெரிவிக்கவும் தவறவில்லை. தமிழ் ஊடகவியலாளர்கள் மீது நாம் காட்டும் ‘அன்பில்’ அவர்கள் எமக்கு உதவுவார்கள். அவர்கள் எம்மை மிகவும் அவதானமாக விளங்கிக் கொள்வார்கள். வேண்டுமானால் உதயன் பத்திரிகையை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்கள் எம் மீது வைத்த கடுமையான விமர்சனங்கள் எல்லாம் நிறுத்தப்பட்டு விட்டன. எம்மீது விமர்சனங்களை அதிகமாக வைக்கும் அசர சார்பற்ற நிறுவனங்களும் ஊடகங்களும் எம்மீது கடுமையான விமர்சனங்களை வைக்கும்போது அவர்களின் ஊடகங்கள் எரிக்கப்பட்டோ அல்லது ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது தானாகவே என் அரசாங்கத்தின் மீதான விமர்சனங்கள் நிறுதப்பட்டு விட்டது. இதிலிருந்தே நீங்கள் எங்களைப் புரிந்துகொள்ள முடியும்.

இது ஜெனிவா மனித உரிமைகள் ஆணையத்தில் கூட இது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் சிறீலங்கா சர்வதேசத்தின் சிபாரிசுகளை ஏற்றுக் கொள்வதில்லை எனச் சொல்லுங்கள். நாம் செய்யும் செயல்களை விமர்சிக்க யாருக்கும் தைரியம் இல்லை. பி.பி.சி தமிழ்ச் சேவைக்குக் கொஞ்சம் கெட்டித்தனம் இருந்தாலும் அவர்களும் எமது தணிக்கைக்குப் பலியாவார்கள். வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் கடுமையான எரிச்சலை ஏற்படுத்தினாலும் நாம் அந்த எரிச்சலை உள்ளூர் ஊடகவியலாளர்கள் மீது காட்டுவோம். சந்துருவன் செனதீரா, சுனந்த தேசப்பிரிய, பிரெட்ரிக்கா ஜான்ஸ் போன்றவர்களோ அல்லது வெளிநாட்டிலிருக்கும் ஊடகவியலாளர்களோ எனது ஆட்சியைப் பற்றியோ அல்லது எமது குடும்பம், எமது சுற்றங்கள் பற்றியோ யாரும் பொய்களைச் சொல்ல முடியாது. அவர்கள் நாட்டை விட்டுத் தப்பி ஓடியவர்கள். அங்கேயே இருப்பது தான் அவர்களிற்குப் பாதுகாப்பு. இதன் மூலம் நான் கையெழுத்திட்ட மனித உரிமைகள் சாசனத்தை காப்பாற்றுகின்றேன் என உறுதி எடுத்துக் கொள்கின்றேன். எமது அரசாங்கம் விமர்சகர்கள் மீது மிகவும் பொறுமைகாக்கின்றது என்பதை ஆணித்தரமாக உறுதிப்படுத்துகின்றேன்.’ என ராஜபக்ச குடும்பத்தின் ஊடகங்களின் மீதான அடக்குமுறைகளைப் பிரான்சின் எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் வெளிப்படுத்தி உள்ளனர்.

சிறீலங்கா அரசாங்கம் ஊடகங்கள் மீதான அடக்குமுறைகளை சிறீலங்காவில் மட்டுமல்ல புலம்பெயர் தமிழ்த் தேசிய ஊடகங்கள் மீதும் மேற்கொள்ளத் தவறவில்லை. பிரான்சின் எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்புப் பட்டியலிட்ட ஊடக சுதந்திரத்தை மீறும் நாடுகளின் பட்டியலில் மிகவும் மோசமான இடத்தில் சிறீலங்காவைப் பட்டியலிட்டுள்ளது. சிறீலங்காவை இம்முறையும் ஊடகவியலாளர்களுக்கு மிகவும் மோசமான நாடாக வர்ணித்து தனது கறுப்புப் பட்டியலில் இணைத்துள்ள எல்லைகளற்ற அமைப்பு, ஊடகவியலாளர்களுக்கு மிக மோசமான நாடுகளின் பட்டியில் 18வது இடத்தில் சிறீலங்காவை வைத்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் தமிழர்கள் மீது இனப்படுகொலையில் தனது பங்கை வகிக்கும் இந்தியா ஊடக அடக்கு முறையிலும் சிறீலங்காவோடு போட்டி போட்டபடியே உள்ளது. பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பில்லாத நாடாக இந்தியா திகழ்வதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. சர்வதேச தகவற் பாதுகாப்பு அமைப்பு என்பது இலண்டனை தலைமையகமாக கொண்டுள்ளது. இந்த அமைப்பு பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வினை ஏற்படுத்துவதோடு, அவர்களுக்கு ஏற்படும் இன்னல்களைக் களைவதற்காகவும் செயல்படுகிறது. தற்போது இந்த அமைப்பு பத்திரிகையாளர்களின் பாதுகாப்புக் குறித்த ஆய்வொன்றினை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வின்படி இந்தியா, பத்திரிகையாளர்களுக்கு ஆபத்தான நாடுகளில் மூன்றாவது இடத்தினை பெற்றுள்ளது. இந்தியாவில் இந்த வருடம் 8 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. இந்தக் கொலைகள் சம்பந்தமாக முழுமையான விசாரணைகளும் நடைபெறவில்லை என இந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

சிறீலங்காவில் இந்த வருடம் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்படாவிட்டாலும் கடந்த வாரம் தமிழ்நாட்டிலிருந்து சிறீலங்கா வந்த ஊடகவியலாளரான மகா. தமிழ் பிரபாகரன் மிகவும் கேவலமான பயங்கரமான அனுபவத்தைப் பெற்றுள்ளார். சிறீலங்காவின் புலனாய்வுத் துறையினரால் மிகவும் மோசமாக மனோவியல் ரீதியாகச் சித்திரவதை செய்யப்பட்டுளன்ளார். மூன்று நாட்கள் கொடுமையான விசாரணைகளிற்கு உட்படுத்தப்பட்ட தமிழ் பிரபாகரனைத் துங்கவிடாது அச்சுறுத்தி உள்ளனர். தமிழன் என்ற காரணத்திற்காகவே இந்தியப் பிரசையாக இருந்தாலும் மகா.தமிழ் பிரபாகரன் உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி இருப்பதுடன் சிறீலங்காவில் யாரும் ஊடகவியல் செய்யமுடியாது என்பதை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளனர்.

முன்னதாக, பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் பங்கேற்கச் சென்ற பி.பி.சி, சனல்-4 ஊடகங்கள் மீது பிரயோகிக்கப்பட்ட அடக்குமுறைகளும் இங்கு குறிப்பிடத்தக்கவை. இனப்படுகொலையின் இன்னொரு வடிவமாக அடக்கப்படும் தமிழினத்தின் குரல் வெளிவந்து விடாதபடி ஊடகங்கள் அடக்கப்பட்டு வருகின்றது. இதற்கான ஓர் அபாயக் குரலாகவே பிரான்சைத் தளமாகக் கொண்ட எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்புத் தனது குரலைப் பதிவு செய்துள்ளது. ஊடகம் என்பது மக்களுக்கு உண்மைகளை எடுத்து உரைக்க வேண்டிய பலமான ஆயுதம். இதனைத் தனது கட்டுக்குள், தான் சொல்வதை மட்டுமே எழுதச் சொல்லி ஊடகவியலாளர்களைத் துப்பாக்கி முனையில் வைத்து மிரட்டும் சிறீலங்கா குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்படல் வேண்டும்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» பெண்கள் மீதான வன்முறை தொடருகிறது....
» தமிழக மீனவர்களை சிறீலங்கா கடற்படையினர் கொன்றதால் “சிறீலங்கா மீது
» இலங்கையில் தமிழ்ப் பெண்கள் மீதான பாலியல் வன்முறை நீடிக்கிறது: சீமான் குற்றச்சாட்டு
» தேர்தல் வன்முறைகள் உச்சத்தில்
» இதுதான் தமிழ்ச் சாதியின் விதியா? சின்னஞ்சிறு பிள்ளைகளையும் படுகொலை செய்த, சிங்களவன் கொடுமையை எதிர்த்துக் கேள்வி கேட்பாரே கிடையாதா? உலகில் நீதியே செத்துவிட்டதா? - வைகோ

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum